புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
64 Posts - 50%
heezulia
கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா)


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 16, 2012 9:59 pm

அசுரன் wrote:போட்டி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி எங்கேனும் விதிமீறல் இருந்தால் கதை போட்டியிலிருந்து விலக்கப்படும். நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.


அழிந்த + அழியாத நினைவுகள்


நான் ஒரு எழுத்தாளன். நான் அப்படிச் சொல்வதை நீங்கள் மறுக்கலாம். என்றாலும் நான் அப்படித்தான் சொல்வேன். நீங்களும் கேட்டுக் கொள்ள வேண்டும். என் கதையைப் படிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்களா? அப்படியென்றால் நான் ஒரு எழுத்தாளன் என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டு விட்டீர்கள்.

கெளசல்யாவைப் பார்த்து ரொம்ப நாளாகிப் போனது. அவளது முகங்கூட நினைவை விட்டு நழுவிக் கொண்டிருந்தது. அவளது தோற்றத்தைப் பற்றி எந்த நினைவும் இல்லை. அவள் அழகானவள் என்பது மட்டுந்தான் நினைவிலிருக்கிறது. ஒருநாள் அவளைப் பார்த்துப் பேச வேண்டும். இப்பொழுதெல்லாம் தொலைபேசியில் கூடப் பேசிக் கொள்வதில்லை. அவளுக்கு ஏதோ கோபமாக இருக்கலாம். ஒருவேளை எனக்குக் கூட ஏதாவது கோபமான இருக்கலாம். எதனால் எங்களுக்குள் பிரச்சினை வந்தது என்பதே மறந்து போயிற்று.

திரும்ப அவளிடம் பேச வேண்டும். திரும்பவும் காதலிக்க வேண்டும். அவளில்லாமல் நாட்கள் போகப் போக தனிமையும் வெறுமையும் கயிறுகளாய் மாறி என்னைச் சுற்றிக் கொள்கின்றன.

அவளுடைய தொலைபேசி எண்ணையும் என்னுடைய மொபைலில் இருந்து அழித்து விட்டேன். பத்திலக்க எண்ணை நினைவில் வைக்கவும் எனக்கு ஞாபக சக்தி இல்லை. அவளுடைய குரலும் மறந்து போய்விட்டது. ஆனால் அது கேட்பதற்கு இனிமையானது என்பது மட்டும் தான நினைவிருக்கிறது.

அவளை முழுதாக மறந்து விடக் கூடாது. மறந்துவிட்டால் அது என்னையே நான் மறந்து போனது மாதிரி. அவளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவளுடைய முகவரி கூட நினைவில்லை. அவள் எந்த ஊர்? கோயம்புத்தூரில் வைத்துப் பார்த்தேனா? இல்லை, சென்னையில் வைத்துப் பார்த்தேனா? அதுவும் நினைவில்லை. எல்லாமே மறந்து போய் விட்டது. பெயர் மட்டும் எப்படியோ நினைவில் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

"கெளசல்யா", அழகான பெயர் அல்லவா? நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். அது அழகான பெயர்தான். நான் அவளைக் கெளசி என்று செல்லமாகக் கூப்பிடும்போது, அது பிடிக்காமலோ, பிடித்துப் போயோ தலையை எத்தனை முறை செல்லமாகக் குட்டியிருப்பாள்? குட்டியிருப்பாளா? அதுவும் நினைவில்லை. தலையை ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டேன்.

நீங்கள் இப்பொழுது என்னைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். இவன் ஒரு விசித்திரப் பிராணி என்று. காதலியையும், காதலையும் எப்படி ஒருத்தனால் மறக்க முடியும்? ஆனால் எனக்கு ஞாபக மறதி அதிகம்.

கடைசியாக அவளுடன் கொஞ்சிப் பேசியது எப்பொழுது என்பது கூட நினைவில்லை. ஒரு வாரமாகவும் இருக்கலாம். ஒரு வருடமாகவும் இருக்கலாம்.
இந்த நிலைமையில் நான் எப்படி அவளைத் தேடுவது? என் நண்பர்களில் யாருக்காவது அவளை நிச்சயம் நினைவிருக்கும். அவர்களுக்கு அந்த அளவுக்கு ஞாபக மறதி இல்லை. பேசிக் கேட்க வேண்டும்.

முதலில் ராமுக்கு போன் பண்ணிப் பேசினேன்.

"டேய்! நான் சரவணன் பேசுறேண்டா"

"சொல்றா"

"நம்மகூட படிச்ச கெளசல்யாவோட ஃபோன் நம்பர், அட்ரஸ் ஏதாவது இருக்காடா?"

"கெளசல்யான்னு யாருமே நம்ம கூட படிக்கலடா"

"நல்லா ஞ்ாபகப்படுத்திப் பாருடா"

"இல்லடா, அப்படி யாரும் படிக்கல"

"சரிடா, அப்புறம் பாக்கலாம்"

மறுமுனையின் பதிலுக்குக் காத்திராமல் அழைப்பைத் துண்டித்தேன்.

குமாரிடம் பேசலாம். அவனிடம் தான் நான் பெண்களைப் பற்றி அதிகமாகப் பேசியிருக்கிறேன். அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.

அவனை ஃபோனில் விளித்தேன். "நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் தற்சமயம் பிஸியாக..." என்று அந்தக் குரல் தொடர்ந்தது. ஒரு மணி நேரம் இதே நிலை தான். காதலியிடம் பேசிக் கொண்டிருப்பானோ? இருக்கலாம்.

ஒருவழியாக அவன் என் அழைப்புக்குப் பதில் கொடுத்தான்.

"டேய், நான் சரவணன் பேசுறேண்டா"

"என்ன விஷயம், சொல்லு"

"ஒரு மணிநேரமா ட்ரை பண்ணிகிட்டிருக்கேன். யாருகிட்டடா அப்பிடி பேசிகிட்டிருந்த?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லடா. நீ சொல்லு"

"பரவாயில்ல, யாருகிட்டனு சொல்லு"

"ஜே கிட்ட தான் பேசிகிட்டிருந்தேன்"

ஜே என்பது அவன் முன்னாள் காதலிக்கு அவன் இட்டிருந்த செல்லப் பெயர். ஏதோ பிரச்சினையில் பிரிந்து விட்டார்கள். அவன் அவளைப் பற்றி என்னிடம் பல அசிங்கமான வார்த்தைகளால் திட்டியிருக்கிறான்.

"உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சினையில்ல"

"அதெல்லாம் முடிஞ்சிருச்சுடா"

எனக்கும் கெளசல்யாவுக்கும் இருக்கும் பிரச்சினையும் சீக்கிரம் முடிந்து விடும்.

"எப்ப கல்யாணம்?"

"சீக்கிரமே, வீட்டில ஓகே சொல்லிட்டாங்க"

எனக்கும் கெளசல்யாவுக்கும் சீக்கிரமே வீட்டு சம்மதத்துடன் கல்யாணம் நடக்கும். இவனுக்கெல்லாம் நடக்கும் போது எனக்கு நடக்காதா?

"நம்ம கூட படிச்ச கெளசல்யா போன் நம்பர் இருக்காடா?"

குமார் மறுமுனையில் சிரிக்கத் தொடங்கினான்.

"சீரியசா பேசிகிட்டிருக்கேன். சிரிச்சு கடுப்பேத்தாத"

"என்னடா ஓவர் ரியாக்ஷன் கொடுக்கிற?"

"இதுக்கு மேல ஏதாவது கிண்டலா பேசினீனா கெட்ட வார்த்தைலயே திட்டிருவேன்டா"

குமார் மவுனித்தான்.

"சொல்றா, பரதேசி"

"கெளசல்யான்னு ஒரு பொண்ணே இல்லடா", குமார் அமைதியான குரலில் சொன்னான்.

தொடர்ந்தான், "காலேஜ்ல படிக்கும் போது நீதான் ஒரு லவ் ஸ்டோரி எழுதின. அதில வர பொண்ணோட பேரு தான் கெளசல்யா. அந்தக் கேரக்டரையே நீ காதலிக்கத் தொடங்கிட்டதா சொன்ன. ஆனா அது இப்படியாகும்னு நான் நெனக்கல"

நான் முழுமையாக வெறுமையாகிப் போனேன்.



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 16, 2012 10:06 pm

நன்று ....
எனக்குள்ளும் பதிந்தது இந்த அழியாத நினைவு ....

avatar
Guest
Guest

PostGuest Tue Oct 16, 2012 7:54 pm

நகையுடன் பயணிக்கும் கதை அருமை ... சிறிய கதைதான் ஆனால் மனதில் நிறைய நாட்கள் நிற்கும் ...

நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 19, 2012 8:37 pm

கதை எழுதறவங்க கற்பனை உலகிலே வாழ்வாங்க என்று கேள்விப்பட்டிருக்கேன் , அதுக்குன்னு இப்படியா? புன்னகை
.
. anyhow நல்ல கதை புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக