புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
31 Posts - 53%
heezulia
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
1 Post - 2%
jairam
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
1 Post - 2%
சிவா
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
1 Post - 2%
Manimegala
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
13 Posts - 4%
prajai
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
9 Posts - 3%
Jenila
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
4 Posts - 1%
Rutu
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
3 Posts - 1%
jairam
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10கவிதையில் யாப்பு - Page 27 Poll_m10கவிதையில் யாப்பு - Page 27 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையில் யாப்பு


   
   

Page 26 of 29 Previous  1 ... 14 ... 25, 26, 27, 28, 29  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 08, 2012 8:38 am

First topic message reminder :

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012

இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.





ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Dec 12, 2013 10:14 am

6.65. வெண்பா நுணுக்கங்கள்:
அடிகளில் இயற்சீர் நிரல்கள்


காய்முன் நிரையும் விளம்முன்னே நேரசையும்
ஆய்ந்தால் இயற்சீரின் வெண்டளை யாவதால்
வெண்பா அடியின் இயற்சீர் நிரல்வருதல்
கண்படுமே கீழுள்ள வாறு.

தேமா புளிமா கருவிளம் கூவிளம்
சாமான் யமாகத் தெரியும் நிரலே
ஒருசீர் அடியில் ஒருமுறை யென்றே
உறழ்ந்து இறுதியில் ஒவ்வொரு சீராய்ப்
பிறழ்ந்தே வரலாம் புளிமா கருவிளம்
கூவிளம் தேமா வென.

சான்றுகள்
நீயோ அவளோ இருவரும் வந்திட
நாயும் வருமே யுடன்.

அவர்கள் இருவரும் வந்திட நாயும்
உவந்தே யுடன்வரு மே.

இருவரும் வந்திட நாயும் வருமே
அரியதோர் நண்பனா க.

வந்திடும் நாயும் இருவர் முதுகுபின்
சந்துபொந் தெல்லாம் நுழைந்து.


*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Dec 14, 2013 11:28 am

6.66. வெண்பா நுணுக்கங்கள்: காய்ச்சீர் நிரல்கள்

நிரைமுதல் காய்ச்சீர் புளிமாங்காய் மற்றும்
கருவிளங்காய் வந்தால் அடிமுதலே; எல்லாமே
காய்ச்சீராய் வந்தால் அடிகளின் ஈற்றிலே
மாச்சீர் வரவேண்டு மாம்.


நிரைமுதல் காய்ச்சீர் இடைவாரா காய்முன்
நிரைவரா தென்பதா லே.

சான்று: புளிமாங்காய் முதற்சீரில்
திரைபின்னே உள்ளதெலாம் திண்ணமுறைப் பார்யார்?
வரையாலே கட்டுண்ண வாட்டமெவண் போகும்?
புரைநீங்கிப் பொன்னாகப் போற்றிடவே ஈசன்
கரைநீக்கி யாட்கொள்வா னாம்.

சான்று: கருவிளங்காய் முதற்சீரில்
திரையிதன்பின் உள்ளதெலாம் திண்ணமுறைப் பார்யார்?
வரையிதுவே கட்டாக வாட்டமெவண் போகும்?
புரையறவே பொன்னாகப் போற்றிடவே ஈசன்
கரையறவே ஆட்கொள்வா னாம்.


***

தேமாங்காய் கூவிளங்காய்ச் சீர்கள் இரண்டுமே
ஆமாம் வரலாம் அடுத்தடுத்தே ஆயின்
இடையில் இயற்சீர்கள் சேர்ந்தே பெரிதும்
நடைபயின் றாலஃ தழகு.


சான்று: தேமாங்காய் கூவிளங்காய் நிரல்
எல்லாமே ஓர்பொருளாம் என்றேநம் உள்வரவே
அல்லல்கள் இல்லையென அற்றுப்போய் - பல்வகையில்
பேர்பெற்றே வாழுமுயிர் எல்லாமே நம்முறவாய்
நேர்காண்போம் அன்பொழுக வே.


சான்று: காய்ச்சீர் இயற்சீர் அழகுற வந்தது
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
--ஔவையார், நல்வழி 12


*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Dec 15, 2013 11:47 am

6.70. வெண்பா இன்று

புதுக்கவிதைத் தாக்கம் புரையோடும் இன்று
பொதுவாக யாப்பின் மரபினில் வெண்பா
புனைவதில் ஈடுபாடு குன்றாது கொண்டு
முனைவோர் இணையத்தில் உண்டு.

பலவே மரபினில் பாக்கள் முனைவோர்
பலரின்று உள்ளபோதும் வெண்பா வடிவமே
பாவலர் மேற்கொளும் பாவென் றிருந்திட
ஆவலுடன் நாடுவோ ராம்.

வெண்பா புலவர் புலியெனச் சொன்னதின்று
நண்பர்கள் வீட்டில் வலம்வரும் பாரதியின்
வெண்ணிறமும் சாம்பலும் சாந்தும் கலந்தபல
வண்ணத்தில் பூனையாயிற் றாம்.

மரபில் கவிமுனைவோர் பற்பலர் என்று
தெரியும் எளிதிலே கூகிள் வகைத்த
வலைதேடும் மென்பொருள் எந்திரம் மூலம்
வலையில் விளையும் மரபு.

மரபுக் கவிதை யெனத்தமிழில் தட்டி
உருவில் யுனிகோடாய் மாற்றியே தேட
ஒருலட்சம் மேற்பட்ட மின்பக்கம் காண
மரபின் விளங்கும் முனைப்பு.

அறன்பொருள் இன்பம் வழியுரைத்த வெண்பா
மறமோங்கும் இந்நாள் அகிலத்தின் சாதனைகள்
போதனைகள் வேதனைகள் போக்குகள் பூசல்கள்
பேதங்கள் பேசுமே இன்று.

மரபில் எழுதி அனுபவம் பெற்றோர்
பரவிக் கிடந்திடும் பாவலர் ஆக்கிய
வெண்பாக்கள் பார்ப்போம் சில.

*****

1. குறள் வெண்பா இன்று
அகரம் அமுதா
பேணும் பெருங்கற்பே பெண்டிற்(கு) எழிலாகும்
ஆணுக்கும் அஃதே அழகு!

வெம்புகையில் இன்பம் விளையும் எனுங்கருத்தை
நம்புகையில் வீழும் நலம்!

நகைபூக்கும் வாயில் புகைபூக்கக் காண்டல்
தகையில்லை வேண்டும் தடை!

***

சுந்தரராஜ் தயாளன்
பிறவிக் குருடர்கள் பற்றி
இருளில் இருந்தோ இறைவன் படைத்தான்
கருவில் உருவாகாக் கண்.

குறைசொல்வோர் கூறிடுவார் குற்றம், குணத்தில்
நிறைவடையார் நில்லார் நிலைத்து.

இடத்துக் கிடம்மாறும் இங்கிருக்கும் அங்கே
படரும், பதுங்கும் பணம்.

*****

கேளிக்கைக் குறள்வெண்பா

மனமகிழ் பாக்குறள் யாப்பதும் உண்டு
சனரஞ் சகமா கவே.

முதற்சொல்லை வைத்து முடிவு அமைப்பர்
அதற்குவேறு அர்த்தம் வர.

இலந்தை ராமசாமி
உடைந்துள்ள கண்ணாடி உட்கதவின் பின்னாடி
உள்ளதே என்றன் உடை.

கடைசியில் தேடிநான் கண்டு பிடித்துவிட்டேன்
கண்ணாடி விற்கும் கடை.

ஓட்டுக்கள் போட்டும் உதவாத பேர்வழியை
ஊருக்குள் வாராமல் ஓட்டு.

***

தங்கமணி
நாடுன் தவமன்றோ நாளுமதன் மேன்மையை
நாடும் தகவினை நாடு.

கொடுப்பினை என்றால் கொடுத்தின்பம் கொள்ளல்
கொடுப்பதை அன்பாய்க் கொடு.

***

வி.சுப்பிரமணியன்
கல்லென்றும் கல்லார் சில(ர்)அவர் வாழ்வினில்
செல்லும் வழியெங்கும் கல்.

கடனென்று வாங்கியதைக் காலம் தவறா(து)
அடைத்தல் ஒருவர் கடன்.

*****

பக்திக் குறள்வெண்பா

வி.சுப்பிரமணியன்
இலையோ மலரோ இறைவனுக்(கு) இட்டால்
நலம்பெறலாம்; துன்பம் இலை.

இருகரம் கூப்பி இறைவனைப் போற்றி
ஒருகுறை இன்றி இரு. ... [’ஒருகுறையும்’ என்றிருந்தால் இன்னும் சிறக்குமே?]

நச்(சு)அரவை நல்ல அரைநாணாக் கட்டிய
பிச்சனை நெஞ்சேநீ நச்சு.

கூடுவிட்டுப் போம்முன்னே கூன்பிறையைச் சூடிநடம்
ஆடும் இறைவனைக் கூடு.

விடையேறும் ஈசனை வேண்டினால் ஈவான்
அடைந்தார்க்கு நல்ல விடை.

கழலா வினையும் கழலும் மனமே
விழைவாய் இறைவன் கழல்.

ஓடுநதி ஆடுமர வோடுபிறை சென்னிமிசை
சூடுமிறை கையினிலோர் ஓடு.

ஆற்றுச் சடையான் அணிமதி சூடியைப்
போற்றி நிதம்திருத்தொண்(டு) ஆற்று.

பரவும் சடைமேல் பனிநிலாச் சூடும்
பரமனைப் பாடிப் பரவு.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Dec 22, 2013 10:08 am

2. சிந்தியல் வெண்பா இன்று
அகரம் அமுதா.
நல்லார் உறவால் நலம்பெருகும் நாடோறும்
அல்லார் உறவால் அறந்தேயும் - பொல்லார்
தொடர்விடுதல் மேலாந் துணை!

அன்புற் றெவர்க்கும் அறனல்ல செய்யாது
தென்புற்று நன்குஞற்றுஞ் செம்மைத் திருவுடையார்
இன்புற்று வாழ்வ ரினது!

விசய பாரதி ந.வீ.
தெள்ளுதமிழ்ச் சொத்தெமக்கு; சிந்தனைக்கு நல்லறிவை
அள்ளியள்ளி ஊட்டும் அமுதமழை - வெள்ளமது
வள்ளுவமோர் முப்பால் மது.

3. நேரிசை அளவியல் வெண்பா இன்று
இக்பால்
அருளிருந்தால் சொர்க்கம் அடையலாம் என்பார்
பொருளின்றி வாழ்க்கையுண்டோ பூமேல்? - திருவே
வருமானம் தேவைக்கு வந்துவிட்டால் எல்லா
இருளும் வெளிச்சம் எனக்கு.

துன்பத்தைக் கண்டு துவண்டு மருளாதே
இன்னல் விலகலாம் எக்கணமும் - அன்புள்ளாய்
தோயும் இருள்விலக்கித் தோன்றுவான் சூரியன்
காயில் இருக்கும் கனி.

குறிப்பிட்ட வேளையில் கூட்டம் தொடங்கி
வெறுஞ்சடங்கு எல்லாம் விலக்கி - நறுந்தமிழில்
கற்றார் உரையாற்றுங் காலத்தில் அல்லவோ
வெற்றி பெறும்நம் விழா!

தன்னை மறைக்கும் தவஞானி வேராவார்
புன்னகை செய்பவர் பூக்களாம் - இன்புறவே
அள்ளிக் கொடுப்பார் அருங்கனி; கைவிரித்து
இல்லையெனச் சொல்வார் இலை.

தந்தை,தாய் நல்லுயிர்; தாரம் சுடர்விழி
கந்தம் கமழ்பிள்ளை கைநமக்கு - சொந்தபந்தம்
கால்கள்; துயரம் களையப் பறந்துவரும்
தோழன் சுமைதாங்கும் தோள்.

ஜெயபாரதன் சி.
ஈழத்தில் இட்டதீ சீதைக்(கு)! எழில்மதுரை
சூழத்தீ இட்டது கண்ணகிக்கு! - வாழாது
மீண்டும் நகைச்சண்டை!  மேனியில்தீ தங்கைக்கு!
வேண்டாம் வரதட் சணை!

4. இன்னிசை அளவியல் வெண்பா இன்று
இக்பால்
உழைப்புக்குத் தக்கபடி ஊதியம்நல் காமல்
பிழைக்கும் பணந்தேடிப் பேய்கள் - கிளியேகேள்
ஆறாமல் ஏழை அழுது வடித்தகண்
நீரும் நெருப்புக்கு நேர்.

ஜெயபாரதன் சி.
பிறப்பும், இறப்பும், பெருமையும், தாழ்வும்
துறப்பும், பிணைப்பும் தொடரும் - எரியும்
நெருப்பும், பனியும்  நிலையாது மாறும்
இருளும், வெளிச்சம் எனக்கு.

5. கேளிக்கை வெண்பாக்கள்
மாதவச் சிவஞான யோகிகள்
சற்றே துவையலரை தம்பியோர் பச்சடிவை
வற்றலே தேனும் வறுத்துவை - குற்றமிலை
காயமிட்டுக் கீரைகடை கம்மென வேமிளகுக்
காயரைத்து வைப்பாய் கறி.

காளமேகப் புலவர் பற்றிய செவிவழிச் செய்தி
புலவர் ’பாக்குத்...நன்நாக’ வரை எழுதிப் பாதியில் விட்ட வெண்பாவை வேறு ஒருவர் முடித்தது:

பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு
நாக்கு தமிழுரைக்கும் நன்நாகை - மூக்குமுட்ட
உண்ணும் உணவை உருட்டி விழுங்கிடின்
தொண்டையில் விக்குமே  சோறு.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் ராயகோபுரக் கல்வெட்டில் நேரிசை வெண்பா
(காளமேகம் தன்னைப்பற்றி எழ்திக்கொண்ட வெண்பா என்று கருதப் படுகிறது)

மண்ணில் இருவர் மணவாளர் மண்ணளந்த
கண்ணன் அவன்,இவன்பேர் காளமுகில் - கண்ணன்
அவனுக்கூர் எண்ணில் அணியரங்கம் ஒன்றே
இவனுக்கூர் எண்ணா யிரம்.

*****

இக்பால்
சீர்விளங்கும் காதற் செழுமலரைக் கைபிடித்தேன்
பேர்விளங்கும் பிள்ளைகளைப் பெற்றெடுத்தேன் - ஊர்மதிக்கும்
பொன்னும் மணியும் புகழும் மிகப்பெற்றேன்
என்னதான் வேண்டும் இனி?

வேதனை எல்லாம் விதிப்பயன் என்றுசொல்லிப்
பேதலிப்பார் நெஞ்சின் பிழைதிருந்தப் - போதிப்பேன்
வாடும் மனிதர் வளம்பெற்று வாழ்ந்திடவே
பாடுவேன் பைந்தமிழ்ப் பா.

கன்னலும் பாலும் கனிச்சாறும் செந்தேனும்
உண்ணத் தெவிட்டலாம் ஓர்நாளில் - பைந்தமிழ்
அன்றாடம் தேடியே அள்ளியள்ளி உண்டாலும்
தின்னத் தெவிட்டாத தேன்?

சுரேஷ் பாபு
கண்கள் நறுங்குவளை, கன்னங்கள் வெண்ரோசா,
நுண்நாசி எள்ளின்பூ, வெண்பற்கள் மல்லிகை, ...
பூவை விரும்புகிறாள் என்றியற்கை வைத்தானோ!
பூவைமேல் எத்தனைப் பூ!
[நுண்நாசி எள்ளின்பூ, மல்லிகை - வெண்பற்கள், என்று வந்திருந்தால் நேரிசை வெண்பா]

நிரஞ்ஜன் பாரதி எழுதியதை இலந்தை ராமசாமி திருத்தியது
தாயவளின் பொற்கரத்தால் தங்கமாய் வந்துதித்துச்
சேயவனின் நெஞ்சத்தைச் சேகரித்து - வாயதனில்
அக்கறை கொண்டென்றன் அம்மா  கனிந்தூட்டும்
சக்கரைப் பொங்கல் தனி.

ஜெயபாரதன் எஸ்.
வயிற்றுக்குச் சோறில்லை, வாங்கிடக் காசே(து)?
அயர்ச்சியில் சோர்வாய் அறிவு - மயங்கிடினும்
நாடுவேன் வெண்பாவை, நாள்தோறும் சிந்தித்துப்
பாடுவேன் பைந்தமிழ்ப் பா.

அரையுடையில் தோற்றம்! அறுபதுபேர் ஆட்டம்!
திரையிலே தேவையற்ற கூத்தா? - அரங்கத்தில்
புல்லரின் எந்திரப் பொம்மைகள் பேயாட்டம்
கல்லாதான் ஆக்கும் கலை.

[Ref:https://groups.google.com/group/anbudan/browse_thread/thread/fc8c416a2b42f73a/df7b25420646f165?hl=ka%CF%9Ba95bbc19f1759&]

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Dec 28, 2013 11:54 am

6.64. சவலை வெண்பா

இருகுறள் சேர்ந்தே தனிச்சொல் விடுத்து
வருமே சவலைவெண் பாவாம்
அடியிரண்டில் சீர்மூன்றே வந்துவெண் பாப்போல்
முடியும் இலக்கணம் பெற்று.

முழுமையாய் வெண்பா இலக்கணம் இன்றி
எழுமே சவலைவெண்பா என்றாலும்
இருகுறள் வெண்பா இணைவதால் மட்டும்
வருவதென் றாகா தது.

அறுவகை யிலக்கணம் சொல்வதிலிருந்து:
(ஆசிரியர்: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)

முதற்குறள் ஈற்றுச்சீர் ஓரசை யல்லா(து)
அதுவேவெண் பாக்குறிய ஏனைய
சீர்களில் ஒன்றாய் இருந்து தனிச்சொல்லை
ஏராது நிற்கு மிது.

வேறோர் வகையில் இலக்கணம் சொன்னாலோ
நேரிசை வெண்பாத் தனிச்சொல்லை
நீக்கச் சவலை; தனிச்சொல் இதனுடன்
சேர்க்க வரும்நே ரிசை.


அரிதே பயிலும் சவலைவெண் பாவைப்
பெரிதாய்ப் புலவர் இயற்றிட
வில்லை யெனவே இதுவே பொதுவாக
இல்லை வழக்கிலென் போம்.

சான்றுகள்
அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவல்ல
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசந்து
சுட்டாலும் வெண்மை தரும்.
--ஔவையார், மூதுரை 4.

அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்
நிகரில் குரவர் இவரிவரைத்
தேவரைப் போலத் தொழுக என்பதே
யாவரும் கண்ட நெறி.
--பெருவாயின் முள்ளியார், ஆசாரக் கோவை 16.

அவமிருந்தோ ராயிரம்நீத் தாண்டுகொண்ட தன்றிச்
சிவன்விழிநீ யென்றுமுரை செய்தாய்
பவமொழியச் சற்றருட்கண் பாராய் பழனித்
தவகுலவே டக்குருநா தா.
--பழனிக் கலம்பகம் 61.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Jan 04, 2014 12:58 pm

6.65. கலிவெண்பா

வெண்பா விலக்கணம் ஏற்றே வரும்கலி
வெண்பாக்கீ ழெல்லை யடிபதின் மூன்றாகும்;
வெண்பாமே லெல்லையே பாவலர் உள்ளமாம்;
வெண்பா விதுவருமே இன்னிசை நேரிசை
யென்றே இருவகை; ஈரடிக் கோரெதுகை
ஒன்றிட மோனை பொழிப்பில் வருவதாம்;
நண்ணி எதுகையில் ஒன்றும் இரண்டடிக்
கண்ணி யெனவும் அழைக்கப் படுமே.
தனிச்சொல் பெறுவது நேரிசை யாகும்
தனிச்சொல் பெறாததே இன்னிசை யாகுமே;
தூது உலாமடல் போன்ற பிரபந்தம்
ஓதும் கலிவெண்பா நேரிசை யாகும்;
திருவா சகத்தின் சிவபுராணம் மற்றும்
பெரிய சிறிய திருமடல் நூலில்
விரியுமே இன்னிசை யே.


நேரிசைக் கலிவெண்பாச் சான்று
’தமிழ்விடு தூது’, இயற்றியவர்: மதுரைச் சொக்கநாதர்
(268 கலிவெண்பாக் கண்ணிகளில் முதல் ஏழும் இறுதியும்)


சீர்கொண்ட கூடற் சிவராச தானிபுரந்
தேர்கொண்ட சங்கத் திருந்தோரும் - போர்கொண் 1

டிசையுந் தமிழரசென் றேத்தெடுப்பத் திக்கு
விசையஞ் செலுத்திய மின்னும் - நசையுறவே 2

செய்யசிவ ஞானத் திரளேட்டி லோரேடு
கையி லெடுத்த கணபதியும் - மெய்யருளாற் 3

கூடல் புரந்தொருகாற் கூடற் புலவரெதிர்
பாடலறி வித்த படைவேளும் - வீடகலா 4

மன்னுமூ வாண்டில் வடகலையுந் தென்கலையும்
அன்னைமுலைப் பாலி னறிந்தோறும் - முன்னரே 5

மூன்றுவிழி யார்முன் முதலையுண்ட பிள்ளையைப்பின்
ஈன்றுதரச் சொல்லி னிசைத்தோருந் - தோன்றயன்மால் 6

தேடிமுடி யாவடியைத் தேடாதே நல்லூரிற்
பாடி முடியாப் படைத்தோரும் - நாடிமுடி 7
... ... ...

துறவாதே சேர்ந்து சுகாநந்த நல்க
மறவாதே தூதுசொல்லி வா. 268

***

இன்னிசைக் கலிவெண்பாச் சான்று
’சிறிய திருமடல்’, இயற்றியவர்: திருமங்கை ஆழ்வார்
(77 கலிவெண்பாக் கண்ணிகளில் முதல் ஏழும் இறுதியும்)


காரார்வரை கொங்கை கண்ணர் கடலுடுக்கை
சீரர்சுடர் சுட்டி செண்களுழிப்பெராற்று 1

பெராரமார்பின் பெருமாமழைக்குந்தல்
நீராரவெலி நிலமண்கை யென்னுமிப் 2

பாரூர் சொலப்பட்ட மூன்றன்றெ அம்மூன்றும்
ஆரயில்தானெ அரம்பொருளின்பமென்று 3

ஆராரிவற்றினிடையதனை எய்துவார்
சீரார் இருகலயும் எய்துவர் சிக்கெனமது 4

ஆரானுமுண்டெம்பால் என்பதுதானதுவும்
ஒராமையன்றெ? உலகதார் சொல்லும்சொல் 5

ஒராமையாமாரதுவுரைக்கெங்கெளாமெ
காரார்ப்புரவியெழ் பூந்ததனியாழி 6

தெரார் நிரைகதிரொன் மண்டலதைக்கெண்டு புக்கு
ஆரா வமுதமண் கய்தி அதுனின்றும் 7
... ... ...

ஊரா ரிகழினும் ஊரா தொழியேன்நான்
வாரார்பூம் பெண்ணை மடல். 77

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Jan 11, 2014 6:11 pm

6.80. வெண்பா வினங்கள்

(வெண்டுறை)
வெண்பா விலக்கணம் தழுவியோ வழுவியோ
வெண்டளை யியங்கியோ வேற்றளை விரவியோ
அடிகள் சீர்களில் அதுவாய்ப் பலவாய்
இடையில் முடிவில் சீர்குன்றி
ஒன்றும் ஒன்றா ஒலியோடே
குன்றி வரும்வெண் பாவினமே.

வெண்பா வினம்வரும் வெண்டுறை வெண்டா ழிசைவெளி விருத்தமென
வெண்குறட் பாவரும் குறள்வெண் செந்துறை குறட்டா ழிசையெனவே
வெண்டா ழிசையில் ஒலியொத் துவரின் வெள்ளொத் தாழிசையாம்
வெண்டுறை யிலுமே ஓரொலி வேற்றொலி விதமுண்டே
வெளிவிரு தத்தில் தனிச்சொல் அதுவே அடிதோறும்.


துறையெனச் சொன்னால் தத்தம் பாவகை யொழுக்கில் துறைபோல் நிற்பதுவாம்
துறைபோல் தத்தம் பாவியல் பெல்லாம் வந்தும் ஒடுங்கியே நிற்பதுவாம்
தாழம் பட்ட ஓசை யோடு வருதல் தாழிசையாம்
தாழம் என்றால் தாமசம் மந்தம் தாழ்வு எனப்பொருளாம்
விருத்தம் தத்தம் பாவடி அளவின் மிக்கு வருவதுவாம்
விருத்தம் தத்தம் பாவகை யிலக்கணம் பொதுவில் பெறுவதில்லை.

6.81. குறள் வெண்செந்துறை

ஒழுகிய ஓசையின் ஒத்தடி இரண்டாய்
விழுமிய பொருளது வெண்செந் துறையே.
--யாப்பருங்கலம்

எவ்வகைச் சீரும் தளையும் ஈரடி அளவொத்தே
செவ்விதின் முடிவன வெல்லாம் குறள்வெண் செந்துறையே.


எதுவோ முதலடிச் சீர்களின் எண்ணிக்கை
அதுவே அடுத்தடி வருவது அளவொத்தல்.

பொதுவில் நாலசைச் சீர்கள் காண்பதிலை
அதிகம் நாற்சீர் அளவடி யேகாண்போம்.

நேரிய இசையும் சீரிய பொருளும் பெறவரும் குறள்வெண் செந்துறையின்
வேறு பெயர்களாம் வெள்ளைச் செந்துறை அல்லது வெறுமே செந்துறையாம்.

பொருளின் விழுமம் பற்றியே இலக்கணம் குறையச் செந்துறை எனப்பெயராம்
பொருளின் விழுமம் பற்றித் தொடைகள் இலாதது செந்தொடை என்பதுபோல்.

செந்துறைப் பாட்டு செந்துறை வெள்ளை எனவும் பெயர்பெறுமே
இந்த நாளில் எவ்வகைப் பொருளும் தாங்கும் செந்துறையே.

பொதுவில் பொருளது முடியும் ஈரடியில்
அதுவே இன்று நீளும் பலவடியே.

முதலில் வந்த குறள்வெண் செந்துறைப் பாக்களையே
எதுகை மோனை ஓசை நோக்கி எழுதிலையே.

சான்று
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை.
--முதுமொழிக் காஞ்சி.


ஆசான் பசுபதி நூலது செந்துறை பின்னாள் வளம்பெறுமே
பேசும் எதுகையும் மோனையும் ஒழுங்கில் வரவே எனக்காட்டும்.
(’கவிதை இயற்றிக் கலக்கு’, பக்.84)

சான்றுகள்
ஆத்தி சூடி யமர்ந்த தேவனை
ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே.

கொன்றை வேந்தன் செல்வ னடியினை
என்று மேத்தித் தொழுவோ நாமே.
--ஔவையார்

நன்றி யாங்கள் சொன்னக்கால் நாளு நாளு நல்லுயிர்கள்
கொன்று தின்னும் மாந்தர்கள் குடிலஞ் செய்து கொள்வாரே.
--யாப்பருங்கலம்


எண்ணில் அளவொத்த சீர்கள் பயில
எண்ணில் இரண்டே அடிகள் வந்திடும்
செந்தொடை பின்னாள் பலவடி நீள
வந்து நிற்கும் சான்றுகள் கீழே
இவ்வகைப் பாக்களில் பொதுவில் எதுகை
செவ்விதின் அமையும் ஈரடிக் கொன்றென.

இரண்டடியின் மிக்க செந்துறைச் சான்றுகள்
1. அடியெதுகையின்றிப் பொழிப்பு மோனை பயின்றது


தேன்பெருகுஞ் சோலை தென்னன் வளநாடு
வாழை வடக்கீனும் வான்கமுகு தெற்கீனும்
கட்டுக் கலங்காணும் கதிருழக்கு நெற்காணும்
பஞ்சங் கிடையாது பாண்டி வளநாட்டில்.
--அல்லியரசாணிமாலை


2. அடியெதுகையும் பொழிப்பு மோனையும் பயின்றது

பார்புகழ் நோபல் பரிசுவென்று பாரதத்தில்
பேர்பெற்ற ராமனது பேச்சில் நகையிழையும்
விருந்துக்குச் சென்றிருந்தார் விஞ்ஞானி ஓர்நாள்
அருந்தவோர் அரியமது அளித்தனர் யாவர்க்கும்
மதுக்கிண்ணம் பார்த்ததுமே மறுத்துவிட்டார் ராமன்
இதற்கென்ன காரணம் என்றவர்க்(கு) உரைத்தார்
ராமன்விளை வைஸோம ரசத்தில் ஆயலாம்
ஸொமரசம் செய்விளைவை ராமனிடம் அன்று!

--பசுபதி

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Jan 23, 2014 9:13 am

6.82. குறள் வெண்செந்துறை வளர்ச்சி

அளவொத்த அடிகள் இரண்டில் அமையும் குறள்வெண் செந்துறை
அளவின் வசதியால் அழகாய் வளரும் சாதனை செய்ததே.

ஆசான் பசுபதி நூலது செந்துறையின் பின்னாள் வளர்ச்சியில்
பேசும் எதுகையும் மோனையும் ஓசையும் ஒருங்கே வந்ததை விரித்திடுமே.
(’கவிதை இயற்றிக் கலக்கு’, பக்.84)

தோற்றம்
தோன்றிய போது அளவடி யிரண்டில்
எதுகை மோனை யின்றிய மைந்ததே.

சான்று:
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை.
--முதுமொழிக் காஞ்சி.

எதுகை மோனையுடன்
அடியெது கையுடன் பொழிப்பில் மோனையும்
திடம்பட அமைந்தன பின்னெழு பாக்களிலே.

சான்றுகள்
ஆத்தி சூடி யமர்ந்த தேவனை
ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே.

கொன்றை வேந்தன் செல்வ னடியினை
என்று மேத்தித் தொழுவோ நாமே.
--ஔவையார்

பொழிப்பு மோனையுடன்
எதுகை அடியில் ஏதும் இன்றி
பொழிப்பில் மோனையிற் போனதும் உண்டே.

சான்றுகள்
எழுத்தறி வித்தவன் இறைவ னாகும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்
மந்திரிக் கழகு வரும்பொருள் உரைத்தல்
--அதிவீரராம பாண்டியர், வெற்றிவேட்கை

தேன்பெருகுஞ் சோலை தென்னன் வளநாடு
வாழை வடக்கீனும் வான்கமுகு தெற்கீனும்
கட்டுக் கலங்காணும் கதிருழக்கு நெற்காணும்
பஞ்சங் கிடையாது பாண்டி வளநாட்டில்.
--அல்லியரசாணிமாலை

பொழிப்பு எதுகையுடன்
எதுகை அடியில் எதுவும் இன்றி
பொழிப்பில் எதுகையின் வழக்கும் உண்டே.

சான்றுகள்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
இல்லறம் அல்லது நல்லறம் அன்று
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
--ஔவையார், கொன்றை வேந்தன்

ஆனைகட்டுந் தூராகும் வானமுட்டும் போராகும்
எட்டுத் திசைகளையும் கட்டியர சாள்வானாம்

சிந்தடி, குறளடிக் குறள்வெண் செந்துறைகள்
அளவொத்தே அடிகள் பயில்வதால்
அளவடிக் கீழும் அமையுமே.

அறம்பொரு ளின்பம் பெறும்பயனாம்
ஆன்றோர் உரையே அறமாகும்
இன்சொல் அன்புக் கிருப்பிடமாம்
ஈருளங் கலந்த தில்லறமாம்
உண்மையே ஒழுக்கத் துரைகல்லாம்
ஊரவர் வாழ்வுக் குறுதுணைசெய்.
--புலவர் குழந்தை

அறஞ்செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
--ஔவையார், ஆத்திசூடி

கண்ணிகள் போல்
(வெண்டுறை)
ஈரடி யளவொத்தே சீர்கள் ஓசையில்
நாரினில் இருமலராய் நின்றே - சீரிய
தனிச்சொல் அமைந்தோ அமையாமலோ ஈற்றடி
குனிந்தோ அளவொத்தோ வரும்செய்யுற் கண்ணிகள்
குறள்வெண் செந்துறை உருவினை யொட்டியே
பிறந்தன என்பர் இன்று.

சான்றுகள்
நன்றி யாங்கள் சொன்னக்கால் நாளு நாளு நல்லுயிர்கள்
கொன்று தின்னும் மாந்தர்கள் குடிலஞ் செய்து கொள்வாரே.
--யாப்பருங்கலம்

பேராப் பெரும்பகை தீரப் பிறவேந்தர்
ஊராக் குலிச விடையூர்ந்தான் - சோராத்

துயில்காத்து அரமமகளிர் சோர்குழை காத்தும்பர்
எயில்காத்த நேமி இறையோன்
--மூவருலா: குலோத்துங்க சோழனுலா, கண்ணிகள் 3-4

ஆங்கார முள்ளடங்கி யைம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவ தெக்காலம்? .. 2
--பத்ரகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பல்

கட்டளை அடிகள்
அடிகளில் ஒற்றுகள் கணக்கிடாத எழுத்துகள் எண்ணிக்கை யொன்றி
அடிச்சீர் நிரலோர் வாய்பாடில் அமைவது கட்டளை யடிகளாம்.

கட்டளை யடிகளாய் மாலை மாற்றாய்ச் சம்பந்தர் அருளிய
எட்டும் மூன்றும் பாவரும் பதிகம் குறள்வெண் செந்துறையே.

யாமா மாநீ யாமாமா யாழீ காமா காணாகா
காணா காமா காழீயா மாமா யாநீ மாமாயா ... 1
--சம்பந்தர், மாலைமாற்றுப் பதிகம்

சுப்ரமண்ய பாரதியார்
பாரதியின் பாக்கள் பலவற்றில் பயிலுமே
ஆரமாய் ஈரடிக் குறள்வெண் செந்துறையே.

வானில் பறக்கின்ற புள்ளெலாம்நான்;
மண்ணில் திரியும் விலங்கெலாம்நான்;
கானில் வளரும் மரமெலாம்நான்,
காற்றும் புனலும் கடலுமேநான்.
--இரட்டைக் குறள்வெண் செந்துறை

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம்மறப்பார்
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்
ஏனடாநீ நேற்றைக் கிங்குவர வில்லையென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்ததென்பார்;
--கண்ணன் என் சேவகன்

பாரதியின் பாக்களில் வெண்டளை பயின்று
சாரத்தில் வெண்பாவாய் அமைவது காண்க.

குயில்பாட்டில் பாஞ்சாலி சபதத்தின் பகுதிகளில்
பயில்வது செந்துறையே என்பார் குழந்தையார்.
[புலவர் குழந்தையின் ’தொடையதிகாரம்’, பக்.65]

பொருள மைதியோ டெளிதில் பாடுதற் கேற்ற செய்யுளுருக்
குறள்வெண் செந்துறையே அம்மானைப் பாக்களில் என்பார் குழந்தையார்.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Jan 29, 2014 11:04 am

6.84. குறட்டாழிசை

குறள்வெண் பாவினம் இரண்டாம் குறள்வெண் செந்துறை தாழிசையே
குறட்டா ழிசையே மூவகை வருமே.

வகை 1. முதலடி பலசீர் ஈற்றடி குறைசீர்

அடியிரண் டாகி நாற்சீ ரின்மிகு பலசீர் கொண்டே முதலடியும்
அடியிரண் டில்சீர் குறைவரும் வகைக்குறட் டாழிசையே. ... 1.

சான்று:
நண்ணு வார்வினை நைய நாடொறும் நற்ற வர்க்கர சாய ஞானநற்
கண்ணி னானடி யேயடி வார்கள் கற்றவரே.
--யாப்பருங்கலம்

பரசு பாணியர் பாடல் வீணையர் பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தரசு பேணிநின் றாரிவர் தன்மை யறிவாரார்.
--சம்பந்தர் தேவாரம், 3.112.1.

வகை 2. சிதைந்த குறள்வெண்பா

குறள்வெண் பாவில் வேற்றுத் தளைமிகக்
குறட்டா ழிசைவகையா கும். ... 2.

சான்று (யாப்பருங்கலம்):
வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள்
பண்டைய லல்லள் படி.
(முதலடி ஈற்றில் கலித்தளை வந்தது)

தண்ணந் தூநீர் ஆடச் செய்த
வண்ண ஓதி கண்.
(அனைத்தும் ஆசிரியத்தளை)

வகை 3. சிதைந்த குறள் வெண்செந்துறை

விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் இல்லாக் குறள்வெண் செந்துறையில்
விழுப்பமில் திண்ணிய பொருளுடன் சிதைந்தே வரும்வகை குறட்டா ழிசையே. ... 3.

விழுமிய திண்ணிய பொருள்வகை யெல்லை மாறிய விந்நாளில்
பழுதுள குறள்வெண் செந்துறை தாழிசை வேற்றுமை அரிதே.

சான்று (யாப்பருங்கலம்):
அறுவர்க் கறுவரைப் பெற்றுங் கவுந்தி
மறுவறு பத்தினி போவையி னீரே.

என்னே செல்லுதி வாழி நங்காய்
பொன்னே சொல்லுவன் போகு நங்காய்

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Feb 07, 2014 10:05 am

6.86. வெண்டுறை

அளவடி நாற்சீர் கொண்டோ அதனின் மிக்கோ
அளவில் மூன்றடி முதலே ஏழின் மிகாதே
முன்னடி களினும் பின்னடி களின்சீர் முறையாய்
ஒன்றோ மேலோ குன்றி வருவதே
வெண்டுறை யிலக்கண மென்ப தறிக.

முன்னடி களினும் பின்னடிச் சீர்கள், இடையிடை
அன்று, முறையாய்க் குறைந்தே வெண்டுறை வருமே
அடிகளில் ஓரொலி வந்தால் ஓரொலி வெண்டுறை
அடிச்சீர் குன்றும் பின்னடி களிலே
வேறொலி வந்தால் வேற்றொலி வெண்டுறை.


சான்றுகள்: ஓரொலி வெண்டுறை
(மூன்றடி)
தாளாள ரல்லாதார் தாம்பலராயக்கா லென்னா மென்னாம்
யாளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும்
பீலிபோற் சாய்த்துவிடும் பிளிற்றி யாங்கே.
--யா.கா.

(நான்கடி)
குழலிசைய வண்டினங்கள் கோழிலைய செங்காந்தட் குலை மேற்பாய
அழலெரியின் மூழ்கினவா லந்தோ வளியவென் றயல்வாழ் மந்தி
கலுழ்வனபோ னெஞ்சழிந்து கல்லருவி தூஉம்
நிழல்வரை நன்னாட னீப்பானோ வல்லன்.
--யா.கா.

(ஐந்தடி)
வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட் காயினும்
உறவுற வரும்வழி யுரைப்பன வுரைப்பன்மற்
செறிவுறு தகையினர் சிறந்தன ரிவர்நமக்
கறிவுறு தொழிலரென் றல்லவை சொல்லன்மின்
பிறபிற நிகழ்வன பின்.
--யா.கா.

சான்றுகள்: வேற்றொலி வெண்டுறை
(நான்கடி)
அருணையதிரும் கழலாறணுசெஞ் சடையாளர் அரிவை பாகர்
கருணைநெடுங் கடலான்பெரு மானார்தா டொழுதார் நதியை நாடின்
மரணமிலா இமையவர்தம் வானுலகம் அன்றே
பொருணிரையும் நான்மறையோர் புகலுமத்தாட் பூவே.
--பசுபதி, க.இ.க.

(ஐந்தடி)
கல்லாதார் நல்லவையுட் கல்லேபோற் சென்றிருந்தாற் கருமம் யாதாம்
இல்லாதார் செல்வரைக்கண் டிணங்கியே ஏமுற்றால் இயைவ தென்னாம்
பொல்லாதார் நன்கலன்கள் மெய்புடையப் பூண்டாலும் பொலிவ தென்னாம்
புல்லாதார் பொய்க்கேண்மை புனைந்துரைத்தால் ஆவதென்னே
அல்லாதார் பொய்யாவ தறிபவேல் அமையாதோ?
--யா.கலம்.

(ஆறடி)
முழங்கு களியானை மூரிக் கடற்படை முறித்தார் மன்னர்
வழங்கும் இடமெல்லாம் தன்புகழே போக்கிய வைவேல் விண்ணன்
செழுந்தண்பூம் பழைசையுட் சிறந்துநா ளுஞ்செய
எழுந்தசே திகத்துள் இருந்தவண் ணல்லடி
விழுந்தண்பூ மலர்களால் வியந்துநா ளுந்தொழத்
தொடர்ந்துநின் றவ்வினை துறந்துபோ மாலரோ.
--யா.கலம்.

(ஏழடி)
முழங்குதிரைக் கொற்கை வேந்தன் முழுதுலகும் ஏவல்செய முறைசெய்கோமான்
வழங்குதிறல் வாள்மாறன் மாச்செழியன் றாக்கரிய வைவேல் பாடிக்
கலங்கிநின் றாரெலாம் கருதலா காவணம்
இலங்குவாள் இரண்டினால் இருகைவீ சிப்பெயர்ந்
தலங்கல்மா லையவிழ்ந் தாடவா டும்மிவள்
புலங்கொள்பூந் தடங்கட்கே புரிந்துநின் றாரெலாம்
விலங்கியுள் ளந்தப விளிந்துவே றாபவே.
--யா.கலம்.

*****


Sponsored content

PostSponsored content



Page 26 of 29 Previous  1 ... 14 ... 25, 26, 27, 28, 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக