|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி by சிவா Today at 2:02 pm
» என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)
by ஜாஹீதாபானு Today at 1:57 pm
» சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ்
by mahan Today at 12:59 pm
» அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்!
by சாமி Today at 12:48 pm
» எமது நூல்கள் வெளியீட்டு விழா
by pon.sellamuththu Today at 12:43 pm
» மெழுகுவர்த்தியின் அறிவுரை
by ஜாஹீதாபானு Today at 12:27 pm
» பார்வை ...???
by ஜாஹீதாபானு Today at 12:26 pm
» வேலை பளுவால் அமைச்சர் மயக்கம்
by ஜாஹீதாபானு Today at 12:23 pm
» பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதால் வாழ்க்கை சீரழிந்து விடும்
by ராஜு சரவணன் Today at 11:59 am
» சித்தர்களை தெரிந்துகொள்வோம்
by ராஜு சரவணன் Today at 11:55 am
» இன்று (ஜூன் 20) உலக அகதிகள் தினம்
by soplangi Today at 11:54 am
» உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு!
by ராஜு சரவணன் Today at 11:46 am
» 'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல
by ராஜா Today at 11:46 am
» மோசடியில் இது புதுசு
by soplangi Today at 11:46 am
» தோஷம்! சந்தோஷம்!
by ராஜு சரவணன் Today at 11:44 am
» வாழை இலை
by ராஜு சரவணன் Today at 11:42 am
» கதிர்வீச்சு உண்மையைச் சொன்னால் என்கவுண்டர்!! - மருத்துவர் புகழேந்தி
by ராஜா Today at 11:41 am
» நீங்களும் பாருங்கள்
by MADHUMITHA Today at 11:25 am
» அமிலம் வீசும் அரக்கர்களுக்கு!
by பார்த்திபன் Today at 11:25 am
» இதை பாருங்களேன் - மதுமிதா
by MADHUMITHA Today at 11:24 am
» நான் ரசித்தவை - மது
by MADHUMITHA Today at 11:20 am
» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by mahan Today at 11:12 am
» மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு
by ராஜா Today at 11:06 am
» வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க
by mahan Today at 11:06 am
» இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!
by MADHUMITHA Today at 11:04 am
» 20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!
by ராஜா Today at 10:45 am
» ஆண்ட்ராய்டு ரூட்
by ராஜா Today at 10:44 am
» வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்...
by Murali1946 Today at 10:38 am
» இரசிக்க அருமையான பாடல்கள்
by kirikasan Today at 10:12 am
» ஆணும், பெண்ணும், உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால், அவர்கள், கணவன் - மனைவி என கருதப்படுவர்; அது, செல்லத்தக்க திருமணம்!
by SajeevJino Today at 9:26 am
» எனக்கு பிடித்தவை (தொடர் கவிதை)
by பூவன் Today at 9:25 am
» பறையின் வகைகள்!
by ராஜு சரவணன் Today at 9:13 am
» நினைவுகள் போதும் என்கிறாய்..???
by பூவன் Today at 8:58 am
» சென்னையில் ஒரு மாநாடு
by தர்மா Today at 8:55 am
» நான்' அழுதால் .....
by கவிஞர் கே இனியவன் Today at 8:17 am
» சொந்தக்கதை....சோகக்கதை.
by maristella Today at 8:11 am
» அரைகுறை வெற்றி ....
by கவிஞர் கே இனியவன் Today at 8:10 am
» சிந்தித்தாயா ....???
by கவிஞர் கே இனியவன் Today at 7:35 am
» என் காதல் ...
by கவிஞர் கே இனியவன் Today at 7:21 am
» ஒரு தந்தையின் கடிதம்
by கவிஞர் கே இனியவன் Today at 7:09 am
Top posting users this week
| Muthumohamed | ||||
| MADHUMITHA | ||||
| கவிஞர் கே இனியவன் | ||||
| யினியவன் | ||||
| சிவா | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ராஜு சரவணன் | ||||
| பூவன் | ||||
| ராஜா | ||||
| krishnaamma |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!!
Page 1 of 1 • Share •
ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!!
.
நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னர் உலகத்தில் பறவைகள்
இருந்தன. ஆனால், அவை எல்லாம் ஒரே வண்ணத்தில்
இருந்தன. இப்போது காணப்படுவது போல் சிவப்பு, பச்சை,
மஞ்சள் வண்ணத்தில் இல்லை. சொல்லி வைத்தது போல்
சாம்பல் நிறத்தில் இருந்தன.
-
ஒரு வசந்த காலத்தில், பறவைகளின் அரசன் பறவைகளுக்கு
அழைப்பு விடுத்தது. அந்த அழைப்பை ஏற்று எல்லாப்
பறவைகளும் அரசன் முன்னால் கூடின.
-
கூட்டமாக கூடி வந்த பறவைகளில் சில கூவின. சில
பறவைகள் அகவல் ஒலி எழுப்பின. சில கிரீச் சிட்டன.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஒலி எழுப்பி மகிழ்ந்தன.
சில பறவைகள் சில மீட்டர் வரை பறந்தன. சில தத்தி தத்தி
நடந்தன. சில நொண்டிச் செல்வது போல் நகர்ந்தன.
சில பெரிய மனிதர்போல் கம்பீரமாய் உலவின. அவைகள்
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தன.
-
அரசப் பறவை, அவர்கள் எல்லாரையும் ஒரு முறை தனது
கண்களைச் சுழற்றிப் பார்த்தது. பின்னர் ஓர் இறக்கையை
வானத்தை நோக்கி திருப்பியது. உடனே எல்லா பறவைகளும்
வானத்தை அண்ணாந்து பார்த்தன.
-
ஆகா! வானத்தில் ஒரு பெரிய வானவில் தோன்றின. அதன்
வண்ணங்களைப் பார்த்து பறவைகள் ஆச்சரியப்பட்டன.
“ஊதா, கருநீலம், பச்சை, மஞ்சள், காவி, சிவப்பு’ என்று அவைகள்
சொல்லிச் சொல்லி மகிழ்ந்தன.
-
எழில் மிகு ஏழு வண்ணங் களைப் பார்த்து சில வாயடைத்துப்
போய் நின்றன. ஏனென்றால், அப்படி ஓர் அழகான பெரிய
வானவில்லை அவர்கள் அதுவரை பார்த்ததே இல்லை.
-
“”உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் ஒரு நிறத்தைக்
கொடுக்கப்போகிறேன். உங்களுக்கு எந்த நிறம் பிடிக்குமோ
அதை நீங்கள் வானவில்லில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்,”
என்று அனுமதி வழங்கியது பறவைகளின் அரசன்.
-
அடுத்த வினாடி அங்கு ஒரு “தள்ளு முள்ளு’ ஏற்பட்டது.
ஒவ்வொரு பறவையும் தனக்கு பிடித்தமான நிறத்தைப் பறிக்க
முயன்றன. எனவே, அவைகள் மற்ற பறவையைத் தள்ளிவிட்டு
முன் வந்தன. அதனால் ஏகப்பட்ட குளறுபடி உண்டாயிற்று.
-
ஒரு கிளி முன்னால் வந்தது, “”எனக்கு பச்சை வர்ணமே
பிடிக்கும்,” என்று சொல்லி அது பச்சை நிறத்தைப் பெற்றுக்
கொண்டது. அதனால் கிளி செழிப்பான ஒரு மரத்தின் பெரிய
இலை போல் காணப்பட்டது.
-
ஒரு குருவி ஓடி வந்தது. அது, “”எனக்கு மஞ்சள் நிறம்தான்
பிடிக்கும்,” என்று கிரீச்சிட்டது. பின்னர் அது மஞ்சள் நிறத்தை
அணிந்து கொண்டது. அதை எல்லாரும் மஞ்சள் குருவி
என்று அழைத்தனர்.
-
எல்லாரையும் தள்ளி விட்டப்படி ஒரு குருவி முன்னால் வந்தது.
அது, “”எனக்கு சிவப்பு வர்ணமே விருப்பமானது,” என்று சொல்லி
அந்த நிறத்தைப் பெற்றுக் கொண்டது. அதை எல்லாரும் செங்குருவி
என்று கூப்பிட்டனர்.
-
இப்படி எல்லா பறவைகளும் தாங்கள் விரும்பிய நிறத்தைப்
பெற்றுக் கொண்டன. ஆனால், ஒரே ஒரு சின்னஞ்சிறிய குருவி
மட்டும் தனக்கு நிறம் கிட்டாமல் நின்று கொண்டிருந்தது.
அதனால் மற்றவர்களைத் தள்ளி விட்டு முன்னால் வர
முடியவில்லை.
-
அரசப் பறவை அந்தக் குருவியைப் பார்த்தது.
“”சின்னஞ்சிறு பறவையே! நீ ஏன் அமைதியாய் அங்கே
நிற்கிறாய்? மற்றவர்களைப் போல் நீ ஏன் வர்ணம் கேட்க
வில்லை?” என்று கேட்டது.
-
“”வரிசையில் எனது முறை வரும் என்று நான் காத்திருந்தேன்,”
என்று சொன்னது அந்த சின்னஞ்சிறு சிறிய பறவை.
-
“”எல்லா நிறங்களும் முடிந்துவிட்டதே! என்ன செய்வது?” என்றது
அரசப் பறவை.
அதைக் கேட்டதும், அந்த சின்னஞ்சிறு பறவை கண்ணீர் விட்டது.
-
“”அப்படியானால் நான் எப்போதும் இந்த சாம்பல் நிறத்தில் தான்
இருக்க வேண்டுமா?” என்றது.
-
“”சின்னஞ்சிறு பறவையே, நீ மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து
மிகவும் பொறுமையைக் கடைப்பிடிக்கிறாய்! இப்படிப்பட்ட நீ
எப்போதும் சாம்பல் வர்ணத்தில் இருத்தல் கூடாது,” என்று சொன்ன
பறவை, எல்லாப் பறவைகளையும் திருப்பி அழைத்தது. ஒவ்வொரு
பறவையிடம் இருந்தும், அது கொஞ்சம் வர்ணத்தை எடுத்து,
அந்த சிறிய பறவைக்கு கொடுத்தது. அதனால் அந்த சின்னஞ்சிறிய
பறவை, இப்போது மிகவும் அழகாய் காணப்பட்டது.
-
அதைப் பார்த்து மகிழ்ந்த பறவையின் அரசன், அதற்கு
“பஞ்சவர்ண கிளி’ என பெயர் வைத்தான்.
-
இப்போது எல்லா பறவைகளும் அந்த சிறிய பறவையைப் பார்த்து
மகிழ்ச்சி அடைந்தன. ஏனென்றால், அதுதான் பறவைகளில் எல்லாம்
மிக மிக எழிலுடன் திகழ்ந்தது..
நன்றி:சிறுவர் மலர்..

நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னர் உலகத்தில் பறவைகள்
இருந்தன. ஆனால், அவை எல்லாம் ஒரே வண்ணத்தில்
இருந்தன. இப்போது காணப்படுவது போல் சிவப்பு, பச்சை,
மஞ்சள் வண்ணத்தில் இல்லை. சொல்லி வைத்தது போல்
சாம்பல் நிறத்தில் இருந்தன.
-
ஒரு வசந்த காலத்தில், பறவைகளின் அரசன் பறவைகளுக்கு
அழைப்பு விடுத்தது. அந்த அழைப்பை ஏற்று எல்லாப்
பறவைகளும் அரசன் முன்னால் கூடின.
-
கூட்டமாக கூடி வந்த பறவைகளில் சில கூவின. சில
பறவைகள் அகவல் ஒலி எழுப்பின. சில கிரீச் சிட்டன.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஒலி எழுப்பி மகிழ்ந்தன.
சில பறவைகள் சில மீட்டர் வரை பறந்தன. சில தத்தி தத்தி
நடந்தன. சில நொண்டிச் செல்வது போல் நகர்ந்தன.
சில பெரிய மனிதர்போல் கம்பீரமாய் உலவின. அவைகள்
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தன.
-
அரசப் பறவை, அவர்கள் எல்லாரையும் ஒரு முறை தனது
கண்களைச் சுழற்றிப் பார்த்தது. பின்னர் ஓர் இறக்கையை
வானத்தை நோக்கி திருப்பியது. உடனே எல்லா பறவைகளும்
வானத்தை அண்ணாந்து பார்த்தன.
-
ஆகா! வானத்தில் ஒரு பெரிய வானவில் தோன்றின. அதன்
வண்ணங்களைப் பார்த்து பறவைகள் ஆச்சரியப்பட்டன.
“ஊதா, கருநீலம், பச்சை, மஞ்சள், காவி, சிவப்பு’ என்று அவைகள்
சொல்லிச் சொல்லி மகிழ்ந்தன.
-
எழில் மிகு ஏழு வண்ணங் களைப் பார்த்து சில வாயடைத்துப்
போய் நின்றன. ஏனென்றால், அப்படி ஓர் அழகான பெரிய
வானவில்லை அவர்கள் அதுவரை பார்த்ததே இல்லை.
-
“”உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் ஒரு நிறத்தைக்
கொடுக்கப்போகிறேன். உங்களுக்கு எந்த நிறம் பிடிக்குமோ
அதை நீங்கள் வானவில்லில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்,”
என்று அனுமதி வழங்கியது பறவைகளின் அரசன்.
-
அடுத்த வினாடி அங்கு ஒரு “தள்ளு முள்ளு’ ஏற்பட்டது.
ஒவ்வொரு பறவையும் தனக்கு பிடித்தமான நிறத்தைப் பறிக்க
முயன்றன. எனவே, அவைகள் மற்ற பறவையைத் தள்ளிவிட்டு
முன் வந்தன. அதனால் ஏகப்பட்ட குளறுபடி உண்டாயிற்று.
-
ஒரு கிளி முன்னால் வந்தது, “”எனக்கு பச்சை வர்ணமே
பிடிக்கும்,” என்று சொல்லி அது பச்சை நிறத்தைப் பெற்றுக்
கொண்டது. அதனால் கிளி செழிப்பான ஒரு மரத்தின் பெரிய
இலை போல் காணப்பட்டது.
-
ஒரு குருவி ஓடி வந்தது. அது, “”எனக்கு மஞ்சள் நிறம்தான்
பிடிக்கும்,” என்று கிரீச்சிட்டது. பின்னர் அது மஞ்சள் நிறத்தை
அணிந்து கொண்டது. அதை எல்லாரும் மஞ்சள் குருவி
என்று அழைத்தனர்.
-
எல்லாரையும் தள்ளி விட்டப்படி ஒரு குருவி முன்னால் வந்தது.
அது, “”எனக்கு சிவப்பு வர்ணமே விருப்பமானது,” என்று சொல்லி
அந்த நிறத்தைப் பெற்றுக் கொண்டது. அதை எல்லாரும் செங்குருவி
என்று கூப்பிட்டனர்.
-
இப்படி எல்லா பறவைகளும் தாங்கள் விரும்பிய நிறத்தைப்
பெற்றுக் கொண்டன. ஆனால், ஒரே ஒரு சின்னஞ்சிறிய குருவி
மட்டும் தனக்கு நிறம் கிட்டாமல் நின்று கொண்டிருந்தது.
அதனால் மற்றவர்களைத் தள்ளி விட்டு முன்னால் வர
முடியவில்லை.
-
அரசப் பறவை அந்தக் குருவியைப் பார்த்தது.
“”சின்னஞ்சிறு பறவையே! நீ ஏன் அமைதியாய் அங்கே
நிற்கிறாய்? மற்றவர்களைப் போல் நீ ஏன் வர்ணம் கேட்க
வில்லை?” என்று கேட்டது.
-
“”வரிசையில் எனது முறை வரும் என்று நான் காத்திருந்தேன்,”
என்று சொன்னது அந்த சின்னஞ்சிறு சிறிய பறவை.
-
“”எல்லா நிறங்களும் முடிந்துவிட்டதே! என்ன செய்வது?” என்றது
அரசப் பறவை.
அதைக் கேட்டதும், அந்த சின்னஞ்சிறு பறவை கண்ணீர் விட்டது.
-
“”அப்படியானால் நான் எப்போதும் இந்த சாம்பல் நிறத்தில் தான்
இருக்க வேண்டுமா?” என்றது.
-
“”சின்னஞ்சிறு பறவையே, நீ மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து
மிகவும் பொறுமையைக் கடைப்பிடிக்கிறாய்! இப்படிப்பட்ட நீ
எப்போதும் சாம்பல் வர்ணத்தில் இருத்தல் கூடாது,” என்று சொன்ன
பறவை, எல்லாப் பறவைகளையும் திருப்பி அழைத்தது. ஒவ்வொரு
பறவையிடம் இருந்தும், அது கொஞ்சம் வர்ணத்தை எடுத்து,
அந்த சிறிய பறவைக்கு கொடுத்தது. அதனால் அந்த சின்னஞ்சிறிய
பறவை, இப்போது மிகவும் அழகாய் காணப்பட்டது.
-
அதைப் பார்த்து மகிழ்ந்த பறவையின் அரசன், அதற்கு
“பஞ்சவர்ண கிளி’ என பெயர் வைத்தான்.
-
இப்போது எல்லா பறவைகளும் அந்த சிறிய பறவையைப் பார்த்து
மகிழ்ச்சி அடைந்தன. ஏனென்றால், அதுதான் பறவைகளில் எல்லாம்
மிக மிக எழிலுடன் திகழ்ந்தது..
நன்றி:சிறுவர் மலர்..

அச்சலா- வி.ஐ.பி

- பதிவுகள்: 4104
மதிப்பீடுகள்: 1115
Re: ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!!
பஞ்சவர்ண கிளியைவிட இந்த கதை மிக அழகாக இருக்கிறது.....

கே. பாலா- மன்ற ஆலோசகர்
- பதிவுகள்: 5498
மதிப்பீடுகள்: 1740

Re: ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!!
கே. பாலா wrote:பஞ்சவர்ண கிளியைவிட இந்த கதை மிக அழகாக இருக்கிறது.....![]()
நன்றி கே.பாலா...

அச்சலா- வி.ஐ.பி

- பதிவுகள்: 4104
மதிப்பீடுகள்: 1115
Re: ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!!
கதையும் கருத்தும் நன்றாக உள்ளது....

gnsenthil- புதியவர்

- பதிவுகள்: 38
மதிப்பீடுகள்: 16
Re: ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!!
gnsenthil wrote:கதையும் கருத்தும் நன்றாக உள்ளது....![]()
நன்றி உங்கள் பதிலுக்கு..உங்களை அறிமுகம் செய்துக்கொள்லாமே..

அச்சலா- வி.ஐ.பி

- பதிவுகள்: 4104
மதிப்பீடுகள்: 1115
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










