புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10 
1 Post - 1%
Kavithas
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10 
1 Post - 1%
bala_t
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10 
1 Post - 1%
prajai
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10 
284 Posts - 42%
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10 
6 Posts - 1%
prajai
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10 
4 Posts - 1%
manikavi
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட சுட செய்திகள்...அச்சலா


   
   

Page 21 of 37 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 29 ... 37  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 78f3e7ac-22fc-41bf-9b54-dd6933912bb0_S_secvpf

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 15, 2012 6:38 pm

கட்சி மாறிய சம்பத்துக்கு கார் பரிசு
சென்னை : ம.தி.மு.க.,விலிருந்து விலகிய, நாஞ்சில் சம்பத்தின் ஆதரவாளர்கள், 250 பேர், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க.,வில், நேற்று இணைந்தனர்.
இவர்களை வரவேற்று ஜெயலலிதா பேசுகையில், ""நீங்கள் வந்த இடம் நல்ல இடம்; எந்த நம்பிக்கையோடு வந்துள்ளீர்களோ, அந்த நம்பிக்கை வீண் போகாது. கல்லாமை இல்லாத தமிழகத்தை உருவாக்குவது. தமிழக மக்களின் உரிமைகளைப் போராடிப் பெறுவது ஆகியவற்றுக்கு, அ.தி.மு.க.,வுக்கு துணையாக இருக்க வேண்டும்,'' என, கேட்டுக் கொண்டார்.
துணை கொள்கை பரப்பு செயலரான சம்பத், தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் செய்வதற்காக, "இனோவா' கார் ஒன்றை, அவருக்கு ஜெயலலிதா பரிசளித்தார்.

-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 16, 2012 12:27 am

வளர்ச்சியை முடுக்கிவிட கொள்கைகளை மாற்றத் தயார்: பிரதமர்



நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிட, தற்போதைய பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரத் தயார் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் மருந்துத் துறையில் இதனை மேற்கொள்வது தொடர்பாக ஏற்கெனவே அரசு தெளிவான கொள்கை விளக்கங்களை அளித்துள்ளது என்றார் பிரதமர்.

நேரடி வரிவிதிப்பு, சரக்கு கையாளுதல், சேவைகள் வரி உள்ளிட்டவற்றுக்கான மசோதா இப்போது மிக முக்கிய இடத்தில் உள்ளது. அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான மசோதாவுக்கு அண்மையில் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் உள்ள சிக்கல்களைக் களைய தொழில்துறையினர் வேண்டுகோள் விடுத்தபடி, மேம்படுத்தப்பட்ட விதத்தில் வெளிப்படையான அணுகுமுறையோடு கையாள வசதியாக விரைவில் கொண்டுவரப்படும். இவ்வாறு கூறிய மன்மோகன் சிங், மானியங்கள் குறித்துக் கூறியபோது, சென்ற வருடம் மத்டிய அரசின் நிதியாண்டுப் பற்றாக்குறை அதிகபட்ச அளவாக மொத்த வளர்ச்சியில் 5.9% என்ற அளவைத் தொட்டது என்றார். மேலும், இது நிச்சயமாக ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல, என்று குறிப்பிட்ட மன்மோகன், இது விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம், இந்த நிதி ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறையை 5.3% என்ற அளவிலும், வரும் 2016-17ம் ஆண்டுகளில் 3% என்ற அளவிலும் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.


தினமணி




சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 16, 2012 12:29 am

போர் நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தான் படை: பூஞ்ச் பகுதியில் துப்பாக்கிச் சூடு




மற்றுமொரு போர் நிறுத்த உடன்படிக்கை மீறலாக பாகிஸ்தான் படையினர் இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள பூஞ்ச் மாவட்ட எல்லையில் கட்டுப்பாட்டுக் கோடு கிருஷ்ணா கடி செக்டார் பகுதியில் நேற்று நள்ளிரவு பாகிஸ்தான் படையினார் இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இது டிசம்பர் மாதத்தில் ஜம்மு காஷ்மீர் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ஏழாவது முறையாக நடத்தும் போர் நிறுத்த உடன்படிக்கை மீறலாகும். சிறிது நேரம் தொடர்ந்த இந்தத் தாக்குதலால் பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

தினமணி




சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 16, 2012 12:31 am

படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு:முதல்வர்




படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு, தொழில் தொடங்க ரூ.100 நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

"ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்கம் உடையா னுழை"

அதாவது சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக்கேட்டுக் கொண்டு போய் சேரும் என்ற குறள்படி, ஊக்கத்துடன் செயல்படும் ஒவ்வொரு இளைஞரையும் தொழில் முனைவோராக உருவாக்குவதற்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக மாற்ற உதவும் நோக்குடன் புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டத்தை 2012-13ம் ஆண்டு முதல் செயல்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு, தொழில் தொடங்க திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, நிதிநிறுவனங்களில் நிதியுதவி பெற உதவுவதுடன், பெரும் தொழில் நிறுவனங்களுடன் அவர்களுக்கு வணிகத் தொடர்பும் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும். வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆகியவற்றின் மூலம் ரூ.25 லட்சம் மிகாத 25 விழுக்காடு முதலீட்டு மானியமும், மூன்று விழுக்காடு வட்டி குறைப்புடன் கூடிய கடனும் பெற உதவி செய்யப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்தின் கீழ் 1,000 தொழில் முனைவோருக்குப் பயிற்சி அளிக்கப்படும். இதில் ஆதிதிராவிட இன பயனாளிகளுக்கு 18 விழுக்காடும், பழங்குடியின பயனாளிகளுக்கு 1 விழுக்காடும், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 விழுக்காடும், மகளிருக்கு 50 விழுக்காடும் முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தினை செயல்படுத்த ரூ.100 கோடி நிர்வாக ஒப்புதல் வழங்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதில் முதல் தவணையாக ரூ.51 கோடியே 80 லட்சம் நிதியினை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இத்திட்டத்தினை செயல்படுத்துவதில் தொழில் முனைவோர் பயிற்சி நிறுவனமும், தமிழ்நாடு முதலீட்டு கழகமும் முக்கிய பங்கு வகிக்கும். தொழிற்பேட்டைகள் நன்கு பராமரிக்கப்பட்டால் தான் அங்கு செயல்படும் தொழில் நிறுவனங்கள் நன்கு செயல்பட்டு உற்பத்தியை பெருக்க இயலும். அதுமட்டுமல்லாமல், புதிய நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை தொடங்க தொழிற்பேட்டை நிர்வாகத்தை அதிக அளவில் அணுகும் நிலையும் ஏற்படும்.

இதனைக் கருத்தில் கொண்டு திருவள்ளூர் மாவட்டம் காக்களுர் மற்றும் சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள மின் மற்றும் மின்னணு தொழிற்பேட்டைகளில் சாலைகளை வலுப்படுத்துதல், கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்புகளை சீர்செய்தல், மழைநீர் வடிகால் வசதிகளை செய்தல் மற்றும் தெருவிளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த நடவடிக்கைகள், படித்த இளைஞர்கள் அதிக அளவில் சொந்தத் தொழில் தொடங்க முன்வந்து, தொழில் முனைவோராக வாழ்வில் ஏற்றமடைய வழிவகை வகுக்கும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி




சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 16, 2012 12:32 am

அன்பும், கல்வியும் கொடுத்தால் மாற்றுத் திறனாளிகளாலும் சாதிக்க முடியும்: அப்துல் கலாம்



அன்பும், கல்வியும் கொடுத்தால் மாற்றுத் திறனாளிகளாலும் சாதிக்க முடியும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறினார்.

லீட் இந்தியா 2020 அமைப்பும், கோவை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையும் இணைந்து, மாற்றுத் திறனாளிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தன.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்துல் கலாம் பேசியது:

மாற்றுத் திறனாளிகளுக்குத் தன்னம்பிக்கை மிகவும் அவசியம். தன்னம்பிக்கைதான் வெற்றியின் முதல்படி. நான் குடியரசுத் தலைவராக இருந்தபோது குடியரசுத் தலைவர் மாளிகையைச் சுற்றிப் பார்ப்பதற்காக வந்த மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவர், மன தைரியம் என்ற தலைப்பில் படித்த கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.

உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மன தைரியம் மிகவும் அவசியம். மன வளர்ச்சி குறைந்த குழந்தைகள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டார் அருட்தந்தை ஜோசப் என்பவர். மூளையில் உள்ள நியூரான்களின் அளவு குறைந்தால் பிரச்னை ஏற்படுகிறது. மன வளர்ச்சி குறைந்தவர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் வேலை கொடுத்தால், அவர்களின் மூளை சிறப்பாக வேலை செய்வதாக ஆராய்ச்சியில் கண்டறிந்தார்.

அவர்களின் மூளையில் உள்ள நியூரான்கள் இணைந்து வலைப் பின்னல் ஏற்படுத்துவதால் மூளை சிறப்பாகச் செயல்படுகிறது. இந்த ஆராய்ச்சிப்படி மன வளர்ச்சி குறைந்த ஒவ்வொருவரும் வெற்றி பெற முடியும்.

இதேபோல கடந்த 1970-ல் பிரசவத்தின்போது தமன்னா என்ற பெண்ணின் மூளை பாதிக்கப்பட்டது. இதனால் அப்பெண்ணால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அந்தப் பெண்ணின் பெற்றோர், களிமண்ணுக்குள் தமன்னாவை நடக்கப் பழக்கினர். பேச்சு வருவதற்காக நாக்கில் மிளகாய்ப் பொடியைத் தூவினர். தொடர்ந்து தமன்னாவுடன் தாய் பேசிக்கொண்டே இருப்பாள். இதன் மூலம் அப் பெண்ணின் மனநிலை சரியானது. அந்தப் பெண்ணும் படித்து முடித்து, இப்போது தில்லியில் உள்ள ஒரு கல்விக்கூடத்தில் ஆசிரியையாகப் பணிபுரிகிறாள்.

பள்ளிக் கல்வித் துறை மாற்றுத் திறனாளிகளைத் தனியாகப் பார்க்கக் கூடாது. அன்பும், கல்வியும் கொடுத்தால் மாற்றுத் திறனாளிகளாலும் சாதிக்க முடியும். செவித் திறன் குறைந்த குழந்தைகளுக்கு காக்ளியர் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சை செய்ய வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உபகரணம் ரூ.8 லட்சம் ஆகிறது. இந்தியாவில் ரூ.50 ஆயிரத்துக்கு இதன் விலை குறைய வாய்ப்புள்ளது என்றார் அப்துல் கலாம்.

மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கும் கலாம் பதிலளித்தார். உடல் ஊனமுற்ற மாணவி ஒருவர் ஆடிய நடனத்தை அவர் ரசித்தார்.

மேலும் இரு கால்களை இழந்த மாணவி பிரியங்கா, எம்.எஸ்சி. தகவல் தொழில்நுட்பம் படித்து வருவதை அறிந்து அவரைப் பாராட்டினார்.


தினமணி




சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 16, 2012 12:38 am

குஜராத் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது



குஜராத் மாநில சட்டமன்றத்துக்கு நடக்கும் தேர்தலின் 2 வது மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இன்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி 5 இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.

இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரத்தில் ராகுல் - மோடி இடையே வார்த்தைப் போர் நிலவியதை பிரசாரக் கூட்டங்களில் காண முடிந்தது.

முன்னதாக குஜராத் சட்டமன்றத் தேர்தலை 2 கட்டங்களாக நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. கடந்த 13ம் தேதி நடந்த முதல் கட்டத் தேர்தலில் 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 2-ம் கட்ட தேர்தல் வரும் 17ந்தேதி 95 தொகுதிகளில் நடைபெற உள்ளது. 2-ம் கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.

தினமணி




சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 16, 2012 1:18 am

நன்றிகள் நண்பா.. :வணக்கம்:



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 16, 2012 8:12 am

தேனியில் பணம் மோசடி

தேனி:தேனி மாவட்டத்தில் வங்கி கடன் வாங்கி தருவதற்காக, பணம் கொடுத்து ஏமாந்த மகளிர் குழுவினர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தனர். ஆண்டிபட்டி, ஜி.உசிலம்பட்டியை சேர்ந்தவர் கல்யாணி,40. இவர் டிரஸ்ட் நடத்தி வருவதாகவும், இதன் மூலம் வங்கி கடன் பெற்று தருவதாகவும், இப்பகுதி மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் கூறியுள்ளார். இதன் படி ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்றுத்தர, 10 ஆயிரம் ரூபாயும், 50 ஆயிரம் கடன் பெற்றுத்தர, 6 ஆயிரம் ரூபாயும் இப் பகுதியைச் சேர்ந்த 50 பெண்களிடம் முன் பணம் பெற்றுள்ளார். இது போல், 6 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மகளிர் குழு பெண்கள், எஸ்.பி. அலுவலகத்தில் புகார் செய்தனர். பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., உமா விசாரணை நடத்தி வருகிறார்.

-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 16, 2012 8:13 am

தாயை பிரிந்து தவிக்கும் சிறுத்தைக்குட்டி
வால்பாறை:கோவை மாவட்டம், வால்பாறை அருகே, தாயை பிரிந்த சிறுத்தைக் குட்டி, தேயிலைத் தோட்டத்தில், நான்கு நாட்களாக பரிதவிக்கிறது.வால்பாறையை அடுத்து, முடீஸ் தோணிமுடி எஸ்டேட் உள்ளது. இங்குள்ள தேயிலை தோட்டத்தில், நான்கு நாட்களுக்கு முன், சிறுத்தை, இரு குட்டிகளை ஈன்றது. அவற்றில், ஒன்றை மட்டும் வாயில் கவ்வி, வேறு இடத்துக்கு தூக்கிச் சென்றது. மற்றொரு குட்டியையும் தூக்கிச் செல்ல வரும்போது, தொழிலாளர்கள் சிறுத்தையை பார்த்து, பயத்தில் விரட்டியுள்ளனர்; சிறுத்தை, அங்கியிருந்து தப்பி ஓடிவிட்டது.தாயை பிரிந்து நான்கு நாட்களே ஆன ஆண் சிறுத்தைக்குட்டி, தேயிலை செடிக்குள் பதுங்கி, பசியுடன் தவியாய் தவிருக்கிறது. எந்த நேரத்திலும், தாய் சிறுத்தை, குட்டியை தூக்கிச் செல்ல வரும் என்பதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணிக்குச் செல்லாமல் முடங்கியுள்ளனர்.
தகவல் அறிந்த வனத்துறையினர், நேற்று காலை சம்பவ இடத்திற்கு வந்து, சிறுத்தை குட்டியின் அருகே யாரும் செல்லாதவாறு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

-தினமலர்





சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 16, 2012 8:14 am

"மேஜிக்' என்ற விபரீதம் மாணவி உயிரை பறித்தது

போடி:தேனி மாவட்டம், போடி அருகே, பள்ளி மாணவி ஒருவர், மேஜிக் செய்வதாக கூறி, தண்ணீர் தொட்டியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததில், தீயில் கருகி பலியானார். போடி அருகே மீனாவிலக்கு பகுதியை சேர்ந்த, மச்சக்காளை மகள் கவிதா, 13. அணைக்கரைப்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில், 7 ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை, பள்ளி முடிந்த பின், வீட்டில் பெற்றோர் இல்லாத போது, மேஜிக் செய்வதற்காக, வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் குனிந்தவாறு, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.குபீரென பற்றி எரிந்த தீயில் பலத்த காயமடைந்தார். தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, நேற்று பலியானார். போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 21 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



Page 21 of 37 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 29 ... 37  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக