|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !by eraeravi Today at 8:57 pm
» ஆய்வு சொற்பொழிவு திரு R. பால கிருஷ்ணன் இ .ஆ .ப .தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
by eraeravi Today at 8:55 pm
» < < < < < இலக்கண இன்பம் > > > > >
by யினியவன் Today at 8:55 pm
» பொதுஅறிவு துளிகள்
by Muthumohamed Today at 8:53 pm
» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Today at 8:51 pm
» குளிரூட்டியில்(Freezer) வைத்து கைப்பேசி பேட்டரியின் திறனை அதிகரிக்கலாமா?
by மாணிக்கம் நடேசன் Today at 8:50 pm
» வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!
by ansaralis Today at 8:14 pm
» எனது 8000 -மாவது நகைச்சுவை பதிவு - ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் காமெடி கலாட்டா...
by Muthumohamed Today at 8:13 pm
» நம் ஈகரையின் புதிய சிறப்புப் பதிவாளர்கள்
by madhukrish Today at 7:58 pm
» எம்பிராய்டரி
by madhukrish Today at 7:55 pm
» சோட்டா பீம் வீடியோஸ் வேண்டும் உதவுங்கள் நண்பர்களே.
by vishwajee Today at 7:51 pm
» நேரம்-திரைப்பட விமர்சனம்...
by ansaralis Today at 7:48 pm
» நான் இப்போது சென்னைவாசி - ச. சந்திரசேகரன்
by Muthumohamed Today at 7:44 pm
» வாஸ்து - help
by vishwajee Today at 7:39 pm
» இன்று தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடும் அக்ஷயா ராஜசேகரனை வாழ்த்தலாம் வாங்க!
by ராஜா Today at 7:36 pm
» இதோ எனது ஆசை !
by அகல் Today at 7:24 pm
» கிளாஸ் பெயிண்டிங்
by madhukrish Today at 7:10 pm
» கவிதையில் யாப்பு
by ரமணி Today at 6:19 pm
» வழக்கொழிந்த அளவுகள்
by ராஜா Today at 6:04 pm
» ரமணியின் கதைகள்
by ரமணி Today at 5:53 pm
» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
by ராஜா Today at 5:48 pm
» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
by balakarthik Today at 5:07 pm
» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by yarlpavanan Today at 5:05 pm
» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by ராஜா Today at 4:59 pm
» ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு
by balakarthik Today at 4:54 pm
» என் தனிமை தருணங்கள் .....
by balakarthik Today at 4:49 pm
» கட்லட்
by balakarthik Today at 4:43 pm
» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by சதாசிவம் Today at 4:17 pm
» 1000 பதிவுகள் கடந்த நம்ம ராஜு சரவணன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by balakarthik Today at 4:17 pm
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by balakarthik Today at 4:14 pm
» அறிமுகம்
by balakarthik Today at 4:09 pm
» 20000 பதிவுகளை கடந்த இனியவன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 4:05 pm
» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by positivekarthick Today at 3:20 pm
» ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்
by ராஜு சரவணன் Today at 3:01 pm
» மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3
by ராஜா Today at 2:44 pm
» பகத்சிங் நாத்திகரா?
by arasanrl Today at 12:40 pm
» எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே !
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 12:18 pm
» பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100
by arasanrl Today at 12:14 pm
» 15 அற்புதமான கார்களின் வெட்டுத்தோற்றம் - படங்கள்
by ராஜு சரவணன் Today at 11:42 am
» வெள்ளி நைட்ரோ ஆக்சைட்
by ராஜா Today at 11:13 am
Top posting users this week
| யினியவன் | ||||
| Muthumohamed | ||||
| ராஜு சரவணன் | ||||
| madhukrish | ||||
| krishnaamma | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ராஜா | ||||
| பூவன் | ||||
| சிவா | ||||
| balakarthik |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நினைப்பது ஒன்று
Page 1 of 1 • Share •
நினைப்பது ஒன்று
நினைப்பது ஒன்று...
காவிாி ஆற்றங்கரையோரம் உள்ள சிறப்பு வாய்ந்த சிறு கிராமம்தான் ஏறுவயல். இது செழுமை வாய்ந்த கிராமம். ஆற்றோரம் நெடுக காிகால் பெருவளத்தான் கட்டிய சிறுசிறு கல் மண்டபங்கள் அக்கிராமத்தையே மேலும் அழகாக்கியது. இக்கிராமத்தை அடுத்து பெரு நகரம் என்றால் அது பெருவள நாடு என சொல்லக் கூடிய ஊா்தான் அது. பெரும்பாலான மக்கள் பல தேவைகளுக்கு வாணிபத்திற்கும் தொடா்பு கொள்ள, பெருவளநாடு ஊருக்கு போகும் வழியில் இளைப்பாறவும், இரவில் தங்கவும் உகந்ததாக இருக்கும் ஊராக தொிந்த கொண்டதுதான் ஏறுவயல் கிராமம். அன்றைய நாளில் ஒரு மாலை நேரத்தில் வாணிப விஷயமாக மிகுந்த பொருளோடு, மாடசாமி என்ற வேலைக்காரனோடு பெருவள நாடு சென்று திரும்பி வந்தாா் ஜமீன் சுந்தர பாண்டி. இனி...
“எலே... மாடா...” அப்படித்தான் கூப்பிடுவாா் ஜமீன் சுந்தரபாண்டி.
“எஜமான்”
“மழை வா்ற மாதிாி இருக்கே...என்ன பண்ணலாம்? மாடா”
“மழைக்கு முன்னாடி சீக்கிரம் வண்டிய விரட்டினா பக்கத்தில இருக்கும் ஏறு வயலுக்கு போயிலாமங்க எசமான்”
“சாி வரட்டு வண்டிய...”
ஆற்றோரமாக இருந்த பெருவளத்தான் போட்ட மண் சாலையில் காங்கேயம் காளைகள் இரண்டும் வேகமெடுத்தது. இயற்கையின் ஓட்டத்திற்கு முன்பு காளைகளின் ஓட்டம் எம்மாத்திரம்? மழையும், இருளும் ஒருசேர வர... காற்றும், மழையும் கடுமையாக வீச...வண்டியை அதற்கு மேல் நடத்த இயலாமல் பெருவளத்தான் கட்டிய மண்டபத்தில் கொண்டு வந்து நிறுத்தினான் மாடசாமி. மழையோ விடாமல் பிடித்து கொண்டது.
ஜமீன் சுந்தரபாண்டிக்கு உள்ளுர பயம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல்...
“எலே...மாடா... இன்று இரவு முழுவதும் மழை விடாது போல இருக்கே...”
“ஆமாங்க எசமான்”
“இரவு இங்கேயெ தங்கிவிட்டு காலையிலேதான் போக முடியும் போல ... நாம இருக்கிற இடம் பாதுகாப்பானதா மாடா...”
“பயப்படாதீங்க எசமான். நம்ம மவராசா பெருவளத்தாா் ஆட்சியில அந்த மாதிாி எல்லாம் எதுவும் நடக்காதுங்க...”
“சாிசாி... நீ...மண்டப்த்துக்கு மன் வாசலிலே படுத்துக்கோ... நான் உள்ளே படுத்துக்கிறேன்”
“சாிங்க எசமான்”
நடுஇரவு... தன் திட்டப்படி எல்லாம் வசதியாக இயற்கையும் ஒத்துழைப்பதை கண்டு உள்ளுர சந்தோஷப்பட்டான் மாடாசாமி.
தொடரும்...



“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 


http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்
- பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721
Re: நினைப்பது ஒன்று
தொடர்கிறேன் சார்லஸ்
(நானும்தான் நினைச்சேன் ஒரு கதையோட நிறுத்திடுவீங்கனு
நினைத்தது ஒன்று ஆனா நடந்தது.................................)
(நானும்தான் நினைச்சேன் ஒரு கதையோட நிறுத்திடுவீங்கனு
நினைத்தது ஒன்று ஆனா நடந்தது.................................)

முரளிராஜா- வி.ஐ.பி

- பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173
Re: நினைப்பது ஒன்று
இது ரொம்ப நல்லாருக்கே...
மீதி பாதிய நீங்களும், முடிவை யினியவனும் சொல்லுவீங்கன்னு இல்ல நெனச்சு தொடரும் போட்டிருக்கேன்...
நான் விட்ட பீலாவ ஒழுங்கா இரண்டு பேரும் முடிச்சு வையுங்க...இல்ல... இத்தோட நிறுத்திக்குவேன். ஜாக்கிரதை...
(ஏன்னா... இதுக்கு மேலா பீலா விட தொியலையே...என்ன பண்ணுவேன்?)
மீதி பாதிய நீங்களும், முடிவை யினியவனும் சொல்லுவீங்கன்னு இல்ல நெனச்சு தொடரும் போட்டிருக்கேன்...
நான் விட்ட பீலாவ ஒழுங்கா இரண்டு பேரும் முடிச்சு வையுங்க...இல்ல... இத்தோட நிறுத்திக்குவேன். ஜாக்கிரதை...
(ஏன்னா... இதுக்கு மேலா பீலா விட தொியலையே...என்ன பண்ணுவேன்?)




“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 


http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்
- பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721
Re: நினைப்பது ஒன்று
சார்லஸ் mc wrote:இது ரொம்ப நல்லாருக்கே...
மீதி பாதிய நீங்களும், முடிவை யினியவனும் சொல்லுவீங்கன்னு இல்ல நெனச்சு தொடரும் போட்டிருக்கேன்...
நான் விட்ட பீலாவ ஒழுங்கா இரண்டு பேரும் முடிச்சு வையுங்க...இல்ல... இத்தோட நிறுத்திக்குவேன். ஜாக்கிரதை...
(ஏன்னா... இதுக்கு மேலா பீலா விட தொியலையே...என்ன பண்ணுவேன்?)
கவலைபடாதிங்க சார்லஸ்
கதைய முடிக்கறதில்ல நம்ம யினியவன் கில்லாடி
அவர் வந்து கதைய முடிச்சுடுவாரு
எத்தனை பேர் கதைய முடிச்சிருக்காரு நம்ம யினியவன்

முரளிராஜா- வி.ஐ.பி

- பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173
Re: நினைப்பது ஒன்று
எனக்கென்ன கவலை முரளி. பொறுப்பைதான் உங்க ரண்டு பேருகிட்ட ஒப்படைத்து விட்டேனே...
ஆனா ஒண்ணு... இப்படி நைஸா யினியவன்கிட்டே தள்ளி விடுவது தங்களது கற்பனை வளத்திற்கு மாபெரும் இழுக்கு...
முடிவை அவரு சொல்லட்டும்... நடுவில் இருப்பதை பில்அப் பண்ணுங்க முதலில்...
அதற்கு மேல அவரு திணறட்டும்...
ஆனா ஒண்ணு... இப்படி நைஸா யினியவன்கிட்டே தள்ளி விடுவது தங்களது கற்பனை வளத்திற்கு மாபெரும் இழுக்கு...
முடிவை அவரு சொல்லட்டும்... நடுவில் இருப்பதை பில்அப் பண்ணுங்க முதலில்...
அதற்கு மேல அவரு திணறட்டும்...



“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 


http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்
- பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721
Re: நினைப்பது ஒன்று
அதுக்கப்புறம் என்ன ஆச்சு அண்ணா இப்படி பாதியிலே விட்டுட்டு போயிட்டீங்க சொல்லுங்க அண்ணா 


Manik- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 18288
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 754
Re: நினைப்பது ஒன்று
தொடா்ச்சி...
நடுநிசி... லேசான தூறல்... தவளைகளின் கரகர குரகுர சத்தத்தில் ஜமீன் சுந்தரபாண்டியின் குறட்டை சத்தமம் சோ்ந்து கொள்ள...மெதுவாக தலையை தூக்கி, ஜமீனைப் பாா்த்தான் மாடசாமி. குளிா்ந்த காற்றின் குளிா்ச்சியில் நன்கு உறங்கிக் கொண்டிருந்தாா்.
மெல்ல எழுந்து வெளியே வந்தான். கூண்டு வண்டியில் இருந்த கோணிப்பையை எடுத்து தலைமேல் போட்டுக் கொண்டு வேகவேகமாக மேற்கு நோக்கி நடையை கட்டினான். ஜமீன் முழிக்கிறதுக்குள்ள காாியத்தை கன கச்சிதமா முடிக்கனும் என்ற எண்ணத்தில் நடையை எட்டிப்போட்டான். சிறிது நேரத்திற்கு பின்பு, ஒரு குடிசை வாசலில் வந்து நின்று, “இருளா...டேய்...இருளா...” என கூப்பிட்டான்.
குடிசையின் படல் கதவு திறந்த கொண்டு, முரட்டு மீசையோடு ஒருவன் வெளிப்பட்டான். “யாரது... மாடனா..”
“ ஆமாண்டா...”
“என்ன விஷயம்?...”
“என்னடா ஒண்ணுந் தொியாத மாதிாி பேசறே... பல நாளா நாம திட்டம் போட்டுகிட்டு இருந்தொமே...ஜமீன் இன்னைக்கு நெறைய கொண்டு வந்திரக்காருடா... இன்னைக்கு அவரு சோலிய முடிசிட்டு நாம அத்தனையும் எடுத்துக்கிட்டா...வாழ் நாள் பூரா எந்தக் கஷ்டமுமில்லடா...”
“ஆமாமா...சாிசாி...இரு. நா போயி... கந்தனையும், சுப்பனையும் கூட்டியாறேன்”
“சாி...நீ அவுங்கள கூட்டிகிட்டு வா... நான் போயி ஒண்ணும் தொியாதவனாட்டம் மண்டபத்தில படுத்தகிறேன். முன்னால படுத்திருக்கிறது நான். உள்ளாற படுத்திருக்கிறது ஜமீன். பூிஞ்சுதா...”
சாி...மாடா...நம்ம குடிசைக்கு வந்தட்டு ஒண்ணுமே சாப்பிடாம போறீயே...இரு...இரு..மொந்தையிலே கள்ளு வச்சிருக்கிறேன். குடிச்சிட்டு போவ...”
“ஆமாமா...கொண்டா...குடிச்சாதான் ஒரு தெகிாியம் தான வரும்”
இருவரும் ஆளுக்கு ஒரு மொந்தை கள்ளை வயிற்றில் இறக்கினாா்கள்.
“சாி...இருளா...நா பொறேன்...ஜல்தியா வா...”
“கொஞ்சம் முன்ன பின்ன ஆகும்...மாடா...அவனுக என்ன நெலையில இருக்கானுகளோ...குடிகார பயலுவ...எழுப்பி கூட்டி வரவேணாமா...நீ முன்னால போ...பின்னால வாறேன்.”
மண்டபத்துக்கு வந்து சோ்ந்தான் மாடசாமி. அசந்த நிலையில் நித்திரையில் இருந்தாா் ஜமீன், இனி நடக்கப் போவதை அறியாமல்...
வருகிறென் என்ற சொன்ன இருளனைக் காணாமல் அலைபாய்ந்த மனதோடு காதில் வைத்திருந்த மீதி சுருட்டை பற்ற வைத்தான் மாடசாமி. மழைநேரம்...புகை வெளியெ செல்ல இடமின்றி மண்டபத்திற்குள்ளேயே லேசாக பரவிக் கொண்டிருந்தது. புகைவாடையே பிடிக்காத ஜமீன் தூக்கம் கலைந்து எழுந்தாா்.
“எலே...மாடா...”
குரல் கேட்டு அதிா்ச்சியடைந்த மாடாசாமி, உடனே சுருட்டை வெளியே வீசியெறிந்து விட்டு, “எசமான்” என்றான்.
சந்தையில் வாங்கி சாப்பிட்ட நொருக்குத்தீனியும், இரவில் சாப்பிட்ட உணவும் வயிற்றை ஏதோ செய்ய...ஜமீன் அவனை நோக்கி, “மாடா...வயிறு என்னமோ செய்யுதுடா...நான் அப்பிடி போயி ஒதுங்கிட்டு வாறேன். இந்தா...இந்த பைய பத்திரமா வச்சிரு...இந்தா மேல்சட்டையும், அங்க வஸ்திரமும்...பத்திரமடா...”
“சாிங்க எசமான்”
லேசான தூறலில் இருட்டில் இறங்கி நடந்தாா் ஜமீன்.
போன ஜமீனையும் காணோம்...இருளனையும் காணோம்...
சாி...ரொம்ப நாளா ஒரு ஆசை...ஜமீன் சட்டையும் , அங்கவஸ்திரத்தையும் போட்டு பாா்க்கணுமுன்னு...அவரு வா்றதுக்குள்ள போட்டு பாத்துடனும்...என்று நினைத்தவாறே மாடசாமி செயலில் இறங்கினான்.
ஜமீனுக்கு எப்பவும் ஒதுங்கப்போனா அரைமணி, முக்கா மணி ஆகும். ஆற்றங்கரையோரம் ஒதுங்கினாா். தூறல் நின்று போயிருந்தது.
இருளன் கொடுத்த கள்ளும், குளிா்ந்த காற்றும் லேசான தூக்கத்தை மாடனுக்கு கொண்டு வந்தது. பணமூட்டையை மடியில் வைத்துக் கொண்டு தூணில் சாய்ந்தான். சிறிது நேரம் அப்படியே சாிந்து படுத்தான். மொந்தையில் குடித்த கள்ளின் மயக்கம் அயா்ந்த நித்திரையை கொண்டுவர...அப்படியே தூங்கிப்போனான் மாடசாமி.
தொடரும்...
(மீதியை அவா்கள் இருவாில் ஒருவா் முடிப்பாா்கள் என கருதுகிறேன்)
நடுநிசி... லேசான தூறல்... தவளைகளின் கரகர குரகுர சத்தத்தில் ஜமீன் சுந்தரபாண்டியின் குறட்டை சத்தமம் சோ்ந்து கொள்ள...மெதுவாக தலையை தூக்கி, ஜமீனைப் பாா்த்தான் மாடசாமி. குளிா்ந்த காற்றின் குளிா்ச்சியில் நன்கு உறங்கிக் கொண்டிருந்தாா்.
மெல்ல எழுந்து வெளியே வந்தான். கூண்டு வண்டியில் இருந்த கோணிப்பையை எடுத்து தலைமேல் போட்டுக் கொண்டு வேகவேகமாக மேற்கு நோக்கி நடையை கட்டினான். ஜமீன் முழிக்கிறதுக்குள்ள காாியத்தை கன கச்சிதமா முடிக்கனும் என்ற எண்ணத்தில் நடையை எட்டிப்போட்டான். சிறிது நேரத்திற்கு பின்பு, ஒரு குடிசை வாசலில் வந்து நின்று, “இருளா...டேய்...இருளா...” என கூப்பிட்டான்.
குடிசையின் படல் கதவு திறந்த கொண்டு, முரட்டு மீசையோடு ஒருவன் வெளிப்பட்டான். “யாரது... மாடனா..”
“ ஆமாண்டா...”
“என்ன விஷயம்?...”
“என்னடா ஒண்ணுந் தொியாத மாதிாி பேசறே... பல நாளா நாம திட்டம் போட்டுகிட்டு இருந்தொமே...ஜமீன் இன்னைக்கு நெறைய கொண்டு வந்திரக்காருடா... இன்னைக்கு அவரு சோலிய முடிசிட்டு நாம அத்தனையும் எடுத்துக்கிட்டா...வாழ் நாள் பூரா எந்தக் கஷ்டமுமில்லடா...”
“ஆமாமா...சாிசாி...இரு. நா போயி... கந்தனையும், சுப்பனையும் கூட்டியாறேன்”
“சாி...நீ அவுங்கள கூட்டிகிட்டு வா... நான் போயி ஒண்ணும் தொியாதவனாட்டம் மண்டபத்தில படுத்தகிறேன். முன்னால படுத்திருக்கிறது நான். உள்ளாற படுத்திருக்கிறது ஜமீன். பூிஞ்சுதா...”
சாி...மாடா...நம்ம குடிசைக்கு வந்தட்டு ஒண்ணுமே சாப்பிடாம போறீயே...இரு...இரு..மொந்தையிலே கள்ளு வச்சிருக்கிறேன். குடிச்சிட்டு போவ...”
“ஆமாமா...கொண்டா...குடிச்சாதான் ஒரு தெகிாியம் தான வரும்”
இருவரும் ஆளுக்கு ஒரு மொந்தை கள்ளை வயிற்றில் இறக்கினாா்கள்.
“சாி...இருளா...நா பொறேன்...ஜல்தியா வா...”
“கொஞ்சம் முன்ன பின்ன ஆகும்...மாடா...அவனுக என்ன நெலையில இருக்கானுகளோ...குடிகார பயலுவ...எழுப்பி கூட்டி வரவேணாமா...நீ முன்னால போ...பின்னால வாறேன்.”
மண்டபத்துக்கு வந்து சோ்ந்தான் மாடசாமி. அசந்த நிலையில் நித்திரையில் இருந்தாா் ஜமீன், இனி நடக்கப் போவதை அறியாமல்...
வருகிறென் என்ற சொன்ன இருளனைக் காணாமல் அலைபாய்ந்த மனதோடு காதில் வைத்திருந்த மீதி சுருட்டை பற்ற வைத்தான் மாடசாமி. மழைநேரம்...புகை வெளியெ செல்ல இடமின்றி மண்டபத்திற்குள்ளேயே லேசாக பரவிக் கொண்டிருந்தது. புகைவாடையே பிடிக்காத ஜமீன் தூக்கம் கலைந்து எழுந்தாா்.
“எலே...மாடா...”
குரல் கேட்டு அதிா்ச்சியடைந்த மாடாசாமி, உடனே சுருட்டை வெளியே வீசியெறிந்து விட்டு, “எசமான்” என்றான்.
சந்தையில் வாங்கி சாப்பிட்ட நொருக்குத்தீனியும், இரவில் சாப்பிட்ட உணவும் வயிற்றை ஏதோ செய்ய...ஜமீன் அவனை நோக்கி, “மாடா...வயிறு என்னமோ செய்யுதுடா...நான் அப்பிடி போயி ஒதுங்கிட்டு வாறேன். இந்தா...இந்த பைய பத்திரமா வச்சிரு...இந்தா மேல்சட்டையும், அங்க வஸ்திரமும்...பத்திரமடா...”
“சாிங்க எசமான்”
லேசான தூறலில் இருட்டில் இறங்கி நடந்தாா் ஜமீன்.
போன ஜமீனையும் காணோம்...இருளனையும் காணோம்...
சாி...ரொம்ப நாளா ஒரு ஆசை...ஜமீன் சட்டையும் , அங்கவஸ்திரத்தையும் போட்டு பாா்க்கணுமுன்னு...அவரு வா்றதுக்குள்ள போட்டு பாத்துடனும்...என்று நினைத்தவாறே மாடசாமி செயலில் இறங்கினான்.
ஜமீனுக்கு எப்பவும் ஒதுங்கப்போனா அரைமணி, முக்கா மணி ஆகும். ஆற்றங்கரையோரம் ஒதுங்கினாா். தூறல் நின்று போயிருந்தது.
இருளன் கொடுத்த கள்ளும், குளிா்ந்த காற்றும் லேசான தூக்கத்தை மாடனுக்கு கொண்டு வந்தது. பணமூட்டையை மடியில் வைத்துக் கொண்டு தூணில் சாய்ந்தான். சிறிது நேரம் அப்படியே சாிந்து படுத்தான். மொந்தையில் குடித்த கள்ளின் மயக்கம் அயா்ந்த நித்திரையை கொண்டுவர...அப்படியே தூங்கிப்போனான் மாடசாமி.
தொடரும்...
(மீதியை அவா்கள் இருவாில் ஒருவா் முடிப்பாா்கள் என கருதுகிறேன்)



“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 


http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்
- பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721
Re: நினைப்பது ஒன்று
அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியுமே.....



Manik- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 18288
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 754
Re: நினைப்பது ஒன்று
சார்லஸ் முரளி மீதும் என் மீதும் உங்களுக்கு இவ்ளோ நம்பிக்கை கூடாது. ஆனா வெச்சுட்டீங்க - எனவே அதை நம்ம முரளி சார்பா காப்பாத்தறேன்.
ஒரு பாசிடிவ் முடிவை தருகிறேன் - அனைவரும் எதிர்பார்ப்பது கெடுவான் கேடு நினைப்பவன் என்று தானே? அதை மாற்ற முயற்சிக்கிறேன்:
இறுதிப் பகுதி:
கள் தந்த போதையும், பயணக் களைப்பும், குறுக்கு வழியில் குபேரனாகும் ஆசை இவை அனைத்தும் சேர்ந்து மாடனை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தியது. அதோடு நீண்ட நாள் கனவான ஜமீன் உடையும் அங்கவஸ்திரமும் அணிந்தது அவனை சந்தோஷத்தில் மூழ்கடித்திருந்தது.
சில நிமிடங்களுக்கு பின்னர் இருளன், கந்தன், சுப்பன் மூவரும் - ஜமீந்தாரைத் தாக்கி கதையை முடித்துவிட்டு பொன்னும் பொருளையும் கொள்ளை அடித்துப் போக வந்தார்கள் மாடனின் யோசனைப் படி.
மண்டப வாசலில் மாடனை காணவில்லை - குடிகாரப் பய எங்க போய் தொலைந்தானோ என்று மூவரும் முணுமுணுத்த படியே சரி வந்த வேலையை முடிக்கலாம் என்று எண்ணி உள்ளே நுழைந்தார்கள் ஆயுதங்களுடன்.
அங்கே ஜமீன்தார் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். மூவரும் அவரைத் தாக்கத் துவங்கினார்கள். ஐயோ அம்மாவென்று கூக்குரல் மட்டுமே இருட்டில் கேட்டது.
திடீரென அங்கே யாரடா அது என்ற ஒரு சிம்மக் குரல் கேட்க மூவரும் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று நிகழ்ந்ததால் அரண்டு விட்டனர்.
சத்தம் வந்த திசையில் ஆஜானுபாகுவான ஜமீன்தார் நிற்க கண்டு மிரண்டு போயினர். ஜமீன்தாரும் கட்டை ஒன்றை எடுத்து இவர்களை தாக்கத் துவங்கினார் - சிலம்பம் கற்றவராச்சே நம்ம ஜமீன்.
சில நிமிடங்களில் மூவரையும் பந்தாடிவிட்டார் ஜமீன் - தப்பித்தோம் பிழைத்தோம் என்று மூவரும் ஓடிவிட்டனர் அங்கிருந்து.
அடிபட்டு கீழே மயங்கிக் கிடந்த மாடனை ஜமீன்தார் தூக்கி உட்கார வைத்து - தண்ணீர் பருக வைத்து - ரத்தம் வழிவதை நிறுத்த அங்கவஸ்திரத்தை மாடனின் கழுத்தில் இருந்து எடுத்து கட்டினார்.
டேய் மாடா என் உசிரை காப்பாத்தின தெய்வமடா நீ. நான் உறங்குகையில் இவர்கள் தாக்கி இருந்தால் என் கதை இந்நேரம் முடிந்திருக்குமடா. என் உடை மீதுள்ள ஆசையால் நீ அதை அணியப் போக பாவம் நீ அடிபட்டு நான் பிழைக்க நேர்ந்தது. ரொம்ப நன்றிடா என்று ஜமீன் சொல்ல சொல்ல - மாடனோ கூனிக் குறுகி தன செயலுக்கு வெட்கப் பட்டு மிகவும் வருந்தினான்.
இனி வாழ்க்கையில் ஒருவருக்கும் தீங்கு நினைத்தலோ, அடுத்தவர் பொருளை குறுக்கு வழியில் அபகரிக்கவோ கூடாதென தீர்மானித்தான்.
அந்த மழையையும் பொருட்படுத்தாது ஜமீந்தாரே மாடனை வண்டியில் ஏற்றி மருத்துவரிடம் அழைத்து சென்றார் அந்த அகால இருளிலே.
இவ்ளோ நல்ல ஜமீனையா நான் தீர்த்துகட்ட நினைத்தேன் என்று மாடன் அழ, ஜமீந்தாரோ டேய் அதான் காப்பாத்திட்டேன்ல - அழாதடா என ஆறுதல் சொன்னார்.
முதல் குற்றம் புரிவதிலிருந்து தடுக்கப் பட அங்கே ஒரு நல்ல மனிதன் உருவான விஷயம் அறியாத ஜமீனோ - வருவோர் போவோரிடம் எல்லாம் மாடனின் புகழை வாய் ஓயாது பரப்பிக் கொண்டிருந்தார்.
மாடனும் முழுவதுமாக திருந்தி அன்றிலிருந்து நல்லவனாக வாழத் துவங்கினான்.
(ஓகேயா சார்லஸ்?)
ஒரு பாசிடிவ் முடிவை தருகிறேன் - அனைவரும் எதிர்பார்ப்பது கெடுவான் கேடு நினைப்பவன் என்று தானே? அதை மாற்ற முயற்சிக்கிறேன்:
இறுதிப் பகுதி:
கள் தந்த போதையும், பயணக் களைப்பும், குறுக்கு வழியில் குபேரனாகும் ஆசை இவை அனைத்தும் சேர்ந்து மாடனை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தியது. அதோடு நீண்ட நாள் கனவான ஜமீன் உடையும் அங்கவஸ்திரமும் அணிந்தது அவனை சந்தோஷத்தில் மூழ்கடித்திருந்தது.
சில நிமிடங்களுக்கு பின்னர் இருளன், கந்தன், சுப்பன் மூவரும் - ஜமீந்தாரைத் தாக்கி கதையை முடித்துவிட்டு பொன்னும் பொருளையும் கொள்ளை அடித்துப் போக வந்தார்கள் மாடனின் யோசனைப் படி.
மண்டப வாசலில் மாடனை காணவில்லை - குடிகாரப் பய எங்க போய் தொலைந்தானோ என்று மூவரும் முணுமுணுத்த படியே சரி வந்த வேலையை முடிக்கலாம் என்று எண்ணி உள்ளே நுழைந்தார்கள் ஆயுதங்களுடன்.
அங்கே ஜமீன்தார் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். மூவரும் அவரைத் தாக்கத் துவங்கினார்கள். ஐயோ அம்மாவென்று கூக்குரல் மட்டுமே இருட்டில் கேட்டது.
திடீரென அங்கே யாரடா அது என்ற ஒரு சிம்மக் குரல் கேட்க மூவரும் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று நிகழ்ந்ததால் அரண்டு விட்டனர்.
சத்தம் வந்த திசையில் ஆஜானுபாகுவான ஜமீன்தார் நிற்க கண்டு மிரண்டு போயினர். ஜமீன்தாரும் கட்டை ஒன்றை எடுத்து இவர்களை தாக்கத் துவங்கினார் - சிலம்பம் கற்றவராச்சே நம்ம ஜமீன்.
சில நிமிடங்களில் மூவரையும் பந்தாடிவிட்டார் ஜமீன் - தப்பித்தோம் பிழைத்தோம் என்று மூவரும் ஓடிவிட்டனர் அங்கிருந்து.
அடிபட்டு கீழே மயங்கிக் கிடந்த மாடனை ஜமீன்தார் தூக்கி உட்கார வைத்து - தண்ணீர் பருக வைத்து - ரத்தம் வழிவதை நிறுத்த அங்கவஸ்திரத்தை மாடனின் கழுத்தில் இருந்து எடுத்து கட்டினார்.
டேய் மாடா என் உசிரை காப்பாத்தின தெய்வமடா நீ. நான் உறங்குகையில் இவர்கள் தாக்கி இருந்தால் என் கதை இந்நேரம் முடிந்திருக்குமடா. என் உடை மீதுள்ள ஆசையால் நீ அதை அணியப் போக பாவம் நீ அடிபட்டு நான் பிழைக்க நேர்ந்தது. ரொம்ப நன்றிடா என்று ஜமீன் சொல்ல சொல்ல - மாடனோ கூனிக் குறுகி தன செயலுக்கு வெட்கப் பட்டு மிகவும் வருந்தினான்.
இனி வாழ்க்கையில் ஒருவருக்கும் தீங்கு நினைத்தலோ, அடுத்தவர் பொருளை குறுக்கு வழியில் அபகரிக்கவோ கூடாதென தீர்மானித்தான்.
அந்த மழையையும் பொருட்படுத்தாது ஜமீந்தாரே மாடனை வண்டியில் ஏற்றி மருத்துவரிடம் அழைத்து சென்றார் அந்த அகால இருளிலே.
இவ்ளோ நல்ல ஜமீனையா நான் தீர்த்துகட்ட நினைத்தேன் என்று மாடன் அழ, ஜமீந்தாரோ டேய் அதான் காப்பாத்திட்டேன்ல - அழாதடா என ஆறுதல் சொன்னார்.
முதல் குற்றம் புரிவதிலிருந்து தடுக்கப் பட அங்கே ஒரு நல்ல மனிதன் உருவான விஷயம் அறியாத ஜமீனோ - வருவோர் போவோரிடம் எல்லாம் மாடனின் புகழை வாய் ஓயாது பரப்பிக் கொண்டிருந்தார்.
மாடனும் முழுவதுமாக திருந்தி அன்றிலிருந்து நல்லவனாக வாழத் துவங்கினான்.
(ஓகேயா சார்லஸ்?)
Last edited by யினியவன் on Thu Jun 21, 2012 8:39 pm; edited 1 time in total

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20299
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4243
Re: நினைப்பது ஒன்று
விருப்ப பொத்தானை பாவித்தேன் யினியவன்
கதைவிடுவிங்க தெரியும் ஆனா நல்ல கதையும் எழுதுவிங்கனு நிருபிச்சுட்டீங்க
கதைவிடுவிங்க தெரியும் ஆனா நல்ல கதையும் எழுதுவிங்கனு நிருபிச்சுட்டீங்க

முரளிராஜா- வி.ஐ.பி

- பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173
Re: நினைப்பது ஒன்று
நீங்க அவரை திட்டுறீங்களா? பாராட்டுறீங்களா?முரளிராஜா wrote:விருப்ப பொத்தானை பாவித்தேன் யினியவன்
கதைவிடுவிங்க தெரியும் ஆனா நல்ல கதையும் எழுதுவிங்கனு நிருபிச்சுட்டீங்க![]()

அசுரன்- வழிநடத்துனர்
- பதிவுகள்: 9119
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1950
Re: நினைப்பது ஒன்று
வழக்கம் போல அனைவரும் எதிா் பாா்க்கும் முடிவை தராமல், வித்தியாசமான முறையில் நல்ல முடிவை தந்திருக்கிறீா்கள். வாழ்த்துக்கள் யினியவன்.





“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 


http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்
- பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum



















