புதிய பதிவுகள்
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_m10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10 
79 Posts - 44%
ayyasamy ram
என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_m10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10 
77 Posts - 43%
prajai
என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_m10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_m10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Jenila
என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_m10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_m10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_m10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_m10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
M. Priya
என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_m10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10 
1 Post - 1%
kargan86
என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_m10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_m10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10 
122 Posts - 53%
ayyasamy ram
என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_m10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_m10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10 
10 Posts - 4%
prajai
என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_m10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10 
8 Posts - 3%
Jenila
என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_m10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_m10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_m10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_m10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_m10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_m10என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது


   
   

Page 2 of 2 Previous  1, 2

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sat Jan 28, 2012 10:28 pm

First topic message reminder :

தோழமைக்கு,
நாம் பார்க்கிற பாரதி என்கிற மகாகவி அவரின் மனைவி பார்வையில், இந்த உரை என்னை அதிகம் நெருட செய்தது. தயவு செய்து முழுதும் வாசிக்கவும். கொஞ்சம் அதிக நேரம் தேவைப்படலாம் வாசிப்பதற்கு ஆனாலும் வாசிக்கவும்.

(1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்" என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.)

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்... விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம். கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் கூட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவிதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்? கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளிளிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிடமிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிடமிருக்க முடியுமா?

கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.

காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். சூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து சூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். சூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.

அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை. சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!

இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.

புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.

புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.

புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. "விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!" என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

வாசித்தபின் என்னுள் நிறைந்த மௌனம் உங்களுக்கும் ஏற்பட்டு இருக்கலாம்.
நன்றி !



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Fri Jun 08, 2012 6:13 am

செல்ல கணேஷ் wrote:
அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை. சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!

தான் கவலைகளை சுமந்து நமக்கு கவிதைகளை தர வைத்திருக்கிறார் அந்த பாரதியின் துணைவியார் !
கண்களில் நீருடன் நாக சுந்தரம்.





Uploaded with ImageShack.us

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக