|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» கடி ஜோக்ஸ் -சில..by Muthumohamed Today at 12:33 am
» முத்து! எவ்வாறு செய்யப்படுகிறது!
by Muthumohamed Today at 12:32 am
» சிதம்பர இரகசியம் என்றால் என்ன?
by Muthumohamed Yesterday at 11:49 pm
» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by Muthumohamed Yesterday at 11:48 pm
» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by அப்துல் Yesterday at 11:44 pm
» 17000 பதிவுகள் கடந்த ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....
by அப்துல் Yesterday at 11:42 pm
» பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை
by ராஜு சரவணன் Yesterday at 11:27 pm
» மாம்பழ லஸ்ஸி
by ஜாஹீதாபானு Yesterday at 11:01 pm
» கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள்.
by சிவா Yesterday at 10:59 pm
» விண்டோஸ் 7 ல் Run Command யை Start மெனுவில் இடம்பெற செய்வது எப்படி?
by முத்துராஜ் Yesterday at 10:17 pm
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by ரா.ரா3275 Yesterday at 10:09 pm
» விரைவில் வருகிறது 3D மவுஸ்
by முத்துராஜ் Yesterday at 10:08 pm
» உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை இயக்குவதற்கு
by முத்துராஜ் Yesterday at 10:02 pm
» பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது
by முத்துராஜ் Yesterday at 10:00 pm
» செல்லிடத்து அகல்கற்றை (Mobile broadband cards)இணைப்பை பின்வரும் படிமுறைகளை பின்பற்றி கம்பியில்லா வழிசெலுத்தியாக (wireless router) பயன்படுத்தி கொள்ளமுடியும்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:37 pm
» எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,
by Muthumohamed Yesterday at 9:32 pm
» படத்தின்மீது உள்ள எழுத்துகளை துல்லியமான உரையாக கொண்டுவரமுடியும்
by முத்துராஜ் Yesterday at 9:32 pm
» கலைஞர் பேச கூடாது
by Muthumohamed Yesterday at 9:31 pm
» நம்பினால் நம்புங்கள் ....
by Muthumohamed Yesterday at 9:29 pm
» யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா?
by Muthumohamed Yesterday at 9:28 pm
» தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது
by Muthumohamed Yesterday at 9:22 pm
» உன்னோடு வாழும் காலம் தான் எப்போது .....
by Muthumohamed Yesterday at 9:18 pm
» Iolo System Checker என்ற இலவச பயன்பாட்டு கருவி
by balakarthik Yesterday at 7:03 pm
» தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள்
by முத்துராஜ் Yesterday at 6:34 pm
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15
by அகல் Yesterday at 6:27 pm
» இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்!
by SajeevJino Yesterday at 6:25 pm
» கசப்பான சர்க்கரை
by அசுரன் Yesterday at 6:16 pm
» ஈகரையில் இணைவதில் பெருமகிழ்ச்சி!
by அசுரன் Yesterday at 5:59 pm
» நாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்...
by MADHUMITHA Yesterday at 5:56 pm
» IPL - 6 பைனலுக்கு போவது யாரு?
by md.thamim Yesterday at 5:54 pm
» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by பார்த்திபன் Yesterday at 5:43 pm
» புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......
by பூவன் Yesterday at 5:39 pm
» மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..!
by அசுரன் Yesterday at 5:34 pm
» சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில்..!
by பூவன் Yesterday at 4:59 pm
» தூங்காமல் படிக்கனுமா ...?
by ராஜு சரவணன் Yesterday at 4:15 pm
» நட்ஸ் மில்க் ஷேக்
by பூவன் Yesterday at 3:46 pm
» உங்கள் அலுவலக அறையில் இதுபோன்ற கோப்பு இருக்கா
by பூவன் Yesterday at 3:38 pm
» நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
by ஜாஹீதாபானு Yesterday at 2:49 pm
» பேப்பர் கப்களில் டீ,காபி குடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல்...!
by உமா Yesterday at 2:46 pm
» தமிழ் வார/மாத இதழ்கள்: புதியவை
by அருண் Yesterday at 2:35 pm
Top posting users this week
| MADHUMITHA | ||||
| பூவன் | ||||
| யினியவன் | ||||
| balakarthik | ||||
| Muthumohamed | ||||
| ஜாஹீதாபானு | ||||
| சிவா | ||||
| ராஜு சரவணன் | ||||
| பாலாஜி | ||||
| krishnaamma |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஏன்? இந்தக் கொலை வெறி ! கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 • Share •
ஏன்? இந்தக் கொலை வெறி ! கவிஞர் இரா .இரவி
ஏன்? இந்தக் கொலை வெறி ! கவிஞர் இரா .இரவி
பள்ளி மாணவன் ஆசிரியரைக் கொலைப் புரிந்த செய்திப் படித்து ,அதிர்ந்துப் போனேன் .மாதா ,பிதா குரு,தெய்வம் என்றார்கள். தெய்வத்திற்கும் முன்பாக குருவை வைத்தார்கள் .குருவை வணங்கிய காலம் மாறி ,கொலை செய்யும் வெறித்தனம் ஏன்?வந்தது. எப்படி? வந்தது , எதனால் ? வந்தது இப்படி பல கேள்விகள் என் மனதில் எழுந்தது .குடியிருப்பில் இருப்பதுக் கூடத் தெரியாமல் அமைதியாக வாழ்ந்த மாணவன் ,கொலை செய்துள்ளான் .இன்று ஆசிரியர் மாணவர் உறவில் ஏன் ? இந்த விரிசல் வந்தது. இருவருக்கும் இடையே அன்பு நிலவ வேண்டும் .ஆசிரியர்கள் மாணவர்களிடம் மிகக் கடுமையாக நடந்துக் கொள்வதும் தவறு. மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்காமல் இருப்பதும் தவறு .
ஆசிரியை உமா மகேஸ்வரியின் கொலைக்கு காரணங்களை ஆராய்ந்தால் ,கொலை செய்த மாணவன் வன்முறை திரைப்படம் பார்த்து இருக்கிறான் .கொலைவெறிக்கு அதுவும் ஒரு காரணமாகிறது .திரைப்பட வன்முறையால் சமுதாயம் சீரழிகிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம் . கொலைவெறிப் பாடலின் பொருள் தெரியாமல் சிறு குழந்தைகளும் இன்றுப் பாடுகின்றனர் .நல்ல திரைப்படங்கள் அத்திப் பூத்த மாதிரி எப்போதாவதுதான் வருகின்றன .ஆனால் ஆபாச ,வன்முறை திரைப்படங்கள்தான் வரிசை வரிசையாக வருகின்றது .திரைத்துறையினர் சமுதாய அக்கரையுடன் படம் எடுக்க முன் வர வேண்டும் .
பெரிய திரை இப்படி என்றால் சின்னத்திரைப் பற்றி சொல்லவே மனம் கூசுகின்றது .குடும்பத்தை எப்படி? கெடுப்பது ,யாரை எப்படி? பழி வாங்குவது ,எப்படி? குழிப் பறிப்பது ,வக்கிரம் குணம் எப்படி? வளர்ப்பது ,எப்படி ?துரோகம் செய்வது ,எப்படி ?மோசடி செய்வது என்று வகுப்பு எடுக்கும் விதமாக தொலைக்காட்சித் தொடர்கள் .உடனடியாக தொலைக்காட்சித் தொடர்களுக்கு தணிக்கை கொண்டு வர வேண்டியது, மிகவும் அவசர அவசியம் .ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் தமிழ்ப் பண்பாட்டைச் சிதைக்கும் விதமாக தொடரில் வரும் கதாநாயன்கள் அனைவருக்கும் இரண்டு மனைவி . சில தொடர்களில் மாணவன் ஆசிரியரை எப்படி? கேலி செய்ய வேண்டும் என்று கற்பிக்கும் விதமாகவே வருகின்றன .
இந்தக் கொலைக்கு மற்றொரு காரணம் பள்ளியின் நிர்வாகம் .மாநிலத்தில் முதல் மூன்று இடத்தில தம் பள்ளி வந்து விட்டால், அந்த விளம்பரத்தின் மூலம் பள்ளியின் கட்டணத்தை ,நன்கொடையை உயர்த்தி பணம் கொள்ளை அடிக்க வேண்டும் . என்ற வெறியோடு பல தனியார் பள்ளிகள் செயல்படுகின்றனர் . பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களுக்கு நெருக்கடிக் கொடுக்கின்றனர் .அதன் காரணமாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நெருக்கடிக் கொடுக்கின்றனர் ..தமிழ் நாட்டில் தமிழ் சொல்லித் தராமல் ,இந்தி, சமஸ்கிருதம் ,பிரன்ச் படிக்கச் சொல்லி துன்புறுத்துகின்றனர் .பிஞ்சு நெஞ்சங்களில் கட்டாயப்படுத்தி நஞ்சு கலக்கின்றனர் .தாய் மொழி தமிழ் நன்கு புரியும். அதை விடுத்து அந்நிய மொழிகளை படிக்கச் சொல்லி துன்புறுத்துகின்றனர் . உலக மொழிஆங்கிலம் தாய் மொழி தமிழ் .இந்த இரண்டு மொழி பள்ளிப் படிப்பிற்குப் போதும் .வேறு மொழிகள் கற்பிப்பதை முதலில் ஒழிக்க வேண்டும் .
நீதி போதனை வகுப்பு முன்பு இருந்தது .ஆனால் இன்று பெரும்பாலான பள்ளிகளில் நீதி போதனை வகுப்பை எடுத்து விட்டனர் .உடனடியாக எல்லாப் பள்ளிகளிலும் நீதி போதனை வகுப்பு கட்டாயம் ஆக்க வேண்டும் .
இந்தி சரியாகப் படிக்கவில்லை ,படிப்பு வரவில்லை என்று ஆசிரியர் குறிப்பு எழுதி உள்ளார் .இதனைப் படித்த பெற்றோர் மிகக் கடுமையாக திட்டி உள்ளனர் .பெற்றோர்களும் படிப்பு சரியாக வராத குழந்தைகளைக் கண்டப்படி திட்டுவதை நிறுத்த வேண்டும். அன்பு செலுத்த வேண்டும் .பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும் .கல்வியின் பயனை பொறுமையாக எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும் .
தனியார் பள்ளி நிர்வாகங்கள் உடனடியாகத் திருந்த வேண்டும் .திருந்த மறுத்தால் கல்வி அதிகாரிகள் திருத்த வேண்டும் .பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பில் முடிவு சதவிகிதத்தில் தங்கள் பள்ளி முழுமையாக வெற்றிப் பெற வேண்டும் என்ற வெறியில், ஒன்பதாம் வகுப்பில் ,பதினொன்றாம் வகுப்பில் சுமாராகப் படிக்கும் மாணவர்களை பள்ளியில் இருந்து விரட்டு விடும் போக்கு உள்ளது .மாற வேண்டும் .இப்படி விரட்டப் படும் மாணவர்களின் மனசு பற்றி ,அவர்களது பெற்றோர்கள் மனசுப் பற்றி ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் .படிக்காத மாணவனைப் படிக்க வைப்பதுதான் பள்ளிக்குப் பெருமை .அன்று கல்விக்கு சேவை செய்ய தனியார் முன் வந்தனர் .ஆனால் இன்று பணம் கொள்ளை அடிப்பதற்காகவே தனியார் வருகின்றனர்..இந்த நிலை மாற வேண்டும். மாறினால் கொலை வெறி ஒழியும்.மனித நேயம் மலரும் .ஆசிரியர் மாணவர் நட்பாக இருக்கும் காலம் வரும் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
பள்ளி மாணவன் ஆசிரியரைக் கொலைப் புரிந்த செய்திப் படித்து ,அதிர்ந்துப் போனேன் .மாதா ,பிதா குரு,தெய்வம் என்றார்கள். தெய்வத்திற்கும் முன்பாக குருவை வைத்தார்கள் .குருவை வணங்கிய காலம் மாறி ,கொலை செய்யும் வெறித்தனம் ஏன்?வந்தது. எப்படி? வந்தது , எதனால் ? வந்தது இப்படி பல கேள்விகள் என் மனதில் எழுந்தது .குடியிருப்பில் இருப்பதுக் கூடத் தெரியாமல் அமைதியாக வாழ்ந்த மாணவன் ,கொலை செய்துள்ளான் .இன்று ஆசிரியர் மாணவர் உறவில் ஏன் ? இந்த விரிசல் வந்தது. இருவருக்கும் இடையே அன்பு நிலவ வேண்டும் .ஆசிரியர்கள் மாணவர்களிடம் மிகக் கடுமையாக நடந்துக் கொள்வதும் தவறு. மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்காமல் இருப்பதும் தவறு .
ஆசிரியை உமா மகேஸ்வரியின் கொலைக்கு காரணங்களை ஆராய்ந்தால் ,கொலை செய்த மாணவன் வன்முறை திரைப்படம் பார்த்து இருக்கிறான் .கொலைவெறிக்கு அதுவும் ஒரு காரணமாகிறது .திரைப்பட வன்முறையால் சமுதாயம் சீரழிகிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம் . கொலைவெறிப் பாடலின் பொருள் தெரியாமல் சிறு குழந்தைகளும் இன்றுப் பாடுகின்றனர் .நல்ல திரைப்படங்கள் அத்திப் பூத்த மாதிரி எப்போதாவதுதான் வருகின்றன .ஆனால் ஆபாச ,வன்முறை திரைப்படங்கள்தான் வரிசை வரிசையாக வருகின்றது .திரைத்துறையினர் சமுதாய அக்கரையுடன் படம் எடுக்க முன் வர வேண்டும் .
பெரிய திரை இப்படி என்றால் சின்னத்திரைப் பற்றி சொல்லவே மனம் கூசுகின்றது .குடும்பத்தை எப்படி? கெடுப்பது ,யாரை எப்படி? பழி வாங்குவது ,எப்படி? குழிப் பறிப்பது ,வக்கிரம் குணம் எப்படி? வளர்ப்பது ,எப்படி ?துரோகம் செய்வது ,எப்படி ?மோசடி செய்வது என்று வகுப்பு எடுக்கும் விதமாக தொலைக்காட்சித் தொடர்கள் .உடனடியாக தொலைக்காட்சித் தொடர்களுக்கு தணிக்கை கொண்டு வர வேண்டியது, மிகவும் அவசர அவசியம் .ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் தமிழ்ப் பண்பாட்டைச் சிதைக்கும் விதமாக தொடரில் வரும் கதாநாயன்கள் அனைவருக்கும் இரண்டு மனைவி . சில தொடர்களில் மாணவன் ஆசிரியரை எப்படி? கேலி செய்ய வேண்டும் என்று கற்பிக்கும் விதமாகவே வருகின்றன .
இந்தக் கொலைக்கு மற்றொரு காரணம் பள்ளியின் நிர்வாகம் .மாநிலத்தில் முதல் மூன்று இடத்தில தம் பள்ளி வந்து விட்டால், அந்த விளம்பரத்தின் மூலம் பள்ளியின் கட்டணத்தை ,நன்கொடையை உயர்த்தி பணம் கொள்ளை அடிக்க வேண்டும் . என்ற வெறியோடு பல தனியார் பள்ளிகள் செயல்படுகின்றனர் . பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களுக்கு நெருக்கடிக் கொடுக்கின்றனர் .அதன் காரணமாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நெருக்கடிக் கொடுக்கின்றனர் ..தமிழ் நாட்டில் தமிழ் சொல்லித் தராமல் ,இந்தி, சமஸ்கிருதம் ,பிரன்ச் படிக்கச் சொல்லி துன்புறுத்துகின்றனர் .பிஞ்சு நெஞ்சங்களில் கட்டாயப்படுத்தி நஞ்சு கலக்கின்றனர் .தாய் மொழி தமிழ் நன்கு புரியும். அதை விடுத்து அந்நிய மொழிகளை படிக்கச் சொல்லி துன்புறுத்துகின்றனர் . உலக மொழிஆங்கிலம் தாய் மொழி தமிழ் .இந்த இரண்டு மொழி பள்ளிப் படிப்பிற்குப் போதும் .வேறு மொழிகள் கற்பிப்பதை முதலில் ஒழிக்க வேண்டும் .
நீதி போதனை வகுப்பு முன்பு இருந்தது .ஆனால் இன்று பெரும்பாலான பள்ளிகளில் நீதி போதனை வகுப்பை எடுத்து விட்டனர் .உடனடியாக எல்லாப் பள்ளிகளிலும் நீதி போதனை வகுப்பு கட்டாயம் ஆக்க வேண்டும் .
இந்தி சரியாகப் படிக்கவில்லை ,படிப்பு வரவில்லை என்று ஆசிரியர் குறிப்பு எழுதி உள்ளார் .இதனைப் படித்த பெற்றோர் மிகக் கடுமையாக திட்டி உள்ளனர் .பெற்றோர்களும் படிப்பு சரியாக வராத குழந்தைகளைக் கண்டப்படி திட்டுவதை நிறுத்த வேண்டும். அன்பு செலுத்த வேண்டும் .பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும் .கல்வியின் பயனை பொறுமையாக எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும் .
தனியார் பள்ளி நிர்வாகங்கள் உடனடியாகத் திருந்த வேண்டும் .திருந்த மறுத்தால் கல்வி அதிகாரிகள் திருத்த வேண்டும் .பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பில் முடிவு சதவிகிதத்தில் தங்கள் பள்ளி முழுமையாக வெற்றிப் பெற வேண்டும் என்ற வெறியில், ஒன்பதாம் வகுப்பில் ,பதினொன்றாம் வகுப்பில் சுமாராகப் படிக்கும் மாணவர்களை பள்ளியில் இருந்து விரட்டு விடும் போக்கு உள்ளது .மாற வேண்டும் .இப்படி விரட்டப் படும் மாணவர்களின் மனசு பற்றி ,அவர்களது பெற்றோர்கள் மனசுப் பற்றி ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் .படிக்காத மாணவனைப் படிக்க வைப்பதுதான் பள்ளிக்குப் பெருமை .அன்று கல்விக்கு சேவை செய்ய தனியார் முன் வந்தனர் .ஆனால் இன்று பணம் கொள்ளை அடிப்பதற்காகவே தனியார் வருகின்றனர்..இந்த நிலை மாற வேண்டும். மாறினால் கொலை வெறி ஒழியும்.மனித நேயம் மலரும் .ஆசிரியர் மாணவர் நட்பாக இருக்கும் காலம் வரும் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi- இளையநிலா

- பதிவுகள்: 701
சேர்ந்தது: 08/07/2010
மதிப்பீடு: 81

Re: ஏன்? இந்தக் கொலை வெறி ! கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi- இளையநிலா

- பதிவுகள்: 701
சேர்ந்தது: 08/07/2010
மதிப்பீடு: 81

Re: ஏன்? இந்தக் கொலை வெறி ! கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi- இளையநிலா

- பதிவுகள்: 701
சேர்ந்தது: 08/07/2010
மதிப்பீடு: 81

Re: ஏன்? இந்தக் கொலை வெறி ! கவிஞர் இரா .இரவி
காலம் செய்த கோலம்.

றினா- வி.ஐ.பி

- பதிவுகள்: 2905
சேர்ந்தது: 01/05/2011
மதிப்பீடு: 362
Re: ஏன்? இந்தக் கொலை வெறி ! கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi- இளையநிலா

- பதிவுகள்: 701
சேர்ந்தது: 08/07/2010
மதிப்பீடு: 81

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








