புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_c10பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_m10பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_c10பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_m10பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_c10 
1 Post - 14%
Manimegala
பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_c10பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_m10பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_c10பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_m10பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_c10பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_m10பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_c10பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_m10பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_c10 
11 Posts - 4%
prajai
பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_c10பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_m10பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_c10 
9 Posts - 4%
Jenila
பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_c10பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_m10பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_c10 
4 Posts - 2%
Rutu
பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_c10பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_m10பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_c10பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_m10பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_c10 
2 Posts - 1%
jairam
பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_c10பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_m10பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_c10பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_m10பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_c10பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_m10பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை!


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Nov 28, 2012 4:28 pm

சாட்சிக்காரன் காலில் விழுவதைக் காட்டிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்'. இது நீதிமன்ற நடவடிக்கை மற்றும் காலதாமதத்தால் சலிப்புற்ற மக்களின் சொலவடை. அதை நீதிமன்றமே சொல்லத் தொடங்கினால் எப்படி?

ஒரு பிரச்னை முதல்முறையாக நீதிமன்றத்தின் படியேறும்போது இத்தகைய ஆலோசனை சரியானது. நியாயமும்கூட. ஆனால், காவிரிப் பிரச்னை அப்படியல்ல. கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழக்கு. காவிரி நடுவர் மன்றம், நதிநீர் ஆணையம், பிரதமர் முன்னிலையில் சமரசம் என்று எதுவுமே தீர்மானமான முடிவைத் தராத நிலையில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தால், நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்களேன் என்று சொன்னால் எப்படி? கர்நாடகத்தைத் தமிழகமும், தமிழகத்தைக் கர்நாடகமும் பல வகையிலும் விமர்சனங்களை அள்ளி வீசிய பிறகு பேசித் தீர்த்துக் கொள்வது எப்படி சாத்தியம் என்று உச்ச நீதிமன்றம் யோசிக்க வேண்டாமா?

காவிரி நீர்ப் பங்கீட்டில் கர்நாடகம் யாருக்குமே கட்டுப்படாமல் தன்னிச்சையாக இயங்கிவருவதால்தான் இன்றைய சிக்கல் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பது இந்தியா முழுமைக்கும் தெரியும். கர்நாடக மாநிலம் தமிழகத்துக்குத் தர வேண்டிய 52.8 டிஎம்சி தண்ணீரை வழங்கவும், பருவம் (ஸீசன்) என்றால் என்ன என்பதை வரையறை செய்யவும் தாக்கல் செய்த மனுவுக்கு நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்திருக்கின்றனர். இதன்படியே, தமிழக முதல்வர் ஜெயலலிதா நவம்பர் 29}இல் பெங்களூர் சென்று பேசவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பேச்சுவார்த்தையில் முடியாமல்தான் மத்திய அரசிடம் போய் நின்றோம். மத்திய அரசு நியமித்த நடுவர்மன்றத் தீர்ப்பை கர்நாடகம் ஏற்கவே இல்லை. இடைக்காலத் தீர்ப்புகளுக்குக் கட்டுப்பட்டதும் கிடையாது. காவிரி நதிநீர் ஆணையத்துக்கும் பிரதமரின் உத்தரவுக்கும்கூட மறுப்பு தெரிவித்தார்கள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே நிறைவேற்றத் தவறியதால், நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு ஆளான மாநிலம் கர்நாடகம். இந்நிலையில்தான், அதாவது பேசித் தீரவில்லை என்ற நிலையில்தான், உச்ச நீதிமன்றத்தைத் தமிழக அரசு அணுகுகிறது. ஆனால், உச்ச நீதிமன்றம் சொல்கிறது, ""இரு மாநில முதல்வர்களும் பேசித் தீர்வுகாண வேண்டும்'' என்று.

இதைச் சொன்னதற்குப் பதிலாக, "நாங்கள் சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறார்கள். எங்கள் தீர்ப்புக்கு மரியாதையே கிடையாது. ஆகவே நீங்களே முடிந்தால் பேசிப் பாருங்கள்' என்று நீதிபதிகள் மிக வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாம். அத்தகைய மெய்யான வார்த்தைகள், இந்திய அரசையும், மற்ற மாநிலங்களையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும். ஆனால் நீதிபதிகள் அதைச் சொல்லாமல், இரு மாநில முதல்வர்களும் பேசித் தீர்வு காண்பது முடியாதது ஒன்றுமில்லை என்று கூறியிருக்கிறார்கள்.

தினமும் வினாடிக்கு 9,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி நதிநீர் ஆணைய உத்தரவுக்கே 3 நாள் மாநில எல்லையில் பஸ்கள் ஓடவில்லை. நடிக நடிகையர்களும் பங்குகொண்ட எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது. இந்த உத்தரவை நிறைவேற்றாவிட்டால், அணையின் பொறுப்பை மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் என்ற அச்சத்தின் காரணமாகவே கர்நாடகம் பணிந்தது. இந்நிலையில் கர்நாடக முதல்வர், தமிழகம் கேட்கும் நியாயமான அளவு தண்ணீரை வழங்க முன்வருவாரா?

இது ஒருபுறம் இருக்க, காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் பிரதமரை அவமானப்படுத்தும் வகையில் கர்நாடக முதல்வர் வெளிநடப்பு செய்தபோது இந்தியாவில் எந்தச் சலனமும் இல்லை. ஆனால், பெங்களூரில் தமிழக முதல்வருக்கு - அது யாராக இருந்தாலும் - அவமானம் நேர்ந்தது என்றால், தமிழ்நாடு கொந்தளித்து விடாதா? அதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் ஏற்படக்கூடிய எதிர்போராட்டங்கள், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், இதைப் பற்றியெல்லாம் உச்ச நீதிமன்றம் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்திருந்தால், இத்தகைய ஆலோசனையைச் சொல்லியிருக்காது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும்கூட, தமிழக அரசின் கோரிக்கைகளை ஏற்கக் கேரளம் மறுக்கிறது. இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் உள்ளன. இதிலும்கூட, இரு மாநில முதல்வர்களும் பேசித் தீர்வு காண வேண்டும் என்றால், தமிழக முதல்வர் திருவனந்தபுரம் சென்று அவமானப்பட வேண்டுமா?

இலங்கைச் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு வழக்குத் தொடுத்தால், அந்த வழக்கிலும்கூட, "தமிழக முதல்வர் இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் பேசித் தீர்வுகாண வேண்டும்' என்று நீதிமன்றம் சொல்லுமா?

இதுவரை பல முறைக்கு மேல் தமிழக முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய மூவரும் கடந்த 40 ஆண்டுகளாகப் பல்வேறு கர்நாடக முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவுக்கு வராதது காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னை. மத்திய அரசு நடுவர்மன்றம் அமைத்தும் பயனளிக்காத பிரச்னை இது. அதனால்தானே உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு முறையிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தனது பொறுப்பைத் தட்டிக் கழித்தால் எப்படி?

கர்நாடக மாநிலம் காவிரியின் மேல்பகுதியில் இருக்கிறது. அவர்கள் அணையைத் திறந்தால்தான் தமிழகத்துக்குக் காவிரி நீர். இந்தப் புவியியல் காரணங்களால், கர்நாடகம் "கொடுப்பவன்' நிலையில் இருக்கிறது. தமிழகம் "கொள்பவன்' நிலையில் இருக்கிறது. கர்நாடகம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தமிழகத்தை ஒருநாளும் அழைக்கப்போவதில்லை. அவர்களுக்கு அது தேவையில்லாத வேலை. ஆனால், தமிழகம்தான் பேச்சுவார்த்தைக்கு அவர்களிடம் செல்ல வேண்டும், வாசலில் நிற்க வேண்டும், அவர்கள் சொல்லும் மறுதேதிக்கெல்லாம் போயாக வேண்டும், அவர்கள் கொடுப்பதைப் பெற்றாக வேண்டும். இதற்குப் பெயர் பேச்சுவார்த்தையாக இருக்க முடியாது. பிச்சை கேட்பதாகத்தான் இருக்க முடியும்......................... தினமணி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Nov 28, 2012 7:04 pm

இதில் குறிப்பிடந்தகுந்த விடயம் என்னவென்றால்சமீபக் காலமாக நீதிமன்றங்களின் தீர்ப்புகளை பலவேறு நிலைகளில் பலவேறு அமைப்புகள் அரசுகள் நிறைவேற்ற தவறுவதை காண்கிறோம்.இது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.இது மோசமான நிகழ்வுகளை ஏற்படுத்தும்.

சட்டம் சரியாக தன் கடமையை செய்வது என்னமோ ஏழை மக்களிடம் மட்டுமே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக