புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10 
68 Posts - 53%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10 
1 Post - 1%
Shivanya
ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10 
15 Posts - 3%
prajai
ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10 
9 Posts - 2%
jairam
ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10 
4 Posts - 1%
Rutu
ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 20 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 20 of 36 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 28 ... 36  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun May 25, 2014 6:16 pm

ஆன்மீகச் செய்திக் கவிதை 16.
வைகாசி 11

தேவகோட்டை ஶ்ரீரங்கநாதர் புறப்பாடு

தேவகோட்டை ரங்கநாதர்
(குறும்பா)

தேவகோட்டை ரங்கநாதப் பெருமாளே
காவலற்று நானேவோர் வெறுமாளே!
. ரங்கநாதன் சரணவிணை
. மங்கலமே மரணமிலை
ஆவிநானென் றறிந்திடவே அருள்வாயே! ... 1

நெடிதுயர்ந்த மாலவனின் கோலத்திலே
கடிதயர்ந்தே ஏகும்வினை காலத்திலே!
. மாதவனின் சேவனையில்
. ஏதுமிலை மேவினையே
படிதுயராய்ப் பற்றாது ஞாலத்திலே! ... 2

ஊர்வலத்தில் அச்சுதனின் தரிசனமே
நேர்வலத்தில் உய்க்குமவன் பரிசனமே ... [பரிசனம் = உறவு]
. பெருமாளின் நாமமதே
. வருநாளின் சேமமெனக்
கார்வலத்தின் மாரியவன் கரிசனமே. ... 3

--ரமணி, 25/05/2014, கலி.11/02/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon May 26, 2014 7:49 pm

பிரதோஷத் துதி: அம்மானைத் துதிக்க அம்மானை!

மகளிர்க் கிடமேனி மத்தகம் தந்தது
நகைப்புக் கிடமாமோ நஞ்சுண்டர்க் கம்மானை?
நகைப்புக் கிடமென்றே நஞ்சுண்டர்க் காகில்
இகலெதிர் கொள்வதே எங்ஙனம் அம்மானை?
இகத்தை யழித்தே யிகல்கொள்வர் அம்மானை! ... 1

குஞ்சரனைத் தந்து குமரனும் தந்தவர்
அஞ்சுமுகம் கொண்ட அனல்விழியர் அம்மானை!
அஞ்சுமுகம் கொண்ட அனல்விழியர் ஆமாகில்
அஞ்சுவரே அன்னார் அடியவர் அம்மானை?
அஞ்செழுத் துள்வரின் அச்சமில்லை அம்மானை! ... 2

பேயுடன் ஆடிடும் பித்தரெம் மீசர்
நாயுடன் சஞ்சரிக்கும் நாயகர் அம்மானை!
நாயுடன் சஞ்சரிக்கும் நாயகரை எங்ஙனம்
நாயன்மார் நண்ணியே நாடினர் அம்மானை?
ஆயெலாம் தீர்ப்பதால் அண்ணினர் அம்மானை! ... 3

எருதேறி ஆடிடும் ஈசரவர் எங்ஙன்
எருமையாம் என்மனம் ஏறுவர் அம்மானை?
எருமையில் ஏறும் எமன்வரு முன்னே
அருமையாம் உன்னுள் வருவதே அம்மானை!
ஒருமை யிருந்தால் உறும்திணம் அம்மானை! ... 4

அத்தன் பிடித்திட அத்தன் பிடித்தென்
சித்தம் பிடித்துநான் சீர்பெறுவேன் அம்மானை!
சித்தம் பிடித்துநீ சீர்பெறுவாய் ஆமாகில்
இத்தனை ஆட்டமும் ஏனடி அம்மானை?
குத்திநான் ஆடுதலோர் கூத்தன்றோ அம்மானை! ... 5

அன்னைக் கொருபிடி அத்தர்க் கொருபிடி
தன்னைப் பிடிக்கவே தாழ்சடையான் அம்மானை!
தன்னைப் பிடிக்கவே தாழ்சடையான் என்றாலே
என்னைப் பிடித்தவை ஏகுமோ அம்மானை?
முன்பன் பிடிக்கவரும் முத்தியே அம்மானை! ... 6

--ரமணி, 26/05/2014, கலி.12/02/5115

அனந்த் அவர்களின் அம்மானைக் கட்டுரை:
http://vsa-writes.blogspot.in/2012_12_01_archive.html

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon May 26, 2014 9:12 pm

ஆன்மீகச் செய்திக் கவிதை 17.
வைகாசி 12


ஶ்ரீ வைகுண்டம் ஶ்ரீ வைகுண்டபதி புறப்பாடு
கோவில்: http://temple.dinamalar.com/New.php?id=910

கள்ளபிரான் உள்ளம்வரின்...
(தரவு கொச்சகக் கலிப்பா)

கள்ளனுக்கும் அருள்செய்தே காப்புதந்த கள்ளபிரான்
வள்ளலென நல்லவர்க்கு வாரிவாரி வழங்குவரே
உள்ளுமனம் ஏதுமின்றி உளைவதென உலகீரே
தள்ளுநாளில் கொள்ளுவினை தள்ளுவதும் அவர்தானே! ... 1

மூலவராய் வைகுந்தர் உற்சவராய்க் கள்ளபிரான்
கோலமிரு வகையினராய்க் கோவிந்தன் தகவுறுவார்
ஆலயத்தில் ஊர்வலத்தில் அச்சுதனை நேர்காண
ஓலமிடும் உளமதுவே ஓசையற்ற அமைதியிலே. ... 2

வைகுந்தன் நாமமுற வையமெலாம் சேமமுறும்
வைகுந்தன் நாமமுற மனதினிலே ஏமமுறும்
வைகுந்தப் பெருமாளே மெய்யடியார்க் குருவாவார்
வைகுந்தன் தாள்விந்தம் ஆனந்தக் காபந்தே. ... 3

--ரமணி, 26/05/2014, கலி.12/02/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue May 27, 2014 6:44 pm

ஆன்மீகச் செய்திக் கவிதை 18.
வைகாசி 13

திருப்போரூர் ஶ்ரீ முருகப்பெருமான் அபிஷேகம்

கோவில்: http://temple.dinamalar.com/New.php?id=12

திருப்போரூர் முத்துக்குமரன் துதி
(எண்சீர் விருத்தம்: தேமா விளம் தேமா கூவிளம் அரையடி)

போரூர் உத்தம சீலன் வேலனைப்
. போற்றும் முன்னுறை யோகி ஐங்கரன்
தார மாயிரு தேவி கொண்டவன்
. ஆரத் துதித்தவன் சம்ம தத்துடன்
சூரன் வதைத்தவன் கோலம் கண்டிட
. சூழும் வினயவன் பாதம் கொண்டிட
ஆரும் அருள்தனில் அன்பும் சாந்தியும்
. சாறாய் ஊறியே உள்ளத் தோங்குமே. ... 1

வேலன் முழுக்கினைக் காணும் பேறுற
. வேண்டும் விழைவுகள் வாழ்வில் நேருற
ஆலம் கொண்டவன் மைந்தன் பார்வையில்
. ஆன்ம நலன்களே வாழ்வில் முன்னுறக்
காலன் வருகையில் அச்ச மின்றியே
. காலம் பொருளுடன் செல்லப் புண்ணிய
ஞாலம் மரித்தபின் ஏகித் துய்த்தபன்
. ஞானம் ஓர்தினம் கிட்டும் சென்மமே. ... 2

எண்ணெய்க் காப்பது எண்ணம் காக்குமே
. நீர பிடேகம் மூலம் காட்டுமே
வண்ண மற்றபால் மஞ்ச னந்தனில்
. வான வில்மன மாயை யேகுமே
வெண்ணீ றாலபி டேகம் கண்ணுற
. வேதன் வெள்ளொளி பேதம் தீர்க்குமே
மண்ணின் ஆசைகள் விட்டுப் போகவே
. வண்ணம் முத்தியி லக்கைக் கொள்ளுமே. ... 3

--ரமணி, 27/05/2014, கலி.13/02/5115

*****


கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Wed May 28, 2014 9:35 am

ரமணியின் கவிதைகள் - Page 20 3838410834 



கிருஷ்ணா
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed May 28, 2014 8:55 pm

ஆன்மீகச் செய்திக் கவிதை 19.
வைகாசி 14

திருவள்ளூர் ஶ்ரீ வீரராகவப் பெருமாள் புறப்பாடு

கோவில்: http://temple.dinamalar.com/New.php?id=127

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் துதி
(இன்னிசை வெண்பா)

அல்லல் கரைந்தபின் அச்சுதன் தீர்த்தத்தில்
வெல்லம் கரைத்தே வினைகடக்கும் பத்தரின்
உள்ளம் நிறைந்தே உவகை தரும்திரு
வள்ளூரின் வைத்தியன் தாள். ... 1

மால்மனம் நாடிட மாவே படையலாய்
மால்பதம் வைத்தபின் ஐயர் பசிதீர்த்த
சாலிஹோத்ர மாமுனி யார்க்கருளி மாதவன்
கால்நீட்டி ஒய்வுற்ற வூர். ... 2

எவ்வுள் கிடந்தானின் நீள்மேனி பத்தைந்தாய்
அவ்வணை யின்னுயரம் ஐந்தடி யாய்க்கோலம்
கண்டார் மனம்கனியக் காதல் பெருகவே
கொண்டானே மாலன் துயில். ... 3

வீரராக வப்பெருமாள் வீதிவலம் கண்டவர்
பேரெழிலில் பாவம் பெயர்ந்தேக உள்ளத்தில்
காரிருள் நீங்கக் கனியும் அமைதியில்
வேரினைப் போற்றிவாழ் வோம். ... 4

--ரமணி, 28/05/2014, கலி.14/02/5115

*****


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 29, 2014 12:50 pm

பக்தி சுவையுடன் கூடிய பாடல்கள்...
-
 ரமணியின் கவிதைகள் - Page 20 3838410834 ரமணியின் கவிதைகள் - Page 20 3838410834 
-


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu May 29, 2014 8:36 pm

ஆன்மீகச் செய்திக் கவிதை 20.
வைகாசி 15

மன்னார்குடி ஶ்ரீராஜகோபால ஸ்வாமி புறப்பாடு

கோவில்: http://temple.dinamalar.com/New.php?id=354

மன்னார்குடிக் கண்ணன் துதி
(கலிவிருத்தம்: மாங்கன்லி கூவிளம் கூவிளம் தேமா)

கணபதி வாழ்த்து:
நாமந்தனில் நெற்றிவி நாயக! கண்ணன்
நாமந்தனைப் பாவினில் நாடவே உன்றன்
சேமந்தரு பார்வையில் சேயவன் நானும்
ஏமந்தரும் சொற்களில் ஏடிடச் செய்வாய்!

கண்ணன் துதி:
மன்னார்குடிக் கண்ணனை மாயனைக் காணத்
தன்னால்வரும் அன்பிலே தாயெனும் உள்ளம்
முன்னால்வர மாதவன் முத்தியை வாழ்வில்
உன்னாமலே தந்தவன் உய்வருள் வானே. ... 1

கண்ணன்விளை யாடலின் காட்சியை உள்ளக்
கண்ணார்ந்திரு மாமுனி காணவே மாயை
வண்ணத்தினில் கோபனாய் வாசுவாய் வந்த
அண்ணல்கழல் நண்ணவே அல்வினை போமே. ... 2

முப்பத்திரு லீலையில் உற்சவம் ஒன்றில்
ஒப்பில்சிறு கண்ணனாய் ஊர்ந்தவன் தானும்
இப்பாலடி யாரெறி வெண்ணையைக் கொண்டு
சப்பாணியின் நாடகம் ஆடுவான் கண்ணன்! ... 3

ஆண்டாளவள் வேடமும் தாங்குவான் ஏதும்
வேண்டாரவர் உள்ளமும் ஏங்கிடச் செய்வான்
ஆண்டானவன் ஆண்டாளாய் ஆகியே வாழ்வில்
தூண்டாவிளக் காவனே தூயொளி தந்தே. ... 4

இடையன்தரும் காட்சியில் வேட்டியே பாகை
இடையில்சதங் கைவளை இத்துடன் சாவி
நடையில்வரும் நூபுர நர்த்தனம் ஆவின்
படைமேய்த்திடச் சாட்டைகொள் பாலகன் பூவே! ... 5

கண்னன்பதம் நண்ணவே காட்சியில் ஆன்ம
எண்ணம்வர வாழ்விலே ஏற்றமாம் வாக்கில்
உண்மைவர லட்சியம் உன்னதம் கொள்ளும்
திண்மைவர நேயமே தேட்டமா யாமே. ... 6

--ரமணி, 29/05/2014, கலி.15/02/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri May 30, 2014 7:15 pm

ஆன்மீகச் செய்திக் கவிதை 21.
வைகாசி 16


சிவகாசி ஶ்ரீவிஸ்வநாதர் உற்சவாரம்பம்
கோவில்: http://temple.dinamalar.com/New.php?id=1309

காசிநாதர் துதி
(குறும்பா)

விச்வநாதர் வைகாசி விழாக்கோலம்
உச்சிமதி சிவன்காசி யுலாக்கோலம்
. கொடியேற்றம் தேரோட்டம்
. அபிடேக நீரோட்டம்
இச்சையிலா வாழ்வுதரும் சிலாக்கோலம். ... 1

பாண்டியனும் சென்றனனே வடகாசி
தாண்டவனைத் தாபிக்கத் தென்காசி
. வானதியில் நீராட்ட
. ஆனிரையின் மேலேற்ற
ஆண்டகையோ மேவியது சிவகாசி! ... 2

காசிவிச்வ நாதனென்னும் பேருடனே
காசிவிசா லாட்சியன்னை யாருடனே
. சிவகாசி தங்கினனே
. பவரோகம் மங்கிடவே
ஆசிலானைப் போற்றிடுவோம் தாருடனே. ... 3

வான்வழியே காசிசென்று பண்டியனே
கோனருளால் வழிபட்டு வேண்டினனே
. இதனாலே திருவாளர்
. பதம்காண வருவாரே
வானூர்த்திச் செலவின்முன் வேண்டுவரே. ... 4

அத்தனைநாம் பத்துநாளும் தரிசித்தே
நித்தமும்நாம் சித்தமதில் வருவித்தே
. அக்கறையாய் வழிபடவே
. அக்கரைக்கு வழிவருமே
முத்தியருட் காப்புவினை எரிவித்தே. ... 5

--ரமணி, 29/05/2014, கலி.15/02/5115

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Jun 01, 2014 11:38 am

ஆன்மீகச் செய்திக் கவிதை 22.
வைகாசி 18

பத்ராச்சலம் ஶ்ரீராமபிரான் புறப்பாடு

கோவில் விவரம்:
http://ta.wikipedia.org/wiki/பத்திராசலம்_கோவில்

இராமரின் அருட்காப்பு

கணபதி துதி
சதுர்த்தி புனர்பூ சநட்சத் திருநாள்
சதுரனாம் சீதைக்கேள் சத்திய ராமனின்
பத்திராச லம்கோலம் பற்றிநான் பாடவே
அத்தன் மகனே அருள்.

இராமர் துதி
(எழுசீர் விருத்தம்: கூவிளம் கருவிளம் கூவிளம் கருவிளம்
. விளம் விளம் காய்)


பத்திரர்க் கருள்செயச் சங்கொலிச் செவியுற
. பத்தரின் எதிரிலே நாற்கரமாய்
பத்திரம் தனுசுடன் ஏந்திய இருகரம்
. அச்சுதன் திகிரிசங் கிருகையிலே
சத்திய அனையவள் சீதையோர் மடியிலே
. தம்பியாம் இலக்குவன் இன்னொன்றில்
நித்திய கதியினைத் தந்தவர் மகிழவே
. பத்திர மலையினில் மேவினனே.

[பத்திரம் = அம்பு; திகிரி = சக்கரம்; அனை = அன்னை]

போகல தமக்கையின் சொப்பனம் உறுத்தவள்
. புற்றினில் ஐயனைக் கண்டனளே
ராகவன் அடியவர் பக்தரா மதாசனும்
. அரசினர் வரிப்பணம் கையாண்டே
வாகுடன் எழுந்தவோர்க் கோவிலை அமைத்தவர்
. வரையிலாத் துயருறச் சிறைப்பட்டார்
ராகவன் இலக்குவன் மன்னனின் முஹர்களாம்
. ஆறுலட் சம்தொகை மீட்டனரே.

ராமனின் திருவிளை யாடலை உணர்ந்தமன் ... [மன் = மன்னன்]
. அத்தனை பணத்தையும் தாள்வைத்தே
ராமதா சரைவிடு வித்திடப் பொறுத்தவர்
. நாணயம் இரண்டினைக் கைக்கொளவே
ராகவன் சபையிலே இன்றுநாம் இரணிய
. நாணயம் இருப்பது காணுவமே
ராகவன் கருணையாம் சாகர மெனவர
. யாதொரு பேதமும் காணாதே!

தந்தைசொல் மிகுந்தொரு மந்திரம் எதுவெனத்
. தாயினும் சிறந்திலைக் கோவிலென
வந்தவர் உடன்பிறந் தோரினும் பெரியவன்
. அன்னவர் தந்தையாய்ப் பேணுதலும்
வந்தவோர் மனைவியின் இன்னொரு துணையிலை
. வந்துதாள் பற்றியர் நலன்காப்பே
எந்தவோர் தருமமும் இல்லையே இதனினும்
. என்றசொல் ராமனின் பேர்சொலுமே.

--ரமணி, 01/06/2014, கலி.18/02/5115

*****


Sponsored content

PostSponsored content



Page 20 of 36 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 28 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக