புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10 
1 Post - 1%
Kavithas
ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10 
1 Post - 1%
சிவா
ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10 
1 Post - 1%
bala_t
ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10 
1 Post - 1%
prajai
ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10 
297 Posts - 42%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10 
6 Posts - 1%
prajai
ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10 
4 Posts - 1%
manikavi
ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 33 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 33 of 36 Previous  1 ... 18 ... 32, 33, 34, 35, 36  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Sep 18, 2015 7:04 pm

பிள்ளையார் சதுர்த்தி துதி: வேரினைக் காணும் நாள்வரவே...
(குறும்பா)

வேழமுகன் உன்னழகைப் பாட
ஆழவுளம் வந்தருளி யாடு
. . தினைத்துணையே எறும்பாக
. . உனைக்கொளவே குறும்பாவில்
ஏழைநானும் படுவேனே பாடு! ... 1

எத்தனையோ உன்னுருவில் சின்னமே
அத்தனையும் அர்த்தமுடன் உன்னவே
. தந்தியுருக் களமாகும்
. சிந்தனையும் வளமாகும்
சித்தமெலாம் உன்நாமம் பின்னுமே. ... 2

எத்தனையோ உன்பிறப்பில் கதையுமே
அத்தனையும் அர்த்தமுடன் வதியுமே
. . தந்தையிடம் செற்றனையே
. . தந்திமுகம் பெற்றனையே
சித்தமெலாம் உன்நாமம் பதியுமே. ... 3

ஆனைமுகம் அன்புருவாய் ஆகுமே
தானெனவே எண்ணுவதும் போகுமே
. . அருகினிலே அருகுவினை
. . அருளொளியாய்ப் பெருகுமுனை
வானமுதல் என்றுவையம் காணுமே. ... 4

பாரதத்தின் பழமைவளம் மீள்வரவே
சாரதரின் நாதனுன்றன் தாள்தருவாய் ... ... [சாரதர் = பூதகணத்தார்]
. . ஊழலெலாம் வாழ்வறவே
. . சூழுவினை தாழ்வுறவே
வேரதனை யாம்காணும் நாள்வரவே! ... 5

--ரமணி, 17/09/2015, கலி.31/05/5116

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Oct 09, 2015 6:22 pm

'வல்லமை' மின்னிதழில் இன்று வெளியான பாடல் கீழே.
http://www.vallamai.com/?p=62749

01. அரசமர கணபதியே ஆறுதல்!
(குறும்பா)

அரசமரம் கீழமர்ந்த கணபதியே
தரிசுமனம் நின்றருளக் கணமிதுவே
. தென்காற்றின் அலையோட
. என்காற்றும் நிலையாக(க்)
கரிசனத்தின் காப்பருள்வாய் குணநிதியே. ... 1

எத்தனையோ உருவமுன்றன் கதையுமே
அத்தனையும் அர்த்தமுடன் வதியுமே
. ஓங்காரம் உள்ளமுற
. ரீங்காரப் பள்ளமறும்
சித்தமெலாம் உன்நாமம் பதியுமே. ... 2

ஏகதந்த இறைமகனாம் ஏரம்பன்
ஆகுவாக னத்திலருள் ஆரம்பம்
. முக்கண்ணன் நாமமெலாம்
. எக்கணமும் சேமமென
வேகுமன வேதனைகள் ஓரம்போம்! ... 3

சிந்தையிலே உன்னுருவைக் கொள்ளுவனே
வந்தவினை போனதெனத் தள்ளுவனே
. தும்பிக்கைக் காப்பினிலே
. நம்பிக்கை கூப்புவனே
வந்தனையில் வருவதெலாம் அள்ளுவனே. ... 4

என்னாயுள் எதுவென்றே ஆனாலும்
என்வாழ்வில் எதுவந்தே போனாலும்
. தந்திமுகன் வந்தனையில்
. சிந்தனையில் பந்தமறும்
என்நாவில் உன்பெயரே தேனாமே. ... 5

--ரமணி, 07/10/2015, கலி.20/06/5116

*****


avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri Oct 09, 2015 7:14 pm

அருமையான பதிவுகள்




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Oct 10, 2015 9:21 am

பிரதோஷத் துதி: மாலை நடந்தரும் மாதேவா!
(சந்தக் கலித்துறை: தானன தந்தன தானன தந்தன தானானா)

கம்பன் பாடல்: ஆழநெ டுந்திரை யாறுக டந்தவர் போவாரோ?

மாலைந டந்திடும் வேளைந டந்தரும் மாதேவா!
சோலைவ ளந்தனில் சூழுமி ளந்திரை நீயன்றோ!
சூலியி டம்வர மேவுமி ளம்பிறை தோய்சென்னி
தோலணி அந்திரன் மேலணி அங்கதம் தோள்மேலே! ... 1 ... [அந்திரன் = கடவுள்]

நந்திசி ரந்தனில் வந்துந டஞ்செயும் நல்லானே!
சிந்தையு ரம்பெற வந்தப ரம்பொருள் நீயன்றோ?
பந்தம றுந்திடும் விந்தைநி கழ்ந்திட வாராயோ?
வந்துவ ரந்தர வேண்டும னந்தனில் வாழாயோ? ... 2

ஆரணம் தொண்டையில் வானதி மண்டையில் ஆனந்தன்
பூரணன் பண்ணுறும் நீரினில் தண்ணுறும் பூசைதான்
ஊரினில் உன்னருள் ஊருணி யின்சுவை யாயேறும்
காரணன் மந்திரம் காப்பருள் சிந்தனை காலூன்றும்! ... 3

போதுக ழிந்திடும் மேனிய ழிந்திடும் பூஞ்சைதான்
போதும னந்தனில் பூரித மென்னுளம் பூவாதோ? ... ... [பூரிதம் = மிகுகளிப்பு]
வேதன னந்தனை வேள்விம னந்தனில் கொண்டேயென்
சேதம ழிந்திட வாதுவி ழுந்திடும் சேர்வென்றோ? ... 4

வாரியெ ழுந்திடும் வாசுகி நஞ்சுணி வான்மூலா!
மாரியெ ழுந்திடும் வானவ ளந்தரும் மாதேவா!
வேரிலெ ழுந்திடும் வேதம ளந்திடும் வீடேதான்
தேரவெ ழுந்திடும் சோதியை யென்னுளம் சேராதோ? ... 5

--ரமணி, 09/10/2015, கலி.22/06/5116

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Oct 12, 2015 8:54 pm

சித்தலப் பாக்கப் பொண்ணு!
(அறுசீர் விருத்தம்: விளம் மா விளம் மா விளம் காய்)

சித்தலப் பாக்கப் பொண்ணுதான்
. செவத்த மாமனப் பாக்கணும்னு
வெத்தலப் பாக்கு வாயுடன்
. வீட்டுப் பக்கமாப் போனாளாம்
முத்தலை வேலன் வாழ்விலே
. முழுசா எப்பவும் கொடுக்கலையே
பொத்தலு சேலைத் தலைப்பிலே
. புன்ன கையில மறைச்சாளே!

--ரமணி, 12/10/2015

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 14, 2015 6:18 pm

கேள்விகள்
(அறுசீர் விருத்தம்: தேமா மா காய் அரையடி)

என்னை எனக்குப் புரியலையே
. எண்ணம் எதுவும் சம்மதமாய்
முன்னர் இன்று நாளையென
. மூன்று பொழுதும் ஓடிடுமே
இன்னும் மூச்சில் பேச்செனவே
. இங்கே நானும் இருந்திடவே
பின்னர் ஓர்நாள் போனதுமே
. பேயென் றேதான் அலைவேனோ?

பேயென் றேதான் அலைந்தேநான்
. பித்தன் உன்னைக் காணுவனோ?
நீயென் னையாட் கொள்ளவென
. நீசன் நானும் மாறுவனோ?
சேயென் றேநீ கொண்டாலும்
. தேறல் இன்றித் தள்ளுவனோ?
தீயைக் கையில் ஏந்தும்நீ
. திண்மை ஞானம் தருவாயோ?

--ரமணி, 12/10/2015

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Oct 15, 2015 6:20 pm

தமிழும் வடமொழியும்
(தரவுக் கொச்சகக் கலிப்பா)

இடமுறையும் தமிழ்மொழியே யென்தாயின் மொழியாமே
வடமொழியே தந்தையென வலமுறையும் மொழியாமே
நடமாடும் ஈசனவன் நலந்தரவே அருள்மொழியாய்த்
திடமாக இவையிரண்டும் தேன்மொழியென் றுணர்வோமே!

--ரமணி, 12/10/2015

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Oct 16, 2015 9:53 am

அன்புடையீர், வணக்கம்.

இன்று வெள்ளிக்கிழமை வல்லமை மின்னிதழில் 'தெய்வ தரிசனம்' தொடரில் படைப்பு பற்றிய ரிக்வேத நாஸதீய சூக்தம்,10.129-இன் எளிய மொழிபெயர்ப்பாகக் குறும்பா வடிவில் நான் எழுதிய ஏழு பாடல்கள் வெளிவந்துள்ளன. பாடல்கள் கீழே. அன்பர்கள் படித்துக் கருத்துச் சொல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அன்புடன்,
ரமணி

*****

தெய்வ தரிசனம்:
02. பரம்பொருளும் படைப்பும்
(குறும்பா)

[ரிக்வேதம் பத்தாவது மண்டலத்தில் 129-ஆவது சூக்தமாக
உள்ளது ’நாஸதீய சூக்தம்’. இப்பாடல் அதன் எளிய மொழிபெயர்ப்பு.]

இல்லையென்றோ உள்ளதென்றொ ஏதுமிலை
தொல்லுலகம் தொடுவானம் போதுமிலை
. மூடுபனி கூடியதோ
. கூடெனவே மூடியதோ
வல்லிருளோ வெள்ளமதோ பேதமிலை! ... 1

மரணமென்றும் மோட்சமென்றும் இல்லாதே
இருள்தனியே பகல்தனியே செல்லாதே
. அதுவொன்றே மூச்சற்றே
. அதிர்ந்ததுவே பேச்சற்றே
உருவெமென வேறெதுவும் கொள்ளாதே! ... 2

இருளொன்றே இருளென்றே மூடியதே
உருவற்ற வெள்ளம்போல் கூடியதே
. ஒன்றெனவே ஓர்பொருளே
. தன்நிலையை ஓர்பொருளே
எரிதவத்தால் தன்னுள்ளே தேடியதே! ... 3

உள்ளியதில் ஓராசை எழுந்ததுவே
உள்ளத்தின் மூலவித்தாய் விழுந்ததுவே
. தன்னிதயம் ஆயுமுனி
. உண்மையென மாயையென
உள்மனத்தின் உணர்வினிலே இழிந்ததுவே! ... 4

கதிர்பலவாய் சூனியத்தில் விரிந்ததுவே
அதிர்வாற்றல் அடியெனவே இருந்திடவே
. சந்ததிகள் உருவாக
. விந்தொன்றே கருவாக
அதிவேகம் உச்சியிலே திரிந்திடவே! ... 5

யாரறிவார் எங்கிருந்து படைப்பிதுவே
யாருரைப்பர் இதுவென்ன புடைப்பெனவே
. கடவுளரும் தேவருமே
. படைத்தபினே மேவினரே
யாரறிவார் எங்கிருந்த உடைப்பிதுவே! ... 6

படைப்பிதனைப் படைத்ததுவே புரப்பதுவோ
படைப்பிதனைப் படைத்ததுவே புரந்திலையோ
. பரவான வெளியினிலே
. அரசாளும் ஒளியவனே
படைப்புண்மை அறிவானோ அறிந்திலையோ? ... 7

--ரமணி, 12/10/2015, கலி.25/06/5116

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Oct 18, 2015 7:54 pm

நகைச்சுவை வெண்பா: முழி பிதுங்கும் மொழிமாற்றம்!
(அளவியல் இன்னிசை வெண்பா)

சாஸ்திரம் என்பது சாத்திரம் ஆகுமே
ஆஸ்திகன் என்பவன் ஆத்திகன் ஆவனே
நாஸ்திகன் என்பவன் நாத்திகன் ஆவனே
வாஸ்து உருவமோ வாத்து? ... 1

வஸ்து எனும்சொலை வத்து வெனச்சொல
அஸ்த மனமது அத்த மனமாக
மஸ்து எனும்சொலே மத்து வெனச்சொல
அஸ்து எனிலது அத்து? ... 2

ஈஸ்வரன் என்பவர் ஈச்சுரன் ஆவதால்
சாஸ்வதம் என்பது சாச்சுதம் ஆகுமோ?
ஸ்வப்னம் எனும்பதம் சொப்பனம் ஆக
ஸ்வயம்பு உருவமோ சொம்பு? ... 3

--ரமணி, 12/10/2015

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Oct 20, 2015 8:26 pm

சமஸ்கிருத மூலத்தின் மெட்டுக்கேற்பச் சொற்களைத் தமிழ்ப்படுத்தி எழுதியது. பாடக்கூடியவர்கள் யூட்யூப் மூலத்தை வைத்துக்கொண்டு தமிழில் பாடிப்பார்க்கவும்.
(மீள்பதிவு)


ஶ்ரீ அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம்
(எழுசீர் விருத்தம்: விளம் விளம் விளம் விளம் விளம் விளம்/மா காய்)

முக்கூர் சீனிவாச வரதாச்சாரியார் இயற்றிய
சமஸ்கிருத தோத்திரத்தின் தமிழ் யாப்பு


இசை வடிவம்:
youtube.com/watch?v=M0VNJ6KT2XY

நல்மனம் போற்றிடும் இன்னெழில் மாதவி
. சந்திரன் சோதரி பொன்னொளியே
பன்முனி சூழ்ந்திடும் முத்திய ளித்திடும்
. நன்மொழி இன்மொழி மறையொளியே
இன்கம லத்தினில் வானவர் போற்றிடும்
. தேன்குணம் பெய்திடும் சாந்தியுரு
வென்றிடு வாய்மது சூதனன் காமுறு
. ஆதிலக்ஷ் மியென்றும் காத்தருள்வாய். ... 1

புன்மைகள் கலியினில் நீக்கிடும் பாவையே
. நன்மறை யுருவினள் வேதமயம்
வன்கடல் தோன்றிய மங்கள உருவமே
. மந்திரம் உறைபவள் மந்திரமாம்
இன்னருள் தருபவள் பங்கயம் உறைபவள்
. விண்ணவ ருன்கழல் பணிந்திடுவார்
வென்றிடு வாய்மது சூதனன் காமுறும்
. தான்யலக்ஷ் மியென்றும் காத்தருள்வாய். ... 2

வென்றிடு வோர்புகழ் வைணவி பார்கவி
. எந்தவோர் மந்திர உருவினளே
விண்ணவர் வழிபடும் விரைவினில் பலன்தரும்
. மிகுதரும் ஞானமும் நூல்போற்றும்
ஜன்மப யத்துடன் பாவமும் போக்கிடும்
. பற்றிலா ருன்தாள் பணிந்திடுவார்
வென்றிடு வாய்மது சூதனன் காமுறும்
. தைர்யலக்ஷ் மியென்றும் காத்தருள்வாய். ... 3

இருள்வழி மாற்றியே காப்பவள் காமினி
. கேட்டவ ரம்தரும் நூல்வடிவாம்
பரியுடன் கரித்தேர் காற்படை யாய்வரும்
. நாற்படை நாயகி பாற்கடலாள்
அரியுடன் அரனும் பிரம்மனும் வழிபடும்
. அழலினத் தீர்த்திடும் தாளுடையாள்
வெற்றியே நீமது சூதனன் காமுறும்
. ஶ்ரீகஜ லக்ஷ்மிநீ காத்தருள்வாய். ... 4

கருடனில் வலம்வரும் சக்கர மோகினி
. பற்றுகள் நீக்கிடும் ஞானவுரு
இறைகுண வாரியாம் நலனுளம் கொள்பவள்
. சுரங்களின் ஒலிகளின் நாயகியே
வரருடன் தானவர் துறவியர் மானவர் ... ... (வரர்=தேவர்கள்)
. யாவரும் வழிபடும் தாளுடையாள்
வெற்றியே நீமது சூதனன் காமுறும்
. சந்ததி லக்ஷ்மிநீ காத்தருள்வாய். ... 5

வனச முன்னாசனம் நற்கதி யளிப்பவள் ... ... (வனசம்=தாமரை)
. ஞானமும் மிகுதரும் கானவுரு
தினம்தினம் அர்ச்சனைக் குங்குமத் தூளணி
. எங்கணும் வாத்திய வழிபாடு
கனக தாராதுதி போற்றிட மகிழ்வுடன்
. சங்கரர்க் கருள்மழை பெய்தவளே
வென்றிடு வாய்மது சூதனன் காமுறும்
. விஜயலக்ஷ் மியென்றும் காத்தருள்வாய். ... 6

அண்டருன் தாள்படும் பாரதி பார்கவி ... ... (அண்டர்=தேவர்கள்)
. அயர்ச்சியை நீக்கிடும் ரத்னவொளி
மணிகளை யணிந்தவள் காதினில் குண்டலம்
. சாந்தியும் புன்னகை மிளிருமுகம்
ஒன்பது நிதிதரும் கலிமலம் மாய்த்திடும்
. உவந்திடும் வரம்தரும் கரமுடையாள்
வென்றிடு வாய்மது சூதனன் காமுறும்
. வித்யா லக்ஷ்மிநீ காத்தருள்வாய். ... 7

திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி
. பேரிகை யோசைநி றைந்தருள்வாய்
குமகும கும்கும கும்கும கும்கும
. சங்கொலி கேட்டிடத் திகழ்ந்திடுவாய்
வேதபு ராணயி திகாசமும் போற்றிட
. வேதநல் நெறியினைக் காட்டிடுவாய்
வென்றிடு வாய்மது சூதனன் காமுறும்
. ஶ்ரீதன லக்ஷ்மிநீ காத்தருள்வாய். ... 8

--ரமணி, 20/09/2013,  கலி.04/06/5114

மூலம் (தமிழ் உருவில்):
ammanpaattu.blogspot.in/2012/07/1.html

பொருள்:
devotionalonly.com/ashtalakhsmi-stotram-meaning-and-pdf/#chitika_close_button
www.sadagopan.org/index.php/categories/doc_details/641-sh107-ashtalakshmi-stotram

*****

Sponsored content

PostSponsored content



Page 33 of 36 Previous  1 ... 18 ... 32, 33, 34, 35, 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக