புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10 
74 Posts - 44%
heezulia
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
prajai
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Jenila
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kargan86
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10 
10 Posts - 5%
prajai
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10 
8 Posts - 4%
Jenila
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Dec 11, 2012 5:22 pm

First topic message reminder :

இந்த அண்டவெளியில், நாம் தனியாக இருக்கிறோமா? அதாவது, நமது பூமியைத் தவிர வேறு எங்காவது உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனவா?

பில்லியன் டாலர் மதிப்புடைய கேள்வி. இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் எப்போதாவது, ஏதோ ஒரு வடிவத்தில் எழும் கேள்வி இது. இதற்கு விடை, அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடித்துவிடக்கூடிய அளவு சுலபம் அல்ல என்பது இந்தக் கேள்வியை இன்னும் மர்மமாக மாற்றுகிறது.

உயிர்மையில் நமது ராஜ் சிவா எழுதிய ’2012இல் உலக அழிவும், மாயா இன மக்களும்‘ என்ற தொடரை வெகு சமீபத்தில் தான் படிக்க நேர்ந்தது. அந்தத் தொடரைப் படிக்கையில், எனது சிறுவயதில் வானமண்டல மனிதர்கள் பற்றிய புத்தகங்களைப் படித்தது நினைவு வந்தது. அந்த நினைவுகள் உந்தித் தள்ள, இணையத்தில் ஒரு முழு நாள் இது பற்றிச் செலவிட்டேன். சிறுவயதில் படித்த புத்தகங்களைத் தேடிப்பிடித்தது மட்டுமல்லாது, இந்த 20 வருடங்களில் மேன்மேலும் வந்திருக்கக்கூடிய பல ஆராய்ச்சிக்கட்டுரைகள், புதிய புத்தகங்கள் ஆகியனவற்றையும் ஒரே மூச்சில் படித்தேன்; படித்துக்கொண்டும் இருக்கிறேன். படித்ததை நண்பர்களுடன் பகிரலாம் என்பதே நோக்கம். இது ஒரு விவாதமாகவும் இருக்கட்டும். படிக்கும் நண்பர்கள், உங்கள் கருத்துகளையும் எழுதலாம். ஒருவகையில் பார்த்தால், மறந்தே போயிருந்த பல விஷயங்கள், ராஜ் சிவாவினால் நினைவு வந்தன. ஆகவே, அவருக்கே முதல் நன்றி.

கட்டுரையை ஆரம்பிக்கும் முன்னர், இன்னொருவரைப் பற்றியும் விரிவாகச் சொல்லியே ஆக வேண்டும்.

விக்கிரவாண்டி ரவிச்சந்திரன்.

ஆவிகளைப் பற்றிப் படிக்கும் யாருக்கும் அவ்வளவு சுலபமாக மறந்துவிடாத பெயர். எனக்குத் தெரிந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ஆவிகளைப் பற்றியும், occult விஷயங்களைப் பற்றியும் எழுதிவருகிறார். இவர் எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் ‘அறிவுக்கு அப்பாற்பட்ட அதிசய சக்திகள்’. இந்தப் புத்தகத்தை, எனது தந்தையின் மூலம், எனது பத்தாவது வயதில் படிக்க நேர்ந்தது. அக்காலத்தில் எப்போது பார்த்தாலும் புத்தகங்களைக் கட்டிக்கொண்டு மாரடித்து வந்ததால், இப்புத்தகத்தைப் படிப்பது கடினமாக இருக்கவில்லை. அப்புத்தகத்தின் மூலம் பல அதிசய மனிதர்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். ரஸ்புடீன், அரிகோ, யூரி கெல்லர், மாயன்களின் அரசன் குக்குல்கன், சகுந்தலா தேவி, நெப்போலியன் எகிப்து சென்ற மர்மம் ஆகிய பல விஷயங்கள் அவற்றில் விரிவாக எழுதப்பட்டிருக்கும். துறுதுறுப்பான ஒரு சிறுவனுக்கு இந்த விஷயங்கள் எப்பேர்ப்பட்ட ஒரு உலகத்தைத் திறந்துவிட்டிருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

அந்தப் புத்தகத்தில் நான் படித்த மறக்க முடியாத இன்னொரு பெயர்: Erich Von Daniken. பண்டைய காலத்தில் வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு வந்தது உண்மைதான் என்று பல புத்தகங்கள் எழுதி வெளியிட்டிருக்கும் மனிதர் இவர். இவரைப் பற்றியும் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் நமக்கு அறிமுகம் செய்திருக்கிறார். இரண்டு decades முன்பே. அதனைத்தொடர்ந்து, பள்ளி இறுதி ஆண்டுகளில் எரிக் வான் டேனிக்கென் எழுதிய ‘Chariots of Gods‘ புத்தகம் கிடைத்தது. அதுவும் ஒரு மறக்கமுடியாத புத்தகம்தான்.

இந்த டேனிக்கெனை விகடனில் மதன் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார். பல்லாண்டுகளுக்கு முன்பு. அதைப் படித்ததும் நன்றாக நினைவிருக்கிறது. அதில், மதனை வரவேற்கும்போதே, ‘உங்கள் ஊர் ராமர் கூட வேற்றுக்கிரக வாசிதான் தெரியுமா?’ என்று டேனிக்கென் கேட்ட கேள்வியை மதன் எழுதியிருப்பார்.

அவர் எழுதிய பல விஷயங்கள் இப்போது ஹம்பக் என்று சொல்லப்பட்டு வருகின்றன. என்றாலும், அவற்றில் அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை முடிந்தால் விபரமாகப் பார்ப்போம்.

அவரைப்போலவே இந்தத் துறையில் பல்லாண்டுகளாகப் பழம் தின்று கோட்டை போட்ட மனிதர்கள் எழுதிய சில புத்தகங்களையும் முடிந்தால் அலசலாம். அவற்றில் அவர்கள் எழுதியுள்ள விபரங்கள், ஆச்சரியமாகவும் மலைப்பாகவும் இருக்கும். அவைகளை உண்மை என்று எடுத்துக்கொள்ளாவிட்டாலும் கூட, சற்று நேரம் வேற்றுக்கிரக வாசிகள், UFOக்கள், அவர்களின் மொழிகள், பறக்கும் தட்டுகள் ஆகியவற்றின் நினைவில் ஆழ்ந்து இன்புறலாம் வாருங்கள்.

அப்படியே, இந்த விஷயங்கள் உண்மையா? அல்லது பொய்யா? என்ற வகையில் பல தகவல்களையும் பார்க்கப்போகிறோம். அதிலேயே மாயன்கள், சுமேரியர்கள் ஆகியவர்களைப் பற்றிய தகவல்களையும் தொட்டுச்செல்லலாம். பலவற்றை ராஜ் சிவா ஏற்கெனவே எழுதிவிட்டார். ஆகவே, அவற்றை ஒரு highlight போலப் பார்க்கலாம்.

சரி. முன்னுரை போதும். ஆரம்பிக்கலாமா?

1. சரித்திரம் சொல்லும் Alien கதைகள்

மனிதகுலத்தில் பல்வேறு இனங்களில் வழங்கி வரும் புராணங்களை எடுத்துக்கொண்டால், அவைகள் எல்லாவற்றிலும் பல ஆச்சரியங்கள் நிறைந்திருக்கின்றன. கிட்டத்தட்ட இவைகள் அனைத்துமே, வானில் இருந்து இறங்கிய ‘கடவுளர்’களைப் பற்றிப்பல தகவல்களைச் சொல்கின்றன. அவைகளைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். மனிதகுலத்தின் ஆதிமூலம், அவர்களது புராணங்களே என்பதால், இந்த referenceகள் அவசியம். மட்டுமில்லாமல், அவைகளில் சொல்லப்பட்டிருக்கும் fantasized விஷயங்கள் படிப்பதற்கும் சுவாரஸ்யமாக இருக்கும்.

இந்தியாவிலிருந்தே ஆரம்பிப்போம்.

நாம் எடுத்துக்கொள்ளப்போகும் புராணம், மஹாபாரதம். ராமாயணத்திலும் ஆச்சரியமான UFO குறிப்புகள் உண்டு என்றாலும் (புஷ்பக விமானம்), மஹாபாரதத்தில், உலகின் எந்த UFO குறிப்புகளையும் தூக்கிச் சாப்பிட்டுவிடக்கூடிய தகவல்கள் நிறைந்துள்ளதால், அதில் உள்ள விபரங்களைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். எனக்கு மஹாபாரதத்தைப் பற்றித் தெரிந்தவைகளையும் (அதிலிருக்கும் முக்காலே மூணு வீச கதைகள் எனக்கு அத்துப்படி), UFO ஆராய்ச்சியாளர்களின் கூற்றையும், மறந்துபோன சில தகவல்கள் இணையத்திலிருந்தும் கொடுக்கிறேன்.

மஹாபாரதத்தின் தொடக்கத்திலேயே, ‘கடவுளர்கள்’ குந்திதேவிக்குக் குழந்தைகளை அருளியது பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. துர்வாசர் சொல்லிக்கொடுத்த ஒரு மந்திரத்தைச் சொல்லி ஒரு குறிப்பிட்ட கடவுளை நினைத்தால், அந்தக் கடவுளின் குழந்தை அம்மந்திரத்தைச் சொல்லும் பெண்ணின் வயிற்றில் உருவாகிவிடும். அப்படி அதனை உபயோகித்து உருவான குழந்தைகளே கர்ணன் (சூரியன்), யுதிஷ்டிரன் என்னும் தர்மன் (எமனின் குழந்தை), பீமன் (வாயு), அர்ஜுனன் (இந்த்ரன்), நகுலன் மற்றும் சகதேவன் (அஸ்வினி தேவர்கள்). இதில் நகுலனும் சகதேவனும் பாண்டுவின் இரண்டாம் மனைவியான மாத்ரிக்குப் பிறந்தவர்கள்.

மஹாபாரதத்தில் சிவன் அழித்த மூன்று அசுரர்களைப் பற்றிய கதையும் வருகிறது. கர்ண பர்வத்தில் இக்கதை விபரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. த்ரிபுரர்கள் என்று சொல்லப்பட்ட மூன்று அசுரர்களுக்கு, மூன்று பெரிய நகரங்களை தேவர்களின் சிற்பியான மயன் வானில் கட்டிக்கொடுத்த கதையும், அந்த பிரம்மாண்டமான நகரங்கள் ஒரே வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்ததும், அந்நகரங்களை எப்படி ஒரே ஆயுதத்தைப் பயன்படுத்தி சிவன் அழித்தார் என்பதும் விபரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது (இதே கதையில், தனது புன்னகையாலேயே அந்நகரங்களை சிவன் அழித்ததாக மற்றொரு பாடபேதம் உண்டு). மூன்று நகரங்கள் வானில் சுற்றிக்கொண்டிருந்தன என்று பாரதத்தில் வருவது, ஒருவேளை ஏலியன்களின் பறக்கும் தட்டுதானோ?

மஹாபாரதத்தின் துரோண பர்வத்தில், 201 வது அத்தியாயத்தில், துரோணரின் மகனான அஸ்வத்தாமா, தண்ணீரிலிருந்து எப்படி ஆக்நேயாஸ்திரம் என்ற ஒன்றைப் பாண்டவர்களின் மீது பிரயோகித்தான் என்று விபரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அஸ்திரத்தை அஸ்வத்தாமா எய்தவுடன் – ‘அந்த ஆயுதத்திலிருந்து அம்பு மழை அர்ஜுனனின் மீது பொழிந்தது; உலகமே இருண்டு போனது; வானத்திலிருந்து எரிகற்கள் விழுந்தன; வெப்பம் கடுமையாக அதிகரித்தது; சூரியன் கண்ணுக்கே தெரியவில்லை; ஆயிரமாயிரம் ரதங்கள் ஒரே நொடியில் எரிக்கப்பட்டன; யானைகள் செத்து விழுந்தன; சில யானைகள் வெறிகொண்டு பிளிறியபடி அங்குமிங்கும் ஓடின; பாண்டவப் படையில் இருந்த பல வீரர்கள் முற்றியும் எரிந்து சாம்பலாயினர்; மொத்தத்தில், நெருப்பின் கடவுளான அக்னி, பாண்டவர்களைக் கபளீகரம் செய்ததுபோல் இருந்தது’ – என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த அத்தனை symptomகளும், ஹிரோஷிமா அல்லது நாகசாகியிலிருந்துகொண்டு நேரடி ஒளிபரப்பு செய்ததைப்போல் இருக்கிறதல்லவா?

மஹாபாரதத்தில் வரும் extra terrestrial விஷயங்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று இந்த alien ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

இது தவிர, அமெரிக்க விஞ்ஞானி ராபர்ட் ஆப்பன்ஹீமர் – அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர் – உலகின் முதல் ந்யூக்ளியர் குண்டு வெடிக்கப்பட்டபோது, அந்த அனுபவம் எப்படி இருந்தது என்று அவரைப் பத்திரிகை நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் சொன்ன quote உலகப்பிரசித்தி பெற்றது. அந்த quote, நமது பகவத்கீதையிலிருந்தே எடுக்கப்பட்டது. அர்ஜுனனுக்குத் தனது விஸ்வரூபத்தைக் கண்ணன் காண்பிக்கையில், பயத்தில் நடுநடுங்கிக்கொண்டே அர்ஜுனன் சொல்லும் ஒரு ஸ்லோகம் அது.

அவர் இந்த ஸ்லோகத்தைப் பற்றிப் பேசும் வீடியோ இங்கே காணலாம்.

[youtube][/youtube]

அவரிடம், இதுதான் உலகின் முதல் ந்யூக்ளியர் குண்டுவெடிப்பா என்று பத்திரிக்கையாளர்கள் வினவியபோது, ‘நவீனகாலத்தில் என்றால், ஆமாம்’ என்று பதிலளித்தும் இருக்கிறார்.

இப்படி, பண்டைய காலத்தில் ந்யூக்ளியர் குண்டின் சக்தியை ஒத்த ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டதே, அவைகளை பூமிக்குக் கொண்டு வந்த ஏலியன்களின் இருப்பை உறுதிப்படுத்துவதாக ஏலியன் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

இந்துமதத்தில் மட்டுமல்ல. வேறு பல மதங்களின் புராணங்களிலும் ஏலியன்களைப் பற்றிய செய்திகள் நிறைந்துள்ளன. அவற்றைப் பற்றி அடுத்த கட்டுரையில் காணலாம். அப்படியே இந்தச் செய்திகள் உண்மையா டுபாக்கூரா என்றும் அலசலாம்.

தொடரும் . . . .


நன்றி : கருந்தேள்



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Knight

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 13, 2012 12:03 pm

நல்ல தொடர் சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 13, 2012 3:01 pm

நல்ல தொடர் தொடர்ந்து பதிவிடுங்கள் முத்து




வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Mவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Uவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Tவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Hவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Uவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Mவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Oவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Hவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Aவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Mவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Eவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Dec 13, 2012 4:21 pm

விறுவிறுப்பாக நகர்கிறது. பாராட்டுகள்! தொடருங்கள்! மகிழ்ச்சி

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Fri Dec 14, 2012 8:24 am

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 4

விண்கலத்திலிருந்து இறங்கிவந்த அந்த ‘மனிதர்’, க்ளாடிடம் என்ன பேசினார்?

இதைப்பற்றிக் க்ளாட் ஒரு முழு புத்தகமே எழுதியிருக்கிறார். ‘Intelligent Design‘ என்ற அந்தப் புத்தகம், அவரது தளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. அப்புத்தகத்தை [url= இங்கே]http://www.rael.org/request.php?1[/url] தரவிறக்கிக்கொள்ளலாம்.

அதில் அவர் எழுதியுள்ளதைச் சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், பூமிக்கு வெகு தொலைவில் இருக்கக்கூடிய ஒரு கிரகம். அதில், மொத்தம் ஏழு பில்லியன் மாந்தர்கள் வசிக்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் – சரியாகச் சொல்லவேண்டும் என்றால் 25,000 ஆண்டுகளுக்கு முன் – தொழில்நுட்பத்தில் வெகுவாக முன்னேறியிருந்த அவர்களுக்கு, அவர்களது விஞ்ஞானப் பரிசோதனைகளை நிகழ்த்த ஒரு களம் வேண்டியிருந்ததால் (உள்நாட்டில் அவைகளை நிகழ்த்தத் தடை இருந்ததாம்), அவர்கள் விண்வெளியெங்கும் தேடிக் கண்டுபிடித்த ஒரு கிரகமே நமது பூமி. இங்கே வந்து இறங்கிய அவர்களது விஞ்ஞானிகள், பல குழுக்களாகப் பிரிந்து பூமியெங்கும் சென்று, ஒவ்வொரு இடத்திலும் நிகழ்த்திய பல பரிசோதனைகளின் விளைவே மனிதர்கள். ஒவ்வொரு குழுவும் ஒவ்வொருவகையில் தங்களது சிருஷ்டிக்கும் திறனைத் திறம்பட நிகழ்த்தியது. மனிதர்களை மட்டுமல்லாமல், அதற்கு முன்னரே பல்வேறு செடிகொடிகளைப் படைத்து, அதன்பின் பல மிருகங்கள், பறவைகள் முதலிய உயிரினங்களைப் படைத்தனர். அதில் திருப்தி அடையாமல், தங்களைப்போலவே சில உயிரினங்களைப் படைக்க முயன்றதன் பலனே மனிதனின் பிறப்பு.

இப்படிப் பல ஆண்டு காலம் அவர்கள் நமது பூமியில் தங்கியிருந்து, பூமியை உயிர்ப்பித்தனர். மனிதன் பிறந்து, பல்கிப் பெருகும் வரை அந்த விஞ்ஞானிகள் இங்கேயே தங்கியிருந்தனர். அந்த மனிதக் கூட்டங்களில், இந்த விஞ்ஞானிகளின் அறிவுத்திறனுக்கு ஏற்ப வளர்ந்திருந்த ஒரு குழு, இப்போது இஸ்ரேல் என்று அழைக்கப்படும் இடத்தில் இருந்தது. இந்த விஞ்ஞானிகளின் தொழில்நுட்பத்தை அறிய அவர்கள் முயன்றனர். அவர்கள் மேல் கருணை கொண்ட சில விஞ்ஞானிகள், படைப்பின் ரகசியத்தை – அதாவது, இவர்கள் மேற்கொண்ட விஞ்ஞானப் பரிசோதனைகளை – அந்த மனிதர்களுக்கு சொல்லிக்கொடுக்கத் தலைப்பட்டனர். எங்கே தாங்கள் படைத்த உயிர்கள் தங்களது தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டு தங்களுக்கே எமனாகிவிடுவார்களோ என்று பயந்த பிற விஞ்ஞானிகள், அவர்களது கிரகத்தில் இருக்கும் அரசுக்குத் தகவல் கொடுக்க, இந்த குறிப்பிட்ட சில ‘துரோகி’ விஞ்ஞானிகளை மட்டும் பூமியிலேயே விட்டுவிட்டு, பிறரை உடனடியாகக் கிளம்பி வரச்சொல்லிவிட்டது அவர்களது அரசு. இதனால் பூமியின் அத்தனை பகுதிகளிலும் இருந்த விஞ்ஞானிகள் அத்தனைபேரும் அவர்களது கிரகத்துக்குக் கிளம்பிவிட்டனர். இஸ்ரேல் பகுதியில் இருந்த விஞ்ஞானிகள் மட்டும் மாட்டிக்கொண்டுவிட்டனர். அவர்கள், ஒரு குகையில் சிறைவைக்கப்பட்டனர். மனிதர்கள் அவர்களை அணுகமுடியாதவாறு, சக்திவாய்ந்த ஆயுதங்கள் மூலம் அவர்கள் பாதுகாக்கப்பட்டனர்.

இப்படி இருந்துகொண்டிருந்தபோது, என்ன இருந்தாலும் மனிதர்கள் எப்படியும் ஒருநாள் தங்களது ரகசியங்களை அறியமுற்படுவார்கள் என்று அஞ்சிய வேற்றுக்கிரக அரசு, உலகில் இருக்கும் அத்தனை உயிர்களையும் அழித்துவிட்டு, உலகைப் பழையபடி வெற்று நிலமாக ஆக்கிவிடலாம் என்று முடிவு செய்தது. இந்த முடிவை அறிந்துகொண்ட சிறைப்பட்ட விஞ்ஞானிகள், நோவா (Noah) என்று அழைக்கப்பட்ட மனிதர்களின் தலைவர்களில் ஒருவரை அழைத்து, ஒரு விண்கலம் கட்டும்படியும், வருங்கால உலகத்துக்குத் தேவையான பல உயிரினங்களில் ஒவ்வொரு ஜோடியை அதில் வைத்துக்கொண்டு, பூமியிலிருந்து தப்பித்து, பூமியை விண்வெளியில் சுற்றிவரவேண்டும் என்றும் அவனிடம் கூறினர், தங்களின் படைப்பாளர்களின் ஆணையை ஏற்றுக்கொண்ட நோவா, அவர்களது மேற்பார்வையில் ஒரு விண்கலத்தை உருவாக்கினார். அப்படி உருவாக்கப்பட்ட விண்கலத்தில், ஒவ்வொரு உயிரினத்தின் ஒவ்வொரு செல் மட்டும் பாதுகாக்கப்பட்டது. அதன்பின் அந்த விண்கலம், பூமிக்கு மேல் பறக்கத்துவங்கியது. இதை அறியாத வேற்றுக்கிரக அரசு, ஒரு மிகப்பெரிய கடல் கொந்தளிப்பின் மூலம் உலகை அழித்தது. பூமியில் இருந்த அத்தனை உயிர்களும் அழிந்தன. பெரும் பிரளயம் நிகழ்ந்தது.

சில காலத்துக்குப் பிறகு, இந்த அழிவின் கதிரியக்கம் முற்றிலும் செயலிழந்த பிறகு, நோவாவின் விண்கலம் பூமியில் மறுபடி இறங்கியது. அதில் காப்பாற்றப்பட்டுவந்த செல்களை வைத்து, மறுபடியும் உயிர்கள் படைக்கப்பட்டன.

இதன்பின், இஸ்ரேல் பகுதியில் வாழ்ந்துவந்த மனிதர்கள், ஒரு மிகப்பெரிய ராக்கெட்டை உறுவாக்கினர். இது ஏனெனில், வேற்றுக்கிரகத்துக்கே சென்று, அவர்களின் மன்னிப்பைப் பெற்றுத் திரும்பவே. அதுதான் பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் பேபல் டவர் (Tower of Babel). ஆனால், இது தெரிந்த வேற்றுக்கிரக அரசு, மறுபடியும் பயந்து, இந்த இஸ்ரேல் பகுதி மனிதர்களை சிறைப்படுத்தி, உலகின் பல்வேறு பகுதியில் வாழ்ந்துவந்த அறிவு குறைந்த மனிதர்களிடையே விட்டுவிட்டது. இதனால், அம்மனிதர்கள் தொழில்நுட்பமே தெரியாத பிற மனிதர்களிடம் எதையும் சொல்ல முடியாமல், அவர்களோடு சேர்ந்து வாழத் துவங்கினர்.

இதுதான் கதைச்சுருக்கம். இன்னும் எக்கச்சக்கமான விஷயங்களை அப்புத்தகத்தில் கிளாட் எழுதியிருக்கிறார்.

இந்தத் தகவல்களை க்ளாடிடம் சொன்ன அந்த வேற்றுக்கிரக மனிதர், க்ளாடை ஒரு இயக்கம் ஆரம்பிக்கச் சொல்கிறார். அதன்படி, உலகம் முழுவதும் இத்தகவல்கள் பரப்பப்படவேண்டும் என்று சொல்லி, உலக மாந்தர்கள் அனைவருக்கும் தங்களது படைப்பாளர்களைப் பற்றிய தகவல்கள் போய்ச்சேர்ந்தால்தான் உலகம் இனிமேல் சண்டை சச்சரவு இல்லாமல் அமைதியாக இருக்கும் என்றும் சொல்கிறார். சொல்லிவிட்டு, அவ்வப்போது க்ளாடிடம் பேசப்போவதாகச் சொல்லிவிட்டு, பைபிளில் இருக்கும் பல அத்தியாயங்களின் பின்னால் இருக்கும் ‘உண்மைகளை’ டிக்டேட்டும் செய்துவிட்டு, மறைந்துவிடுகிறார்.

இதன்பின் கிளாட் ஆரம்பித்த இயக்கமே ‘Raelism‘. இந்த இயக்கத்துக்குத் தற்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உண்டு. இந்த இயக்கத்தின் பிதாமகராக விளங்குகிறார் கிளாட். தனது பெயரை ‘Rael‘ என்று மாற்றிக்கொண்டு, உலகெங்கும் பிரசங்கங்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.

இத்தோடு கதை முடியவில்லை. முதல் சந்திப்பின் பின், இரண்டு ஆண்டுகள் கழித்து, க்ளாடின் முயற்சிகளில் திருப்தியடைந்த அந்த வேற்றுக்கிரக மனிதர், க்ளாடை அவர்களது கிரகத்துக்கே அழைத்துச் சென்ற விபரங்களையும் அதே புத்தகத்தில் விலாவாரியாக எழுதிவைத்திருக்கிறார் கிளாட். அந்த கிரகத்தில், இயேசு, முகம்மது, புத்தர் ஆகிய மூவரையும் சந்தித்ததாகவும், அக்கிரகத்திலிருந்து க்ளாடுக்குக் கிடைத்த செய்திகளையும் எழுதிவைத்திருக்கிறார்.

க்ளாடின் கோட்பாடுகளின்படி, கடவுள் என்ற வஸ்து கிடையவே கிடையாது. காரணம், நம்மைப் படைத்தவர்கள் வேற்றுக்கிரக மனிதர்கள் மட்டுமே. அப்படியென்றால் அவர்களைப் படைத்தது யார் என்று அவரிடம் கேட்டால், அவர்களுக்கு முன்னர் வாழ்ந்த இன்னொரு இனம் என்று பதில் அளிக்கிறார். இப்படி அது ஒரு Chain Reaction போலவே செல்கிறது.

இப்படிப்பட்ட கோட்பாடுகளில் இருந்து உருவாக்கப்பட்ட புதிய உலகுக்கான சட்டங்கள் எல்லாவற்றையும் தனது புத்தகத்தில் எழுதியும் வைத்திருக்கிறார். உலகில் ஒரே ஒரு அரசுதான் இருக்கவேண்டும்; அத்தனை மக்களும் ஒருங்கிணைந்து தங்களைப் படைத்த வேற்றுக்கிரக மக்களை டெலிபதியின் மூலம் அழைக்க வேண்டும். அப்போதுதான் அவர்களது வருகை நிகழும். அதன்பின் உலகம் அமைதிப்பூங்காவாக மாறிவிடும். இதுதான் க்ளாடின் கோட்பாடு.

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இப்படிப்பட்ட ஒரு லட்சம் உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட எக்கச்சக்கப் பணத்தில் ஒரு பெரிய மாளிகை கட்டிக்கொண்டு (ஏலியன்கள் வருகைதந்தால் இங்கே தங்குவார்கள்) அதில் சொகுசாக வாழ்ந்துவருகிறார் கிளாட்.

சுருக்கமாக நம்மூர் கார்ப்பரேட் சாமியார்களின் வாழ்வு முறையை வரிக்கு வரி கடைப்பிடித்து வாழ்கிறார் கிளாட். இவரது கோட்பாடு உண்மையா? இவர் உண்மையிலேயே ஏலியன்களின் கிரகத்துக்கு சென்று வந்தாரா? இதுவரை ஒரு ஆதாரத்தையும் இந்த ரீதியாக அவர் காட்டியிருக்கவில்லை. கேட்டால், ஆதாரம் இல்லாமல் ஏலியன்களின் கோட்பாட்டை நாம் நம்ப வேண்டும் என்கிறார்.

க்ளாடின் புத்தகத்தைத் தரவிறக்கி, நேரம் கிடைக்கையில் மேய்ந்துபாருங்கள். நான் ஏற்கெனவே சொல்லியிருந்தபடி, படுசுவாரஸ்யமான திரைக்கதையை இதிலிருந்து உருவாக்கிவிட முடியும்.

யோசித்துப் பார்த்தால், க்ளாடின் கருத்து வசீகரமானது. நம்மைப் படைத்தவர்களையும் வேறு யாரோ படைத்திருக்கிறார்கள் என்பதே அவரது கூற்று. இது ஒரு முடிவில்லாத சுழல் போல. எப்படி இருந்தாலும், இந்த சங்கிலியின் ஆரம்பம் என்று ஒன்று இருக்கவேண்டும் அல்லவா? அது என்ன? என்ற கேள்விக்கு இதுவரை க்ளாடிடம் இருந்து பதிலில்லை.

இவரது ஒரு நிறுவனத்தின் மூலம் (Clonaid), 2002ல் முதல் மனித க்ளோனிங் நடைபெற்றுவிட்டது என்று இன்றுவரை சொல்லிக்கொண்டும் இருக்கிறார். ஆனால் அதற்கும் ஆதாரத்தைத் தரமறுக்கிறார்.

இவரது தகவல்களைக் கொஞ்சம் அலசினாலே அவை ஆதாரமற்ற கூற்றுகள் என்று புரிந்துவிடும். ஆனால், க்ளாடின் சிஷ்யர்களுக்கோ, அவர் சொல்வதே வேதம். ஆகவே, தங்களைப் படைத்த ஏலியன்களை எதிர்நோக்கி வாழ்ந்துவருகிறார்கள் இவரது குழுமத்தினர்.

க்ளாடைப் பற்றிய தகவல்கள், நவீன கால ஏலியன் நம்பிக்கைகளைப் பற்றியது. ஆனால், பண்டைய காலத்திலிருந்து பல புரிபடாத மர்மங்கள் இருக்கின்றனவே? இன்றுவரை எந்த விளக்கமும் இல்லாத, சில்லிட வைக்கும் மர்மங்கள் அவை. அவற்றைப் பற்றி இனி வரும் கட்டுரைகளில் விவாதிக்கலாம்.

இந்த மர்மங்களுக்கு ஏதேனும் ஏலியன் தொடர்புகள் இருக்கின்றனவா?

தொடரும் . . .



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Knight
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 14, 2012 8:43 am

சிறப்பாக இருக்கிறது.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat Dec 15, 2012 3:02 pm

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 5

ஆண்டு – 1900. ஆஃப்ரிக்காவிலிருந்து திரும்பிக்கொண்டிருக்கிறது ஒரு கப்பல். மெடிட்டரேனியன் கடலில், கிரீஸ் மற்றும் டர்க்கி நாடுகளின் இடையில் இருக்கும் ஆண்ட்டிகிதேரா (Antikythera) என்ற தீவில் கப்பலை நிறுத்த உத்தரவிடுகிறார் கேப்டன் டிமிட்ரியோஸ் கோண்டோஸ் (Dimitrios Kondos). காரணம், கடலில் சுழன்றடித்த ஒரு புயல். இந்தக் கப்பலில் இருப்பவர்களின் பிரதான வேலை, கடற்பாசி சேகரிப்பது. புயலில் சிக்கி, இந்தத் தீவில் ஒதுங்கியபோது, கேப்டனின் மூளை வேலை செய்தது. சும்மா இருப்பதை விட, இங்கும் தீவைச் சுற்றியுள்ள கடலில் கடற்பாசி சேகரிக்கலாமே என்று எண்ணியவர், மாலுமிகளை கடலில் மூழ்கச் சொல்லி உத்தரவிடுகிறார். அன்று கடலுக்குள் மூழ்கிய மாலுமிகள், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அந்தப் பிராந்தியத்தில் மூழ்கிக்கொண்டே இருந்தனர். அவர்கள் வெளியில் கொண்டு வந்த பொக்கிஷங்கள், இன்றும் ஆராய்ச்சியாளர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. பல்வேறு வெண்கலச் சிலைகள், சிறுசிறு பொருட்கள் ஆகியவை அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.

முதன்முதலில் இந்தப் பொக்கிஷக் குவியலைப் பார்த்த மாலுமி ஒருவர், பதறியடித்துக்கொண்டு தன்னுடன் பிணைத்திருந்த கயிறை ஆட்ட, மேலே கப்பலில் இருந்தவர்கள், மாலுமிகளுக்கு வழக்கமாக ஏற்படும் கரியமில வாயுப் பற்றாக்குறைதான் இவருக்கும் ஏற்பட்டு, அதனால் பைத்தியம் ஆகிவிட்டாரோ என்று நினைத்து அவசர அவசரமாக அவரை மேலே இழுத்தனர். மேலே வந்ததும், கடலுக்குள் ஒரு பெரிய குதிரைப்படையே இறந்து கிடக்கிறது என்று அவர் பதட்டத்தில் உளற, அவர்மேல் இருந்த ‘பைத்திய’ ஊகம் இன்னும் அதிகமானதுதான் மிச்சம். ஆனால், அதன்பின் மூழ்கிப் பார்த்தபோதுதான் இந்த வெண்கல சிலைக்குவியல் கண்டுபிடிக்கப்பட்டு, சென்ற நூற்றாண்டின் பிரதான அகழ்வாராய்ச்சிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

சரி. இதற்கும் ஏலியன்களுக்கும் என்னய்யா சம்மந்தம் என்று கேட்கத் தோன்றுகிறதா?

இரண்டு வருடங்களில் கடலிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் அத்தனையும் ஏதென்ஸில் உள்ள தேசிய தொல்பொருள் ம்யூஸியத்தில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை 1902ல் பார்வையிடுகிறார் வலேரியோஸ் ஸ்டேய்ஸ் (Valerios Stais) என்ற ஆராய்ச்சியாளர். அப்போது, அந்தப் பொருட்களின் இடையில் வைக்கப்பட்டிருந்த ‘அது’ அவரது கவனத்தை ஈர்த்தது. பெரியதொரு கல்லில் செதுக்கப்பட்டிருந்த ‘அது’ ……..என்ன?

அப்பொருளை உற்றுக் கவனித்த ஸ்டேய்ஸ், ஆனந்தக் கூத்தாடத் துவங்கினார்.

இந்த இடத்தில் ‘தொடரும்’ போடவேண்டும் என்று தோன்றினாலும், இப்போதுதான் இந்தக் கட்டுரை ஆரம்பித்திருப்பதால், வேறொரு இடத்தில் போட்டுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

அகழ்வாராய்ச்சியில் சேகரிக்கப்பட்ட பல பொருட்களின் மத்தியில், ஒரு பெரிய கல்லில், பல்சக்கரம் ஒன்று செதுக்கப்பட்டிருந்தது. அதாவது, தற்காலத்தில் பெரிய கடிகாரங்களினுள்ளும், சிக்கலான இயந்திரங்களினுள்ளும் இருக்கும் பல சக்கர அமைப்பு போன்ற ஒன்று. மிகத்தெளிவாகவே அது ஒரு பல்சக்கரம் என்று தெரிந்துவிட்டதால், ஸ்டேய்ஸுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. பண்டையகாலத்தில் ஏது இப்படி ஒரு பல்சக்கரம்? இதனை யார் வடிவமைத்திருப்பார்கள்? பல கேள்விகள்அவரது மனதைப் போட்டுக் குடைந்தெடுக்க, இந்தக் கண்டுபிடிப்பு பற்றி அறிவித்தார் ஸ்டேய்ஸ். உடனடியாக உலகப்புகழ் பெற்றார்.

அந்த அகழ்வாராய்ச்சியில் பல அற்புதமான சிற்பங்களைக் கண்டெடுத்திருந்தாலும் (தத்ரூபமான ஒரு வெண்கலத் தலை, ஆறடிக்கும் மேலான ஒரு மனிதனின் மிகத்துல்லியமான வெண்கலச்சிலை, ஹெர்குலஸின் சிலை, Lyre என்ற தந்திகலாளான வெண்கல இசைக்கருவி, சலவைக்கல்லினால் செய்யப்பட்ட எருது ஆகியவை லிஸ்ட்டில் அடங்கும்), அவை அத்தனையும் எதுவுமே இல்லை என்று சொல்லக்கூடிய கண்டுபிடிப்பாக இது அமைந்தது.

இதனைத்தொடர்ந்து, அந்தப் பொருட்களின் காலத்தைக் கணக்கிடும் வேலை துவங்கியது. ஒரு சில வெண்கலச் சிலைகள், கி.மு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கணக்கிடப்பட்டன. ஒருசில சலவைக்கல் சிலைகளோ, கி.மு முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருந்தன. இதனைத்தொடர்ந்து அந்தக் கப்பலின் மரத்தை கார்பன்டேட்டிங் செய்து பார்த்ததில், அந்த மரம், கி.மு 220யைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டது. கி.மு 220 யைச் சேர்ந்த கப்பலில், நான்காம் நூற்றாண்டு மற்றும் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த பொருட்கள் எப்படி இருக்க முடியும்? அந்த மரம், வெகு காலம் முன்னரே வெட்டப்பட்டு இருந்தால் முடியும் அல்லவா?

லூஸியன் என்ற கிரேக்க எழுத்தாளர் (கி.பி இரண்டாம் நூற்றாண்டு), ஸுல்லா என்ற ரோமானிய கொடுங்கோலனைப் பற்றி எழுதி வைத்திருக்கிறார். ஏதென்ஸில் இருந்து சூறையாடப்பட்ட பல பொருட்களை இந்த ஸுல்லாவின் கப்பல்கள் எடுத்துச் சென்றதையும், அவற்றில் ஒன்று கி.மு 86ல் கடலில் மூழ்கியதையும் பற்றியும் இந்தக் குறிப்புகளில் அவர் எழுதியிருப்பதால், இக்கப்பல் அதுவாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர் ஆராய்ச்சியாளர்கள்.

யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ப்ரொபஸர் டெரெக் டி ஸோல்லா ப்ரைஸ் (Derek de Solla Price) என்பவர், 1974ல் இந்தக் கருவியைப் பற்றிய அவரது ஆராய்ச்சிக் குறிப்பை வெளியிட்டார். அவரது குறிப்பின்படி, இந்தக் கருவி, நாட்குறிப்புகளைக் கணிக்க உதவும் ஒரு பண்டையகால கணினி. அதாவது, உலகின் முதல் கம்ப்யூட்டர். இந்தக் கருவியில் உள்ள பல்சக்கரங்களைத் திருப்புவதன்மூலம், ஒரு குறிப்பிட்ட தேதியை உள்ளீடாகக் கொடுத்தால், அந்தத் தேதியின் சூரிய சந்திரர்களின் இருப்பையும், பிற கிரகங்களின் இருப்பையும் துல்லியமாகக் கணக்கிட்டது இந்தக் கருவி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

எவ்வளவு ஆச்சரியகரமான விஷயம்! கி.மு முதல் நூற்றாண்டில், பிற கிரகங்களின் இருப்பைத் துல்லியமாகக் கணக்கிட்ட ஒரு கணினி இருந்திருக்கிறது என்பது, உலகையே புரட்டிப்போடக்கூடிய தகவல் அல்லவா? மைக்கேல் எட்மண்ட்ஸ் என்ற கார்டிஃப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ப்ரொபஸர் – இவர்தான் இந்தக் கருவியைப் பற்றிய கடைசி ஆராய்ச்சியைச் செய்திருப்பவர் – கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது:

“இந்தக் கருவி, ஒரு அதிசயம். இதனைப்போன்ற கருவிகள் உலகில் வேறு இல்லை. இதுதான் முதலும் கடைசியுமான ஒன்று. மிகத் தத்ரூபமான தகவல்களைக் கொடுப்பதாக இது இருக்கிறது. இதன் செயல்பாடு மற்றும் உருவாக்கம், வாயைப் பிளக்கச் செய்வதாக இருக்கிறது. இதனை யார் செய்திருந்தாலும் சரி – மிகமிகப் பொறுமையாக, நேர்த்தியுடன் செய்திருக்கிறார்கள். சரித்திரபூர்வமாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருட்களில், மோனாலிஸாவை விடவும் அரியதொரு பொருளாக இதனை நான் எண்ணுகிறேன்”.
சரி. கருவியைக் கண்டுபிடித்தாயிற்று. அது எப்படி வேலை செய்கிறது என்பதும் தெரியும். ஆனால், அதன் உபயோகம் என்ன? எதனால் அல்லது ஏன் அது பண்டைய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது?

மில்லியன் டாலர் கேள்வி. இதுவரை விஞ்ஞானிகளால் இந்தக் கேள்விக்கு பதிலைக் கூற இயலவில்லை. பொதுமக்களுக்கு உபயோகப்படும் வகையில் இது வைக்கப்பட்டிருக்கவில்லை என்றும், கப்பல்களில் காம்பஸ் போல இது உபயோகப்படவில்லை என்று மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பண்டைய காலத்தில் இதனைப்போன்ற இன்னும் சில கருவிகள் இருந்திருக்கலாம் என்றும் யோசிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கருவியைப்போல் சில கருவிகளும் தற்போது செய்யப்பட்டு, ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

பண்டைய காலத்தில் இத்தனை துல்லியமாக ஒரு கருவியை எப்படிச் செய்திருக்க முடியும்? அதற்கான கணக்கிடும் முறைகள் எப்படி உருவாக்கப்பட்டன? இதன் சூத்ரதாரி யார்? எந்தக் கேள்விக்கும் இதுவரை விடை தெரியவில்லை.

இந்த இடத்தில்தான் எரிக் வான் டானிக்கென் எழுதிய குறிப்புகள் விவாதிக்கப்படுகின்றன. இந்தக் கருவியைப்பற்றி அறுபதுகளின் இறுதியிலேயே தனது ‘Chariots of the Gods’ புத்தகத்தில் எழுதியிருக்கிறார் டானிக்கென். ஏலியன்கள் பண்டைய காலத்தில் பூமிக்கு வந்தபோது இங்கே செய்யப்பட்ட ஒரு திசைகாட்டும் கருவிதான் இது என்பது அவரது கருத்து. பல கிரகங்களுக்கு இடையில் ஏலியன்கள் பயணிக்க வேண்டியிருந்ததால், அவர்களது உலகில் உபயோகிக்கப்பட்ட ஒரு கருவியின் மாடலைத்தான் பூமியில் அவர்கள் செய்திருக்கிறார்கள் என்று எழுதியிருக்கிறார். ஆனால், எந்தவித ஆதாரமும் டானிக்கென் அவரது இந்த வாதத்துக்குக் கொடுக்கவில்லை. இது அவரால் எழுதப்பட்ட ஒரு possibility. அவ்வளவே. விஞ்ஞானம் இதனை நிராகரித்துவிட்டது. ஆனால், இதுவரை விஞ்ஞானத்தால் இந்தக் கருவியைப்பற்றி எதுவும் சொல்லமுடியவில்லை என்பதும் உண்மை.

இந்தக் கருவி எப்படி உருவாக்கப்பட்டது? அல்லது, எங்கிருந்து வந்தது? இதனை உருவாக்கியது யார்? இதன் உண்மையான பயன்பாடு என்ன? என்றோ ஒருநாள் பூமிக்கு வந்துபோன வேற்றுக்கிரகவாசிகளின் மின்னிய பழம்பெருமையின் மிஞ்சிய வெறும் நினைவுதானா இது? (சொற்றொடருக்கு நன்றி: மதன் – வந்தார்கள் வென்றார்கள் கடைசி அத்தியாயம்).

எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல், ஒரு ம்யூசியத்தினுள் அமைதியாக வீற்றிருக்கிறது ‘The Antikythera mechanism’ என்று அழைக்கப்படும் இந்தக் கருவி.
இப்பொழுதுதான் இந்தத் தொடர் ஆரம்பித்திருக்கிறது. அடுத்து நாம் காணப்போகும் மர்மம் என்ன?

அது……………..

தொடரும் . . .



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Knight
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Dec 16, 2012 8:47 am

அருமையாக செல்கிறது தொடர்ந்து பதிவிடுங்கள்... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun Dec 16, 2012 8:54 am

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 6

அத்தியாயம் 4 – திரைப்படங்களில் ஏலியன்கள்

ஏலியன்கள் என்ற விஷயமே யாருடைய கவனத்தையும் எளிதில் கவர்ந்துவிடுவதாக இருக்கிறது அல்லவா? திரைப்படத்துறைக்கு இது ஒரு ஜாக்பாட். விஷுவல் மீடியத்தில் இப்படிப்பட்ட ஏலியன்களையும் அவர்களது உலகையும் மிக எளிதில் சித்தரித்துவிடலாம் என்பது ஒரு பெரிய ப்ளஸ் பாயின்ட். திரைப்படத்துறை ஏலியன்களை கையில் எடுப்பதற்கு முன்னரே, Science Fiction என்ற ஜானரில் எப்போதோ ஏலியன்களைப் பற்றி(யும்) எழுதிவிட்டனர் எழுத்தாளர்கள். குறிப்பாக எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான H.G Wells. எனது சிறுவயதில், பைகோ க்ளாஸிக்ஸ் (Paico Classics) காமிக்ஸ் வரிசையில், தமிழில் இவரது Time Machine கதையைப் படித்த நினைவு இருக்கிறது. கால யந்திரத்தை உருவாக்கும் மனிதர் ஒருவர், மிக மிக தொலைதூர வருங்காலத்துக்குப் பயணப்பட்டு, உருவில் மிகச்சிறிய மனிதர்களை சந்திப்பார். இவரது கால யந்திரமும் களவு போய்விடும். அதே இடத்தில் இரவில், கொடிய உருவுடைய ஜந்துக்கள் கிணறுகளைப் போன்ற வடிவுடைய பாதாள வாயில்களிலிருந்து வெளிப்பட்டு இந்த குள்ள மனிதர்களை உணவுக்காக வேட்டையாடும். அப்போது ஒரு பெண்ணை இவர் காப்பாற்ற நேரும். இதன்பின் அந்தக்காலத்திலிருந்து மறுபடியும் வருங்காலம் நோக்கிப் பயணப்படுவார். அப்படிப் பயணப்படும்போது பூமியின் மெதுவான காலமாற்றம் அவருக்குத் தெரியும். இப்படியாக மறுபடியும் தனது காலத்துக்குத் திரும்பிவந்து, அங்கே இருக்கும் இவரது நபர்களிடம் இந்தக் கதையை அவர் விவரிப்பார். அவரிடம் வருங்காலத்தின் இரண்டு மலர்கள் இருக்கும். அதுவே ஆதாரம்.

இந்த காமிக்ஸ் கதை ஃப்ரேம் பை ஃப்ரேமாக நினைவிருக்கிறது. இதன்பின் பல ஆங்கில க்ளாஸிக் கதைகளை (Tom Sawyer, Prisoner of Zenda, Hound of the Baskervilles, Kidnapped, Treasure Island, Man in the Iron Mask, Count of Monte Cristo) பைகோவில் படித்திருக்கிறேன். திடீரென அந்தக் காமிக்ஸ் நின்றே விட்டது.

இந்த டைம் மெஷின் கதை, இதன்பின்னர் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. நண்பர்கள் பலர் இதன் புதிய வடிவமான ‘The Time Machine‘ திரைப்படத்தைப் பார்த்திருக்கலாம். எனக்கு இந்தத் திரைப்படம் பிடிக்கவில்லை. காமிக்ஸ் பெட்டர். கதையும்.

இந்தக் கதை வெல்ஸினால் எழுதப்பட்டது 1895ல்.

ஆனால் இதற்கு வெகுகாலம் முன்பிருந்தே Science Fiction வழக்கில் இருந்தது. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த எட்கர் அலன் போ, நிலவுக்கு ஒரு பலூனில் பயணப்படும் கதை ஒன்றை எழுதியிருக்கிறார் (The Unparalleled Adventure of One Hans Pfaall – 1835). இதற்கும் முன்பே Frankenstein எழுதப்பட்டுவிட்டது. மேரி ஷெல்லியால் – 1818ல். இந்த வகை எழுத்தின் ரிஷிமூலம், பதினாறாம் நூற்றாண்டு ஐரோப்பா என்று தெரிகிறது. இந்த ஏலியன் தொடரில் விரைவில் நாம் பார்க்க இருக்கும் ‘கில்காமேஷ்’ (Gilgamesh) என்ற சுமேரியன் காவியம் (BC 2150-2000)தான் உலகின் முதல் Science Fiction என்பது ஆராய்ச்சியாளர்களின் யூகம்.

இப்படி ஏலியன்களைப் பற்றி எப்போதோ புத்தகங்கள் வந்துவிட்ட நிலையில், இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்புகளில் ஒன்றான சினிமா, ஏலியன்களை விட்டுவிடுமா?

‘Hugo‘ படத்தின் மூலம் நமக்கு அறிமுகமான ப்ரெஞ்ச் இயக்குநர் ஜோர்ஜ் மெலியெஸ், உலகின் முதல் Space மற்றும் ஏலியன் (முதல் Science Fiction கூடத்தான்) படம் எடுத்த பெருமைக்கு சொந்தக்காரர். ஹ்யூகோ படத்தில் விவாதிக்கப்படும் A Trip to the Moon திரைப்படத்தில், ஒரு புல்லட் வடிவ கலம், பூமியிலிருந்து பீரங்கி மூலம் செலுத்தப்பட்டு நிலவின் கண் ஒன்றில் சென்று சொருகிக்கொள்ளும். அங்கே ஏலியன்களால் தாக்கப்பட்டு, மறுபடி பூமிக்கே திரும்பி வருவார்கள் அந்த கலத்தில் இருப்பவர்கள்.

இந்தப்படம் வெளியான ஆண்டு – 1902. இந்தப் படத்துக்குப் பின்னர் அடுத்த ஏலியன் படமான Himmelskibet, 1918ல் வெளிவந்தது. டென்மார்க்கில்.

இதன்பின்னர் தடதடவென்று ஏலியன் படங்கள் ஹாலிவுட்டில் அப்போதைய தொழில்நுட்பங்களை வைத்து எடுக்கப்பட்டன.

ஐம்பதுகளில் எடுக்கப்பட்ட குறிப்பிடத்தகுந்த படம் ஒன்று இருக்கிறது. ‘The Day the Earth Stood Still‘ என்ற பெயர் பல திரைப்பட ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். 2008ல் கியானு ரீவ்ஸ் நடித்து வெளிவந்த படம். இது, 1951ல் வெளிவந்த இதே பெயருடைய படத்தின் ரீமேக்தான். வேற்றுக்கிரகம் ஒன்றிலிருந்து பூமிக்கு வரும் ஏலியன் ஒன்றைப் பற்றிய கதை இது. மனிதர்கள் ஆயுதங்களைப் பெருக்கினால் பூமி அழிக்கப்படும் என்பது இந்த ஏலியன் கொண்டுவரும் செய்தி. அந்த வருடத்தின் சிறந்த படங்களில் ஒன்றாக இது அறியப்பட்டது.

இந்த இடத்தில், ஒரு பிரபலமான ஹாலிவுட் கிளிஷே பற்றிப் பார்க்கலாம். Martians என்று ஒரு வார்த்தை, கிட்டத்தட்ட பல ஹாலிவுட் படங்களில் வரும் வார்த்தை. மார்ஸ் கிரகவாசிகள் என்று பொருள். பல்வேறு நாவலாசிரியர்களால் கையாளப்பட்ட வார்த்தை இது. உதாரணத்துக்கு, நமது H.G Wells கூட அவரது War of the Worlds நாவலில் மார்ஷியன்ஸ் பற்றிக் குறிப்பிடுகிறார். சமீபத்தில் வெளிவந்த John Carter நினைவிருக்கிறதா? (ப்ராமிதியஸ் படத்துக்கு முன்னர் வெளிவந்து அரத மொக்கையாக ஆன ஏலியன் படம்). இந்தக் கதையை எழுதிய ‘டார்ஸான்’ புகழ் எட்கார் ரைஸ் பரோஸ், ஜான் கார்ட்டர் என்ற கதாநாயகன் மார்ஸ் கிரகத்துக்குப் போவதாகத்தான் எழுதியிருக்கிறார். அது என்னமோ பல எழுத்தாளர்களுக்கு மார்ஸ் கிரகத்தின் மீது ஒரு அலாதி பிரியம் போலும். தொண்ணூறுகள் வரை வெளிவந்த பல ஏலியன் படங்களில் மார்ஷியன்களை காணலாம். மார்ஸில் உயிர்களுக்கான சாத்தியக்கூறுகள் இல்லவே இல்லை என்பது பின்னாட்களில் அறுதியாக நிரூபிக்கப்பட்டபின், இப்போதெல்லாம் யாரும் மார்ஸை மையமாக வைத்து ஏலியன்களைப் பற்றி எழுதுவதில்லை.

அடுத்த படம், War of the Worlds கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அதே பெயருடைய திரைப்படம். 1953ல். இதே கதையை மறுபடியும் ஸ்பீல்பெர்க் 2005ல் படமாக எடுத்ததை அனைவருமே பார்த்திருக்கிறோம். வேற்றுக்கிரக ஜந்துக்கள், பூமியை அழிக்கும் தருணத்தில், இங்கிருக்கும் வைரஸ்களால் அவை அழிவதே கதை. வைரஸ்களுக்கும் பாக்டீரியாக்களுக்கும் அவைகளிடத்தில் மருந்து இல்லை.

இதன்பின் குறிப்பிடத்தகுந்த மற்றொரு ஏலியன் படம், Invasion of the Body Snatchers. 1956ல் ரிலீஸ். வேற்றுக்கிரகவாசிகளால் ரீப்ளேஸ் செய்யப்படும் மனிதர்களைப் பற்றிய படம். ஊரில் இருக்கும் ஒவ்வொருவராக மெல்ல மெல்ல மனிதத்தன்மையும் உணர்ச்சிகளும் இல்லாத ஜடங்களைப் போல் நடமாடும் மனிதர்களாக (உண்மையில் இவர்கள் ஏலியன்கள்தான்) மாற்றப்படும் கதை. இந்தக் கதையின் முடிவு அக்காலத்தில் புதுமையாக இருக்கும். அதாவது, ஏலியன்கள் அழிக்கப்படமாட்டார்கள். இந்தப்படம், மறுபடியும் 1978ல் ரீமேக் செய்யப்பட்டது. அதுவும் ஒரு ஹிட்டாகவே ஆகியது. இதன்பின் வருடாவருடம் குறைந்தபட்சம் ஐந்து ஏலியன் படங்களாவது வர ஆரம்பித்தன. 1958ல் The Blob – ஸ்டீவ் மெக்வீனின் முதல் கதாநாயக திரைப்படம் – வெளிவந்தது.

அறுபதுகளில், The Alien என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாரிக்கும் முயற்சிகள் நடந்தன. இந்திய – அமெரிக்க கூட்டுத்தயாரிப்பான இப்படம் வெளிவந்திருந்தால், இந்தப் பெயரில் முதன்முதலில் படம் எடுத்த நபராக ஒரு இந்தியர் இருந்திருப்பார். இந்தப் படம் இடையில் நிறுத்தப்பட்டு, 2006ல் தொலைக்காட்சித் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது என்று அறிகிறோம்.

யார் அந்த இந்தியர்?

அதற்கு முன், இதுவரை வெளிவந்திருந்த ஏலியன் படங்களிலிருந்து இந்தப் படம் எப்படி வித்தியாசப்பட்டிருந்தது என்பது முக்கியம். இந்தப் படத்தில்தான், முதன்முதலில் நட்புணர்ச்சியோடு பூமிக்கு வந்து இறங்கும் ஏலியன் பற்றிய சித்தரிப்பு இருந்தது. அதுவரை வந்திருந்த ஏலியன் படங்களில், ஏலியன்கள் கொடூரமானவர்களாகவே காட்டப்பட்டிருந்தனர். இந்தத் திரைக்கதையைத் தயார் செய்த அந்த இந்தியருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. காரணம், அந்தத் திரைக்கதை, இன்னொருவரின் பெயரில் (இந்த இந்தியரின் அமெரிக்க மேனேஜர் – பெயர் மைக் வில்சன்) ஏற்கெனவே காப்புரிமை பெறப்பட்டிருந்தது. தனது மேனேஜரால் வஞ்சிக்கப்பட்ட அந்த இந்தியர் கோபம் கொண்டு, இப்படத்தில் பங்கேற்காமலேயே இந்தியா திரும்பினார். இந்தப் படத்தைத் தயாரிக்க இருந்தது, கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம். இப்படத்தில் மார்லன் ப்ராண்டோ நடிப்பதாக இருந்தது துணுக்குச்செய்தி.

இதன்பின் 1982ல் ஸ்பீல்பெர்க்கின் E.T திரைப்படம் வெளியானது. அப்போதுதான், தனது திரைக்கதையில் இருந்து பல பகுதிகள் அந்தப் படத்தில் அப்படியப்படியே வைக்கப்பட்டிருந்ததை அந்த இந்தியர் உணர்ந்தார். அவர் ஏற்கெனவே உலகப்புகழ் அடைந்திருந்த இயக்குநர் என்பதால், அவரது எதிர்ப்பை வலுவாகவே பதிவு செய்தார். ஆனால் ஸ்பீல்பெர்க் இதைக் கண்டுகொள்ளவில்லை. இந்த இந்தியர் மட்டுமல்ல; புகழ்பெற்ற Science Fiction எழுத்தாளர் ஆர்தர் ஸி க்ளார்க் (Arthur C Clarke) ஏற்கெனவே இந்த இயக்குநரைத் தொடர்புகொண்டு, ஸ்பீல்பெர்க்கின் திருட்டு வேலையை அம்பலப்படுத்தியிருந்தார். உண்மையில் அந்த இயக்குநரை ஆங்கிலத்தில் இந்தக் கதையைப் படமாக எடுக்கச் சொல்லியவரே ஆர்தர் ஸி க்ளார்க்தான். அவருக்கும் அந்த இந்தியரின் ஏலியன் ஸ்க்ரிப்டிலிருந்தே ET எடுக்கப்பட்டிருந்தது என்ற எண்ணம் இருந்தது. பதிலுக்கு ஸ்பீல்பெர்க், “அவருடைய The Alien திரைக்கதை வெளிவந்தபோது நான் பள்ளி மாணவனாக இருந்தேன். எனக்கும் அதற்கும் சம்மந்தமில்லை” என்று ஒட்டுமொத்தமாக மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார். ஆனால், உண்மையில் அந்த இந்தியரின் திரைக்கதை வெளியானபோது ஸ்பீல்பெர்க் ஆல்ரெடி திரைப்படங்கள் எடுக்க ஆரம்பித்திருந்தார். மட்டுமல்லாமல், E.T படத்துக்கு முன்னால் 1977ல் வெளிவந்திருந்த படமான ஸ்பீல்பெர்க்கின் Close Encounters of the Third Kind படத்திலும் ஓரிரண்டு காட்சிகள் இந்த இந்தியரின் திரைக்கதையிலிருந்தே வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் கிளம்பின.

ஆனால் அந்த இந்தியர் ஸ்பீல்பெர்க்கின் மேல் வழக்கு போட விரும்பவில்லை. இந்தியர்களுக்கேயுரிய அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் மனோபாவம் அவருக்கும் இருந்ததுபோலும். இந்த சச்சரவுகளை விட்டுவிட்டு, தனது திரைப்படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தினார். அழியாப் புகழை தனக்கென வைத்துவிட்டு மறைந்தும் போனார்.அவரது பெயர் – சத்யஜித் ரே.

Bankubabur Bandhu என்ற பெயரில் 1962ல் சத்யஜித் ரே எழுதிய சிறுகதையே அவரால் திரைக்கதையாக எழுதப்பட்டது.

ஹாலிவுட் என்பது எவ்வளவு பெரிய அப்பாடக்கர் என்பது ரேவுக்கு மிக தாமதமாகத்தான் தெரிய வந்தது. இந்தப்படம் மட்டும் அறுபதுகளில் வெளிவந்திருந்தால், கட்டாயம் ஒரு ஹிட்டாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை (E.T எவ்வளவு பெரிய ஹிட்டானது என்பது ரசிகர்களுக்கு மறந்திருக்காது). இதன்பின் சில வருடங்களுக்கு முன்னர் வந்த ‘Koyi Mil Gaya‘ திரைப்படம், ரேயின் கதையை வைத்தே எடுக்கப்பட்டது. அதனால்தான் E.T திரைப்படத்துக்கும் அதற்கும் பல ஒற்றுமைகள் இருந்தது. இது தெரியாமல், பல இந்தியப் பத்திரிக்கைகளே அது E.Tயின் காப்பி என்று எழுதின.

Satyajit Ray’s sketch of The Alien

இந்த விஷயம் தொடர்பான இரண்டு செய்திகளை இங்கே படிக்கலாம்

Close encounters with native E.T. finally real

Satyajit Ray and The Alien!

இதன்பின், 1968ல் ஆர்தர் ஸி க்ளார்க்கின் கதை ஒன்றை மையமாக வைத்து அட்டகாசமான திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படத்தில், அக்காலத்திலேயே விஷுவல் எஃபக்ட்களில் விளையாடியிருந்தார் அதன் இயக்குநர். தனது திரைவாழ்வில், ஏற்கெனவே எடுத்த ஒரு திரைப்படத்தைப் போல் அடுத்த படத்தை எடுக்காமல், ஒவ்வொரு படத்தையும் முற்றிலும் வித்தியாசமான களனில் எடுத்து (ஒவ்வொரு ஷாட்டையும் செதுக்கியிருப்பார் என்பதே சரியான விவரிப்பு), இறக்கும் வரை எவராலும் விஞ்ச முடியாமல், இறந்தபின்னும் அவரது அற்புதமான – பிரம்மாண்டமான – அட்டகாசமான படங்களின் மூலம் ஒவ்வொரு திரைப்பட ரசிகனின் மனத்திலும் நீங்காமல் நிறைந்திருக்கும் அந்த இயக்குநர் . . .அடுத்த கட்டுரையில்.

(தொடரும் )



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Knight
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 16, 2012 9:02 am

எல்லா துறையிலும் நம்மவர்களின் அறிவை நமக்கு தெரியாமலே அவர்கள் உபயோகித்து புகழ் பெறுவதில் அவர்களுக்கு அந்த அறிவு அதிகம்தான்.




முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Mon Dec 17, 2012 8:39 am

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 7

1968ல் ஆர்தர் ஸி க்ளார்க்கின் கதை ஒன்றை மையமாக வைத்து அட்டகாசமான திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படத்தில், அக்காலத்திலேயே விஷுவல் எஃபக்ட்களில் விளையாடியிருந்தார் அதன் இயக்குநர். தனது திரைவாழ்வில், ஏற்கெனவே எடுத்த ஒரு திரைப்படத்தைப் போல் அடுத்த படத்தை எடுக்காமல், ஒவ்வொரு படத்தையும் முற்றிலும் வித்தியாசமான களனில் எடுத்து (ஒவ்வொரு ஷாட்டையும் செதுக்கியிருப்பார் என்பதே சரியான விவரிப்பு), இறக்கும் வரை எவராலும் விஞ்ச முடியாமல், இறந்தபின்னும் அவரது அற்புதமான – பிரம்மாண்டமான – அட்டகாசமான படங்களின் மூலம் ஒவ்வொரு திரைப்பட ரசிகனின் மனத்திலும் நீங்காமல் நிறைந்திருக்கும் அந்த இயக்குநர் . . .

வேறு யார்? நண்பர்கள் மிகச்சரியாக யூகித்திருந்த ஸ்டான்லி க்யுப்ரிக் தான்.

ஆர்தர் ஸி க்ளார்க்கின் கதையை மையமாக வைத்து வெளியான அந்தப் படம் – 2001: A Space Odyssey. அக்காலகட்டத்தில் வெளியாகிக்கொண்டிருந்த காமெடியான ஏலியன் டைப் படங்கள் போல் இல்லாமல், மிக அழுத்தமாக ஒரு கதையைப் பதிவு செய்த ஏலியன் படம். ஸிஜி மிக ஆரம்ப கட்டத்தில் இருந்த அக்காலத்தில், அருமையான ஸ்பெஷல் எஃபக்ட்கள் இப்படத்தில் இடம்பெற்றிருந்தன. இப்படம் சந்தேகமில்லாமல் ஒரு cult classic (Cult என்ற வார்த்தையை உபயோகிக்கவே காமெடியாக இருக்கிறது. அந்த வார்த்தை நமது ‘கல்ட் பாதிவார்களிடம்’ படாத பாடு பட்டுக்கொண்டிருப்பதால்).

இந்தப் படத்தைப் பற்றி ஒரே பேராவில் எப்படி எழுதுவது? ‘மெத்த கடின’மாக இருப்பதால், இப்படத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதலாம் என்று தோன்றுகிறது. ஆனால் ஆல்ரெடி இப்படி சொல்லிவைத்துவிட்டு அது மறந்துவிட்டால் என்ன செய்வது?

இந்தப் படத்தில் எப்படி ஸ்பெஷல் எஃபக்ட்களை உபயோகித்தார்கள் என்பதைப் பற்றி இணையமெங்கும் கட்டுரைகள் உண்டு. பொதுவாகவே க்யுப்ரிக் ஒரு பர்ஃபெக்‌ஷனிஸ்ட். சில சமயம் ஒரே ஒரு ஷாட்டை குறைந்தபட்சம் ஐம்பது தடவைகளாவது படமாக்குவது அவருக்கெல்லாம் சாதாரணம். அதேபோல் அவரது ஒவ்வொரு படமுமே ஒவ்வொரு வகை. நாம் இந்தத் தளத்தைத் தொடங்கிய 2009 இறுதியில் க்யுப்ரிக்கின் Dr. Strangelove or: How I Learned to Stop Worrying and Love the Bomb படத்தைப் பற்றிய விமர்சனம் பார்த்திருக்கிறோம். அந்தப் படம் வெளிவந்த 1964ம் ஆண்டுக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்தே Odyssey வெளிவந்தது. 1968ல். அத்தனை வருடங்களும், The Sentinel என்ற Arthur C Clarke சிறுகதையிலிருந்து ஒரு திரைக்கதையை க்யுப்ரிக்கும் க்ளார்க்கும் எழுதினர். இந்தத் திரைக்கதை எழுதப்படும்போது நடந்த ரசமான சம்பவங்களும் இணையமெங்கும் உண்டு. முடிந்தால் இப்படத்தைப் பற்றிய ஒரு கட்டுரையில் அவற்றையும் பார்க்கலாம்.

இந்தப் படத்தைப் பற்றி க்யுப்ரிக் சொல்லும்போது, ‘இப்படத்தின் தன்மையை வார்த்தைகளால் விளக்க இயலாது. மாறாக, இப்படத்தைப் பற்றிய கருத்து, நேரடியாக உங்களது மனதின் ஆழத்தில் சென்று உணர்ச்சிபூர்வமாகவும் தத்துவபூர்வமாகவுமான ஒரு உணர்வைத் தரக்கூடியது. இசையைப் போல. படத்தைப் பார்ப்பவர்கள், படம் தரக்கூடிய பல்வேறு விதமான அர்த்தங்களைப் பற்றி என்னவேண்டுமானாலும் விவாதிக்கலாம்’ என்றே 1968ல் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். அதேபோல, இப்படம் உண்மையிலேயே ஒரு அனுபவம்தான். இதுமட்டுமல்ல. அவரது படங்கள் ஒவ்வொன்றுமே அப்படித்தான். பிற்காலத்தில் – அதாவது இப்படத்திலிருந்து துவங்கி – க்யுப்ரிக்கின் படங்களில், இசை ஒரு முக்கிய பங்கை வகிக்க ஆரம்பித்தது. குறிப்பாக, ஸிம்ஃபனி இசை. classical இசை. க்யுப்ரிக்குக்கு அவரது வாழ்வின் ஒரே ஆஸ்கர் – ஸ்பெஷல் எஃபக்ட்களில் – இப்படத்தினால் கிடைத்தது. ஆஸ்கர் க்யுப்ரிக்கை தொடர்ந்து ignore செய்துகொண்டே வந்தது. அது க்யுப்ரிக்கைப் போன்ற பல படைப்பாளிகளுக்கும் நடந்துவந்ததுதான். இன்னொரு உதாரணம் – ஸ்கார்ஸெஸி.

2001: A Space Odyssey என்ற க்யுப்ரிக்கின் இப்படம், ஏலியன் படங்களின் தன்மையையே மாற்றியது. இதன்பின் வரக்கூடிய பல்வேறு படங்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்தது. இப்படத்துக்குப் பின்னர், குறிப்பிடத்தக்க இன்னொரு படம் – The Andromeda Strain. இப்படம், இதே பெயரில் 1969ல் மைக்கேல் க்ரைட்டன், அவரது இருபத்தி ஏழாவது வயதில் எழுதிய நாவலிலிருந்து படமாக்கப்பட்டது. இதுதான் திரைப்படமாக ஆக்கப்பட்ட க்ரைட்டனின் முதல் நாவல். இதன்பின்னர் அவரால் எழுதப்பட்டு திரைவடிவம் பெற்ற நாவல்கள் பல. அவற்றில் அவரே இயக்கியவைகளும் உண்டு.

ஆண்ட்ரோமிடா ஸ்ட்ரைன், ஒரு டிபிகல் ஸைன்ஸ் ஃபிக்‌ஷன். அமெரிக்க ஸாடலைட் ஒன்றில் ஒட்டியிருக்கும் ஏலியன் கிருமி ஒன்றினால் மரணங்கள் சம்பவிக்கும் கரு.

இந்த நாவல், 2008ல் இரண்டு பாகங்கள் அடங்கிய ஒரு மினி ஸீரீஸாக ஒளிபரப்பப்பட்டது.

இதன்பின்னர் வெளிவந்த படமே Solaris. இப்படத்தை உலக சினிமா ரசிகர்கள் பலரும் நினைவு வைத்திருக்கலாம். டர்க்கோவ்ஸ்கியின் படம். இந்தப்படம் மட்டுமல்லாமல் வேறு பல ஸைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்களையும் பற்றி கொழந்த எழுதியுள்ள இந்தக் கட்டுரையை ஒருமுறை படித்துவிடும்படி நண்பர்களுக்குப் பரிந்துரை செய்கிறேன் Sci-Fi என்ற சமுத்திரம்.

இப்படங்களுக்குப் பிறகு, சில ஆண்டுகள் கழித்து வெளிவந்த ஒரு குறிப்பிடத்தக்க படமே ஸ்பீல்பெர்க் என்ற இளம் இயக்குநர் எடுத்த Close Encounters of the Third Kind. ஏலியன் படங்களில் இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க படம்தான். பூமிக்கு வந்த UFOக்களைப் பற்றிய படம். இப்படத்தில் ஒரு UFO ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்திருந்தவர் – புகழ்பெற்ற ஃப்ரெஞ்ச் இயக்குநர் ஃப்ரான்ஸ்வா ட்ரூஃபோ

இந்தப் படம் வெளிவந்த அதே 1977ல், இன்னொரு பிரம்மாண்ட சூப்பர்ஹிட் படம் வெளிவந்தது. எப்படி தற்போதைய Lord of the Rings படங்கள் உலக மக்களிடையே மறக்கவியலாததொரு அனுபவமாக மாறியனவோ, அப்படி இந்தப் படமும் அக்காலத்தில் ஒரு காவியம். அதன் இயக்குநரும் ஒரு இளைஞரே. ஸ்பீல்பெர்க்கின் நண்பரும் கூட. இப்படங்களைப் பற்றியும், இதன்பின்னர் வெளிவந்த நவீனகால ஏலியன் படங்களைப் பற்றியும் அடுத்த கட்டுரையில் காணலாம். அத்துடன் இந்த ஏலியன் பட லிஸ்ட்டை ஏறக்கட்டிவிட்டு, உலகின் பிற ஏலியன்தனமான (???!!) விஷயங்களை மறுபடி நோக்கலாம்.

நன்றி .



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 2 Knight
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக