புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமணியின் கவிதைகள்
Page 34 of 36 •
Page 34 of 36 • 1 ... 18 ... 33, 34, 35, 36
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
இன்றைய வல்லமை இதழில்:
http://www.vallamai.com/?p=63404
தெய்வ தரிசனம்
04. பிரமனுக்கேன் ஆலயமில்லை?
(தரவு கொச்சகக் கலிப்பா)
[காஞ்சி மகாபெரியவர் உரையிலிருந்து திரட்டிய செய்திகள்]
நான்முகனாய் நாரணனின் நாபியிலே தோன்றியுமே
நான்முகமும் எப்போதும் நான்மறையை ஓதியுமே
வான்முதலாய் வைத்துலகும் மானிடரும் ஆக்கியுமே
ஏனோநான் முகனுக்கே எங்கணுமே கோவிலிலை! ... 1
படைப்பின்றேல் காப்பில்லை பண்ணியதை அழிப்பதில்லை
உடைத்தழிக்கும் பித்தனவன் உன்னதமாய் ஆலயத்தில்
நடைமுறையைக் காத்தருளும் நாரணனும் ஆலயத்தில்
படைப்புதரும் பிரமனுக்கோ பண்ணில்லை கோவிலிலை! ... 2
வீட்டினிலே வழிபாட்டில் விடையவனும் விட்டுணுவும்
பாட்டினிலே புகழ்ந்தேத்தப் பலதெய்வம் படமாக
நாட்டினிலே எல்லோரும் நாடுதெய்வ வழிபாட்டில்
ஏட்டினிலே செய்கையிலே இடமில்லை பிரமனுக்கே! ... 3
மூன்றுதேவர் பத்தினியும் முறையாக வழிபாட்டில்
ஊன்றிநிற்க உமையன்னை உள்ளத்தில் திருமகளாம்
தோன்றுஞானம் தந்திடவே தொழுதிடுவோம் நாமகளை
ஆன்றவனாம் அந்தணனாம் ஆரணனுக் கேதுமிலை! ... 4
பிரும்மமெனப் பரம்பொருளே பேர்பெற்றி ருந்தாலும்
பிரும்மவித்தை பேரெனவே பிரும்மஞானம் ஆனாலும்
பிரும்மானந் தம்நிலையாய் பிரும்மவித்தை யானாலும்
பிரமனுக்கோ கோவிலிலை பேர்சொல்லிப் போற்றவிலை! ... 5
ஆரணத்தின் ஒலியாலே அனைத்துலகும் உருவாக்கும்
ஆரணனாய்த் தந்தையென அனைத்துயிர்க்கும் வேராகிச்
சீரணவும் பிரமனுக்கோ சிறப்புவழி பாட்டிலையே!
காரணத்தைத் விளக்குவரே கருணைமிகு காஞ்சிமுனி. ... 6
[சீரணவும் = சீர் பொருந்திநிற்கும்]
பிறவியிதைத் தருகின்ற பிரமனுக்கா வழிபாடு?
பிறவியிதே ஈனமெனப் பேரின்ப நிலையிருக்க
பிறவியிதன் போக்கினையே பிரம்மலிபி தலையெழுத
பிறவியிதைத் தருகின்ற பிரமனெவண் வழிபடவே! ... 7
நம்பிறவிக் காரணமாய் நான்முகனெங் ஙனமாவான்?
நம்பிறவி அமைவதெலாம் நம்வினைகள் துய்ப்பதற்கே
நம்பிறவிப் போக்கொன்றே நம்தலையில் எழுதிவைக்கும்
அம்பாவான் பிரமனவன் அம்பெய்த வர்நாமே! ... 8
பாலனத்தைச் செய்பவராய்ப் பரந்தாமன் ஆனாலும்
சூலத்தாற் கொல்பவராய்ச் சொக்கனவர் ஆனாலும்
ஏலுவரே இருவருமே எதுவுமருள் தெய்வமென
கோலமிகு இந்தநிலை குரவனுக்கோ என்றுமிலை! ... 9
[பாலனம் = பாதுகாப்பு; ஏலுவரே = தகுதியாவரே; குரவன் = பிரமன்]
பாலனத்தைச் செய்பவளாய்ப் பாற்கடலாள் ஆனாலும்
சூலத்தாற் கொல்பவளாய்த் துர்க்கையவள் ஆனாலும்
ஏலுவரே இருவருமே எதுவுமருள் தெய்வமென
கோலமிகு இந்தநிலை குரவனுக்கோ என்றுமிலை! ... 10
பரம்பொருளால் ஆனாலும் பரம்பொருளய்த் தோன்றாத
பிரமனைமற் றிருவருடன் பேசுமுறை இல்லையென
உருவமேதும் ஆலயத்தின் உள்ளறையில் வைக்காமல்
கருவறைவி மானத்தில் காணவைத்த உருவெனவே! ... 11
மூவரிலே ஒருவரென முன்னிற்கும் பிரமன்பேர்
ஆவதெவண் என்பதனை ஆன்றமுனி சொன்னசெய்தி:
பூவுலகம் அண்டமெலாம் பொருந்திநிற்கும் பரம்பொருளே
மேவிவரும் லீலையென வேதாவைச் செய்ததுவே. ... 12
[வேதா = பிரமன்]
ஆடவர்பெண் சேர்க்கையிலே அவனியெலாம் செய்பிரம்மம்
தோடணியான் நாமகளைச் சோதரராய்ச் செய்ததுடன்
நீடுமாலும் அம்பாளும் நிலையினிலே சோதரராய்
நாடுகின்ற போகநிலை ஞானநிலை தருவதற்கே. ... 13
[தோடணியான் = காதில் தோடணிந்த சிவன்; நீடுமால் = நிலைத்திருக்கும் திருமால்]
உலகியலும் ஞானமுமே ஒன்றாகக் கலப்பதெனத்
தலைப்பட்ட பிரம்மமது தம்பதியாய்ச் சோதரர்க்கு
விலையொன்றைத் தருவதற்கே வேதாவை இலக்குமியை
நிலைபேற்றில் சோதரராய் நிற்பதெனச் செய்ததுவே. ... 14
அரன்-உமையாள் அரி-கமலை அயன்-வாணி எனமூன்றாய்
உருவான தம்பதியில் முதலிருவர் முழுமுதலாய்
இருந்திடவே பின்னிருவர் எழுஞானம் ஒன்றுமட்டும்
அருள்வதற்கே தெய்வமாக ஆலயத்தில் நின்றிலையே. ... 15
பிரமனவர் குருவாகப் பாற்கடலோன் பின்னின்றே
பிரம்மவித்தை ஞானமெனும் பேற்றினையே அருளுவதால்
உருவமென ஆலயத்தின் உள்ளில்லா பிரம்மதேவன்
குருவாக நாம்போற்றிக் கூடுதரும் பிறப்பறுப்போம். ... 16
--ரமணி, 29/10/2015, கலி.12/07/5116
குறிப்பு:
மேல்விவரம்:
தெய்வத்தின் குரல், பாகம் 5, பக். 187-230
*****
http://www.vallamai.com/?p=63404
தெய்வ தரிசனம்
04. பிரமனுக்கேன் ஆலயமில்லை?
(தரவு கொச்சகக் கலிப்பா)
[காஞ்சி மகாபெரியவர் உரையிலிருந்து திரட்டிய செய்திகள்]
நான்முகனாய் நாரணனின் நாபியிலே தோன்றியுமே
நான்முகமும் எப்போதும் நான்மறையை ஓதியுமே
வான்முதலாய் வைத்துலகும் மானிடரும் ஆக்கியுமே
ஏனோநான் முகனுக்கே எங்கணுமே கோவிலிலை! ... 1
படைப்பின்றேல் காப்பில்லை பண்ணியதை அழிப்பதில்லை
உடைத்தழிக்கும் பித்தனவன் உன்னதமாய் ஆலயத்தில்
நடைமுறையைக் காத்தருளும் நாரணனும் ஆலயத்தில்
படைப்புதரும் பிரமனுக்கோ பண்ணில்லை கோவிலிலை! ... 2
வீட்டினிலே வழிபாட்டில் விடையவனும் விட்டுணுவும்
பாட்டினிலே புகழ்ந்தேத்தப் பலதெய்வம் படமாக
நாட்டினிலே எல்லோரும் நாடுதெய்வ வழிபாட்டில்
ஏட்டினிலே செய்கையிலே இடமில்லை பிரமனுக்கே! ... 3
மூன்றுதேவர் பத்தினியும் முறையாக வழிபாட்டில்
ஊன்றிநிற்க உமையன்னை உள்ளத்தில் திருமகளாம்
தோன்றுஞானம் தந்திடவே தொழுதிடுவோம் நாமகளை
ஆன்றவனாம் அந்தணனாம் ஆரணனுக் கேதுமிலை! ... 4
பிரும்மமெனப் பரம்பொருளே பேர்பெற்றி ருந்தாலும்
பிரும்மவித்தை பேரெனவே பிரும்மஞானம் ஆனாலும்
பிரும்மானந் தம்நிலையாய் பிரும்மவித்தை யானாலும்
பிரமனுக்கோ கோவிலிலை பேர்சொல்லிப் போற்றவிலை! ... 5
ஆரணத்தின் ஒலியாலே அனைத்துலகும் உருவாக்கும்
ஆரணனாய்த் தந்தையென அனைத்துயிர்க்கும் வேராகிச்
சீரணவும் பிரமனுக்கோ சிறப்புவழி பாட்டிலையே!
காரணத்தைத் விளக்குவரே கருணைமிகு காஞ்சிமுனி. ... 6
[சீரணவும் = சீர் பொருந்திநிற்கும்]
பிறவியிதைத் தருகின்ற பிரமனுக்கா வழிபாடு?
பிறவியிதே ஈனமெனப் பேரின்ப நிலையிருக்க
பிறவியிதன் போக்கினையே பிரம்மலிபி தலையெழுத
பிறவியிதைத் தருகின்ற பிரமனெவண் வழிபடவே! ... 7
நம்பிறவிக் காரணமாய் நான்முகனெங் ஙனமாவான்?
நம்பிறவி அமைவதெலாம் நம்வினைகள் துய்ப்பதற்கே
நம்பிறவிப் போக்கொன்றே நம்தலையில் எழுதிவைக்கும்
அம்பாவான் பிரமனவன் அம்பெய்த வர்நாமே! ... 8
பாலனத்தைச் செய்பவராய்ப் பரந்தாமன் ஆனாலும்
சூலத்தாற் கொல்பவராய்ச் சொக்கனவர் ஆனாலும்
ஏலுவரே இருவருமே எதுவுமருள் தெய்வமென
கோலமிகு இந்தநிலை குரவனுக்கோ என்றுமிலை! ... 9
[பாலனம் = பாதுகாப்பு; ஏலுவரே = தகுதியாவரே; குரவன் = பிரமன்]
பாலனத்தைச் செய்பவளாய்ப் பாற்கடலாள் ஆனாலும்
சூலத்தாற் கொல்பவளாய்த் துர்க்கையவள் ஆனாலும்
ஏலுவரே இருவருமே எதுவுமருள் தெய்வமென
கோலமிகு இந்தநிலை குரவனுக்கோ என்றுமிலை! ... 10
பரம்பொருளால் ஆனாலும் பரம்பொருளய்த் தோன்றாத
பிரமனைமற் றிருவருடன் பேசுமுறை இல்லையென
உருவமேதும் ஆலயத்தின் உள்ளறையில் வைக்காமல்
கருவறைவி மானத்தில் காணவைத்த உருவெனவே! ... 11
மூவரிலே ஒருவரென முன்னிற்கும் பிரமன்பேர்
ஆவதெவண் என்பதனை ஆன்றமுனி சொன்னசெய்தி:
பூவுலகம் அண்டமெலாம் பொருந்திநிற்கும் பரம்பொருளே
மேவிவரும் லீலையென வேதாவைச் செய்ததுவே. ... 12
[வேதா = பிரமன்]
ஆடவர்பெண் சேர்க்கையிலே அவனியெலாம் செய்பிரம்மம்
தோடணியான் நாமகளைச் சோதரராய்ச் செய்ததுடன்
நீடுமாலும் அம்பாளும் நிலையினிலே சோதரராய்
நாடுகின்ற போகநிலை ஞானநிலை தருவதற்கே. ... 13
[தோடணியான் = காதில் தோடணிந்த சிவன்; நீடுமால் = நிலைத்திருக்கும் திருமால்]
உலகியலும் ஞானமுமே ஒன்றாகக் கலப்பதெனத்
தலைப்பட்ட பிரம்மமது தம்பதியாய்ச் சோதரர்க்கு
விலையொன்றைத் தருவதற்கே வேதாவை இலக்குமியை
நிலைபேற்றில் சோதரராய் நிற்பதெனச் செய்ததுவே. ... 14
அரன்-உமையாள் அரி-கமலை அயன்-வாணி எனமூன்றாய்
உருவான தம்பதியில் முதலிருவர் முழுமுதலாய்
இருந்திடவே பின்னிருவர் எழுஞானம் ஒன்றுமட்டும்
அருள்வதற்கே தெய்வமாக ஆலயத்தில் நின்றிலையே. ... 15
பிரமனவர் குருவாகப் பாற்கடலோன் பின்னின்றே
பிரம்மவித்தை ஞானமெனும் பேற்றினையே அருளுவதால்
உருவமென ஆலயத்தின் உள்ளில்லா பிரம்மதேவன்
குருவாக நாம்போற்றிக் கூடுதரும் பிறப்பறுப்போம். ... 16
--ரமணி, 29/10/2015, கலி.12/07/5116
குறிப்பு:
மேல்விவரம்:
தெய்வத்தின் குரல், பாகம் 5, பக். 187-230
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
தெய்வ தரிசனம்
05. கேடுநீக்கும் கேசவன்
(குறும்பா)
கேசியெனும் தானவனைக் கொன்றேநீர்
கேசவனாம் பேர்தன்னைக் கொண்டீரோ?
. குழலழகர் கூந்தலதே
. அழகெல்லாம் ஏந்துவதே
நேசமுடன் போற்றுவமே இன்றேநாம்!... 1
[தானவன் = அசுரன்]
சடைமுடியே ராகவனின் தலையினிலே
பிடரிமயிர் நரசிம்மம் கலையெனவே
. சிக்கமெலாம் மும்மூர்த்தி
. சக்தியென இம்மூர்த்தி
இடையூறு நீக்கும்தாள் தலையிதுவே!... 2
[சிக்கம் = உச்சி மயிர்]
கண்ணனுக்கோ வண்ணமயில் கேசந்தான்
எண்ணமெலாம் மாயவனின் நேசந்தான்
. காதலிப்பர் கோபியரே
. ஆதுரத்தில் பாபியரே
கண்ணன்மேல் நம்நெஞ்சில் பாசந்தான்!... 3
[ஆதுரம் = பரபரப்பு, வியாதி]
ககரமெனில் பிரமனவன் பேராமே
அகரமதோ விட்டுணுவின் பேராமே
. ஈசனுரு கொண்டவரும்
. நேசமுடன் ஒன்றுவரே
பகவனிவர் பரம்பொருளாம் சீராமே!... 4
தண்ணுலவும் கேசமெனும் கிரணமிதே
மண்டலத்தில் உள்ளுறையும் அருணமிதே
. கொண்டிடிவார் அவதாரம்
. விண்டிடுவார் பவரோகம்
கொண்டல்வண் ணன்போற்றத் தருணமிதே!... 5
கேசவனே கேடுகளை நீக்குபவர்
கேசவனே கேசரியாய்த் தாக்குபவர்
. பண்ணுறுமே பூவுறுமே
. கண்நிறுத்த நாவறுமே
கேசவனின் கேசம்தாள் நோக்குவமே!... 6
--ரமணி, 05/11/2015, கலி.19/07/5116
*****
05. கேடுநீக்கும் கேசவன்
(குறும்பா)
கேசியெனும் தானவனைக் கொன்றேநீர்
கேசவனாம் பேர்தன்னைக் கொண்டீரோ?
. குழலழகர் கூந்தலதே
. அழகெல்லாம் ஏந்துவதே
நேசமுடன் போற்றுவமே இன்றேநாம்!... 1
[தானவன் = அசுரன்]
சடைமுடியே ராகவனின் தலையினிலே
பிடரிமயிர் நரசிம்மம் கலையெனவே
. சிக்கமெலாம் மும்மூர்த்தி
. சக்தியென இம்மூர்த்தி
இடையூறு நீக்கும்தாள் தலையிதுவே!... 2
[சிக்கம் = உச்சி மயிர்]
கண்ணனுக்கோ வண்ணமயில் கேசந்தான்
எண்ணமெலாம் மாயவனின் நேசந்தான்
. காதலிப்பர் கோபியரே
. ஆதுரத்தில் பாபியரே
கண்ணன்மேல் நம்நெஞ்சில் பாசந்தான்!... 3
[ஆதுரம் = பரபரப்பு, வியாதி]
ககரமெனில் பிரமனவன் பேராமே
அகரமதோ விட்டுணுவின் பேராமே
. ஈசனுரு கொண்டவரும்
. நேசமுடன் ஒன்றுவரே
பகவனிவர் பரம்பொருளாம் சீராமே!... 4
தண்ணுலவும் கேசமெனும் கிரணமிதே
மண்டலத்தில் உள்ளுறையும் அருணமிதே
. கொண்டிடிவார் அவதாரம்
. விண்டிடுவார் பவரோகம்
கொண்டல்வண் ணன்போற்றத் தருணமிதே!... 5
கேசவனே கேடுகளை நீக்குபவர்
கேசவனே கேசரியாய்த் தாக்குபவர்
. பண்ணுறுமே பூவுறுமே
. கண்நிறுத்த நாவறுமே
கேசவனின் கேசம்தாள் நோக்குவமே!... 6
--ரமணி, 05/11/2015, கலி.19/07/5116
*****
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1174862ரமணி wrote:தெய்வ தரிசனம்
கேசவனே கேடுகளை நீக்குபவர்
கேசவனே கேசரியாய்த் தாக்குபவர்
. பண்ணுறுமே பூவுறுமே
. கண்நிறுத்த நாவறுமே
கேசவனின் கேசம்தாள் நோக்குவமே!... 6
--ரமணி, 05/11/2015, கலி.19/07/5116
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
தெய்வ தரிசனம்
06. நாராயணா என்னும் நாமம்
(குறும்பா)
(வல்லமை மின்னிதழ் 13/11/2015)
நாராய ணாவென்னும் பேரினிலே
வேராக உள்ளிருக்கும் சீரினிலே
. ஏறிநிற்கும் பொருளெல்லாம்
. ஊறிநிற்கும் அருளெல்லாம்
ஆராயப் புகுவோமிப் பாவினிலே. ... 1
நரவென்னும் சொற்பொருளாய் ஆன்மாவாம்
நரத்தினின்று வருவதெலாம் நாராவாம்
. அயனமெனில் இருப்பிடமாம்
. வியனுலகின் பிறப்பிடமாம்
உருவத்தின் உள்ளீடாய் நாரணனாம். ... 2
நரம்தந்த வெளியீடே வான்வெளியாம்
விரிகாய வெளியீடாய்த் தான்வளியாம்
. காற்றதுவே தீயாகி
. நீராகி நிலமாகும்
நரம்விளைத்த பேரதுவே நாராவாம். ... 3
நாரமதே நாரணனின் உறைபொருளாம்
காரணோத கம்சொல்லும் மறைபொருளாம்
. அஞ்சுபூதம் இயல்தனியே
. அப்புவெனும் பெயரிலினிலே
பேரணவும் படைப்பாகும் இறைபொருளாம். ... 4
[பேர்-அணவும் = பெயர் பொருந்தும்]
உயிருள்ள உருவுள்ளே நாரணனே
உயிரற்ற உருவுள்ளே நாரணனே
. உயிருள்ளதோ இல்லாததோ
. பெயருள்ளதோ இல்லாததோ
பெயரற்ற உள்ளமைதி நாரணனே. ... 5
நீராடும் போதினிலே நாமமென
நாராய ணன்நாமம் சேமமென
. எட்டெழுத்து மந்திரமே
. கட்டுமனம் தந்திடுமே
வேரோடும் செய்கையெலாம் ஏமமென. ... 6
[ஏமம் = களிப்பு, இன்பம்]
நாரணனின் நினைவுவரும் இறுதிமூச்சே
வேரறுக்கும் பிறப்பென்றே உறுதியாச்சே
. கருமமுறும் சோதனையோ
. கருமமறு சாதனையோ
சீரிதுவே உயிரொன்றின் அறுதியாச்சே. ... 7
ஓம்நமோ நாராய ணாயவென்றே
போம்வினைப் பாராய ணமாமென்றே
. எட்டெழுத்து மந்திரமே
. உட்டுளையாய் வந்துறினே
நாம்மேன்மை கொள்வதற்கா தாயமென்றே. ... 8
[உட்டுளை = உள்+துணை]
--ரமணி, 12/11/2015, கலி.26/07/5116
*****
06. நாராயணா என்னும் நாமம்
(குறும்பா)
(வல்லமை மின்னிதழ் 13/11/2015)
நாராய ணாவென்னும் பேரினிலே
வேராக உள்ளிருக்கும் சீரினிலே
. ஏறிநிற்கும் பொருளெல்லாம்
. ஊறிநிற்கும் அருளெல்லாம்
ஆராயப் புகுவோமிப் பாவினிலே. ... 1
நரவென்னும் சொற்பொருளாய் ஆன்மாவாம்
நரத்தினின்று வருவதெலாம் நாராவாம்
. அயனமெனில் இருப்பிடமாம்
. வியனுலகின் பிறப்பிடமாம்
உருவத்தின் உள்ளீடாய் நாரணனாம். ... 2
நரம்தந்த வெளியீடே வான்வெளியாம்
விரிகாய வெளியீடாய்த் தான்வளியாம்
. காற்றதுவே தீயாகி
. நீராகி நிலமாகும்
நரம்விளைத்த பேரதுவே நாராவாம். ... 3
நாரமதே நாரணனின் உறைபொருளாம்
காரணோத கம்சொல்லும் மறைபொருளாம்
. அஞ்சுபூதம் இயல்தனியே
. அப்புவெனும் பெயரிலினிலே
பேரணவும் படைப்பாகும் இறைபொருளாம். ... 4
[பேர்-அணவும் = பெயர் பொருந்தும்]
உயிருள்ள உருவுள்ளே நாரணனே
உயிரற்ற உருவுள்ளே நாரணனே
. உயிருள்ளதோ இல்லாததோ
. பெயருள்ளதோ இல்லாததோ
பெயரற்ற உள்ளமைதி நாரணனே. ... 5
நீராடும் போதினிலே நாமமென
நாராய ணன்நாமம் சேமமென
. எட்டெழுத்து மந்திரமே
. கட்டுமனம் தந்திடுமே
வேரோடும் செய்கையெலாம் ஏமமென. ... 6
[ஏமம் = களிப்பு, இன்பம்]
நாரணனின் நினைவுவரும் இறுதிமூச்சே
வேரறுக்கும் பிறப்பென்றே உறுதியாச்சே
. கருமமுறும் சோதனையோ
. கருமமறு சாதனையோ
சீரிதுவே உயிரொன்றின் அறுதியாச்சே. ... 7
ஓம்நமோ நாராய ணாயவென்றே
போம்வினைப் பாராய ணமாமென்றே
. எட்டெழுத்து மந்திரமே
. உட்டுளையாய் வந்துறினே
நாம்மேன்மை கொள்வதற்கா தாயமென்றே. ... 8
[உட்டுளை = உள்+துணை]
--ரமணி, 12/11/2015, கலி.26/07/5116
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பிரதோஷத் துதி
எங்களுக்கேன் அபிஷேகம் ஈசனே?
(முச்சீர் சமநிலைச் சிந்து)
வானதியைத் தாங்குதலைச் செஞ்சடை - கொஞ்சம்
. வாகாகச் சிலிர்த்தாயோ ஈசனே!
ஊனுருக நீராடும் பொழிவிலே - கொஞ்சம்
. உன்பங்காய் எங்களுக்கா ஈசனே!
ஏனிந்தப் பெருவெள்ள லீலையோ - எம்மை
. ஏங்கவைத்துப் பார்ப்பதுமேன் ஈசனே!
வானத்தில் சோதிநிலை யாகுமோ - இந்த
. வான்மீன்கள் மூழ்கினவோ ஈசனே!
நீயேந்தும் திருவோட்டை நாங்களும் - ஏந்தி
. நீர்நிலையில் அலைகின்றோம் ஈசனே!
கார்தந்த கொடையினிலே மற்றவை - யாவும்
. கரமேந்த வைத்தனையே ஈசனே!
திருவாடல் போதுமையா இத்துடன் - எங்கள்
. தெருவாடல் தீர்த்தருள்வாய் ஈசனே!
நரியாடல் பரியாடல் போதுமே - எங்கள்
. நலமீண்டும் ஆடவருள் ஈசனே!
--ரமணி, 23/11/2015, கலி.07/08/5116
*****
எங்களுக்கேன் அபிஷேகம் ஈசனே?
(முச்சீர் சமநிலைச் சிந்து)
வானதியைத் தாங்குதலைச் செஞ்சடை - கொஞ்சம்
. வாகாகச் சிலிர்த்தாயோ ஈசனே!
ஊனுருக நீராடும் பொழிவிலே - கொஞ்சம்
. உன்பங்காய் எங்களுக்கா ஈசனே!
ஏனிந்தப் பெருவெள்ள லீலையோ - எம்மை
. ஏங்கவைத்துப் பார்ப்பதுமேன் ஈசனே!
வானத்தில் சோதிநிலை யாகுமோ - இந்த
. வான்மீன்கள் மூழ்கினவோ ஈசனே!
நீயேந்தும் திருவோட்டை நாங்களும் - ஏந்தி
. நீர்நிலையில் அலைகின்றோம் ஈசனே!
கார்தந்த கொடையினிலே மற்றவை - யாவும்
. கரமேந்த வைத்தனையே ஈசனே!
திருவாடல் போதுமையா இத்துடன் - எங்கள்
. தெருவாடல் தீர்த்தருள்வாய் ஈசனே!
நரியாடல் பரியாடல் போதுமே - எங்கள்
. நலமீண்டும் ஆடவருள் ஈசனே!
--ரமணி, 23/11/2015, கலி.07/08/5116
*****
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1176370ரமணி wrote:
நீயேந்தும் திருவோட்டை நாங்களும் - ஏந்தி
. நீர்நிலையில் அலைகின்றோம் ஈசனே!
கார்தந்த கொடையினிலே மற்றவை - யாவும்
. கரமேந்த வைத்தனையே ஈசனே!
--ரமணி, 23/11/2015, கலி.07/08/5116
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
தெய்வ தரிசனம்
07. மாதவன் மகிமை
(குறும்பா)
மாதவனின் பேர்சொல்லும் பேறிதே
மாதவத்தின் பலனென்றே ஆவதே
. முற்பிறப்பின் தவமென்றே
. இப்பிறப்பின் நலமென்றே!
வேதனைகள் தீர்த்துவைக்கும் பேரிதே. ... 1
சராசரியாம் மனிதனுமே அறியவே
பராசரராம் பட்டரவர் உரையிலே
. மாதவனின் பேர்விளக்கம்
. யாதெனவே வேர்விளக்கம்
பிரார்த்தனையாம் நாமமெனத் தெரியுமே. ... 2
மாவென்னும் அட்சரத்தின் மௌனமே
தவென்னும் அட்சரத்தின் தியானமே
. மோனத்தில் உருவற்ற
. தியானத்தைத் தருவிக்க
வவென்னும் அட்சரத்தின் யோகமே. ... 3
[பராசர பட்டரின் விஷ்ணு ஸஹஸ்ரநாம உரை]
மதுவித்தை சாதனையில் ஆதவனே
மதுவென்றே சங்கரரின் போதனையே
. உண்ணாத அமுதாகவே
. கண்ணாலே நமதாகவே
அதுவென்னும் பரம்பொருளாம் மாதவனே. ... 4
[ஆதிசங்கரரின் சாந்தோக்ய உபநிடத உரை]
ஹரிவம்சம் சொல்லுகின்ற பொருளாமே
பரமாத்ம ஞானத்தின் அருளாமே
. பேரறிவின் போதனையாய்
. வேரெனவே மாதவனாம்
உரையெல்லாம் இப்பொருளில் உருவாமே. ... 5
அஞ்சுபுலன் நம்சித்தம் ஆட்கொள்ளும்
சஞ்சரிக்கும் மனதையதன் மேற்தள்ளும்
. வெளியுணர்வில் ஈடுபடும்
. நளிவுள்ளம் பாடுபடும்
தஞ்சமெனப் பலநிலைகள் மேற்கொள்ளும். ... 6
[நளிவுள்ளம் = செருக்கினைக் கொள்ளும் உள்ளம்]
புறவுணர்வைக் கட்டுதற்கு மௌனமாம்
அறிவதனில் அமிழ்ந்திருக்க தியானமாம்
. நூலறிவால் ஏற்பட்ட
. வாலறிவின் பாற்பட்டு
பொறியற்று நிலைநிறுத்த யோகமாம். ... 7
[வாலறிவு = பேரறிவு, உண்மை]
மாவென்று திருமகளின் பேரதுவே
மாவென்னும் முதலெழுத்தின் வேரதுவே
. செல்வமெலாம் திரமாக
. செல்வதெலாம் அறமாக
வாவென்றால் வரமருளும் சீராமே. ... 8
--ரமணி, 19/11/2015, கலி.03/08/5116
உதவி:
மாதவன் என்ற சொற்பொருள்
https://ta.wikipedia.org/wiki/மாதவன்_என்ற_சொற்பொருள்
purAnic encyclopedia: vETTam maNi
*****
07. மாதவன் மகிமை
(குறும்பா)
மாதவனின் பேர்சொல்லும் பேறிதே
மாதவத்தின் பலனென்றே ஆவதே
. முற்பிறப்பின் தவமென்றே
. இப்பிறப்பின் நலமென்றே!
வேதனைகள் தீர்த்துவைக்கும் பேரிதே. ... 1
சராசரியாம் மனிதனுமே அறியவே
பராசரராம் பட்டரவர் உரையிலே
. மாதவனின் பேர்விளக்கம்
. யாதெனவே வேர்விளக்கம்
பிரார்த்தனையாம் நாமமெனத் தெரியுமே. ... 2
மாவென்னும் அட்சரத்தின் மௌனமே
தவென்னும் அட்சரத்தின் தியானமே
. மோனத்தில் உருவற்ற
. தியானத்தைத் தருவிக்க
வவென்னும் அட்சரத்தின் யோகமே. ... 3
[பராசர பட்டரின் விஷ்ணு ஸஹஸ்ரநாம உரை]
மதுவித்தை சாதனையில் ஆதவனே
மதுவென்றே சங்கரரின் போதனையே
. உண்ணாத அமுதாகவே
. கண்ணாலே நமதாகவே
அதுவென்னும் பரம்பொருளாம் மாதவனே. ... 4
[ஆதிசங்கரரின் சாந்தோக்ய உபநிடத உரை]
ஹரிவம்சம் சொல்லுகின்ற பொருளாமே
பரமாத்ம ஞானத்தின் அருளாமே
. பேரறிவின் போதனையாய்
. வேரெனவே மாதவனாம்
உரையெல்லாம் இப்பொருளில் உருவாமே. ... 5
அஞ்சுபுலன் நம்சித்தம் ஆட்கொள்ளும்
சஞ்சரிக்கும் மனதையதன் மேற்தள்ளும்
. வெளியுணர்வில் ஈடுபடும்
. நளிவுள்ளம் பாடுபடும்
தஞ்சமெனப் பலநிலைகள் மேற்கொள்ளும். ... 6
[நளிவுள்ளம் = செருக்கினைக் கொள்ளும் உள்ளம்]
புறவுணர்வைக் கட்டுதற்கு மௌனமாம்
அறிவதனில் அமிழ்ந்திருக்க தியானமாம்
. நூலறிவால் ஏற்பட்ட
. வாலறிவின் பாற்பட்டு
பொறியற்று நிலைநிறுத்த யோகமாம். ... 7
[வாலறிவு = பேரறிவு, உண்மை]
மாவென்று திருமகளின் பேரதுவே
மாவென்னும் முதலெழுத்தின் வேரதுவே
. செல்வமெலாம் திரமாக
. செல்வதெலாம் அறமாக
வாவென்றால் வரமருளும் சீராமே. ... 8
--ரமணி, 19/11/2015, கலி.03/08/5116
உதவி:
மாதவன் என்ற சொற்பொருள்
https://ta.wikipedia.org/wiki/மாதவன்_என்ற_சொற்பொருள்
purAnic encyclopedia: vETTam maNi
*****
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1177255ரமணி wrote:தெய்வ தரிசனம்
07. மாதவன் மகிமை
(குறும்பா)
அஞ்சுபுலன் நம்சித்தம் ஆட்கொள்ளும்
சஞ்சரிக்கும் மனதையதன் மேற்தள்ளும்
. வெளியுணர்வில் ஈடுபடும்
. நளிவுள்ளம் பாடுபடும்
தஞ்சமெனப் பலநிலைகள் மேற்கொள்ளும்.
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
வெண்பா வித்தகம்: கட்டளைக் கலித்துறையில் வெண்பா
அமைத்தவர்: கவிமாமணி இலந்தை இராமசாமி
https://groups.google.com/forum/#!topic/santhavasantham/-mnQvFbRT7w
விழிமனக் கவிதை!
(கட்டளைக் கலித்துறையில் வெண்பா)
(கட்டளைக் கலித்துறை)
விழியின் மணியே விழிக்குறும் சொந்தம் விழுவதெலாம்
இழிதலைக் கொள்மனம் என்று விழிமுன் எழுத்தினிலே
இழைக்கும் கவிதைகள் இன்று மலரும் இனிமையிலே
உழைக்கும் உளத்தின் உவப்பு முழுதும் உணர்வினிலே!
(நேரிசை அளவியல் வெண்பா)
விழியின் மணியே விழிக்குறும் சொந்தம்
இழிதலைக் கொள்மனம் என்று - விழிமுன்
இழைக்கும் கவிதைகள் இன்று மலரும்
உழைக்கும் உளத்தின் உவப்பு
(நேரிசைச் சிந்தியல் வெண்பா)
விழியின் மணியே விழிக்குறும் சொந்தம்
இழிதலைக் கொள்மனம் என்று - விழிமுன்
இழைக்கும் கவிதைகள் இன்று
(குறள் வெண்பாக்கள்)
விழியின் மணியே விழிக்குறும் சொந்தம்
இழிதலைக் கொள்மனம் என்று
இழைக்கும் கவிதைகள் இன்று மலரும்
உழைக்கும் உளத்தின் உவப்பு
--ரமணி, 29/11/2015
*****
அமைத்தவர்: கவிமாமணி இலந்தை இராமசாமி
https://groups.google.com/forum/#!topic/santhavasantham/-mnQvFbRT7w
விழிமனக் கவிதை!
(கட்டளைக் கலித்துறையில் வெண்பா)
(கட்டளைக் கலித்துறை)
விழியின் மணியே விழிக்குறும் சொந்தம் விழுவதெலாம்
இழிதலைக் கொள்மனம் என்று விழிமுன் எழுத்தினிலே
இழைக்கும் கவிதைகள் இன்று மலரும் இனிமையிலே
உழைக்கும் உளத்தின் உவப்பு முழுதும் உணர்வினிலே!
(நேரிசை அளவியல் வெண்பா)
விழியின் மணியே விழிக்குறும் சொந்தம்
இழிதலைக் கொள்மனம் என்று - விழிமுன்
இழைக்கும் கவிதைகள் இன்று மலரும்
உழைக்கும் உளத்தின் உவப்பு
(நேரிசைச் சிந்தியல் வெண்பா)
விழியின் மணியே விழிக்குறும் சொந்தம்
இழிதலைக் கொள்மனம் என்று - விழிமுன்
இழைக்கும் கவிதைகள் இன்று
(குறள் வெண்பாக்கள்)
விழியின் மணியே விழிக்குறும் சொந்தம்
இழிதலைக் கொள்மனம் என்று
இழைக்கும் கவிதைகள் இன்று மலரும்
உழைக்கும் உளத்தின் உவப்பு
--ரமணி, 29/11/2015
*****
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179477ரமணி wrote:
(கட்டளைக் கலித்துறை)
விழியின் மணியே விழிக்குறும் சொந்தம் விழுவதெலாம்
இழிதலைக் கொள்மனம் என்று விழிமுன் எழுத்தினிலே
இழைக்கும் கவிதைகள் இன்று மலரும் இனிமையிலே
உழைக்கும் உளத்தின் உவப்பு முழுதும் உணர்வினிலே!
- Sponsored content
Page 34 of 36 • 1 ... 18 ... 33, 34, 35, 36
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 34 of 36
|
|