ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by கேசவன் Today at 8:32 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by முரளிராஜா Today at 8:26 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 8:21 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

உதயகுமார் ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டிய ஊர் மக்கள்

View previous topic View next topic Go down

உதயகுமார் ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டிய ஊர் மக்கள்

Post by கோபி சதீஷ் on Wed Feb 08, 2012 3:47 pm

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக, பிரசாரத்தில் ஈடுபட்ட உதயகுமார் ஆதரவாளர்களை, காயல்பட்டினம் பொதுமக்கள், ஓட ஓட விரட்டி விட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக, உதயகுமார் தலைமையிலான குழுவினர், தொடர் போராட்டம், பிரசாரம் நடத்தி வருகின்றனர்.அணு எதிர்ப்பு போராட்டத்திற்கு, தமிழக மக்களில் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், அணு எதிர்ப்பாளர்களுக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவிக்கிறது. இதனால், அணு எதிர்ப்பாளர்கள் பல்வேறு பொது இடங்களுக்கு சென்று, எந்த அனுமதியுமின்றி பொய் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளாகத்தில், அணு எதிர்ப்பாளர்கள் கூட்டமாக வந்தபோது, அங்கு வந்த அணு உலை ஆதரவாளர்களுடன் மோதலில் ஈடுபட்டு, போலீசார் மீது செருப்புகளை வீசினர். உதயகுமாருக்கு ஆங்காங்கே எதிர்ப்பு வலுப்பதால், அவர் மொட்டை போட்டு, பொது இடங்களுக்கு, போலீஸ் பாதுகாப்புடன் செல்கிறார்.

இந்நிலையில், உதயகுமாருக்கு ஆதரவானவர்கள், நேற்று மாலை, தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பஸ் நிலையம் முன் திரண்டு, அணு உலையை மூடக்கோரி கோஷமிட்டனர். பொதுமக்களிடம் அணு உலைக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு, துண்டுப் பிரசுரங்களை கொடுத்தனர்.இதுகுறித்து, தகவலறிந்த ஊர் மக்கள், பஸ் நிலையத்திற்கு திரண்டு வந்து, அணு உலை எதிர்ப்பாளர்களை ஓட ஓட விரட்டினர். மின் வெட்டால் தத்தளிக்கும் நிலையில், அணு உலையை மூட பிரசாரம் செய்கிறாயா என, அணு எதிர்ப்பாளர்கள் மீது, வசை மாறி பொழிந்தனர்.

இதுகுறித்து, அணு உலை எதிர்ப்பாளர்கள், ஆறுமுகனேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆனால், பொதுமக்களே திரண்டு வந்து அணு உலை எதிர்ப்பாளர்களை விரட்டியதால், போலீசாரும் செய்வதறியாமல் திகைத்து, அணு எதிர்ப்பாளர்களை ஊருக்கு வெளியே அனுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உதயகுமாரை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் 13ம் தேதி ஆர்ப்பாட்டம்"மொட்டை போட்டு, உலக அரங்கில் இந்தியாவுக்கு அவமானத்தை தேடித்தரும் உதயகுமாரை கைது செய்ய வேண்டும், கூடங்குளம் அணு மின் நிலையத்தில், உற்பத்தியை உடனே துவக்கி, அதில், 1,500 மெகாவாட் மின்சாரத்தை, தமிழகத்திற்கு, மத்திய அரசு வழங்க வேண்டும்' என வலியுறுத்தி, தமிழ்நாடு டிப்ரஸ்டு கிளாசஸ் லீக் சார்பில், வரும் 13ம் தேதி, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இது குறித்து, தமிழ்நாடு டிப்ரஸ்டு கிளாசஸ் லீக் தலைவர் அருள்தாஸ் கூறியதாவது:சென்னையைத் தவிர, தமிழகம் முழுவதும், ஏறக்குறைய எட்டு மணி நேர மின் தடை அமலில் உள்ளது. பனிக்காலத்தில் இந்த நிலை என்றால், வரும் கோடை காலத்தில், மக்கள் அனைத்து விதமான இன்னல்களையும் அனுபவிக்க உள்ளனர்.இந்த அவல நிலை மாறுவதற்கு, வரப்பிரசாதமாக கிடைத்த, கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க விடாமல், தேச விரோத கும்பல், உதயகுமார் தலைமையில் தடுத்துக் கொண்டிருக்கிறது. "மத்திய அரசு, எங்கள் மக்களை மொட்டை அடிக்கிறது. அதனால், நாங்கள் மொட்டை அடித்துக் கொள்கிறோம்' என, மொட்டை போட்டு, உலக அரங்கில் இந்தியாவுக்கு அவமானத்தை தேடித்தரும் உதயகுமாருக்கு, நாட்டின் குடிமகனாக இருக்கும் தகுதியே கிடையாது.

எனவே, இவரை நாடு கடத்த வேண்டும். முதல்வர் ஜெயலலிதா ஒருவரால் தான், கூடங்குளம் அணு மின் நிலையத்தைச் செயல்பட வைக்க முடியும். எனவே, தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், உதயகுமார் மற்றும் அவரது தலைமையிலான தேச விரோத கும்பலை கைது செய்ய வேண்டும். கூடங்குளம் அணு மின் நிலையத்தில், உற்பத்தியை உடனே துவக்கி, அதில், 1,500 மெகாவாட் மின்சாரத்தை, தமிழகத்திற்கு தர, மத்திய அரசை வலியுறுத்தி, வரும் 13ம் தேதி, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அருள்தாஸ் தெரிவித்தார்.

நன்றி : தினமலர்

கோபி சதீஷ்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 272
வசிப்பிடம்: Erode
சேர்ந்தது: 22/05/2011
மதிப்பீடு: 43

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum