புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் ! Poll_c10தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் ! Poll_m10தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் ! Poll_c10 
69 Posts - 58%
heezulia
தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் ! Poll_c10தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் ! Poll_m10தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் ! Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் ! Poll_c10தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் ! Poll_m10தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் ! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் ! Poll_c10தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் ! Poll_m10தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் ! Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் ! Poll_c10தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் ! Poll_m10தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் ! Poll_c10 
111 Posts - 59%
heezulia
தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் ! Poll_c10தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் ! Poll_m10தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் ! Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் ! Poll_c10தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் ! Poll_m10தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் ! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் ! Poll_c10தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் ! Poll_m10தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் ! Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் !


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 13, 2012 4:42 pm




தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் காடுகளில் கராயா என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வந்தனர். ஒரு முறை அவர்களுக்குப் பெரிய ஆபத்து வந்தது.

எங்கு இருந்தோ பயங்கரமான இரண்டு குரங்குகள் அங்கே வந்தன. அந்தக் குரங்குகள் கராயார்களைத் தாக்கின. பலரையும் கடித்துக் கொன்றன. கிராமங்களில் புகுந்து பயிர்களை அழித்தன. குரங்குகளுக்குப் பயந்து மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார்கள்.

அங்கே ஒரு வீட்டில் மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களில் மூத்தவன் சொன்னான், ''நான்தான் வீரன். வீரர்களுக்கு எல்லாம் வீரன்.''

இதைக் கேட்ட இரண்டாமவன், ''நானும் வீரன். வீரர்களுக்கு எல்லாம் வீரன்!'' என்றான்.

மூன்றாமவன், ''நான் கோழை. உலகிலேயே மிகப் பெரிய கோழை'' என்றான்.

உடனே மூத்தவன், ''எது வந்தாலும் நாம் இந்த ராட்சசக் குரங்குகளைக் கொன்று, நம் மக்களைக் காப்பாற்ற வேண்டும். இளையவன் வீட்டிலேயே இருக்கட்டும். அவன் ஒரு பயந்தாங்கொள்ளி அல்லவா...'' என்றான்.

இருவரும் தம்பியை வீட்டில் இருக்க வைத்தார்கள். வில் அம்புகளையும் மற்ற ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு காட்டுக்குச் சென்றார்கள்.

அமேசான் நதிக்கரை வழியாகக் குரங்குகள் வாழ்கின்ற காட்டினுள் நுழைந்தார்கள். அங்கே ஒரு பெரிய குளம் இருந்தது. அவர்கள் ஏற்கெனவே தாகத்தால் தவித்துக்கொண்டு இருந்ததால், நீர் பருகுவதற்காகக் குளத்தை நோக்கிக் குனிந்தார்கள். திடீரென்று உரத்த குரலில் குளம் பேசியது...

''குடிக்காதீர் கலக்காதீர்
என் தண்ணீரைக் குடிக்காதீர்
குளத்தின் உள்ளே
ஒரு தவளையும் உண்டே!''

திடீரென்று தண்ணீரின் நிறம் மாறியது. குளத்தின் அடியில் இருந்து பெரிய தவளை ஒன்று மேலே வந்தது. ''வீரர்களே... நீங்கள் குரங்குகளைக் கொல்வதற்காகப் புறப்பட்டவர்கள் தானே? குரங்குகள் எங்கே இருக்கின்றன என்று நான் சொல்கிறேன். அதற்குப் பதிலாக உங்களில் ஒருவர் என்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்!'' என்றது.

''ஒரு தவளையைத் திருமணம் செய்து கொள்வதா? எங்களுக்கு விருப்பமில்லை!'' என்ற சகோதரர்கள், தவளையை ஓங்கி உதைத்தார்கள். பாவம் அது... தண்ணீரில் மூழ்கி மறைந்தது.

அவர்கள் காட்டின் உட்பகுதியில் நுழைந்தார்கள். ராட்சசக் குரங்குகளின் கூச்சல் கேட்டது. திடீரென வெளிப்பட்ட அந்தக் குரங்குகள், மரக் கிளைகளை ஒடித்து அவர்களைத் தாக்கின. சகோதரர்கள் இருவரும் ஓடத் தொடங்கினார்கள். ஓடி ஓடிக் காட்டில் திசை தவறிவிட்டார்கள்.

சகோதரர்களைக் காணவில்லையே என்று அஞ்சினான் கடைசித் தம்பி. அவர்களைத் தேடிக்கொண்டு பயத்துடன் காட்டுக்கு வந்தான். அவனுக்கு மிகவும் பசித்தது. காட்டுச் செடிகளில் சில செடிகளின் கிழங்குகளைத் தோண்டிச் சாப்பிட நினைத்தான். அவன்தான் போதிய பலம் இல்லாதவன் ஆயிற்றே! கிழங்குகளைத் தோண்டி எடுக்க அவனால் முடியவில்லை.பறவைகளை வேட்டையாடுவதைத் தவிர்த்தான். அங்கும் இங்கும் நடந்தான். அப்போது, ஒரு பொந்தில் இருந்து பெரிய பாம்பு இறங்கி வந்தது. ''அடேய் கோழைப் பையா இதோ! மந்திரசக்தி வாய்ந்த அம்பு!'' என்று ஓர் அம்பைக் கொடுத்துவிட்டு,

''அம்பைக் கொண்டு சென்றிடுவாய்
துன்பம் தருவோரை வென்றிடலாம்!''

என்று பாடியது. மந்திர சக்திபெற்ற அம்பை அவன் பணிவுடன் பெற்றுக்கொண்டான். பிறகு, அந்தப் பாம்பு தன் வாயில் இருந்து கொஞ்சம் விஷமும் எண்ணெயும் எடுத்தது. இரண்டையும் நன்றாகக் குழைத்து அவன் உடலில் பூசியது. உடனே அவன் பெரிய பலசாலியாக மாறிவிட்டான்.

''அரக்கக் குரங்குகளை நானே
அடித்துக் கொல்வேன் நிச்சயம்!
காட்டில் தொலைந்த அண்ணன்களைக்
கண்டுபிடிப்பேன் கட்டாயம்!''

என்று பாடினான். அப்போது பாம்பு, ''அந்தக் குரங்குகள் உண்மையிலேயே குரங்குகள் அல்ல. இரண்டு அரக்கர்கள்தான் குரங்கு வேடத்தில் திரிகிறார்கள். குறி பார்த்து சரியாக அம்பை எய்தால், இரண்டு அரக்கர்களும் செத்து விழுவார்கள். நீ செல்லும் வழியில் குளக்கரையில் ஒரு தவளையைச் சந்திப்பாய். அந்தத் தவளை சொல்வதுபோல் செய்!'' என்றது.

அவன் வில் அம்புடன் குரங்குளைத் தேடிச் சென்றான். வழியில் பெண் தவளையைப் பார்த்தான். அந்தத் தவளை, ''என்னை நீ திருமணம் செய்துகொள்வாயா?'' என்று கேட்டது.

'பாம்பு எவ்வளவு சரியாகச் சொல்லி இருக்கிறது. தவளையைத் திருமணம் செய்துகொள்வோம். அது நன்மை தரும் என்று நினைத்த அவன், ஒரு மலர்க் கொடியைச் சூட்டி தவளையைத் திருமணம் செய்துகொண்டான்.

தவளையும் அவனும் காட்டு வழியே நடந்தார்கள். தூரத்தில் ஒரு பெரிய மரம் இருந்தது. அதன் பொந்தும் மிகப் பெரிதாக இருந்தது. பொந்துக்குள் தெரிந்தன குரங்குகளின் தலைகள்.

உடனே தவளை சொன்னது, ''தலைகள் தெரியுது அஞ்சாதே!

அம்பு தொடுப்பாய் தயங்காதே!''

அவன் அம்பு எய்தான். அது சரியாக ஒரு குரங்கின் நெற்றியில் பதிந்தது. உடனே இரண்டு குரங்குகளும் இறங்கி ஓடின. அவன் மீண்டும் அம்பை எய்தான். குரங்குகளின் மேல் தோல் கழன்று விழுந்தன. குரங்குத் தோலில் இருந்த அரக்கர்கள் மடிந்தார்கள்.

அரக்கர்களிடம் இருந்து கழன்று விழுந்த குரங்குத் தோலை எடுத்தான் தம்பி. அதை ஒரு கொடி போலக் கம்பில் கட்டி உயர்த்திக்கொண்டு ஆடினான்.

''வென்றேனே நான் வென்றேனே
அரக்கக் குரங்குகளை வென்றேனே!''

பிறகு தவளையும் அவனும் காட்டுக்குள் தொலைந்த அண்ணன்களைத் தேடிப் புறப்பட்டார்கள். ஓர் இடத்தில் அவர்களைக் கண்டுபிடித்தார்கள். தம்பியை அணைத்துக் கொண்ட அண்ணன்கள், ''தம்பி, உனது பணிவுதான் உனக்கு வெற்றியைக் கொடுத்து இருக்கிறது. வீரம் இருந்தும் எங்கள் ஆணவமே தோல்வியைக் கொடுத்தது'' என்றார்கள்.

பிறகு, அவர்கள் வீட்டை அடைந்தார்கள். வீட்டுப் படியில் கால்வைத்ததும் அந்தத் தவளை, அழகான இளவரசியாக மாறியது. ''ஒரு சாபத்தின் காரணமாக நான் தவளையாக மாறிக் குளத்தில் வாழ்ந்தேன். உனது கருணையால் சாபத்தில் இருந்து விடுபட்டுவிட்டேன். இனி நாம் மகிழ்ச்சியாக வாழலாம்!'' என்றாள்.

பழைய வீடு இருந்த இடத்தில் அழகான அரண்மனையைக் கட்டி அவர்கள் நெடுங்காலம் வாழ்ந்தார்கள்.

யூமா வாசுகி






தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 13, 2012 7:08 pm

கதை நல்லா இருக்கு சிவா மாமா ஒன்னும் புரியல

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Sat Jul 14, 2012 2:11 am

கதை சூப்பர் மகிழ்ச்சி



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக