புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 Poll_c10மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 Poll_m10மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 Poll_c10 
49 Posts - 52%
heezulia
மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 Poll_c10மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 Poll_m10மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 Poll_c10மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 Poll_m10மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 Poll_c10மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 Poll_m10மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 Poll_c10மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 Poll_m10மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 Poll_c10 
91 Posts - 56%
heezulia
மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 Poll_c10மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 Poll_m10மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 Poll_c10மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 Poll_m10மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 Poll_c10மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 Poll_m10மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 22, 2012 6:42 pm

First topic message reminder :

மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 22-chinmayi22-600

சென்னை: மறவர் சீமையில் தமிழ் வளர்ச்சி குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். தமிழக மீனவர்களை விமர்சித்து நான் டிவிட் செய்யவில்லை என்று பாடகி சின்மயி விளக்கம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் அளித்துள்ள நீண்ட விளக்கம்....

ஒட்டு மொத்த தமிழர்களுக்கு எதிரானவள், ஒரு குறிப்பிட்ட சாதித் திமிர், மீனவர்கள் குறித்து தரக்குறைவாகப் பேசினேன் என்று பலரும் தங்களுக்குத் தோன்றிய வகையில் மனம் போன போக்கில் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்கள்.

நான் ஒரு தமிழச்சி. பல தமிழர்களின் வீட்டின் செல்லப் பிள்ளை. தமிழர்களின் ஆதரவினாலும், கடவுள் கிருபையினாலும், என் தாயாருடன் ஆசிர்வாததினாலும் வளர்ந்து வரும் இளம் திரைக் கலைஞர்களில் நானும் ஒருவள்.

ஐயங்கார் குடும்பம்


சிறு வயது முதலே என்னை சீராட்டி, பாராட்டி வளர்த்து வருவது இந்தத் தமிழ்ச் சமூகம் தான். பாரம்பரியமாகவே தமிழ் வளர்க்கும் பரம்பரையில் வந்தவள் நான். வித்வான் ரா.ராகவ ஐயங்கார் , முனா ராகவ ஐயங்கார் அவர்களின் பேத்தி என் தாயார். மறவர் சீமையில் தமிழ் வளர்த்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவள் தான் நான்!

உள்ளூர்த் தமிழர்களானாலும் சரி, வெளிநாடுகளில் வசிக்கும் புலம் பெயர் தமிழர்களானாலும் சரி என்னை அவர்களின் சொந்த சகோதரியாகவே பார்த்து வருகிறார்கள். நானும் அவர்களிடத்தில் எனக்குள்ள மதிப்பை கட்டிக் காத்து வருகிறேன். அதிலும் சிறப்பாக இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரையில், எங்கள் மறவன் சீமையின் ஒரு Extension ஆகத்தான் நாங்கள் கருதுகிறோம். அவர்களுடைய கஷ்டத்தை இன்னும் அதிகமாக உணர்ந்திருக்கிறோம். நான் இலங்கை தமிழர்களுக்காக நடத்தி வந்த கச்சேரிகளில் பங்கு பெற்று மருத்துவம் மற்றும் படிப்பிற்கு சம்பந்தப்பட்ட Charitieகளுக்கு நிதியுதவி திரட்டியிருக்கிறோம்.

இந்தச் சமுதாயத்தால் வளர்ச்சி பெற்று வரும் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற அளவு சமுதாயம் வளரவும் பங்களிப்பு தரவேண்டும் என்ற நம்பிக்கை உடையவள் நான்.

வரவேற்றார்கள், பேசினார்கள், விவாதித்தார்கள்

என்னுடைய கடுமையான பணிகளுக்கு இடையே சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாக என்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்வதோடு இல்லாமல் அடுத்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை எப்படி அணுகுகிறார்கள் என்று தெரிந்து கொண்டால் எனக்கு மிகுந்த பயனாக இருக்கும் என்று நம்பினேன். சுமார் இரண்டாண்டுகளுக்கு முன் சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் இணைந்து கொண்டேன். உலகெங்கிலும் வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்றார்கள். பேசினார்கள். விவாதித்தார்கள்.

திடீரென ஒரு நாள் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலைக் கண்டிக்கக்கோரி ட்விட்டரில் ஒரு சிலரால் ட்விட்டுகள் வெளியாகின. #TNFisherman என்ற hashடேக் (தொடர் கீச்சு) மூலம் அனைவரும் இலங்கை அரசை கண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கினார்கள். என்னையும் கேட்டார்கள். நல்லதொரு காரியத்தில் நானும் இணைந்து செயல்படுவதில் என்றுமே தயங்கியதில்லை. ஆனால் மேற்படி #TNFishermanதொடர்பில் வெளியான பல்வேறு ட்வீட்டுகளில் நம் நாட்டு மூத்த அரசியல் தலைவர்கள் உள்பட பலரை கேவலமாகவும், அவதூறாகவும் திட்டி ட்விட்டினார்கள். எனவே எனக்கு இந்த ஒரு குழுவுடன் இணைந்து (இந்த எண்ணம் நல்லதாக இருந்தாலும்) குறிப்பிட்ட hashtag ஐ ஆதரிக்க மாட்டேன் என்று கூறினேன்.

தொடர் கீச்சில் இணைய மறுத்தேன்

இந்த hashtag இல் மேற்கண்ட காரணங்களுக்காக நான் வெகுவாக புறக்கணிக்கும் ஒரு குழுவினரால் வற்புறுத்தப் பட்டதால் இந்தத் தொடர் கீச்சில் இணைய மறுத்தேன். இதற்கும் மீனவர்கள் மேல் எனக்குள்ள அனுதாபத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. என் அனுதாபத்தை என்னுடைய முறையில், hashtag போடாமல் நானே தனியாக ஒரு ட்விட் போட்டேன். இவர்களுடன் இணைய மறுத்தேன். இது தவறா? இதில் மீனவர்களுடைய பிரச்னையை பேசுகிறார்கள, அல்லது தங்களுடைய தனிப்பட்ட பிரச்சனைய புகுத்துகிறார்களா?

சாப்பிடுவதும் இல்லை, தொட்டியில் வளர்ப்பதும் இல்லை

அடுத்து "நீங்கள் மீன் சாப்பிடுவது இல்லையா?" என்ற கேள்விக்கு "இல்லை. நான் சைவம்" என்று பதில் கூறினேன். "மீன் தொட்டி வாஸ்துக்காக இருக்கிறதே" என்று அதே ட்விட்டில் பதில் கேலி செய்த பொது, "நான் மீன் சாப்பிடுவது இல்லை, தொட்டியில் வைத்து துன்புறுத்துவதும் இல்லை. PETA supporter" என்று ஒரு "புன்னகை" போட்டேன். இந்த பதில் கூட மேலே சொன்ன#TNFisherman Hash டேக் பிரச்னை நடப்பதற்கு முதல் நாள் வேறொரு கருத்துப் பரிமாற்றத்தின் போது தான்! ஆனால் நான் மீனவர்களைக் கொல்பவர்களைக் கண்டிக்க மாட்டேன்.

மீனவர்கள் மீன்களை கொல்கிறார்கள் என்றெல்லாம் கூறியதாக தகவல் திரித்துக் கூறப்பட்டு இணையம் முழுவதும் பரவியது. இந்த கற்பனை கீச்சுக்குச் சொந்தக்காரர் திருவாளர் @rajanleaks. இதெல்லாம் உண்மை தானா என்று உங்களில் பலர் என் தரப்பு என்று ஒன்று இருக்கவேண்டும் என்று கூட நினைக்கத் தவறியது எனக்கு மிகவும் வருத்தமே. மற்றும் என்னுடைய சாதி, மதம், இனம் என்று சகல வகைகளிலும் ஏசப்பட்டேன் .

அந்த தருணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு

பிறகொரு சமயம் ‘இடஒதுக்கீடு' தொடர்பான கருத்து விவாதத்தில் ஒரு மாணவி நூற்றிக்கு அருகில் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், 'FC' என்ற காரணத்தினாலும், பண வசதிக் குறைவாலும், தனது மேற்படிப்பு தடைபட்டு போன வருத்தத்தை பகிர்ந்த போது, அந்த தருணத்தில் இந்த இட ஒதுக்கீடு அவசியம் தானா என்று நினைத்தேன். அது அந்த தருணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு. நீங்களும் அப்படித் தான் யோசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் மீண்டும் என் சாதியைப் பிடித்து இழுத்து, ‘இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவள் சின்மயி' என்று பிரச்னை கிளப்பப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை பல சமயங்களில் பல இடங்களில் என்னை நேரடியாகவும், மறைமுகமாகவும் படு கேவலமான வசைச் சொற்களைக் கொண்டு ட்விட்டரில் விமரிசித்து வருகிறார்கள் ஒரு சிலர் கொண்ட கும்பல் ஒன்று.

என் தாய் வருந்தினார்


என்னைப் பெற்று வளர்த்தெடுத்த என் தாய்..என்னுடைய வளர்ச்சிக்காவே தன் நேரம் முழுவதையும் செலவழித்து வரும் என் தாய்.. இந்த மாதிரியான வசைச் சொற்களைக் கண்டு மனம் வருந்தினார். இப்படிப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்து, இந்த மாதிரி தொடர்ந்து வசைபாடுபவர்களின் பட்டியலைத் தயாரித்து போலீஸ் துறையிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம்.

பொது வெளியில் இப்படி அநாகரீகமாக நடந்த பலரின் பின்னணியை என் தாயார் கண்டறிந்து இவர்களில் பெரும்பாலானவர்கள் இள வயதும், திருமணம், சிறு குழந்தைகள் என்ற நிலையில் இருப்பதை உணர்ந்து அவசரத்தில் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவேண்டாம், பொறுமையாக பேசி உணர்த்த முயற்சிக்கலாம் என்று பலரிடம் அலைபேசியிலும், அவர்களின் நண்பர்கள் மூலமாகவும், ஒரு முடிவு காண, என் தாயார் முயற்சித்தார். அதன் விளைவு தான் திரு sharankay அவர்களின் மிக கீழ்த்தரமான கீசுகளின் வெளிபாடு.

இதற்கு பிறகும் நாங்கள் சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்காவிட்டால் எங்களுக்கே மிகவும் தீதாத முடியும் என்ற காரணத்தினால் இந்த முடிவிற்கு தள்ளப்பட்டோம். நாங்கள் பரிதாபப்பட்டதை பயந்து விட்டதாக நினைத்து அதன் பிறகு தான் அநாகரிகத்தின் உச்சத்தையும் கடந்துவிட்டனர். மற்றபடி யாரையும் பழிவாங்குவதிலோ, தண்டனை வாங்கி கொடுப்பதிலோ எங்களுக்கு எந்த விதமான மகிழ்ச்சியும் கிடையாது.

என் அம்மாவையும் திட்டினார்கள்

இவற்றைத் தொடர வேண்டாம் என்று ஃபோன் மூலம் என் அம்மா சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்பு கொண்டு பேச முயற்சித்த போதும் அதனை மிரட்டல் விடுவதாகக் கூறி திசை திருப்ப முயன்றார்கள். என் அம்மாவையும் மிகத் தரக்குறைவாக கிண்டல், கேலி செய்து ட்விட்டினார்கள்.

அதன்பிறகு சட்டத்தின் துணியை நாடுவதை தவிர வேறு வழில்லாத நிலைக்கு தள்ளப்பட்டோம்.

இதற்குப் பிறகும் ஒரு பத்திரிகையின் கார்ட்டூனிஸ்ட் மூலம் நாங்கள் பேசாத வார்த்தைகளை நாங்கள் பேசியதாகச் சொல்லி பொய்ச் செய்தி பரப்பி உலகம் முழுதும் உள்ள தமிழர்களின் கொந்தளிப்பான உணர்சிகளை தூண்டும் வகையாக விஷயத்தை திசை திருப்பப்பட்டது.

இந்நிலையிலும் ஏராளமான தமிழ்ச் சகோதர, சகோதரிகள் தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் எங்களுக்குச் செய்தார்கள். வழி நடத்தினார்கள். ஆறுதல் சொன்னார்கள்.

இந்தவொரு சிரமமான சூழலில் எனக்கு முழு ஆதரவளித்த ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்துக்கும் நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

தட்ஸ்தமிழ்



மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 9:16 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:பாட்டுப் பாடுனோமா பணம் பார்த்தோமான்னு இல்லாம
நெருப்புல நெய் ஊத்திட்டிங்களேம்மா?....இது போட்டு அது போட்டு இது யாருன்னு கேட்குற
சின்னப் புள்ளைங்க வெளையாட்டு மாதிரி சின்மயி விவகாரம் ஆயிடுச்சே...
ம்ம்ம்ம்...இவுங்கள எல்லாமா நம்ம இனப் போராட்டத்துல இழுக்கணும்?...
கண்டுக்காம விடுங்க பாஸ்...தன்னால பிசுபிசுத்துப் போயிடும்...
இந்த வார்த்தைக்குப் பொருள் புரியலை ரா.ரா.


அவங்க பொழுதுபோக்குத் தொழிலில் பொழப்ப ஒட்டுறவங்கன்னு அர்த்தம்...
இனப் போராட்டத்திற்கு இவர்களை இழுப்பதால் என்ன ஆகப் போகிறதுன்னு அர்த்தம்...
இவங்கள எதுக்கு தேவை இல்லாம தூக்கிப் பிடிக்கணும்னு அர்த்தம்...
பொதுவா கூத்தாடிகளை கொண்டாட வேண்டாம்னு அர்த்தம்...
அறிவுசால் சான்றோர்களை அழைத்து வாருங்கள் என்று அர்த்தம்...
இங்கும் முரண்பாடாவே பேசுறீங்க.. அப்ப கூத்தாடிங்களுக்கு அறிவு இல்லன்னு சொல்ல வரீங்க?

இன்னைக்கு ஏதோ முடிவோட வில்லெடுத்த மாதிரி தெரியுதே...
விவகார அம்பின் குறி என் மீதா?...ம்ம்ம்...தொடுங்கள் உங்கள் அன்புப் போரை...
அப்புறம்...முரண் தானே அழகு...இது நீங்கள் சொல்லித் தந்த பாடம்...
(வேண்டாம்...அந்தப் பிரம்ப கீழ வைங்க...எதுக்கு இவ்ளோ கோவம்?...)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2012 12:18 pm

பின்னணி பாடகி சின்மயிக்கு `செக்ஸ்' தொல்லை கொடுத்ததாக மத்திய அரசு என்ஜினீயர் கைது

மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 CNI231001

பிரபல பின்னணி பாடகி சின்மயிக்கு `செக்ஸ்' தொல்லை கொடுத்ததாக, சென்னையில் மத்திய அரசு என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தாயாருடன் வந்தார்

பிரபல சினிமா பின்னணி பாடகி சின்மயி, கடந்த 18-ந்தேதி தனது தாயார் பத்மாசினியுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து இரண்டு புகார் மனுக்களை கொடுத்தார்.

பின்னர் அவர் தான் கொடுத்த புகார் மனுக்கள் தொடர்பாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆபாச படம்


கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானேன். மக்களின் ஆதரவால் எனக்கு புகழ் கிடைத்தது. எனக்கு கிடைத்த புகழை அழிக்கும் சம்பவங்கள் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

டுவிட்டர் இணையதளத்தில் என்னைப்பற்றி ஆபாசமான தகவல்களை அனுப்பி மிரட்டி வருகிறார்கள். ஆபாச படங்களையும் வெளியிட்டு விடுகிறார்கள். பேஸ் புக்கில் ஆபாச தகவல்களையும், படங்களையும் தொடர்ந்து அனுப்பி வருகிறார்கள்.

சட்டப்படி நடவடிக்கை

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யார் என்பதை நான் கண்டுபிடித்து, போனில் பேசி கண்டித்துவிட்டேன். கண்டிக்கும் போது என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறார்கள். எனது சாதியை சொல்லி இழிவான வார்த்தைகள் பேசுகிறார்கள்.

இதுபோன்ற செயல்கள் மூலம் அவர்கள் புகழ்பெற நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு தொல்லை கொடுப்பவர்கள் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு சின்மயி தெரிவித்தார்.

ரூ.12 லட்சம் மோசடி புகார்

மும்பையை சேர்ந்த சாய்பாபா டெலிபிலிம்ஸ் படநிறுவனத்தின் அதிபர் கஜேந்திரசிங், சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் நடத்திய இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக ரூ.12 லட்சம் தர வேண்டியுள்ளது. அந்த பணத்தையும் வசூலித்து தரவேண்டும் என்றும், சின்மயி தான் கொடுத்த இன்னொரு புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

சின்மயிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த 6 பேர் பெயர்கள் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவினாசியை சேர்ந்த ராஜன் மற்றும் செந்தில்குமார், மந்திரமூர்த்தி, சரவணகுமார், ராமநாதன் போன்ற 6 பெயர்கள் புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

வழக்குப்பதிவு

சின்மயி கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசாருக்கு, கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவின் இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் ராதிகா, உதவி கமிஷனர் ஜெகபர்சாலி ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் அன்பழகன் அதிரடி விசாரணை நடத்தினார். முதலில் செக்ஸ் தொல்லை புகார் மனு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவு, தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. செக்ஸ் மிரட்டல் விடுத்த நபர்களை வேட்டையாடி பிடிக்கும் நடவடிக்கையில் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக இறங்கினார்கள்.

என்ஜினீயர் கைது

நேற்று சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த, மத்திய அரசு என்ஜினீயர் சரவணகுமாரை (வயது 37) போலீசார் கைது செய்தனர். இவர் மத்திய அரசின் தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனமான நிப்ட் நிறுவனத்தில், உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். பி.இ.ஆர்க்.டெக் படித்துள்ளார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இவரை பிடித்து வந்த போலீசாரிடம், நான் விளையாட்டாக, டுவிட்டர் இணையதளத்தின் மூலம் எனது நண்பருடன் உரையாடியபோது, சின்மயியின் தாயாரை பற்றி ஒரு வார்த்தை இழிவாக பேசி விட்டேன். அது தவறுதான், அதற்கு இவ்வளவு பெரிய தண்டனை கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை என்று தெரிவித்ததாக போலீசார் கூறினார்கள்.

மேலும் ஒருவர்

மேலும் சின்மயிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக, அவினாவியை சேர்ந்த ராஜன் என்பவரை பிடிக்க போலீசார் விரைந்துள்ளனர். அவரும் கைது செய்யப்படுவார் என்று தெரிய வந்துள்ளது.

சின்மயியை திருமணம் செய்து கொள்வதாக, பெண் கேட்டு, அதற்கு சம்மதிக்காததால், சின்மயியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட, மந்திரமூர்த்தி என்பவரையும் பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.

கலெக்டர் அலுவலக ஊழியர் கைது

பாடகி சின்மயி வழக்கில் நேற்று மாலை அவினாசியை சேர்ந்த ராஜன் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த தகவலை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நிருபர்களிடம் நேற்று மாலை தெரிவித்தார்.

ராஜன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊழியராக உள்ளார். இவர் எந்தவித பயமும் இல்லாமல், இணையதளம் மூலம் பாடகி சின்மயிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார்.

கைது செய்தவுடன் இவரை உடனடியாக போலீஸ் வேனில் ஏற்றி சென்னை கொண்டு வருகிறார்கள். சென்னையில் வைத்து தீவிர விசாரணை செய்யப்பட்ட பிறகு இவர் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார் என்று போலீசார் கூறினார்கள்.



மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Oct 23, 2012 4:48 pm

அட பாவிகளா...எல்லாம் அர மண்ட கழண்ட ஆளுங்களாதான் இருப்பாங்க போல...
வெளியில போனத தூக்கி வீட்டுக்குள்ள விட்டுட்டு இப்ப குத்துதே குடையுதேன்னு
குமைஞ்சா யாரு காப்பாத்துவா?...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 23, 2012 5:45 pm

ரா.ரா3275 wrote:கைது செய்தவுடன் இவரை உடனடியாக போலீஸ் வேனில் ஏற்றி சென்னை கொண்டு வருகிறார்கள். சென்னையில் வைத்து தீவிர விசாரணை செய்யப்பட்ட பிறகு இவர் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார் என்று போலீசார் கூறினார்கள்.


கைது செய்தவுடன் இவரை உடனடியாக போலீஸ் வேனில் ஏற்றி சென்னை கொண்டு வருகிறார்கள். சென்னையில் வைத்து தீவிர விசாரணை செய்யப்பட்ட பிறகு இவர் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார் என்று போலீசார் கூறினார்கள்.

அதான் அரசாங்கம் காப்பாதுறேனு சொல்லுறாங்களே அப்புறம் என்ன மாதர் இன் லா ஹவுசுல லிவ் பண்ண வேண்டியதுத்தானே

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 23, 2012 6:32 pm

வந்தோமா ஜாலியா ட்விட் பண்ணுனோமா என்று இல்லமல்
எதுக்கு இந்த வேண்டாத வேலை?
இப்ப மனகஷ்டம் படுவது யாரு?என்ன கொடுமை சார் இது

avatar
Guest
Guest

PostGuest Thu Oct 25, 2012 5:06 pm

மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி - Page 2 396228_540550172626504_1036316602_n

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Sat Oct 27, 2012 11:16 pm

ஜூனியர் விகடனிலிருந்து ". . . கட்டற்ற சுதந்திரத்துக்கும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். இந்த விதி மீறப்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கு பாடகி சின்மயி விவகாரம் ஓர் உதாரணம் ... ". . . . சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஜார்ஜிடம் பேசியபோது, ''. . . யாராக இருந்தாலும் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில், தனிஅறைக்குள் அமர்ந்து கொண்டு கம்ப்யூட்டர் மூலம் யாரைப்பற்றியும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைக்கக் கூடாது. அப்படி செய்வதை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்றும் நினைக்கக்கூடாது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிக்க சைபர் க்ரைம் உள்ளது. பாதிக்கப்படுபவர்கள் இதை யாரிடம் சொல்வது, எப்படிப் புகார் கொடுப்பது என்று தடுமாறவும் தேவையில்லை. உடனடியாக சைபர் க்ரைமை அணுகலாம். குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைப் பெற்றுத்தர முடியும். அதேபோல், புகார் கொடுப்பவர்களும் தாங்கள் வெளியிட்ட பதிவுகளை மறைத்து விட்டு, தங்களுக்கு எதிரான பதிவுகளை மட்டும் ஆதாரமாகக் காட்டி புகார் அளிக்க முடியாது. இருவருக்கு இடையிலும் நடந்த அனைத்து உரையாடல்களையும் கண்டுபிடிக்கும் வசதியும் தொழில்நுட்பமும் எங்களிடம் உள்ளது'' என்றார்.சமூக வலைதளத்தில் உலா வருபவர்களுக்கு இந்தச்சம்பவம் ஓர் எச்சரிக்கை! ..... என்கிறது அந்த வெளியீடு
அன்பரே அருண் . நீங்கள் சொல்வது முக்காலும் உண்மை. கொள்ளிக்கட்டையை வைத்து தலையை சொறிந்துகொண்டது மாதிரிதான். (பின் குறிப்பு: அன்பர் அருண் அவர்களின் பதிவுக்குக் கீழ் அல்லவா மறுமொழியிட்டேன். எங்கேயோ போய்விட்டது போலுள்ளதே.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 28, 2012 12:50 am

நாமளும் இனி ஜாக்கிரதையா தான் கருத்து பதிக்கனும் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக