புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 28 of 84 •
Page 28 of 84 • 1 ... 15 ... 27, 28, 29 ... 56 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (215)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘யாவை’ – இது வினாப் பெயர் !
இது வேற்றுமை உருபை எப்படி ஏற்கும்? –
“யாவென் வினாவி னையெ னிறுதியும்
ஆயிய றிரியா தென்மனார் புலவர்
ஆவயின் வகரம் மையொடுங் கெடுமே ” (உருபு . 6)
‘யாவென் வினாவின் ஐ என் இறுதியும் ’ - ‘யாவை’ என்ற சொல்லின் ஈற்று ஐ ,வேர்றுமை உருபோடு புணரும்போது ,
‘ஆயியல் திரியாது’ - ‘வற்று’ச் சாரியை தப்பாது வரும் !
‘ஆவயின் வகரம் ஐயொடும் கெடும்’ – அப்போது ‘வ்’ , ‘ஐ’யுடன் கெடும் !
யாவை + ஐ = யா + வ் + ஐ + வற்று + ஐ = யாவற்றை (முதல் ‘ஐ’ , ‘வை’யின் ஐ , இரண்டாம் ‘ஐ’ , இரண்டாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
இங்கு , ‘வகரம் ஐயொடுங் கெடுமே ’ என்பதற்கு ஏற்ப , ‘வ்’, ‘ஐ’ இரண்டும் கெட்டுள்ளதைக் காண்க !
யாவை + ஒடு = யா + வ் + ஐ + வற்று + ஒடு = யாவற்றொடு ( ‘ஐ’ , ‘வை’யின் ஐ ; ஒடு- மூன்றாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
‘யா’வை அடுத்த ‘ஐ’யென் இறுதிக்குத்தானே தொல்காப்பியர் விதி கூறினார்? அப்படியானால் ‘யாவை’ என்ற அந்த ஒரு சொல்லுக்குத்தான் அவர் விதி பொருந்துமா?
‘அப்படி நினைக்காதீர்கள்’ என்கிறார் இளம்பூரணர் !
‘கரியவை ’, ‘செய்யவை’ – என ‘ஐ’யை ஈற்றிலே கொண்ட பிற சொற்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்கிறார் இளம்பூரணர் !
கரியவை + ஐ = கரியவை + வற்று + ஐ = கரியவற்றை (வேற்றுமைப் புணர்ச்சி)
கரியவை + ஒடு = கரியவை + வற்று + ஒடு = கரியவற்றொடு (வேற்றுமைப் புணர்ச்சி)
செய்யவை + ஐ = செய்யவை + வற்று + ஐ = செய்யவற்றை (வற்று- சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
செய்யவை + ஒடு = செய்யவை + வற்று + ஒடு = செய்யவற்றொடு (வற்று- சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
மேலைப் புணர்ச்சிகள் – ‘கரியவையை’ , ‘செய்யவையை’ என்றெல்லாம் ‘வற்று’ச் சாரியை இல்லாமற் புணர்ந்தால் , பொருள் தெளிவு இருக்குமா?
இராது !
எனவேதான் சாரியை தமிழ்ப் புணர்ச்சிகளுக்குத் தேவையாகிறது !
சில வேற்றுமை உருபுகளுக்குக் கட்டாயம் சாரியை தேவை என ஆகும்போது , அதே விதிக்கட்டு (Formula) பிற வேற்றுமை உருபுகளுக்கும் பொருத்தப்படுகிறது !
இதுதான் சாரியை இரகசியம்(Secret of Euphonic extention) !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘யாவை’ – இது வினாப் பெயர் !
இது வேற்றுமை உருபை எப்படி ஏற்கும்? –
“யாவென் வினாவி னையெ னிறுதியும்
ஆயிய றிரியா தென்மனார் புலவர்
ஆவயின் வகரம் மையொடுங் கெடுமே ” (உருபு . 6)
‘யாவென் வினாவின் ஐ என் இறுதியும் ’ - ‘யாவை’ என்ற சொல்லின் ஈற்று ஐ ,வேர்றுமை உருபோடு புணரும்போது ,
‘ஆயியல் திரியாது’ - ‘வற்று’ச் சாரியை தப்பாது வரும் !
‘ஆவயின் வகரம் ஐயொடும் கெடும்’ – அப்போது ‘வ்’ , ‘ஐ’யுடன் கெடும் !
யாவை + ஐ = யா + வ் + ஐ + வற்று + ஐ = யாவற்றை (முதல் ‘ஐ’ , ‘வை’யின் ஐ , இரண்டாம் ‘ஐ’ , இரண்டாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
இங்கு , ‘வகரம் ஐயொடுங் கெடுமே ’ என்பதற்கு ஏற்ப , ‘வ்’, ‘ஐ’ இரண்டும் கெட்டுள்ளதைக் காண்க !
யாவை + ஒடு = யா + வ் + ஐ + வற்று + ஒடு = யாவற்றொடு ( ‘ஐ’ , ‘வை’யின் ஐ ; ஒடு- மூன்றாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
‘யா’வை அடுத்த ‘ஐ’யென் இறுதிக்குத்தானே தொல்காப்பியர் விதி கூறினார்? அப்படியானால் ‘யாவை’ என்ற அந்த ஒரு சொல்லுக்குத்தான் அவர் விதி பொருந்துமா?
‘அப்படி நினைக்காதீர்கள்’ என்கிறார் இளம்பூரணர் !
‘கரியவை ’, ‘செய்யவை’ – என ‘ஐ’யை ஈற்றிலே கொண்ட பிற சொற்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்கிறார் இளம்பூரணர் !
கரியவை + ஐ = கரியவை + வற்று + ஐ = கரியவற்றை (வேற்றுமைப் புணர்ச்சி)
கரியவை + ஒடு = கரியவை + வற்று + ஒடு = கரியவற்றொடு (வேற்றுமைப் புணர்ச்சி)
செய்யவை + ஐ = செய்யவை + வற்று + ஐ = செய்யவற்றை (வற்று- சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
செய்யவை + ஒடு = செய்யவை + வற்று + ஒடு = செய்யவற்றொடு (வற்று- சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
மேலைப் புணர்ச்சிகள் – ‘கரியவையை’ , ‘செய்யவையை’ என்றெல்லாம் ‘வற்று’ச் சாரியை இல்லாமற் புணர்ந்தால் , பொருள் தெளிவு இருக்குமா?
இராது !
எனவேதான் சாரியை தமிழ்ப் புணர்ச்சிகளுக்குத் தேவையாகிறது !
சில வேற்றுமை உருபுகளுக்குக் கட்டாயம் சாரியை தேவை என ஆகும்போது , அதே விதிக்கட்டு (Formula) பிற வேற்றுமை உருபுகளுக்கும் பொருத்தப்படுகிறது !
இதுதான் சாரியை இரகசியம்(Secret of Euphonic extention) !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (216)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘நின்னை’ – இச் சொல்லை நாம் அறிவோம் !
இவ்வடிவம் எப்படி ஏற்பட்டது?
இதற்குத் தொல்காப்பிய விதி உள்ளதா?
உள்ளது ! : -
“நீயெ னொருபெயர் நெடுமுதல் குறுகும்
ஆவயி னகர மொற்றா கும்மெ ” (உருபு . 7)
‘நீ என் ஒரு பெயர்’ – ‘நீ’ என்ற பெயர்ச்சொல் ,
‘நெடுமுதல் குறுகும்’ – ‘நீ’ , என்பது ‘நி’ எனக் குறுகும் !
‘ஆவயின் னகரம் ஒற்றா கும்மே’ – அந்த இடத்தில் , ‘ன்’ வரும் !
நீ + ஐ = நி + ன் + ஐ = நின் + ஐ (நீ- குறுகியது ;ன் - எழுத்துப்பேறு) = நின் + ன் + ஐ =நின்னை (ன் - இரட்டித்தது ) (வேற்றுமைப் புணர்ச்சி)
நீ + ஒடு = நி + ன் + ஒடு = நின் + ஒடு ( நீ- குறுகியது ;ன் – எழுத்துப்பேறு வந்தது) = நின் + ன் + ஒடு =நின்னொடு (ன் - இரட்டித்தது ) (வேற்றுமைப் புணர்ச்சி)
அது சரி ! ‘இன்’சாரியை , ‘வற்று’ச் சாரியை கூறிவந்தவர் , எழுத்துப்பேற்றுக்கு வருவானேன்?
மூன்றாம் வேற்றுமைதான் காரணம் !
அஃதாவது-
‘நீ + ஆல் ’ என்ற புணர்ச்சிக்கு ‘இன்’ சாரியை சேர்த்து ‘நீயினால்’ என எழுத முடியுமா?
முடியாதல்லவா?
எனவேதான் ‘ன்’ எழுத்துப்பேறு ! ‘நின்னால்’ என அப்போது ஆகும் !
எழுத்துப்பேறு வந்த இரகசியம் இதுதான் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘நின்னை’ – இச் சொல்லை நாம் அறிவோம் !
இவ்வடிவம் எப்படி ஏற்பட்டது?
இதற்குத் தொல்காப்பிய விதி உள்ளதா?
உள்ளது ! : -
“நீயெ னொருபெயர் நெடுமுதல் குறுகும்
ஆவயி னகர மொற்றா கும்மெ ” (உருபு . 7)
‘நீ என் ஒரு பெயர்’ – ‘நீ’ என்ற பெயர்ச்சொல் ,
‘நெடுமுதல் குறுகும்’ – ‘நீ’ , என்பது ‘நி’ எனக் குறுகும் !
‘ஆவயின் னகரம் ஒற்றா கும்மே’ – அந்த இடத்தில் , ‘ன்’ வரும் !
நீ + ஐ = நி + ன் + ஐ = நின் + ஐ (நீ- குறுகியது ;ன் - எழுத்துப்பேறு) = நின் + ன் + ஐ =நின்னை (ன் - இரட்டித்தது ) (வேற்றுமைப் புணர்ச்சி)
நீ + ஒடு = நி + ன் + ஒடு = நின் + ஒடு ( நீ- குறுகியது ;ன் – எழுத்துப்பேறு வந்தது) = நின் + ன் + ஒடு =நின்னொடு (ன் - இரட்டித்தது ) (வேற்றுமைப் புணர்ச்சி)
அது சரி ! ‘இன்’சாரியை , ‘வற்று’ச் சாரியை கூறிவந்தவர் , எழுத்துப்பேற்றுக்கு வருவானேன்?
மூன்றாம் வேற்றுமைதான் காரணம் !
அஃதாவது-
‘நீ + ஆல் ’ என்ற புணர்ச்சிக்கு ‘இன்’ சாரியை சேர்த்து ‘நீயினால்’ என எழுத முடியுமா?
முடியாதல்லவா?
எனவேதான் ‘ன்’ எழுத்துப்பேறு ! ‘நின்னால்’ என அப்போது ஆகும் !
எழுத்துப்பேறு வந்த இரகசியம் இதுதான் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (217)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘இன்’ சாரியை ‘வற்று’ச் சாரியை முதலியவற்றை நாம் அறிவோம் !
இவை நமக்குப் பழக்கமானவை ! இவற்றைப் பெற்ற சொற்களும் நமக்குப் பழக்கமானவையே !
ஆனால் ‘ஒன்’என்று ஒரு சாரியையைத் தொல்காப்பியர் காட்டுகிறார் ! (அவர் புதிதாகக் காட்டுவது இது one தானா?)
தொல்காப்பிய நூற்பா ! :-
“ஓகார விறுதிக் கொன்னே சாரியை” (உருபு . 8)
‘ஓகார இறுதிக்கு’ – ‘ஓ’வை ஈறாகக் கொண்ட சொற்கள் ,
‘ஒன்னே சாரியை’ - வேற்றுமை உருபுகளுடன் புணரும்போது, ‘ஒன்’என்ற சாரியையைப் பெறும் !
1 .கோ + ஐ = கோ + ஒன் + ஐ = கோஒனை (ஒன் – சாரியை; ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு)(வேற்றுமைப் புணர்ச்சி)
2 . கோ + ஐ = கோ + ஒன் + ஒடு = கோஒனொடு (ஒன் – சாரியை; ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு)(வேற்றுமைப் புணர்ச்சி)
‘கோஒனை’ , ‘கோஒனொடு’ – இச் சொற்களை உச்சரிப்பதற்கே நாம் பெரு முயற்சி எடுக்க வேண்டுமே !
இந்தக் காரணத்தால் , நடுவே உள்ள ‘ஒ’ , பிற்காலத்தில் மறையலாயிற்று !
நேரடியாகவே ‘கோனை’ , ‘கோனொடு’ என்று கூறும் மரபு தோன்றிவிட்டது !
இம் மரபு தோன்றவே , நன்னூலார் அதற்கேற்ப விதியை எழுதிவிட்டார் !
நன்னூலில் , “ஆமா கோனவ் வணையவும் பெறுமே” (248) என்றுளது.
‘ஆ , மா , கோ னவ் அணையவும் பெறுமே’ - ஆ , மா , கோ ஆகிய எழுத்துகளில் முடியும் சொற்கள் , வேற்றுமை உருபுகளோடு புணரும்போது , ‘ஒன்’ சாரியையின் ‘ஒ’ மறைந்து, ‘ன்’மட்டும் பெறுதலும் உண்டு !
நன்னூலின் இக்கருத்துப்படி –
கோ + ன் + ஐ = கோனை (ன் – ‘ஒன்’னின் ‘ஒ’கெட்டதால் வந்தது)
இந்த ‘ஒன்’சாரியை, நமக்குத் தொல்காப்பியத்தின் பழமையைத் தெளிவாகக் காட்டுகிறதல்லவா?
இங்கே ஒரு சுவடியியல் (Manuscriptology) நுட்பத்தை நான் கூறவேண்டும் !
அஃதாவது , ஓலைச் சுவடிகளில் , ‘கோ’வை அடுத்து எழுத வேண்டிய ‘ஒ’வை எழுதமாட்டார்கள் ! அது ‘தெரிந்ததுதான்’ (understood) என்று விட்டுவிடுவார்கள் ! அவ்வாறு விட்டுவிடவே ‘கோஒனை’ என்பது நாளடைவில் ‘கோனை’என்றே நின்றுவிட்டது !
ஆக , ஒலிப்புத் துன்பம் , ஓலை எழுத்து மரபு ஆகியவற்றால் ‘ஒன்’சாரியை மறைந்தது !
இதுதான் ‘ஒன்’சாரியை மறைந்த இரகசியம் !
இங்கே நச்சினார்க்கினியர் ,அவர் கால மரபை ஒத்துக்கொண்டு, ‘ஓகார இறுதிக்கு இன் சாரியையும் வரும்’ஒரு விதி விலக்கை அளிக்கிறார் ! :-
அவ் விதி விலக்கின்படி-
1 .கோ + ஐ = கோ + இன் + ஐ (இன் – சாரியை; ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு)= கோ + வ் + இன் + ஐ = கோவினை (வ் – உடம்படு மெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
2 .சோ + ஐ = சோ + இன் + ஐ (இன் – சாரியை; ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு)= சோ + வ் + இன் + ஐ = சோவினை (வ் – உடம்படு மெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
3 . ஓ + ஐ = ஓ + இன் + ஐ (இன் – சாரியை; ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு)= ஓ + வ் + இன் + ஐ = ஓவினை (வ் – உடம்படு மெய்)(வேற்றுமைப்
புணர்ச்சி)
4 . கோ + ஒடு = கோ + இன் + ஒடு (இன் – சாரியை; ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு)= கோ + வ் + இன் + ஒடு = கோவினொடு (வ் – உடம்படு மெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
5 .சோ + ஒடு = சோ + இன் + ஒடு (இன் – சாரியை; ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு)= சோ + வ் + இன் + ஒடு = சோவினொடு (வ் – உடம்படு மெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
6. ஓ + ஒடு = ஓ + இன் + ஒடு (இன் – சாரியை; ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு)= ஓ + வ் + இன் + ஒடு = ஓவினொடு (வ் – உடம்படு மெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
கோ – அரசன்(பெயர்ச் சொல்)
சோ - அரண்(பெயர்ச் சொல்)
ஓ – மதகு நீரைத் தாங்கும் பலகை (பெயர்ச் சொல்)
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘இன்’ சாரியை ‘வற்று’ச் சாரியை முதலியவற்றை நாம் அறிவோம் !
இவை நமக்குப் பழக்கமானவை ! இவற்றைப் பெற்ற சொற்களும் நமக்குப் பழக்கமானவையே !
ஆனால் ‘ஒன்’என்று ஒரு சாரியையைத் தொல்காப்பியர் காட்டுகிறார் ! (அவர் புதிதாகக் காட்டுவது இது one தானா?)
தொல்காப்பிய நூற்பா ! :-
“ஓகார விறுதிக் கொன்னே சாரியை” (உருபு . 8)
‘ஓகார இறுதிக்கு’ – ‘ஓ’வை ஈறாகக் கொண்ட சொற்கள் ,
‘ஒன்னே சாரியை’ - வேற்றுமை உருபுகளுடன் புணரும்போது, ‘ஒன்’என்ற சாரியையைப் பெறும் !
1 .கோ + ஐ = கோ + ஒன் + ஐ = கோஒனை (ஒன் – சாரியை; ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு)(வேற்றுமைப் புணர்ச்சி)
2 . கோ + ஐ = கோ + ஒன் + ஒடு = கோஒனொடு (ஒன் – சாரியை; ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு)(வேற்றுமைப் புணர்ச்சி)
‘கோஒனை’ , ‘கோஒனொடு’ – இச் சொற்களை உச்சரிப்பதற்கே நாம் பெரு முயற்சி எடுக்க வேண்டுமே !
இந்தக் காரணத்தால் , நடுவே உள்ள ‘ஒ’ , பிற்காலத்தில் மறையலாயிற்று !
நேரடியாகவே ‘கோனை’ , ‘கோனொடு’ என்று கூறும் மரபு தோன்றிவிட்டது !
இம் மரபு தோன்றவே , நன்னூலார் அதற்கேற்ப விதியை எழுதிவிட்டார் !
நன்னூலில் , “ஆமா கோனவ் வணையவும் பெறுமே” (248) என்றுளது.
‘ஆ , மா , கோ னவ் அணையவும் பெறுமே’ - ஆ , மா , கோ ஆகிய எழுத்துகளில் முடியும் சொற்கள் , வேற்றுமை உருபுகளோடு புணரும்போது , ‘ஒன்’ சாரியையின் ‘ஒ’ மறைந்து, ‘ன்’மட்டும் பெறுதலும் உண்டு !
நன்னூலின் இக்கருத்துப்படி –
கோ + ன் + ஐ = கோனை (ன் – ‘ஒன்’னின் ‘ஒ’கெட்டதால் வந்தது)
இந்த ‘ஒன்’சாரியை, நமக்குத் தொல்காப்பியத்தின் பழமையைத் தெளிவாகக் காட்டுகிறதல்லவா?
இங்கே ஒரு சுவடியியல் (Manuscriptology) நுட்பத்தை நான் கூறவேண்டும் !
அஃதாவது , ஓலைச் சுவடிகளில் , ‘கோ’வை அடுத்து எழுத வேண்டிய ‘ஒ’வை எழுதமாட்டார்கள் ! அது ‘தெரிந்ததுதான்’ (understood) என்று விட்டுவிடுவார்கள் ! அவ்வாறு விட்டுவிடவே ‘கோஒனை’ என்பது நாளடைவில் ‘கோனை’என்றே நின்றுவிட்டது !
ஆக , ஒலிப்புத் துன்பம் , ஓலை எழுத்து மரபு ஆகியவற்றால் ‘ஒன்’சாரியை மறைந்தது !
இதுதான் ‘ஒன்’சாரியை மறைந்த இரகசியம் !
இங்கே நச்சினார்க்கினியர் ,அவர் கால மரபை ஒத்துக்கொண்டு, ‘ஓகார இறுதிக்கு இன் சாரியையும் வரும்’ஒரு விதி விலக்கை அளிக்கிறார் ! :-
அவ் விதி விலக்கின்படி-
1 .கோ + ஐ = கோ + இன் + ஐ (இன் – சாரியை; ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு)= கோ + வ் + இன் + ஐ = கோவினை (வ் – உடம்படு மெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
2 .சோ + ஐ = சோ + இன் + ஐ (இன் – சாரியை; ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு)= சோ + வ் + இன் + ஐ = சோவினை (வ் – உடம்படு மெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
3 . ஓ + ஐ = ஓ + இன் + ஐ (இன் – சாரியை; ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு)= ஓ + வ் + இன் + ஐ = ஓவினை (வ் – உடம்படு மெய்)(வேற்றுமைப்
புணர்ச்சி)
4 . கோ + ஒடு = கோ + இன் + ஒடு (இன் – சாரியை; ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு)= கோ + வ் + இன் + ஒடு = கோவினொடு (வ் – உடம்படு மெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
5 .சோ + ஒடு = சோ + இன் + ஒடு (இன் – சாரியை; ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு)= சோ + வ் + இன் + ஒடு = சோவினொடு (வ் – உடம்படு மெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
6. ஓ + ஒடு = ஓ + இன் + ஒடு (இன் – சாரியை; ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு)= ஓ + வ் + இன் + ஒடு = ஓவினொடு (வ் – உடம்படு மெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
கோ – அரசன்(பெயர்ச் சொல்)
சோ - அரண்(பெயர்ச் சொல்)
ஓ – மதகு நீரைத் தாங்கும் பலகை (பெயர்ச் சொல்)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (218)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘அ’, ‘ஆ’க்களில் முடியும் பெயர்சொற்கள் , வேற்றுமை உருபுகளை ஏற்கவேண்டுமாயின்
‘இன்’சாரியை வரும் என்று தொல்காப்பியர் சொல்லியுள்ளார் ! (உருபு .1)
அதற்கு ஒரு சிறப்பு விதியை இப்போது கூறுகிறார் ! : -
“அஆ வென்னு மரப்பெயர்க் கிளவிக்
கத்தொடுஞ் சிவணு மேழ னுருபே ” (உருபு . 9)
விள + கண் = விள + அத்து + கண் = விளவத்துக் கண் (அத்து – சாரியை ; வ் – உடம்படு மெய் ; கண் – ஏழாம் வேற்றுமை உருபு)
பலா + கண் = பலா + அத்து + கண் = பலாவத்துக் கண் (அத்து – சாரியை ; வ் – உடம்படு மெய் ; கண் – ஏழாம் வேற்றுமை உருபு)
எந்த விதியானாலும் மரங்களின் பெயர்களோடு பொருத்தி விதி சொல்வது தொல்காப்பியக் கோட்படு !
பழந்தமிழர் வாழ்வு இயற்கையோடு இயைந்தது ! எனவே பழந்தமிழ் இலக்கணமும் இயற்கைக்குச் சிறப்பிடம் தந்துள்ளது !
மரங்களின் பெயர்களோடு ‘அத்து’ , ‘கண்’ எல்லாம் சேர்த்துக் கூறும் மரபு தொல்காப்பியர் காலத்துத் தமிழில் மிகுதியாக இருந்திருக்கவேண்டும் !
இப்போது இவ்வழக்கு பெரும்பாலும் மறைந்துவிட்டது !
இப்படிப்பட்ட ஆய்வுகள் , மீண்டும் மீண்டும் தொல்காப்பியத்தின் பழமையைத்தான் நமக்குக் காட்டுகிறது !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘அ’, ‘ஆ’க்களில் முடியும் பெயர்சொற்கள் , வேற்றுமை உருபுகளை ஏற்கவேண்டுமாயின்
‘இன்’சாரியை வரும் என்று தொல்காப்பியர் சொல்லியுள்ளார் ! (உருபு .1)
அதற்கு ஒரு சிறப்பு விதியை இப்போது கூறுகிறார் ! : -
“அஆ வென்னு மரப்பெயர்க் கிளவிக்
கத்தொடுஞ் சிவணு மேழ னுருபே ” (உருபு . 9)
விள + கண் = விள + அத்து + கண் = விளவத்துக் கண் (அத்து – சாரியை ; வ் – உடம்படு மெய் ; கண் – ஏழாம் வேற்றுமை உருபு)
பலா + கண் = பலா + அத்து + கண் = பலாவத்துக் கண் (அத்து – சாரியை ; வ் – உடம்படு மெய் ; கண் – ஏழாம் வேற்றுமை உருபு)
எந்த விதியானாலும் மரங்களின் பெயர்களோடு பொருத்தி விதி சொல்வது தொல்காப்பியக் கோட்படு !
பழந்தமிழர் வாழ்வு இயற்கையோடு இயைந்தது ! எனவே பழந்தமிழ் இலக்கணமும் இயற்கைக்குச் சிறப்பிடம் தந்துள்ளது !
மரங்களின் பெயர்களோடு ‘அத்து’ , ‘கண்’ எல்லாம் சேர்த்துக் கூறும் மரபு தொல்காப்பியர் காலத்துத் தமிழில் மிகுதியாக இருந்திருக்கவேண்டும் !
இப்போது இவ்வழக்கு பெரும்பாலும் மறைந்துவிட்டது !
இப்படிப்பட்ட ஆய்வுகள் , மீண்டும் மீண்டும் தொல்காப்பியத்தின் பழமையைத்தான் நமக்குக் காட்டுகிறது !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (219)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
தொல்காப்பியரின் அடுத்த நூற்பா !:-
“ஞநவென் புள்ளிக் கின்னே சாரியை” (உருபு . 10)
‘ஞ ந என் புள்ளிக்கு இன்னே சாரியை’ – ‘ஞ்’ , ‘ந்’ ஆகிய எழுத்துகளை ஈற்றிலே கொண்ட பெயர்ச் சொற்கள் , வேற்றுமை உருபோடு புணர்ந்தால் , ‘இன்’சாரியை வரும் !
உரிஞ் + ஐ = உரிஞ் + இன் + ஐ = உரிஞினை (இன் – சாரியை ; ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு)
உரிஞ் + ஒடு = உரிஞ் + இன் + ஒடு = உரிஞினொடு (இன் – சாரியை ; ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு)
பொருந் + ஐ = பொருந் + இன் + ஐ = பொருநினை (இன் – சாரியை ; ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு)
பொருந் + ஒடு = பொருந் + இன் + ஒடு = பொருநினொடு (இன் – சாரியை ; ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு)
அடுத்து ‘வற்று’ச் சாரியை ! :-
“சுட்டுமுதல் வகரம் ஐயும் மெய்யும்
கெட்ட இறுதி இயல்திரிபு இன்றே” (உருபு . 11)
‘சுட்டு முதல் வகரம்’ – அவ் , இவ் , உவ் ,
‘ ஐயும் மெய்யும் ’ – ‘வை’ (வ – வகரம் ; மெய் – வ் ; ஐயும் மெய்யும் - வை)
‘கெட்ட இறுதி’ - ‘அவை’ என்ற சொல்லின் முன் ,வேற்றுமை உருபு வரும்போது , கெட்ட ஈறு ‘வை’ ,
‘இயல் திரிபு இன்றே’ - போல , ‘வற்று’ச் சாரியை பெற்றுப் புணர்வது தப்பாது!
அவ் + ஐ = அவ் + வற்று + ஐ = அவற்றை (வேற்றுமைப் புணர்ச்சி)
இவ் + ஐ = இவ் + வற்று + ஐ = இவற்றை(வேற்றுமைப் புணர்ச்சி)
உவ் + ஐ = உவ் + வற்று + ஐ = உவற்றை(வேற்றுமைப் புணர்ச்சி)
அவ் + ஒடு = அவ் + வற்று + ஒடு = அவற்றொடு(வேற்றுமைப் புணர்ச்சி)
இவ் + ஒடு = இவ் + வற்று + ஒடு = இவற்றொடு(வேற்றுமைப் புணர்ச்சி)
உவ் + ஒடு = உவ் + வற்று + ஒடு = உவற்றொடு(வேற்றுமைப் புணர்ச்சி)
அது சரி ! மேல் தொல்காப்பிய நூற்பாவில்(உருபு . 11), ‘வற்று’ கூறப்படவில்லையே , அஃது எங்கிருந்து வந்தது ?
இதே உருபியல் நூற்பா ஐந்திலிருந்து ( “சுட்டுமுத …’’ )வந்தது !
மேல் எடுத்துக்காட்டுகளை ‘வற்று ’ச் சாரியை இல்லாமல் பார்த்தால்தான் ‘வற்று’ச் சாரியையின் இன்றியமையாமை நமக்குப் புலனாகும் ! –
அவ் + ஒடு = அவ்வொடு
இவ் + ஒடு = இவ்வொடு
உவ் + ஒடு = உவ்வொடு
‘அவ்வொடு’ , என்பதற்கும் ‘அவற்றொடும்’ என்பதற்கும் வேறுபாடு உண்டன்றோ?
‘அவொடு’ என்றால் பொருளே இல்லையே?
எனவே , சாரியை என்பது ஓசை நீட்சிக்காக மட்டுமன்றிப் பொருள் இயைபுக்காகவும் வருகிறது என்ற பொருண்மை (Concept) திரள்கிறதல்லவா?
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
தொல்காப்பியரின் அடுத்த நூற்பா !:-
“ஞநவென் புள்ளிக் கின்னே சாரியை” (உருபு . 10)
‘ஞ ந என் புள்ளிக்கு இன்னே சாரியை’ – ‘ஞ்’ , ‘ந்’ ஆகிய எழுத்துகளை ஈற்றிலே கொண்ட பெயர்ச் சொற்கள் , வேற்றுமை உருபோடு புணர்ந்தால் , ‘இன்’சாரியை வரும் !
உரிஞ் + ஐ = உரிஞ் + இன் + ஐ = உரிஞினை (இன் – சாரியை ; ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு)
உரிஞ் + ஒடு = உரிஞ் + இன் + ஒடு = உரிஞினொடு (இன் – சாரியை ; ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு)
பொருந் + ஐ = பொருந் + இன் + ஐ = பொருநினை (இன் – சாரியை ; ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு)
பொருந் + ஒடு = பொருந் + இன் + ஒடு = பொருநினொடு (இன் – சாரியை ; ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு)
அடுத்து ‘வற்று’ச் சாரியை ! :-
“சுட்டுமுதல் வகரம் ஐயும் மெய்யும்
கெட்ட இறுதி இயல்திரிபு இன்றே” (உருபு . 11)
‘சுட்டு முதல் வகரம்’ – அவ் , இவ் , உவ் ,
‘ ஐயும் மெய்யும் ’ – ‘வை’ (வ – வகரம் ; மெய் – வ் ; ஐயும் மெய்யும் - வை)
‘கெட்ட இறுதி’ - ‘அவை’ என்ற சொல்லின் முன் ,வேற்றுமை உருபு வரும்போது , கெட்ட ஈறு ‘வை’ ,
‘இயல் திரிபு இன்றே’ - போல , ‘வற்று’ச் சாரியை பெற்றுப் புணர்வது தப்பாது!
அவ் + ஐ = அவ் + வற்று + ஐ = அவற்றை (வேற்றுமைப் புணர்ச்சி)
இவ் + ஐ = இவ் + வற்று + ஐ = இவற்றை(வேற்றுமைப் புணர்ச்சி)
உவ் + ஐ = உவ் + வற்று + ஐ = உவற்றை(வேற்றுமைப் புணர்ச்சி)
அவ் + ஒடு = அவ் + வற்று + ஒடு = அவற்றொடு(வேற்றுமைப் புணர்ச்சி)
இவ் + ஒடு = இவ் + வற்று + ஒடு = இவற்றொடு(வேற்றுமைப் புணர்ச்சி)
உவ் + ஒடு = உவ் + வற்று + ஒடு = உவற்றொடு(வேற்றுமைப் புணர்ச்சி)
அது சரி ! மேல் தொல்காப்பிய நூற்பாவில்(உருபு . 11), ‘வற்று’ கூறப்படவில்லையே , அஃது எங்கிருந்து வந்தது ?
இதே உருபியல் நூற்பா ஐந்திலிருந்து ( “சுட்டுமுத …’’ )வந்தது !
மேல் எடுத்துக்காட்டுகளை ‘வற்று ’ச் சாரியை இல்லாமல் பார்த்தால்தான் ‘வற்று’ச் சாரியையின் இன்றியமையாமை நமக்குப் புலனாகும் ! –
அவ் + ஒடு = அவ்வொடு
இவ் + ஒடு = இவ்வொடு
உவ் + ஒடு = உவ்வொடு
‘அவ்வொடு’ , என்பதற்கும் ‘அவற்றொடும்’ என்பதற்கும் வேறுபாடு உண்டன்றோ?
‘அவொடு’ என்றால் பொருளே இல்லையே?
எனவே , சாரியை என்பது ஓசை நீட்சிக்காக மட்டுமன்றிப் பொருள் இயைபுக்காகவும் வருகிறது என்ற பொருண்மை (Concept) திரள்கிறதல்லவா?
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (220)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘அவ்’ , ‘இவ்’ , ‘உவ்’ ஆகிய சுட்டுப் பெயர்ச் சொற்கள், வேற்றுமை உருபுகளுடன் புணரும்போது ‘வற்று’ச் சாரியை பெறுதலை முன் ஆய்வில் பார்த்தோம் !
இப்போது , சுட்டுப்பெயர்கள் அல்லாத ‘வ்’ ஈற்றுப் பெயர்ச்சொற்கள் ,வேற்றுமை உருபுகளுடன் புணருமாற்றைக் காட்டுகிறார் தொல்காப்பியர் ! :-
“ ஏனை வகர மின்னொடு சிவணும்” (உருபு . 12)
தெவ் – சுட்டுப் பெயர் அல்லாத ‘வ்’ ஈற்றுப் பெயர்ச்சொல்.
தெவ் - பகை .
தெவ் + ஐ = தெவ் + இன் + ஐ = தெவ்வினை (இன் – சாரியை ; ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு)
தெவ் + ஒடு = தெவ் + இன் + ஒடு = தெவ்வினொடு (இன் – சாரியை ; ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு)
இங்கே , இளம்பூரணர் ஒரு நுணுக்கத்தைக் கூறுகிறார் !
“மற்று இது உரிச்சொல் லன்றோ வெனின் , உரிச்சொல்லே யெனினும் படுத்த லோசையாற் பெயராயிற் ரென்க” !
‘தெவ்’ என்று ஓர் உரிச்சொல் இருக்கிறது ! உரியியல் நூற்பா 48இல் இஃது உரிசொல்லாகவே வருகிறது ! அப்படி இருக்கும்போது , பெயர்சொல்லாவது எப்படி?
இதற்கு விடையைத்தான் மேலே இளம்பூரணர் கூறினார் !
அஃதாவது – படுத்துச் சொன்னால் ‘தெவ்’ – பெயர்ச்சொல் !
எடுத்துச் சொன்னால் ‘தெவ்’ – உரிச்சொல் !
சரி ! எப்படிப் படுத்துச் சொல்வது ?
பாய்விரித்துப் படுத்துக்கொண்டு சொல்லவேண்டுமா?
அல்ல!
இயல்பான ஒலியில், காற்றானது இதழ் மட்டத்தில் செல்வது போல உச்சரித்தால் – படுத்துச் சொல்வது !
சற்று உரத்த ஒலியில் , காற்றானது இதழ் மட்டத்திற்கு மேலே செல்வதுபோல ஒலித்தால் – எடுத்துச் சொல்வது !
ஒரே சொல் ! உச்சரிப்பு முறை இரண்டு !
ஓர் உச்சரிப்பில் அது பெயர்! இன்னோர் உச்சரிப்பில் அஃது பெயர் !
தொட்ட இடமெல்லாம் தொல்காப்பியம் இனிக்கிறது !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘அவ்’ , ‘இவ்’ , ‘உவ்’ ஆகிய சுட்டுப் பெயர்ச் சொற்கள், வேற்றுமை உருபுகளுடன் புணரும்போது ‘வற்று’ச் சாரியை பெறுதலை முன் ஆய்வில் பார்த்தோம் !
இப்போது , சுட்டுப்பெயர்கள் அல்லாத ‘வ்’ ஈற்றுப் பெயர்ச்சொற்கள் ,வேற்றுமை உருபுகளுடன் புணருமாற்றைக் காட்டுகிறார் தொல்காப்பியர் ! :-
“ ஏனை வகர மின்னொடு சிவணும்” (உருபு . 12)
தெவ் – சுட்டுப் பெயர் அல்லாத ‘வ்’ ஈற்றுப் பெயர்ச்சொல்.
தெவ் - பகை .
தெவ் + ஐ = தெவ் + இன் + ஐ = தெவ்வினை (இன் – சாரியை ; ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு)
தெவ் + ஒடு = தெவ் + இன் + ஒடு = தெவ்வினொடு (இன் – சாரியை ; ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு)
இங்கே , இளம்பூரணர் ஒரு நுணுக்கத்தைக் கூறுகிறார் !
“மற்று இது உரிச்சொல் லன்றோ வெனின் , உரிச்சொல்லே யெனினும் படுத்த லோசையாற் பெயராயிற் ரென்க” !
‘தெவ்’ என்று ஓர் உரிச்சொல் இருக்கிறது ! உரியியல் நூற்பா 48இல் இஃது உரிசொல்லாகவே வருகிறது ! அப்படி இருக்கும்போது , பெயர்சொல்லாவது எப்படி?
இதற்கு விடையைத்தான் மேலே இளம்பூரணர் கூறினார் !
அஃதாவது – படுத்துச் சொன்னால் ‘தெவ்’ – பெயர்ச்சொல் !
எடுத்துச் சொன்னால் ‘தெவ்’ – உரிச்சொல் !
சரி ! எப்படிப் படுத்துச் சொல்வது ?
பாய்விரித்துப் படுத்துக்கொண்டு சொல்லவேண்டுமா?
அல்ல!
இயல்பான ஒலியில், காற்றானது இதழ் மட்டத்தில் செல்வது போல உச்சரித்தால் – படுத்துச் சொல்வது !
சற்று உரத்த ஒலியில் , காற்றானது இதழ் மட்டத்திற்கு மேலே செல்வதுபோல ஒலித்தால் – எடுத்துச் சொல்வது !
ஒரே சொல் ! உச்சரிப்பு முறை இரண்டு !
ஓர் உச்சரிப்பில் அது பெயர்! இன்னோர் உச்சரிப்பில் அஃது பெயர் !
தொட்ட இடமெல்லாம் தொல்காப்பியம் இனிக்கிறது !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (221)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
அடுத்து ‘ம்’ஈற்றுச் சொற்கள் , வேற்றுமை உருபுகளுடன் புணரும்போது , என்ன சாரியை இடையே வரும் எனக் காட்டுகிறார் தொல்காப்பியர் ! : -
“மஃகான் புள்ளிமு னத்தே சாரியை” (உருபு . 13)
மரம் + ஐ = மரமை ×
மரம் + ஐ = மரம் + அத்து + ஐ = மரத்தை √ (அத்து – சாரியை; ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
மரம் + ஒடு = மரமொடு ×
மரம் + ஒடு = மரம் + அத்து + ஒடு = மரத்தொடு √ (அத்து – சாரியை; மூன்றாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
மரம் + ஆல் = மரமால் ×
மரம் + ஆல் = மரம் + அத்து + ஆல் = மரத்தால் √ (அத்து – சாரியை ; மூன்றாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
மரம் + கண் = மரக்கண் ×
மரம் + கண் = மரம் + அத்து + கண் = மரத்துக்கண் √ (அத்து – சாரியை ; ஏழாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
அது சரி !
‘அத்து’ என்பதன் ‘அ’ எப்படிக் கெடுகிறது ? அதற்கு என்ன விதி ?
புணரியல் நூற்பா 31 இல் விதி உள்ளது !
“அத்தே வற்றே …” என்ற அந்த நூற்பாவை ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம் ! அதை இங்கு இணைக்க!
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
அடுத்து ‘ம்’ஈற்றுச் சொற்கள் , வேற்றுமை உருபுகளுடன் புணரும்போது , என்ன சாரியை இடையே வரும் எனக் காட்டுகிறார் தொல்காப்பியர் ! : -
“மஃகான் புள்ளிமு னத்தே சாரியை” (உருபு . 13)
மரம் + ஐ = மரமை ×
மரம் + ஐ = மரம் + அத்து + ஐ = மரத்தை √ (அத்து – சாரியை; ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
மரம் + ஒடு = மரமொடு ×
மரம் + ஒடு = மரம் + அத்து + ஒடு = மரத்தொடு √ (அத்து – சாரியை; மூன்றாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
மரம் + ஆல் = மரமால் ×
மரம் + ஆல் = மரம் + அத்து + ஆல் = மரத்தால் √ (அத்து – சாரியை ; மூன்றாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
மரம் + கண் = மரக்கண் ×
மரம் + கண் = மரம் + அத்து + கண் = மரத்துக்கண் √ (அத்து – சாரியை ; ஏழாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
அது சரி !
‘அத்து’ என்பதன் ‘அ’ எப்படிக் கெடுகிறது ? அதற்கு என்ன விதி ?
புணரியல் நூற்பா 31 இல் விதி உள்ளது !
“அத்தே வற்றே …” என்ற அந்த நூற்பாவை ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம் ! அதை இங்கு இணைக்க!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (222)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘ம்’ ஈற்றுப் பெயர்ச்சொற்கள் , வேற்றுமை உருபுகளோடு புணரவேண்டுமானால் ‘அத்து’ச் சாரியை பெறும் என்று தொல்காப்பியர் சொன்னதைப் படித்தோம் !
சொன்ன அதே வேகத்தில் “அதற்காக எல்லாச் சொற்களுக்கும் இதுதான் கணக்கு என்று எடுத்துக்கொள்ளாதீர்கள் !” என்று அறிவுரை கூறுகிறார் அவர் ! :-
“இன்னிடை வரூஉ மொழியுமா ருளவே” (உருபு . 14)
அஃதாவது , ‘இன்’சாரியையும் வரும் என்கிறார் !
உரும் + ஐ = உருமை ×
உரும் + அத்து + ஐ = உருமத்தை ×
உரும் + இன் + ஐ = உருமினை √(இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
உரும் + ஒடு = உருமொடு ×
உரும் + அத்து + ஒடு = உருமத்தொடு ×
உரும் + இன் + ஒடு = உருமினொடு √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
நூற்பாவில் , ‘மொழியுமார்’ என்று வந்ததல்லவா?
மொழியும் + ஆர் = மொழியுமார்
ஆர் – அசைநிலை .
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘ம்’ ஈற்றுப் பெயர்ச்சொற்கள் , வேற்றுமை உருபுகளோடு புணரவேண்டுமானால் ‘அத்து’ச் சாரியை பெறும் என்று தொல்காப்பியர் சொன்னதைப் படித்தோம் !
சொன்ன அதே வேகத்தில் “அதற்காக எல்லாச் சொற்களுக்கும் இதுதான் கணக்கு என்று எடுத்துக்கொள்ளாதீர்கள் !” என்று அறிவுரை கூறுகிறார் அவர் ! :-
“இன்னிடை வரூஉ மொழியுமா ருளவே” (உருபு . 14)
அஃதாவது , ‘இன்’சாரியையும் வரும் என்கிறார் !
உரும் + ஐ = உருமை ×
உரும் + அத்து + ஐ = உருமத்தை ×
உரும் + இன் + ஐ = உருமினை √(இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
உரும் + ஒடு = உருமொடு ×
உரும் + அத்து + ஒடு = உருமத்தொடு ×
உரும் + இன் + ஒடு = உருமினொடு √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
நூற்பாவில் , ‘மொழியுமார்’ என்று வந்ததல்லவா?
மொழியும் + ஆர் = மொழியுமார்
ஆர் – அசைநிலை .
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (223)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘ம்’ ஈற்றுச் சொற்கள் , வேற்றுமை உருபுகளோடு புணரவேண்டுமானால் ‘அத்து’ச் சாரியை வரும் (உருபு . 13) , ‘இன்’ சரியை வரும் (உருபு . 14) என்றெல்லாம் காட்டினார் தொல்காப்பியர் !
அப்படியானால் , ‘நும் ’ என்பதும் ‘ம்’ஈற்றோடுதான் உள்ளது; இதுவும் அச் சாரியைகளையே பெறுமா? – ஒரு மாணவன் கேட்டான் !
‘அப்படியல்ல ! அதற்கு வேறு விதி!’ என்று அதற்கு ஒரு நூற்பா எழுதுகிறார் தொல்காப்பியர் :-
“நும்மெ னிறுதி யியற்கை யாகும்” (உருபு . 15)
‘நும் என் இறுதி’ – ‘நும்’ எனும் பெயர்சொல்லின் ஈறு , அஃதாவது ‘ம்’ ,
‘இயற்கை ஆகும்’ – இயற்கையாகப் புணரும் ! அஃதாவது , ‘அத்து’, ‘இன்’சாரிகளைப் பெறா !
நும் + ஐ = நும்மத்தை × (அத்து -சாரியை)
நும் + ஐ = நும்மினை × (இன் - சாரியை)
நும் + ஐ = நும்மை √ (சாரியை வரவில்லை) (வேற்றுமைப் புணர்ச்சி)
நும் + ஒடு = நும்மத்தொடு × (அத்து -சாரியை)
நும் + ஒடு = நும்மினொடு × (இன் - சாரியை)
நும் + ஒடு = நும்மொடு √ (சாரியை வரவில்லை) (வேற்றுமைப் புணர்ச்சி)
இந்தச் சாரியைதான் எவ்வளவு வித்தை காட்டுகிறது?
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘ம்’ ஈற்றுச் சொற்கள் , வேற்றுமை உருபுகளோடு புணரவேண்டுமானால் ‘அத்து’ச் சாரியை வரும் (உருபு . 13) , ‘இன்’ சரியை வரும் (உருபு . 14) என்றெல்லாம் காட்டினார் தொல்காப்பியர் !
அப்படியானால் , ‘நும் ’ என்பதும் ‘ம்’ஈற்றோடுதான் உள்ளது; இதுவும் அச் சாரியைகளையே பெறுமா? – ஒரு மாணவன் கேட்டான் !
‘அப்படியல்ல ! அதற்கு வேறு விதி!’ என்று அதற்கு ஒரு நூற்பா எழுதுகிறார் தொல்காப்பியர் :-
“நும்மெ னிறுதி யியற்கை யாகும்” (உருபு . 15)
‘நும் என் இறுதி’ – ‘நும்’ எனும் பெயர்சொல்லின் ஈறு , அஃதாவது ‘ம்’ ,
‘இயற்கை ஆகும்’ – இயற்கையாகப் புணரும் ! அஃதாவது , ‘அத்து’, ‘இன்’சாரிகளைப் பெறா !
நும் + ஐ = நும்மத்தை × (அத்து -சாரியை)
நும் + ஐ = நும்மினை × (இன் - சாரியை)
நும் + ஐ = நும்மை √ (சாரியை வரவில்லை) (வேற்றுமைப் புணர்ச்சி)
நும் + ஒடு = நும்மத்தொடு × (அத்து -சாரியை)
நும் + ஒடு = நும்மினொடு × (இன் - சாரியை)
நும் + ஒடு = நும்மொடு √ (சாரியை வரவில்லை) (வேற்றுமைப் புணர்ச்சி)
இந்தச் சாரியைதான் எவ்வளவு வித்தை காட்டுகிறது?
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 28 of 84 • 1 ... 15 ... 27, 28, 29 ... 56 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 28 of 84
|
|