புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரிக்வேத காலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
சிறப்புப் பாயிரம்:
தொல்காப்பியத்துக்குப் பனம்பாரனார் சிறப்புப் பாயிரம் பாடியுள்ளார். அதன் பிற்பகுதி வருமாறு:
நிலம் தரு திருவில்
பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின்
நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு
அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின்
எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின்
ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன்
எனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்தப் படிமையோனே
“நிலம் தரு திருவில் பாண்டியன் அவையில் அறத்தை உணர்ந்த, உணர்த்தும் நாவினையுடைய, நான்கு மறைகளையும் தெரிந்த அதங்கோட்டு ஆசான் தலைமையில் புலவர் கூடிய பேரவையில், மயக்கமின்றித் தெளிவாகத் தான் உணர்ந்து, பிறர்க்கு எழுத்து முறையைக் காட்டிக் கடல் சூழ்ந்த உலகத்து ஐந்திரம் என்னும் வடமொழி இலக்கண நூல் செய்திகளையும் கற்று தொல்காப்பியன் எனத் தன் பெயரை அமைத்துக் கொண்டு இந்நூலால் பல சிறப்புகளைப் பெற்ற தூயோன்” என்று முனைவர் ச.வே.சுப்பிரமணியன் இந்த வரிகளுக்குத் தெளிவுரை எழுதியிருக்கிறார்.
நான்மறை:
சிறப்புப் பாயிரத்தில் உள்ள நான்மறை என்ற சொல் சமஸ்கிருத மொழி நான்கு வேதங்களையே குறிக்கும். “நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையின் நான்மறை என்றார். அவை தைத்திரியம், பொடிகம், தலவதாரம், சாமவேதம் ஆகும். இனி ரிக், யஜுர் சாமவேதமும் அதர்வணமும் என்பாரும் உளர். அது பொருந்தாது.
இவர் இந்நூல் செய்த பின்னர் வேத வியாசர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாக இவற்றைச் செய்தார் ஆகலின்” என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இதற்கு விசேட உரை எழுதியுள்ளார்.
வியாசர் காலத்துக்கு முன்பே தைத்திரியம் ஆதியாகிய நான்கு வேதங்கள் இருந்தன என்பதும், அவற்றை இக்காலத்திற்கு ஏற்பத் தகுதியாக வியாசர் ரிக் ஆதியாகிய நான்மறைகளாக வகுத்தனர் என்பதும் நச்சினார்க்கினியரின் விசேட உரையாகப் பெறப்படுகின்றன.
நான்கு வேதங்களையும் நன்கு அறிந்த அதங்கோட்டு ஆசான் தலைமையில் தொல்காப்பியத்தின் அரங்கேற்றம் நிகழ்ந்தது. எனவே வேதங்களுக்கு முந்தைய நூல் அன்று தொல்காப்பியம் என்பது தெளிவு.
ஐந்திரம்:
ஐந்திரம் என்பது சமஸ்கிருத மொழியில் எழுந்துள்ள இலக்கண நூல் என்று முனைவர் ச.வே. சுப்பிரமணியன் தெளிவுரை எழுதியுள்ளார்.
ரிக், யஜுர், சாம, அதர்வனம் ஆகிய வேதங்களுக்கு மிகவும் பின்னரே ஐந்திரம் எழுதப்பட்டது என்பதை மொழியியல் அறிஞர்கள் அறிவார்கள். ஆக சிறப்புப் பாயிரத்தின் ஐந்திரம் என்ற சொல்லும் முனைவர் நெடுஞ்செழியன் கூற்றுரைக்கு ஆதரவாக இல்லை.
ஐந்திரம் என்ற சமஸ்கிருத இலக்கண நூல் செய்திகளையும் கற்றறிந்தவர் தொல்காப்பியர் என்ற குறிப்பையும் அருள் கூர்ந்து நுட்பமாகக் கவனிக்க வேண்டும்.
அந்தணர் மறைத்தே:
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் பிறப்பியல் 20 ஆம் சூத்திரம் வருமாறு:
எல்லா எழுத்தும்
வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி
உறழ்ச்சி வாரத்து
அகத்து எழுவளி இசை
அரில்தப நாடி
அளபிற்கோடல் அந்தணர் மறைத்தே;
அஃது இவண் நுவலாது எழுந்து
புறத்து இசைக்கும்
மெய்தெரி வளியிசை அளபு
நுவன்றிசினே
“(உயிர், மெய், உயிர்மெய் முதலிய) எல்லா எழுத்துக்களும் (பிறக்கும் முறையை முன்னைய நூலாசிரியர்கள்) விளக்கியிருப்பதனால் மேற்கூறிய (தலை, மிடறு, நெஞ்சு, பல், இதழ் நாக்கு, மூக்கு, அண்ணம் என்னும்) எட்டு இடங்களிலும் உந்தியில் இருந்து எழுகின்ற உதானன் என்னும் காற்றினால் பிறக்கின்றன. (பரை, பைசந்தி, மத்திமை என்னும்) ஓசைகளின் பிறப்புடன் எழுத்துகளின் பிறப்பைச் சொல்லுமிடத்து (மேற்கூறிய எட்டு உறுப்புகளும் உதானன் என்னும் காற்றும்) வெவ்வேறாக மாறுபட்டு அமையும் தன்மையால், மூலாதாரத்தில் எழுகின்ற காற்றின் ஓசையைக் குற்றமற ஆராய்ந்து, எடுத்தல், படுத்தல், நலிதல், விலங்கல் என்னும் தன்மை உடையனவாகக் கொள்ளும் முறைமை, பார்ப்பனர்களின் வேதங்களில் சொல்லப்பட்ட முறைமை உடையதே ஆகும்.
அவ்வியல்பினை இங்கு கூறாமல், நெஞ்சத் தானத்தில் இருந்து எழுந்து வெளியே நம் காதுகளில் கேட்கும்படி ஒலித்துப் பொருளை உணர்த்துகின்ற வைகரி ஓசையினது (எழுத்தினது) தன்மை அல்லது மாத்திரையினை மட்டுமே கூறுகின்றன.” தமிழ்ப் பேரறிஞர் ந.ரா. முருகவேள் இவ்வாறு பதப்பொருள் கூறியுள்ளார். இந்தச் சூத்திரத்திற்கு வேதங்களின் தொன்மையையும், அவற்றால் விளக்கப்பட்ட ஓசைகளின் நுட்பங்களையும் தொல்காப்பியர் நன்கு அறிந்திருந்தார்.
அவர் இந்தச் சூத்திரத்தில் அகத்தெழு வளியிசை நன்று, புறத்திசை மெய்தெரி வளியிசை நன்று என உடம்பிலிருந்து காற்று வெளிப்பட்டு வருவதை இரண்டாக வகுத்தார். அகத்தெழு வளியிசை அந்தணர் வேதங்களில் உள்ளது என்றார். அதாவது, உந்தியினின்றும், மூலாதாரத்தினின்றும் எழுவது யாதோ அது அந்தணர் மறைத்தே என்றார்.
தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் இருபதாம் சூத்திரம் “அறவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” என்ற முதல் வரியுடன் தொடங்குகிறது.
“ஓதல் ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற ஆறு திறனாகிய அந்தணர் பக்கமும்” என்று இந்த வரிக்கு முனைவர் ச.வே. சுப்பிரமணியன் தெளிவுரை எழுதியுள்ளார்.
ஓதல் - நான்கு வேதங்களையும் ஒதிக் கற்றல்.
ஓதுவித்தல் - பிறருக்கு வேதங்களை ஓதிக் கற்பித்தல்.
வேட்டல் - யாகங்களைச் செய்தல்.
வேட்பித்தல் - பிறர் யாகங்களைச் செய்யுமாறு செய்தல்.
(யாகங்களைப் பிறருக்காகச் செய்தல் என்றும் ஆம்).
ஈதல் - தம்மிடம் உள்ள பொருளைப் பிறருக்குத் தருதல், ஏற்றல் - பிறர் தரும் பொருளை ஏற்றுக்கொள்ளுதல்.
வேதங்களில் விதித்துள்ள வண்ணம் இந்த ஆறு செயல்களையும் தொல்காப்பியர் காலத்துத் தமிழகப் பார்ப்பனர்கள் செய்தார்கள். இதனாலேயே தொல்காப்பியர் இங்கு பதிவு செய்கிறார்.
ஓத்து:
தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணை இயல் 31 வது சூத்திரம் “உயர்ந்தோர்க்குரிய ஓத்தினான” என்பது ஆகும். வேதங்கள் உயர்ந்தோர்க்கு உரியவை என்பது இந்தச் சூத்திரத்தின் பொருள். பொருளதிகாரம் செய்யுளியலில் 169 வது சூத்திரம் வருமாறு.
நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு
ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது
ஒத்து என மொழிப உயர்மொழிப்புலவர்
“ஓர் இனத்தைச் சார்ந்த மணிகளுள், தரத்தால் ஒத்த மணிகளை வரிசைபெற அமைத்துக் கோர்த்தல் போல ஓர் இயலைச் சார்ந்த பொருட்களை ஒருவழி அமைத்து வெளிப்படுத்துபவை வேதங்கள்” என்பது இந்தச் சூத்திரத்தின் பொருள். ஓத்து என்ற சொல் வேதங்களைக் குறிக்கும். பண்டைய தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் இந்தச் சொல், இந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேதங்கள் எழுதப்பட்டவை அல்ல. அவை பரம்பரை பரம்பரையாக ஓதப்பட்டு வந்துள்ளன. எனவே அவை ஓத்து என்று குறிப்பிடப்படுகின்றன.
கீழ்க்கணக்கு நூல்கள்:
“அந்தணர் ஓத்து உடைமை ஆற்ற மிக இனிதே” என்று “இனியவை நாற்பது” நூலின் 7 வது பாடல் தெரிவிக்கிறது. பார்ப்பனர்கள் வேதங்களை மறவாது இருத்தல் மிக இனிது என்பது பொருள். “இன்னா ஓத்திலாப் பார்ப்பான் உரை” என்று இன்னா நாற்பது நூலின் 21 வது பாடல் குறிப்பிடுகிறது. “வேதங்களை ஓதாத பார்ப்பனன் சொல் பயனற்றது” என்பது பொருள்.
“கூத்தும் விழவும் மணமும் கொலைக் களமும் ஆர்த்த முனையுற்றும் வேறிடத்தும் ஓத்தும் ஒழுக்கும் உடையவர் செல்லாரே, செல்லின் இழுக்கும் இழவும் தரும்” இது “ஏலாதி” என்ற நூலில் 62 வது பாடல். இந்தப் பாடலிலும் ஓத்து என்ற சொல் வேதங்களைக் குறிக்கிறது.
“மறப்பினும் ஓத்துக் கொளலாகும். பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்” என்பது திருக்குறள் “பார்ப்பனன் ஒருவன் தான் கற்ற வேதங்களை மறந்தான் ஆயினும், அவற்றை அவன் மீண்டும் ஓதிக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அவன் ஒழுக்கம் கெட்டால் இழிந்தவன் ஆகிவிடுவான்” என்பது பொருள். இனியவை நாற்பது, இன்னா நாற்பது, ஏலாதி, திருக்குறள் ஆகிய இவை அனைத்தும் சங்கம் மருவிய கால பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள். ஆக ஓத்து என்ற சொல் வேதங்களையே குறிக்கிறது என்பது தெளிவு. தொல்காப்பியம் வேதங்களுக்கு முந்தைய நூல் என்ற முனைவர் நெடுஞ்செழியனின் கூற்றுரை பிழையானது - ஏற்கத்தக்கது அன்று - என்று தொல்காப்பியத்தின் அகச்சான்றுகள் உறுதியாகவே சுட்டுகின்றன.
கே.சி. லட்சுமிநாராயணன்-கூராயுதம்
சிறப்புப் பாயிரம்:
தொல்காப்பியத்துக்குப் பனம்பாரனார் சிறப்புப் பாயிரம் பாடியுள்ளார். அதன் பிற்பகுதி வருமாறு:
நிலம் தரு திருவில்
பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின்
நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு
அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின்
எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின்
ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன்
எனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்தப் படிமையோனே
“நிலம் தரு திருவில் பாண்டியன் அவையில் அறத்தை உணர்ந்த, உணர்த்தும் நாவினையுடைய, நான்கு மறைகளையும் தெரிந்த அதங்கோட்டு ஆசான் தலைமையில் புலவர் கூடிய பேரவையில், மயக்கமின்றித் தெளிவாகத் தான் உணர்ந்து, பிறர்க்கு எழுத்து முறையைக் காட்டிக் கடல் சூழ்ந்த உலகத்து ஐந்திரம் என்னும் வடமொழி இலக்கண நூல் செய்திகளையும் கற்று தொல்காப்பியன் எனத் தன் பெயரை அமைத்துக் கொண்டு இந்நூலால் பல சிறப்புகளைப் பெற்ற தூயோன்” என்று முனைவர் ச.வே.சுப்பிரமணியன் இந்த வரிகளுக்குத் தெளிவுரை எழுதியிருக்கிறார்.
நான்மறை:
சிறப்புப் பாயிரத்தில் உள்ள நான்மறை என்ற சொல் சமஸ்கிருத மொழி நான்கு வேதங்களையே குறிக்கும். “நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையின் நான்மறை என்றார். அவை தைத்திரியம், பொடிகம், தலவதாரம், சாமவேதம் ஆகும். இனி ரிக், யஜுர் சாமவேதமும் அதர்வணமும் என்பாரும் உளர். அது பொருந்தாது.
இவர் இந்நூல் செய்த பின்னர் வேத வியாசர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாக இவற்றைச் செய்தார் ஆகலின்” என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இதற்கு விசேட உரை எழுதியுள்ளார்.
வியாசர் காலத்துக்கு முன்பே தைத்திரியம் ஆதியாகிய நான்கு வேதங்கள் இருந்தன என்பதும், அவற்றை இக்காலத்திற்கு ஏற்பத் தகுதியாக வியாசர் ரிக் ஆதியாகிய நான்மறைகளாக வகுத்தனர் என்பதும் நச்சினார்க்கினியரின் விசேட உரையாகப் பெறப்படுகின்றன.
நான்கு வேதங்களையும் நன்கு அறிந்த அதங்கோட்டு ஆசான் தலைமையில் தொல்காப்பியத்தின் அரங்கேற்றம் நிகழ்ந்தது. எனவே வேதங்களுக்கு முந்தைய நூல் அன்று தொல்காப்பியம் என்பது தெளிவு.
ஐந்திரம்:
ஐந்திரம் என்பது சமஸ்கிருத மொழியில் எழுந்துள்ள இலக்கண நூல் என்று முனைவர் ச.வே. சுப்பிரமணியன் தெளிவுரை எழுதியுள்ளார்.
ரிக், யஜுர், சாம, அதர்வனம் ஆகிய வேதங்களுக்கு மிகவும் பின்னரே ஐந்திரம் எழுதப்பட்டது என்பதை மொழியியல் அறிஞர்கள் அறிவார்கள். ஆக சிறப்புப் பாயிரத்தின் ஐந்திரம் என்ற சொல்லும் முனைவர் நெடுஞ்செழியன் கூற்றுரைக்கு ஆதரவாக இல்லை.
ஐந்திரம் என்ற சமஸ்கிருத இலக்கண நூல் செய்திகளையும் கற்றறிந்தவர் தொல்காப்பியர் என்ற குறிப்பையும் அருள் கூர்ந்து நுட்பமாகக் கவனிக்க வேண்டும்.
அந்தணர் மறைத்தே:
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் பிறப்பியல் 20 ஆம் சூத்திரம் வருமாறு:
எல்லா எழுத்தும்
வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி
உறழ்ச்சி வாரத்து
அகத்து எழுவளி இசை
அரில்தப நாடி
அளபிற்கோடல் அந்தணர் மறைத்தே;
அஃது இவண் நுவலாது எழுந்து
புறத்து இசைக்கும்
மெய்தெரி வளியிசை அளபு
நுவன்றிசினே
“(உயிர், மெய், உயிர்மெய் முதலிய) எல்லா எழுத்துக்களும் (பிறக்கும் முறையை முன்னைய நூலாசிரியர்கள்) விளக்கியிருப்பதனால் மேற்கூறிய (தலை, மிடறு, நெஞ்சு, பல், இதழ் நாக்கு, மூக்கு, அண்ணம் என்னும்) எட்டு இடங்களிலும் உந்தியில் இருந்து எழுகின்ற உதானன் என்னும் காற்றினால் பிறக்கின்றன. (பரை, பைசந்தி, மத்திமை என்னும்) ஓசைகளின் பிறப்புடன் எழுத்துகளின் பிறப்பைச் சொல்லுமிடத்து (மேற்கூறிய எட்டு உறுப்புகளும் உதானன் என்னும் காற்றும்) வெவ்வேறாக மாறுபட்டு அமையும் தன்மையால், மூலாதாரத்தில் எழுகின்ற காற்றின் ஓசையைக் குற்றமற ஆராய்ந்து, எடுத்தல், படுத்தல், நலிதல், விலங்கல் என்னும் தன்மை உடையனவாகக் கொள்ளும் முறைமை, பார்ப்பனர்களின் வேதங்களில் சொல்லப்பட்ட முறைமை உடையதே ஆகும்.
அவ்வியல்பினை இங்கு கூறாமல், நெஞ்சத் தானத்தில் இருந்து எழுந்து வெளியே நம் காதுகளில் கேட்கும்படி ஒலித்துப் பொருளை உணர்த்துகின்ற வைகரி ஓசையினது (எழுத்தினது) தன்மை அல்லது மாத்திரையினை மட்டுமே கூறுகின்றன.” தமிழ்ப் பேரறிஞர் ந.ரா. முருகவேள் இவ்வாறு பதப்பொருள் கூறியுள்ளார். இந்தச் சூத்திரத்திற்கு வேதங்களின் தொன்மையையும், அவற்றால் விளக்கப்பட்ட ஓசைகளின் நுட்பங்களையும் தொல்காப்பியர் நன்கு அறிந்திருந்தார்.
அவர் இந்தச் சூத்திரத்தில் அகத்தெழு வளியிசை நன்று, புறத்திசை மெய்தெரி வளியிசை நன்று என உடம்பிலிருந்து காற்று வெளிப்பட்டு வருவதை இரண்டாக வகுத்தார். அகத்தெழு வளியிசை அந்தணர் வேதங்களில் உள்ளது என்றார். அதாவது, உந்தியினின்றும், மூலாதாரத்தினின்றும் எழுவது யாதோ அது அந்தணர் மறைத்தே என்றார்.
தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் இருபதாம் சூத்திரம் “அறவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” என்ற முதல் வரியுடன் தொடங்குகிறது.
“ஓதல் ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற ஆறு திறனாகிய அந்தணர் பக்கமும்” என்று இந்த வரிக்கு முனைவர் ச.வே. சுப்பிரமணியன் தெளிவுரை எழுதியுள்ளார்.
ஓதல் - நான்கு வேதங்களையும் ஒதிக் கற்றல்.
ஓதுவித்தல் - பிறருக்கு வேதங்களை ஓதிக் கற்பித்தல்.
வேட்டல் - யாகங்களைச் செய்தல்.
வேட்பித்தல் - பிறர் யாகங்களைச் செய்யுமாறு செய்தல்.
(யாகங்களைப் பிறருக்காகச் செய்தல் என்றும் ஆம்).
ஈதல் - தம்மிடம் உள்ள பொருளைப் பிறருக்குத் தருதல், ஏற்றல் - பிறர் தரும் பொருளை ஏற்றுக்கொள்ளுதல்.
வேதங்களில் விதித்துள்ள வண்ணம் இந்த ஆறு செயல்களையும் தொல்காப்பியர் காலத்துத் தமிழகப் பார்ப்பனர்கள் செய்தார்கள். இதனாலேயே தொல்காப்பியர் இங்கு பதிவு செய்கிறார்.
ஓத்து:
தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணை இயல் 31 வது சூத்திரம் “உயர்ந்தோர்க்குரிய ஓத்தினான” என்பது ஆகும். வேதங்கள் உயர்ந்தோர்க்கு உரியவை என்பது இந்தச் சூத்திரத்தின் பொருள். பொருளதிகாரம் செய்யுளியலில் 169 வது சூத்திரம் வருமாறு.
நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு
ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது
ஒத்து என மொழிப உயர்மொழிப்புலவர்
“ஓர் இனத்தைச் சார்ந்த மணிகளுள், தரத்தால் ஒத்த மணிகளை வரிசைபெற அமைத்துக் கோர்த்தல் போல ஓர் இயலைச் சார்ந்த பொருட்களை ஒருவழி அமைத்து வெளிப்படுத்துபவை வேதங்கள்” என்பது இந்தச் சூத்திரத்தின் பொருள். ஓத்து என்ற சொல் வேதங்களைக் குறிக்கும். பண்டைய தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் இந்தச் சொல், இந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேதங்கள் எழுதப்பட்டவை அல்ல. அவை பரம்பரை பரம்பரையாக ஓதப்பட்டு வந்துள்ளன. எனவே அவை ஓத்து என்று குறிப்பிடப்படுகின்றன.
கீழ்க்கணக்கு நூல்கள்:
“அந்தணர் ஓத்து உடைமை ஆற்ற மிக இனிதே” என்று “இனியவை நாற்பது” நூலின் 7 வது பாடல் தெரிவிக்கிறது. பார்ப்பனர்கள் வேதங்களை மறவாது இருத்தல் மிக இனிது என்பது பொருள். “இன்னா ஓத்திலாப் பார்ப்பான் உரை” என்று இன்னா நாற்பது நூலின் 21 வது பாடல் குறிப்பிடுகிறது. “வேதங்களை ஓதாத பார்ப்பனன் சொல் பயனற்றது” என்பது பொருள்.
“கூத்தும் விழவும் மணமும் கொலைக் களமும் ஆர்த்த முனையுற்றும் வேறிடத்தும் ஓத்தும் ஒழுக்கும் உடையவர் செல்லாரே, செல்லின் இழுக்கும் இழவும் தரும்” இது “ஏலாதி” என்ற நூலில் 62 வது பாடல். இந்தப் பாடலிலும் ஓத்து என்ற சொல் வேதங்களைக் குறிக்கிறது.
“மறப்பினும் ஓத்துக் கொளலாகும். பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்” என்பது திருக்குறள் “பார்ப்பனன் ஒருவன் தான் கற்ற வேதங்களை மறந்தான் ஆயினும், அவற்றை அவன் மீண்டும் ஓதிக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அவன் ஒழுக்கம் கெட்டால் இழிந்தவன் ஆகிவிடுவான்” என்பது பொருள். இனியவை நாற்பது, இன்னா நாற்பது, ஏலாதி, திருக்குறள் ஆகிய இவை அனைத்தும் சங்கம் மருவிய கால பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள். ஆக ஓத்து என்ற சொல் வேதங்களையே குறிக்கிறது என்பது தெளிவு. தொல்காப்பியம் வேதங்களுக்கு முந்தைய நூல் என்ற முனைவர் நெடுஞ்செழியனின் கூற்றுரை பிழையானது - ஏற்கத்தக்கது அன்று - என்று தொல்காப்பியத்தின் அகச்சான்றுகள் உறுதியாகவே சுட்டுகின்றன.
கே.சி. லட்சுமிநாராயணன்-கூராயுதம்
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
[You must be registered and logged in to see this link.]சரவணன் wrote:பழைய செய்தியை இருந்தாலும் நலம் விசாரிப்பதில் தவறு ஒன்றும் இல்லையே!
நந்திதா அக்கா பற்றி உங்களுக்கு தெரியாது அதான் இப்படி சொல்லிட்டீங்க..
தவறுஇல்லை மகனே
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
உங்களுக்கு அவங்களை தெரியாதது தவறு இல்லைன்னு சொல்றீங்களோ?ஈகரைச்செல்வி wrote:சரவணன் wrote:பழைய செய்தியை இருந்தாலும் நலம் விசாரிப்பதில் தவறு ஒன்றும் இல்லையே!
நந்திதா அக்கா பற்றி உங்களுக்கு தெரியாது அதான் இப்படி சொல்லிட்டீங்க..
தவறுஇல்லை மகனே
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
சகோதரி நந்திதா அவர்களுக்கு , என்றும்
ஈகரையில் சிறப்பான தனியிடம் ஒன்றுண்டு .
அவரின் தமிழ் ஆளுமை சிறப்பு மிக்கது .
பதிவுகள் அறிவு பூர்வமானது .
அவர் உடல்நலம் அறிய ஆவலாக உள்ளேன் .
சிவா அவர்களுக்கு தெரிந்து இருக்கலாம் .
ரமணியன்
ஈகரையில் சிறப்பான தனியிடம் ஒன்றுண்டு .
அவரின் தமிழ் ஆளுமை சிறப்பு மிக்கது .
பதிவுகள் அறிவு பூர்வமானது .
அவர் உடல்நலம் அறிய ஆவலாக உள்ளேன் .
சிவா அவர்களுக்கு தெரிந்து இருக்கலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ரிக்வேத ஆரியர்கள் - கங்கைச் சமவெளியில் வேதநாகரீகம்
» காலத்துக்கு ஏத்த மாதிரி பட்டி மன்றம் …!
» பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள்
» 47% இந்தியர்கள் ஓய்வு காலத்துக்கு சேமிப்பதில்லை: ஹெச்எஸ்பிசி ஆய்வில் தகவல்
» காலத்துக்கு தகுந்த மாதிரி பேசி, ரியல் எஸ்டேட்காரங்க பிளாட் விக்கிறாங்கப்பா!
» காலத்துக்கு ஏத்த மாதிரி பட்டி மன்றம் …!
» பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள்
» 47% இந்தியர்கள் ஓய்வு காலத்துக்கு சேமிப்பதில்லை: ஹெச்எஸ்பிசி ஆய்வில் தகவல்
» காலத்துக்கு தகுந்த மாதிரி பேசி, ரியல் எஸ்டேட்காரங்க பிளாட் விக்கிறாங்கப்பா!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|