|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு by Muthumohamed Today at 12:03 am
» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by Muthumohamed Yesterday at 11:54 pm
» 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி மாணவி சாதனை
by Muthumohamed Yesterday at 11:53 pm
» ஈகரையில் புதிய விருப்பம் முறைமை!
by யினியவன் Yesterday at 11:51 pm
» இருதய இரத்த குழாய்களை திறக்கும் பானம்...
by Muthumohamed Yesterday at 11:45 pm
» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Yesterday at 11:44 pm
» வில் ஸ்மித்,ஜேடன் ஸ்மித் நடிக்கும் ‘அபாய கிரகம்’
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 11:42 pm
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by Muthumohamed Yesterday at 11:42 pm
» இந்திய தேசியக் கொடி-வரலாறு...!
by ராஜு சரவணன் Yesterday at 11:07 pm
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by nandagopal.d Yesterday at 10:36 pm
» வன்முறையாகின்ற வரம்
by nandagopal.d Yesterday at 10:34 pm
» வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!
by ராஜு சரவணன் Yesterday at 10:26 pm
» நிகழ்காலம்
by தளிர் அலை Yesterday at 10:11 pm
» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
by eraeravi Yesterday at 10:09 pm
» விக்கிரக வழிபாடு கடவுள் வழிபாடா? – வள்ளலாருக்கும் பிரம்மசமாஜ புலவருக்கும் இடையே நடந்த தர்க்கம்
by சாமி Yesterday at 9:54 pm
» காதலிப்பவர் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார் என்பதற்கான அறிகுறிகள்!!!
by யினியவன் Yesterday at 9:52 pm
» செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!
by krishnaamma Yesterday at 9:43 pm
» பென்ஷனால் மூழ்கிய தேசம் இது...
by krishnaamma Yesterday at 9:42 pm
» இந்த இரண்டு செய்திகளையும் பாருங்களேன் :)
by Muthumohamed Yesterday at 9:31 pm
» சவூதி அரேபியா அதிகாரியின் நேர்மை - 'நீதிக்குப் பின்தான் பாசம்'
by யினியவன் Yesterday at 9:23 pm
» 2013-ல் குளிக்கும் அறையின் டிசைன்கள்!!!
by krishnaamma Yesterday at 9:05 pm
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -7)
by சிவா Yesterday at 9:00 pm
» “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!
by krishnaamma Yesterday at 8:43 pm
» எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)
by krishnaamma Yesterday at 8:37 pm
» நிலக்கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க, தேனீக்களுக்கு பயிற்சி அளிக்கும் முயற்சி
by றினா Yesterday at 8:35 pm
» வீடுகளில் கோடை வெப்பத்தை சமாளிக்க...
by krishnaamma Yesterday at 8:35 pm
» வெற்றியின் முதல் படியில் நிற்கிறேன்..!!
by krishnaamma Yesterday at 8:31 pm
» ரமணியின் கதைகள்
by ரமணி Yesterday at 8:30 pm
» சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள் :)
by krishnaamma Yesterday at 8:28 pm
» டொர்னாடோவின் கோரத் தாண்டவம்(படங்கள்)
by krishnaamma Yesterday at 8:24 pm
» பல நோய்களுக்கு மருந்தாகும் ஏலக்காய் !
by krishnaamma Yesterday at 8:22 pm
» 8000 - பதிவுகளைக் கடந்துள்ள முத்துமுகமதுவுக்குப் பாராட்டுக்கள்!
by முத்துராஜ் Yesterday at 7:45 pm
» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by முத்துராஜ் Yesterday at 7:33 pm
» முகநூலில் ரசித்தவை-2
by krishnaamma Yesterday at 7:18 pm
» இரண்டு தலைகளுடன் பிறந்து இறந்த அதிசய குழந்தை
by krishnaamma Yesterday at 7:07 pm
» இத நீங்களும் பாருங்களேன் ............! :shock:
by krishnaamma Yesterday at 6:58 pm
» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by ராஜா Yesterday at 6:48 pm
» 14000 பதிவுகள் கடந்த பாலாஜி அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க .....
by krishnaamma Yesterday at 6:44 pm
» ரமணி சந்திரன் - நாவல் லிங்க்
by saranya karnan Yesterday at 6:06 pm
» 20000 பதிவுகளை கடந்த இனியவன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by அருண் Yesterday at 6:06 pm
Top posting users this week
| MADHUMITHA | ||||
| யினியவன் | ||||
| Muthumohamed | ||||
| சிவா | ||||
| balakarthik | ||||
| ஜாஹீதாபானு | ||||
| krishnaamma | ||||
| பூவன் | ||||
| ராஜு சரவணன் | ||||
| பாலாஜி |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இந்தியாவை அச்சுறுத்தும் சாலை விபத்துகள்...!!!
Page 1 of 1 • Share •
இந்தியாவை அச்சுறுத்தும் சாலை விபத்துகள்...!!!
இந்தியாவை அச்சுறுத்தும் சாலை விபத்துகள்...!!!

உலகின் மொத்த வாகன எண்ணிக்கையில், ஒரு சதவீதம் மட்டுமே கொண்டுள்ள இந்தியாவில், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையோ 13 சதவீதமாக உள்ளது. இதற்கு, அரசின் மெத்தனப் போக்கும், சாலை விதிகளை வாகன ஓட்டிகள் சரிவர கடைபிடிக்காததும் காரணம்.
இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் ஏற்பட்ட சாலை விபத்துகளில், ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இது இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்டதில் உயிரிழந்தவர்களை விட அதிகம் என்பது அதிர்ச்சியான தகவல். இந்தியாவில், தமிழகத்தில் தான் சாலை விபத்துகள் அதிகம் நடக்கின்றன. 2010ம் ஆண்டில், தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,409 பேர். இந்த மாதிரியான விபத்துக்கள் இன்று வரை தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது கடந்த ஐந்து வருடங்களாக இங்கு சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் 20 சதவீதம் பேர் முதியவர்கள்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சிங்கப்பூர், சீனா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் போக்குவரத்து கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்தி, சாலை விபத்துகளை பெருமளவில் குறைத்துள்ளன. ஆனால், இந்தியாவில் சாலை விபத்துகளை தவிர்ப்பதில், தொடர்ந்து மெத்தனப் போக்கே காணப்படுகிறது. இந்தியாவில், செய்தித்தாள்களில், நாள் தவறாமல் சாலை விபத்து தகவல்கள் இடம் பெறுகின்றன. சாலை விபத்துகளில் 10 பேர் பலி, 20 பேர் பலி என்ற செய்திகள் மக்களுக்கு சாதாரணமாகி விட்டன.
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டு ஓட்டுவது, அசுர வேகத்தில் வாகனத்தில் செல்ல விரும்புவது போன்றவை விபத்து ஏற்பட முக்கிய காரணங்களாக அமைகிறது. சரக்கு மற்றும் டேங்கர் லாரிகள் குடியிருப்பு நிறைந்த பகுதிகளில், செல்வதும் சாலை விபத்துகளை கணிசமான அளவுக்கு ஏற்படுத்துகிறது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணம். உதாரணமாக, சென்னையில் மட்டும் 2009ம் ஆண்டில் இருந்ததை விட, 2010ல் வாகனங்களின் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.
இந்தியாவின் சந்தையை புரிந்து கொண்டு தான் பன்னாட்டு கார் நிறுவனங்கள் இங்கு தொழிற்சாலைகளை தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட தங்க நாற்கர சாலைகள் திட்டம் பயன்பாட்டுக்கு வந்த பிறகும், சாலை விபத்துகள் அதிகரித்து கொண்டு தான் உள்ளன. வசதியான சாலைகள் வாகன ஓட்டிகளை விரைவாக செல்லத் தூண்டுவதே இதற்கு காரணம். எனவே, சாலை வசதிகளை அமைத்துக் கொடுப்பதில், அரசு கவனம் செலுத்துவதைப் போல, போக்குவரத்து விதிகளை தீவிரமாக கடைபிடிக்க உரிய கண்காணிப்பு மேற்கொள்ளவும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
சாலை விதிகளை மீறுவோர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழப்பு ஏற்படுத்தியோர் மற்றும் நான்கு அல்லது ஐந்து முறை சாலை விதிகளை மீறுபவர்களது வாகன ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வது போன்ற கடும் நடவடிக்கை எடுத்தால், வாகன விபத்துகளை பெரும் அளவில் குறைக்கலாம். இந்தியாவில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தீவிரப்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகளும் தனியார் பங்களிப்புடன் போக்குவரத்து விதிகளை மிகவும் தீவிரமாக அமல்படுத்தி, மனித உயிர்களை காப்பாற்ற வேண்டும். இது அரசின் முக்கிய கடமையாக கருதி செயல்படுவது அவசியம்.
நன்றி : முகநூல்

உலகின் மொத்த வாகன எண்ணிக்கையில், ஒரு சதவீதம் மட்டுமே கொண்டுள்ள இந்தியாவில், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையோ 13 சதவீதமாக உள்ளது. இதற்கு, அரசின் மெத்தனப் போக்கும், சாலை விதிகளை வாகன ஓட்டிகள் சரிவர கடைபிடிக்காததும் காரணம்.
இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் ஏற்பட்ட சாலை விபத்துகளில், ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இது இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்டதில் உயிரிழந்தவர்களை விட அதிகம் என்பது அதிர்ச்சியான தகவல். இந்தியாவில், தமிழகத்தில் தான் சாலை விபத்துகள் அதிகம் நடக்கின்றன. 2010ம் ஆண்டில், தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,409 பேர். இந்த மாதிரியான விபத்துக்கள் இன்று வரை தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது கடந்த ஐந்து வருடங்களாக இங்கு சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் 20 சதவீதம் பேர் முதியவர்கள்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சிங்கப்பூர், சீனா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் போக்குவரத்து கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்தி, சாலை விபத்துகளை பெருமளவில் குறைத்துள்ளன. ஆனால், இந்தியாவில் சாலை விபத்துகளை தவிர்ப்பதில், தொடர்ந்து மெத்தனப் போக்கே காணப்படுகிறது. இந்தியாவில், செய்தித்தாள்களில், நாள் தவறாமல் சாலை விபத்து தகவல்கள் இடம் பெறுகின்றன. சாலை விபத்துகளில் 10 பேர் பலி, 20 பேர் பலி என்ற செய்திகள் மக்களுக்கு சாதாரணமாகி விட்டன.
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டு ஓட்டுவது, அசுர வேகத்தில் வாகனத்தில் செல்ல விரும்புவது போன்றவை விபத்து ஏற்பட முக்கிய காரணங்களாக அமைகிறது. சரக்கு மற்றும் டேங்கர் லாரிகள் குடியிருப்பு நிறைந்த பகுதிகளில், செல்வதும் சாலை விபத்துகளை கணிசமான அளவுக்கு ஏற்படுத்துகிறது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணம். உதாரணமாக, சென்னையில் மட்டும் 2009ம் ஆண்டில் இருந்ததை விட, 2010ல் வாகனங்களின் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.
இந்தியாவின் சந்தையை புரிந்து கொண்டு தான் பன்னாட்டு கார் நிறுவனங்கள் இங்கு தொழிற்சாலைகளை தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட தங்க நாற்கர சாலைகள் திட்டம் பயன்பாட்டுக்கு வந்த பிறகும், சாலை விபத்துகள் அதிகரித்து கொண்டு தான் உள்ளன. வசதியான சாலைகள் வாகன ஓட்டிகளை விரைவாக செல்லத் தூண்டுவதே இதற்கு காரணம். எனவே, சாலை வசதிகளை அமைத்துக் கொடுப்பதில், அரசு கவனம் செலுத்துவதைப் போல, போக்குவரத்து விதிகளை தீவிரமாக கடைபிடிக்க உரிய கண்காணிப்பு மேற்கொள்ளவும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
சாலை விதிகளை மீறுவோர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழப்பு ஏற்படுத்தியோர் மற்றும் நான்கு அல்லது ஐந்து முறை சாலை விதிகளை மீறுபவர்களது வாகன ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வது போன்ற கடும் நடவடிக்கை எடுத்தால், வாகன விபத்துகளை பெரும் அளவில் குறைக்கலாம். இந்தியாவில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தீவிரப்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகளும் தனியார் பங்களிப்புடன் போக்குவரத்து விதிகளை மிகவும் தீவிரமாக அமல்படுத்தி, மனித உயிர்களை காப்பாற்ற வேண்டும். இது அரசின் முக்கிய கடமையாக கருதி செயல்படுவது அவசியம்.
நன்றி : முகநூல்

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 4317
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 1069
Re: இந்தியாவை அச்சுறுத்தும் சாலை விபத்துகள்...!!!
மிதமான வேகத்தில் சென்றால் விபத்துகளை தவிர்க்களாம்.

மகா பிரபு- வி.ஐ.பி

- பதிவுகள்: 9587
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1206
Re: இந்தியாவை அச்சுறுத்தும் சாலை விபத்துகள்...!!!
சாலைவிதிகளை மதிக்கும் நல்லறிவு வாகன ஓட்டிகளிடமும் சாலையில் நடப்பவர்களிடமும் இல்லைாததே இதற்கெல்லாம் காரணம். சாலையின் நடைபாதைகளை ஆக்கிரமிக்கும் திருடர்களை ஒடுக்க அரசாங்கம் தயங்குவதும் இதற்கு மேலும் ஒரு காரணம்.

அசுரன்- வழிநடத்துனர்
- பதிவுகள்: 9145
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1959
Re: இந்தியாவை அச்சுறுத்தும் சாலை விபத்துகள்...!!!
குடிபோதையில் ஓட்டுவதே பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம்....

bluestarkarthik- புதியவர்

- பதிவுகள்: 40
சேர்ந்தது: 19/11/2008
மதிப்பீடு: 6
Re: இந்தியாவை அச்சுறுத்தும் சாலை விபத்துகள்...!!!
இது ஒரு பொதுவான குற்றச்சாட்டு தான் நண்பரே!bluestarkarthik wrote:குடிபோதையில் ஓட்டுவதே பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம்....
உண்மையில் Road Sense இல்லாமல் வண்டி ஓட்டினால் தான் விபத்துக்கள் ஏற்படும்

அசுரன்- வழிநடத்துனர்
- பதிவுகள்: 9145
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1959
Re: இந்தியாவை அச்சுறுத்தும் சாலை விபத்துகள்...!!!
அசுரன் wrote:சாலைவிதிகளை மதிக்கும் நல்லறிவு வாகன ஓட்டிகளிடமும் சாலையில் நடப்பவர்களிடமும் இல்லைாததே இதற்கெல்லாம் காரணம். சாலையின் நடைபாதைகளை ஆக்கிரமிக்கும் திருடர்களை ஒடுக்க அரசாங்கம் தயங்குவதும் இதற்கு மேலும் ஒரு காரணம்.

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 5598
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 830
Re: இந்தியாவை அச்சுறுத்தும் சாலை விபத்துகள்...!!!
நல்ல விழிப்புணர்வு கட்டுரை.சாலை விதிகளை மதிப்போம்,வாகனங்களை மெதுவாக செலுத்துவோம்,விபத்துக்களை தவிர்ப்போம்.

ஹர்ஷித்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 6813
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 903
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum















