புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 2:14 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 10:10 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:08 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:04 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:36 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:28 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 8:50 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Tue Apr 30, 2024 12:12 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 8:44 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 7:42 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:40 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:54 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:51 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:50 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:49 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:46 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:43 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:41 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:35 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 5:06 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 4:48 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 1:57 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 10:52 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:51 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:01 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 9:17 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:40 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:37 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:36 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:21 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 1:11 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 12:30 pm

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:48 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:43 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 8:34 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 6:09 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 12:01 pm

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 10:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_c10 
13 Posts - 25%
Baarushree
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_c10 
2 Posts - 4%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_c10 
2 Posts - 4%
சிவா
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_c10 
1 Post - 2%
viyasan
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_c10 
1 Post - 2%
Rutu
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_c10 
1 Post - 8%
Rutu
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 13 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 13 of 84 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 48 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 10:14 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 15, 2013 12:57 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (82)


-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
                                      
                                                   ‘ஆதனின் தந்தை ’ என்ற பொருளில் , ‘ஆந்தை’ என்றும்  ‘ஆதந்தை’ என்றும் வரலாம் என்று தொல்காப்பியம்    கூறியதை முன்பு (புள்ளி மயங்கியல் 53) கண்டோம் !
                                      
                                                   அதே முறையில்  ‘தான்’ , ‘பேன்’ , ‘கோன்’ என்ற இயற்பெயர்கள் (Proper names)  புணருமா ?
                                                   
                                                  தொல்காப்பியர் விடை கூறுகிறார் !:-
                                     
                                       “தானும் பேனுங் கோனு மென்னும்
                                       ஆமுறை யியற்பெயர் திரிபிட னிலவே”  (புள்ளி மயங்கியல் 56)
 
                                      திரிபிடன் இலவே – முன்பு கூறிய திரிபு இங்கு இலாது , இயல்பாகப் புணரும் !
                                      
                                          அஃதாவது , ‘தான்’ என்ற ஒரு மனிதனின் பெயருடன் ‘தந்தை’ என்ற சொல்லைச் சேர்த்தால் ,
                                     
                                           தான் + தந்தை = தான்றந்தை
                                                                  = தாந்தை ×
என வரும் !
                                    
                                         இதே முறையில் ,
                                      
                                    பேன் + தந்தை = பேன்றந்தை
                                                           = பேந்தை ×
                                      கோன் + தந்தை = கோன்றந்தை
                                                               = கோந்தை ×
என வரும் !
                                     
                                       ‘தான்’ என்ற பெயருடன் , அவனின் மகன் பெயரான  ‘கொற்றன்’ சேரும்போது ,
                                     
                                       தான் + கொற்றன் = தான் கொற்றன்
                                                                  = தாங் கொற்றன் ×
என வரும் !
                                      
                                      இதே முறையில் ,
                                     
                                      பேன் + கொற்றன் = பேன் கொற்றன்
                                                                   = பேங் கொற்றன் ×
                                      கோன் + கொற்றன் = கோன் கொற்றன்
                                                                   = கோங் கொற்றன் ×
என வரும் !
 
                                      தான், பேன் , கோன் – என்றெல்லாம் பழந் தமிழர்களுக்குப் பெயர்கள் இருந்தன என்பது நமக்குப் புதிய செய்தி ! இப்பெயர்கள் ஈரெழுத்துச் சொற்களாக இருப்பதை நோக்குவீர் ! (தாயன், பேயன் , கோவன் என்ற பெயர்களின் திரிபுதான் இவை என்ற செய்தியும் உண்டு !)
                                      அடுத்ததாகத் ‘தான்’ , ‘யான்’ என்ற இரண்டு பெயர்ச் சொற்களை (Nouns)எடுத்துக்கொள்கிறார் தொல்காப்பியர் !
                                      
                                     தான் – என்பது விரவுப் பெயர் !
                                   
                               அஃதாவது , ‘இராமன் தான் கூறியதை மறுத்தான்’ என்று உயர்திணைக்கும் கூறலாம் , ‘மாடு தான் தின்றதைக் கக்கிற்று’ என அஃறிணைக்கும் சேர்க்கலாம் !  இப்படி உயர் திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாக வரும் பெயரை விரவுப் பெயர் என்ப !
                                      இப்படிப்பட்ட ‘தான்’ என்ற சொல் வேற்றுமைப் புணர்ச்சியில் , ‘கை’ என்பதோடு சேரும்போது எப்படிப் புணருமாம் ?
                                      இதைக் கேட்டால் , ‘உருபியலில் சொன்னதுபோலப் புணரும் ’ என்கிறார் தொல்காப்பியர் !:-
                                       “தான்யா னெனும்பெய ருருபிய னிலையும்” (புள்ளி மயங்கியல் 57)
 
                                      தொல்காப்பியராவது ‘நீங்கள் உருபியலைப் பாருங்கள்’ என்று கூறுவதோடு விட்டுவிட்டார் ! இளம்பூரணர் அத்தோடு விடுகிறாரா? “முதலில் தொகை மரபைப் பாருங்கள் ! அதில் கூறியதை நீக்கி , உருபியலில் தொல்காப்பியர் சொன்னதை எடுத்துக்கொள்ளுங்கள் !” என்கிறார் !
                                     
                                      ஆக நாம் தொகை மரபிலிருந்து தொடங்கவேண்டும் !
                                      
                                      தொகை மரபில் தொல்காப்பியர் என்ன சொன்னாராம் ?
                                       
                                           தொகை மரபில் (நூற்பா 13) , ‘சாத்தன்’ எனும் விரவுப் பெயர் , ‘கை’என்பதோடு புணர்ந்தால் ,
                                     
                                            சாத்தன் + கை = சாத்தன் கை
என்றாகும் என ஓதினார் !
                                     
                                            ”இதைக் கண்டுகொள்ளாதீர்கள் ” என ஓரம் கட்டுகிறார் இளம்பூரணர் !
                                      
                                            அஃதாவது , இது தவறு என்பது பொருளல்ல ! விரவுப் பெயர் ‘சாத்தன்’ எந்த வேறுபாடும் இல்லாமல் புணர்வதுபோல , எல்லா விரவுப் பெயர்களும் புணரும் என்று எதிர்பார்க்காதீர்கள் என்பதே இளம்பூரணர் செய்தி !
                                      
                                          அடுத்து , உருபியலில் கூறியது என்ன ?
                                    
                                        உருபியலில், (நூற்பா 20) ,
                                     
                                          தான்+ ஐ = தன்னை
                                என்பதற்கு விதி கூறுகிறார் தொல்காப்பியர் !


                                        “இதைப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்கிறார் இளம்பூரணர் !
                                    
                                            பிடித்துகொண்டால் , வருமாறு அமையும் என்கிறார் இளம்பூரணர் ! :-
                                      
                                              தான் + கை = தான் கை ×
                                     
                                                               = தன்கை
 
                                      தான் + செவி = தான் செவி ×
                                                          = தன் செவி
 
                                      தான்+ தலை = தான் தலை ×
                                                         = தன்தலை
 
                                      தான் + புறம் = தான் புறம் ×
                                                          = தன் புறம்
                                     
                                         மேல் நான்கும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !
                                     
                                          அப்படியானால் , உயிரெழுத்து , மெல்லெழுத்து மற்றும் இடையெழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்தால் ?
                                     
                                          கீழே பார்ப்போம் !:-
                                      
                                        தான் + அடை= தானடை ×
                                      
                                                             = தன்னடை       
 
                                      தான்+ ஆடை = தானாடை ×
                                                          = தன்னாடை
 
                                      தான் + ஞாண் = தான் ஞாண் ×
                                                          = தன் ஞாண்
 
                                      தான் +நூல் = தான் நூல் ×
                                                          = தன்னூல்
 
                                      தான் + மணி = தான் மணி ×
                                                          = தன் மணி
 
                                      தான் + யாழ் = தான் யாழ் ×
                                                          = தன்யாழ்
 
                                      தான் + வட்டு = தான் வட்டு ×
                                                          = தன் வட்டு
 
                                      மேலன யாவும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !
                                    
                                          இனித், தொல்காப்பியர் கூறிய ‘யான்’ !
                                      
                                     ‘யான்’ என்பதும் முன்னே பார்த்த ‘தான்’ போலவே செயற்படும் !
 
                                      யான்+ கை = யான் கை ×
                                                          = என் கை
 
                                      யான் + செவி = யான் செவி ×
                                                          = என் செவி
 
                                      யான் + தலை = யான் தலை ×
                                                          = என் தலை
 
                                      யான்+ புறம் = யான் புறம் ×
                                                          = என் புறம்


-       இவை வேற்றுமைப் புணர்ச்சிகளே !       


இவை வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணரும் வகைக்கு எடுத்துக்காட்டுகள் !
 
                                        இதே வேற்றுமைப் பொருளில் , உயிர் , மெல் , இடை எழுத்துகளை முதலாகக் கொண்ட   சொற்கள் வந்து ‘யான்’ என்பதுடன் சேரும் வகை !:-
 
                                        யான்+ அடை = யானடை ×
                                                           = என்னடை
 
                                        யான் + ஆடை = யானாடை ×
                                                           = என்னாடை
 
                                        யான் + ஞாண் = யான் ஞாண் ×
                                                             = என் ஞாண்
 
                                        யான் + நூல் = யான் நூல் ×
                                                           = என்னூல்
 
                                        யான்+ மணி = யான் மணி ×
                                                           = என் மணி
 
                                        யான் + யாழ் = யான் யாழ் ×
                                                           = என் யாழ்
 
                                        யான்+ வட்டு = யான் வட்டு ×
                                                           = என் வட்டு
 
                                        முதலில் பார்த்த , ‘தான்’ என்பதுதான் விரவுப் பெயரே அல்லாமல், ‘யான்’ என்பது விரவுப் பெயர் அல்ல!
                                         ‘யான்’ என்பது உயர்திணைப் பெயர் !                 
 
                                       ‘தான்’என்பது ‘தன்’ ஆகும் , ‘யான்’ என்பது ‘என்’ ஆகும் என்பன தொல்காப்பியர் உருவாக்கிய விதிகள் அல்ல! அவர்படித்த விதிகள் ! அஃதாவது தமிழ் வகுத்த விதிகள் !
                                   
                                        தமிழ் ஏன்  ‘தானை’த்  ‘தன்’னாக்கவேண்டும் , ‘யானை ’ ‘என்’ஆக்கவேண்டும் என விதித்தது?
                                    
                                       இங்கே கொஞ்சம் நின்று விளையாடவேண்டும் !
                                      
                                        மிகப் பழைய நிலையில் ,  ‘நான்’ தோன்றியிருக்கவேண்டும் ! நீ , நான் போன்ற சொற்கள் தோன்றிய பின் ,பொருள் உடைமை காரணமாக ‘என்’ போன்ற சொற்கள் தோன்றியிருக்கவேண்டும் !  ‘என்’தோன்றிய பிறகு , ‘என்னை’  , ‘எனக்கு’, ‘எனது’ போன்ற சொற்கள் தோன்றியிருக்க வேண்டும் ; இந்த மூன்றில் ஐ, கு, அது எனும் மூன்று வேற்றுமை உருபுகள் வந்துவிட்டதைப் பாருங்கள் !   ‘நான்’  என்பது வந்தபின் ‘நானை’ என வேற்றுமை ஏற்ற வடிவம் வரவில்லை பாருங்கள்!  ‘என்னை’ என்றுதான் வருகிறது ! அதுபோல ‘நானுக்கு’ என வரவில்லை; ‘எனக்கு’ என்றுதான் வந்துள்ளது ! எனவே , ‘என்’ தோன்றி, வேற்றுமை உருபுகள் அதனோடு மள மளவென்று ஒட்டிச் சொற்கள் வந்துவிட்ட பிறகு , அவ் வேற்றுமை உருபுகள், ‘நான்’ உடன் ஏன் சேரவேண்டும் ?  மொழி மரபானது எப்படி உருவாகிறது பார்த்தீர்களா? இந்த மரபுதான் இலக்கணம் ! வேறொன்றுமில்லை !
                                      
                                   இப்போது  ‘தான் – தன்’ , ‘ யான் – என்’  இரகசியம் விளங்குகிறதல்லவா?
                                      
                                  இன்னும் கொஞ்சம் ஆழமாக ஆயலமா?
                                      
                                ‘நான்’ என்பதிலிருந்து நேரடியாக வேற்றுமை(Declension) வடிவங்கள் தமிழில் கிளைக்கவில்லை என்றோமல்லவா? ஆனால் மிகப் பழங்காலத்தில்ஏன்  ‘நான்என்பதிலிருந்து கிளைக்கக்கூடாது என்று ஒரு சார் தமிழர்கள் (இவர்கள்தான் பின்னாளில் தெலுங்கர்கள், கன்னடர்கள் என்றெல்லாம் அறியப்பட்டவர்கள்!) நினைத்தனர் !;நினைத்து,  ‘நாதி’ (தெலுங்கில்என்னுடையது’),  ‘நன்ன’ ( கன்னடத்தில் ‘ என்னுடைய’ ) என்றெல்லாம் சொற்களை உருவாக்கினார்கள் ! நாம் பார்த்த பெரும்பான்மைத் தமிழிலிருந்து வேறுபாடாகக் கிளைத்த இக் கிளைப்பே நாளடைவில் சில திராவிட மொழிகளை உருவாக்கிவிட்டது ! அதனால்தான் ’’ ‘இலக்கணம் இலக்கணம்’ என்று அடித்துக்கொள்கிறார்கள் ! அன்றே இலக்கண வரம்பு கட்டியிருந்தால் திராவிட மொழிகள் உண்டாகியிரா!
                                                ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 15, 2013 5:44 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (83)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
               
                                                  வேற்றுமைப் புணர்ச்சியில் ‘தான்’ என்பது ‘தன்’ ஆகவும் , ‘யான்’ என்பது ‘என்’ ஆகவும் குறுகும் என்று சென்ற கட்டுரையில் கண்டோம் !

                                                  ஆனால் அல்வழிப் புணர்ச்சியில் ?

                                                அதற்கு வழி செய்கிறார் தொல்காப்பியர் ! :-

                                                “வேற்றுமை யல்வழிக் குறுகலும் திரிதலும்
                                                  தோற்ற மில்லை யென்மனார் புலவர்”            (புள்ளி மயங்கியல் 58)

                                                அஃதாவது , ‘தான்’, ‘தன்’னாகவும் ‘யான்’, ‘என்’னாகவும் அல்வழியில்  குறுக வேண்டியதில்லை  ! :-

தான் + குறியன் = தான் குறியன் √
=     தன் குறியன் ×

தான் + சிறியன் = தான் சிறியன் √
=     தன் சிறியன் ×

தான் + தீயன் = தான் தீயன் √
=     தன் தீயன் ×

தான் + பெரியன் = தான் பெரியன் √
=     தன் பெரியன் ×

தான் + ஞான்றான் = தான் ஞான்றான் √
=     தன் ஞான்றான் ×

தான் + நீண்டான் = தான் நீண்டான் √
=     தன் நீண்டான் ×

தான் + மாண்டான் = தான் மாண்டான் √
=     தன் மாண்டான் ×

                                                  மேல் ஏழும் அல்வழிப் புணர்ச்சிகள் !

                                                  வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களும் , மெல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களும் வந்து புணர்ந்துள்ளதை மேல் எடுத்துக்காட்டுகளில் காணலாம் !

                                                  இனி, ‘யான்’ ! :-

யான்+ குறியேன் = யான் குறியேன் √
     =  என் குறியேன் ×  

யான்+ சிறியேன் = யான் சிறியேன் √
     =  என் சிறியேன் ×  

யான்+ தீயேன் = யான் தீயேன் √
     =  என் தீயேன் ×  

யான்+ பெரியேன் = யான் பெரியேன் √
     =  என் பெரியேன் ×

 யான்+ ஞான்றேன் = யான் ஞான்றேன் √
     =  என் ஞான்றேன் ×  

யான்+ நீண்டேன் = யான் நீண்டேன் √
     =  என் நீண்டேன் ×  

யான்+ மாண்டேன் = யான் மாண்டேன் √
     =  என் மாண்டேன் ×  

                                                மேல் ஏழும் அல்வழிப் புணர்ச்சிகளே !

                                               வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களும்  , மெல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களும் வந்து புணர்ந்ததற்கு எடுத்துக்காட்டுகளே மேல் ஏழும் !

                                              இங்கே ‘விதி விலக்கு’ எனும் ஒரு விளக்கை நம் கையில் கொடுக்கிறார் இளம்பூரணர் !

                                                இந்த விதி விலக்கு புள்ளி மயங்கியல் நூற்பா 57க்கு  விலக்கு !

                                                கீழ்வரும் எடுத்துக்காட்டுகள் இதனை விளக்கும் !:-

தான் + கை = தன்கை√      (வேற்றுமைப் புணர்ச்சி)
       = தற்கை ×

யான் + ஞாண் = என்ஞாண்√  (வேற்றுமைப் புணர்ச்சி)
           = எற்ஞாண் ×

                                                -  இவண் திரிபு இல்லை ! அஃதாவது , ‘ன்’, ‘ற்’ ஆகவில்லை !

                                                 ஆனால் , ‘திரிபு’ ஏற்படும் சில இடங்களும் உள்ளன ! :-

தான் + புகழ் = தற்புகழ் √  (வேற்றுமைப் புணர்ச்சி)
        = தன்புகழ் ×

தான் + பகை = தற்பகை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
        = தன்பகை ×

யான் + பறை = எற்பறை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
        = என்பறை ×

யான் + பாடி = எற்பாடி √  (வேற்றுமைப் புணர்ச்சி)
        = என்பாடி ×

                                                  மொழியின் விசித்திரப் போக்குகள் மிக மிக நுட்பமானவை!

                                                  ‘தற்கை’ என்று வராது !
                                                  ஆனால் ‘தற்புகழ்’ என்று வரும் !

                                                    என்ன அளவுகோல் ?

                                            தொடர்களில் ‘கை’ , ‘புகழ்’ எனும் சொற்கள் எப்படிப் பயிலுகின்றன என்று பார்க்கவேண்டும் !

                                            ‘தன் கையே  தனக்குதவி’
                                              ‘தன் கையால் சோறு போட்டாள்’
                                              ‘எதுவும் தன் கையில் இருந்தால்தான்’

என்றெல்லாம் வரும்போது , ‘தன்’ என்பதை நிறுத்திப், பிறகு இடைவெளி விட்டு அடுத்த சொல் வருவதைக் கவனியுங்கள் ! இப்படி வந்தால்தான் பொருள் சிறக்கும் !

                                         அதே நேரத்தில் ,

                                            ‘அவன் தன்புகழ்ச்சிக்காரன்’
                                            ‘தன்புகழ்ச்சி கூடாது’

                                               என்றெல்லாம் வரும்போது , ‘தன்’னுக்கும் ‘புகழ்’ என்பதற்கும் இடையே இடைவெளி இல்லை என்பதைக் கவனியுங்கள் ! இடைவெளி கொடுத்துச் சொல்லிப் பாருங்கள் , பொருள் சிறக்காது !

                                               எனவேதான் , ‘தன்’னையும் ‘புகழ்’ என்பதையும் நெருக்கித் ‘தற்புகழ்’ ஆக்கவேண்டியுள்ளது!

                                                 இந்த மொழி நுட்பங்களைத் தொல்காப்பியரோ இளம்பூரணர் முதலான உரையாசிரியர்களோ எங்கும் வெளிப்படையாகக் கூறவில்லை ! நாம்தான்  ஆராய்ந்து தெளிய வேண்டும் !  

                                                 ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 15, 2013 9:25 pm

 தொடத் தொடத் தொல்காப்பியம் (84)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
 
                                      னகர ஈற்றுச் சொற்களில் அடுத்துத் தொல்காப்பியர் அறிமுகப் படுத்தும் சொல்அழன்’ !
 
                                      அழன் – பிணம்
 
                            “அழனென்  இறுதிகெட  வல்லெழுத்து  மிகுமே”  (புள்ளி மயங்கியல் 59)
 
-       இதுதான் நூற்பா !
 
                                        இளம்பூரணர் , “ இஃது , இவ்வீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று ”  என்கிறார் !
 
                                        என்ன பொருள் ?
 
                                        எது எய்தியது ?
                                        
                                       எதை விலக்கவேண்டும் ?
                                        
                                       பிறிது விதி யாது ?
 
                                        எய்தியது – புள்ளி மயங்கியல் நூற்பா 37 !
 
                                        அஃதாவது ,
 
                                         “னகார விறுதி வல்லெழுத் தியையின்
                                        றகார மாகும் வேற்றுமைப் பொருட்கே” (புள்ளி மயங்கியல் 37)
என விதி கூறப்பட்டது முன்பு !
                                        
                                       இதுவே ‘எய்தியது’ !
 
                                        எய்தியதன்படி ,
 
                                         ‘அழன் + குடம் = அழற் குடம்’    என ஆகியிருக்கும் !
 
                                        ஆனால் , எய்தியதை விலக்குகிறார் தொல்காப்பியர் !
 
                                        விலக்கிவிட்டுப் , பிறிது விதி (வேறொரு விதி) கூறுகிறார் அவர் !
 
                                        அவ் வெய்தியதுதான் புள்ளி மயங்கியல் நூற்பா 59 , நாம் மேலே பார்த்தது! 
 
                                        அதன்படி ,
 
                                        அழன் + குடம் = அழற் குடம் ×  
                                                             = அழக் குடம்
 
                                        அழன் + சாடி = அழற் சாடி × 
                                                             = அழச் சாடி
 
                                        அழன் + தூதை = அழற் றூதை × 
                                                             = அழத்  தூதை
 
                                        அழன் + பானை = அழற் பானை × 
                                                             = அழப்  பானை
 
என வரும் !
                                        இந் நான்கும்   வேற்றுமைப் புணர்ச்சிகளே !
                                        
                                          பழைய விதிக்கு விலக்குத் தந்து , ‘அழற் குடம்’ என வராது , ‘அழக் குடம்’ என்றுதான் வரும் என்று கூறவேண்டிய தேவை என்ன ? ஏன் ‘அழற் குடம் ’ வராது ?
                                        
                                             இங்கு ஒரு மொழி நுட்பம் உள்ளது !
                                      
                                              அஃதாவது , ‘அழற் குடம்’ என்று கொண்டால் , அதனை ‘அழல் + குடம்’ என்றும் பிரிக்கலாம், ‘அழன் + குடம்’ என்றும் பிரிக்கலாம் ! இரண்டுமே புணர்ச்சி போற்றியவையே ! எனவே ‘அழற் குடம்’ என்று சொன்ன மாத்திரத்தில் , குறிபிடப்படுவது அழலா , அழனா என்ற குழப்பம் ஏற்படும் ! குழப்பத்தைத் தவிர்ப்பதற்கே  ‘அழக்குடம்’ என்றுதான் எழுதவேண்டும் என்ற விதி வகுக்கப்பட்டது ! குழப்பம் தவிர்ப்பதே இலக்கணத்தின் தலையாய நோக்கம் !
 
 
                                        இங்கே ஒரு தொல்லியல் ஆய்வும் (Archaeological research) உள்ளது !
                                       
                                       கி.மு.1000த்திலேயே , பிணங்களைப் பானைகளில் இட்டுப் புதைக்கும் முறை  தமிழகத்தில் இருந்தது என்பதற்கு இந்த இடம்  (புள்ளி மயங்கியல்  59)சான்று !
                                       
                                    ஈமக் குடம் , ஈமத் தாழி (Burial Ur n) என்றெல்லாம் இன்றைய தொல்லியல் ஆய்வாளர்களால்  இது கூறப்படுகிறது !
                                        2-3 அடி உயரத்தில் ,1-2 அடி அகலத்தில் இருக்கும் கனமான இத் தாழி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்றும் காணப்படுகின்றன !
                                        
                                       காரைக்குடியில் (சிவகங்கை மாவட்டம்) ‘நாட்டான் கண்மாய்’ என்ற பெரிய கண்மாய் ஒன்று உள்ளது ! அதனை ஒட்டிச் சுடுகாடும் உள்ளது ! ; அச் சுடுகாட்டில் இத் தாழிகள் பல புதைந்து கிடந்ததை நானே , சிறு வயதில் , பார்த்திருக்கிறேன் !அப்போது அவை ஈமத் தாழிகள் என்பது தெரியாது ! அத் தாழிகளின் ஓட்டுச் சில்லுகளை எடுத்துக் கண்மாயில் எறிந்து விளையாடுவோம் !
                                        
                                   பழந்தமிழர்களின் ஈமக் குட முறையே , எகிப்தியப் பிரமிடுகளுக்கு (Pyramids of Egypt)  முன்னோடி என மதிப்பிட இடமுள்ளது!
                                       
                                    மிகப் பழங்காலத்திலேயே தமிழர்கள் உலகெங்கும் பரவினார்கள் என்ற கோட்பாட்டின் (Theory)  அடிப்படையில் இந்த ஆய்வை விரிக்கவேண்டும் !
 
                                                                                  ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 16, 2013 1:16 pm

 தொடத் தொடத் தொல்காப்பியம் (85)


-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
 
                                      னகர ஈற்றுச் சொற்களில் அடுத்தது  ‘முன்’ ! :-
 
                                       “முன்னென் கிளவி முன்னர்த் தோன்றும்
                                      இல்லென் கிளவிமிசை றகர மொற்றல்
                                      தொல்லியன் மருங்கின் மரீஇய மரபே”  (புள்ளி மயங்கியல் 60)
 
                                      இதற்கு இளம்பூரணர் , “இவ் வீற்றுள் இலக்கணத்தோடு பொருந்திய மரூஉக்களுள் ஒன்றற்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று” என்றார் !
 
                                       ‘இவ் வீற்றுள்’ –னகர ஈற்றுள்
 
                                       ‘இலக்கணத்தோடு பொருந்திய மரூஉ’ -  ‘கண்கடை’ என்பது , ‘கடைக் கண்’ என்று முன் பின்னாக மருவி வந்தாலும் , இஃது இலக்கணத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது ! ஆகவே ‘கடைக்கண்’ , இலக்கணத்தோடு பொருந்திய மரூஉ !
 
                                        ஆனால் ‘முன்’ ?
 
                                        கீழே பார்ப்போம் ! :-
 
                                         ‘முன் + இல் = முன்னில்’  என்றுதான் வந்திருக்க வேண்டும்? ; இதற்கு விதி – ‘ குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டல்’ (தொகை மரபு 18).
                                        ஆனால், ‘முன்றில்’என்றல்லவா வந்துள்ளது ?
 
                                        முன் + இல் = முன் + ற் + இல் (ற்- புதிதாகச் சேர்ந்துள்ளது)
 
                                        இப்படி வந்தது மிகப் பழங்காலத்தில் ( ‘தொல்லியன் மருங்கின்’) !
 
                                         ‘முன்றில்’ – வீட்டின் முன்புறம் .
 
                                        ஆகவே , இல்லின் முன்புறத்தைக் குறிக்க ‘இல்முன்’ என்றுதானே வந்திருக்க வேண்டும் ?
 
                                        அவ்வாறு வராது , முறை மாறி (மருவி) , ‘முன்னில்’ என வந்திருந்தால் அது இலக்கணத்தோடு பொருந்திய மரூஉ முடிபு !
 
                                        ஆனால் , ‘ற்’ சேர்ந்து ‘முன்றில்’ என வந்துள்ளதால்
 , இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தொல்காப்பியர் மேல் விதியை (புள்ளி. 60) இயற்றினார் !
 
                                         ‘முன்னில்’ என வராது , ‘முன்றில்’ என்று வந்ததற்கு மொழி நுட்பம் ஏதாவது உள்ளதா ?
 
                                        உள்ளது !
 
                                         ‘முன்னில்’ என்றால்  ‘முன்பாக’  (in front) எனப் பொருள் கொள்ளவும் இடம் ஏற்படும் ! அப்போது ‘வீட்டின் முற்பகுதி’  (in front of house)என்ற பொருள் கிடைக்காது !
 
                                        இந்த நிலையைத் தவிர்க்கத்தான் , ‘ற்’றை  இடையே போட்டு , ‘முன்றில்’ ஆக்கியுள்ளது தமிழ் !
 
 
                                        அது சரி !
 
                                        ஏன் ‘ற்’றை  இடையே கொண்டுவரவேண்டும் ? ‘ட்’டைக் கொண்டுவரக் கூடாதா ?
 
                                        நல்ல கேள்வி !
 
                                         ‘ற்’ ஏன் வந்ததென்றால் , ‘ன்’னுக்கு  இன எழுத்து ‘ற்’தான் ! ‘ட்’டோ வேறு எழுத்தோ இன எழுத்து ஆகாது ! இன எழுத்துச் சேர்வதுதானே உச்சரிக்க ஏதுவாகும் ? அதனால்தான் ‘ற்’ !
 
                                        மொழி அதிசயமானது !
 
                                        ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 16, 2013 8:57 pm

 தொடத் தொடத் தொல்காப்பியம் (86)


-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
 
                                      இப்போது னகர ஈற்றுச் சொற்புணர்ச்சி ஈற்றுக்கு வந்துள்ளோம் !
                                      அந்த இறுதி நூற்பா !:-
 
                                       “பொன்னென் கிளவி ஈறுகெட முறையின்
                                       முன்னர்த் தோன்றும் லகார மகாரம்
                                       செய்யுள் மருங்கிற்  றொடரிய லான !”  (புள்ளி மயங்கியல் 61)
 
                                      இதில் , ‘பொன்’ எனும் பெயர்ச் சொல் , செய்யுளில் , வேறு சொற்களுடன் புணரும் வகைகளைக் கூறுகிறார் தொல்காப்பியர் ! இதன்படி ,
 
                                       ‘பொன் + படை = பொலம் படை’ என்று வரும் !
 
                                      ஆனால் , இது செய்யுளில்தான்  நடக்கும் என்று தொல்காப்பியர் கூறுவதை ( ‘செய்யுள் மருங்கிற்’) மறக்கக் கூடாது !
 
                                      பொன் -  ‘ஈறு கெட’ – பொ
                                     
                                      பொ – ‘தோன்றும் லகார மகாரம்’ – பொலம்
                                      
                                       பொலம் + படை = பொலம் படை
என்பது மேலை நூற்பா கூறும் முறை !
 
                                      மேலே , ‘தோன்றும் லகார மகாரம் ’ என்பதற்கு  நாம் ‘ல’வையும் , ‘ம்’மையும் சேர்த்துப்  ‘பொலம்’ வந்தது எனக் கண்டோம் ! ஒன்று ‘ல’வானால் , அடுத்து ‘ம’வைத்தானே கொள்ளவேண்டும் ? ‘தோன்றும் லகார மகாரம்’ என்பதுதானே நூற்பா அடி  ?
 
                                      இந்த  ஐயத்தைப் போக்குகிறார் இளம்பூரணர்! :-
                                   
                                   “ ‘முறையின்’  என்றதனால் , லகரம் உயிர் மெய்யாகவும் , மகரம் தனி மெய்யாகவும் கொள்க” !
 
                                      ஐயம் தீர்ந்ததா?
 
                                      மேலே பார்த்தது , பகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் ‘பொன்’ என்பதோடு வந்து புணரும் முறையே !
 
                                      அனால் , இளம்பூரணர் , நூற்பாவை நெகிழ்த்துக் , கீழ் வரும் உதாரணங்களைப் போலவும் புணரலாம் என்கிறார் ! :-
 
                                      பொன் + கலம் = பொலங் கலம்
                                      பொன் + சுடர் = பொலஞ் சுடர்
                                      பொன் + தேர் = பொலந் தேர்
 
                                      வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்ததற்கே மேல் மூன்றும் சான்றுகள் !
                                      
                                     மேல் மூன்றும் செய்யுள் நடைக்கு மட்டுமே பொருந்தும் !
 
                                      இன்னும் நூற்பாவை நெகிழ்த்துக் , கீழ்வரும் வகைகளையும் கொள்ளலாம் என்கிறார் இளம்பூரணர் ! :-
 
                                      பொன் + நறுந் தெரியல் = பொலநறுந் தெரியல்
                                      பொன் + மலராவிரை = பொலமல ராவிரை
 
                                      மெல்லெழுத்தை (ந, ம) முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்த்தற்கு எடுத்துக்காட்டுகள் மேலே வந்தவை !
                                      இவை யாவும் , செய்யுளுக்கு மட்டுமே பொருந்துவன !
                                     
                                     அது சரி !
                                      
                                     ஏன் ‘பொன்’ என்பது ‘பொலம்’ ஆகிறது ? ‘கண்’ என்பது ‘கலம்’ ஆகவில்லையே ?
                                      
                                     என்ன மொழி நுட்பம் ?
                                      
                                   வேர்ச் சொல்லைப் பார்க்க வேண்டும் !
                                     
                                    பொ – வேர் (Root)
                                      
                                    ‘பொலிவு’ என்ற பொருண்மை (Meaning) இவ் வேருக்கு உண்டு!
                                      
                                    பொலிவுடை உலோகமாதலால் அது ‘பொன்’ !
                                      
                                       பொ – வேர்
                                      ன் – எழுத்துப் பேறு
                                     
                                  இந்த ‘ன்’ எழுத்துப் பேற்றிற்குப் பதில் , ‘ல்’ எழுத்துப் பேறு வந்து சில நேரங்களில் ஒட்டும் ! ‘ன்’னின் இனம் , ‘ல்’  ஆதலால் , இது சாத்தியமே !
                                      
                                   ‘ல்’ எழுத்துப் பேறாக வந்து , ‘பொ’வுடன் ஒட்டும்போது , ‘பொல்’ பிறக்கிறது !
                                      
                                   ‘பொல் என்ற பகுதியுடன் (Stem) , அகரச் சாரியை (  Euphonic extension ‘A’)  சேர்ந்து ‘பொல’ ஆகிறது !
                                     
                                    பிறகுதான் , ‘பொலந் தேர்’ , ‘பொலங் கொடி’ போன்ற சொற்கள் உருவாகின்றன !
                                     
                                    செய்யுள்களில் ஓசைக்காகவே ‘பொலம்’ தேவைப்படும்போது , புலவர்கள் இவ் வடிவைச் சரளமாக ஆளத் தொடங்கினர் !
                                   
                                   நுட்பம் விளங்கியதா ?
 
                                      *** 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 16, 2013 11:09 pm

  தொடத் தொடத் தொல்காப்பியம் (87)


-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
 
                                      இதுவரை னகர ஈற்றுச் சொற்கள் ( ‘ன்’ஈற்றுச் சொற்கள்) புணர்ந்த வகைகளைப் பார்த்தோம் !
                                      
                                     அடுத்ததாகத் தொல்காப்பியர் யகர ஈற்றுச் சொற்களை எடுத்துக்கொள்கிறார் !
                                      
                                    முதற்கண் ,
 
                                       “யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின்
                                       வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே” (புள்ளி மயங்கியல் 62)
என்கிறார் !
 
                                      அஃதாவது , வேற்றுமைப் பொருளில் , யகர ஈற்றுச் சொற்கள் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களுடன் புணரும்போது , கீழ்வருமாறு புணரும் ! :-
 
                                      நாய் + கால் = நாய்க் கால்
                                                         =நாய் கால் ×
 
                                      நாய் + செவி = நாய்ச்  செவி
                                                         =நாய் செவி ×
 
                                      நாய் + தலை = நாய்த் தலை
                                                         =நாய் தலை ×
 
                                      நாய் + புறம் = நாய்ப் புறம்
                                                         =நாய் புறம் ×


-       எல்லா இடத்தும் வல்லெழுத்துச் சந்திகள் வந்ததைப் பாருங்கள் !
 
-       இந்த நான்கும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !
 
                                      மேலை நூற்பாவை எழுதிய கையோடு விதிவிலக்கு  (Exception) நூற்பா ஒன்றையும் எழுதிவிட்டார் தொல்காப்பியர் ! :-
                                       “தாயென் கிளவி இயற்கை யாகும் (புள்ளி மயங்கியல் 63)
 
                                      இதற்கு இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகளை வருமாறு எழுதலாம் !:-
 
                                      தாய் + கை = தாய் கை
                                                      = தாய்க் கை ×
 
                                      தாய் + செவி = தாய் செவி
                                                         = தாய்ச்  செவி ×
 
                                      தாய் + தலை = தாய் தலை
                                                      = தாய்த் தலை ×
 
                                      தாய் + புறம் = தாய் புறம்
                                                      = தாய்ப்  புறம்×
 
                                       ‘தாய்’ என்பது விரவுப் பெயர் !
                                    
                                      மனிதனுக்கும்  ‘தாய்’ பொருந்தும் ; விலங்குக்கும்  ‘தாய்’ பொருந்தும் !
                                     
                                      ‘பொன்னியின் தாய் வந்தாள்’
                                       ‘தாய்க் கரடி ஓடிவிட்டது’


-       என்று வரல் காணலாம் !


அது சரி !
                                        
                                           ‘நாய்க் கை’ என்று வந்தது போலத் , ‘தாய்க் கை’ என ஏன் வரவில்லை ?
                                       
                                          என்ன மொழி நுட்பம் ?
                                       
                                           ‘தாய்க் கை’ என்றால் , கைகளுக்கு எல்லாம் மூலமான பெரிய கை என்று பொருள்படும் !
                                       
                                          இப்படித் தவறான பொருள் வருவதைத் தடுப்பது எப்படி ? ‘தாயின் கை’ என்றும் கூறியாகவேண்டும் !
                                         
                                           இந் நிலையில்தான் , ‘க்’ போடாதே என்று இலக்கணம் வகுத்தனர் !
                                         
                                        ‘தாய் கை’ என்றால் ‘தாயின் கை’ என்று மட்டும் பொருள்படும் ! அப்போது குழப்பம் ஏதும் வராது !
                                        
                                        எனவே , புணர்ச்சிகளைப் பொறுத்தவரை , கண்ணை மூடிக்கொண்டு ‘க்’, ‘ச்’களை இடையே சேர்த்துவிடக் கூடாது என்பது தெளிவாகிறதல்லவா ?
 
                                                                                     ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jun 17, 2013 10:44 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (88)


-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
 
                                      
                                     வேற்றுமையில் ‘தாய்’ எனும் சொல் எவ்வாறு புணரும் என்பதை முன்னே பார்த்தோம் !
                                      
                                    அதே ‘தாய்’ எனும் சொல்லில்  சிறு விளக்கம் எழுதுகிறார் தொல்காப்பியர் !:-
 
                                       “மகன்வினை கிளப்பின் முதனிலை யியற்றே !” (புள்ளி மயங்கியல் 64)
 
                                      மகன் வினை – மகன் தாயுடன் பகைத்துக் கொண்ட செயல் !
 
                                      முதனிலை (முதல் நிலை) – முன்னே சொன்னபடி (புள்ளிமயங்கியல் 62) , வல்லெழுத்துச் சந்தி வரும் !
 
                                      மேல் நூற்பாவிற்கு (64) , இளம்பூரணர் கூறிய எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் ! :-
 
                                       ‘மகன் + தாய் = மகன்றாய் ’ என முதலில் ஆகிப் பின்,
                                      
                                        மகன்றாய் + கலாம் = மகன்றாய்க் கலாம்
ஆகும் !
                                      கலாம் – பூசல் ! (அப்துல் கலாம் அல்ல!)
 
                                      இங்கே , தொல்காப்பியர் கூறிய ‘முதனிலை இயற்றே’என்பதற்கு இணங்க வல்லெழுத்துச் சந்தி ‘க்’ வந்தது காண்க !
                                       ‘தாய் + கை = தாய்கை ’ என்று சந்தி இலாது அமைந்தது போல , ‘மகன்றாய் + கலாம் = மகன்றாய் கலாம்’ என வராது என்பதே தொல்காப்பியர் கூறவந்தது !
                                      
                                       இதே பாங்கில் ,
                                     
                                      மகன்றாய் + செரு= மகன்றாய்ச் செரு
                                                                 =   மகன்றாய் செரு ×
 
                                                மகன்றாய் + தார்= மகன்றாய்த் தார்
                                                                 =    மகன்றாய் தார் ×
 
                                                மகன்றாய் + படை= மகன்றாய்ப்  படை
                                                                 =    மகன்றாய்  படை ×
என வரும் !
 
                                       ‘ய்’ ஈற்றுச் சொற் புணர்ச்சிகளில் வல்லெழுத்துச் சந்தி வந்ததையும் (நாய்க்கால்) , சந்தியே வராததையும் ( ‘தாய்கை’) , பார்த்தோம் !
                                     
                                      தொடர்ந்து , “வல்லெழுத்துச் சந்தியும் வரலாம் ; மெல்லெழுத்துச் சந்தியும் வரலாம் என்ற நிலையில் சில யகர ஈற்றுச் சொற்புணர்ச்சிகள்  உள்ளன ; அதையும் தெரிந்துகொள்ளுங்கள் !”  என்கிறார் தொல்காப்பியர் ! :-
 
                                       “மெல்லெழுத் துறழு மொழியுமா ருளவே” (புள்ளி மயங்கியல் 65)
                                     
                                      இதற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் !:-
 
                                      வேய் + குறை = வேய்க் குறை  
                                                          = வேய்ங் குறை  
 
                                      வேய் + சிறை = வேய்ச் சிறை  
                                                          = வேய்ஞ் சிறை
 
                                      வேய் + தலை = வேய்த்  தலை  
                                                          = வேய்ந்  தலை
 
                                                வேய் + புறம் = வேய்ப் புறம்  
                                                          = வேய்ம் புறம்   
 
                                       ‘உறழும்’ என்றொரு சொல்லை மேலை நூற்பாவில் பார்த்தோம் !
                                     
                                        உறழ்ச்சி – இப்படியும் வரும் அப்படியும் வரும் என்ற நிலை !
                                      
                                       ‘மெல்லெழுத்து உறழும்’ என்றால் , ‘மெல்லெழுத்தும் வரும் , வல்லெழுத்தும் வரும்’ என்பது பொருள் !
                                      
                                       ‘உறழ்’ என்ற சொல் தொல்காப்பியத்தில் பல இடங்களில் வருவதால் , இவ் விளக்கம் இங்கு தேவையாகிறது !
                                      
                                         அது சரி!
                                     
                                       ஏன் உறழ வேண்டும் ?
                                     
                                          ‘உறழ்ச்சி’ ஒரு பெரிய  மொழி நுட்பத்தைச் சுமந்துகொண்டுள்ளது !
                                     
                                            என்ன நுட்பம் ?
                                   
                                           இலக்கண வழக்கிற்கும் மக்கள் வழக்கிற்கும் உள்ள வேறுபாடே உறழ்ச்சிக்குக் காரணம் !
                                      
                                          பசு தரும் பால் , பசுப் பால் !
                                    
                                          பசுப் பால் – இலக்கண வழக்கு !
                                     
                                         பசும் பால் – உலக வழக்கு !
                                      
                                         உலக வழக்கே வென்றது !
 
                                     
                                       புளி மரம் தரும் காய் , புளிக்காய் !
                                     
                                      புளிக்காய் – இலக்கண வழக்கு !
                                     
                                     புளியங்காய் – உலக வழக்கு !
                                      
                                      உலக வழக்கே வென்றது !
 
                                      உலக வழக்கு என்பது எளிய வழக்கு ! மெல்லோசை கொண்டது !
                                     
                                    இதே முறையில்தான் ,
                                     
                                     வேய்க் குறை – இலக்கண வழக்கு .
                                      
                                    வேய்ங் குறை – உலக வழக்கு !
 
                                      உலக வழக்கின் வலிமை தொல்காப்பியருக்கு நன்கு தெரியும் ! அதனால்தான் , அதைத் தள்ளிவிடாமல் ‘ “உறழும்” என்ரு நூற்பா எழுதினார் !
 
                                                                                            ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jun 20, 2013 10:17 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (89)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

இப்போது காணப்போகும் நூற்பா , புல்ளிமயங்கியலில் யகர ஈர்றுச் சொற்புணர்ச்சிகள் பற்றிய நூற்பாக்களில் இருதி நூற்பா! :-

“அல்வழி யெல்லா மியல்பென மொழிப” (புள்ளி மயங்கியல் 66)

அஃதாவது , யகர ஈற்றுச் சொற்புணர்ச்சிகளில் இதுவரை நாம் பார்த்த நான்கு (உயிர்மயங்.62,63,64,65) நூற்பாக்களும் வேற்றுமைப் புணர்ச்சிகள் கொண்டவை !

மேலே காணும் இறுதி நூற்பா ஒன்று மட்டும் (66) அல்வழிப் புணர்ச்சிக்கானது !

அல்வழியில் யகர ஈற்றுச் சொற்கள் இயல்பாகப் புணரும் என்கிறார் தொல்காப்பியர் ! :-

நாய் + கடிது = நாய் கடிது √
= நாய்க் கடிது ×

நாய் + சிறிது = நாய் சிறிது √
= நாய்ச்  சிறிது ×

நாய் + தீது = நாய் தீது √
= நாய்த்  தீது ×

நாய் + பெரிது = நாய் பெரிது √
= நாய்ப் பெரிது ×

‘ நாய் + கால் = நாய்க் கால்’ என வந்தது வேற்றுமைப் புணர்ச்சி என்றும் , ‘நாய் + கடிது = நாய் கடிது’ என வந்துள்ளது அல்வழிப் புணர்ச்சி என்றும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்க !

                                                  இளம்பூரணர் இங்கு மேலும் சில இலக்கணங்களைத்
தருகிறார் !:-

“ இவ்வீற்று உருபு வாராது , உருபின் பொருள்பட வந்த இடைச்சொல் முடிபும் , வினையெச்ச முடிபும் , இருபெயரொட்டுப் பண்புத் தொகை முடிபும் , அல்வழி யுறழ்ச்சி முடிபும் கொள்க ” என்று கூறிச் சில எடுத்துக்காட்டுகளை அடுக்குகிறார் இளம்பூரணர் !

இளம்பூரணர் எழுதியது உரைதான் ! ஆனால் அந்த உரைக்கு இன்னொரு உரை தேவைப்படுகிறது !

                                             ‘ இவ்வீற்று உருபு’ – யகர ஈற்று உருபு ; அஃதாவது ‘வாய்’ ; இஃது                              
              ஏழாம்    வேற்றுமை உருபு.

‘உருபின் பொருள்படவந்த இடைச்சொல் ’-

அவ்வாய்’; இது  ‘அங்கு’ என்ற பொருள்பட
வந்த இடைச் சொல்.

‘இடைச்சொல் முடிபு ’(இதற்குப் புணர்ச்சி எடுத்துக்காட்டுகள்) –

அவ்வாய்+கொண்டான்=அவ்வாய்க் கொண்டான்
இவ்வாய்+கொண்டான்=இவ்வாய்க் கொண்டான்
உவ்வாய்+கொண்டான்=உவ்வாய்க் கொண்டான்

அவ்வாய்+சென்றான்=அவ்வாய்ச் சென்றான்
இவ்வாய்+ சென்றான் =இவ்வாய்ச் சென்றான்
உவ்வாய்+ சென்றான் =உவ்வாய்ச் சென்றான்

அவ்வாய்+தந்தான்=அவ்வாய்த் தந்தான்
இவ்வாய்+ தந்தான் =இவ்வாய்த் தந்தான்
உவ்வாய்+ தந்தான் =உவ்வாய்த் தந்தான்

அவ்வாய்+போயினான்=அவ்வாய்ப் போயினான்
இவ்வாய்+ போயினான் =இவ்வாய்ப்  போயினான்
உவ்வாய்+ போயினான் =உவ்வாய்ப்  போயினான்

‘வினையெச்சம் ’ – யகர ஈற்று வினையெச்சச் சொல் ‘தாய்’; ‘தாவி’
என்பது பொருள்; இன்னொரு சொல் , ‘கூய்’;
‘கூவி’என்பது பொருள்; கூய் அழைத்தான் - கூவி
அழைத்தான்.

‘வினையெச்ச முடிபு’

  தாய் +கொண்டான்= தாய்க் கொண்டான்
தாய் +சென்றான்= தாய்ச் சென்றான்
தாய் +போயினான்= தாய்ப் போயினான்
இம்மூன்றும் அல்வழிப் புணர்ச்சிகளே.

‘இருபெயரொட்டுப் பண்புத் தொகை முடிபு’ –

    பொய்+ சொல்= பொய்ச் சொல்
மெய்+ சொல்= மெய்ச் சொல்

‘அல்வழி உறழ்ச்சி முடிபு’ – யகர ஈற்றுச் சொற்களைப்                    
பொறுத்தவரை,அல்வழிப் புணர்ச்சி ,சந்தி பெற்றும்
சந்தி பெறாதும் வருவதுண்டு:-

வேய்+கடிது=வேய் கடிது√
        = வேய்க் கடிது√

வேய்+சிறிது=வேய் சிறிது√
        = வேய்ச் சிறிது√

வேய்+தீது=வேய் தீது√
= வேய்த் தீது√

வேய்+பெரிது=வேய் பெரிது√
          = வேய்ப் பெரிது√

‘வேய் கடிது’ (= மூங்கிலானது கடிது) என்பதும் அல்வழிப் புணர்ச்சிதான் !
‘வேய்க் கடிது’ (= மூங்கிலானது கடிது என்ற அதே பொருள்தான்)              
என்பதும் அல்வழிப் புணர்ச்சிதான் !
ஒன்றில் ‘க்’ வரவில்லை ; இன்னொன்றில்
‘க்’வந்துள்ளது ! இவ்வாறு வருவதால்தான்
‘அல்வழி உறழ்ச்சி முடிபும் கொள்க’
என்றார் இளம்பூரணர் ! இதுபோன்று
எப்போதாவதுதான் வரும் !

அது எப்போதாவதுதான் வரும் ; நமக்குத் துன்பம் இப்போது வந்துவிட்டதே !

                                                                   ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 22, 2013 3:47 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (90)

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

அடுத்ததாக  ‘ர்’ ஈற்றுச் சொற்களைத் தொல்காப்பியர் எடுத்துக்கொள்கிறார் !

புள்ளிமயங்கியலில் மொத்தம் நான்கு நூற்பாக்களை ஒதுக்குகிறார் தொல்காப்பியர் !

முதலாவது –

“ரகர இறுதி யகர இயற்றே” (புள்ளி மயங்கியல் 67)

“ரகர ஈற்றுச் சொற்கள் எப்படிப் புணரும் ?” என்று கேட்டால் , நான் முன்பு விளக்கியபடி , மனப்பாட வசதிக்காக, ‘யகர ஈற்றுப் புணர்ச்சி போல’ என்கிறார் தொல்காப்பியர் !

எதைக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர் ?

வேறு ஒன்றுமில்லை , ‘நாய்க்கால்’ (புள்ளி மயங்கியல் 62) வந்ததல்லவா ? அதுபோபோலப் புணருமாம் !

அஃதாவது ?

அஃதாவது , வேற்றுமைப் புணர்ச்சியில் , ரகர ஈற்றுச் சொற்கள் வல்லெழுத்துச் சந்தி பெற்றுப் புணரும் !

தேர் + கால் = தேர்க் கால் (வேற்றுமைப் புணர்ச்சி)
தேர் + செய்கை = தேர்ச் செய்கை (வேற்றுமைப் புணர்ச்சி)
தேர் + தலை = தேர்த் தலை (வேற்றுமைப் புணர்ச்சி)
தேர் + புறம் = தேர்ப் புறம் (வேற்றுமைப் புணர்ச்சி)

‘தேர்க் கால்’ என்பதை விரியுங்கள் ! ‘தேரின் கால்’ என ஆகுமல்லவா ? ‘தேரின் கால்’ என்பதில் ஓர்  ‘இன்’ ஒளிந்திருக்கிறது அல்லவா? அந்த ‘இன்’ ஒரு வேற்றுமை உருபு ! (5ஆம் வேற்றுமை உருபு) ; இந்த வேற்றுமை உருபால்தான் , இதனை வேற்றுமைப் புணர்ச்சி என்கிறோம் !

மேல் நூற்பாவை எழுதிய கையோடு , ஒரு விதி விலக்கையும் அவசரம் அவசரமாகத் தொல்காப்பியர் எழுதுகிறார் ! :-

“ஆரும் வெதிரும் சாரும் பீரும்
மெல்லெழுத்து மிகுதன் மெய்பெறத் தோன்றும்”  (புள்ளி மயங்கியல் 68)

‘ தேர் + கால் =  தேர்க் கால்’ என வந்ததுபோல், ‘ஆர் + கால் =ஆர்க்கால்’ என வரும் என நினைக்காதீர்  என்கிறார் தொல்காப்பியர் !
தொல்காப்பியர் தந்த விதி விலக்குகள் !:-

ஆர் + கோடு = ஆர்க் கோடு ×
= ஆர்ங் கோடு √

ஆர் + செதிள் = ஆர்ச் செதிள் ×
= ஆர்ஞ் செதிள் √

ஆர் +தோல் = ஆர்த் தோல் ×
= ஆர்ந் தோல் √

ஆர் + பூ = ஆர்ப் பூ ×
= ஆர்ம் பூ √

வெதிர் + கோடு = வெதிர்க் கோடு ×
= வெதிர்ங் கோடு √

வெதிர் + செதில் = வெதிர்ச் செதிள் ×
= வெதிர்ஞ் செதிள் √

வெதிர் + தோல் = வெதிர்த் தோல் ×
= வெதிர்ந் தோல் √

வெதிர் + பூ = வெதிர்ப் பூ ×
= வெதிர்ம் பூ √

சார் + கோடு = சார்க் கோடு ×
= சார்ங் கோடு √

சார் + செதிள் = சார்ச் செதிள் ×
= சார்ஞ் செதிள் √

சார் + தோல் = சார்த் தோல் ×
= சார்ந் தோல் √

சார் + பூ       = சார்ப் பூ ×
= சார்ம் பூ √

இங்கே , ‘குதிர்’ , ‘துவர்’ என்ற பெயர்ச் சொற்களுக்கும் இதே விதிதான்  என்று ஒட்டுகிறார் இளம்பூரணர் !
அதன்படி ,

குதிர் + கோடு = குதிர்க் கோடு ×
= குதிர்ங் கோடு √

குதிர் + செதிள் = குதிர்ச் செதிள் ×
= குதிர்ஞ் செதிள் √

குதிர் + தோல் = குதிர்த் தோல் ×
= குதிர்ந் தோல் √

குதிர் + பூ    = குதிர்ப் பூ ×
= குதிர்ம் பூ √


துவர் + கோடு = துவர்க் கோடு ×
= துவர்ங் கோடு √

துவர் + செதிள் = துவர்ச் செதிள் ×
= துவர்ஞ் செதிள் √

துவர் +தோல் = துவர்த் தோல் ×
= துவர்ந் தோல் √

துவர் + பூ = துவர்ப் பூ ×
     = துவர்ம் பூ √

மேலே , ‘பீர்’ எனும் சொற்புணர்ச்சியைப் பார்த்தோமல்லவா? அதிலும் ஓர் ஒட்டு ஒட்டுகிறார் இளம்பூரணர் ! :-

பீர் + கோடு = பீர்ங் கோடு √
= பீரங் கோடு √ (அம்- சாரியை)

பீர் + செதிள் = பீர்ஞ் செதிள் √
= பீரஞ் செதிள் √ (அம்- சாரியை)

பீர் + தோல் = பீர்ந் தோல் √
= பீரந் தோல் √ (அம்- சாரியை)

பீர் + பூ = பீர்ம் பூ √
 = பீரம் பூ √ (அம்- சாரியை)

மேலே கண்ட அனைத்துப்  புணர்ச்சிகளும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !

அது சரி !

‘தேர்க் கால்’ என்று ‘க்’ வருகிறது ; ஏன் ‘ஆர்ங்கோடு’ என ‘ங்’ வருகிறது ? ‘ஆர்க் கோடு’ என வரவேண்டியதுதானே ?

இதில் ஏதாவது மொழி நுட்பம் உள்ளதா ?

உள்ளது !

‘தேர்’ , தனி ஒரு பொருள் ! அதற்குச் சில உறுப்புகள் (parts) உள்ளன ! எனவே  அவற்றைச் சுட்ட  ‘க்’தான் உதவுகிறது !  ‘தேர்க் கால்’ என்றால் ‘தேர்’ என்ற பொருளுக்குக் காலான வேறு ஓர் உறுப்பு என்பது விளங்குகிறது !

அதே நேரத்தில் , ‘ஆர்’ என்பது ஒரு மரம் ! கழற்றக் கூடிய தனி உறுப்புகளைக் கொண்டதல்ல ! எனவே , ‘தேரு’க்குக் கூறிய இலக்கணம் ‘ஆரு’க்குப் பொருந்தாது !தேருக்குச் சொன்ன வகையில் ஆருக்கும் புணர்ச்சி சொன்னால் பொருள் குழப்பம் ஏற்படும் ! ஆகவேதான் , வேறுபாட்டை உருவாக்கத்தான் , தேருக்கு ‘க்’ ,  ஆருக்கு ‘ங்’ !

மொழி நுட்பம் இதுதான் !

தொல்காப்பியர் மேலே குறித்த ‘ஆர்’ மரத்தைப் பர்க்க ஆசையாக உள்ளதா ?

[You must be registered and logged in to see this link.]
(Courtesy- J.M. Garg , Commons. Wikimedia.org)

இதுதான் தொல்காப்பியர் கூறிய ஆர் மரம் !

ஆத்தி என்பதும் இதுதான் ! ( ‘ஆத்தி , இதுதனா ஆர்’ என்கிறீர்களா?)

வெள்ளை மந்தாரை என்பதும் இதுதான் !

பீடி சுற்ற இலையை வாரிவழங்கிய மரமும் இதுதான் ! சிறந்த மருந்துகளை அளிப்பதும் இதுவே!

‘ஆத்தி சூடி’ என்று சிவனுக்குப் பெயர் தந்த மரமும் இதுதான் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 22, 2013 11:36 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (91)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

ரகர ஈற்றுப் புணர்ச்சியில் அடுத்தது  ‘சார்’ !

இதைப் பார்ப்போமா சார் ?

“சாரென் கிளவி காழ்வயின் வலிக்கும்” ! (புள்ளி மயங்கியல் 69)

- என்பது தொல்காப்பியம் !

காழ் வயின் – ‘காழ்’ எனும் சொல்லோடு

வலிக்கும் – வல்லொற்று மிக்குப் புணரும் !

அஃதாவது ,

சார் + காழ் = சார்க் காழ் √  
= சார்ங் காழ் ×

- இதுவும் வேற்றுமைப் புணர்ச்சியே !

காழ்  -  பருப்பு

சாரக் காழ் – சாரப் பருப்பு

சார்க் காழ் – இலக்கண வழக்கு  (தொல்காப்பியர் காலம்)

சாரக் காழ் – இலக்கண வழக்கு (பிற்காலம்)

சாரப் பருப்பு (மக்கள் வழக்கு)

மக்கள் வழக்கே வென்றது !

தொல்காப்பியரின் ‘சார் ’ – மரத்தைப் பார்க்க ஆசையா?

[You must be registered and logged in to see this link.]

Courtesy – thewesternghats.indiabiodiversity.org

இதுதான் தொல்காப்பியம் பேசிய சார் மரம் !

புளிமா எனப்படுவதும் இம்மரமே !

இதன் தாவரவியல் பெயர் -  Buchanania axillaris  

இந்த மரத்தின் தோற்றமே தமிழகமும் சிலோனும்தான் என ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 13 of 84 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 48 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக