புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
D. sivatharan | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
டெல்லியில் இருந்து புறப்பட்டு, சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஸ்-11 பெட்டி ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் அருகே தீ விபத்திற்குள்ளானது. அந்த பெட்டியில் பயணம் செய்த ஏராளமானோர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் எங்கிருந்து புறப்பட்டு வந்தனர்? எந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்ற விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
நெல்லூர் அரசு மருத்துவமனை
1. கே.கே.சுனில்குமார், டெல்லி
2. அமர்பிரீத் சிங், டெல்லி
3. வெங்கட கோட்டீஸ்வர ராவ், விஜயவாடா
4. ராகவன், போபால்
5. சந்தீப் அக்னிஹோத்ரி, டெல்லி
6. எஸ்.எஸ்.வர்மா
7. வீணா மற்றும் அர்ஷிதா என்ற ஒரு வயது குழந்தை, டெல்லி
8. உசேன், டெல்லி
9. ரேகா, டெல்லி
10. சுக்தீப் சிங்
11. சாம்பசிவ ராவ்
நெல்லூர் பீப்புல்ஸ் பாலி கிளினிக்
1. வி.குருஷி, விஜயவாடா
2. ஷோபா சிங், ஜான்சி
3. உதயபாஸ்கர், விஜயவாடா
4. ஜி.ராமச்சந்திர சீனிவாசா, வாரங்கல்
5. குமுதுகுமார் பன்சால், ஆக்ரா
6. பிரசம்சா பன்சால், ஆக்ரா
7. எம்.சுஜன்மால் சாரதா பரேக், டெல்லி
நெல்லூர் பாலிநேனி மருத்துவமனை
1. எஸ்.மதன்லால்
2. உத்தம்குமார்
3. அனுஷா
4. திருப்பதியம்மா
5. சம்பத்குமார்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சென்னை ரெயில் தீ விபத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் கருகிச்செத்த பரிதாபம்: ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
எல்லை பாதுகாப்பு வீரர்
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள வாகைக்குளத்தை சேர்ந்தவர் டேவிட் ராஜா (வயது 35). எல்லை பாதுகாப்பு படை வீரர்.
ஆலங்குளம் தாலுகா ஐந்தாங்கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் என்ற அன்பு. அவருடைய மகள் பொன்மணி (30).
டேவிட் ராஜாவுக்கும், பொன்மணிக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுடைய மகள்கள் ரோஸ்மேரி (7), ஜாஸ்மின் (4).
விடுமுறை கிடைக்கவில்லை
ஆண்டுதோறும் ஜுன், ஜுலை மாதங்களில் டேவிட் ராஜா விடுமுறையில் ஊருக்கு வந்தார். துரதிருஷ்டவசமாக இந்த ஆண்டில் அவருக்கு விடுமுறை கிடைக்கவில்லை. எனவே அவரை பார்க்க பொன்மணி, அவருடைய மகள்கள் ரோஸ்மேரி, ஜாஸ்மின், தம்பி தவமணி, மாமியார் எலிசபெத் ஆகிய 5 பேரும் கடந்த 20-ந் தேதி கான்பூருக்கு புறப்பட்டு சென்றனர்.
டேவிட் ராஜாவுடன் சில நாட்கள் தங்கிவிட்டு 5 பேரும் ஊருக்கு திரும்புவதற்காக, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் `எஸ்-11' பெட்டியில் பயணிக்க முன்பதிவு டிக்கெட் கிடைத்தது.
கான்பூர் ரெயில் நிலையத்தில், 5 பேரையும் வழியனுப்பி விட்டு டேவிட் ராஜா வேலைக்கு சென்றார். ரெயில் அங்கிருந்து புறப்பட்டு வந்ததும் அவ்வப்போது போனில் தொடர்பு கொண்டு மனைவி, மகள்களிடையே பேசினார்.
செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் குடும்பத்தினரை வரவேற்க, உறவினர்கள் சிலரை டேவிட்ராஜா அனுப்பி இருந்தார்.
அப்போது, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து ரெயில் நிலையத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதை அறிந்து ரெயில் நிலையத்துக்கு வந்தவர்கள், டேவிட் ராஜாவை போனில் தொடர்பு கொண்டு அதுபற்றி தெரிவித்தனர்.
இதனால் பதற்றம் அடைந்த அவர், ரெயிலில் பயணம் செய்து வந்த குடும்பத்தினரை போனில் தொடர்பு கொண்டார். ஆனால், செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை. நீண்ட நேரம் முயற்சித்தும் பலன் இல்லை.
பின்னர்தான் மனைவி பொன்மணி, தாயார் எலிசபெத் மற்றும் மகள்கள் உள்பட குடும்பத்தினர் 5 பேரும் பலியான தகவல் அவருக்கு தெரியவந்தது.
கிராம மக்கள் சோகம்
இதை அறிந்து வாகைக்குளத்தில் டேவிட்ராஜா குடும்பத்தினரும், ஐந்தாங்கட்டளை கிராமத்தில் பொன்மணியின் குடும்பத்தினரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். மகள், மகன், பேத்திகள் இறந்து போனதால் நாராயணனும், அவருடைய மனைவியும் கதறினர். உறவினர்கள் திரண்டு வந்து ஆறுதல் கூறியபடி இருக்கிறார்கள்.
டேவிட்ராஜா கான்பூரில் இருந்து உடனடியாக ஊருக்கு புறப்பட்டார். அவர் விமானத்தில் வந்து கொண்டிருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
எல்லை பாதுகாப்பு வீரர்
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள வாகைக்குளத்தை சேர்ந்தவர் டேவிட் ராஜா (வயது 35). எல்லை பாதுகாப்பு படை வீரர்.
ஆலங்குளம் தாலுகா ஐந்தாங்கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் என்ற அன்பு. அவருடைய மகள் பொன்மணி (30).
டேவிட் ராஜாவுக்கும், பொன்மணிக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுடைய மகள்கள் ரோஸ்மேரி (7), ஜாஸ்மின் (4).
விடுமுறை கிடைக்கவில்லை
ஆண்டுதோறும் ஜுன், ஜுலை மாதங்களில் டேவிட் ராஜா விடுமுறையில் ஊருக்கு வந்தார். துரதிருஷ்டவசமாக இந்த ஆண்டில் அவருக்கு விடுமுறை கிடைக்கவில்லை. எனவே அவரை பார்க்க பொன்மணி, அவருடைய மகள்கள் ரோஸ்மேரி, ஜாஸ்மின், தம்பி தவமணி, மாமியார் எலிசபெத் ஆகிய 5 பேரும் கடந்த 20-ந் தேதி கான்பூருக்கு புறப்பட்டு சென்றனர்.
டேவிட் ராஜாவுடன் சில நாட்கள் தங்கிவிட்டு 5 பேரும் ஊருக்கு திரும்புவதற்காக, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் `எஸ்-11' பெட்டியில் பயணிக்க முன்பதிவு டிக்கெட் கிடைத்தது.
கான்பூர் ரெயில் நிலையத்தில், 5 பேரையும் வழியனுப்பி விட்டு டேவிட் ராஜா வேலைக்கு சென்றார். ரெயில் அங்கிருந்து புறப்பட்டு வந்ததும் அவ்வப்போது போனில் தொடர்பு கொண்டு மனைவி, மகள்களிடையே பேசினார்.
செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் குடும்பத்தினரை வரவேற்க, உறவினர்கள் சிலரை டேவிட்ராஜா அனுப்பி இருந்தார்.
அப்போது, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து ரெயில் நிலையத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதை அறிந்து ரெயில் நிலையத்துக்கு வந்தவர்கள், டேவிட் ராஜாவை போனில் தொடர்பு கொண்டு அதுபற்றி தெரிவித்தனர்.
இதனால் பதற்றம் அடைந்த அவர், ரெயிலில் பயணம் செய்து வந்த குடும்பத்தினரை போனில் தொடர்பு கொண்டார். ஆனால், செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை. நீண்ட நேரம் முயற்சித்தும் பலன் இல்லை.
பின்னர்தான் மனைவி பொன்மணி, தாயார் எலிசபெத் மற்றும் மகள்கள் உள்பட குடும்பத்தினர் 5 பேரும் பலியான தகவல் அவருக்கு தெரியவந்தது.
கிராம மக்கள் சோகம்
இதை அறிந்து வாகைக்குளத்தில் டேவிட்ராஜா குடும்பத்தினரும், ஐந்தாங்கட்டளை கிராமத்தில் பொன்மணியின் குடும்பத்தினரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். மகள், மகன், பேத்திகள் இறந்து போனதால் நாராயணனும், அவருடைய மனைவியும் கதறினர். உறவினர்கள் திரண்டு வந்து ஆறுதல் கூறியபடி இருக்கிறார்கள்.
டேவிட்ராஜா கான்பூரில் இருந்து உடனடியாக ஊருக்கு புறப்பட்டார். அவர் விமானத்தில் வந்து கொண்டிருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விபத்து நடந்த நெல்லூருக்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மருத்துவர் குழு விரைந்தது
35 பேர் பலி
டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லூர் ரெயில் நிலைய அருகே தீ விபத்துக்குள்ளானது. தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் இணைக்கப்பட்டிருந்த எஸ்.11 பெட்டி முழுவதும் எரிந்து 35 பேர் பலியானார்கள். 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஜெயலலிதா இரங்கல்
இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மரணம் அடைந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும், தீக்காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர்கள் குழு விரைந்தது
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி, பாதிக்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் உள்ளதால், அவர்களது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்யவும், விபத்து நடந்த இடத்துக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜய், திருவள்ளூர் கலெக்டர் உள்பட, தீக்காய சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அடங்கிய 25 பேர் கொண்ட குழு நேற்று மாலை சென்றுள்ளது.
35 பேர் பலி
டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லூர் ரெயில் நிலைய அருகே தீ விபத்துக்குள்ளானது. தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் இணைக்கப்பட்டிருந்த எஸ்.11 பெட்டி முழுவதும் எரிந்து 35 பேர் பலியானார்கள். 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஜெயலலிதா இரங்கல்
இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மரணம் அடைந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும், தீக்காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர்கள் குழு விரைந்தது
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி, பாதிக்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் உள்ளதால், அவர்களது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்யவும், விபத்து நடந்த இடத்துக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜய், திருவள்ளூர் கலெக்டர் உள்பட, தீக்காய சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அடங்கிய 25 பேர் கொண்ட குழு நேற்று மாலை சென்றுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மதுரையை சேர்ந்த குடும்பத்தினர் கதி என்ன? உறவினர்கள் அவசரமாக புறப்பட்டு சென்றனர்.
ஆந்திராவில் 32 பேர் பலியான ரெயிலில் மதுரையை சேர்ந்த பயணியும் குடும்பத்துடன் வந்துள்ளார். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் அவருடைய பெற்றோர் அவசரமாக நெல்லூருக்கு விரைந்து சென்றனர்.
ரெயில் விபத்து
ஆந்திர மாநிலம் நெல்லூரில் நேற்று அதிகாலை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 32-க்கும் மேற்பட்ட பயணிகள் உடல் கருகி பலியாகினர்.
டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த இந்த ரெயிலில் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர்களும் வந்துள்ளனர். அவனியாபுரம் பி.எஸ்.நகர் 2-வது தெருவில் சுரேந்திரன் என்பவர் வசிக்கிறார். இவருடைய மனைவி உஷாதேவி. இவர்களுடைய மகள் வீணா கணவருடன் டெல்லியில் வசிக்கிறார்.
நேற்று முன்தினம் அதிகாலை டெல்லியிலிருந்து வீணா, கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தார். நேற்று காலை இந்த ரெயில் சென்னைக்கு வந்ததும் அங்கிருந்து மாலைக்குள் இவர்கள் வீடு வந்து சேர்ந்து விடுவார்கள் என சுரேந்திரன் குடும்பத்தினர் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
கதி என்ன?
ஆனால் நேற்று காலை இவர்கள் வந்த ரெயிலில் தீவிபத்து ஏற்பட்ட செய்தி அறிந்து அதிர்ந்து போயினர். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அவர்கள் பயணம் செய்த பெட்டியில் இருந்த பலர் இறந்து விட்டதாக தகவல் வந்ததால் உடனடியாக அவர்கள் பதற்றத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றனர். அங்கிருந்து அவர்கள் நெல்லூருக்கு புறப்பட்டு சென்றனர்.
சுரேந்திரனின் மகள் காயத்துடன் தப்பினாலும் மற்றவர்கள் குறித்த தகவல் நேற்று இரவு வரை கிடைக்காததால் அவர்கள் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை.
ஆந்திராவில் 32 பேர் பலியான ரெயிலில் மதுரையை சேர்ந்த பயணியும் குடும்பத்துடன் வந்துள்ளார். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் அவருடைய பெற்றோர் அவசரமாக நெல்லூருக்கு விரைந்து சென்றனர்.
ரெயில் விபத்து
ஆந்திர மாநிலம் நெல்லூரில் நேற்று அதிகாலை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 32-க்கும் மேற்பட்ட பயணிகள் உடல் கருகி பலியாகினர்.
டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த இந்த ரெயிலில் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர்களும் வந்துள்ளனர். அவனியாபுரம் பி.எஸ்.நகர் 2-வது தெருவில் சுரேந்திரன் என்பவர் வசிக்கிறார். இவருடைய மனைவி உஷாதேவி. இவர்களுடைய மகள் வீணா கணவருடன் டெல்லியில் வசிக்கிறார்.
நேற்று முன்தினம் அதிகாலை டெல்லியிலிருந்து வீணா, கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தார். நேற்று காலை இந்த ரெயில் சென்னைக்கு வந்ததும் அங்கிருந்து மாலைக்குள் இவர்கள் வீடு வந்து சேர்ந்து விடுவார்கள் என சுரேந்திரன் குடும்பத்தினர் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
கதி என்ன?
ஆனால் நேற்று காலை இவர்கள் வந்த ரெயிலில் தீவிபத்து ஏற்பட்ட செய்தி அறிந்து அதிர்ந்து போயினர். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அவர்கள் பயணம் செய்த பெட்டியில் இருந்த பலர் இறந்து விட்டதாக தகவல் வந்ததால் உடனடியாக அவர்கள் பதற்றத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றனர். அங்கிருந்து அவர்கள் நெல்லூருக்கு புறப்பட்டு சென்றனர்.
சுரேந்திரனின் மகள் காயத்துடன் தப்பினாலும் மற்றவர்கள் குறித்த தகவல் நேற்று இரவு வரை கிடைக்காததால் அவர்கள் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கவர்னர் ரோசய்யா இரங்கல்
தமிழக கவர்னர் ரோசய்யா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தீவிபத்தில் சிக்கி பயணிகள் உயிரிழந்த சம்பவத்தை கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இந்த விபத்தில் பலர் காயம் அடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக நலம்பெற வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழக கவர்னர் ரோசய்யா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தீவிபத்தில் சிக்கி பயணிகள் உயிரிழந்த சம்பவத்தை கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இந்த விபத்தில் பலர் காயம் அடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக நலம்பெற வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நெல்லூருக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரெயில்
ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நெல்லூர் அரசு மருத்துவமனையிலும், காயமடைந்தவர்கள் நெல்லூர் அரசு மருத்துவமனை மற்றும் நெல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சென்னையிலிருந்து நேற்று காலை 10.30 மணிக்கு ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.
இந்த ரெயிலில் எழும்பூர், சென்ட்ரல், பெரம்பூர் ஆகிய மருத்துவமனைகளிலிருந்து 20 டாக்டர்கள் அடங்கிய குழுவினர் சென்றனர். இவர்களுடன் செவிலியர்கள், உதவியாளர்களும் சென்றனர். அத்துடன் அவசர தேவைக்கான மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள், குடிநீர், பலியான உடல்களை பதப்படுத்தி எடுத்து வருவதற்காக ஐஸ் கட்டிகள், பாலிதீன் கவர்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த ரெயிலில் இரண்டு சரக்கு பெட்டிகளும், 3 பயணிகள் பெட்டிகளும் இணைக்கப்பட்டிருந்தன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தீ பிடித்த ரெயிலில் தீ தடுப்பு கருவி இல்லாததால் உயிரிழப்பு அதிகரிப்பு
உயிர் தப்பிய பயணிகள் பேட்டி
நெல்லூர் அருகே தீவிபத்து ஏற்பட்ட ரெயிலில் தீ தடுப்பு கருவிகள் இல்லாததால் உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது என்று ரெயிலில் பயணம் செய்த பயணிகள் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கூறினர்.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில்
டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள எஸ்.11 பெட்டியில் மின்கசிவு காரணமாக தீ பற்றி ரெயில் பெட்டி முழுவதும் எரிந்து எலும்பு கூடு போல் ஆனது.
இதில் பயணம் செய்தவர்கள் பலர் தீயிலும், புகை மூட்டத்திலும் சிக்கி இறந்தனர். தீப்பற்றி எறிந்த பெட்டியை மட்டும் கழுற்றிவிட்டுவிட்டு நேற்று காலை 7.15 மணிக்கு வரவேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 11.45 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்தது.
மருத்துவமனையில் அனுமதி
தீ விபத்து ஏற்பட்ட ரெயிலில் சிக்கி பலர் படுகாயமடைந்தனர். இதில் ரேகா, வீணா, சாம்பசிவராவ், வர்மா சீரிஸ், வெங்கடேஸ்வரராவ், வர்மா, உசேனி, ராகவன், சுனில்குமார், ஹர்ஷத், சந்தீப் அக்னிஹேத்திரி, அமீர்பிரித்சிங், விஜயகுமார், குருஷி ஆகியோர் நெல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எஸ்.11 பெட்டியில் பயணம் செய்த சரளா, பன்சால்லால், உதயபாஸ்கர், ஸ்ரீனிவாசலு, ஸ்ரீபிரகாஷ்சிங், சோபாசிங் ஆகியோர் ஜெயபாரத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதன்லால், ஹிரிகிருஷ்ணா, டாக்டர் அனுசா, திருபாதம்மா, சம்பத்குமார் ஆகியோர் பாலிநெட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரெயில் கதவுகள் பழுது
தீவிபத்து ஏற்பட்ட ரெயிலில் டெல்லியிலிருந்து சென்னைக்கு பயணம் செய்த தொழிலதிபர் அசோக் மற்றும் பழனி ஆகியோர் கூறியதாவது:
தொழில் தொடர்பாக டெல்லிக்கு சென்றுவிட்டு வழியில் நாங்கள் வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் அதிகாலை 3.45 மணிக்கு எஸ்.11 பெட்டியில் தீவிபத்து ஏற்பட்டது. இதனை எவரும் உடனடியாக கவனிக்க வில்லை. இதனால் தீப்பிடித்த நிலையில் சுமார் 5 கி.மீ. தூரம் வரையிலும் ரெயில் ஓடியதால் அதிக காற்று காரணமாக தீ பெட்டி முழுவதும் பற்றி எரிந்தது. இதில் சிக்கி 45 பேருக்கு மேல் எரிந்து இறந்திருக்க கூடும். அதிகாலை என்பதால் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் எரிந்த பெட்டியிலிருந்தவர்களை உடனடியாக காப்பாற்ற முடியவில்லை. ரெயில்வே நிர்வாகத்தினரும் காலை 5 மணிக்கு தான் உதவிக்கு வந்தனர். வந்த உடன் தீப்பிடித்த பெட்டியை ரெயிலில் இருந்து கழட்டி விட்டனர்.
கதவுகளும் பழுதடைந்திருந்ததால் சம்பந்தப்பட்ட பெட்டிகளில் உள்ளவர்களால் உடனடியாக வெளியே வரமுடியவில்லை. தீ பற்றி எரிந்த பெட்டியிலிருந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களால் பெட்டியிலிருந்து அபாயக்குரல் மட்டுமே எழுப்ப முடிந்தது. அவர்களால் பெட்டியிலிருந்து உயிர்தப்பிக்க முடியவில்லை. காயமடைந்தவர்களை நெல்லூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். வரும் காலங்களில் இதுபோன்று விபத்துக்கள் நடக்காமல் இருக்க தீ தடுப்பு கருவிகள் அனைத்து பெட்டிகளிலும் வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
உயிர் தப்பிய பயணிகள் பேட்டி
நெல்லூர் அருகே தீவிபத்து ஏற்பட்ட ரெயிலில் தீ தடுப்பு கருவிகள் இல்லாததால் உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது என்று ரெயிலில் பயணம் செய்த பயணிகள் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கூறினர்.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில்
டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள எஸ்.11 பெட்டியில் மின்கசிவு காரணமாக தீ பற்றி ரெயில் பெட்டி முழுவதும் எரிந்து எலும்பு கூடு போல் ஆனது.
இதில் பயணம் செய்தவர்கள் பலர் தீயிலும், புகை மூட்டத்திலும் சிக்கி இறந்தனர். தீப்பற்றி எறிந்த பெட்டியை மட்டும் கழுற்றிவிட்டுவிட்டு நேற்று காலை 7.15 மணிக்கு வரவேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 11.45 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்தது.
மருத்துவமனையில் அனுமதி
தீ விபத்து ஏற்பட்ட ரெயிலில் சிக்கி பலர் படுகாயமடைந்தனர். இதில் ரேகா, வீணா, சாம்பசிவராவ், வர்மா சீரிஸ், வெங்கடேஸ்வரராவ், வர்மா, உசேனி, ராகவன், சுனில்குமார், ஹர்ஷத், சந்தீப் அக்னிஹேத்திரி, அமீர்பிரித்சிங், விஜயகுமார், குருஷி ஆகியோர் நெல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எஸ்.11 பெட்டியில் பயணம் செய்த சரளா, பன்சால்லால், உதயபாஸ்கர், ஸ்ரீனிவாசலு, ஸ்ரீபிரகாஷ்சிங், சோபாசிங் ஆகியோர் ஜெயபாரத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதன்லால், ஹிரிகிருஷ்ணா, டாக்டர் அனுசா, திருபாதம்மா, சம்பத்குமார் ஆகியோர் பாலிநெட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரெயில் கதவுகள் பழுது
தீவிபத்து ஏற்பட்ட ரெயிலில் டெல்லியிலிருந்து சென்னைக்கு பயணம் செய்த தொழிலதிபர் அசோக் மற்றும் பழனி ஆகியோர் கூறியதாவது:
தொழில் தொடர்பாக டெல்லிக்கு சென்றுவிட்டு வழியில் நாங்கள் வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் அதிகாலை 3.45 மணிக்கு எஸ்.11 பெட்டியில் தீவிபத்து ஏற்பட்டது. இதனை எவரும் உடனடியாக கவனிக்க வில்லை. இதனால் தீப்பிடித்த நிலையில் சுமார் 5 கி.மீ. தூரம் வரையிலும் ரெயில் ஓடியதால் அதிக காற்று காரணமாக தீ பெட்டி முழுவதும் பற்றி எரிந்தது. இதில் சிக்கி 45 பேருக்கு மேல் எரிந்து இறந்திருக்க கூடும். அதிகாலை என்பதால் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் எரிந்த பெட்டியிலிருந்தவர்களை உடனடியாக காப்பாற்ற முடியவில்லை. ரெயில்வே நிர்வாகத்தினரும் காலை 5 மணிக்கு தான் உதவிக்கு வந்தனர். வந்த உடன் தீப்பிடித்த பெட்டியை ரெயிலில் இருந்து கழட்டி விட்டனர்.
கதவுகளும் பழுதடைந்திருந்ததால் சம்பந்தப்பட்ட பெட்டிகளில் உள்ளவர்களால் உடனடியாக வெளியே வரமுடியவில்லை. தீ பற்றி எரிந்த பெட்டியிலிருந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களால் பெட்டியிலிருந்து அபாயக்குரல் மட்டுமே எழுப்ப முடிந்தது. அவர்களால் பெட்டியிலிருந்து உயிர்தப்பிக்க முடியவில்லை. காயமடைந்தவர்களை நெல்லூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். வரும் காலங்களில் இதுபோன்று விபத்துக்கள் நடக்காமல் இருக்க தீ தடுப்பு கருவிகள் அனைத்து பெட்டிகளிலும் வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தூத்துக்குடி ராணுவ வீரர்கள்
தீவிபத்து ஏற்பட்ட ரெயிலில் டெல்லியிலிருந்து சென்னைக்கு பயணம் செய்த ராணுவவீரர்கள் ராஜா மற்றும் உதயா ஆகியோர் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த நாங்கள் காஷ்மீர் மாநிலத்தில் லேலெதர் பகுதியில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறோம். தற்போது அம்பாலாவிற்கு பணிஇடம் மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து விடுமுறையில் தூத்துக்குடி செல்வதற்காக இந்த ரெயிலில் டெல்லியிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தோம். வரும் வழியில் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் கூடூருக்கும் இடையில் உள்ள வேதபாளையம் என்ற இடத்தில் வரும் போது ரெயிலில் உள்ள எஸ்.11 பெட்டியில் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கியவர்களை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ரெயில்வே நிர்வாகத்துடன் காப்பாற்ற முயன்றோம். ஆனால் தீ அளவுக்கு அதிகமாக எரிந்ததால் உடனடியாக பெட்டிக்கு அருகில் செல்ல முடியவில்லை. தீ அணைப்பு துறையினர் வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தீவிபத்து ஏற்பட்ட ரெயிலில் டெல்லியிலிருந்து சென்னைக்கு பயணம் செய்த ராணுவவீரர்கள் ராஜா மற்றும் உதயா ஆகியோர் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த நாங்கள் காஷ்மீர் மாநிலத்தில் லேலெதர் பகுதியில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறோம். தற்போது அம்பாலாவிற்கு பணிஇடம் மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து விடுமுறையில் தூத்துக்குடி செல்வதற்காக இந்த ரெயிலில் டெல்லியிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தோம். வரும் வழியில் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் கூடூருக்கும் இடையில் உள்ள வேதபாளையம் என்ற இடத்தில் வரும் போது ரெயிலில் உள்ள எஸ்.11 பெட்டியில் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கியவர்களை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ரெயில்வே நிர்வாகத்துடன் காப்பாற்ற முயன்றோம். ஆனால் தீ அளவுக்கு அதிகமாக எரிந்ததால் உடனடியாக பெட்டிக்கு அருகில் செல்ல முடியவில்லை. தீ அணைப்பு துறையினர் வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விபத்து நடந்தது எப்படி? ரெயிலில் பயணம் செய்த தொழிற்சங்க செயலாளர் பேட்டி
பாதுகாப்பு ஏற்பாடு
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று அதிகாலை 4 மணி அளவில் நெல்லூர் அருகே வந்துகொண்டிருந்தபோது, ``எஸ்.11'' பெட்டியில் தீ பிடித்தது. இதில், 47 பயணிகள் பலியானார்கள். 25-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்தை நேரில் பார்த்த பயணிகள் ``ரெயில் பெட்டியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், பராமரிப்பே இல்லாததால் எண்ணற்ற பயணிகள் உயிர் இழந்துள்ளனர்'' என்றும் ரெயில்வே நிர்வாகத்தின் மெத்தனப்போக்கே காரணம் என்றும் தெரிவித்தனர்.
விபத்து குறித்து, அதே ரெயிலில் சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்த தெற்கு ரெயில்வே எம்ப்ளாயீஸ் சங்கத்தின் செயலாளர் கே.ராஜாராமன் கூறியதாவது:-
வெடித்து சிதறிய பல்ப்
வேலை நிமித்தமாக டெல்லிக்குப்போய்விட்டு, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏசி.பெட்டியில் வந்துகொண்டிருந்தேன். நேற்று அதிகாலை சுமார் 4.15 மணிக்கு, நெல்லூர் ரெயில் நிலையம் சவுத் பிளாக் அருகே சென்றபோது, ரெயில் திடீரென பிரேக் போட்டு நின்றது.
அடுத்த வினாடி அதிர்ச்சியில் உறைந்து பட படவென கீழே இறங்கினேன். வெளியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. அருகில் போய் பார்த்தபோது, ஒரு பெட்டி தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. அங்கு இருந்த பயணிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து இருக்கலாம் என்பது பொதுவான கருத்தாக இருந்தது.
கொழுந்துவிட்டு எரிந்த தீ
தீயில் கருகிய எஸ்.11 பெட்டியில், டாய்லட் அருகே உள்ள மின்சார பல்ப் டமார் என்ற சத்தத்துடன் வெடித்து தீ பரவியது என்று சில பயணிகள் தெரிவித்தார்கள். `குபு குபு' வென புகை கிளம்பி பனைமரம் உயரத்துக்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது என்றும் எஸ்.9, எஸ்.10. பெட்டிகளில் பயணம் செய்த பயணிகள் அவசரகாலத்துக்கு பயன்படுத்தும் ``செயினை'' இழுத்ததாகவும் தெரிவித்தனர்.
ரெயில் பெட்டியின் மேற்கூரையில் போடப்பட்டிருந்த `ஷீட்'டில் உள்ள பெயிண்ட், தீயில் உருகி, அதில் இருந்து வெளியான நெடியில் சிக்கி மூச்சு திணறி பலர் இறந்துவிட்டனர் என்றும் தெரிவித்தனர்.
இரு பக்க கதவுகளையும் திறக்க முடியாத அளவுக்கு பயணிகளின் பெட்டி, படுக்கை, மூட்டை முடுச்சுகள் நிரம்பியிருந்ததால், கதவுகளை உடனடியாக திறக்க முடியவில்லை என்றும், இதனால் தீ பிடித்த பெட்டிக்குள்ளேயே சிக்கி பலர் பிணமானார்கள் என்றும் தெரிவித்தனர்.
அதிகாரிகள் விரைந்ததால்...
தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்த உடனேயே, ரெயில்வே அதிகாரிகளும், ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு வந்து உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொண்டதால் எண்ணற்ற உயிர்களை பாதுகாக்க முடிந்துள்ளது.
விபத்துக்கு பலர், பல்வேறு காரணங்களை சொல்லலாம். உண்மை என்னவென்று முழு விசாரணைக்குப்பிறகுதான் வெளியே வரும் என்பதே என் கருத்து ஆகும்.
இவ்வாறு தெற்கு ரெயில்வே எம்ப்ளாயீஸ் சங்க செயலாளர் கே.ராஜாராமன் கூறினார்.
பாதுகாப்பு ஏற்பாடு
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று அதிகாலை 4 மணி அளவில் நெல்லூர் அருகே வந்துகொண்டிருந்தபோது, ``எஸ்.11'' பெட்டியில் தீ பிடித்தது. இதில், 47 பயணிகள் பலியானார்கள். 25-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்தை நேரில் பார்த்த பயணிகள் ``ரெயில் பெட்டியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், பராமரிப்பே இல்லாததால் எண்ணற்ற பயணிகள் உயிர் இழந்துள்ளனர்'' என்றும் ரெயில்வே நிர்வாகத்தின் மெத்தனப்போக்கே காரணம் என்றும் தெரிவித்தனர்.
விபத்து குறித்து, அதே ரெயிலில் சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்த தெற்கு ரெயில்வே எம்ப்ளாயீஸ் சங்கத்தின் செயலாளர் கே.ராஜாராமன் கூறியதாவது:-
வெடித்து சிதறிய பல்ப்
வேலை நிமித்தமாக டெல்லிக்குப்போய்விட்டு, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏசி.பெட்டியில் வந்துகொண்டிருந்தேன். நேற்று அதிகாலை சுமார் 4.15 மணிக்கு, நெல்லூர் ரெயில் நிலையம் சவுத் பிளாக் அருகே சென்றபோது, ரெயில் திடீரென பிரேக் போட்டு நின்றது.
அடுத்த வினாடி அதிர்ச்சியில் உறைந்து பட படவென கீழே இறங்கினேன். வெளியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. அருகில் போய் பார்த்தபோது, ஒரு பெட்டி தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. அங்கு இருந்த பயணிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து இருக்கலாம் என்பது பொதுவான கருத்தாக இருந்தது.
கொழுந்துவிட்டு எரிந்த தீ
தீயில் கருகிய எஸ்.11 பெட்டியில், டாய்லட் அருகே உள்ள மின்சார பல்ப் டமார் என்ற சத்தத்துடன் வெடித்து தீ பரவியது என்று சில பயணிகள் தெரிவித்தார்கள். `குபு குபு' வென புகை கிளம்பி பனைமரம் உயரத்துக்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது என்றும் எஸ்.9, எஸ்.10. பெட்டிகளில் பயணம் செய்த பயணிகள் அவசரகாலத்துக்கு பயன்படுத்தும் ``செயினை'' இழுத்ததாகவும் தெரிவித்தனர்.
ரெயில் பெட்டியின் மேற்கூரையில் போடப்பட்டிருந்த `ஷீட்'டில் உள்ள பெயிண்ட், தீயில் உருகி, அதில் இருந்து வெளியான நெடியில் சிக்கி மூச்சு திணறி பலர் இறந்துவிட்டனர் என்றும் தெரிவித்தனர்.
இரு பக்க கதவுகளையும் திறக்க முடியாத அளவுக்கு பயணிகளின் பெட்டி, படுக்கை, மூட்டை முடுச்சுகள் நிரம்பியிருந்ததால், கதவுகளை உடனடியாக திறக்க முடியவில்லை என்றும், இதனால் தீ பிடித்த பெட்டிக்குள்ளேயே சிக்கி பலர் பிணமானார்கள் என்றும் தெரிவித்தனர்.
அதிகாரிகள் விரைந்ததால்...
தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்த உடனேயே, ரெயில்வே அதிகாரிகளும், ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு வந்து உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொண்டதால் எண்ணற்ற உயிர்களை பாதுகாக்க முடிந்துள்ளது.
விபத்துக்கு பலர், பல்வேறு காரணங்களை சொல்லலாம். உண்மை என்னவென்று முழு விசாரணைக்குப்பிறகுதான் வெளியே வரும் என்பதே என் கருத்து ஆகும்.
இவ்வாறு தெற்கு ரெயில்வே எம்ப்ளாயீஸ் சங்க செயலாளர் கே.ராஜாராமன் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» சீனாவில் புல்லட் ரெயில் விபத்தில் சாவு 33ஆக உயர்வு
» நடுவழியில் துண்டித்து நின்ற பெட்டிகள் கன்னியாகுமரி ரெயில் விபத்தில் இருந்து தப்பியது
» தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லை, செங்கோட்டைக்கு தினமும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்
» 68 ரெயில் வேகம் அதிகரிப்பு:' திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விரைவில் தினமும் இயக்கப்படும்; பொது மேலாளர் அறிவிப்பு
» காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
» நடுவழியில் துண்டித்து நின்ற பெட்டிகள் கன்னியாகுமரி ரெயில் விபத்தில் இருந்து தப்பியது
» தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லை, செங்கோட்டைக்கு தினமும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்
» 68 ரெயில் வேகம் அதிகரிப்பு:' திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விரைவில் தினமும் இயக்கப்படும்; பொது மேலாளர் அறிவிப்பு
» காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|