புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10 
29 Posts - 35%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10 
3 Posts - 4%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10 
3 Posts - 4%
Jenila
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10 
2 Posts - 2%
jairam
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10 
1 Post - 1%
M. Priya
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10 
7 Posts - 5%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10 
5 Posts - 4%
Jenila
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10 
4 Posts - 3%
Rutu
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10 
1 Post - 1%
jairam
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 18 of 84 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 51 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 09, 2013 7:32 am

நன்றி அய்யா புன்னகை



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 13, 2013 10:09 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (127)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

“மரப்பெயர்க் கிளவிக் கம்மே சாரியை” (குற்றியலு.10)
என்ற தொல்காப்பியர் ஆணையை முன்பே கேட்டோம் !

ஒரு மாணவன் அப்போது தொல்காப்பியரைக் கேட்டான் – “மரப்பெயருக்கு மட்டும்தான் அம் சாரியை வருமா?”.

அப்போது சொன்னார் தொல்காப்பியர் ! :-

“ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும்
அம்மிடை வரற்கு முரியவை யுளவே
அம்மர பொழுகு மொழிவயி னான”       (குற்றியலு . 12)

அஃதாவது , ஈறெழுத்து ஒரு மொழியான ‘ஏறு’ போன்ற நெடில்தொடர்க் குற்றியலுகரச் சொற்களும், ‘வட்டு’ போன்ற வன்றொடர்க் குற்றியலுகரச் சொற்களும்கூட ‘அம்’ சாரியை பெறலாம் !

ஏறு + கோள் = ஏறங்கோள் (அம் - சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏறு – உகரம் , நெடில்தொடர்க் குற்றியலுகரம்)
ஏறு – காளை ; ஏறு கோள் – சல்லிக்கட்டு .
வட்டு + போர் = வட்டம் போர் (அம் - சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)
(வட்டு – ஈற்று உகரம் ,வன்றொடர்க் குற்றியலுகரம்)

வட்டு – சூதாடு கருவி ; வட்டம் போர் – சூதாட்டத்தால் வரும் போர் ; மகாபாரதம் காண்க.

பின்னாளில் ,இவற்றை ஓலைச் சுவடியில் படித்த மாணவன் ஒருவன் இளம்பூரணரைக் கேட்டான் – “அப்படியானால் , நெடில்தொடர்,வன்றொடர் அல்லாத வேறு குற்றியலுகரச் சொற்களுக்கு ‘அம்’ வரவே வராதா ?”

“அப்படியில்லை ! மென்றொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்கும் , உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்கும்கூட  அம் சாரியை வரலாம் !” என்றார் இளம்பூரணர் ! :-

தெங்கு + காய்  =  தெங்கங் காய்  (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தெங்கு – ஈற்று உகரம் , மென்றொடர்க்  குற்றியலுகரம் )

தெங்கங் காய் – தேங்காய்.


பயறு + காய்  =  பயற்றங் காய்  (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பயறு – ஈற்று உகரம் , உயிர்த்தொடர்க்  குற்றியலுகரம் )

“இன்னும் கேளப்பா , ‘அத்து’ச் சாரியை வரும் குற்றியலுகரப் புணர்ச்சிகளும் உள” – தொடர்ந்தார் இளம்பூரணர் ! :-

இருட்டு + கொண்டான் = இருட்டத்துக் கொண்டான் (அத்து - சாரியை) (வேற்றுமைப்
புணர்ச்சி)
(இருட்டு – ஈற்று உகரம் , வன்றொடர்க்  குற்றியலுகரம் )

“ அன் சாரியை பெறும் குற்றியலுகரச் சொல்லைக் காட்டவா ?” – அடுக்கினார் இளம்பூரணர் ! :-

கரியது + அன்  + கோடு = கரியதன் கோடு(அன் - சாரியை) (வேற்றுமைப்
புணர்ச்சி)
(கரியது – ஈற்று உகரம் , உயிர்த்தொடர்க்  குற்றியலுகரம் )

மேல் நூற்பாவில் (குற்றியலு . 12) , கடைசியாக வன்றொடர்க் குற்றியலுகரப் புணர்ச்சி பற்றிக் கூறி , அது ‘அம்’சாரியை பெறும் என்றும் தெரிவித்தாரல்லவா தொல்காப்பியர்?

இப்போது ,  “வன்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள் மட்டுமல்ல  மென்றொடர்க் குற்றியலுகரச் சொற்களும்கூட ஏற்ற சாரியைகளைப் பெறும்! ” என்று நுவல்கிறார் ! :-

“ஒற்றுநிலை திரியா தக்கொடு வரூஉம்
அக்கிளை மொழியும் உளவென மொழிப”  (குற்றியலு. 13)

‘ஒற்றுநிலை திரியா’ – ‘வேம்பு’ என்பது ‘வேப்பு’ ஆனதில் ஒற்றுநிலை ( ‘ம்’) , திரிந்தது (’ப்’ஆனது) ; அப்படித் திரியாது,

‘அக்கொடு வரும் ’ – ‘அக்கு’ எனும் சாரியை பெறும்;

‘அக்கிளை மொழியும்’ – வன்றொடருக்குக் கிளை மென்றொடர் ; எனவே , மென்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள்,

‘உளவென மொழிப ’ – உள்ளன என்று கூறுவர் !

இதற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள் ! :-

குன்று + கூகை = குன்றுக் கூகை ×
= குற்றக் கூகை ×
= குன்றக் கூகை √ (அக்கு - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(குன்று – ஈற்று உகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம் ; இதன் நடுவிலுள்ள ‘ன்’ , ‘ற்’ஆகத் திரியவில்லை )


கூகை – கோட்டான் ; ஆந்தை . குன்றக் கூகை – மலையிலே இருக்கும் ஆந்தை .

மன்று + பெண்ணை = மன்றப் பெண்ணை (அக்கு - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

பெண்ணை – பனை மரம் ; மன்றப் பெண்ணை – ஊர்ப் பொது மன்றத்தில் இருக்கும் பனை மரம்.

நூற்பாவின் (குற்றியலு . 13) நேர் பொருள் முடிந்தது !

ஆனால் இளம்பூரணர் , மேலும் சில புணர்ச்சி நுட்பங்களைக் காட்டுகிறார் ! :-

(1) கொங்கு + அத்து + உழவு = கொங்கத் துழவு (அத்து - சாரியை) (வேற்றுமைப்
                                                                                                                                புணர்ச்சி)
(கொங்கு- ஈற்று உகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம்)

கொங்கத்து உழவு  – கொங்கு நாட்டு உழவாக இருக்கலாம்.

வங்கு + அத்து + வாணிகம் = வங்கத்து வாணிகம் (அத்து - சாரியை) (வேற்றுமைப்
                                                                                                                                புணர்ச்சி)
(வங்கு- ஈற்று உகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம்)

வங்கம் – கப்பல் ; வங்கத்து வாணிகம் – கப்பல் வாணிகம் ;தமிழ் நாட்டு வாணிகம்தான் ; வங்காள தேசத்து வாணிகம் அல்ல !

(2) இளம்பூரணர் , “நிலை என்றதனான் , ஒற்றுநிலை திரியா அதிகாரத்துக்கண் இயைபு வல்லெழுத்து வீழ்க்க” என்கிறார் !  ஆனால் எடுத்துக்காட்டுகள் தரவில்லை !

இதன் பொருளை உணரச் சரசுவதிமகால் நூலகப் பதிப்பு உதவியது!

‘ஒற்றுநிலை திரியா’ என்பதற்குக் குற்றியலுகரப்புணரியல் நூற்பா 11ஐப் புரட்டவேண்டும் ! அங்கு ‘அன்’ சேர்ந்தது போல இங்கு ‘இன்’ சேர்க்கவேண்டும் !

அஃதாவது ,

புன்கு + இன் + கோடு = புன்கின் கோடு
( ‘புன்கு’ ஆனது, ‘புற்கு’ என  ஒற்றுநிலை  திரியவில்லை; ‘புன்கிற் கோடு’என அமைக்காமல், இயைபு வல்லெழுத்தை வீழ்த்தியுள்ளது !)

இயைபு வல்லெழுத்து – சந்தியாக வரும் வல்லெழுத்து.

(3) பார்ப்பு + அன் + அக்கு + கன்னி = பார்ப்பனக் கன்னி (அன் , அக்கு - சாரியைகள்)
                                                                                       (வேற்றுமைப் புணர்ச்சி)


சாரியைகளை மொழியியலார் , பொதுவாகப்  ‘ Particles ’ என்ற பிரிவில்  குறிப்பர்.

மேலே ‘அக்கு’ச் சாரியை பார்த்தோமல்லவா?

இது தொல்காப்பியர் நாளைய சாரியை !

 ‘மன்று + அக்கு + பெண்ணை = மன்றப் பெண்ணை ’ ஆனதல்லவா ? இதிலே , ‘க்கு’ எங்கே போயின ?

மண்டை காய்ந்தது பலருக்கு !

அதனால் என்ன செய்தார்கள்?

‘அக்கு’ச் சாரியை எனக் கொள்ளவேண்டாம் ; ‘அ’வை மட்டும் சாரியையாகக் கொள்ளலாமே என்று முடிவெடுத்தனர் !

அதனால்தான் , நன்னூலில் , ‘அக்கு’ இடம்பெறாமல் , அகரச் சாரியை மட்டும் (உருபுப் புணரியல் 5) இடம் பிடித்தது!

தமிழ்ப் புணர்ச்சி வரலாற்றில் (History of Tamil Morphophonemic rules) இது குறிப்பிடத் தக்கது !

தொல்காப்பியர் நாளையில் ‘அக்கு’ போட்டுத்தான் சில சொற்களை மாணவர்களுக்கு விளக்க வேண்டியிருந்தது ! தமிழ்ச் சொற்களஞ்சியம் பெருகப் பெருக அதற்குத் தேவை இல்லாது, ‘அ’வே போதும் என்ற நிலை ஏற்பட்டது !

இலக்கணத்திற்கு ஒரு பரிணாம வளர்ச்சி உண்டு என்ற மெய்ம்மை இங்கு திரளுதல் காணலாம் !

இளம்பூரணர் குறித்த வட்டைப் பார்க்க ஆசையா?
[You must be registered and logged in to see this link.]
Courtesy – history.chess.free.fr

இவைதாம்  வட்டுகள் !  ‘வட்டு’ என்பதும் , ‘வல்’ என்பதும் ஒன்றுதான் ! படத்தில் உள்ளவை தாயக்கட்டத்துக் காய்கள்தாம் ! வேறு ஒன்றுமில்லை ! கருப்பட்டி வட்டைப் படத்தில் உள்ள ஒரு வடிவில் ஒப்பிடுங்கள்!  ‘வட்டு’ விளங்கும் ! படத்தில் காணும் வடிவங்களை ஒத்த வேறு வடிவங்களிலும் ‘வல்’ அல்லது ‘வட்டு’ இருந்துளது ! படத்தில் உள்ளவை கி.பி.14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ! மண்ணால் ஆனவை !பர்மாவில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளவை; ஆர்.பொஸ்ஸி (R.Pozzi) என்பாரது சேகரிப்பு !

இளம்பூரணர் பேசிய கூகையைக் காண ஆசையா?
[You must be registered and logged in to see this link.]
Courtesy -  tolweb . org
இதுதான் கூகை ! ‘ஆக்கங் கெட்ட கூகை’ என்பார்களே, அந்தக் கூகைதான் ! கோட்டான் என்பதும் கூகை என்பதும் ஒன்றுதான் ! கோடு – கிளை ;கோட்டில் வசிப்பதால்,  ‘கோட்டான்’ ! மரக் கிளையில்தான் இது எப்போதும் வசிக்கும் !ஏனென்றால் இதற்குக் கூடு கட்டத் தெரியாது ! முட்டையைக் கூடத் தரையில்தான் இடும் ! ‘ஆந்தை’ என்பதும் இதுதான் ! இதன் விலங்கியல் பெயர் – Bubo  bengalensis ; ஆங்கிலப் பொதுப்பெயர் – Rock horned owl .பல மூடக் கதைகள் கூகையைச் சுற்றி உள்ளன! ஒரு மாநிலத்து மூடக் கதை – “ஆந்தையைச் சில நாட்கள் பட்டினி போட்டு அடித்தால் , அது மனிதன் குரலில் பேச ஆரம்பிக்கும் ! அப்போது அடித்தவனின் எதிர்காலத்தைப் புட்டு புட்டு வைக்கும் !” மூடக் கதைகளுக்கு நம் நாட்டில் பஞ்சமே இல்லையப்பா!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Sep 14, 2013 1:55 pm

நல்ல தொடர் பதிவு ...

தொல்காப்பியம் பற்றி தெரிந்து கொள்ள சிறப்பான வழிகாட்டல் பதிவு .

பகிர்வுக்கு நன்றி தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 103459460 தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 1571444738 



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 14, 2013 6:17 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (128)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘ஒன்று’ , ‘இரண்டு’ என்பன எண்ணுப் பெயர்கள் (Count nouns) !

இவற்றின் ஈற்றிலே நிற்கும் உகரம் – குற்றியலுகரம் !

ஒன்று – ஈற்று உகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம் !

இரண்டு – ஈற்று உகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம் !

இவை எப்படிப் பிற சொற்களுடன் புணரும் ?

இதற்கு ஒரு சூத்திரம் ! :-

“எண்ணுப்பெயர்க் கிளவி  உருபியல் நிலையும் !” (குற்றியலு. 14)

அஃதாவது , உருபியலில் எண்ணுப் பெயர்ச் சொற்களுக்கு என்ன புணர்ச்சி முறை கூறப்பட்டதோ அதே முறைதான் இங்கும் என்கிறார் தொல்காப்பியர் !

உருபியலில் எங்கே என்ன கூறினார் ?

உருபியல் நூற்பா 26இல்  ( “எண்ணின் இறுதி அன்னொடு சிவணும் ”) , ஒன்றுமுதல் உள்ள எண்ணுப் பெயர்கள் வேற்றுமை உருபுகளுடன் புணரும்போது ,  ‘அன்’ சாரியை பெறும் என்றார் !

அங்கு வேற்றுமை உருபுகள் புணர்ந்ததைக் கூறினார் ! இங்கு அதே ‘அன்’னுடன்
பொருட் பெயர்கள் புணர்வதைக் கூறுகிறார் !

‘அன்’ கொடுத்து இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு காட்டலாம் ! :-

ஒன்று + காயம் = ஒன்றன் காயம் (அன் – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)

ஒன்று + சுக்கு = ஒன்றன் சுக்கு (அன் – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)

ஒன்று + தோரை = ஒன்றன் தோரை (அன் – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)

ஒன்று + பயறு = ஒன்றன் பயறு (அன் – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)


இரண்டு + காயம் = இரண்டன் காயம் (அன் – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)

இரண்டு + சுக்கு = இரண்டன் சுக்கு (அன் – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)
இரண்டு + தோரை = இரண்டன் தோரை (அன் – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)

‘காயம்’ முதலான சொற்கள்  பொருள்களைத்தானே குறிக்கின்றன ? எனவேதான் இவை பெறும் புணர்ச்சிகள் , பொருட்புணர்ச்சிகள் !

இளம்பூரணர் காட்டிய ‘காயம்’ முதலான சொற்கள் யாவும் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் !  

“அப்படியானால் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்தால்தான் , ‘ஒன்று’ முதலிய குற்றியலுகர எண்ணுப் பெயர்கள் ‘அன்’ பெறுமா? – ஒரு மாணவன் நச்சினார்க்கினியரைக் கேட்டான் ! ”

அதற்கு நச்சினார்க்கினியர் , “அப்படியில்லை ! தொல்காப்பியர் வருமொழி முதல் எழுத்து பற்றிக் கூறினாரா? இல்லையல்லவா? எனவே , மெல்லின , இடையின எழுத்துகளைக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்தாலும் , ‘அன்’ சாரியை வருவது உண்டு !” என விளக்கம் தந்தார் !
நச்சினார்க்கினியர் தந்த எடுத்துக்காட்டுகள் !:-

ஒன்று + ஞாண் = ஒன்றன் ஞாண் (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

ஒன்று + நூல் = ஒன்றன் நூல் (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

ஒன்று + மணி = ஒன்றன் மணி (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

ஒன்று + யாழ் = ஒன்றன் யாழ் (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

ஒன்று + வட்டு = ஒன்றன் வட்டு (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

‘ஒன்றன் காயம்’ , ‘ஒன்றன் மணி’ என்றால் என்ன பொருள் ?

‘ஒன்றனால் கொண்ட பொருள்’ என்று நச்சினார்க்கினியர் பொருள் எழுதுகிறார் !

அஃதாவது, ஒரு குறிப்பிட்ட நாணயம் அல்லது பண்டத்தைக் கொடுத்துப் பெறும் காயம் ‘ஒன்றன் காயம்’.
காயம் – மிளகு.
நூற்பாவில் ‘நிலையும்’ என்று வந்ததல்லவா ? வினை முற்றான இது , பயனிலையாகத் தொடரில் வந்துள்ளது ! இதனால் , இம்மாதிரியான சொற்களை மொழியியலார் Predicatives
என்று குறிக்கலாயினர் (Predicate – பயனிலை) !

தொல்காப்பியர் தன் நூற்பாவில் (குற்றியலு. 14) , ‘உருபியல்’ என அவர் வகுத்த இயலின் பெயரையே குறிப்பிட்டார் பாருங்கள் !

இதிலிருந்து ?

இதிலிருந்து , அவர் ஒரு வரிசைப்படிதான் இலக்கணம் எழுதிவருகிறார் ; தான் எழுதியது என்ன , பின் எழுதுவது என்ன என்ற திட்டத்தோடுதான் செல்கிறார் என்பது புலனாகிறது அல்லவா ?

தொல்காப்பிய அமைப்புமுறை (Structure of Tholkappiyam) ஆய்வில் இது குறிப்பிடத் தக்கது !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Sep 14, 2013 9:25 pm

தெளிவான தொல்காப்பிய விளக்கம்...
தொடருங்கள் ஐயா!



உங்கள் யாழ்பாவாணன்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Sep 17, 2013 8:59 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (129)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

மென்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள் சில ‘அக்கு’ச் சாரியை பெறுவதையும் (‘குன்றக் கூகை’ , குற்றியலு. 13) , சில ‘அன்’ சாரியை பெறுவதையும் ( ‘ஒன்றன் காலம்’ , குற்றியலு. 14) முன் கட்டுரைகளில்  ஆய்ந்தோம் !

சில மென்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள் , ‘இன்’ சாரியை பெறுதலை அடுத்துக் கூறுகிறார் தொல்காப்பியர் ! :-

“வண்டு பெண்டு மின்னொடு சிவணும்” (குற்றியலு. 15)

இதற்கு இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகள் !:-

வண்டு + கால் = வண்டின் சாரியை (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(வண்டு – ஈற்று உகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம்)
பெண்டு + கால் = பெண்டின் கால் (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பெண்டு – ஈற்று உகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம்)
‘வண்டின் கால்’ என்றால் வண்டது கால்தானே ? அப்போது ‘இன்’ என்பது வேற்றுமை உருபு ஆகாதா ?
நல்ல கேள்வி !
இங்கு ‘இன்’ வேற்றுமை உருபா சாரியையா என்பதை அறிய ஒரு சூட்சுமம் உள்ளது !
அஃதாவது , ‘அது’ எனும் ஒரு வேற்றுமை உருபை எடுத்துக்கொள்ளுங்கள் ! ‘வண்டினது கால்’ ஆகும் ; பொருளிலும் குழப்பமில்லை ! ‘அது’ எனும் வேற்றுமை உருபை ‘இன்’ ஏற்றுள்ளதால் , அந்த ‘இன்’னானது சாரியைதான் என முடிவுகட்டுங்கள் ! அந்த ‘இன்’ உருபாக இருந்தால் , இன்னொரு வேற்றுமை உருபை ( ‘அது’வை)  ஏற்காதல்லவா?

‘அவரின் பண்புகள்’ – இங்கே ‘இன்’ வேற்றுமை உருபு ! சாரியை அல்ல ! ஏனெனில் , ‘அவரினது பண்புகள்’ என வராது !

‘பெண்டு’ என்பது ‘இன்’ சாரியை பெறும் ; ஆனால் , இது ‘அன்’ சாரியையும் பெறும்  என அடுத்துக் கூறவருகிறார் தொல்காப்பியர் ! :-

“பெண்டென் கிளவிக் கன்னும் வரையார்”  (குற்றியலு. 16)

அஃதாவது ,  பெண்டு + கை = பெண்டன் கை (அன் - சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
மேல் நூற்பாவில் ‘அன்’னும் என்பதிலுள்ள உம்மை எச்ச உம்மை !
‘உம்’மையை , மொழியியலில் ‘Particles’ என்ற பிரிவில் பேசுவர் !
‘பெண்டென் கிளவி’ – என நூற்பாவில் வந்ததல்லவா ?
இதிலுள்ள  ‘என்’னை ‘Referential Particle’ என்று மொழியியலில் குறிப்பர் ! தமிழ் மரபிலக்கணத்தில் ‘என்ற எனும் பொருளில் வரும் ஓர் இடைச் சொல்’ !
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 20, 2013 10:27 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (130)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

யாது – நெடில்தொடர்க் குற்றியலுகரம் !
அஃது – ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் !
- இரண்டும் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களுடன் எப்படிப் புணருமாம் ?

தொல்காப்பியம் கூறுகிறது !:-

“யாதெ னிறுதியுஞ் சுட்டு முதலாகிய
ஆய்த விறுதியு முருபிய  னிலையும்”  (குற்றியலு. 17)

‘யாதென் இறுதியும்’ – ‘யாது’ எனும் குற்றியலுகர ஈற்றுச் சொல்லும் ,

‘சுட்டு முதலாகிய ஆய்த இறுதியும்’ – ‘அஃது’ என்ற ஆய்தத் தொடர்க் குற்றியலுகரச் சொல்லும் ,

‘உருபியல் நிலையும்’ – உருபியலில் (குற்றியலு. 26) கூறியபடி , ‘அன்’ சாரியை பெறும் !

இந் நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் தந்த எடுத்துக்காட்டுகள் ! :-

யாது + கோடு = யாதன் கோடு (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

யாது + செவி = யாதன் செவி  (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

யாது + தலை = யாதன் தலை  (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

யாது + புறம் = யாதன் புறம்  (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

அஃது + கோடு = அஃதன் கோடு ×
    = அஃது கோடு ×
   = அதன் கோடு √ (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
அஃது + செவி = அதன் செவி √    (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
அஃது + தலை  = அதன் தலை √    (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
அஃது + புறம் = அதன் புறம் √    (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

இஃது + கோடு = இதன் கோடு √ (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
இஃது + செவி = இதன் செவி √    (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
இஃது + தலை  = இதன் தலை √    (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
இஃது + புறம் = இதன் புறம் √    (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

உஃது + கோடு = உதன் கோடு √ (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
உஃது + செவி = உதன் செவி √    (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
உஃது + தலை  = உதன் தலை √    (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
உஃது + புறம் = உதன் புறம் √    (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

இத் தொல்காப்பிய நூற்பா (குற்றியலு. 17) ஆழ்ந்து எண்ணற் குரியது !

‘அதன்’ என்ற சொல்லைப் பார்த்த மாத்திரத்தில் அதற்குள் ‘அஃது’ இருப்பதை ஊகிக்க முடியாது ! தொல்காப்பியர் காலத்திற்குப் போனால்தான் உண்மை தெரிய வருகிறது !

‘அது’ என்ற சொல் இருக்கும்போது ‘அஃது’ ஏன் வருகிறது ?

புணர்ச்சிதான் காரணம் !
  ‘அது + ஆவது = அதுவாவது ’ என வந்தால் ஒரு உடம்படு மெய் வருகிறது ! உடம்படுமெய்யைத் தவிர்க்க ,  ஆய்தத்தைப் போட்டு ‘அஃதாவது’ ஆகிக்கொள்கிறது ! ‘அது’ எனும் முற்றியலுகரச் சொல் தன்னைக் குற்றியலுகரச் சொல்லாக –  ‘அஃது’வாக – ஆக்கிக் கொண்டால்தான்  இப் புணர்ச்சி சாத்தியமாகும் ! திருக்குறளில் ‘அஃதொருவன்’ என்று வருகிறதல்லவா? இதை ‘அதுவொருவன்’ என மாற்றிப் பாருங்கள் ! வெண்பாவிற்குரிய ஓசையே கவிழ்ந்துவிடும் ! எனவே புணர்ச்சி நோக்கில்தான் ‘அது’ , ‘அஃது’வாக மாறுகிறது என்பது புலனாகிறது !
‘அதன்’ என்ற சொல்லில்  , ‘அன்’ என்பது வேற்றுமை உருபு போலத் தோன்றலாம் ! ஆனால் தொல்காப்பியர்  அந்த ‘அன்’ என்பது , சாரியைதான் என்று தெளிவாக்கியுள்ளார் !

சாரியையை மொழியியலில்  ‘Augment ’என்றும் எழுதுவர் .
யாது – Interrogative pronoun .
‘யாது’ என்பதில் , யா – Proclitic எனப்படும்.
Clitic என்பதைப்  ‘பிந்து ஒட்டு ’ என்பர் !
 ‘வந்ததுவோ’ – என்பதில் ‘அது’ , விகுதி ; ஓ , ‘பிந்து ஒட்டு’ ; சொல்லின் ஈற்றில் வந்துள்ளதால் , இது Enclitic எனப்படும்!

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 21, 2013 4:43 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (131)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

அஃது , இஃது, உஃது – சுட்டுப் பெயர்கள் ! ஆய்தத் தொடர்க் குற்றியலுகரத்தை ஈற்றிலே கொண்ட  சொற்கள் !

இவற்றின்  வேற்றுமைப் புணர்சிகளை முன் கட்டுரையில் பார்த்தோம் !

அல்வழிப் புணர்ச்சியில் இவை எப்படிப் புணரும் ?

தொல்காப்பியர் விடை கூறுகிறார் ! :-

“முன்னுயிர் வருமிடத்  தாய்தப்  புள்ளி
மன்னல் வேண்டு மல்வழி யான”      (குற்றியலு .18)

‘முன்னுயிர் வருமிடத்து’  - புணர்வதற்கு வரும் சொல்லின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் ,

‘ஆய்தப் புள்ளி மன்னல் வேண்டும்’  - அஃது, இஃது, உஃது ஆகிய சொற்களின் இடையே உள்ள ஆஃத எழுத்து கெடாது நிற்க வேண்டும் ;
‘அல்வழி யான’ – அல்வழிப் புணர்ச்சியில் !
ஆய்த எழுத்தை , ‘ஆய்தப் புள்ளி’ என்று தொல்காப்பியர் எழுதினார் பாருங்கள் ! ‘புள்ளி’ என்ற சொல் தொல்காப்பியர் நாளையில் எழுத்தையும் குறித்திருக்கிறது !
ஆய்தப் புள்ளி – இருபெயரொட்டுப் பண்புத் தொகை  ;  ஆய்தமாகிய புள்ளி என விரியுங்கள் , உங்களுக்கு விளங்கும் !

நச்சினார்க்கினியர் இதற்குத் தரும் எடுத்துக்காட்டுகளை வருமாறு விரித்தெழுதலாம் ! :-

அஃது + அடை = அதனடை ×
  = அஃதடை √ (அல்வழிப் புணர்ச்சி)

அஃது + ஆடை = அஃதாடை √ (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + இலை = அஃதிலை √ (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + ஈயம் = அஃதீயம் √         (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + உரம் = அஃதுரம் √ (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + ஊர்தி = அஃதூர்தி √ (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + எழு = அஃதெழு √ (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + ஏணி = அஃதேணி √ (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + ஐயம் = அஃதையம் √ (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + ஒடுக்கம் = அஃதொடுக்கம் √ (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + ஓக்கம் = அஃதோக்கம் √ (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + ஔவியம் = அஃதௌவியம் √ (அல்வழிப் புணர்ச்சி)

எழு – தூண் ; ஓக்கம் – உயரம் ; ஔவியம் – வஞ்சகம் (fraud) .

‘அஃது’ என்ற ஆய்தத் தொடர்க் குற்றியலுகரச் சொல், அ முதல் ஔ வரையான 12 உயிர் எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்களுடன் வந்து புணர்ந்த முறையை மேலே பார்த்தோம் !

     சிறு வயதில் நாம் படித்த ‘அணில் , ஆமை’ப் பாடம் நமக்கு நினைவுக்கு வரவேண்டும் !

     ‘ஔ’வை முதலாகக் கொண்ட சொல்லுக்கு நச்சினார்க்கினியர் தந்த எடுத்துக்காட்டைப் பார்த்தீர்களா? – ஔவியம் !

       ‘அவ்வியம்’ என  இதனை எழுதக் கூடாது என்பது நச்சினார்க்கினியரின் ஆணை !

    ‘ஔ’வும் ‘அவ்’வும் ஒன்றல்ல !

      ‘ஔ’வை உச்சரித்துப் பாருங்கள் ; உங்கள் அழகிய இதழ்கள் எப்படி அமைகின்றன? பிறகு ‘அவ்’ என்று சொல்லிப்பாருங்கள் ; இதழ் அமைவது வேறுமாதிரியாக இருக்கும் ! ஒலிப்பு முறையிலேயே வேறுபாடு இருக்கும்போது ‘ஔ’வை ‘அவ்’வென்று எழுதலாமா? நுண்ணிய ஒலி நுட்பத்தைத்  தமிழ் உலகுக்கு அறிவித்திருக்கும்போது , ‘அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது’ என்று சொல்லப் போகிறீர்களா?

‘அஃது’ புணர்ந்ததை மேலே பார்த்தோம் ! அதே முறையில் ‘இஃது’ ,‘ உஃது’ புணர்வதைக் கீழே கண்போம் ! : -

    இஃது + அடை = இதனடை ×
  = இஃதடை √ (அல்வழிப் புணர்ச்சி)

இஃது + ஆடை = இஃதாடை √ (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + இலை = இஃதிலை √ (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + ஈயம் = இஃதீயம் √         (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + உரம் = இஃதுரம் √ (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + ஊர்தி = இஃதூர்தி √ (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + எழு = இஃதெழு √ (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + ஏணி = இஃதேணி √ (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + ஐயம் = இஃதையம் √ (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + ஒடுக்கம் = இஃதொடுக்கம் √ (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + ஓக்கம் = இஃதோக்கம் √ (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + ஔவியம் = இஃதௌவியம் √ (அல்வழிப் புணர்ச்சி)

உஃது + அடை = உதனடை ×
  = உஃதடை √ (அல்வழிப் புணர்ச்சி)

உஃது + ஆடை = உஃதாடை √ (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + இலை = உஃதிலை √ (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + ஈயம் = உஃதீயம் √         (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + உரம் = உஃதுரம் √ (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + ஊர்தி = உஃதூர்தி √ (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + எழு = உஃதெழு √ (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + ஏணி = உஃதேணி √ (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + ஐயம் = உஃதையம் √ (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + ஒடுக்கம் = உஃதொடுக்கம் √ (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + ஓக்கம் = உஃதோக்கம் √ (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + ஔவியம் = உஃதௌவியம் √ (அல்வழிப் புணர்ச்சி)

மேல் நூற்பாவுக்கு இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் ஒரு விதி விலக்கைத் தருகிறார்கள் !

  உயிர் எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வந்து புணரும்போது , அல்வழிப் புணர்ச்சியில் மட்டுமல்லாது , வேற்றுமைப் புணர்ச்சியிலும், சிலபோது ,அஃது , இஃது , உஃது ஆகியவற்றின் நடுவே உள்ள ஆய்தம் கெடாது நிற்கும் ! – இதுதான் அந்த உரையாசிரியர்கள் தரும் விதிவிலக்கு !
இதற்கு நச்சினார்க்கினியர் தரும் சான்றுகளை வருமாறு தரலாம் ! :-

அஃது + அடைவு = அதனடைவு ×
= அஃதடைவு √ (வேற்றுமைப் புணர்ச்சி)
அஃது + ஒட்டம் = அஃதொட்டம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

இஃது + அடைவு = இஃதடைவு √ (வேற்றுமைப் புணர்ச்சி)
இஃது + ஒட்டம் = இஃதொட்டம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

உஃது + அடைவு = உஃதடைவு √ (வேற்றுமைப் புணர்ச்சி)
உஃது + ஒட்டம் = உஃதொட்டம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

அஃதடைவு(இரண்டாம் வேற்றுமைத் தொகை) – அதனை அடைதல் .
அஃதொட்டம் (இரண்டாம் வேற்றுமைத் தொகை) – அதனை ஒட்டுதல் .

    ஒட்டுதல் - பந்தையப் பொருளாக வைத்தல் . 1950 களில் இச்சொல் வழக்கில் இருந்தது ! இன்று அருஞ்சொல்லாகிவிட்டது !நாங்கள் விளையாடியபோது ‘நான் பத்துத் தீப்பெட்டிப் படம் ஒட்டியுள்ளேன்; நீ எவ்வளவு ஒட்டுகிறாய் ?’ என்று கேட்டது என் நினைவுக்கு வருகிறது ! தீப்பெட்டிப் படம்தான் பந்தயப் பொருள் !

நூற்பா இறுதியில் ,  ‘அல்வழி யான’ என்று இரு சீர்கள் வந்ததைப் பாருங்கள் !  

‘அல்வழிக்கு’ என வரவேண்டியதுதான் ‘அல்வழியான’ என்று வந்துள்ளது !

அஃதவது , ‘கு’ என்ற நான்காம் வேற்றுமை உருபு வரவேண்டிய இடத்தில் , ‘ஆன்’ எனும் மூன்றாம் வேற்றுமை உருபு வந்துள்ளது ! இதுதான் ‘வேற்றுமை மயக்கம்’ (Antiptosis)!

‘ஆன’ என்ற சீரை , ‘ஆன் + அ’ எனப் பிரிக்க வேண்டும் !
‘ஆன்’ என்பதற்கு விளக்கம் மேலே பார்த்துவிட்டோம் !
ஈற்று  ‘அ’ ?

ஈற்று ‘அ’வைச் சாரியை எனல் வேண்டும் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 21, 2013 9:23 pm

விளக்கங்கள் அருமை ஐயா புன்னகை



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 22, 2013 10:00 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (132)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

அஃது , இஃது , உஃது – ஆகிய சொற்கள் , அல்வழிப் புணர்ச்சியில் , ஆய்தத்தை இழக்காமல் புணரும் என்பதை முன் கட்டுரையில் பார்த்தோம் !

நாம் பார்த்த எடுத்துக்காட்டுகள் , உயிரெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் ( ‘அடை’முதலானவை) வந்து புணர்ந்ததற்கே !

அப்படியனால் , மெல்லின , இடையின , வல்லின எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்தால் ?

தொல்காப்பியரின் விடை ! :-

“ஏனைமுன்  வரினே  தானிலை  யின்றே” (குற்றியலு.19)

‘ஏனைமுன் வரினே’ – உயிர் எழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் தவிர , ஏனைய , மெல்லின , இடையின , வல்லின எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்தால் ?

‘தான் நிலையின்றே’ – அஃது ,இஃது , உஃது ஆகியவற்றின் இடையிலே உள்ள ஆய்தம் நிலைக்காது !

இதற்கு இளம்பூரணர் காட்டிய எடுத்துக்காட்டுகளை வருமாறு பட்டியலிடலாம் ! :-

அஃது + கடிது = அது கடிது (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + சிறிது = அது சிறிது (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + தீது = அது தீது (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + பெரிது = அது பெரிது (அல்வழிப் புணர்ச்சி)

மேல் நான்கும் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்ததற்குச் சான்றுகள் ! கீழே , மெல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்வதற்குச் சான்றுகள் !:-
அஃது + ஞான்றது = அது ஞான்றது (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + நீண்டது = அது நீண்டது (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + மாண்டது = அது மாண்டது (அல்வழிப் புணர்ச்சி)

இனி , இடையெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்வதற்குச் சான்றுகள் !:-

அஃது + யாது = அது யாது (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + வலிது = அது வலிது (அல்வழிப் புணர்ச்சி)

மேல் ஒன்பது சான்றுகள் ‘அஃது’க்கு வந்தது போல ‘இஃது’க்கும் , ‘உஃது’க்கும் வருமாறு முறையே காட்டியுள்ளார் இளம்பூரணர் ! : -

இஃது + கடிது = இது கடிது (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + சிறிது = இது சிறிது (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + தீது = இது தீது (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + பெரிது = இது பெரிது (அல்வழிப் புணர்ச்சி)

இஃது + ஞான்றது = இது ஞான்றது (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + நீண்டது = இது நீண்டது (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + மாண்டது = இது மாண்டது (அல்வழிப் புணர்ச்சி)

இஃது + யாது = இது யாது (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + வலிது = இது வலிது (அல்வழிப் புணர்ச்சி)

உஃது + கடிது = உது கடிது (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + சிறிது = உது சிறிது (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + தீது = உது தீது (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + பெரிது = உது பெரிது (அல்வழிப் புணர்ச்சி)

உஃது + ஞான்றது = உது ஞான்றது (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + நீண்டது = உது நீண்டது (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + மாண்டது = உது மாண்டது (அல்வழிப் புணர்ச்சி)

உஃது + யாது = உது யாது (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + வலிது = உது வலிது (அல்வழிப் புணர்ச்சி)

உஃது – இந்த வடிவம் இப்போது இல்லை !
தொல்காப்பியம் மிகப் பழமையான நூல் என்பதற்கு இதுவே சான்று ! ‘அஃது’ம் ‘இஃது’ம் இறக்கும் தருவாயில் மருத்துவ மனையில் உள்ளன ! நம் கண் முன்னே பழஞ் சொற்கள் மறைவதைப் பார்த்தீர்களா ?

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 18 of 84 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 51 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக