புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கவிப்பெட்டகம் (கிரிகாசன்) தெ.வி.தே 10(புதிது) - Page 2 Poll_c10 கவிப்பெட்டகம் (கிரிகாசன்) தெ.வி.தே 10(புதிது) - Page 2 Poll_m10 கவிப்பெட்டகம் (கிரிகாசன்) தெ.வி.தே 10(புதிது) - Page 2 Poll_c10 
42 Posts - 63%
heezulia
 கவிப்பெட்டகம் (கிரிகாசன்) தெ.வி.தே 10(புதிது) - Page 2 Poll_c10 கவிப்பெட்டகம் (கிரிகாசன்) தெ.வி.தே 10(புதிது) - Page 2 Poll_m10 கவிப்பெட்டகம் (கிரிகாசன்) தெ.வி.தே 10(புதிது) - Page 2 Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
 கவிப்பெட்டகம் (கிரிகாசன்) தெ.வி.தே 10(புதிது) - Page 2 Poll_c10 கவிப்பெட்டகம் (கிரிகாசன்) தெ.வி.தே 10(புதிது) - Page 2 Poll_m10 கவிப்பெட்டகம் (கிரிகாசன்) தெ.வி.தே 10(புதிது) - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
 கவிப்பெட்டகம் (கிரிகாசன்) தெ.வி.தே 10(புதிது) - Page 2 Poll_c10 கவிப்பெட்டகம் (கிரிகாசன்) தெ.வி.தே 10(புதிது) - Page 2 Poll_m10 கவிப்பெட்டகம் (கிரிகாசன்) தெ.வி.தே 10(புதிது) - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிப்பெட்டகம் (கிரிகாசன்) தெ.வி.தே 10(புதிது)


   
   

Page 2 of 2 Previous  1, 2

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Aug 20, 2012 4:46 am

First topic message reminder :

என் சொத்துக்களை இங்கே போட்டு மூடாமல் வைக்கிறேன்


௧. கொல்லாதே!!

கொல்லாதே கொல்லாதே கூவுகிறேன் - தமிழ்
சொல்லாற் குயில் போலும் பாடுகிறேன்
நில்லாதே என்றெண்ணம் மிஞ்சுவையோ - கொண்ட
நெஞ்சின் கனவுகள் பஞ்சனலோ
கல்லாலே கல்லாலே கோவில் செய்து - அங்கு
காணவென்றே தெய்வம் உன்னை வைத்து
எல்லாமே தந்துனைப் பூசைசெய்தும் - எம்மை
ஏனோவா ழென்றிங்கு விட்டதில்லை

வல்லூறு குஞ்சினைத் தூக்கிவிடு - என
வாழ்வின் விதியமைத் தாய்இறையே
நல்லோரின் நெஞ்சங்கள் நாதியற்று - விதி
நாளும் பலிகொள்ள வைத்ததென்ன
வில்லாலே அம்பையும் விட்டதுபோல் - உயிர்
வேகமெடுத் தந்த வானடையும்
சில்லால் உருண்டிடும் தேர்வழுகி - மலை
செல்லா துருண்டுகீழ் வீழ்வதென்ன

வெல்லாத தாயெமை வாழவைத்து - அதில்
வேண்டுமென்றே துன்பம் மேவவிட்டு
கல்லால் எறிந்துகாய் வீழ்த்தலென -அந்தக்
காலமும் வீழ்த்திக் களிப்பதென்ன
நில்லாய் இருவென்று நேசமுடன் - எமை
நீலக்குழி சுழல் பந்தில் வைத்து
பல்லாங்குழி யாட்டம் ஆடுவதேன் - வாழப்
பாதியில் வெட்டிப் பறிப்பது மேன்

சொல்லாலே செந்தமிழ்ப் பாடிஉனைப் - பெரும்
செந்தீயின் ஆதிமுதற் பொருளே
கொல்லாதே என்றே இறைஞ்சி நின்றேன் - உந்தன்
கோவம் தவிர் என்று கெஞ்சுகிறேன்
வல்லாதி சக்தியிவ் வையகத்தைப் - பெரும்
வானில் உருட்டிக் களிப்பவளே
சொல்லடிசக்தி உன் தூயமனங் - கொண்டு
சோதி என்தீபம் எரிய விடு

***********


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Sep 10, 2012 11:18 pm


பொங்கி யெழுங்கடி

பொங்கி யெழுங்கடி பொங்கிஎழு இனிப்
போதும் பொறுத்தது பொங்கியெழு
எங்களினம் மொழி காக்க இனித் தமிழ்
ஏற்ற மடைந்திடப் பொங்கியெழு

சங்குமுழங்கிடக் கேட்குது பார் அங்கு
சந்தியிலே கொடி ஏற்றினர் காண்
பொங்க முழக்கிய ஓசை முரசொலி
பின்னே யெழுந்தது பொங்கியெழு !

இல்லமெங்கும் உணர்வோடிக் கொதிக்குது
எத்தனை வேகம் இதை வந்து பார்
வெல்லவென ஒளி வானில் எழுந்தது
வீரியம் கொண்டனர் பொங்கியெழு

சொல்லப் பெருந்தொகை மாந்தரெனப் பல
செந்தமிழர் குலம் வந்தது காண்
வல்லவராய்த் திரண்டோடி எதிர்கொள்ளும்
வாழ்வில் துயர்நீக்கப் பொங்கியெழு

மெல்லத் திரும்புது எங்கள் இனித்தமிழ்
மேன்மைக் குலத்துடை வாழ்வதுகாண்
கல்லை கரைத்தனை கச்சிதமாய் இனிக்
காலமெமதடி பொங்கியெழு

அல்ல லிழைத்த அரண்மனையில் அவர்
ஆட்டம் ஒழிந்திடக் கொள்ளையரும்
பல்லுல கும்பழி செய்தவரு மெங்கள்
பைந்தமி ழர்முன்னே மண்டி யிட்டார்

சொல்லை யிழந்தவர் பேச்சிழந்து பணி
செய்தலெனப் பல பொய்யுரைத்து
நல்லவர் கண்களை ஏய்த்தவர்கள் இன்று
நாணிக் குனிந்தனர் பொங்கியெழு

நெல்லைவிதைத்தவர் நெல்லறுப்பர் -கடும்
சொல்லை விதைப்பவர் சீரழிவர்
நல்ல விதைத்தவர் நாமல்லவோ - இதை
நானிலம் கண்டிடப் பொங்கியெழு

***************


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Sep 10, 2012 11:33 pm

பனியில் பூத்த மலர்கள்

ஆங்கில நாடென்னும் வாழ்வினிலே தமிழ்
ஆவல்பிறக்குது நெஞ்சினிலே
தூங்கும் மதியொளிப் போர்வையிலே சோலைத்
தென்றலெனத் தமிழ் தோன்றுகுதே
மாங்கனி கீறி நறுக்கியிட்டு- அதில்
மாவடு தேனையும் ஊற்றி வைத்து
தாங்கி மடிதனில் தாயிருத்தி உண்ணத்
தந்திடல்போல் தமிழ்காணுகுதே

பூங்கொடி புள்ளினம் பேசுமொலி ஆங்கு
புள்ளி மான் துள்ளுவ தான எழில்
தாங்கிய தாய்த்தமிழ் வீறெழுந்து எமைத்
தீந்தமிழ் பாடிடத் தூண்டிடுதே
மூங்கிலிலே துளை வண்டெழுப்பத் தென்றல்
மோதிடக் கேட்குமிசை யெனவே
தேங்கும் துயர்துளை கொண்டமனம் அயல்
தேசமொழிக் காற்றில் பாட்டெழுதே

வேங்கையதும் வில்லு மீன்கொடியும் இவை
வெற்றிகொண்டே அன்று வையகத்தே
பூங்கொடியின் நறு வாசமெடுத்தயல்
போகும் இளங்காற்றில் துள்ளியதாய்
ஓங்கிடு வானில் முகில் மறைத்த சுடர்
உள்ளிருந்து மெல்ல மின்னுவதாய்
ஏங்கி மனமதும் இன்பமுற்றுத் தமிழ்
எண்ணிப் படபடத்தாடிடுதே

தூங்க முகிலிடை பாய்விரித்து மேலைத்
திக்கில் படுத்திடும் சூரியனும்
ஆங்கிலம் பேசிடும் வீதியிலே பொரித்தாறும்
கிழங்குடை வாசனையும்
பூங்கொத்து ஏந்துகை புன்னகைகள் மொழி
பேசப்புரியாத கைகுலுக்கல்
டாங்கெனும் தேவனின் ஆலயத்தின்மணி
ஓசை எதிரொலி கேட்கையிலே

ஏங்குது உள்ளமும் எண்ணித்தமிழ் இங்கு
எங்கள் குழந்தைகள் என்னசெய்யும்
ஆங்கில மோகம் அழித்தவரின் உள்ளே
அன்பைத் தமிழ்மீது குன்றவைத்து
தேங்கியநாக ரிகச் சுழலில் இவர்
தீமைகள் கொள்ளத் தமிழ் மறக்க
வாங்கிடுமோ உள்ளம் விற்றவரும் மேற்கு
வானவில்லைநம்பி வாழுவரோ
********************


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Oct 12, 2012 3:53 pm


இதுவும் விதி தானே!


கிட்டும் கவலைகள் வெட்டித்தறி யவை
கட்டிக் கடலிடை எறி நீயும்
பட்டுத் துடியிடர் விட்டுப் போனது
வட்டப் புவியிடை எனநாளும்
கட்டிக் குலவிடு கையில் தினமெடு
காணும் மகிழ்வினை விட்டோடி
எட்டுதிக்கிலும் இருளைக் கண்டனன்
எனநீ வீணே அலையாதே

தட்டிக் கதவினில், கொட்டக் கூரையைப்
பிய்த்துத் தருவது நிஜமல்ல
சுட்டுக்கொள்ளென வட்டப் பரிதியில்
பட்டுப் பொசுங்குதல் வாழ்வாகும்
கொட்டும் மழையுடன் சட்டச் சடவென
வெட்டும் மின்னலும் இடிபோல
இட்டுத் தடைகளை இடரைச் செய்வது
இந்தப் புவியுடை வாழ்வாகும்

பட்டுத் தெளியெது விட்டுபோனவை
பகலின் வானச் சந்திரனாய்
எட்டும் வகையில என்றேதள்ளிடு
எதிரே கொண்டது இன்பமென
கிட்டும் வாழ்வினில் கட்டுப்பாடுடன்
கொண்டது வரையில் போதுமென
தொட்டுத் துணிவுடன் விட்டுக் கொள்கையில்
துவளா வாழ்வுடன் நடைபோடு

நெட்டைச் சிறகுடை பட்சிக்கூட்டமும்
நீள்விரி வானில் நெடிதோடிக்
கட்டைப் புல்வெளி காட்டுப் புதரெனக்
குட்டை குளங்கள் கடந்தேகி
வெட்டக் குனிந்திடும் விளையுங் கதிருள
வயலைக் கண்டே வாழ்வு பெறும்
முட்டும் வலியுடை முடியா வாழ்விலும்
மட்டும் விதிகளை மீறாதே

நட்டுக்கழனியில் பச்சை நெல்லினை
நாளும் புனலுற வழிசெய்து
இட்டும் உரமதை இருகண் பார்த்திட
எதுவும் இடைபுகுந் தழியாது
வெட்டிப் பதரிட வீசுங் காற்றிடை
விதமும் பிரித்து விற்றாலும்
கட்டிப் பலமனை காசும பணமென
காரில் திரிந்திட வாழ்ந்தானோ

எட்டிப் பறித்திடும் இயல்பைக் கொண்டது
இருளின் வண்ணக் காக்கை யென
தட்டிப் பறித்திடு தன்னலப் பித்தரும்
தம்முடை வாழ்வில் முன்னேறி
சட்டை பையினுள் மொத்தக் காசுடன்
சார்ந்தோர் தம்மை ஏமாற்றி
விட்டுக் காசினை வட்டிக்கென பலர்
வாழும் வாழ்வும் விதிதானே

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Oct 12, 2012 4:08 pm

யாரங்கே..!

நீரினுட் கல்லை எறிந்த பின்னும் - குள
நீரலை தோன்றிடக் காணவில்லை
வாரியிறைத்து மழை பொழிந்தும் -வெள்ளம்
வந்து நிலமோடக் காணவில்லை
போரில் முரசமும் கொட்டியது - எந்தப்
போரிடு வீரனும் காணவில்லை
தேரினில் தெய்வமும் ஏறி நிற்க- எந்தத்
திக்கிலும் சக்கரம் சுற்றவில்லை

பாரியும் தேடியலைந்து விட்டான் பாவம்
பார்வையில் முல்லைகொடி யுமில்லை
கூரிய அம்புகள் விட்டிருந்தும் - அது
குத்தும் இலக்குகள் ஏதுமில்லை
வேரின் அடியிற் பழுத்த பலா - அதை
வேண்டிக் கவர்ந்திட யாருமில்லை
பாரில் இருள்ஓடிக் காலை வந்தும் - சுடர்
பற்றி யெரிந்திடக் காணவில்லை

ஓடித்திரிந்தே உழைத்தவனும் - வாழ்வில்
ஒன்றுமே செய்யா திருந்தவனும்
ஆடிக் களித்து மகிழ்ந்தவனும் - ஏதும்
ஆகட்டுமென்றே யிருந்தவனும்
கூடிக் கலந்தங்கு வாழ்ந்தவனும் - எந்த
கூட்டமும் இன்றித் தனித்தவனும்
தேடிடும் ஞானியும் மூடனவன் - இவர்
சேர்ந்து கிடக்குமிப் பூமியிலே

வாடிக்கிடக்குது தோட்டமொன்று - அங்கு
வண்ண மலர்களோ ஆயிரமாம்
மூடிக் கிடக்குது மேகமொன்று வானம்
முற்றும், மழையின்றிச் சூனியமாம்
ஒடித்திரிந்திவர் வேண்டி நின்றும் அந்த
ஒற்றைக் கண்மட்டும் திறக்கின்றதே
நாடி அருள் செய்வதார் இறையே இங்கு
நாமுள்ளம் வேண்டு மாதி சிவனா

ஓடித்திறக்குது வாசலொன்று - அங்கு
உள்ளே வருவது நீதியொன்றா
தேடியெடுப்பது ஏடுதானா - அல்ல
தீட்டிய கூருடை வாளினையா
நாடி வருவது நன்மைகளா - அல்ல
நாலு முழக்கொடி காலன்சொத்தா
ஓடித்திரிவது உண்மைகளா - இல்லை
ஒசையற்ற காலச் சக்கரமா?

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக