புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுட சுட செய்திகள்...அச்சலா
Page 33 of 37 •
Page 33 of 37 • 1 ... 18 ... 32, 33, 34, 35, 36, 37
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
First topic message reminder :
3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்
3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்
V.BABU wrote:இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுக்க வேண்டும் : தாலிபன் தீவிரவாதிகள் நிபந்தனை...
இஸ்லாமபாத்: பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்க, இந்தியா மீது அந்நாடு போர் தொடுக்க வேண்டும் என தாலிபன் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்துள்ளனர். பாகிஸ்தான் அரசு அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அந்நாட்டு மீது தாலிபன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டிலுள்ள பத்திரிக்கை அலுவலகத்திற்கு தாலிபன் செய்தி தொடர்பாளர் அமீர் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் பாகிஸ்தானில் தற்போது உள்ள சட்டங்களை ரத்து செய்துவிட்டு, இஸ்லாமிய மது கோட்பாட்டை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவை பழிவாங்கும் வகையில் பாகிஸ்தான்,
இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை பாகிஸ்தான் அரசு உறுதி செயதுள்ளது. ஆனால் தாலிபன்களின் இந்த நிபந்தனையை நிராகரிப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் உறுதிபட தெரிவித்துள்ளது. இதனிடையே காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ 250 பாகிஸ்தான் தீவிரவாதிகள் தயாராக இருப்பதாக எல்லை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இனி வரும் மாதங்களில் தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்..
இதற்காக தானே காத்திருந்தேன் ..என்னருமை தலிபான் நண்பர்களே ....இது தான் எமக்கு சரியான சந்தர்ப்பம் பாகிஸ்தானை இந்தியாவுடன் சேர்த்து விட்டு பலுசிஸ்தான் நாட்டுக்கும் விடுதலை கொடுத்து விடலாம் ...
எனது .50 cal துப்பாக்கி ரெடியாக இருக்கிறது ...சீக்கிரம் வாருங்கள்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
அச்சலா wrote:3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்
சிறிய சந்தேகம் எகிப்த பெண்கள் 5000 வருடங்களுக்கு முன்பே தங்க ஆபரணம் அணிந்ததற்கு சில ஆதாரங்கள் உள்ளன
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
தூத்துக்குடி கடைகளில் அதிரடி சோதனை 15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
தூத்துக்குடி : தூத்துக்குடியில் நேற்று 100க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பாலித்தீன் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள், மற்றும் பாலீத்தின் கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிகள், பிரசாரங்கள் நடத்தப்பட்டது.
இதையடுத்து மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மற்றும் மாநகராட்சி சுகாதார துறை ஆய்வாளர்கள் கடைகளில் அவ்வப்போது திடீர் ஆய்வு செய்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்தால் பறிமுதல் செய்தும் அபராதமும் விதித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் கோகுல்தாஸ் மற்றும் மாநகராட்சி சுகாதார துறை ஆய்வாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் தூத்துக்குடியில் டபிள்யூசி ரோடு, வஉசி மார்க்கெட், வடக்குரதவீதி, தெற்குரத வீதி, விஇ ரோடு உள்பட பல இடங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் சோதனை செய்தனர். அப்போது 25 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். மொத்தம் 15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்தற்காக ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது.
-தினமலர்
தூத்துக்குடி : தூத்துக்குடியில் நேற்று 100க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பாலித்தீன் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள், மற்றும் பாலீத்தின் கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிகள், பிரசாரங்கள் நடத்தப்பட்டது.
இதையடுத்து மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மற்றும் மாநகராட்சி சுகாதார துறை ஆய்வாளர்கள் கடைகளில் அவ்வப்போது திடீர் ஆய்வு செய்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்தால் பறிமுதல் செய்தும் அபராதமும் விதித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் கோகுல்தாஸ் மற்றும் மாநகராட்சி சுகாதார துறை ஆய்வாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் தூத்துக்குடியில் டபிள்யூசி ரோடு, வஉசி மார்க்கெட், வடக்குரதவீதி, தெற்குரத வீதி, விஇ ரோடு உள்பட பல இடங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் சோதனை செய்தனர். அப்போது 25 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். மொத்தம் 15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்தற்காக ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
போட்டியில் ஜெயிக்க 28 பச்சை முட்டை சாப்பிட்ட வாலிபர் சாவு
மாஸ்கோ:நண்பர்களுடன் பந்தயம் கட்டி 28 பச்சை முட்டையை உடைத்து சாப்பிட்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். துனியாவின் வடகிழக்கில் உள்ள கைரோவன் நகருக்கு அருகில் உள்ளது எல் பேட்டன். இங்கு வசித்தவர் தவோ பேட்னசி. வயது 20. இவர் நண்பர்களுடன் ஜாலியாக இருந்த போது, Ôஎன்னால் 30 பச்சை முட்டைகளை அடுத்தடுத்து சாப்பிட முடியும்Õ என்று சவால் விடுத்துள்ளார். அது முடியாது என்று கூறிய நண்பர்கள், 30 முட்டைகளை சாப்பிட்டால் பணம் தருவதாக பந்தயம் கட்டினர். அதன்படி, பச்சை முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து சாப்பிட்டார். தொடர்ந்து 28 முட்டைகளை சாப்பிட்டு விட்டார்.
பந்தயத்தில் தவோ ஜெயித்து விடுவாரோ என்று நண்பர்கள் பரபரப்பு அடைந்தனர். அப்போது திடீரென வயிற்று வலியில் தவோ துடித்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவர் எதனால் இறந்தார் என்பது உடனடியாக தெரியவில்லை இந்த செய்தியை துனியாவின் ஷெம்ஸ் எப்எம் ரேடியோ நேற்று வெளியிட்டது.கடந்த அக்டோபர் மாதம் புளோரிடாவில் உயிருள்ள கரப்பான் பூச்சிகள், புழுக்களை சாப்பிடும் போட்டி நடந்தது. இந்த போட்டியில் 32 வயதுடைய ஒருவர் பங்கேற்று வெற்றி பெற்றார். ஆனால் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தது குறிப்பிடத்தக்கது.
-தினகரன்
மாஸ்கோ:நண்பர்களுடன் பந்தயம் கட்டி 28 பச்சை முட்டையை உடைத்து சாப்பிட்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். துனியாவின் வடகிழக்கில் உள்ள கைரோவன் நகருக்கு அருகில் உள்ளது எல் பேட்டன். இங்கு வசித்தவர் தவோ பேட்னசி. வயது 20. இவர் நண்பர்களுடன் ஜாலியாக இருந்த போது, Ôஎன்னால் 30 பச்சை முட்டைகளை அடுத்தடுத்து சாப்பிட முடியும்Õ என்று சவால் விடுத்துள்ளார். அது முடியாது என்று கூறிய நண்பர்கள், 30 முட்டைகளை சாப்பிட்டால் பணம் தருவதாக பந்தயம் கட்டினர். அதன்படி, பச்சை முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து சாப்பிட்டார். தொடர்ந்து 28 முட்டைகளை சாப்பிட்டு விட்டார்.
பந்தயத்தில் தவோ ஜெயித்து விடுவாரோ என்று நண்பர்கள் பரபரப்பு அடைந்தனர். அப்போது திடீரென வயிற்று வலியில் தவோ துடித்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவர் எதனால் இறந்தார் என்பது உடனடியாக தெரியவில்லை இந்த செய்தியை துனியாவின் ஷெம்ஸ் எப்எம் ரேடியோ நேற்று வெளியிட்டது.கடந்த அக்டோபர் மாதம் புளோரிடாவில் உயிருள்ள கரப்பான் பூச்சிகள், புழுக்களை சாப்பிடும் போட்டி நடந்தது. இந்த போட்டியில் 32 வயதுடைய ஒருவர் பங்கேற்று வெற்றி பெற்றார். ஆனால் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தது குறிப்பிடத்தக்கது.
-தினகரன்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
முருங்கைக்காய் விலை கிலோ ரூ.180
நாகர்கோவில் : கன்னியாகுமரியில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உச்சகட்டமாக முருங்கைக்காய் விலை கிலோ ரூ.180க்கு மொத்த விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. குமரியில் கோயில், கொடை விழா மற்றும் திருமண நிகழ்ச்சிகள் காரணமாக பங்குனி, சித்திரை மற்றும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் காய்கறி விலை மிகவும் அதிகமாக இருக்கும்.
பொங்கலுக்கு பின்னர் விலை குறையும். ஆனால் நடப்பாண்டில் காய்கறிகளின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ளது. விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்காவிட்டாலும் கமிஷன் வியாபாரிகளே கூடுதல் விலைக்கு காரணம் என கூறப்படுகிறது.
மேலும் தற்போது விவசாய நிலங்கள் குறைந்து வருவதும் முக்கிய காரணமாகும். குமரியில் நெல்லுக்கு அடுத்து வாழை மற்றும் வெள்ளரி, வெண்டைக் காய், பாகற்காய் போன்றவை உள்ளூரிலேயே உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும். இதனால் வெள்ளரி, பூசணி கிலோ ரூ.3 முதல் ரூ.4க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடந்த இரு ஆண்டுகளில் விவசாய நிலங்கள் வீட்டு மனையாக மாற்றப்பட்டு வருவதால் வெள்ளரியின் விலை ரூ.30 எட்டியுள்ளது.
-தினகரன்
நாகர்கோவில் : கன்னியாகுமரியில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உச்சகட்டமாக முருங்கைக்காய் விலை கிலோ ரூ.180க்கு மொத்த விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. குமரியில் கோயில், கொடை விழா மற்றும் திருமண நிகழ்ச்சிகள் காரணமாக பங்குனி, சித்திரை மற்றும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் காய்கறி விலை மிகவும் அதிகமாக இருக்கும்.
பொங்கலுக்கு பின்னர் விலை குறையும். ஆனால் நடப்பாண்டில் காய்கறிகளின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ளது. விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்காவிட்டாலும் கமிஷன் வியாபாரிகளே கூடுதல் விலைக்கு காரணம் என கூறப்படுகிறது.
மேலும் தற்போது விவசாய நிலங்கள் குறைந்து வருவதும் முக்கிய காரணமாகும். குமரியில் நெல்லுக்கு அடுத்து வாழை மற்றும் வெள்ளரி, வெண்டைக் காய், பாகற்காய் போன்றவை உள்ளூரிலேயே உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும். இதனால் வெள்ளரி, பூசணி கிலோ ரூ.3 முதல் ரூ.4க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடந்த இரு ஆண்டுகளில் விவசாய நிலங்கள் வீட்டு மனையாக மாற்றப்பட்டு வருவதால் வெள்ளரியின் விலை ரூ.30 எட்டியுள்ளது.
-தினகரன்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
டில்லியில் இதுவரை 635 கற்பழிப்பு; 1க்கு மட்டும் தண்டனை
புதுடில்லி: இந்திய தலைநகர் டில்லியில் இதுவரை இந்த ஆண்டில் மட்டும் 635 கற்பழிப்பு வழக்குகள் பதியப்பட்டதாகவும், இதில் ஒரு வழக்கில் மட்டும் குற்றவாளி என தண்டனை கிடைத்ததாகவும் தற்போது உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
2012 ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான வழக்கு தொடர்பான இந்த அறிக்கையின்படி 635 கற்பழிப்பு வழக்குகள் தொடர்பாக 754 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 403 பேர் கோர்ட் இறுதி விசாரணையின கீழ் இருந்து வருகின்றனர். 348 பேர் மீது ஆரம்ப கட்ட விசாரணையில் உள்ளனர். 2 பேர் விலக்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் மொத்தம் பெண்களிடம் சில்மிஷம் செய்தது தொடர்பாக 624 வழக்கு, ஈவ்டீசிங் தொடர்பாக 193 வழக்குகள் , 111 வரதட்சணை கொடுமை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 128 பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டு புள்ளி விவரங்களை பார்க்கும் போது சராசரியாக 10 சதம் குற்றம் அதிகரித்து வந்துள்ளதை காட்டுகிறது. வழக்கு, விசாரணை, தண்டனை என்ற போதிலும் குற்றச்சம்பவங்கள் குறைந்தபாடில்லை என்பது வேதனையான விஷயம்.
ஆண்டு வாரியாக விவரம் :
கடந்த ஆண்டில் பதிவான கற்பழிப்பு வழக்குகள் விவரம் வருமாறு: ஆண்டு அடைகுறிக்குள் வழங்கப்பட்டுள்ளது . 572 வழக்குகள் ( 2011 ), 507 ( 2010 ) , 469 ( 2009 ) , 466 ( 2008) .
கடந்த 2011 ல் மட்டும் 745 பேர் கற்பழிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 18 பேர் குற்றவாளிகளாக கோர்ட் தீர்ப்பளித்தது. 34 பேர் குற்றமற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். 597 பேர் விசாரணை கட்டத்தில் உள்ளனர். 86 பேர் மீது ஆரம்ப கட்ட விசாரணை, 10 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2010 ல் 685 பேர் கைது செய்யப்பட்டு 37 பேர் குற்றவாளிகள் என முடிவு செய்யப்பட்டது. 107 பேர் போதிய ஆதாரம் இல்லாமல் தப்பித்து விட்டனர் . 518 பேர் வழக்கு விசாரணைக்குள் இருக்கின்றனர். 13 பேர் மீதான விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. 2009 ல் 675 பேரும் , 2008 ல் 604 பேரும் கைது செய்யப்பட்டு , மொத்தம் இரு ஆண்டும் சேர்த்து 134 பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.
-தினமலர்
புதுடில்லி: இந்திய தலைநகர் டில்லியில் இதுவரை இந்த ஆண்டில் மட்டும் 635 கற்பழிப்பு வழக்குகள் பதியப்பட்டதாகவும், இதில் ஒரு வழக்கில் மட்டும் குற்றவாளி என தண்டனை கிடைத்ததாகவும் தற்போது உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
2012 ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான வழக்கு தொடர்பான இந்த அறிக்கையின்படி 635 கற்பழிப்பு வழக்குகள் தொடர்பாக 754 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 403 பேர் கோர்ட் இறுதி விசாரணையின கீழ் இருந்து வருகின்றனர். 348 பேர் மீது ஆரம்ப கட்ட விசாரணையில் உள்ளனர். 2 பேர் விலக்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் மொத்தம் பெண்களிடம் சில்மிஷம் செய்தது தொடர்பாக 624 வழக்கு, ஈவ்டீசிங் தொடர்பாக 193 வழக்குகள் , 111 வரதட்சணை கொடுமை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 128 பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டு புள்ளி விவரங்களை பார்க்கும் போது சராசரியாக 10 சதம் குற்றம் அதிகரித்து வந்துள்ளதை காட்டுகிறது. வழக்கு, விசாரணை, தண்டனை என்ற போதிலும் குற்றச்சம்பவங்கள் குறைந்தபாடில்லை என்பது வேதனையான விஷயம்.
ஆண்டு வாரியாக விவரம் :
கடந்த ஆண்டில் பதிவான கற்பழிப்பு வழக்குகள் விவரம் வருமாறு: ஆண்டு அடைகுறிக்குள் வழங்கப்பட்டுள்ளது . 572 வழக்குகள் ( 2011 ), 507 ( 2010 ) , 469 ( 2009 ) , 466 ( 2008) .
கடந்த 2011 ல் மட்டும் 745 பேர் கற்பழிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 18 பேர் குற்றவாளிகளாக கோர்ட் தீர்ப்பளித்தது. 34 பேர் குற்றமற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். 597 பேர் விசாரணை கட்டத்தில் உள்ளனர். 86 பேர் மீது ஆரம்ப கட்ட விசாரணை, 10 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2010 ல் 685 பேர் கைது செய்யப்பட்டு 37 பேர் குற்றவாளிகள் என முடிவு செய்யப்பட்டது. 107 பேர் போதிய ஆதாரம் இல்லாமல் தப்பித்து விட்டனர் . 518 பேர் வழக்கு விசாரணைக்குள் இருக்கின்றனர். 13 பேர் மீதான விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. 2009 ல் 675 பேரும் , 2008 ல் 604 பேரும் கைது செய்யப்பட்டு , மொத்தம் இரு ஆண்டும் சேர்த்து 134 பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
அரசியலுக்கு இழுக்கிறோம்: கருணாநிதி - என் வழி தனி வழி: ரஜினி
சென்னை:""அரசியலில் நான் நுழைந்தால், என் வழி தனி வழி,'' என, ரஜினியும், ""ரஜினியை மறைமுகமாக அரசியலுக்கு இழுப்பதில் தவறு இல்லை,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதியும் கூறினர்.
மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின், 67வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரைப் பற்றி பலர் எழுதிய கட்டுரைகள், தொகுக்கப்பட்டு நூலாக தயார் செய்யப்பட்டது. இந்நூலை, கருணாநிதி வெளியிட, சிதம்பரத்தின் தாய், லட்சுமி அம்மாள் பெற்றுக் கொண்டார். இதற்கான விழா சென்னையில், நேற்று மாலை நடந்தது.இதில், கருணாநிதி பேசியதாவது:
தமிழகத்தில், 1996, 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களின் போது கூட்டணிகள் மாறின. ஆனால், காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளில் சிதம்பரம் இருந்தாலும், அவர், தி.மு.க.,வை ஆதரித்தார். 1996ம் ஆண்டு தேர்தலில், தமிழ் மாநில காங்கிரஸ் உருவாகவும், வெற்றிபெறவும் பெரும் துணையாக இருந்து சாதித்துக் காட்டியவர் சிதம்பரம்.அந்தத் தேர்தலில், ரஜினி மறைமுக ஆதரவு தெரிவித்தார். அதேபோல், அவரை அரசியலுக்கு மறைமுகமாக இப்போது இழுக்கிறோம். நேரடியாக இழுத்தால் தான் தவறு; மறைமுகமாக இழுத்தால் தவறில்லை.
சேது கால்வாய்:தமிழகத்தின் வணிகம், பொருளாதாரம், வாழ்வாதாரம் ஆகியவற்றை வளமாக்கும், சேது கால்வாய் திட்டம், பல போராட்டங்களுக்குப் பின் உருவாகி, பல ஆண்டுகள் கழித்து, அமல் செய்யப்பட்டது. இருந்தும், அத்திட்டம் நிறைவு பெறாமல், கிடைப்பில் போடப்பட்டுள்ளது.
சேது கால்வாய் திட்டம், ஒரு கட்சிக்கு எதிரான போராட்டம்அல்ல. அத்திட்டத்தை, நிறைவேற்றுவதும் ஒரு சாராருக்கு எதிரானது அல்ல. தமிழகத்தின் பொருளாதார, வணிக வளர்ச்சிக்காக நிறைவேற்றுகிறோம். கிடப்பில் உள்ள திட்டத்தை, மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு உள்ளது. அவர், இப்பொறுப்பை நிறைவேற்றினால், தமிழகத்தின் வரலாற்றில் அழியாத இடம் பிடிப்பார்.
மத்திய அரசின் இணை அமைச்சர், கேபினேட் அமைச்சர் என, உயர்ந்த அவர், அடுத்ததாக, பிரதமராக உயர வேண்டும். சேலை கட்டிய தமிழன் பிரதமர் ஆவதை விட, வேட்டி கட்டிய தமிழன், பிரதமராக வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி கூறினார்.
என் வழி தனி வழி:முன்னதாக ரஜினி பேசுகையில், ""1996ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், நானும் சிறிய பங்காற்றியுள்ளேன். அப்போது, சிதம்பரத்துடன் ஏற்பட்ட நட்பு, இப்போதும் தொடருகிறது. அவர் கூட, எப்போது அரசியலுக்கு வருகிறீர்கள் என, ஒரு ரசிகர் போல் கேட்கிறார். நான் அரசியலுக்கு வந்தால், என் வழி தனி வழி,'' என்றார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், கவிஞர் வைரமுத்து, நடிகர் கமல், தமிழறிஞர் அவ்வை நடராசன், பேராசிரியர் அப்துல்காதர், கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன் உள்ளிட்ட பலர், விழாவில் கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிதம்பரம், பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தார். விழா துவங்குவதற்கு முன், அவரது தலைமையில், டில்லியில் பாலியல் கொடுமைக்கு பலியான மாணவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
-தினமலர்
சென்னை:""அரசியலில் நான் நுழைந்தால், என் வழி தனி வழி,'' என, ரஜினியும், ""ரஜினியை மறைமுகமாக அரசியலுக்கு இழுப்பதில் தவறு இல்லை,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதியும் கூறினர்.
மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின், 67வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரைப் பற்றி பலர் எழுதிய கட்டுரைகள், தொகுக்கப்பட்டு நூலாக தயார் செய்யப்பட்டது. இந்நூலை, கருணாநிதி வெளியிட, சிதம்பரத்தின் தாய், லட்சுமி அம்மாள் பெற்றுக் கொண்டார். இதற்கான விழா சென்னையில், நேற்று மாலை நடந்தது.இதில், கருணாநிதி பேசியதாவது:
தமிழகத்தில், 1996, 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களின் போது கூட்டணிகள் மாறின. ஆனால், காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளில் சிதம்பரம் இருந்தாலும், அவர், தி.மு.க.,வை ஆதரித்தார். 1996ம் ஆண்டு தேர்தலில், தமிழ் மாநில காங்கிரஸ் உருவாகவும், வெற்றிபெறவும் பெரும் துணையாக இருந்து சாதித்துக் காட்டியவர் சிதம்பரம்.அந்தத் தேர்தலில், ரஜினி மறைமுக ஆதரவு தெரிவித்தார். அதேபோல், அவரை அரசியலுக்கு மறைமுகமாக இப்போது இழுக்கிறோம். நேரடியாக இழுத்தால் தான் தவறு; மறைமுகமாக இழுத்தால் தவறில்லை.
சேது கால்வாய்:தமிழகத்தின் வணிகம், பொருளாதாரம், வாழ்வாதாரம் ஆகியவற்றை வளமாக்கும், சேது கால்வாய் திட்டம், பல போராட்டங்களுக்குப் பின் உருவாகி, பல ஆண்டுகள் கழித்து, அமல் செய்யப்பட்டது. இருந்தும், அத்திட்டம் நிறைவு பெறாமல், கிடைப்பில் போடப்பட்டுள்ளது.
சேது கால்வாய் திட்டம், ஒரு கட்சிக்கு எதிரான போராட்டம்அல்ல. அத்திட்டத்தை, நிறைவேற்றுவதும் ஒரு சாராருக்கு எதிரானது அல்ல. தமிழகத்தின் பொருளாதார, வணிக வளர்ச்சிக்காக நிறைவேற்றுகிறோம். கிடப்பில் உள்ள திட்டத்தை, மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு உள்ளது. அவர், இப்பொறுப்பை நிறைவேற்றினால், தமிழகத்தின் வரலாற்றில் அழியாத இடம் பிடிப்பார்.
மத்திய அரசின் இணை அமைச்சர், கேபினேட் அமைச்சர் என, உயர்ந்த அவர், அடுத்ததாக, பிரதமராக உயர வேண்டும். சேலை கட்டிய தமிழன் பிரதமர் ஆவதை விட, வேட்டி கட்டிய தமிழன், பிரதமராக வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி கூறினார்.
என் வழி தனி வழி:முன்னதாக ரஜினி பேசுகையில், ""1996ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், நானும் சிறிய பங்காற்றியுள்ளேன். அப்போது, சிதம்பரத்துடன் ஏற்பட்ட நட்பு, இப்போதும் தொடருகிறது. அவர் கூட, எப்போது அரசியலுக்கு வருகிறீர்கள் என, ஒரு ரசிகர் போல் கேட்கிறார். நான் அரசியலுக்கு வந்தால், என் வழி தனி வழி,'' என்றார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், கவிஞர் வைரமுத்து, நடிகர் கமல், தமிழறிஞர் அவ்வை நடராசன், பேராசிரியர் அப்துல்காதர், கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன் உள்ளிட்ட பலர், விழாவில் கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிதம்பரம், பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தார். விழா துவங்குவதற்கு முன், அவரது தலைமையில், டில்லியில் பாலியல் கொடுமைக்கு பலியான மாணவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
லோக்சபா தொகுதிகளை குறிவைக்கும் மாஜி'க்கள்: தி.மு.க.,வில் பரபரப்பு
எப்போது வேண்டுமானாலும் வரும் என, எதிர்பார்க்கப்படும், லோக்சபா தேர்தலில், சீட் வாங்கிவிட வேண்டும் என, முன்னாள் அமைச்சர்கள், களத்தில் குதித்துள்ளது, தி.மு.க.,வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய, மூன்று லோக்சபா தொகுதிகளை குறிவைத்து, முன்னாள் மத்திய, மாநில அமைச்சர்கள் களமிறங்கியுள்ளனர். திருச்சி லோக்சபா தொகுதியில் நிற்க, முன்னாள் அமைச்சர் நேரு விருப்பப்படுகிறார். கட்சி பலமாக உள்ளபோதே, எம்.பி.,யாகி விட்டால், தன்னுடைய எதிர்காலத்துக்கு நல்லது என்ற நினைப்பில், அவர் திருச்சி, எம்.பி., தொகுதியை கைப்பற்ற துடிக்கிறார்.
அதேபோல், புதுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரகுபதியும், திருச்சி லோக்சபா தொகுதியில், "சீட்' வாங்கிட பகீரத முயற்சிகளில் இறங்கிஉள்ளார்.கரூர் லோக்சபா தொகுதியை குறிவைத்து, முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி காய்நகர்த்தி வருகிறார். இதனால் தற்போது, அவர் தீவிர அரசியலில் களமிறங்கியுள்ளார். அதேபோல் கரூர் தொகுதியை கைப்பற்ற, முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனும் முயற்சிப்பார் என்று தெரிகிறது.
பெரம்பலூர் தொகுதியை, முன்னாள் அமைச்சர் செல்வராஜ் குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார். இவருக்கும், பெரம்பலூரைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கும் நல்ல, "நட்பு பாராட்டல்' இருப்பதால், செல்வராஜுக்கு அங்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளது என்று, தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.
அதேநேரம் ராஜாவுக்கும், பொதுத் தொகுதியாக இருக்கும், பெரம்பலூர் தொகுதியில் நிற்கும் எண்ணம் உள்ளதாம். திருச்சி லோக்சபா தொகுதியை குறிவைக்கும் அமைச்சர் நேருவுக்கு கூட, பெரம்பலூர் தொகுதி மீதும் ஒரு கண் உள்ளது. ஏனென்றால், அவருடைய சொந்த ஊர் பெரம்பலூர் தொகுதியில் தான் உள்ளது."சீட்' வாங்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தான், திருச்சி, பெரம்பலூர் தொகுதிக்கான, ஆலோசனைக் கூட்டங்களை பிரமாண்டமான முறையில், நேரு நடத்தினார் என்றும், தி.மு.க.,வினர் பேசி வருகின்றனர்.
- நமது நிருபர் -
எப்போது வேண்டுமானாலும் வரும் என, எதிர்பார்க்கப்படும், லோக்சபா தேர்தலில், சீட் வாங்கிவிட வேண்டும் என, முன்னாள் அமைச்சர்கள், களத்தில் குதித்துள்ளது, தி.மு.க.,வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய, மூன்று லோக்சபா தொகுதிகளை குறிவைத்து, முன்னாள் மத்திய, மாநில அமைச்சர்கள் களமிறங்கியுள்ளனர். திருச்சி லோக்சபா தொகுதியில் நிற்க, முன்னாள் அமைச்சர் நேரு விருப்பப்படுகிறார். கட்சி பலமாக உள்ளபோதே, எம்.பி.,யாகி விட்டால், தன்னுடைய எதிர்காலத்துக்கு நல்லது என்ற நினைப்பில், அவர் திருச்சி, எம்.பி., தொகுதியை கைப்பற்ற துடிக்கிறார்.
அதேபோல், புதுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரகுபதியும், திருச்சி லோக்சபா தொகுதியில், "சீட்' வாங்கிட பகீரத முயற்சிகளில் இறங்கிஉள்ளார்.கரூர் லோக்சபா தொகுதியை குறிவைத்து, முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி காய்நகர்த்தி வருகிறார். இதனால் தற்போது, அவர் தீவிர அரசியலில் களமிறங்கியுள்ளார். அதேபோல் கரூர் தொகுதியை கைப்பற்ற, முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனும் முயற்சிப்பார் என்று தெரிகிறது.
பெரம்பலூர் தொகுதியை, முன்னாள் அமைச்சர் செல்வராஜ் குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார். இவருக்கும், பெரம்பலூரைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கும் நல்ல, "நட்பு பாராட்டல்' இருப்பதால், செல்வராஜுக்கு அங்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளது என்று, தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.
அதேநேரம் ராஜாவுக்கும், பொதுத் தொகுதியாக இருக்கும், பெரம்பலூர் தொகுதியில் நிற்கும் எண்ணம் உள்ளதாம். திருச்சி லோக்சபா தொகுதியை குறிவைக்கும் அமைச்சர் நேருவுக்கு கூட, பெரம்பலூர் தொகுதி மீதும் ஒரு கண் உள்ளது. ஏனென்றால், அவருடைய சொந்த ஊர் பெரம்பலூர் தொகுதியில் தான் உள்ளது."சீட்' வாங்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தான், திருச்சி, பெரம்பலூர் தொகுதிக்கான, ஆலோசனைக் கூட்டங்களை பிரமாண்டமான முறையில், நேரு நடத்தினார் என்றும், தி.மு.க.,வினர் பேசி வருகின்றனர்.
- நமது நிருபர் -
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
கிறிஸ்துமஸ் விழாவால் தே.மு.தி.க.,வில் வெடித்த மோதல்
கிறிஸ்துமஸ் விழாவால், கூட்டணி உருவானது மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மறுபுறம் கட்சி நிர்வாகிகள் மத்தியில் மோதல் வெடித்துள்ளது, தே.மு.தி.க., தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தே.மு.தி.க., சார்பில், முக்கியமான மத பண்டிகைகள் கொண்டாடப்பட்டு, அந்நாளில் ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு, ஆட்டிறைச்சி, குர்பானியாக வழங்கப்பட்டது.சமீபத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, கேக் மற்றும் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விரைவில், பொங்கல் பண்டிகை கொண்டாடவும், கரும்பு, பொங்கல் பொருட்கள் உள்ளிட்டவற்றை, மக்களுக்கு இலவசமாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கட்சி தலைமை, இது போன்ற விழாக்களை ஏதாவது ஒரு இடத்தில் பிரமாண்டமாக நடத்துவதுடன், அனைத்து மாவட்டங்களிலும், இவ்விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என, கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்துகிறது.மாநில நிர்வாகிகள் பிறப்பிக்கும் உத்தரவை செயல்படுத்த வேண்டிய கடமை, மாவட்ட செயலர்களை சென்று சேர்க்கிறது. அவர்கள், தனக்கு கீழ் மட்டத்தில் உள்ள வட்டம், நகரம், பேரூர், ஒன்றிய செயலர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கின்றனர்.
இவர்கள் தான் பணத்தை செலவிட்டு, இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்கின்றனர். இவர்களோடு மாவட்ட செயலர்களும் இணைந்து விழாவை நடத்தி வந்தனர். சட்டசபை தேர்தலுக்கு முன் வரை, இந்த விழாக்களை நடத்துவதில், தே.மு.தி.க., நிர்வாகிகளிடையே எவ்வித பிரச்னையும் எழவில்லை.ஆனால், சட்டசபை தேர்தலுக்கு பின், வருவாய் ஏதும் இல்லாததால், தொடர்ந்து பணத்தை செலவிட முடியாமல், மாவட்ட செயலர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு கீழ் உள்ள நிர்வாகிகளும் திணறி வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மக்களுக்காக மக்கள் பணி என்ற பெயரில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும், 20 லட்சம் ரூபாய் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.விழாவிற்கு மேடை, அமைப்பதில் துவங்கி நலத்திட்ட உதவிகள் வழங்குவது வரை, அனைத்திற்கான ஏற்பாடுகளையும் மாவட்ட செயலர்களிடம் கட்சி தலைமை ஒப்படைத்தது.
அவர்களும், வழக்கம்போல், தனக்கு கீழ் உள்ள நிர்வாகிகளுக்கு செலவுகளை பிரித்து கொடுத்தனர். ஆனால், செலவு செய்ய பணம் இல்லாததால், நிர்வாகிகள் திணறினர். கன்னியாகுமரி மாவட்ட செயலராக இருந்தவர், இதற்கான செலவை ஏற்க முடியாது என்று கூறிவிட்டு, கடைசி நேரத்தில் பொறுப்பில் இருந்து விலகி, கட்சி தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்தார். இருப்பினும், பிரச்னைக்கு மத்தியில் ஒரு வழியாக இவ்விழா அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி நடந்தது.
சமீபத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி, கேக் மற்றும் பிரியாணி வழங்கும் விழாவை, அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட வேண்டும் என, கட்சி தலைமை அறிவுறுத்தியது.
கிறிஸ்தவ மத போதகர்கள் முன்னிலையில், இவ்விழா, கட்சியின் தலைமை அலுவலகத்தில் தடபுடலாக நடந்தது. இவ்விழாவின், முக்கிய அம்சமாக லோக்சபா தேர்தலில், தி.மு.க., - தே.மு.தி.க., இடையே கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருப்பது, விஜயகாந்தின் பேச்சில் இருந்து தெளிவானது.
ஆனால், அதே நேரத்தில், இவ்விழாவால், பல மாவட்டங்களில், கட்சி நிர்வாகிகளிடையே, உட்கட்சி மோதல் அதிகரித்து உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை செய்யும்படி, மாவட்ட செயலர்கள் உத்தரவிட்டிருந்த நிலையில், பலர் அதை செய்யாமல், தங்களது மொபைல் போன்களை, "ஸ்விட்ச் ஆப்' செய்துவிட்டனர்.இதனால், மாவட்ட செயலர்களே, வேறு வழியின்றி, தங்களது சொந்த செலவில், விழா ஏற்பாடுகளை கவனித்தனர்.
இதனால், மாவட்டங்களில், எவ்வித ஆடம்பரமும் இன்றி, பெயரளவிற்கு இவ்விழா நடந்தது.கடுப்பான மாவட்ட செயலர்கள், சில நிர்வாகிகளை விடாப்பிடியாக, நேரில் அழைத்து விளக்கம் கேட்டுள்ளனர். இதுநாள் வரை அடக்கி வைத்திருந்த கோபத்தை காட்டிவிட்டு, அந்த நிர்வாகிகள் சென்றுவிட்டனர்.மாவட்ட செயலர்கள் மூலம், இத்தகவல் கட்சி தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டது. கட்சி நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ள மோதல், கட்சி தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அடுத்து வரப்போகும் பொங்கல் பண்டிகையை, எவ்வாறு கொண்டாடுவது என, தே.மு.தி.க., தலைமை யோசிக்க துவங்கி உள்ளது.
- நமது நிருபர் -
கிறிஸ்துமஸ் விழாவால், கூட்டணி உருவானது மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மறுபுறம் கட்சி நிர்வாகிகள் மத்தியில் மோதல் வெடித்துள்ளது, தே.மு.தி.க., தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தே.மு.தி.க., சார்பில், முக்கியமான மத பண்டிகைகள் கொண்டாடப்பட்டு, அந்நாளில் ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு, ஆட்டிறைச்சி, குர்பானியாக வழங்கப்பட்டது.சமீபத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, கேக் மற்றும் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விரைவில், பொங்கல் பண்டிகை கொண்டாடவும், கரும்பு, பொங்கல் பொருட்கள் உள்ளிட்டவற்றை, மக்களுக்கு இலவசமாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கட்சி தலைமை, இது போன்ற விழாக்களை ஏதாவது ஒரு இடத்தில் பிரமாண்டமாக நடத்துவதுடன், அனைத்து மாவட்டங்களிலும், இவ்விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என, கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்துகிறது.மாநில நிர்வாகிகள் பிறப்பிக்கும் உத்தரவை செயல்படுத்த வேண்டிய கடமை, மாவட்ட செயலர்களை சென்று சேர்க்கிறது. அவர்கள், தனக்கு கீழ் மட்டத்தில் உள்ள வட்டம், நகரம், பேரூர், ஒன்றிய செயலர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கின்றனர்.
இவர்கள் தான் பணத்தை செலவிட்டு, இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்கின்றனர். இவர்களோடு மாவட்ட செயலர்களும் இணைந்து விழாவை நடத்தி வந்தனர். சட்டசபை தேர்தலுக்கு முன் வரை, இந்த விழாக்களை நடத்துவதில், தே.மு.தி.க., நிர்வாகிகளிடையே எவ்வித பிரச்னையும் எழவில்லை.ஆனால், சட்டசபை தேர்தலுக்கு பின், வருவாய் ஏதும் இல்லாததால், தொடர்ந்து பணத்தை செலவிட முடியாமல், மாவட்ட செயலர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு கீழ் உள்ள நிர்வாகிகளும் திணறி வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மக்களுக்காக மக்கள் பணி என்ற பெயரில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும், 20 லட்சம் ரூபாய் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.விழாவிற்கு மேடை, அமைப்பதில் துவங்கி நலத்திட்ட உதவிகள் வழங்குவது வரை, அனைத்திற்கான ஏற்பாடுகளையும் மாவட்ட செயலர்களிடம் கட்சி தலைமை ஒப்படைத்தது.
அவர்களும், வழக்கம்போல், தனக்கு கீழ் உள்ள நிர்வாகிகளுக்கு செலவுகளை பிரித்து கொடுத்தனர். ஆனால், செலவு செய்ய பணம் இல்லாததால், நிர்வாகிகள் திணறினர். கன்னியாகுமரி மாவட்ட செயலராக இருந்தவர், இதற்கான செலவை ஏற்க முடியாது என்று கூறிவிட்டு, கடைசி நேரத்தில் பொறுப்பில் இருந்து விலகி, கட்சி தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்தார். இருப்பினும், பிரச்னைக்கு மத்தியில் ஒரு வழியாக இவ்விழா அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி நடந்தது.
சமீபத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி, கேக் மற்றும் பிரியாணி வழங்கும் விழாவை, அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட வேண்டும் என, கட்சி தலைமை அறிவுறுத்தியது.
கிறிஸ்தவ மத போதகர்கள் முன்னிலையில், இவ்விழா, கட்சியின் தலைமை அலுவலகத்தில் தடபுடலாக நடந்தது. இவ்விழாவின், முக்கிய அம்சமாக லோக்சபா தேர்தலில், தி.மு.க., - தே.மு.தி.க., இடையே கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருப்பது, விஜயகாந்தின் பேச்சில் இருந்து தெளிவானது.
ஆனால், அதே நேரத்தில், இவ்விழாவால், பல மாவட்டங்களில், கட்சி நிர்வாகிகளிடையே, உட்கட்சி மோதல் அதிகரித்து உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை செய்யும்படி, மாவட்ட செயலர்கள் உத்தரவிட்டிருந்த நிலையில், பலர் அதை செய்யாமல், தங்களது மொபைல் போன்களை, "ஸ்விட்ச் ஆப்' செய்துவிட்டனர்.இதனால், மாவட்ட செயலர்களே, வேறு வழியின்றி, தங்களது சொந்த செலவில், விழா ஏற்பாடுகளை கவனித்தனர்.
இதனால், மாவட்டங்களில், எவ்வித ஆடம்பரமும் இன்றி, பெயரளவிற்கு இவ்விழா நடந்தது.கடுப்பான மாவட்ட செயலர்கள், சில நிர்வாகிகளை விடாப்பிடியாக, நேரில் அழைத்து விளக்கம் கேட்டுள்ளனர். இதுநாள் வரை அடக்கி வைத்திருந்த கோபத்தை காட்டிவிட்டு, அந்த நிர்வாகிகள் சென்றுவிட்டனர்.மாவட்ட செயலர்கள் மூலம், இத்தகவல் கட்சி தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டது. கட்சி நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ள மோதல், கட்சி தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அடுத்து வரப்போகும் பொங்கல் பண்டிகையை, எவ்வாறு கொண்டாடுவது என, தே.மு.தி.க., தலைமை யோசிக்க துவங்கி உள்ளது.
- நமது நிருபர் -
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
தமிழகத்தில் ஆடுகளுக்கு தட்டுப்பாடு: பொங்கலுக்கு மட்டன் கிடைக்குமா?
தமிழகத்தில், பருவமழை பொய்த்து விட்ட நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலின் பெருக்கம் காரணமாக, மேய்ச்சல் நிலங்களும் குறைந்து விட்டதால், ஆடுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆடுகளை வாங்க வியாபாரிகள் ஆந்திராவுக்கு படையெடுக்க துவங்கி உள்ளனர். பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, தேவையான அளவு ஆடுகள் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஆடு வளர்ப்பில், ஈரோடு முதலிடத்தையும், சேலம் இரண்டாம் இடத்தையும், திருநெல்வேலி மாவட்டம் மூன்றாம் இடத்திலும் உள்ளன. அதைத் தொடர்ந்து, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்கள் உள்ளன.நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதால், நீர் நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு விட்டன. அது மட்டுமின்றி, குறைந்த அளவில் உள்ள மேய்ச்சல் நிலங்களிலும், புற்கள், தழைகள் இன்றி வறட்சியாக காணப்படுகிறது.
மேலும், பெருகி வரும் ரியல் எஸ்டேட் தொழில் காரணமாக மேய்ச்சல் நிலப்பரப்பு குறைந்ததால், ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்த விவசாயிகள், மாற்றுத் தொழிலுக்கு செல்லத் துவங்கி விட்டனர். தற்போது, பனிப் பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளதால், ஆடுகளுக்கு நீல நாக்கு உள்ளிட்ட கொடிய நோய் தாக்கமும் அதிகரித்து வருவது, ஆடு வளர்ப்போர் மத்தியில், கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் பெரிய ஆட்டுச் சந்தைகளாக கருதப்படும், ஈரோடு, நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம், திருச்செங்கோடு, மேச்சேரி, திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஆகிய சந்தைகளுக்கு, விற்பனைக்கு வரும் ஆடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
குறைந்த எண்ணிக்கையில், விற்பனைக்கு வரும் ஆடுகளின் விலையும், கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் அசைவ பிரியர்களை திருப்தி படுத்தும் வகையில், ஆட்டு வியாபாரிகள், தற்போது ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு, ஆடுகளை கொள்முதல் செய்ய படையெடுத்து உள்ளனர்.
தமிழகத்தில், கடந்த மாதம் வரை, 10 கிலோ எடை கொண்ட ஆடு, உயிருடன் 4,500 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை, விற்பனை செய்யப்பட்டது. தற்போது, 5,500 ரூபாய் முதல், 6,000 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.ஆடு விலையில் ஏற்பட்ட உயர்வை அடுத்து, சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில், ஆட்டுக் கறியின் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை, ஆட்டுக்கறி கிலோ, 400 ரூபாய்க்கு விற்றது, தற்போது, 425 முதல், 475 ரூபாய் வரை, விற்பனையாகிறது.
சேலத்தில் கடந்த வாரம் வரை, கிலோ, 380 ரூபாய்க்கு விற்றது, 400 ரூபாயாக அதிகரித்துள் ளது. தமிழகத்தில் ஆடுகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், பொங்கல் பண்டிகையின் போது ஆட்டுக்கறியின் விலை,500 ரூபாய் வரை உயர்வு ஏற்படும். அதே சமயம், வெள்ளாடு களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், பொங்கல் பண்டிகையின் போது, தேவையான அளவு ஆட்டுக்கறி கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -
தமிழகத்தில், பருவமழை பொய்த்து விட்ட நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலின் பெருக்கம் காரணமாக, மேய்ச்சல் நிலங்களும் குறைந்து விட்டதால், ஆடுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆடுகளை வாங்க வியாபாரிகள் ஆந்திராவுக்கு படையெடுக்க துவங்கி உள்ளனர். பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, தேவையான அளவு ஆடுகள் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஆடு வளர்ப்பில், ஈரோடு முதலிடத்தையும், சேலம் இரண்டாம் இடத்தையும், திருநெல்வேலி மாவட்டம் மூன்றாம் இடத்திலும் உள்ளன. அதைத் தொடர்ந்து, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்கள் உள்ளன.நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதால், நீர் நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு விட்டன. அது மட்டுமின்றி, குறைந்த அளவில் உள்ள மேய்ச்சல் நிலங்களிலும், புற்கள், தழைகள் இன்றி வறட்சியாக காணப்படுகிறது.
மேலும், பெருகி வரும் ரியல் எஸ்டேட் தொழில் காரணமாக மேய்ச்சல் நிலப்பரப்பு குறைந்ததால், ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்த விவசாயிகள், மாற்றுத் தொழிலுக்கு செல்லத் துவங்கி விட்டனர். தற்போது, பனிப் பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளதால், ஆடுகளுக்கு நீல நாக்கு உள்ளிட்ட கொடிய நோய் தாக்கமும் அதிகரித்து வருவது, ஆடு வளர்ப்போர் மத்தியில், கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் பெரிய ஆட்டுச் சந்தைகளாக கருதப்படும், ஈரோடு, நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம், திருச்செங்கோடு, மேச்சேரி, திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஆகிய சந்தைகளுக்கு, விற்பனைக்கு வரும் ஆடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
குறைந்த எண்ணிக்கையில், விற்பனைக்கு வரும் ஆடுகளின் விலையும், கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் அசைவ பிரியர்களை திருப்தி படுத்தும் வகையில், ஆட்டு வியாபாரிகள், தற்போது ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு, ஆடுகளை கொள்முதல் செய்ய படையெடுத்து உள்ளனர்.
தமிழகத்தில், கடந்த மாதம் வரை, 10 கிலோ எடை கொண்ட ஆடு, உயிருடன் 4,500 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை, விற்பனை செய்யப்பட்டது. தற்போது, 5,500 ரூபாய் முதல், 6,000 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.ஆடு விலையில் ஏற்பட்ட உயர்வை அடுத்து, சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில், ஆட்டுக் கறியின் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை, ஆட்டுக்கறி கிலோ, 400 ரூபாய்க்கு விற்றது, தற்போது, 425 முதல், 475 ரூபாய் வரை, விற்பனையாகிறது.
சேலத்தில் கடந்த வாரம் வரை, கிலோ, 380 ரூபாய்க்கு விற்றது, 400 ரூபாயாக அதிகரித்துள் ளது. தமிழகத்தில் ஆடுகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், பொங்கல் பண்டிகையின் போது ஆட்டுக்கறியின் விலை,500 ரூபாய் வரை உயர்வு ஏற்படும். அதே சமயம், வெள்ளாடு களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், பொங்கல் பண்டிகையின் போது, தேவையான அளவு ஆட்டுக்கறி கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -
- Sponsored content
Page 33 of 37 • 1 ... 18 ... 32, 33, 34, 35, 36, 37
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 33 of 37
|
|