புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10 
5 Posts - 4%
prajai
பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Jenila
பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10 
2 Posts - 2%
jairam
பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10 
1 Post - 1%
kargan86
பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10 
9 Posts - 5%
prajai
பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10 
6 Posts - 3%
Jenila
பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10 
2 Posts - 1%
viyasan
பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் - Page 3 - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழி விளக்கம் - Page 3


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 01, 2012 10:38 am

First topic message reminder :

பழமொழி விளக்கம்

001. பழமொழி: கிழவியும் காதம், குதிரையும் காதம்.
பொருள்: கிழவி தன் காததூரப் பயணத்தை முடித்தபோது, குதிரையும் அப்பயணத்தை முடித்தது.

விளக்கம்: கிழவி எப்படி குதிரைபோல் வேகமாகப் போகமுடியும்? பழமொழியை விவரித்தால் ஒரு கதை தெரிகிறது: அவன் தன் பூஜை-வழிபாடுகளை விரைவில் முடித்துக்கொண்து குதிரையில் ஏறி வானுலகம் அடைந்தபோது, தன் வழக்கப்படி மெதுவாகப் பொறுமையுடன் பூஜை-வழிபாடுகளைச் செய்துகொண்டிருந்த கிழவியையும் அங்குக் கண்டு வியப்படைந்தான். கதை அவ்வையார்-சேரமான் பற்றியது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

*****

002. பழமொழி: குதிரை குணம் அறிந்து அல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை!
பொருள்: குதிரையின் மனம் தெரிந்துதான் ஆண்டவன் அதைக் கொம்புள்ள மிருகமாகப் படைக்கவில்லை.

விளக்கம்: குதிரையின் போக்கு அதன் மனப்போக்கு. இதனால்தான் குதிரைக்குக் கடிவாளம் போடுவது. தம்பிரான் என்பது சிவனைக் குறிக்கும் சொல் (’தம்பிரா னடிமைத் திறத்து’--பெரிய புராணம், இளையான்குடி 1). சுந்தரமூர்த்தி நாயனாருக்கு தம்பிரான் தோழர் என்று ஒரு பெயர் உண்டு. தவிர, தம்பிரான் என்பது சைவ மடத் தலவர்களைக்குறிக்கும் பட்டம்.

*****

003. பழமொழி: சுவாமி இல்லையென்றால் சாணியை பார்; மருந்தில்லை என்றால் பாணத்தைப் பார்; பேதி இல்லை என்றால் (நேர்) வானத்தைப் பார்.

பொருள்: கடவுள் இல்லை என்பவன் சாணியைப் பார்த்தால் தெரிந்துகொள்ளட்டும்; மருந்து இல்லை என்பவன் வாணவேடிக்கைகளைப் பார்க்கட்டும்; மலம் சரியாக இறங்காதவன் பேயாமணக்கு விதைகளைத் தேடட்டும்.

விளக்கம்: சுவாமியையும் சாணியையும் சேர்த்துச் சொன்னது, பசுஞ்சாணியால் பிள்ளையார் பிடிக்கும் வழக்கத்தைக் குறிக்கிறது. இந்த வழக்கம் முன்னாட்களில் சிற்றூர்களிலும், இப்போதுகூட சில வழிபாடுகளிலும் கடைப்பிடக்கப்படுவாதத் தெரிகிறது.

மருந்து என்றது வெடிமருந்தைக் குறிப்பது; பாணம் என்றால் வாணவேடிக்கைகளில் பயன்படும் ராக்கெட் வாணம்: ’பாயும் புகைவாணங் கொடு பாணம் (இரகு.நகர.24). வானம் என்றது உலந்த விதைகளைக் குறிக்கிறது.

*****

004. பழமொழி: தெய்வம் காட்டும், ஊட்டுமா?
பொருள்: தெய்வம் வழிகாட்டும், ஆனால் அந்த வழியில் நாம் தானே போகவேண்டும்? தெய்வமே என்கையைப் பிடித்துக்கூட்டிச் செல்லவேண்டுமென்றால் எப்படி?

விளக்கம்: இதனால்தான் தெய்வத்தைத் தாய் என்பதைவிட தந்தை என்னும் வழக்கம் அதிகம் உள்ளதோ? இதனை ஒத்த ஆங்கிலப் பழமொழிகளும் உண்டு:
"God helps those who help themselves."
"God gives every bird its food, but does not throw it into the nest."

*****

005. பழமொழி: இல்லது வாராது, உள்ளது போகாது.
பொருள்: நீ செய்யாத வினைகள் உன்னை அண்டாது, நீ செய்த வினைகள் அதன் விளைவுகளை அனுபவிக்கும்வரை நீங்காது.

விளக்கம்: இதைவிட எளிய சொற்களில் கர்மபலன் விதியைச் சொல்ல முடிய்மோ? முற்பகல் தாண்டியதும் பிற்பகல் வருவது தவிர்க்க இயலாதது போலத்தான் முற்பகல் செய்தது பிற்பகல் விளைவதும்.

*****

சிவா wrote:
ரமணி wrote:நண்பர் சிவாவுக்கு.

ஆச்சரியம் என்னவென்றாள், நான் என் முதல் அஞ்சலைத் திருத்தவேயில்லை! அந்த ’மாற்றியாச்சி மாற்றியாச்சி’ நான் எழுதியது அல்ல. இந்தச் சொற்றொடரை நான் எழுதியிருந்தால் ’மாத்தியாச்சு’ என்றுதான் எழுதியிருப்பேன். எனவே, அந்தப் மறுமொழியை அப்படியே வைத்துக்கொண்டு என் முதல் அஞ்சலைத் திருத்தியிருக்கிறேன்.

தாங்கள் மாற்றவில்லையா? வேறு யார் மாற்றியது எனப் பார்க்கிறேன் ஐயா! நல்ல வேளை, தனியாக எழுதி வைத்திருந்ததால் மீண்டும் பதிவேற்றிவிட்டீர்கள்!
மாற்றியது நான் தான் சிவா ஆனால் எதையும் அழிக்கவில்லையே! சிரமத்துக்கு மன்னிக்கணும்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 04, 2012 11:28 am

பெரும்பாலான பழமொழிகள் கேள்விப்படாதவைகளாகவே உள்ளன. அவற்றை விளக்கமுடன் அறியத் தரும் அன்பு ஐயா அவர்களுக்கு மிக்க நன்றிகள்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 04, 2012 2:13 pm

இதுவர அறிந்திராத பல பழமொழிகளை தொகுத்து அதன் விளக்கத்தையும் தரும் ஐயா அவர்களுக்கு நன்றிகள்.



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Nov 04, 2012 6:31 pm

041. பழமொழி: சேணியனுக்கு ஏன் குரங்கு?
பொருள்: நெசவு செய்பவன் ஒரு குரங்கை வளர்த்தால் தாங்குமா?

விளக்கம்: சேணியன் என்ற சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம்: ’ஆடை நெய்யுஞ் சாதி வகையான்’. இந்திரனுக்குச் சேணியன் என்றொரு பெயர் உண்டு. "இந்திரன். சேணியனு மன்றே தெரிந்து" (தனிப்பா). பழமொழி நாம் கெட்ட பழக்கங்களை வளர்த்துக்கொள்வது ஆத்மநலனுக்கு எவ்வளவு விரோதமானது என்று சுட்டுகிறது.

*****

042. பழமொழி: ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்.
பொருள்: ஒரு கொம்பில்லாத விலங்குகூட ஏழை என்றால் அவன்மேல் பாயும்.

விளக்கம்: மோழை என்றல் கொம்பில்லாத விலங்கு: ’மூத்தது மோழை, இளையது காளை’ என்பர்.
"Even a child may beat a man that’s bound."

*****

043. பழமொழி: அம்பட்டன் மாப்பிள்ளைக்கு மீசை ஒதுக்கினது போல.
பொருள்: நாவிதன் மாப்பிள்ளையின் மீசை இதனால் மறைந்தே போயிற்று.

விளக்கம்: ஒரு நாவிதன் மகளுக்குத் திருமணாமாம். மாப்பிள்ளை தன் வருங்கால மாமனாரிடமே மீசையைத் திருத்திக்கொள்ள வந்தானாம். வந்த இடத்தில் நாவிதனின் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு குறைசொல்லித் திருத்தியதால் மாப்பிள்ளையின் மீசை மறைந்தே போயிற்றாம்!

*****

044. பழமொழி: இரண்டு கையும் போதாது என்று அகப்பையும் கட்டிக்கொண்டான்.
பொருள்: கொடுத்ததை வாங்குவதற்கு இரு கைகள் போதாமல் அவன் சமையல் கரண்டியையும் கட்டிக்கொண்டானாம்!

விளக்கம்: ஏன் கைகள் போதவில்லை? வாங்கியது என்ன? கையூட்டு (லஞ்சம்).


*****

045. பழமொழி: இருந்தும் கெடுத்தான், செத்தும் கெடுத்தான்.
பொருள்: அவன் இருந்தபோதும் துன்பந்தான், இறந்தபோதும் துன்பந்தான்.

விளக்கம்: இது குறித்த தெனாலிராமன் கதையில், தெனாலிராமன் தான் சாகும்போது தன்னை ஒரு கல்லறையில் புதைக்கவேண்டுமென்றும், அந்தக் கல்லறை தன் ஊர் எல்லையில் பக்கத்து ஊர் நிலத்தில் நீட்டிக்கொண்டு இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். அவன் செத்ததும் ஊரார் அவ்வாறு புதைக்க முற்பட்டபோது, பக்கத்து ஊர்க்காரர்கள் எதிர்த்ததால் சச்சரவு மூண்டது. இதனால் தெனாலிராமன் இருந்தபோதும், மறைந்தபின்னும் கெடுத்தான் என்று ஆகியது.

*****

046. பழமொழி: எண்பது வேண்டாம், ஐம்பதும் முப்பதும் கொடு.
பொருள்: கடன் வாங்குபவன் தான் கேட்ட ஐம்பது ரூபாய் கடனுக்கு வட்டியும் சேர்த்துத் தரவேண்டிய தொகை "எண்பதா?" என்று அதிர்ச்சியுடன் கேட்டபோது கடன் கொடுப்பவன் இவ்வாறு கூறினான்.

விளக்கம்: என் நண்பனுக்கு ஹிந்தி மொழியில் சரியாக எண்ணத் தெரியாது. ஒருமுறை அவன் ஹைதராபாத் நகரில் ரிக்*ஷாவில் சென்று சேரவேண்டிய இடத்தில் இறங்கியபோது ரிக்*ஷாக்காரன் "நான் மீதி தர வேண்டியது ’சாலீஸ்’ (நாற்பது) பைசாவா?" என்று கேட்டான். நண்பனுக்கோ ஹிந்தியில் பத்து வரைதான் ஒழுங்காக எண்ணத் தெரியும். எனவே அவன், "சாலீஸ் நஹி, சார் தஸ் பைசா தேதோ (சாலீஸ் அல்ல, நான்கு பத்து பைசாக்கள் கொடு)!" என்று பதில் சொன்னான்!

*****

047. பழமொழி: கும்பிட்ட கோவில் தலைமேல் இடிந்து விழுந்ததுபோல.
பொருள்: மிகவும் மதித்து நம்பியிருந்த ஒருவன் கைவிட்டது குறித்துச் சொன்னது.

விளக்கம்: பல பழமொழிகள் அனுபவத்தில் எழுந்தாலும், இந்தப் பழமொழி ஒரு உருவகமாச் சொன்னதாகத் தோன்றுகிறது. அன்றுமுதல் இன்றுவரை நாம் நம் உரையாடலில் உவமை-உருவகங்களை சரளமாகக் கையாள்கிறோம். எடுத்துக்காட்டாக, ’நீ பெரிய ஆளப்பா’ என்று சொல்லும்போது நாம் அவன் உடல் பருமையோ உயரத்தையோ குறிப்பதில்லை.

*****

048. பழமொழி: குருவுக்கும் நாமம் தடவி/போட்டு, கோபால பெட்டியில் கைபோட்டதுபோல.
பொருள்: ஒருவனை ஏமாற்றியதுமட்டுமின்றி அவனது உடைமைகளையும் பறித்துக்கொண்டது குறித்துச் சொன்னது.

விளக்கம்: கோபாலப் பெட்டி என்பது என்ன? விடை நாமம் என்ற பெயரில் உள்ளது. புரட்டாசியில் சனிக்கிழமைதோறும் பிச்சையெடுக்கும் விரத்துக்கு கோபாலம் என்று பெயர். இன்றும் அதைக் காணலாம். அப்ப்டிப் பிச்சையெடுப்பவர்கள் பயன்படுத்தும் பாத்திரம் கோபாலப் பெட்டி என்று குறிக்கப்பட்டது.

*****

049. பழமொழி: பாட்டி பைத்தியக்காரி, பதக்கைபோட்டு முக்குறுணி என்பாள்.
பொருள்: கொடுத்தது கொஞ்சமேயானாலும் அதிக அளவு என்று கூறுவது.

விளக்கம்: பைத்தியம் என்ற சொல்லை இன்று நாம் பெரும்பாலும் கிறுக்குத்தனம் என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். அந்த வார்த்தைக்கு மூடத்தனம் என்றும் பொருளுண்டு. பதக்கு என்பது இரண்டு குறுணிகொண்ட ஓர் அளவு. குறுணி என்பது ஒரு மரக்கால் அளவு.

*****

050. பழமொழி: சாப்பிள்ளை பெற்றாலும், மருத்துவச்சி கூலி தப்பாது.
பொருள்: நல்லது நடக்காவிட்டாலும் நடத்திவைத்தவருக்குப் பேசிய தொகையை கொடுக்காமல் இருக்கமுடியுமா?

விளக்கம்: சாப்பிள்ளை என்பது பிறக்கும்போதே இறந்திருந்த குழந்தை. வியாதி குணமாகாவிட்டாலும் நாம் டாக்டருக்கு ஃபீஸ் கொடுப்பதுபோல. மருத்துவச்சியாவது அவள் வேலை முடிந்தபின்னரே பணம் பெற்றுக்கொண்டாள். ஆனால் டாக்டர்?

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Nov 05, 2012 9:32 am

051. பழமொழி: கட்டி அழுகிறபோது, கையும் துழாவுகிறது.
பொருள்: மரண துக்கத்திலும் அவளுக்குத் திருட்டுப் புத்தி போகாது.

விளக்கம்: வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்தபோது மாதர் வட்டமாக அமர்ந்து அழுது ஒப்பாரிவைத்துக் கொண்டிருக்கும்போது இவள் ஆறுதல் சொல்வதுபோல் ஒவ்வொரு பெண்ணாகக் கட்டியணைக்குபோதே திருட ஏதேனும் நகை அகப்படுமா என்று கைகளால் துழாவுகிறாள். திருடனுக்கு எதுவுமே புனிதம் இல்லை.

*****

052. பழமொழி: தட்டான் தாய்ப்பொன்னிலும் மாப்பொன் திருடுவான்.
பொருள்: தன் தாய்க்கு நகை செய்தாலும் பொற்கொல்லன் அதில் கொஞ்சம் தங்கத் துகள் திருடுவான்.

விளக்கம்: பொற்கொல்லர்கள் பொதுவாக ஏமாற்றுபவர்களாக அக்காலத்தில் கருதப்பட்டனர். இன்றோ கொடுப்பதில் நாணயம் குறைந்து ஏமாற்றுவது என்பது கடையுடமையாக்கப் பட்டுள்ளது.

*****

053. பழமொழி: சம்பந்தி கிரஹஸ்தன் வருகிறான், சொம்பு தவலை உள்ளே (அல்லது அங்கதமாக, வெளியே) வை.
பொருள்: நாணயமான நம் சொந்தக்காரர், அதாவது நம் சம்பந்தி வருகிறார், சொம்பு, தவலை முதலிய பித்தளைப் பாத்திரஙளை உள்ளே வை (அல்லது வெளியே வை).

விளக்கம்: சொந்தக்காரர்களிடையேயும் திருடர்கள் உண்டு. அதிலும் சம்பந்தி வீட்டில் திருடும் வழக்கம் இருந்தது என்று தெரிகிறது. சம்பந்தி கிரஹஸ்தன் என்ற சொற்றொடர் சம்பன்னகிருஹஸ்தன் என்ற சொல்லின் திரிபு. சம்பன்னகிருஹஸ்தன் சொல்லின் நேர்பொருள் தகுதியுள்ள வீட்டுக்காரன் என்று இருந்தாலும் அது அங்கதமாக நாணயமற்றவன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது.

*****

054. பழமொழி: நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பனாவான்.
பொருள்: இன்றுள்ள ஒருவரது ஜாதி போன தலைமுறைகளில் தொடர்ந்து அதுவாகவே இருந்திருக்க வாய்ப்பு குறைவு.

விளக்கம்: மூன்று தலைமுறைகளுக்கு நீத்தார் கடன்கள் செய்வது வழக்கம். அம்மூன்று தலைமுறைகளை பொறுத்தவரை ஒருவருடைய ஜாதி உறுதியாகத் தெரிகிறது. அதற்குமேல் ஆராய்ந்தால், ஜாதிக் கலப்பு இருந்தது புலனாகலாம். இன்றுள்ள எல்லா ஜாதிகளும் அன்றுமுதல் மாறுதல் இல்லாமல் இருந்தனவல்ல என்பது செய்தி.

*****

055. பழமொழி: வெள்ளைக்காரனுக்கு ஆட்டுத்தோல் இடங்கொடுத்தார்கள், அது அறுத்து, ஊர் முழுதும் அடித்து, இது எனது என்றான்.
பொருள்: வியாபாரத்துக்கு வந்த வெள்ளைக்காரன், கொஞ்சம் இடம்கொடுத்ததால் நாட்டையே கைப்பற்றினான்.

விளக்கம்: ஆட்டுத்தோல் என்றது, ஒரு ஆட்டின் தோல் அளவு இடம். அதை அறுத்து ஊர் முழ்தும் அடித்தது, அந்தத் தோல்துண்டுகளைப் போன்ற இடங்களை நாடெங்கும் வாங்கிப் பின்னர் சுற்றியிருந்த இடங்களைக் கைபற்றியது.

*****

056. பழமொழி: ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
பொருள்: ஒரு நொண்டியை எருதில்மேல் ஏறி உட்காரச்சொன்னால், எருதுக்குக் கோபம் வருமாம். உட்கார்ந்தபின் அவனைக் கீழே இறஙச்சொன்னால் அவனுக்குக் கோபம் வருமாம்.

விளக்கம்: மாமியார்-மருமகள் சண்டையில் எந்தப்பக்கம் பரிந்துபேசுவது என்று தெரியாமல் கணவன் இவ்வாறு சொன்னதாக செய்தி.

*****

057. பழமொழி: பணமும் பத்தாயிருக்கவேண்டும், பெண்ணும் முத்தாயிருக்கவேண்டும், முறையிலேயும் அத்தைமகளாயிருக்கவேண்டும்.
பொருள்: எல்லாவற்றிலும் துல்லியமாகக் கணக்குப்பார்பவனுக்குச் சொன்னது.

விளக்கம்: திருமணத்துக்குப் பெண்தேடும் ஒருவன் நினைத்தது இது: நான் கொடுக்கும் சிறிய வரதட்சிணைப் பணத்துக்கு எனக்கு முத்தாக ஒரு பெண் கிடைக்கவேண்டும் அவள் என் அத்தை மகளாகவும் இருக்கவேண்டும்.

*****

058. பழமொழி: சந்நியாசி கோவணத்துக்கு இச்சித்துச் சமுசாரம் மேலிட்டதுபோல்.
பொருள்: தன் கோவணத்தப் பாதுகாக்க ஆசைப்பட்ட சந்நியாசி ஒரு குடும்பத்தையே தாங்கவேண்டி வந்தது.

விளக்கம்: சந்நியாசி கல்யாணம் செய்துகொண்டதாகப் பொருள் இல்லை. கதை இதுதான்: ஒரு சந்நியாசி தன் கோவணத்தை எலி கடித்துவிடுவது கண்டு அதைத் தடுக்க ஒரு பூனை வளர்த்தானாம். பின் அந்தப் பூனையைப் பராமரிக்க ஒரு பசுமாடு வளர்த்தானாம். அந்தப் பசுவை மேய்ச்சல் நிலத்துக்கு ஓட்டிச்சென்று அழைத்துவர ஒரு இடையனை அமர்த்தினானாம். அந்த இடையன் பின்னர் திருமணம் செய்துகொண்டதால் சந்நியாசி அந்தக் குடும்பத்தையே தாங்க நேரிட்டதாம்.

*****

059. பழமொழி: பூனை கொன்ற பாவம் உன்னோடே, வெல்லம் திண்ற பாவம் என்னோடே.
பொருள்: பூனையைக் கொன்ற பாவம் உன்னைச் சேரட்டும், வெல்லத்தால் செய்த அதன் படிமத்தைத் தின்ற பாவம் என்னைச் சேரட்டும்.

விளக்கம்: ஒரு பேராசைக்கார வணிகன் ஒரு பூனையைக் கொன்றுவிட்டானாம். அந்தப் பாவம்போக ஒரு பிராமணனிடம் பரிகாரம் கேட்டானாம். பிராமணன் சொன்ன பரிகாரம் (தங்கப் பூனை செய்து கங்கையில் விடுவது) செலவுமிக்கதாக இருந்ததால், பதிலாக வணிகன் ஒரு வெல்லப்பூனை செய்து அதற்குக் கிரியைகள் செய்துவிட்டுப் பின் அதைத் தின்றுவிட்டு பிராமணனைப் பார்த்து இவ்வாறு சொன்னானாம்.

*****

060. பழமொழி: ஐயா கதிர்போல, அம்மாள் குதிர்போல.
பொருள்: மிராசுதார் ஐயா தன் வயலில் விளையும் நெற்கதிரைப்போல் ஒல்லியாக இருக்கிறார், அவர் மனைவியோ வீட்டில் உள்ள நெற்குதிர்போல் இருக்கிறாள்.

விளக்கம்: ஐயா தன் வயல் நிலங்களைத் தினமும் பகல் முழுதும் சுற்றி மேற்பார்வை இட்டு அவர் அமர்த்தியுள்ள ஆட்களை வேலை வாங்குவதால் அவர் உடல் கதிர்போல் இளைத்து இருக்கிறது. அம்மாளோ சொகுசாக விட்டில் சாப்பிட்டு சாப்பிட்டுத் தூங்கியதால் அவள் உடல் குதிர்போல் பருத்தது.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Nov 06, 2012 10:46 am

061. பழமொழி: இடுவாள் இடுவாள் என்று ஏக்கமுற்று இருந்தாளாம்; நாழி கொடுத்து நாலு ஆசையும் தீர்த்தாளாம்.
பொருள்: யஜமானி நிறையக் கொடுப்பாள் என்று வேலைக்காரி ஆசையோடு இருந்தபோது, அவள் யஜமானி அந்த வேலைக்காரியின் நான்கு ஆசைகளையும் கால்படி அரிசி கொடுத்துத் தீர்த்துவைத்தாளாம்.

விளக்கம்: நாழி என்பது கால் படி அளவு: ’உண்பது நாழி உடுப்பது நான்கு முழம். (நல்வழி 28).’ ஹிந்து மகளிரின் நான்கு ஆசைகளாவன: ஊண், உடை, பூ, மஞ்சள். (இன்று அவை ஊண், உறக்கம், ஷாப்பிங், டி.வி. என்று மாறிவிட்டது வேறு விஷயம்.)

*****

062. பழமொழி: இலவு காத்த கிளி போல.
பொருள்: பருத்தி மரத்தின் காய் பழுத்தடும் என்று உண்ணக் காத்திருந்த கிளி போல.

விளக்கம்: இலவம் என்றால் பருத்தி மரம். இலவம் பஞ்சு, பஞ்சு வகைகளில் தரமானது. இலவு என்பது இலவம் மரத்தின் காய்களைக் (உண்மையில் அவை pods--விதைப் பைகள்) குறிக்கும். பருத்தி மரக்காய்கள் முற்றி வெடிக்கும்போது உள்ளிருக்கும் பஞ்சு காற்றில் பறந்துவிட, கிளி ஒன்றும் உண்ணக் கிடைக்காது ஏமாறும்.

*****

063. பழமொழி: ஏறப்படாத மரத்திலே எண்ணாயிரம் காய்.
பொருள்: ஒருவன் ஏறமுடியாத மரத்தில் எண்ணமுடியாத அளவுக்கு காய்களாம்.

விளக்கம்: இந்தப் பழமொழி ஒரு விடுகதையாக, இராகி (கேழ்வரகு) கதிர்கள்பற்றிக் கேட்கப்படுகிறது.

*****

064. பழமொழி: கொல்லைக்காட்டு நரி பல்லைக் காட்டினது போல.
பொருள்: தோப்பில் உள்ள நரி பல்லைக் காட்டிப் பயமுறுத்தியதுபோல.

விளக்கம்: கொல்லைக்காடு என்பது ஒரு தோப்பைக் குறிக்கிறது. சவுக்குத் தோப்பில் நரி உலாவும் என்பார்கள். ஆனால் இந்தக் கொல்லைக்காட்டு நரிகள் காட்டு நரிகள்போல் கடுமையானவை அல்ல. எனினும் தன் பிறவிக் குணத்தால் அவை எதிர்த்தோரை பயமுறுத்தத் தம் பல்லைக்காட்டும்.

கோபாலகிருஷ்ண பாரதி தன் ’நந்தன் சரித்திரம்’ படைப்பின் 43-ஆவது பாடலில் ’கொல்லைக்காட்டு நரி’யைக் குறிப்பிடுகிறார். அவர் பிறந்த ஊரின் பெயரிலும் ’நரி’ இருக்கிறது: அது நாகப்பட்டினம் அருகிலுள்ள நரிமணம்.
Some links:http://www.shaivam.org/siddhanta/sta_gkb.htm
http://www.varalaaru.com/default.asp?articleid=126

*****

065. பழமொழி: போனதுபோல வந்தானாம் புது மாப்பிள்ளை.
பொருள்: பலனை எதிர்பார்த்து ஒரு காரியத்தைத் தொடங்கி ஏமாந்தது போல.

விளக்கம்: புது மாப்பிள்ளை பரிசுகளை எதிர்பார்த்து மாமியார் வீடு சென்று வெறுங்கையோடு திரும்பியது போல.

*****

066. பழமொழி: கூத்தாடி கிழக்கே பார்த்தான், கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
பொருள்: அரங்கில் ஆடியவன் கிழக்கில் எப்போது சூரியன் உதிக்கும் என்று பார்த்திருந்தான். கூலி வேலை செய்தவன் மேற்கில் எப்போது சூரியன் மறையும் என்று பார்த்திருந்தான்.

விளக்கம்: கூத்து என்றால் நடனம். பரமசிவனுக்குக் கூத்தன் என்றொரு பெயருண்டு. கூத்தாடுதல் இரவில் ஊரின் பொது அரங்கத்தில் விடிய விடிய நடைபெறும். எனவே கூத்தாடி களைத்து சூரியன் கிழக்கில் உதிப்பதை எதிர்நோக்கியிருப்பான். அதுபோல நாள் முழுதும் உழைத்த கூலிக்காரன் தன் வேலைநேரம் முடியும் காலமாகிய மேற்கில் சூரியன் மறைவதை எதிர்நோக்கியிருப்பான். ஆசிரியர் ’கல்கி’ தன் ’பொன்னியின் செல்வன்’ புதினத்தின் ஐந்தாம் அத்தியாயத்தில் இரவில் நடைபெறும் ஒரு குரவைக் கூத்து பற்றி எழுதியுள்ளார்.

*****

067. பழமொழி: பாப்பாத்தி அம்மா, மாடு வந்தது, பார்த்துக்கொள்.
பொருள்: பாப்பாத்தி அம்மா, உன் பசுக்களை இதோ வீட்டில் சேர்த்துவிட்டேன், இனிமேல் உன்பாடு.

விளக்கம்: ஒரு பிராம்மண மாது தன் வீட்டுப் பசுக்களை மேய்ப்பதற்கு இடையன் ஒருவனை அமர்த்தியிருந்தாள். காலையில் பசுக்களைத் தொழுவத்திலிருந்து கட்டவிழ்த்து ஓட்டிச் சென்ற இடையன் மேய்ச்சல் நேரம் முடியும் மாலை ஆனதும் தன் வீடு திரும்பும் அவசரத்தில் பசுக்களை அந்தப் பாப்பாத்தி வீட்டில், தொழுவத்தில் கட்டாமல் விட்டுவிட்டு இவ்வாறு சத்தம்போட்டுக் கூறிவிட்டுத் தன்வழி போனான்.

வேலையில் முழு ஆர்வமில்லாமல் சம்பளத்தில் குறியாக இருப்பவர்களைக் குறித்துச் சொன்னது.

*****

068. பழமொழி: முப்பது நாளே போ, பூவராகனே வா.
பொருள்: வேலையில் ஆர்வமில்லாது எப்போது மாதம் முடிந்து சம்பளம் வரும் என்று எதிர்பார்த்து இருந்தவனைக் குறித்துச் சொன்னது.

விளக்கம்: வராகன் என்பது மூன்று ரூபாய் மதிப்புள்ளதும் பன்றிமுத்திரை கொண்டதுமான ஒருவகைப் பொன் நாணையம் (அரும்பொருள் விளக்க நிகண்டு). பூவராகன் என்பதில் உள்ள வராகம் திருமாலின் வராக அவதாரத்தைக் குறிக்கிறது.

*****

069. பழமொழி: பட்டுப்புடவை இரவல்கொடுத்து, மணை தூக்கிகொண்டு அலைய வேண்டியதாச்சு.
பொருள்: ஒரு பட்டுப்புடவையை அவள் உடுத்த இரவல் கொடுத்தேன். கூடவே நான் ஒரு மணை ஆசனத்தை எடுத்துக்கொண்டு அவள் பின்னாலேயே போகவேண்டி வந்தது!

விளக்கம்: என் பட்டுப்படவை அழுக்காகிவிடுமே என்ற கவலைதான்!

*****

070. பழமொழி: அண்டை வீட்டுக் கடனும் பிட்டத்துச் சிரங்கும் ஆகாது.
பொருள்: பக்கத்து வீட்டில் கடன் வாங்குவது, பிருஷ்டபாகத்தில் வந்த சிரங்குபோல.

விளக்கம்: அண்டை வீட்டில் கடன் வாங்கினால் அவனைப் பார்க்கும்போதெல்லாம் மனம் தவிக்கும். உட்காரும் இடத்தில் புண் வந்தால் உட்காரும்போதெல்லாம் வலிக்கும்.

*****


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 06, 2012 11:07 am

நன்றி

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Nov 06, 2012 3:54 pm

071. பழமொழி: அம்பலம் வேகுது.
பழமொழி: அதைத்தான் சொல்லுவானேன்? வாயைத்தான் நோவானேன்?
பழமொழி: சந்தை இரைச்சலிலே குடியிருந்து கெட்டேனே.

பொருள்: இந்தச் சத்திரம் பற்றி எரிகிறது.
பொருள்: அதைச் சொல்வது ஏன்? பின் என் வாய் வலிக்கிறது என்பானேன்?
பொருள்: உங்கள் இருவரது சந்தை இரைச்சலில் குடியிருந்து நான் கெட்டேனே.

விளக்கம்: இந்த மூன்று பழமொழிகளுக்குப்பின் ஒரு கதை உண்டு: சத்திரம் என்பது வழிப்போக்கர்களுக்காகக் கட்டியது. அங்கு யாரும் நிரந்தரமாகத் தங்கக் கூடாது. ஒரு சத்திரத்தில் ஒரு அரைச் சோம்பேறி, ஒரு முக்கால் சோம்பேறி, ஒரு முழுச் சோம்பேறி மூவரும் குடிபுகுந்து வேளா வேளை வயிறாக உண்டு உறங்கிப் பொழுதைப் போக்கி வந்தார்கள். சத்திரத்தின் சொந்தக்காரன் எவ்வளவு முயன்றும் அவர்களை விரட்ட முடியவில்லை. ஒரு நாள் அவன் சத்திரத்துக்குத் தீ வைத்துவிட்டான். நெருப்பைப் பார்த்த அரை சோம்பேறி சொன்னது முதல் பழமொழி. அதற்கு பதிலாக முக்கால் சோம்பேரி இரண்டாவது பழமொழியில் உள்ளவாறு கூறினான். இவர்களின் உரையாடலைக் கேட்ட முழுச் சோம்பேறி கூறியது மூன்றாவது பழமொழி.

*****

072. பழமொழி: உத்தியோகம் தடபுடல், சேவிக்கிறவர்கள் இன்னாரினியார் என்றில்லை, சம்பளம் கணக்கு வழக்கில்லை, குண்டையை விற்று நாலு வராகன் அனுப்பச் சொல்லு.

பொருள்: என் வேலையில் ஒழிவில்லாத ஆடம்பரம்; யார்யாரோ என்னை அண்டி வணங்குகிறார்கள். எனக்கு வரும் சம்பளத்துக்குக் கணக்கு வழக்கில்லை. (இருந்தாலும்) எருதை விற்றுப் பதினைது ரூபாய் அனுப்பச் சொல்லு.

விளக்கம்: கிராமத்திலிருந்து ஒரு இளைஞன் பட்டணத்துக்கு வேலை தேடிப் போனான். அவன் எதிர்பார்த்தபடி வேலை அமையவில்லை. அதைத் தன் உறவினர்களிடம் சொல்வது கௌரவக் குறைச்சல் என்று அவன் எதிர்மறையாக மேலே உள்ளவாறு கடிதம் எழுதினான்.

அவன் உண்மையில் எழுத நினைத்தது: என் வேலையில் எனக்கு ஓய்வு இல்லை. என் முதலாளிகள் யார் என்று தெரியவில்லை. எனக்குத் தரும் சம்பளம் இன்னும் சரியாக முடிவாகவில்லை. எனவே, எருதை விற்றுப் பதினைந்து ரூபாய் அனுப்பச் சொல்லு. குண்டை என்றால் எருது. வராகன் என்பது மூன்று ரூபாய்க்கு சற்று அதிக மதிப்புள்ள பொன் நாணயம்.

*****

073. பழமொழி: குந்தித் தின்றால் குன்றும் மாளும்.
பொருள்: குன்றளவு சொத்து உள்ளவனும் வேலையில்லாமல் வெறுமனே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தால் அவன் சொத்து விரைவில் கரைந்துவிடும்.

விளக்கம்: மலையளவு சொத்துக்கள் சேர்த்த இன்றைய அரசியல்வாதிகள் எவ்வளவு குந்தித் தின்றாலும் அவர்கள் சொத்து கரைவதில்லை. கரைவது (குவாரியாகப் பொடிபட்டு) ஊரில் உள்ள குன்றுகளும், இன்னபிற பொதுச் சொத்துக்களும்தாம்.

*****

074. பழமொழி: நடந்தால் நாடெல்லாம் உறவு, படுத்தால் பாயும் பகை.
பொருள்: நடந்து செல்பவனுக்கு நாட்டில் நண்பர்கள் பலர் கிடைப்பார்கள். ஒன்றும் செய்யாமல் சோம்பேறியாகப் பாயில் படுத்தூங்குகிறவனை அந்தப் பாயும் வெறுக்கும்.

விளக்கம்: சோம்பேறிக்கு நண்பர்கள் கிடையாது; சுறுசுறுப்பாக இருப்பவர்கள் எங்கு இருந்தாலும் சமாளித்துவிடுவார்கள்.

*****

075. பழமொழி: கொட்டிக் கிழங்கு பறிக்கச்சொன்னாள் கோபித்துக்கொள்வார் பண்டாரம், அவித்து உரித்து முன்னே வைத்தால் அமுதுகொள்வார் பண்டாரம்.
பொருள்: படைத்தால் உண்ணும் பண்டாரம் தான் வேலை எதுவும் செய்யமாட்டார்.

விளக்கம்: கொட்டிக் கிழங்கு ஒரு செடி எனத்தைச் சேர்ந்தது. இது தன்னிச்சையாக நீர் நிலைகளிலும், நீரோடைகளிலும், வளர்ந்திருக்கும். இக்கிழங்குக்கு உடல் உஷ்ணத்தை தணிக்கும் ஆற்றல் உண்டு. இதனை துண்டுகளாக்கி வெயிலில் உலர்த்தி, இடித்து சூரணமாக்கி பசும் பாலில் கலந்து காய்ச்சி சாப்பிடலாம். இதனால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கு குணமாகும்.

கொட்டிக்கிழங்கு இனிப்புச் சுவையுடன் இருக்கும். அதனால் இக்கிழங்கை சமைத்துச் சாப்பிட சுவையுடன் இருக்கும். இதனை பொரியலும் செய்யலாம். இக்கிழங்கை மாவாக்கிக் கஞ்சியாகக் கரைத்து கிராமத்து மக்கள் சாப்பிடுவதுண்டு. குழந்தைகளுக்கு ஏற்படும் கரப்பான் நோயும் சரியாகும். கொட்டிக்கிழங்குத் தூளை தேங்காய்ப் பாலில் கலந்து கரப்பான், தேமல், படைகளுக்கு மேல்பூச்சாக போட சீக்கிரம் ஆறிவிடும்.
http://tamil.boldsky.com/health/herbs/2011/17-benefits-kotti-kizhangu-prabbak-kizhangu-aid0174.html

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Nov 07, 2012 7:03 am

076. பழமொழி: தெண்டச் சோற்றுக்காரா, குண்டு போட்டு வா அடா!
பொருள்: வேலை ஒன்றும் செய்யாமல் தண்டச்சோறு தின்பவனே, எட்டு மணிக்கு குண்டு போட்டதும் வாடா!

விளக்கம்: அது என்ன குண்டு, எட்டுமணி? ஆங்கிலேயர் நம்மை ஆண்டபோது அவர்கள் அமைத்திருந்த கோட்டை அலுவலகங்களில் இருந்து நேரத்தைக் குறிக்க தினமும் இரண்டு முறை துப்பாக்கிக குண்டுகள் (காற்றில்) சுடப்படும். இப்படித்தான் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து காலை விடியும்போது ஒரு முறையும் இரவு எட்டு மணிக்கும் குண்டுச் சத்தம் ஒலிக்கும். இரவு எட்டு மணி என்பது ஆங்கிலேயர் இரவுச் சாப்பாட்டு நேரத்தை அறிவிக்க.

*****

077. பழமொழி: ஞானமும் கல்வியும் நாழி அரிசியிலே.
பொருள்: ஞானத்துக்கும் கல்விக்கும் உணவு மிக முக்கியம்.

விளக்கம்: திருமூலரின்
உடம்பார் அழியின் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

என்ற பாடல் இதே கருத்தை வலியுறுத்துகிறது.

*****

078. பழமொழி: உண்பது நாழி உடுப்பது நான்கு முழம், எண்பதுகோடி நினைந்து எண்ணும் மனம்.
பொருள்: உண்பதற்கு ஒரு படி அரிசி இருந்தால் போதும். உடுப்பதற்கோ நான்கு முழம் துணி போதும். ஆனால் மனத்திலோ கோடிகோடி ஆசைகள்.

விளக்கம்: போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று கூறியிருந்தாலும், ஆசைகளின் உந்துதலில் மனம் தன் குறைந்த தேவைகளுக்கு மிக அதிகமாகவே நாடுகிறது.

*****

079. பழமொழி: உன்னைப் பிடி என்னைப் பிடி, உலகாத்தாள் தலையைப் பிடி.
பொருள்: உன்னையும் என்னையும் பிடித்தபிறகு, உலகாளும் தேவியின் தலையிலேயே கையை வை.

விளக்கம்: கேட்டது எல்லாம் செய்துகொடுத்தும் மேலும் ஒன்று கேட்பவனை/கேட்பவளைக் குறித்துச் சொன்னது. உதாரணமாக, பாண்டவர்கள் சூதாட்டத்திலே தோல்வியுற்று அனைத்தும் இழந்தபோது, திரௌபதி ஒரு சபதம் ஏற்றாள்: துச்சாதனனும் துரியோதனனும் கொல்லப்படும் அன்றுதான் தன் கூந்தலை முடிப்பது என்று. கண்ணனின் அநுக்கிரகத்தால் இவை நிறைவேறியபின் அவள் மீண்டும் ஒரு சபதம் செய்தாள், தன் குழந்தைகளைக் கொன்ற அசுவத்தாமன் கொல்லப்படும் வரை அவள் தன் கூந்தலை முடிவதில்லை என்று. அப்போது கண்ணன் அவளிடம் இப்பழமொழியைக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

*****

080. பழமொழி: போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
பொருள்: இருப்பதே போதும் என்று திருப்தியுற்ற மனமே அது தொட்டதெல்லாம் பொன்னாக்கும் மருந்து ஆகும்.

விளக்கம்: ரஸவாதத்தால் உலோகங்களைப் பொன்னாக்கும் முயற்சி உலகெங்கும் முயற்சிக்கப்பட்ட ஒன்று. ஆனால், அப்படிப் பொன்னாக்க முயல்வது பேராசையின் அறிகுறி. அதைவிட, இருப்பதே போதும், தேவையானது தேவையான நேரங்களில் வந்துசேரும் என்ற மனம் இருந்தால் அந்த ரஸவாதம் மற்ற உலோக மனங்களையும் பொன்னாக்க வல்லது.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Nov 07, 2012 5:31 pm

081. பழமொழி: அரிவாள் சூட்டைப்போல காய்ச்சல் மாற்றவோ?
பொருள்: வெய்யிலில் சூடான அரிவாள் தண்ணீர் பட்டால் குளிரும். உடல் ஜுரம் அதுபோல ஆறுமா?

விளக்கம்: இது ஒரு முட்டாளைக்குறித்துச் சொன்னது. ஒரு முட்டாள் வெய்யிலில் சூடான ஒரு அரிவாளைப் பார்த்தானாம். அதற்கு ஜுரம் என்று எண்ணி அவன் அதைக் குளிர்ந்த நீரில் நனைக்கவே, அந்த ’ஜுரம்’போய் அது மீண்டும் குளிர்ச்சியானதாம். வீட்டில் ஒருநாள் அவன் தாயாருக்கு ஜுரம் வந்தபோது அவன் அவளைக் குளிர்விப்பதற்காக ஒரு குளத்தில்போட, தாயார் குளத்தில் மூழ்கி இறந்தாளாம்.

*****

082. பழமொழி: எட்டுவருஷம் எருமைக்கடா ஏரிக்குப் போக வழி தேடுமாம்.
பொருள்: எத்தனை முறை வந்த வழியே போனாலும் அது எந்த வழி என்று தெரியாது இருப்பது.

விளக்கம்: எருமைக்கடா என்றது அடிமுட்டாளைக் குறித்தது. எட்டு வருஷமாக அதே பாதையில் ஏரிக்குச் சென்று நீர் பருகிய எருமைக்கடா தினமும் வழி தெரியாது தேடிச் செல்லுமாம். இதுபோன்று அடிமுட்டாளைக் குறித்த வேறு சில பழமொழிகள்:

எருது ஈன்றது என்றாள் தோழத்தில் கட்டு என்கிறதுபோல.
கடா மேய்க்கிறவன் அறிவானோ கொழு போன இடம்.
கழுதைப்பால் குடித்தவன் போலிருக்கிறான்.
காண ஒரு தரம், கும்பிட ஒரு தரமா?
குருடும் செவிடும் கூத்துப் பார்த்தாற்போல் செய்கிறாய்.
கொக்குத் தலையில் வெண்ணை வைத்துப் பிடிக்கிறதுபோல.
நெல்லுக் காய்க்கு மரம் கேட்டவன்போல.

*****

083. பழமொழி: நடக்கமாட்டாத லவாடிக்கு நாலுபக்கமும் சவாரி.
பொருள்: நடக்கவே கஷ்டப்படும் குதிரையைப் பலவிதமான சவாரிக்குப் பயன்படுத்தியது போல.

விளக்கம்: லவாடி என்ற சொல் வேசி என்று பொருள்பட்டாலும் இந்கு ஒரு வயதான குதிரையைக் குறிக்கிறது. ஒரு வேலையையே ஒழுங்காக முடிக்கத்தெரியாத முட்டாள் ஒருவன் பல வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றையும் அரைகுறையாகச் செய்வது போல என்பது செய்தி.

*****

084. பழமொழி: புட்டுக்கூடை முண்டத்தில் பொறுக்கியெடுத்த முண்டம்.
பொருள்: ஒரு கூடை நிறைய முட்டாள்கள் இருந்தால் அவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முட்டாள் அவன்.

விளக்கம்: புட்டுவெல்லம் என்பது பனைவெல்லம். அதை வைக்கும் ஓலைக்கூடைக்கு புட்டிற்கூடை என்று பெயர்; இச்சொல் மருவி புட்டுக்கூடை என்றாகியது. கரும்பில் இருந்து எடுக்கப்படும் வெல்லத்தைவிட பனைவெல்லம் பொதுவாக மட்டமாகக் கருதப்படுகிறது. பனங்கற்கண்டு ஒரு மருந்துப்பொருளாகப் பயன்பட்டாலும், பனைவெல்லத்தைக் கரும்பு வெல்லம் போலவோ, சர்க்கரை போலவோ பயன்படுத்த முடியாது. முன்பெல்லாம் கிராமங்களில் காப்பிக்கு பனைவெல்லத்தைத்தான் பயன்படுத்தினர். கருப்பட்டிக் காப்பி என்றே அதற்குப் பெயர். கரும்பு வெல்லம் போலன்றி கருப்பட்டியில் கசடு இருக்கும்.

முண்டம் சொல்லுக்கு அறிவில்லாதவன் என்றொரு பொருள் உண்டு. தலையில்லாத உடம்பை மூன்டம் என்றதால் அறிவிலி ஒருவனுக்கு இப்பெயர் வந்திருக்கலாம்.

*****

085. பழமொழி: இரிஷி பிண்டம் இராத் தாங்காது.
பொருள்: கருவாக நேற்று உருவான குழந்தை இன்று பிறந்ததுபோல.

விளக்கம்: ஒரு ரிஷியானவர் அவர் அன்னை அவரைக் கருத்தரித்த இரவிலிருந்து மறுநாள் விடிவதற்குள் பிறந்துவிடுவாராம்! எதிர்பார்த்தது நடக்கும் என்று தெரிந்தும் அதற்காக அவசரப் படுபவர்களைக் குறித்துச் சொன்னது.

*****

086. பழமொழி: எள்ளு என்கிறதுக்குமுன்னே, எண்ணெய் எங்கே என்கிறான்?
பொருள்: எள்ளைக் கொடுத்தால் உடனே அதில் எண்ணையை எதிர்பார்க்கிறான்.

விளக்கம்: தேவையில்லாமல் அவசரப்படுபவர்களைக் குறித்துச் சொன்னது. இதே பழமொழி கொஞ்சம் மாறுபட்ட வடிவில், "எள் என்பதற்கு முன்னே எண்ணெயாய் நிற்கிறான்" என்று, குருவை மிஞ்சிய சீடனாக நிற்கும் ஒருவனைக் குறித்து வழங்குகிறது. இத்தகையவன் வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வருவான்.

*****

087. பழமொழி: குளம் உடைந்து போகும்போது முறைவீதமா?
பொருள்: குளமே உடைந்துவிட்டபோது அதனைச் சீர்திருத்துவது யார் முறை என்று கேட்டானாம்.

விளக்கம்: ஆபத்துக் காலங்களில் ஒவ்வொருவரும் தன்னால் அதிகபட்சம் முடிந்த அளவு உதவேண்டும் என்பது செய்தி.

*****

088. பழமொழி: நாய்க்கு வேலையுமில்லை, நிற்க நேரமுமில்லை.
பொருள்: எந்த வேலயும் இல்லாமல் ஒரு நாய் அலைவதுபோல, கவைக்குதவாத பொழுதுபோக்கு வேலைகளை வைத்துக்கொண்டு அவன் தான் எப்போதும் ’பிஸி’ என்கிறான்.

விளக்கம்: "சிலருக்குப் பொழுது போகவில்லை, எனக்கோ பொழுது போதவில்லை" என்று சிலர் சொல்வார்கள். அவர்கள் செய்யும் வேலைகளை பார்த்தால் அவை ஒன்றுக்கும் உதவாத வேலைகளாக இருக்கும்.

*****

089. பழமொழி: மூத்திரம் பெய்கிறதுக்குள்ளே முப்பத்தெட்டு குணம்.
பொருள்: சிறுநீர் கழிக்குபோதுகூட அவனால் பொறுமையாக இருக்கமுடியாது.

விளக்கம்: "க்ஷணச் சித்தம், க்ஷணப் பித்தம்" என்ற பழமொழியும் இதே போன்றது. இரு பழமொழிகளும் சலன புத்தியுள்ளவர்களைக் குறித்துச் சொன்னவை.

*****

090. பழமொழி: ஆகட்டும் போகட்டும், அவரைக்காய் காய்க்கட்டும், தம்பி பிறக்கட்டும், அவனுக்குக் கல்யாணம் ஆகட்டும், உன்னைக் கூப்பிடப்போறேனோ?

பொருள்: தன்னை ஒரு சுப நிகழ்ச்சிக்கும் கூப்பிடவது இல்லை என்று குறைந்துகொண்டவளிடம் இவள் கூறியது.

விளக்கம்: மறதியையும் தாமதத்தையும் குறித்து வழங்கும் பழமொழி.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 08, 2012 7:01 am

091. பழமொழி: கடல் வற்றிக் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு.
பொருள்: கடல் வற்றிவிட்டால் மீன்களைப் பச்சையாகத் தின்னாமல், காயவைத்துத் தின்னலாமே என்று காத்திருந்த கொக்கு உடல் மெலிந்து செத்ததாம்.

விளக்கம்: ஒரு குளம் வற்றும் தருவாயில் இருந்தபோது அதில் இருந்த மீன்களை ஆசைகாட்டிப் பாறையில் உலர்த்தித் தின்ற கொக்கின் கதை நமக்குத் தெரியும். ’ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் வாடியிருப்பது’ கொக்கின் இயல்பே. ஆயினும் கடலில் மீன் பிடிக்கும்போது கொக்கு அவ்வாறு இருந்தால் என்ன ஆகும்? இப்போதுள்ள சிறிய அனுகூலங்களை, நாளை நடக்கும் என்று நாம் நம்பும் நிச்சயமில்லாத பெரிய வாய்ப்பினை எதிர்பார்த்து நழுவவிடுவது கூடாது என்பது செய்தி.

*****

092. பழமொழி: நனைத்து சுமக்கிறதா?
பொருள்: பாரம் உலர்ந்திருக்கும்போது அதை சுமந்து செல்லாதவன் அது நனைந்து மேலும் சுமையானபோது வருந்தினானாம்.

விளக்கம்: இப்போதைக்குப் பெரிய கெடுதல் ஒன்றும் இல்லை என்பதற்காகத் தன் தவறுகளைக் களைவதை ஒத்திப்போட்டவனைக்குறித்துச் சொன்னது. வீட்டின் மராமத்து வேலகளை இப்போதைக்கு அவ்வளவு மோசம் இல்லை என்று ஒத்திப்போடுபவனுக்கும் இது பொருந்தும். முன்னவனுக்கு அவன் தவறும் பின்னவனுக்கு அவன் செலவும் நாளை பெரிய சுமையாகிவிடும் என்பது செய்தி.

*****

093. பழமொழி: பத்தியத்துக்கு முருங்கைக்காய் வாங்கிவா என்றால், பால் தெளிக்கு அவத்திக்கீரை கொண்டுவருவான்.
பொருள்: நோயாளி பத்தியமாகச் சாப்பிட்டு குணம் பெறவேண்டி முருங்கைக்காய் வாங்கிவரப் போனவன், அதைத் தாமதித்து, நோயாளி இறந்துவிட்டதும் மூன்றாம் நாள் பால் தெளிக்க அகத்திக்கீரை வாங்கி வந்தானாம்.

விளக்கம்: செய்யவேண்டியதை உரிய காலத்தில் செய்யாததன் விளைவைப் பழமொழி சுட்டுகிறது.

*****

094. பழமொழி: எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
பொருள்: வணிகன் தீர ஆலோசனை செய்தே ஒரு காரியத்தில் இறந்குவான். மூடனோ முன்யோசனையின்றிக் காரியத்தில் இறங்கிவிட்டுப் பின் விழிப்பான்.

விளக்கம்: ’எண்ணுதல்’ என்ற சொல்லில் சிலேடை நோக்குக. செட்டியானவன் பணத்தை எண்ணி மட்டும் கொடுப்பதில்லை; கொடுத்தால் திரும்ப வருமா என்பதையெல்லாம் தீர ஆலோசித்தே கொடுப்பான். மட்டி என்கிற மூடனானவன் பணத்தையும் விளைவுகளையும் எண்ணாமல் செயலில் இறங்குவதால் அவதிக்குள்ளாகிறான்.

*****

095. பழமொழி: ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான், பலபேரைக் கொன்றவன் பட்டம் ஆளுவான்.
பொருள்: ஒருவனைக் கொன்றவனுக்கு தண்டனை விரைவில் கிடைத்து அவன் மாள்வான். ஆனால் பலரைக் கொன்றவன் பட்டம் ஆள்பவனாக இருப்பான்.

விளக்கம்: ஒருவனைக் கொல்பவன் சுயநல நிமித்தம் அதைச் செய்கிறான். பலரைக் கொல்பவனின் நிமித்தம் (motive) எதுவாக இருந்தாலும் அவனது படைபலம் அவனை அரியணையில் அமர்த்துகிறது. இருப்பினும், அவனது நிமித்தம் பொதுநலத்தைத் தழுவி இராவிட்டாள் காலம் காலனாக மாறி அவன் கணக்கை இயற்கையாகவோ செயற்கையாகவோ முடிக்கும்.

*****

096. பழமொழி: துறவிக்கு வேந்தன் துரும்பு.
பொருள்: துறவி தன் உயிரின் நிலைமையும் யாக்கை நிலையாமையும் நன்கு அறிந்தவர். எனவே ஒரு மன்னனின் ஆணைகள் அவரை ஒன்றும் செய்ய முடியாது.

விளக்கம்: இந்தப் பழமொழியை நிரூபிக்கும் வகையில் பரமஹம்ஸ யோகானந்தாவின் ’ஒரு யோகியின் சுயசரிதம்’ புத்தகத்தில் ஒரு கதை உள்ளது (அத்தியாயம் 41). அலெக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்பின்போது அந்த மன்னன் தக்ஷசீலத்தில் முகாமிட்டிருந்தான். அப்போது அவன் தக்ஷசீலத்தில் பெயர்பெற்ற சந்நியாசியான ’டண்டமிஸ்’-ஸை அழத்துவர ஆள் அனுப்பினான். வர மறுத்தால் துறவியின் தலையைச் சீவிக் கொன்றுவிடும்படி ஆணை அந்த தூதுவனுக்கு. ஆனால் அந்த யோகி தான் படுத்திருந்த நிலையிலிருந்து தன் தலையைக் கூட நிமிர்த்தாமல் அந்த தூதுவனுக்கு ஆன்மீக விளக்கம் அளித்து தான் மரணத்துக்குப் பயப்படவில்லை என்றும், மன்னர்கள் தனக்கு ஒரு பொருட்டல்ல என்றும் கூறிவிட, கலவரம் அடந்த தூதுவன் தன் மன்னனிடம் போய் விவரம் கூறினான். ஆச்சரியம் அடைந்த அலெக்ஸாண்டர் தக்ஷசீலத்தில் இருந்த பல பிராமணத் தவசிகளை வரவழைத்துக் கேள்விகள் கேட்டு ஆத்மாவின் உண்மையைப் புரிந்துகொண்டு, கல்யாணா (இவர் பின்னர் கிரேக்கர்களால் காலனாஸ் என்று அழைக்கப்பட்டார்.) என்ற யோகியைத் தன்னுடன் அழைத்துச் சென்றான். அவர் ஒரு குறிப்பிட்ட நாளில் பாரசீகத்தில் ஸுசா என்ற நகரில் மாஸிடோனியாவின் அனைத்துப் படைகளுக்கு முன் தன் வயதான உடலை நீத்தார். தனக்கு மிக நெருங்கிய தோழர்களைத் தழுவி விடைபெற்ற அவர், அலெக்ஸாண்டரிடம் அவ்வாறு செய்யாமல், "நான் உன்னை பின்னர் பாபிலோனில் சந்திக்கிறேன்" என்று மாத்திரமே குறிப்பிட்டார். அலெக்ஸாண்டர் மறு வருடமே பாபிலோனில் மரணம் அடைந்தான்.

*****

097. பழமொழி: அரைத்து மீந்தது அம்மி, சிரைத்து மீந்தது குடுமி.
பொருள்: அம்மியில் எவ்வளவு அரைத்து வழித்தாலும் அதன் கல் அப்படியே இருக்கும். அதுபோல நாவிதன் அசிரத்தையாக முடி வெட்டினாலும், குடுமி நிச்சயம் தங்கும் (குடுமியைச் சிரைக்கக்கூடாது என்பது பழைய மரபு).

விளக்கம்: மற்றவர்களின் உடைமைகளை பற்றிக் கவலைப்படாது கர்வத்துடன் இருக்கும் ஒருவனைக் குறித்துச் சொன்னது.

*****

098. பழமொழி: ஏற்றப் பாட்டிற்கு எதிர்ப் பாட்டில்லை.
பொருள்: ஏற்றம் இறைப்பவன் பாடும் பாடலை எதிரொலிப்பவர்களோ அல்லது எதிராகப் பாடுபர்வகளோ கிடையாது.

விளக்கம்: ஏற்றக்காரனின் பாட்டு அவன் மனம்போனபடி சிறுசிறு சொற்றொடர்களில் இருக்கும். அதற்கு பதில் அளித்து உடனே பாடுவது முடியாது. உதாரணத்துக்கு ஒரு ஏற்றப்பாட்டு (கம்பர் கேட்டது):

மூங்கில் இலைமேலே தூங்கும் பனி நீரே
தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே.

தன் செயலுக்கு விமரிசனங்கள் கூடாது என்று சொல்லுபனுக்கு இந்த பழமொழி உதாரணம் காட்டப்படுகிறது.

*****

099. பழமொழி: கழுதை வளையற்காரன் கிட்டபோயும் கெட்டது, வண்ணான் கிட்டபோயும் கெட்டது.
பொருள்: தன் உரிமையாளன் வளையல் விற்பவனாக இருந்தபோது கழுதை அனுபவித்த வேதனையை, உரிமையாளன் மாறி வண்ணன் ஆனபிறகும் அனுபவித்ததாம்.

விளக்கம்: இருவருமே கழுதையின் மீது அதிக சுமையேற்றி அதைத் துன்புறுத்துவது சகஜம்.

*****

100. பழமொழி: சாலாய் வைத்தாலும் சரி, சட்டியாய் வைத்தாலும் சரி.
பழமொழி: சிரைத்தால் மொட்டை, வைத்தால் குடுமி.
பழமொழி: வெளுத்து விட்டாலும் சரி, சும்மாவிட்டாலும் சரி.

பொருள்: மூன்று பழமொழிகளுக்குமே பொருள், யாராக இருந்தாலும் தான் செய்தது சரியே என்று வாதிப்பார்கள்.

விளக்கம்: பழமொழிகளின் பொருள் ஒரு கதையில் உள்ளது. அரசன் ஒருவன் தன் நாட்டு நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புகளை ஒரு குயவன், ஒரு நாவிதன் மற்றும் ஒரு வண்ணானிடம் ஒப்படைத்தான். இம்முவருமே தாம் செய்யும் தொழிலில் சிறந்தவர்களேயன்றி மற்றபடி படிக்காதவர்கள் என்பது அரசனுக்குத் தெரியும். இவர்கள் இவ்வாறு இருந்தபோது ஒரு நாள் அயோக்கியன் ஒருவன் ஒரு ஏழைக்குடியானவனை நையப் புடைத்துவிட்டான். அடி வாங்கிய குடியானவன் குயவனிடம் சென்று முறையிட்டு, தன் முறையீட்டின் கடைசி வரியாக முதல் பழமொழியைக் கூறினான்.

குடியானவன் சொல்ல நினைத்தது, "அல்லதை அகற்றி நல்லது செய்ய உனக்கு அதிகாரம் இருக்கிறது. உன் உசிதம்போல் செய்." இந்தப் பொருள்பட அவன் குயவனுக்குத் தெரிந்த சொற்களைப் பயன்படுத்திக் கூறினான் (சால் என்றால் பானை). ஏற்கனவே மடையனான அந்தக் குயவன் இவன் தன்னை பரிகாசம் செய்வதாகக் கருதி, குடியானவனை உதைத்து அனுப்பும்படிக் கட்டளையிட்டான். உதை வாங்கிய குடியாவனன் நாவிதனிடம் சென்று முறையிட்டுத் தன் முறையீட்டை நாவிதன் அறிந்த சொற்களால் இரண்டாம் பழமொழியில் உள்ளவாறு முடித்தான். நாவிதன் அதை சொந்த அவமதிப்பாகக் கருத, குடியானவன் மீண்டும் அடி வாங்கினான்.

கடைசியாக, குடியானவன் தனக்கு நேரிட்ட அநியாயங்களை வண்ணானிடம் சென்று முறையீட்டுத் தன் முறையீட்டை மூன்றாம் பழமொழியைக் கூறி முடித்தான். வண்ணானும் அந்தச் சொற்களால் தன்னைப் பரிகாசம் செய்வதாகக் கருதிவிட, குடியானவன் இப்படி இந்த மூன்று ’அதிகாரிகளிடமும்’ தர்ம அடி வாங்கினான்.

தன் கல்வியாலோ உழைப்பாலோ அன்றி வேறுவிதமாக திடீர் என்று செல்வமோ, அதிகாரமோ பெற்ற அற்பர்கள் (upstarts) எவ்விதம் நடந்துகொள்வார்கள் என்பதைப் பழமொழிகள் உணர்த்துகின்றன.

*****


Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக