புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10 
306 Posts - 42%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10 
6 Posts - 1%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10 
4 Posts - 1%
manikavi
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 3 of 84 Previous  1, 2, 3, 4 ... 43 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jan 23, 2013 10:24 pm



தொடத் தொடத் தொல்காப்பியம் (16)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33


“வினைபயன் மெய்யுரு என்ற நான்கே
வகைபெற வந்த உவமத் தோற்றம் ” (உவமவியல் 1)

-இதில்,தொல்காப்பியர் ,உவமைகள் தோன்றுவதற்குரிய நான்கு வகைகளைக் குறிக்கிறார்.அந் நான்கு வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம்:-

1.வினை - ‘அவள் குயில்போலப் பாடுகிறாள்’

2. பயன் - ‘கணினி போலப் புள்ளி விவரங்களை வைத்திருக்கிறானே’

3.மெய் - ‘நெல்லி இலைபோல நெடுக வளர்ந்த சாமி’

4. உரு - ‘நறுக்கிய மாம்பழம் போலச் சிவந்த பொண்ணு’


1.‘வினை’ என்பது செயலைக் குறிக்கும். ‘அவர் பேச்சு மடை திறந்த வெள்ளம்போல இருக்கும்’-என்பதில் வெள்ளத்தின் செயலும்(விரைவும்) பேச்சின் செயலும் ஒப்பிடப்படுகின்றன; அதனால் இந்த உவமை, ‘வினை உவமை’.

2. ‘பயன்’ என்பது ஏதாவது ஒன்று தரும் பயனைஅல்லது சிறப்பை ஒப்பிடுவது. ‘எம் .கே.டி. குரல் தங்கக் குரல்!’- என்பதில் தங்கத்தின் சிறப்பு அவரது குரலுக்கு ஒப்பிடப்படுகிறது.

3.‘மெய்’ என்பது உடலைக் குறிக்காது! மெய் = வடிவம் (shape).

‘பையனுக்கு என்னா சட்டை போட்டிருக்கிறே? சர்க்கஸ் கோமாளி மாதிரி!’- இதில்
இருவரது உடைகளும் வடிவத்தில் ஒப்பிடப்படுகின்றன.

4. ‘உரு’ என்பது உருவத்தைக் குறிக்காது! உரு = நிறம் (colour).

‘வாடாமல்லி நிறத்தில் சேலை வாங்கினாள்!’- இதில்,பூவின் நிறமும் சேலை
நிறமும் ஒப்பிடப்படுகின்றன.

மேலை நூற்பாவின் சிறப்பு யாதெனில், இந்த நான்கு அடிப்படைகளில் அல்லாது ,உவமை தோன்றுவதற்கென ,வேறொரு அடிப்படையை நம்மால் சொல்லமுடியாது! நீங்கள் ஏதாவது ஓர் உவமையைச் சொல்லிப்பாருங்கள்;அது இந்த நான்கினுக்குள்ளே அடங்குவதாகத்தான் இருக்கும்!

தொல்காப்பியர் ,‘போல’, ‘புரைய’,‘ஒப்ப’ முதலிய பல உவம உருபுகளைத் தந்துள்ளார்;இன்னும் பலவற்றைச் சேர்த்துக்கொள்ளவும் இடம் வைத்துள்ளார்.எனவே ,‘மாதிரி’, ‘கணக்கா’ முதலிய வழக்காட்சி உவம உருபுகளையும் நாம் கொள்ளலாம்.

* ** *
[b]



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
THIYAAGOOHOOL
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013

PostTHIYAAGOOHOOL Thu Jan 24, 2013 8:25 pm

தமிழ் களஞ்சியம் என்பது இது போன்ற பதிவுகளில் அறிய முடிகிறது. நன்றி அய்யா. தொடருங்கள். தொடர் 16 இரண்டு முறை இடம் பெற்றுள்ளது.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 24, 2013 9:09 pm



[b] தொடத் தொடத் தொல்காப்பியம் (17)


- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல்
செய்யென் கிளவி ஆகிடன் உடைத்தே” (எச்சவியல் 54)

- இந்நூற்பாவில் , ‘செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல்’
என்றாரல்லவா? இந்த வினைச் சொல் வடிவத்தினைப் பயன்படுத்திய சில தொடர்களைக் காண்போம்:-

1.எதற்கும் இணங்கமாட்டாய் !

2.நீ போகமாட்டாய் அப்படித்தானே?

3.பாடச் சொன்னால் பாடமாட்டாய்!

4. கேட்கும்போது தரமாட்டாய் !


இவற்றில் வந்துள்ள வினைகள் ‘செய்யாய்’ எனும் முன்னிலைகளே.பொருள் – எதிர்மறைப் பொருளே.

ஆனால் உடன்பாட்டுப் பொருளிலும் ‘செய்யாய்’ எனும் வினை வரும் என்று விளக்குகிறார் தொல்காப்பியர்.

1. ‘நீ எனக்கு அருளாய் ஆண்டவனே’ – இத்தொடரில் ‘அருளாய்’ என்ற சொல் உடன்பாட்டுப் பொருளில்தான் வந்துள்ளது; ‘நீ எனக்கு அருள்க ஆண்டவனே’ என்பதே பொருள்.

2. ‘வாராய் நீ வாராய்’ – இத் தொடருக்கு ‘வருக நீ வருக’ என்பதே பொருள்;உடன்பாட்டுப் பொருள்தான் இதிலும் உள்ளது.

3. ‘போதாய் நீயே’- எனில் ‘போவாய் நீயே’ என்பதே பொருள்; பொருள் – உடன்பாட்டுப் பொருள்.

மேலை முன்னிலை வினைகளோடு ‘பிள்ளாய்’, ‘தங்காய்’ என்பவற்றைச் சேர்த்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது! இவைகள் முன்னிலை வினைகள் அல்ல ! விளியேற்ற பெயர்கள்! :-

பிள்ளாய் != பிள்ளையே!

தங்காய் ! = தங்கையே !


‘நல்ல தங்காள்’ என்பதிலுள்ள ‘தங்காள்’?

இது விளிப்பெயர் அல்ல!

தங்காள் = தங்கை

‘மக்காள்’?

‘மக்காள்’ = மக்களே ; விளிப்பெயர்.

இத்தகைய நுணுக்கங்களையெல்லம் நாம் காணுவதற்கு ஆதாரம் தொல்காப்பியம்தானே?
* * *




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 24, 2013 9:31 pm

கருத்து வழங்கிய ச.சந்திரசேகரன்,யினியவன்,த்யகூஹூல் ஆகியோர்க்கு நன்றி! நன்றி!

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Jan 25, 2013 9:01 am

Dr.S.Soundarapandian wrote: தொடத் தொடத் தொல்காப்பியம் (16)
உவமைகள் விளக்கம் மிக நன்று.
"வாழைப்பழத்தை உரித்து வாயில் வைப்பது போல் உங்களின் தொல்காப்பிய விளக்கங்கள் உள்ளன " - இந்த உவமை நான்கில் எதில் சேரும்? விளக்கம் தர வேண்டுகிறேன்.
Dr.S.Soundarapandian wrote:

தொடத் தொடத் தொல்காப்பியம் (17)
பாவாய் - விளியேற்றப்பெயர்
சரிதானே ஐயா.




[You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jan 25, 2013 11:23 am

THIYAAGOOHOOL wrote:தமிழ் களஞ்சியம் என்பது இது போன்ற பதிவுகளில் அறிய முடிகிறது. நன்றி அய்யா. தொடருங்கள். தொடர் 16 இரண்டு முறை இடம் பெற்றுள்ளது.
நன்றி தொடருங்கள் நண்பரே ,உங்களை போன்றோரின் ஊக்கங்கள் தான் சான்றோர்களின் பங்களிப்பை இன்னும் அதிகரிக்கும்
(நான் வெறும் அரட்டை குருப் தான் சோகம் )

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Jan 25, 2013 11:39 am

அருமையான பதிப்பு. சேவையும் கூட. வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

[You must be registered and logged in to see this link.]
மனிதம் வாழ வாழு
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 25, 2013 1:07 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (18)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“எவ்வயின் பெயரும் வெளிப்படத் தோன்றி
அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப” (வேற்றுமையியல் 7)

- இந் நூற்பாவிற்கு முன் இரு நூற்பாக்களில் , தனிப் பெயரையும், தொகைப் பெயரையும் எழுவாய்’ என அறிமுகப்படுத்தினார்.

அது, இது,அவள்,அவர்கள் – தனிப் பெயர்கள்

நரிப் பல், ஆட்டு வால் , யானத் தந்தம் – தொகைப் பெயர்கள்


இப் பெயர்களை எழுவாயாக அமைத்துத் தொடர்களை எழுதும்போது ,இவைகளைத் தனியாக எடுத்துப் பார்த்தாலும் எழுவாய் இலக்கணத்திற்கு உட்பட்டே நிற்கவேண்டும்! இதுவே ‘செவ்விது’ என்கிறார் தொல்காப்பியர்!

1. ‘அது வந்தது’ –இதிலுள்ள ‘அது’ என்ற எழுவாய் ,எழுவாய்க்குரிய ‘வேற்றுமை ஏற்கவேண்டும்’என்ற விதிக்கு உட்பட்டு , ‘அதனை’ , ‘அதற்கு’ என்றெல்லாம் ,தனியே (‘வெளிப்படத் தோன்றி’)வேற்றுமை வேர்றுமை ஏற்கும்!

2. ‘அவர்கள் வந்தார்கள்’ –இதிலுள்ள ‘அவர்கள்’ என்ற எழுவாய், ‘அவர்களை’, ‘அவர்களுக்கு’ என்றெல்லாம் தனியாக நின்று வேற்றுமை ஏற்கும்!

3. ‘நரிப்பல் அரியது’- இதிலுள்ள எழுவாயான ‘நரிப்பல்’ தனியே ‘நரிப்பல்லை’,‘நரிப்பல்லுக்கு’ என்றெல்லாம் வேற்றுமை ஏற்கும்!

மேல் மூன்று எடுத்துக்காட்டுக்களிலும் எழுவாய் பயின்றது ‘செவ்விது’!

ஈகரை படித்தேன்’ –இதில் ‘நான்’ என்ற எழுவாய் மறைந்து வருகிறது! இது செவிக்கு வந்தாலும் ,கருத்துக்குப் புலப்படுகிறது! இங்கே ‘நான்’ என்பதும், எழுவாய் இலக்கணப்படி ,தனியே, வேற்றுமை எற்கும்:-

நான் + ஐ = என்னை (நான் - என் + ஐ = என்னை )

நான் +கு = எனக்கு (நான் - என் + கு = எனக்கு)

நான் + ஆல் = என்னால் (நான்- என் +ஆல் = என்னால்)

எனவே தோன்றா எழுவாயும் ‘செவ்விது’!

தோன்றா எழுவாய் செவ்விது அல்ல எனச் சிலர் கூறுவர்! தோன்றா எழுவாயை ஒதுக்கினால் தமிழின் கட்டமைப்பே போய்விடும்! தொடர்களை நம் விருப்பப்படிக் கையாளமுடியாது!

இங்கே நமக்கு ஓர் ஐயம் எழுகிறது ! - ‘எல்லா எழுவாயுமே தனிநிலையில் வேற்றுமை ஏற்கத்தானே செய்யும்?’

இதற்கு விடை தருகிறார் இளம்பூரணர் !

சில எழுவாய்களை வேற்றுமைப்படுத்த முடியாது என்கிறார் அவர்!

‘நீயிர் +ஐ = நீயிரை ’ என வராது என்கிறார் அவர்.

‘நீயிர்’ என்பதே ‘நும்’மிலிருந்து வந்ததாகையால் ,வேறொரு திரிபை அது ஏற்காது என்பது அவர் கருத்து .

* * *.



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 26, 2013 10:31 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (19)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுள் பயின்றவை நாடுங் காலை” (அகத்திணையியல் 3)

- இதில் கூறப்பட்டுள்ள ,

முதல் – நிலம் , பொழுது முதலியன.

கரு – பறவை , உணவு முதலியன.

உரி – ஊடல் ,புணர்தல் முதலியன .

இந்த மூன்றும் ‘முறைசிறந்தனவே’ என்று தொல்காப்பியர் கூறுவதால், ‘முதலைவிடக் கரு சிறந்தது ,கருவைவிட உரி சிறந்தது ’என்று ஆகிறது.

எதைவைத்து இப்படிச் சொல்கிறீர்கள்?- என்று தொல்காப்பியரிடம் கேட்டால் , “பாடல்களை வைத்துச் சொல்கிறேன் !” என்கிறார்.

‘பாடலுள் பயின்றவை நாடுங் காலை’ என்பதற்கு இதுதானே பொருள்?

தொல்காப்பியருக்கு முன்பே பல அக நூற்கள் இருந்தன என்பதற்கு இந்த இடம் சான்று!

அகப் பாடல்களை எடுத்துக்கொண்டால்,அதற்கு உயிர் நாடி எது?

பாடல் யார் குரலாக வருகிறதோ அவரின் மன எழுச்சிதான் உயிர் நாடி!

அம் மன எழுச்சிதான் உரிப்பொருள் !

பல்வேறு வட்டார மக்களின் சிறப்பான மன எழுச்சிகளை யெல்லாம் தொகுத்து வகுத்தால் , ஊடல் , பிரிதல் , புணர்தல் , இரங்கல் , இருத்தல் என்ற ஐந்திற்குள் அவை அடங்கிவிடுகின்றன !

அஃதாவது,

முதற் பொருள் – எல்லோர்க்கும் பொது ; அடிப்படை (முதல்)

கருப் பொருள் – எல்லோர்க்கும் பொது (solid substances)

உரிப்பொருள் – குறிப்பிட்ட அந்தத் தலைவன் தலைவியருக்கு என்று தனியாக அமைந்த (உரிமை பூண்ட) ,பொருள் (matter of concern) .

ஆகவே, ‘உரிப்பொருள் ’ என்றால் என்னவோ ஏதோ என்று நினைத்துவிடாநீர்கள்!

“சரி ! குறிஞ்சி நிலத்தின் உரிப்பொருள் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் என்கிறார்கள்! அப்படியானால் மற்ற நிலத்தவர்கள் புணரமாட்டார்களா? ” –உங்கள் வினா!

நல்ல கேள்வி!

மலையும் மலை சார்ந்த இடமும் கொண்ட அந்த மலைப்பாங்கான நிலத்தில் பல்வேறு மன எழுச்சிச் செயல்கள் நடக்கும்தான்! ஆனால் புலவனைப் பாடத்தூண்டும் மன எழுச்சி , குறிஞ்சியைப் பொறுத்தவரை,புணர்தலும் அதனைச் சார்ந்தவைகளுமே!

தலைவியைப் பிரிந்துபோகும் தலைவன் பாலை நிலத்தின் வழியே போவது ,பிற நிலத்து வழியே போவதினும் குறிப்பிடத் தக்கதுதானே? எனவேதான் பாலையின் உரிப்பொருள் ‘பிரிதலும் பிரிதல் நிமித்தமும்’ என்றனர்!

இதனைப்போலவே, பிற நிலங்களின் உரிப்பொருள்களும் சிறப்பு கருதியே வகுக்கப்பட்டுள்ளன!
விடை கிடைத்ததா?

* * *.



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 27, 2013 9:40 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (20)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

‘செல்வி படிக்க விரும்புகிறாள்’ – இத் தொடரின்படிப், படிக்க விரும்பியது செல்வியா? அவளுடைய தாயா?

‘செல்வி ,தான் படிக்க விரும்புகிறாள்’ – என்றும் பொருள் கொள்ள முடிகிறது;செல்வி படிக்கவேண்டுமென்று அவளின் தாய்தான் விரும்புகிறாள் எனவும் பொருள் கொள்ள முடிகிறதே?

எது சரி?

தொல்காப்பியரிடம் கேட்டால் ,“ இரண்டுமே சரிதான் ” என்கிறார் ! :-


“இதுசெயல் வேண்டும் என்னும் கிளவி
இருவயின் நிலையும் பொருட்டா கும்மே
தன்பா லானும் பிறன்பா லானும் ” (வினையியல் 46)

‘இதுசெயல் வேண்டும் என்னும் கிளவி’ – ‘படிக்க வேண்டும்’ , ‘படிக்க விரும்புகிறார்’ என்பன போன்ற சொற்கள். ‘தன்பாலானும் பிறன்பாலானும்’- கூறுவோன் கூற்றாகவும், வேறொருவன் கூற்றாகவும் .

மேற்கண்டவாறு இரு வகைகளிற் பொருள் கொள்ள இடந்தந்த இலக்கண நுட்பத்தை விளக்குகிறார் நச்சினார்க்கினியர்!

அவர் கருத்துப்படி,

1. ‘செல்வி ’ எனும் எழுவாய் ,நேரே சென்று ‘விரும்புகிறாள்’ என்ற பயனிலை கொள்வதால் – தன்வினைப் பொருள் ஏற்படுகிறது.

2. ‘செல்வி ’ எனும் எழுவாயோடு படித்தல் எனும் தொழிற்பெயர் சேர்ந்துகொண்டு, அதன்பிறகு ‘விரும்புகிறாள்’ என்ற பயனிலை கொள்வதால் –பிறவினைப் பொருள் ஏற்படுகிறது.

இவ்வாறு தமிழில் சில சிக்கலான இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன!

தமிழில் மட்டுமல்ல! உலகத்து எல்லா மொழிகளிலும் இதுபோன்ற சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன!

ஏன் ?

ஏனெனில், மொழி என்பது பல்வேறு காலக்கட்டங்களில் ,பல்வேறு உணர்ச்சி அடிப்படைகளில் மொழியப்படுவதாகும்! யாரும் உட்கார்ந்து ஆலோசித்து , “ நான் இந்த மொழியை உருவாக்கிவிட்டேன்; நாளைக் காளை பத்து மணிக்கு இதனை வெளியிடுகிறேன்! ” என்று கூறமுடியாது!எனவேதான் எந்த மொழியிலும் சிறு சிறு இடைவெளிகள் இருக்கும் என்று கூறமுடிகிறது !



* * *.




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 84 Previous  1, 2, 3, 4 ... 43 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக