புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
34 Posts - 49%
heezulia
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
33 Posts - 47%
T.N.Balasubramanian
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
17 Posts - 2%
prajai
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
9 Posts - 1%
Jenila
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
4 Posts - 1%
jairam
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையில் யாப்பு


   
   

Page 3 of 29 Previous  1, 2, 3, 4 ... 16 ... 29  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 08, 2012 8:38 am

First topic message reminder :

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012

இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.





ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Nov 12, 2012 6:25 pm

பயிற்சி 9. விடை

மலைபோல் வந்தது பனிபோல் நீங்கும்.
பனியது பெய்தால் குளமது நிரம்புமா?
குளத்தில் போட்டுக் கிணற்றில் தேடினான்.
கிணற்றுத் தவளை அறியுமோ உலகு?

பயிற்சி 10. விடை

ஆடிக் குடம்புகும், ஆடையில் இரையும்,
மூடித் திறக்கின் முகம்காண், மண்டையில்
தேய்த்தால் பரபர, பிண்ணாக் குமுண்டு;
ஆய்ந்தால் பாம்பும் எள்ளும் ஒன்று.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Nov 13, 2012 8:08 am

3.8. செப்பல் பயிற்சி

கீழ்வரும் வெண்பாக்கள் செப்பல் ஓசை
அடிகள் இயற்றத் துணை கொள்க.

வெண்பா இயற்றத் தளையாகும் வெண்டளையாம்
வெண்டளையால் தானே வருவது செப்பலோசை
மாமுன் நிரையும் விளம்காய்முன் நேரும்
வருவது வெண்டளை காண்.

வெண்பாவின் ஈற்றசை நாள்,மலர் காசு,
பிறப்பு எனப்பட்ட வாய்பாடில் ஓரசையாய்
நேரோ நிரையோ இவற்றுடன் குற்றுகரம்
சேர்ந்தோ வருமெனக் காண்.

பயிற்சி 1. வெண்பா வரத் திருத்துதல்

கீழுள்ள அடிகளை அலகிட்டுப் பார்த்து
தளைதட்டும் நான்கசைச் சீரையும்
அடியிடைத் தளைதட்டும் சீரையும்
தக்கபடி மாற்றிச் சரியாக எழுதவும்.

எல்லோரும் தூங்கும்போது எனக்கு விழிப்பு
பகலே இரவு இரவே பகலாம்
யாரெது சொன்னாலும் கேட்க வேண்டும்
அபார்ட்மென்ட் வாச்மேன் நான்.


பயிற்சி 2. அகவலில் இருந்து செப்பல்

கீழ்வரும் அகவல் அடிகளை மாற்றி
இரண்டடி யில்வரும் குறள்வெண்பா வாகச்
செப்பல் ஓசை கேட்க எழுதுக.

கல்வி செல்வம் வீரம் கொண்ட
நல்லோர் இன்று கானல் நீரே.


பயிற்சி 3. அகவலில் இருந்து செப்பல்

கீழ்வரும் அகவல் அடிகளை மாற்றிச்
செப்பலில் குறள்வெண்பா ஒன்று எழுதுக.

வருவது உரைத்திடும் அரியதோர் கலைதனில்
கரையறு புலமையை உடையவர் மிகச்சிலர்.


பயிற்சி 4. அகவலில் இருந்து செப்பல்

கீழ்வரும் அகவற் செய்யுளைக் குறள்வெண்பா
வாக்கிச் செப்பல் கேட்க எழுதுக.

காற்றினும் கடுகிச் சென்றது புரவி.
பாட்டினில் அதனைச் சொல்வது எளிதோ?


பயிற்சி 5. துள்ளலிலிருந்து செப்பல்

துள்ளல் ஒலிக்கும் கீழ்வரும் செய்யுளை
மூன்று அடிகளில் சிந்தியல் வெண்பா
வாக்கிச் செப்பல் கேட்க எழுதுக.

வீட்டுக்குள் பறந்தோடும் குழந்தையைப் பிடித்திழுத்து
இடுப்பினிலே இருத்திவைத்து நிலாகாட்டி உணவூட்டினாள்.


*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Nov 14, 2012 6:45 am

3.8. செப்பல் பயிற்சி விடைகள்
பயிற்சி 1. விடை

கொடுத்துள்ள அடிகள்:
எல்லோரும் தூங்கும்போது எனக்கு விழிப்பு
பகலே இரவு இரவே பகலாம்
யாரெது சொன்னாலும் கேட்க வேண்டும்
அபார்ட்மென்ட் வாச்மேன் நான்.


அடிகளை அலகிட:
எல்/லோ/ரும் தூங்/கும்/போ/து எனக்/கு விழிப்/பு
பக/லே இர/வு இர/வே பக/லாம்
யா/ரெது சொன்/னா/லும் கேட்/க வேண்/டும்
அபார்ட்/மென்ட் வாச்/மேன் நான்.

சீர்களின் அசைகள் நோக்க:
நேர்-நேர்-நேர் நேர்-நேர்-நேர்-நேர் நிரை-நேர் நிரை-நேர்
நிரை-நேர் நிரை-நேர் நிரை-நேர் நிரை-நேர்
நேர்-நிரை நேர்-நேர்-நேர் நேர்-நேர் நேர்-நேர்
நிரை-நேர் நேர்-நேர் நேர்

1. ’தூங்/கும்/போ/து’ என்று வரும் சீரில் நான்கு அசைகள் காண்க.
இதைத் ’தூங்/க’ (நேர்-நேர்) எனத் திருத்தினால்,
முன்வரும் மூவசைச்சீர் ’எல்/லோ/ரும்’ என்ற (நேர் கடைவரும்) காய்ச்சீருடனும்,
பின்வரும் ’எனக்/கு’ என்ற (நிரை முதல் நேர் கடைவரும்) மாச்சீருடனும்
தளையில் (வெண்டளையெனப்) பொருந்துவது காண்க.

2. ’பக/லாம் -- யாரெது’ என்று (அடியிரண்டின் இறுதி அடிமூன்றின் முதல் சீர்கள்) வருவது
(நேர் முன் நிரை வராததால்) தளைதட்டும்.
இந்தச் சொல்லை ’எவ/ரெது’ என்று திருத்தினால் (இரண்டாம் மூன்றாம்) அடியிடையும்,
அடுத்து வரும் சீருடனும் தளையில் ஒன்றும்.

3. அடிமூன்றில் ’கேட்/க -- வேண்டும்’ என்று வருவது நேர் முன் நேர் வந்து தளைதட்டும்.
இதை ’கேட்/டிட -- வேண்டும்’ என்று திருத்த, நிரை முன் நேர் வந்து தளையில் ஒன்றும்.

4. இறுதி அடியில் ’அபார்ட்/மென்ட் -- வாச்/மேன் -- நான்’ என்று வருவது நேர் முன் நேர் வர,
இரண்டாம் சீரின் முன்னும் பின்னும் தளை தட்டும்.

’அபார்ட்மென்ட்டின் -- வாச்/மேன் -- நான்’ என்று திருதினால் முதலிரு சீர்கள் தளையில் ஒன்றும்.
ஆயினும் சிர்கள் இரண்டும் மூன்றும் (இப்போதும் நேர் முன் நேர் வர) சேரும்போது தளை தட்டும்.
’அபார்ட்/மென்ட்/டின் கா/வலா/ளி நான்’ என்று திருத்தினால் சீரிரண்டில் ’வாச்மேன்’ என்பது ’காவலாளி’ என்று
மூவசைச் சீராகி, இருபுறமும் தளையில் ஒன்றும் காண்க.

திருத்தியபின் வெண்பா:
எல்லோரும் தூங்க எனக்கு விழிப்பு
பகலே இரவு இரவே பகலாம்
எவரெது சொன்னாலும் கேட்டிட வேண்டும்
அபார்ட்மென்ட்டின் காவலாளி நான்.


பயிற்சி 2. விடை

கல்வியும் செல்வமும் வீரமும் கொண்டுள்ள
நல்லவர்கள் கானல்நீர் இன்று.

பயிற்சி 3. விடை

வருவது கூறும் அரிய கலையில்
கரையில் புலமை சிலர்க்கு.

வருவது கூறும் அரிய கலையில்
கரையறு வல்லோர் சிலர்.

பயிற்சி 4. விடை

காற்றினும் வேகமாகச் சென்ற புரவியது.
பாட்டில் உரைப்ப தெவண்?

பயிற்சி 5. விடை

வீட்டினுள் ஓடும் குழந்தையைப் பற்றிழுத்துத்
தூக்கி இடையில் இருத்தி நிலாக்காட்டி
ஊட்டினாள் அன்னை உணவு.


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 15, 2012 9:04 am

பயிற்சி 6. துள்ளலிலிருந்து செப்பல்

துள்ளல் ஒலிக்கும் கீழ்வரும் செய்யுளை
இரண்டு அடிகளில் குறளியல் வெண்பா
வாக்கிச் செப்பல் கேட்க எழுதுக.

படியளக்கப் பெருமாளின் வரம்தரும்கை இருக்கிறதே!
அடிநோக்க நதிகங்கா அமுதூற்றாய்ப் பொழிகிறதே!


பயிற்சி 7. கலைந்த சொற்களிலிருந்து மா-முன்-நிரை வரும் செப்பல்

கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்து
நான்கு அடிகளில் முதலிரண்டில் ஒலியியைபும்
இறுதி யிரண்டில் எதுகையும் அமைந்து
சீர்கள் அனைத்தும் மாமுன் நிரைவந்து
செப்பல் ஓசை கேட்க எழுதுக.

கிடக்கும் இருளில் மறைக்க மனையில் முகத்தில் படிந்து திகில். சிதைந்த சிலந்தி விழியை
நுழைந்தால் அகத்தில் வலைகள் உறைந்து


பயிற்சி 8. கலைந்த சொற்களிலிருந்து விளம்-முன்-நேர் வரும் செப்பல்

கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்து
முதல்நிரல் வைத்து இரண்டு அடிகளும்
பின்னிரல் வைத்து ஈற்றடி யிரண்டும்
அடிகள் இரண்டில் ஓரெதுகை அமைந்து
செப்பல் ஓசை கேட்க எழுதுக.

கொய்துநீ நித்திய பூத்திடும் மல்லிகை அந்தியில் மாலையாய்க் முந்தியே மொட்டுகள்
பூமணம் கட்டவுன் தங்கிநீ தொட்டிடப் பூக்குமே நார். கைகளில்


பயிற்சி 9. கலைந்த சொற்களிலிருந்து காய்-முன்-நேர் வரும் செப்பல்

கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்து
இரண்டு அடியில் காய்முன் நேர்வர
செப்பல் ஓசை கேட்க எழுதுக.

தாய். தூங்கிவிட்டாள் தூங்காத தூளியாட்டித் தாலாட்டித் பாப்பாவைத் தூளியாட்டித்

பயிற்சி 10. உரைநடை வாக்கியத்திலிருந்து செப்பல்

கீழ்வரும் உரைநடை வாக்கியம் வைத்து
இரண்டு அடிகளில் வந்திடு மாறு
செப்பல் ஓசை கேட்க எழுதுக.

பெருமாள் படி அளந்ததால் தம் பாவங்களைப் பணமாக்கி உண்டியலில் போட்டனர்!

*****


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 15, 2012 3:29 pm

மிகவும் பிரயோசமானதும், என்போன்ற மரபுக்கவி விரும்பிகளுக்கு கைதந்து உயர வைக்கும்
பணியையும் போற்றி வாழ்த்துகிறேன் வாழ்க!!!
அன்புடன்
கிரிகாசன்

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Nov 16, 2012 8:16 am

பயிற்சி 6. விடை

படியளக்க மாலின் வரம்கை இருக்க
அடிகங்கை யூற்றின் அமுது.

பயிற்சி 7. விடை

சிதைந்த மனையில் சிலந்தி வலைகள்
உறைந்து கிடக்கும் இருளில் நுழைந்தால்
முகத்தில் படிந்து விழியை மறைக்க
அகத்தில் உதிக்கும் திகில்.

பயிற்சி 8. விடை

அந்தியில் பூத்திடும் நித்திய மல்லிகை
முந்தியே மொட்டுகள் கொய்துநீ மாலையாய்க்
கட்டவுன் கைகளில் பூமணம் தங்கிநீ
தொட்டிடப் பூக்குமே நார்.

பயிற்சி 9. விடை

தூளியாட்டித் தாலாட்டித் தூங்காத பாப்பாவைத்
தூளியாட்டித் தூங்கிவிட்டாள் தாய்.

பயிற்சி 10. விடை

படியளக்கும் மாலிடம்தம் பாவமெலாம் உண்டியலில்
போட்டார் பணமாக்கி யே!


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Nov 16, 2012 8:27 am

வணக்கம் திரு. கிரிகாசன்.

அறுபதுகளில் ஆரபித்ததாலோ என்னவோ எனக்கு உங்களைப் போல் எதுகை மோனைகள் அமைத்து நீரோட்டம் போலக் கவிதைகளைப் புனைய முடிவதில்லை; அல்லது அவ்வாறு சில வரிகள் புனைவதற்கே மிகவும் உழைத்து நீண்ட நேரம் செலவிட வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் ’கவிதையில் யாப்பு’ தொடர் உங்களுக்கும் பயனுள்ளதாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி. ஏதேனும் பிழைகள், குறைகள் கண்டால் உடனே அஞ்சலிடுங்கள், திருத்திக் கொள்கிறேன், கற்றுக் கொள்கிறேன்.

இங்குள்ள நாம் அனைவருமே ஒருவருக்கொருவர் ஆசான்-மாணாக்கர்கள் தாமே? கற்றதைப் பகிர்ந்துகொள்ளும் போது ஆசான்; பகிர்ந்ததைக் கற்றுக்கொள்ளும் போது மாணாக்கன்.


kirikasan wrote:மிகவும் பிரயோசமானதும், என்போன்ற மரபுக்கவி விரும்பிகளுக்கு கைதந்து உயர வைக்கும்
பணியையும் போற்றி வாழ்த்துகிறேன் வாழ்க!!!
அன்புடன்
கிரிகாசன்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Nov 16, 2012 3:10 pm

ரமணி wrote:வணக்கம் திரு. கிரிகாசன்.

அறுபதுகளில் ஆரபித்ததாலோ என்னவோ எனக்கு உங்களைப் போல் எதுகை மோனைகள் அமைத்து நீரோட்டம் போலக் கவிதைகளைப் புனைய முடிவதில்லை; அல்லது அவ்வாறு சில வரிகள் புனைவதற்கே மிகவும் உழைத்து நீண்ட நேரம் செலவிட வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் ’கவிதையில் யாப்பு’ தொடர் உங்களுக்கும் பயனுள்ளதாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி. ஏதேனும் பிழைகள், குறைகள் கண்டால் உடனே அஞ்சலிடுங்கள், திருத்திக் கொள்கிறேன், கற்றுக் கொள்கிறேன்.

இங்குள்ள நாம் அனைவருமே ஒருவருக்கொருவர் ஆசான்-மாணாக்கர்கள் தாமே? கற்றதைப் பகிர்ந்துகொள்ளும் போது ஆசான்; பகிர்ந்ததைக் கற்றுக்கொள்ளும் போது மாணாக்கன்.


kirikasan wrote:மிகவும் பிரயோசமானதும், என்போன்ற மரபுக்கவி விரும்பிகளுக்கு கைதந்து உயர வைக்கும்
பணியையும் போற்றி வாழ்த்துகிறேன் வாழ்க!!!
அன்புடன்
கிரிகாசன்

ஒரு உண்மையை ச் சொல்லவா எனக்கு மரபு தெரியாது. எதுகை மோனை தெரியும் அதை விட்டு வேறு எதையும் நான் அரைகுறையாகப் படித்தும்(இங்கே ஈகரையில்தான்)
அவை எதுவும் கவிதை புனையும்போது ஞாபகத்தில் வருவதில்லை. என்பாட்டில் செய்கிறேன். இன்றைய என்கவிதை காணவும் எனவே நான் இன்னமும் மாணாக்கன்தான்







ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Nov 17, 2012 7:47 am

3.9. துள்ளல் ஓசை

துள்ளல் என்பது குதித்தல் ஆகும்.
துள்ளலில் நடையே தடைப்படும்;
பசுவின் கன்று துள்ளல் போல,
இடையிடை உயர்ந்து மீண்டும் சமன்படும்.

துள்ளலை விளக்கும் கீழ்வரும் மூன்று
அடிகளில் சீரிடை மட்டும் கலித்தளை
பயின்றிடத் துள்ளல் வருவது காண்க.

ஓரடிக்குள் அறுதியிட்டு அடியிடையே தொடராமல்
காய்ச்சீர்முன் நிரைவந்த கலித்தளையால் கலிப்பாவில்
துள்ளலோசை பயின்றுவந்து பசுக்கன்றை நினைவூட்டும்.

கீழ்வந்த கலிப்பாவின் தளையோசை அறிந்துகொள்க:

ஒருநோக்கம் பகல்செய்ய ஒருநோக்கம் இருள்செய்ய
இருநோக்கில் தொழில்செய்தும் துயில்செய்தும் இளைத்துயிர்கள்
கருநோக்கா வகைக்கருணைக் கண்ணோக்கம் செயுஞானத்
திருநோக்க அருணோக்கம் இருநோக்கும் செயச்செய்து
மருநோக்கும் பொழில்தில்லை மணிமன்றுள் நடஞ்செய்வோய்.
---குமரகுருபரர், சிதம்பரச் செய்யுட்கோவை

3.10. துள்ளல் முயற்சி
நாமும் துள்ளல் புனைந்திடு வோமா?
துள்ளல் ஓசையின் தேவைகள் என்ன?

காய்ச்சீர்முன் நிரைவந்தால் கலித்தளை யாகும்
கலிப்பாவில் அதுபெரிதும் பயின்று வந்திடும்.
சீரிடைத் தளைத்தல் வேண்டும் அடியிடைத்
தளைத்தோ தளைத்தல் இன்றியோ வரலாம்.

வீட்டுக்குள் பறந்தோடும் குழந்தையைப் பிடித்திழுத்(து)
இடுப்பினிலே இருத்திவைத்து நிலாகாட்டி உணவூட்டினாள்.


இந்த வரிகளை அலகிடக் கிடைப்பது
வீட்/டுக்/குள் பறந்/தோ/டும் குழந்/தை/யைப் பிடித்/திழுத்(து)
இடுப்/பினி/லே இருத்/திவைத்/து நிலா/காட்/டி உண/வூட்/டினாள்.

சீர்களின் அசைகள் நோக்கிடக் கிடைப்பது
நேர்-நேர்-நேர் நிரை-நேர்-நேர் நிரை-நேர்-நேர் நிரை-நிரை
நிரை-நிரை-நேர் நிரை-நிரை-நேர் நிரை-நேர்-நேர் நிரை-நேர்-நிரை

பிடித்திழுத்(து) இதுப்பினிலே என்ற சீர்கள்
பிடித்திழுத் திடுப்பினிலே என்றாகிப் புணர்ச்சியில்
கருவிளம் கருவிளங்காய்ச் சீர்களாகி விளம்முன்
நிரைவர நிரையொன் ராசிரியத் தளையாகு(ம்)
எனினும் பெரிதும் கலித்தளை பயின்று
வருவதால் அடிகளில் துள்லலே கேட்கும்

குழந்தையின் துள்ளலும் தாய்தடு மாற்றமும்
பொருளிலும் ஒலியிலும் இயல்வது நோக்குக.

துள்ளலோசை தொடர்ந்துவர நிரையசையில் தொடங்குகிற
புளிமாங்காய் கருவிளங்காய் எனும்காய்ச்சீர் களையடுக்கி
அடிதோறும் அமைத்திட்டால் எழுதும்பா முழுவதுமே
ஒலித்துள்ளல் வருமெனினும் இதுபோல எழுதுவது
கடினமென்றும் ஒருநிலையில் செயற்கையாகு(ம்) எனவுமறிக.

சீர்களில் மட்டுமே தளைத்து வந்தாலும்
கலித்தளை மட்டுமே பயின்று வருகிற
துள்ளல் தொடர்ந்து எழுதுதல் கடினம்.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Nov 18, 2012 1:04 pm

3.11. துள்ளல் பயிற்சி

நினைவிற் கொள்ள:
காய்ச்சீர்முன் நிரைவந்தால் கலித்தளை யாகும்
கலிப்பாவில் அதுபெரிதும் பயின்று வந்திடும்.
சீரிடைத் தளைத்தல் வேண்டும் அடியிடைத்
தளைத்தோ தளைத்தல் இன்றியோ வரலாம்.

நிரைமுதலாய் வருகின்ற புளிமாங்காய் கருவிளங்காய்
எனும்காய்ச்சீர் களையடுக்கி அமைத்திட்டால் கலித்தளைதான்
பயின்றுவர ஒலித்துள்ள(ல்) உயர்ந்துவரும் தடங்கலின்றி.

பயிற்சி 1. எல்லாம் கலித்தளை: காய்-முன்-நேர்

கீழ்வரும் வரிகளை அலகிட்டுப் பார்த்து
துள்ளல் ஓசை சீரிடை வருவது
ஒவ்வொரு வரியிலும் உறுதி செய்யவும்.

படியளக்கப் பெருமாளின் வரம்தரும்கை இருக்கிறதே!
அடிநோக்க நதிகங்கா அமுதூற்றாய்ப் பொழிகிறதே!


பயிற்சி 2. அகவலிலிருந்து துள்ளல்

கீழ்வரும் வரிகளில் ஈரசைச் சீர்களை
தக்க வேற்றுமை விகுதிகள் கொடுத்து
காய்வரும் சீர்களாக மாற்றிக் கலித்தளை
சீரிடை மட்டும் வந்திடு மாறு
துள்ளை ஓசை கேட்க எழுதுக.

வானப் பரப்பில் மேகச் சுவடில்லை!
சூரியன் தெரியாத வெளியில் நீலநிறம்!


பயிற்சி 3. செப்பலிலிருந்து துள்ளல்

செப்ப லோசை பயின்று வருகிற
கீழ்வரும் வெண்பா அடிகள் நான்கையும்
காய்ச்சீ ராக்கிக் கலித்தளை சீரிடை
அடியிடை வருமாறும் இறுதி யடியில்
நாற்சீர்கள் வருமாறும் அமைத்துத்
துள்லை ஓசை கேட்க எழுதுக.

சிதைந்த மனையில் சிலந்தி வலைகள்
உறைந்து கிடக்கும் இருளில் நுழைந்தால்
முகத்தில் படிந்து விழியை மறைக்க
அகத்தில் உதிக்கும் திகில்.


பயிற்சி 4. தூங்கலிலிருந்து துள்ளல்

கனிமுன் நிரைவரும் வஞ்சித் தளையிட்டு
இருசீர் களில்வரும் கீழுள்ள அடிகளை
நாற்சீர் அடிகளில் அமைத்துக் கலித்தளை
சீரிடை அடியிடை முழுதும் பயின்று
துள்லை ஓசை கேட்க எழுதுக.

பனியிறங்கிடும் பருவத்தினில்
அதிகாலையில் எழுந்தவுடனே
தனியாகவே நகரத்துள
தெருக்கள்வழி உலாவந்தபின்
மணிகண்டனின் கடைதருகிற
ஒருகோப்பையின் இலைத்தேஎநீர்
பருகிநின்றுநான் உரையாடலில்
களித்தநாளது இனிவருமோ?



Sponsored content

PostSponsored content



Page 3 of 29 Previous  1, 2, 3, 4 ... 16 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக