|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நீங்களும் பாருங்கள்by MADHUMITHA Today at 11:25 am
» 'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல
by ராஜு சரவணன் Today at 11:25 am
» அமிலம் வீசும் அரக்கர்களுக்கு!
by பார்த்திபன் Today at 11:25 am
» இதை பாருங்களேன் - மதுமிதா
by MADHUMITHA Today at 11:24 am
» ஈகரையில் நான் கண்ட புதிய எழுதும் வசதி
by ராஜு சரவணன் Today at 11:22 am
» நான் ரசித்தவை - மது
by MADHUMITHA Today at 11:20 am
» மோசடியில் இது புதுசு
by soplangi Today at 11:18 am
» கதிர்வீச்சு உண்மையைச் சொன்னால் என்கவுண்டர்!! - மருத்துவர் புகழேந்தி
by பார்த்திபன் Today at 11:14 am
» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by mahan Today at 11:12 am
» மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு
by ராஜா Today at 11:06 am
» வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க
by mahan Today at 11:06 am
» இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!
by MADHUMITHA Today at 11:04 am
» 20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!
by ராஜா Today at 10:45 am
» ஆண்ட்ராய்டு ரூட்
by ராஜா Today at 10:44 am
» வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்...
by Murali1946 Today at 10:38 am
» இரசிக்க அருமையான பாடல்கள்
by kirikasan Today at 10:12 am
» பார்வை ...???
by ராஜு சரவணன் Today at 9:54 am
» ஆணும், பெண்ணும், உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால், அவர்கள், கணவன் - மனைவி என கருதப்படுவர்; அது, செல்லத்தக்க திருமணம்!
by SajeevJino Today at 9:26 am
» எனக்கு பிடித்தவை (தொடர் கவிதை)
by பூவன் Today at 9:25 am
» பறையின் வகைகள்!
by ராஜு சரவணன் Today at 9:13 am
» நினைவுகள் போதும் என்கிறாய்..???
by பூவன் Today at 8:58 am
» சென்னையில் ஒரு மாநாடு
by தர்மா Today at 8:55 am
» மெழுகுவர்த்தியின் அறிவுரை
by முத்துராஜ் Today at 8:39 am
» நான்' அழுதால் .....
by கவிஞர் கே இனியவன் Today at 8:17 am
» சொந்தக்கதை....சோகக்கதை.
by maristella Today at 8:11 am
» அரைகுறை வெற்றி ....
by கவிஞர் கே இனியவன் Today at 8:10 am
» சிந்தித்தாயா ....???
by கவிஞர் கே இனியவன் Today at 7:35 am
» என் காதல் ...
by கவிஞர் கே இனியவன் Today at 7:21 am
» ஒரு தந்தையின் கடிதம்
by கவிஞர் கே இனியவன் Today at 7:09 am
» வாய்ப்புண் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா?
by கவிஞர் கே இனியவன் Today at 7:03 am
» சித்திரம் எழுப்பிய கவிதை
by ரமணி Today at 7:00 am
» மனதை மிருதுவாகும் நீது சுரேஷ் குரல் வளம் காணொளி !!!!!!!!!!
by பிளேடு பக்கிரி Today at 2:09 am
» "குடு குடு' மத்திய அமைச்சரவை
by சிவா Today at 1:55 am
» பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதால் வாழ்க்கை சீரழிந்து விடும்
by பிளேடு பக்கிரி Today at 1:49 am
» சித்தர்களை தெரிந்துகொள்வோம்
by சிவா Today at 1:49 am
» திருமணத்தில் மணமக்கள் அருந்ததி பார்ப்பது ஏன்?
by சிவா Today at 1:46 am
» உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு!
by சிவா Today at 1:34 am
» தோஷம்! சந்தோஷம்!
by சிவா Today at 1:26 am
» வாழை இலை
by சிவா Today at 1:24 am
» கீதையின் பெருமை
by சிவா Today at 1:21 am
Top posting users this week
| Muthumohamed | ||||
| MADHUMITHA | ||||
| கவிஞர் கே இனியவன் | ||||
| யினியவன் | ||||
| சிவா | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ராஜு சரவணன் | ||||
| பூவன் | ||||
| ராஜா | ||||
| krishnaamma |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இரட்சிப்பின் கோட்பாடு
Page 1 of 1 • Share •
இரட்சிப்பின் கோட்பாடு
[b]"இரட்சிப்பின் கோட்பாடு"[/b]
சிலுவை
மனித குலத்திற்குப் பதிலாக, அவர்கள் இடத்தில் கிறிஸ்து சிலுவையில் மரித்தது, நம்முடைய இரட்சகரின் மகிமைகரமான கிரியைகளில் மிகமிக முக்கியமானதாகும்.
ஒரே கிரியையில் கிறிஸ்து "நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இரந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்தார்" (கொலோசெயர்: 2:14). "மரணத்தக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படி, ஜீவகாலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணினார்." (எபிரேயர்: 2:14,15).
சிலுவை என்பது ஒரு விபத்தோ, மெதுவாக யோசித்தோ வந்த எண்ணமல்ல. ஏதேன் தோட்டத்தில் மனிதன் வீழ்ச்சியுற்ற பொழுதிலிருந்து தேவன்தம்முடைய இரட்சிப்பின் திட்டத்தைத் தீர்மானித்தார். (ஆதியாகமம்: 3:14-15; அப்போஸ்தலர்: 2:23,24). அந்தப் பாவத்தின் விளைவினால் மனிதன் மரணத்தை சந்திக்க வேண்டியதாயிற்று. அதனால், தேவனிடமிருந்தும் நித்தியமாய் பிரிக்கப்பட்டான். இருப்பினும், மனித குலம் என்றென்றுமாய் தம்மைவிட்டு பிரிக்கப்பட்டு விடாதபடிக்கு, தேவன் தமது மகா பெரிய அன்பினால், பாவத்திற்கான கிரயம் செலுத்தப்பட ஒரு திட்டம் பண்ணினார். இயேசு கிறிஸ்துவும், நமக்காக அவர் ஜீவனை பலியாக்கினதும் தான் இந்த தேவ திட்டத்தின் மையமாகும். நாம் ஒருபோதும் செய்யக் கூடாததைக் கிறிஸ்து சிலுவையில் நமக்காக செய்தார். நாம் பெற வேண்டிய தண்டனையை தாம் ஏற்றுக் கொண்டு நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார்.
நம்முடைய பாவத்திற்கான மீட்கும் பொருளாக அவர் தம் உயிரையே கொடுத்தார். அதுவே நம்மை தேவனிடம் மீண்டும் சேரும்படி செய்தது. அல்லேலூயா!
தொடரும்...[right][center]
சிலுவை
மனித குலத்திற்குப் பதிலாக, அவர்கள் இடத்தில் கிறிஸ்து சிலுவையில் மரித்தது, நம்முடைய இரட்சகரின் மகிமைகரமான கிரியைகளில் மிகமிக முக்கியமானதாகும்.
ஒரே கிரியையில் கிறிஸ்து "நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இரந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்தார்" (கொலோசெயர்: 2:14). "மரணத்தக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படி, ஜீவகாலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணினார்." (எபிரேயர்: 2:14,15).
சிலுவை என்பது ஒரு விபத்தோ, மெதுவாக யோசித்தோ வந்த எண்ணமல்ல. ஏதேன் தோட்டத்தில் மனிதன் வீழ்ச்சியுற்ற பொழுதிலிருந்து தேவன்தம்முடைய இரட்சிப்பின் திட்டத்தைத் தீர்மானித்தார். (ஆதியாகமம்: 3:14-15; அப்போஸ்தலர்: 2:23,24). அந்தப் பாவத்தின் விளைவினால் மனிதன் மரணத்தை சந்திக்க வேண்டியதாயிற்று. அதனால், தேவனிடமிருந்தும் நித்தியமாய் பிரிக்கப்பட்டான். இருப்பினும், மனித குலம் என்றென்றுமாய் தம்மைவிட்டு பிரிக்கப்பட்டு விடாதபடிக்கு, தேவன் தமது மகா பெரிய அன்பினால், பாவத்திற்கான கிரயம் செலுத்தப்பட ஒரு திட்டம் பண்ணினார். இயேசு கிறிஸ்துவும், நமக்காக அவர் ஜீவனை பலியாக்கினதும் தான் இந்த தேவ திட்டத்தின் மையமாகும். நாம் ஒருபோதும் செய்யக் கூடாததைக் கிறிஸ்து சிலுவையில் நமக்காக செய்தார். நாம் பெற வேண்டிய தண்டனையை தாம் ஏற்றுக் கொண்டு நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார்.
நம்முடைய பாவத்திற்கான மீட்கும் பொருளாக அவர் தம் உயிரையே கொடுத்தார். அதுவே நம்மை தேவனிடம் மீண்டும் சேரும்படி செய்தது. அல்லேலூயா!
தொடரும்...[right][center]



“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 


http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்
- பதிவுகள்: 4343
மதிப்பீடுகள்: 1721
Re: இரட்சிப்பின் கோட்பாடு
கிறிஸ்துவினுடைய மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் அவை பற்றிய போதனைகளுக்கும் கிறிஸ்தவம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. மனிதனாக அவதரித்த கிறிஸ்துவின் மரணமும் உயிர்த்தெழுதலும் இல்லாவிடில், கிறிஸ்தவம், சடங்காச்சாரங்களும், சட்டதிட்டங்களும் அடங்கிய ஒன்றாக மட்டுமே இருந்திருக்கும்.
ஆனால், கிறிஸ்துவின் மரணத்தினால் மட்டுமே, நித்திய இரட்சிப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. சிலுவையில் அவர் அடைந்த மரணத்தினால், மனிதன் தேவனோடு ஒப்புரவாகும்படிச் செய்தார். "அவர் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி..." (2கொரிந்தியர்: 5:18; ரோமர்: 5:10; எபேசியர்: 2:16).
மனுக்குலத்திற்காக கிறிஸ்து சிலுவையில் மரித்து எக்காலத்திற்கும் போதுமானதாயிருக்கும்படி செய்தார்.
இந்த ஒப்புரவாகுதலை இப்படி எளிதாக விவரித்துக் காட்ட விரும்புகிறேன். சிருஷ்டிப்பின்போத தேவனும் மனிதனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நிற்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆதாம் பாவம் செய்தபோது , அவன் தேவனுக்கு தன் முதுகை காட்டும்படி திரும்பி நிற்பதை தெரிந்த கொண்டான். அப்பொழுது, பாவத்தைக் கண்டும் காணாதவராக விட்டு விட முடியாத தேவன், ஆதாமுக்குத் தன் முதுகை காட்டி நிற்க வேண்டியதாயிற்று. கிறிஸ்துவின் மரணம் ஒரு பரிசுத்த தேவன் கேட்பதையெல்லாம் திருப்தி செய்தது. ஆகவே, தேவன் திரும்பவும் மனிதனை நேருக்கு நெர் சந்திக்க திரும்பினார். இப்பொழுது கிறிஸ்துவினுடைய பலியையும் இரட்சிப்பையும் ஏற்றுக் கொள்வதைத் தெரிந்து கொள்ளுவது மனிதனுடையதாகிறது. இப்படி தேவனோடு மறுபடி உறவு கொள்ள தேவனை சந்திக்க மனிதன் திரும்பி (மனந்திரும்பி) நிற்கிறான்.
பழைய ஏற்பாட்டில் கட்டளையிடப்பட்ட லேவியராகமத்தில் காணும் பலிகள், இயேசு கிறிஸ்துவின் பலியின் முன் நிழலாய் அமைந்தன. பாவத்திற்காக பலியிடப்பட வேண்டிய மிருகம் பழுதற்றதாக இருக்க வேண்டும் (லேவியராகமம்: 9:2,3). நம்முடைய பாவத்திற்காக தம்முடைய ஜீவனைத் தரும்பொருட்டு உலகத்திற்கு வரப்போகும் பாவமில்லாத பழுதற்ற தேவ ஆட்டுக் குட்டியைக் காட்டும் ஒரு மாதிரிதான் இது (மத்தேயு: 20:26; யோவான்: 1;29). பாவத்திற்கு தண்டனை மரணம் ஆகையால் (எசேக்கியேல்: 18:4,20), அவர் மரிக்க வேண்டியது அவசியமாயிற்று (லேவியராகமம்: 17:11; எபிரேயர்: 9:22).
ஒரு பாவியின் மனந்திரும்புதலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, அவன் மன்னிக்கப்பட முடியாது. பாவத்திற்கான தண்டனை செலுத்தப்பட்டு, தேவனுடைய நீதி திருப்தி செய்யப்பட்டால் மட்டுமே தேனால் மன்னிக்க முடியும். சிலுவையில் நம்முடைய பாவங்களுக்கான தண்டனையைக் கிறிஸ்து செலுத்தித் தீர்த்தார். இதுவே, நீதியும் நியாயமுள்ளவராகிய தேவன். நம்முடைய மனந்திரும்புதலையும் கிறிஸ்துவின் மீதுள்ள நம் விசுவாசத்தையும் அடிப்படையாகக் கொண்டு நம்மை மன்னிப்பதற்கு அனுமதித்துள்ளது.
பாவியின் குற்றத்திற்கு ஒரு மூடுதிரையாக (பாவநிவாரணம்) கிறிஸ்துவின் மரணம் அமைந்து, பாவம் பரிசுத்த தேவனின் கண்களுக்கு காணப்படாதபடிச் செய்கிறது. இனி ஒரு போதும் தேவன் நம் பாவத்தைக் காண்பதில்லை என்னும் கருத்தை ஏசாயா: 38:17 ல் காண்கிறோம். "என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்த விட்டீர்" (மேலும் அறிய... சங்கீதம்: 51:9; 103:12; ஏசாயா: 43:25; மீகா: 2:19).
இயேசு கிறிஸ்து நமக்கு பதிலாக குற்ற நிவாரண பலியாக தம்மை ஒப்புக் கொடுத்தது, தேவ நீதியை திருப்திபடுத்தி நமக்கு இலவசமாக இரட்சிப்பென்னும் வரத்தை (ரோமர்: 6:23) (கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம்) , தேவன் கிரபையினால் தருவதற்கு வழியுண்டாக்கிற்று (எபேசியர்: 2:8).
தொடரும்...
ஆனால், கிறிஸ்துவின் மரணத்தினால் மட்டுமே, நித்திய இரட்சிப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. சிலுவையில் அவர் அடைந்த மரணத்தினால், மனிதன் தேவனோடு ஒப்புரவாகும்படிச் செய்தார். "அவர் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி..." (2கொரிந்தியர்: 5:18; ரோமர்: 5:10; எபேசியர்: 2:16).
மனுக்குலத்திற்காக கிறிஸ்து சிலுவையில் மரித்து எக்காலத்திற்கும் போதுமானதாயிருக்கும்படி செய்தார்.
இந்த ஒப்புரவாகுதலை இப்படி எளிதாக விவரித்துக் காட்ட விரும்புகிறேன். சிருஷ்டிப்பின்போத தேவனும் மனிதனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நிற்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆதாம் பாவம் செய்தபோது , அவன் தேவனுக்கு தன் முதுகை காட்டும்படி திரும்பி நிற்பதை தெரிந்த கொண்டான். அப்பொழுது, பாவத்தைக் கண்டும் காணாதவராக விட்டு விட முடியாத தேவன், ஆதாமுக்குத் தன் முதுகை காட்டி நிற்க வேண்டியதாயிற்று. கிறிஸ்துவின் மரணம் ஒரு பரிசுத்த தேவன் கேட்பதையெல்லாம் திருப்தி செய்தது. ஆகவே, தேவன் திரும்பவும் மனிதனை நேருக்கு நெர் சந்திக்க திரும்பினார். இப்பொழுது கிறிஸ்துவினுடைய பலியையும் இரட்சிப்பையும் ஏற்றுக் கொள்வதைத் தெரிந்து கொள்ளுவது மனிதனுடையதாகிறது. இப்படி தேவனோடு மறுபடி உறவு கொள்ள தேவனை சந்திக்க மனிதன் திரும்பி (மனந்திரும்பி) நிற்கிறான்.
பழைய ஏற்பாட்டில் கட்டளையிடப்பட்ட லேவியராகமத்தில் காணும் பலிகள், இயேசு கிறிஸ்துவின் பலியின் முன் நிழலாய் அமைந்தன. பாவத்திற்காக பலியிடப்பட வேண்டிய மிருகம் பழுதற்றதாக இருக்க வேண்டும் (லேவியராகமம்: 9:2,3). நம்முடைய பாவத்திற்காக தம்முடைய ஜீவனைத் தரும்பொருட்டு உலகத்திற்கு வரப்போகும் பாவமில்லாத பழுதற்ற தேவ ஆட்டுக் குட்டியைக் காட்டும் ஒரு மாதிரிதான் இது (மத்தேயு: 20:26; யோவான்: 1;29). பாவத்திற்கு தண்டனை மரணம் ஆகையால் (எசேக்கியேல்: 18:4,20), அவர் மரிக்க வேண்டியது அவசியமாயிற்று (லேவியராகமம்: 17:11; எபிரேயர்: 9:22).
ஒரு பாவியின் மனந்திரும்புதலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, அவன் மன்னிக்கப்பட முடியாது. பாவத்திற்கான தண்டனை செலுத்தப்பட்டு, தேவனுடைய நீதி திருப்தி செய்யப்பட்டால் மட்டுமே தேனால் மன்னிக்க முடியும். சிலுவையில் நம்முடைய பாவங்களுக்கான தண்டனையைக் கிறிஸ்து செலுத்தித் தீர்த்தார். இதுவே, நீதியும் நியாயமுள்ளவராகிய தேவன். நம்முடைய மனந்திரும்புதலையும் கிறிஸ்துவின் மீதுள்ள நம் விசுவாசத்தையும் அடிப்படையாகக் கொண்டு நம்மை மன்னிப்பதற்கு அனுமதித்துள்ளது.
பாவியின் குற்றத்திற்கு ஒரு மூடுதிரையாக (பாவநிவாரணம்) கிறிஸ்துவின் மரணம் அமைந்து, பாவம் பரிசுத்த தேவனின் கண்களுக்கு காணப்படாதபடிச் செய்கிறது. இனி ஒரு போதும் தேவன் நம் பாவத்தைக் காண்பதில்லை என்னும் கருத்தை ஏசாயா: 38:17 ல் காண்கிறோம். "என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்த விட்டீர்" (மேலும் அறிய... சங்கீதம்: 51:9; 103:12; ஏசாயா: 43:25; மீகா: 2:19).
இயேசு கிறிஸ்து நமக்கு பதிலாக குற்ற நிவாரண பலியாக தம்மை ஒப்புக் கொடுத்தது, தேவ நீதியை திருப்திபடுத்தி நமக்கு இலவசமாக இரட்சிப்பென்னும் வரத்தை (ரோமர்: 6:23) (கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம்) , தேவன் கிரபையினால் தருவதற்கு வழியுண்டாக்கிற்று (எபேசியர்: 2:8).
தொடரும்...



“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 


http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்
- பதிவுகள்: 4343
மதிப்பீடுகள்: 1721
Re: இரட்சிப்பின் கோட்பாடு
எல்லாரும் ஏன் இரட்சிக்கப்படுவதில்லை?
சிலாக்கியம் பெற்ற சிலருக்காக மட்டுமல்ல, கிறிஸ்து மனித இனம் முழுவதற்காகவுமே மரித்தார் என்று வேதம் தெளிவாகப் போதிக்கிறது. ( யோவான்: 1 :29 ; 3 :16 ; 1தீமோத்தேயு: 2 :6 ; 4 :10 ; தீத்து: 2 :11 ; 2பேதுரு: 3 :9 ; 1யோவான்: 2 :2 ). அப்படியென்றால் ஒரு கேள்வி எழக்கூடும். கிறிஸ்து ஒவ்வொருவருக்காகவும் மரித்தாரென்றால், ஏன் எல்லாரும் இரட்சிக்கப்படக் கூடாது? இக் கேள்விக்கான விடை சுலபம்தான்.
ஆம், கிறிஸ்து மரித்து, தம் சொந்த இரத்தத்தால் மனுக்குலம் அனைத்தின் பாவங்களுக்காகவும் கிரயம் செலுத்தியுள்ளார். ஆனால், முழுக்கிரயமும் செலுத்தப்பட்டுவிட்ட, இந்த இரட்சிப்பைப் பெற்று, அதன் நன்மைகளை அனுபவிக்க ஒவ்வொருவரும் தாமே கிறிஸ்துவை விசுவாசித்து, அவரையும் அவர் கிருபையையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவின் தியாக பலியினால் அனைவரும் இரட்சிக்கப்பட முடியும் - தேவனும், இரட்சிப்பில்லாமல் யாரும் அழிந்து போகக்கூடாது என்றே விரும்ர்கிறார் (2பேதுரு: 3 :9 ). இருப்பினும், இரட்சிக்கப்படுவதற்கு ஒவ்வொருவரும் கிறிஸ்துவில் விசுவாசம் வைக்க தாமாகவே தீர்மானம் செய்வது அவசியமாகும் (யோவான்: 3 :16 ).
ரோமர்: 10௦:9 ,10 ல் இந்த சத்தியம் வலியுறுத்தப்படுகிறது.
'கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும்; இரட்சிப்புக்காக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்."
கிறிஸ்து தரும் இரட்சிப்பை ஒவ்வொருவரும் அவரவருக்கென்று தனித்தனியாக விசுவாசித்து, பெற்றுக் கொள்ள வேண்டும். அதனால்தான் நாம் சுவிசேஷத்தின் நற்செய்தியைப் பிறரோடு அவசியம் பகிர்ந்து கொள்ள வேண்டும். (ரோமர்: 10 :14 ).
[center]
சிலாக்கியம் பெற்ற சிலருக்காக மட்டுமல்ல, கிறிஸ்து மனித இனம் முழுவதற்காகவுமே மரித்தார் என்று வேதம் தெளிவாகப் போதிக்கிறது. ( யோவான்: 1 :29 ; 3 :16 ; 1தீமோத்தேயு: 2 :6 ; 4 :10 ; தீத்து: 2 :11 ; 2பேதுரு: 3 :9 ; 1யோவான்: 2 :2 ). அப்படியென்றால் ஒரு கேள்வி எழக்கூடும். கிறிஸ்து ஒவ்வொருவருக்காகவும் மரித்தாரென்றால், ஏன் எல்லாரும் இரட்சிக்கப்படக் கூடாது? இக் கேள்விக்கான விடை சுலபம்தான்.
ஆம், கிறிஸ்து மரித்து, தம் சொந்த இரத்தத்தால் மனுக்குலம் அனைத்தின் பாவங்களுக்காகவும் கிரயம் செலுத்தியுள்ளார். ஆனால், முழுக்கிரயமும் செலுத்தப்பட்டுவிட்ட, இந்த இரட்சிப்பைப் பெற்று, அதன் நன்மைகளை அனுபவிக்க ஒவ்வொருவரும் தாமே கிறிஸ்துவை விசுவாசித்து, அவரையும் அவர் கிருபையையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவின் தியாக பலியினால் அனைவரும் இரட்சிக்கப்பட முடியும் - தேவனும், இரட்சிப்பில்லாமல் யாரும் அழிந்து போகக்கூடாது என்றே விரும்ர்கிறார் (2பேதுரு: 3 :9 ). இருப்பினும், இரட்சிக்கப்படுவதற்கு ஒவ்வொருவரும் கிறிஸ்துவில் விசுவாசம் வைக்க தாமாகவே தீர்மானம் செய்வது அவசியமாகும் (யோவான்: 3 :16 ).
ரோமர்: 10௦:9 ,10 ல் இந்த சத்தியம் வலியுறுத்தப்படுகிறது.
'கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும்; இரட்சிப்புக்காக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்."
கிறிஸ்து தரும் இரட்சிப்பை ஒவ்வொருவரும் அவரவருக்கென்று தனித்தனியாக விசுவாசித்து, பெற்றுக் கொள்ள வேண்டும். அதனால்தான் நாம் சுவிசேஷத்தின் நற்செய்தியைப் பிறரோடு அவசியம் பகிர்ந்து கொள்ள வேண்டும். (ரோமர்: 10 :14 ).
[center]


“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 


http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்
- பதிவுகள்: 4343
மதிப்பீடுகள்: 1721
Re: இரட்சிப்பின் கோட்பாடு
நன்றி ...தேவர் அனைவரையும் பார்க்கிறார்...

அச்சலா- வி.ஐ.பி

- பதிவுகள்: 4104
மதிப்பீடுகள்: 1115
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








