புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 32 of 84 •
Page 32 of 84 • 1 ... 17 ... 31, 32, 33 ... 58 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (252)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘இருவிள’ என்பது ஓர் ஊரின் பெயர் !
இந்த ஊரைச்சேர்ந்த ‘கொற்றன்’ என்பவனை,
‘இருவிள கொற்றன்’ என்பதா?
‘இருவிளக் கொற்றன்’ என்பதா?
இதற்குத் தொல்காப்பியத்தில் விதி உள்ளதா?
உள்ளது ! :-
“வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே” ! (உயிர்மயங் . 14)
முன்பு , இதே உயிர்மயங்கியலில் , நூற்பா ஒன்றில் , அல்வழிப் புணர்ச்சியாக இருந்தால் , அகரத்தில் முடியும் பெயர்ச்சொற்கள் , வல்லெழுத்தை முதலாக உடைய சொற்களுடன் புணரும்போது, ஒற்றுமிகும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார் ! (மக + குறிது= மகக் குறிது); நினைவிருக்கிறதா?
‘அல்வழிப் புணர்ச்சியாக இருந்தால்’ – என மேலே வந்துள்ளதைக் கவனியுங்கள் !
அப்படியானால் , வேற்றுமைப் புணர்ச்சியாக இருந்தால் ? – வினா எழுகிறதல்லவா?
இதற்கு விடைதான் மேல் நூற்பா! (உயிர்மயங் . 14)
இதன்படி-
இருவிள + கொற்றன் = இருவிள கொற்றன்×
இருவிள + கொற்றன் = இருவிளக் கொற்றன்√ (க் - மிகுந்தது)(வேற்றுமைப் புணர்ச்சி)
இருவிள + சாத்தன் = இருவிள சாத்தன் ×
இருவிள + சாத்தன் = இருவிளச் சாத்தன் √ (ச் - மிகுந்தது)(வேற்றுமைப் புணர்ச்சி)
இருவிள + தேவன் = இருவிள தேவன் ×
இருவிள + தேவன் = இருவிளத் தேவன் √ (த் - மிகுந்தது)(வேற்றுமைப் புணர்ச்சி)
இருவிள + பூதன் = இருவிள பூதன் ×
இருவிள + பூதன் = இருவிளப் பூதன் √ (ப் - மிகுந்தது)(வேற்றுமைப் புணர்ச்சி)
சாத்தன் , தேவன் – போன்ற இயற்பெயர்ச் சொற்கள்தாம் இப்படிப் புணருமா?- ஐயம் !
போக்குகிறார் இளம்பூரணர் !-
“விளக்குறுமை எனக் குணவேற்றுமைக் கண்ணும் கொள்க!”
(குணம்- பண்பு)
இதன்படி-
விள + குறுமை = விளகுறுமை ×
விள + குறுமை = விளக்குறுமை √ (க் - மிகுந்தது)(வேற்றுமைப் புணர்ச்சி)
(விளக்குறுமை – விளமரத்தின் குட்டைத்தன்மை )
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘இருவிள’ என்பது ஓர் ஊரின் பெயர் !
இந்த ஊரைச்சேர்ந்த ‘கொற்றன்’ என்பவனை,
‘இருவிள கொற்றன்’ என்பதா?
‘இருவிளக் கொற்றன்’ என்பதா?
இதற்குத் தொல்காப்பியத்தில் விதி உள்ளதா?
உள்ளது ! :-
“வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே” ! (உயிர்மயங் . 14)
முன்பு , இதே உயிர்மயங்கியலில் , நூற்பா ஒன்றில் , அல்வழிப் புணர்ச்சியாக இருந்தால் , அகரத்தில் முடியும் பெயர்ச்சொற்கள் , வல்லெழுத்தை முதலாக உடைய சொற்களுடன் புணரும்போது, ஒற்றுமிகும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார் ! (மக + குறிது= மகக் குறிது); நினைவிருக்கிறதா?
‘அல்வழிப் புணர்ச்சியாக இருந்தால்’ – என மேலே வந்துள்ளதைக் கவனியுங்கள் !
அப்படியானால் , வேற்றுமைப் புணர்ச்சியாக இருந்தால் ? – வினா எழுகிறதல்லவா?
இதற்கு விடைதான் மேல் நூற்பா! (உயிர்மயங் . 14)
இதன்படி-
இருவிள + கொற்றன் = இருவிள கொற்றன்×
இருவிள + கொற்றன் = இருவிளக் கொற்றன்√ (க் - மிகுந்தது)(வேற்றுமைப் புணர்ச்சி)
இருவிள + சாத்தன் = இருவிள சாத்தன் ×
இருவிள + சாத்தன் = இருவிளச் சாத்தன் √ (ச் - மிகுந்தது)(வேற்றுமைப் புணர்ச்சி)
இருவிள + தேவன் = இருவிள தேவன் ×
இருவிள + தேவன் = இருவிளத் தேவன் √ (த் - மிகுந்தது)(வேற்றுமைப் புணர்ச்சி)
இருவிள + பூதன் = இருவிள பூதன் ×
இருவிள + பூதன் = இருவிளப் பூதன் √ (ப் - மிகுந்தது)(வேற்றுமைப் புணர்ச்சி)
சாத்தன் , தேவன் – போன்ற இயற்பெயர்ச் சொற்கள்தாம் இப்படிப் புணருமா?- ஐயம் !
போக்குகிறார் இளம்பூரணர் !-
“விளக்குறுமை எனக் குணவேற்றுமைக் கண்ணும் கொள்க!”
(குணம்- பண்பு)
இதன்படி-
விள + குறுமை = விளகுறுமை ×
விள + குறுமை = விளக்குறுமை √ (க் - மிகுந்தது)(வேற்றுமைப் புணர்ச்சி)
(விளக்குறுமை – விளமரத்தின் குட்டைத்தன்மை )
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (253)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
தொல்காப்பியரிடம் மாணவன், “விள – என்பது அகர ஈற்று மரப்பெயர் ! ‘விளத்தின் பூ ’ என்பதைச் சொல்லவேண்டுமானால் , ‘விளப்பூ’ என்பதா? ‘விளம்பூ’ என்பதா?” எனக் கேட்டான் !
அதற்குத் தொல்காப்பியரின் விடை ! :-
“மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே” (உயிர்மயங் . 15)
‘மரப்பெயர்க் கிளவி’ – மரத்தின் பெயரைக் குறிக்கும் சொல்,
‘மெல்லெழுத்து மிகுமே’ – வேற்றுமைப் புணர்சியில் , மெல்லெழுத்துச் சந்தி பெறும் !
விள + கோடு = விளக்கோடு ×
விள + கோடு = விளங்கோடு √ (ங் – மெல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(விளங்கோடு – விள மரத்தின் கிளை)
விள + செதிள் = விளச் செதிள் ×
விள + செதிள் = விளஞ் செதிள் √ (ஞ் – மெல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(விளஞ் செதிள் – விள மரத்தின் வெட்டுத் துண்டு)
விள + தோல் = விளத் தோல் ×
விள + தோல் = விளந் தோல் √ (ந் – மெல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(விளந் தோல் – விள மரத்தின் பட்டை)
விள + பூ = விளப்பூ ×
விள + பூ = விளம்பூ √ (ம் – மெல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(விளம்பூ – விள மரத்தின் பூ)
எந்த ஓர் இலக்கணப் புணர்ச்சியாயினும் மரப்பெயர்களுடன் அதனைப் பொருத்திக்காட்டுவது தொல்காப்பியரின் கோட்பாடு
(Theory oy Tholkappiyar)!
ஏன்?
அஃதாவது, சிலர் நினைப்பதுபோலத் தமிழ் இலக்கணம் என்பது புலவர்களுக்கு மட்டும்தான் என்பதில்லை !
தமிழ் இலக்கணம் மக்களுக்கானது !
இந்த உண்மை இங்கே தெரிகிறதல்லவா?
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
தொல்காப்பியரிடம் மாணவன், “விள – என்பது அகர ஈற்று மரப்பெயர் ! ‘விளத்தின் பூ ’ என்பதைச் சொல்லவேண்டுமானால் , ‘விளப்பூ’ என்பதா? ‘விளம்பூ’ என்பதா?” எனக் கேட்டான் !
அதற்குத் தொல்காப்பியரின் விடை ! :-
“மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே” (உயிர்மயங் . 15)
‘மரப்பெயர்க் கிளவி’ – மரத்தின் பெயரைக் குறிக்கும் சொல்,
‘மெல்லெழுத்து மிகுமே’ – வேற்றுமைப் புணர்சியில் , மெல்லெழுத்துச் சந்தி பெறும் !
விள + கோடு = விளக்கோடு ×
விள + கோடு = விளங்கோடு √ (ங் – மெல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(விளங்கோடு – விள மரத்தின் கிளை)
விள + செதிள் = விளச் செதிள் ×
விள + செதிள் = விளஞ் செதிள் √ (ஞ் – மெல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(விளஞ் செதிள் – விள மரத்தின் வெட்டுத் துண்டு)
விள + தோல் = விளத் தோல் ×
விள + தோல் = விளந் தோல் √ (ந் – மெல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(விளந் தோல் – விள மரத்தின் பட்டை)
விள + பூ = விளப்பூ ×
விள + பூ = விளம்பூ √ (ம் – மெல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(விளம்பூ – விள மரத்தின் பூ)
எந்த ஓர் இலக்கணப் புணர்ச்சியாயினும் மரப்பெயர்களுடன் அதனைப் பொருத்திக்காட்டுவது தொல்காப்பியரின் கோட்பாடு
(Theory oy Tholkappiyar)!
ஏன்?
அஃதாவது, சிலர் நினைப்பதுபோலத் தமிழ் இலக்கணம் என்பது புலவர்களுக்கு மட்டும்தான் என்பதில்லை !
தமிழ் இலக்கணம் மக்களுக்கானது !
இந்த உண்மை இங்கே தெரிகிறதல்லவா?
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (254)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
ஆண் பிள்ளையைக் குறிக்க ‘மகன்’ என்றும் , பெண் பிள்ளையைக் குறிக்க ‘மகள்’ என்றும் இன்று சொல்கிறோம் !
ஆனால் தொல்காப்பியர் காலத்தில், ‘மக’ என்று சொல்லால் இருவரையுமே குறித்தனர் !
அதனால்தான் ‘மக’ என்ற இந்த அகர ஈற்றுச் சொல்லைக் கையில் எடுக்கிறார் தொல்காப்பியர் !
‘மக’வின் கை – இதனை எப்படிசொல்லலாம் ?
மகக் கை – இது சரியா?
மகங் கை – இது சரியா?
தொல்காப்பிய விதி யாது ?
இதோ !:-
“மகப்பெயர்க் கிளவிக் கின்னே சாரியை” (உயிர்மயங் . 16)
மக + கை = மகக் கை ×
மக + கை = மகங் கை ×
மக + கை = மக+இன் + கை (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் கை
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + செவி = மகச் செவி×
மக + செவி = மகஞ் செவி ×
மக + செவி = மக+இன் + செவி (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் செவி
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + தலை = மகத் தலை ×
மக + தலை = மகந் தலை ×
மக + தலை = மக+இன் + தலை (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் தலை
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + புறம் = மகப் புறம் ×
மக + புறம் = மகம் புறம் ×
மக + புறம் = மக+இன் + புறம் (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் புறம்
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மேல் எடுத்துக்காட்டுகளில் , வருசொற்கள் யாவும் வல்லெழுத்தை முதலாகக் கொண்டவை என்பதைக் கவனியுங்கள் !
அப்படியானால் ,மெல்லெழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் புணரவந்தால் ?
இளம்பூரணர் விடை தருகிறார் ! -
“சரியைப் பேறு வரையாது கூறியவழி நான்கு கணத்துக் கண்ணும் செல்லுமென்பதாகலின் , மகவின் ஞாண் என இயல்புக் கணத்துக் கணத்தும் கொள்க !”
அஃதாவது-
மக + ஞாண் = மகஞ்ஞாண் ×
மக + ஞாண் = மகஞாண் ×
மக + ஞாண் = மக + இன் + ஞாண் (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் ஞாண்
(வேற்றுமைப் புணர்ச்சி)
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
ஆண் பிள்ளையைக் குறிக்க ‘மகன்’ என்றும் , பெண் பிள்ளையைக் குறிக்க ‘மகள்’ என்றும் இன்று சொல்கிறோம் !
ஆனால் தொல்காப்பியர் காலத்தில், ‘மக’ என்று சொல்லால் இருவரையுமே குறித்தனர் !
அதனால்தான் ‘மக’ என்ற இந்த அகர ஈற்றுச் சொல்லைக் கையில் எடுக்கிறார் தொல்காப்பியர் !
‘மக’வின் கை – இதனை எப்படிசொல்லலாம் ?
மகக் கை – இது சரியா?
மகங் கை – இது சரியா?
தொல்காப்பிய விதி யாது ?
இதோ !:-
“மகப்பெயர்க் கிளவிக் கின்னே சாரியை” (உயிர்மயங் . 16)
மக + கை = மகக் கை ×
மக + கை = மகங் கை ×
மக + கை = மக+இன் + கை (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் கை
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + செவி = மகச் செவி×
மக + செவி = மகஞ் செவி ×
மக + செவி = மக+இன் + செவி (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் செவி
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + தலை = மகத் தலை ×
மக + தலை = மகந் தலை ×
மக + தலை = மக+இன் + தலை (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் தலை
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + புறம் = மகப் புறம் ×
மக + புறம் = மகம் புறம் ×
மக + புறம் = மக+இன் + புறம் (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் புறம்
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மேல் எடுத்துக்காட்டுகளில் , வருசொற்கள் யாவும் வல்லெழுத்தை முதலாகக் கொண்டவை என்பதைக் கவனியுங்கள் !
அப்படியானால் ,மெல்லெழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் புணரவந்தால் ?
இளம்பூரணர் விடை தருகிறார் ! -
“சரியைப் பேறு வரையாது கூறியவழி நான்கு கணத்துக் கண்ணும் செல்லுமென்பதாகலின் , மகவின் ஞாண் என இயல்புக் கணத்துக் கணத்தும் கொள்க !”
அஃதாவது-
மக + ஞாண் = மகஞ்ஞாண் ×
மக + ஞாண் = மகஞாண் ×
மக + ஞாண் = மக + இன் + ஞாண் (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் ஞாண்
(வேற்றுமைப் புணர்ச்சி)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (255)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘மக’ என்ற சொல்லானது ‘இன்’ சாரியை பெற்று , ‘மகவின் கை’ , ‘மகவின் கால்’ என்றெல்லாம் புணரும் என்று சற்றுமுன் பார்த்தோம் !
அப்போது ஒரு மாணவனின் ஐயம் !-
“ இன் சாரியை பெற்றது சரி ! அதைப்போல அத்துச் சாரியை பெறலாமா?”.
“ஓ பெறலாமே” – தொல்காப்பியரின் விடை !:
“அத்தவண் வரினும் வரைநிலை யின்றே” (உயிர்மயங் . 17)
மக + கை = மகக் கை ×
மக + கை = மகங் கை ×
மக + கை = மக+இன் + கை (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் கை √
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + கை = மக+அத்து + கை (அத்து – சாரியை சேர்ந்தது) = மகத்துக் கை √
வேற்றுமைப் புணர்ச்சி)
மக + செவி = மகச் செவி×
மக + செவி = மகஞ் செவி ×
மக + செவி = மக+இன் + செவி (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் செவி √
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + செவி = மக+அத்து + செவி (அத்து – சாரியை சேர்ந்தது) = மகத்துச் செவி√
வேற்றுமைப் புணர்ச்சி)
மக + தலை = மகத் தலை ×
மக + தலை = மகந் தலை ×
மக + தலை = மக+இன் + தலை (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் தலை √
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + தலை = மக+அத்து + தலை (அத்து – சாரியை சேர்ந்தது) = மகத்துத் தலை√
(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + புறம் = மகப் புறம் ×
மக + புறம் = மகம் புறம் ×
மக + புறம் = மக+இன் + புறம் (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் புறம் √
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + புறம் = மக+அத்து + புறம் (அத்து – சாரியை சேர்ந்தது) = மகத்துப் புறம் √
(வேற்றுமைப் புணர்ச்சி)
இங்கே இளம்பூரணர் ஒரு சமுதாயச் செய்தியைச் சொல்கிறார் !
மகனுக்கோ மகளுக்கோ நல்ல பால்தரும் ஆட்டைக் கொடுத்தால் அந்த ஆடு ‘மகப்பால் யாடு’ எனப்படும் என்கிறார் !
இதனை, “ அவண் என்றதனால் , மகப்பால் யடு என வல்லெழுத்துப் பேறும் , … ‘நிலை’ என்றதனால் , ‘மகம்பால் யாடு’ என வல்லெழுத்துப் பேறும் கொள்க !”
என்ற அவரது உரையால் அறிகிறோம் !
மக + பால்யாடு = மக+இன் + பால்யாடு (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின்
பால்யாடு √ (வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + பால்யாடு = மக+அத்து + பால்யாடு (அத்து – சாரியை சேர்ந்தது) = மகத்துப்
பால்யாடு √(ப்-வல்லெழுத்துப் பேறு வந்த்து)(வேற்றுமைப்
புணர்ச்சி)
மக + பால்யாடு = மக+ம் + பால்யாடு (ம்- மெல்லெழுத்துப் பேறு வந்தது) = மகம்
பால்யாடு √(வேற்றுமைப்
புணர்ச்சி)
அப்போதைய மக்கள் வழக்காறுகளுக்கு மதிப்புக்கொடுத்துத்தான் இளம்பூரணர் உரை எழுதியுள்ளார் என்ற அவரது உரைக்கோட்பாடு (Ilampuranar’s Theory of Commentary) இதன்மூலம் அறியப்படுகிறதலாவா?
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘மக’ என்ற சொல்லானது ‘இன்’ சாரியை பெற்று , ‘மகவின் கை’ , ‘மகவின் கால்’ என்றெல்லாம் புணரும் என்று சற்றுமுன் பார்த்தோம் !
அப்போது ஒரு மாணவனின் ஐயம் !-
“ இன் சாரியை பெற்றது சரி ! அதைப்போல அத்துச் சாரியை பெறலாமா?”.
“ஓ பெறலாமே” – தொல்காப்பியரின் விடை !:
“அத்தவண் வரினும் வரைநிலை யின்றே” (உயிர்மயங் . 17)
மக + கை = மகக் கை ×
மக + கை = மகங் கை ×
மக + கை = மக+இன் + கை (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் கை √
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + கை = மக+அத்து + கை (அத்து – சாரியை சேர்ந்தது) = மகத்துக் கை √
வேற்றுமைப் புணர்ச்சி)
மக + செவி = மகச் செவி×
மக + செவி = மகஞ் செவி ×
மக + செவி = மக+இன் + செவி (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் செவி √
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + செவி = மக+அத்து + செவி (அத்து – சாரியை சேர்ந்தது) = மகத்துச் செவி√
வேற்றுமைப் புணர்ச்சி)
மக + தலை = மகத் தலை ×
மக + தலை = மகந் தலை ×
மக + தலை = மக+இன் + தலை (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் தலை √
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + தலை = மக+அத்து + தலை (அத்து – சாரியை சேர்ந்தது) = மகத்துத் தலை√
(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + புறம் = மகப் புறம் ×
மக + புறம் = மகம் புறம் ×
மக + புறம் = மக+இன் + புறம் (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் புறம் √
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + புறம் = மக+அத்து + புறம் (அத்து – சாரியை சேர்ந்தது) = மகத்துப் புறம் √
(வேற்றுமைப் புணர்ச்சி)
இங்கே இளம்பூரணர் ஒரு சமுதாயச் செய்தியைச் சொல்கிறார் !
மகனுக்கோ மகளுக்கோ நல்ல பால்தரும் ஆட்டைக் கொடுத்தால் அந்த ஆடு ‘மகப்பால் யாடு’ எனப்படும் என்கிறார் !
இதனை, “ அவண் என்றதனால் , மகப்பால் யடு என வல்லெழுத்துப் பேறும் , … ‘நிலை’ என்றதனால் , ‘மகம்பால் யாடு’ என வல்லெழுத்துப் பேறும் கொள்க !”
என்ற அவரது உரையால் அறிகிறோம் !
மக + பால்யாடு = மக+இன் + பால்யாடு (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின்
பால்யாடு √ (வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + பால்யாடு = மக+அத்து + பால்யாடு (அத்து – சாரியை சேர்ந்தது) = மகத்துப்
பால்யாடு √(ப்-வல்லெழுத்துப் பேறு வந்த்து)(வேற்றுமைப்
புணர்ச்சி)
மக + பால்யாடு = மக+ம் + பால்யாடு (ம்- மெல்லெழுத்துப் பேறு வந்தது) = மகம்
பால்யாடு √(வேற்றுமைப்
புணர்ச்சி)
அப்போதைய மக்கள் வழக்காறுகளுக்கு மதிப்புக்கொடுத்துத்தான் இளம்பூரணர் உரை எழுதியுள்ளார் என்ற அவரது உரைக்கோட்பாடு (Ilampuranar’s Theory of Commentary) இதன்மூலம் அறியப்படுகிறதலாவா?
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (256)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘பல’ எனும் சொல் (இது அகர ஈற்றுப் பெயர்ச் சொல்), வல்லெழுத்தை முதலாக உடைய சொற்களோடு புணரும்போது எப்படிப் புணரும் என்று கீழே காட்டுகிறார் !:-
“பலவற் றிறுதி யுருபிய னிலையும்” (உயிர்மயங். 18)
‘பலவற் றிறுதி’ – ‘பல’ எனும் சொல்லின் ஈறு,வல்லெழுத்தை முதலாக உடைய சொற்களோடு சேரும்போது,
‘உருபியல் நிலையும்’ – உருபியலில் (நூற்பா2) கூறியபடி ‘வற்று’ச் சாரியை பெறும் !
பல + கோடு = பலக் கோடு ×
பல + கோடு = பல + வற்று + கோடு (வற்று – சாரியை சேர்கிறது) = பலவற்றுக் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி)
பல + செவி = பலச் செவி ×
பல + செவி = பல + வற்று + செவி (வற்று – சாரியை சேர்கிறது) = பலவற்றுச் செவி √(வேற்றுமைப் புணர்ச்சி)
பல + தலை = பலத் தலை ×
பல + தலை = பல + வற்று + தலை (வற்று – சாரியை சேர்கிறது) = பலவற்றுத் தலை √(வேற்றுமைப் புணர்ச்சி)
பல + புறம் = பலப் புறம் ×
பல + புறம் = பல + வற்று + புறம் (வற்று – சாரியை சேர்கிறது) = பலவற்றுப் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி)
இளம்பூரணர், ‘பல’ என்ற ஒரு சொல்லுக்கு மட்டும்தான் எடுத்துக்காட்டுகள் கூறினார் !
நச்சினார்க்கினியர் , சற்றே விரித்துப் , ‘பல்ல’ , ‘உள்ள’, ‘இல்ல’ , ‘சில’ஆகிய அகர ஈற்றுப் பெயர்ச்சொற்களுக்கும் இந்தநூற்பா பொருந்தும் எனக் கருதி இவற்றுக்கும் எடுத்துக்காட்டுகள் கூறியுள்ளார் !-
1.பல்ல + கோடு = பல்லக் கோடு ×
பல்ல + கோடு = பல்ல + வற்று + கோடு (வற்று – சாரியை சேர்கிறது) = பல்லவற்றுக் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி)
பல்ல + செவி = பல்லச் செவி ×
பல்ல + செவி = பல்ல + வற்று + செவி (வற்று – சாரியை சேர்கிறது) = பல்லவற்றுச் செவி √(வேற்றுமைப் புணர்ச்சி)
பல்ல + தலை = பல்லத் தலை ×
பல்ல + தலை = பல்ல + வற்று + தலை (வற்று – சாரியை சேர்கிறது) = பல்லவற்றுத் தலை √(வேற்றுமைப் புணர்ச்சி)
பல்ல + புறம் = பல்லப் புறம் ×
பல்ல + புறம் = பல்ல + வற்று + புறம் (வற்று – சாரியை சேர்கிறது) = பல்லவற்றுப் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி)
2 .உள்ள + கோடு = உள்ளக் கோடு ×
உள்ள + கோடு = உள்ள + வற்று + கோடு (வற்று – சாரியை சேர்கிறது) = உள்ளவற்றுக் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி)
உள்ள + செவி = உள்ளச் செவி ×
உள்ள + செவி = உள்ள + வற்று + செவி (வற்று – சாரியை சேர்கிறது) = உள்ளவற்றுச் செவி √(வேற்றுமைப் புணர்ச்சி)
உள்ள + தலை = உள்ளத் தலை ×
உள்ள + தலை = உள்ள + வற்று + தலை (வற்று – சாரியை சேர்கிறது) = உள்ளவற்றுத் தலை √(வேற்றுமைப் புணர்ச்சி)
உள்ள + புறம் = உள்ளப் புறம் ×
உள்ள + புறம் = உள்ள + வற்று + புறம் (வற்று – சாரியை சேர்கிறது) = உள்ளவற்றுப் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி)
3 . இல்ல + கோடு = இல்லக் கோடு ×
இல்ல + கோடு = இல்ல + வற்று + கோடு (வற்று – சாரியை சேர்கிறது) = இல்லவற்றுக் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி)
இல்ல + செவி = இல்லச் செவி ×
இல்ல + செவி = இல்ல + வற்று + செவி (வற்று – சாரியை சேர்கிறது) = இல்லவற்றுச் செவி √(வேற்றுமைப் புணர்ச்சி)
இல்ல + தலை = இல்லத் தலை ×
இல்ல + தலை = இல்ல + வற்று + தலை (வற்று – சாரியை சேர்கிறது) = இல்லவற்றுத் தலை √(வேற்றுமைப் புணர்ச்சி)
இல்ல + புறம் = இல்லப் புறம் ×
இல்ல + புறம் = இல்ல + வற்று + புறம் (வற்று – சாரியை சேர்கிறது) =இல்லவற்றுப் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி)
.
4. சில + கோடு = சிலக் கோடு ×
சில + கோடு = சில + வற்று + கோடு (வற்று – சாரியை சேர்கிறது) =சிலவற்றுக் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி)
சில + செவி = சிலச் செவி ×
சில + செவி = சில + வற்று + செவி (வற்று – சாரியை சேர்கிறது) = சிலவற்றுச் செவி √(வேற்றுமைப் புணர்ச்சி)
சில + தலை = சிலத் தலை ×
சில + தலை = சில + வற்று + தலை (வற்று – சாரியை சேர்கிறது) = சிலவற்றுத் தலை √(வேற்றுமைப் புணர்ச்சி)
சில + புறம் = சிலப் புறம் ×
சில + புறம் = சில + வற்று + புறம் (வற்று – சாரியை சேர்கிறது) = சிலவற்றுப் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி)
‘பல’ , ‘சில’ ‘உள்ள’ – ஆகிய மூன்றும் வழக்கில் வருவன!
‘பல்ல’ , ‘சில்ல’ – ஆகிய இரண்டும் செய்யுளில் வருவன!
இதிலிருந்து உரையாசிரியர்கள் பாடற் சொற்களை மட்டுமின்றி வழக்குச் சொற்களையும் கருத்தில்கொண்டே உரை எழுதியுள்ளனர் என்பது புலனாகிறதல்லவா?
இதுவே தொல்காப்பிய உரைக்கோட்பாடு (Commentary Theory of Tholkappiyam)!
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘பல’ எனும் சொல் (இது அகர ஈற்றுப் பெயர்ச் சொல்), வல்லெழுத்தை முதலாக உடைய சொற்களோடு புணரும்போது எப்படிப் புணரும் என்று கீழே காட்டுகிறார் !:-
“பலவற் றிறுதி யுருபிய னிலையும்” (உயிர்மயங். 18)
‘பலவற் றிறுதி’ – ‘பல’ எனும் சொல்லின் ஈறு,வல்லெழுத்தை முதலாக உடைய சொற்களோடு சேரும்போது,
‘உருபியல் நிலையும்’ – உருபியலில் (நூற்பா2) கூறியபடி ‘வற்று’ச் சாரியை பெறும் !
பல + கோடு = பலக் கோடு ×
பல + கோடு = பல + வற்று + கோடு (வற்று – சாரியை சேர்கிறது) = பலவற்றுக் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி)
பல + செவி = பலச் செவி ×
பல + செவி = பல + வற்று + செவி (வற்று – சாரியை சேர்கிறது) = பலவற்றுச் செவி √(வேற்றுமைப் புணர்ச்சி)
பல + தலை = பலத் தலை ×
பல + தலை = பல + வற்று + தலை (வற்று – சாரியை சேர்கிறது) = பலவற்றுத் தலை √(வேற்றுமைப் புணர்ச்சி)
பல + புறம் = பலப் புறம் ×
பல + புறம் = பல + வற்று + புறம் (வற்று – சாரியை சேர்கிறது) = பலவற்றுப் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி)
இளம்பூரணர், ‘பல’ என்ற ஒரு சொல்லுக்கு மட்டும்தான் எடுத்துக்காட்டுகள் கூறினார் !
நச்சினார்க்கினியர் , சற்றே விரித்துப் , ‘பல்ல’ , ‘உள்ள’, ‘இல்ல’ , ‘சில’ஆகிய அகர ஈற்றுப் பெயர்ச்சொற்களுக்கும் இந்தநூற்பா பொருந்தும் எனக் கருதி இவற்றுக்கும் எடுத்துக்காட்டுகள் கூறியுள்ளார் !-
1.பல்ல + கோடு = பல்லக் கோடு ×
பல்ல + கோடு = பல்ல + வற்று + கோடு (வற்று – சாரியை சேர்கிறது) = பல்லவற்றுக் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி)
பல்ல + செவி = பல்லச் செவி ×
பல்ல + செவி = பல்ல + வற்று + செவி (வற்று – சாரியை சேர்கிறது) = பல்லவற்றுச் செவி √(வேற்றுமைப் புணர்ச்சி)
பல்ல + தலை = பல்லத் தலை ×
பல்ல + தலை = பல்ல + வற்று + தலை (வற்று – சாரியை சேர்கிறது) = பல்லவற்றுத் தலை √(வேற்றுமைப் புணர்ச்சி)
பல்ல + புறம் = பல்லப் புறம் ×
பல்ல + புறம் = பல்ல + வற்று + புறம் (வற்று – சாரியை சேர்கிறது) = பல்லவற்றுப் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி)
2 .உள்ள + கோடு = உள்ளக் கோடு ×
உள்ள + கோடு = உள்ள + வற்று + கோடு (வற்று – சாரியை சேர்கிறது) = உள்ளவற்றுக் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி)
உள்ள + செவி = உள்ளச் செவி ×
உள்ள + செவி = உள்ள + வற்று + செவி (வற்று – சாரியை சேர்கிறது) = உள்ளவற்றுச் செவி √(வேற்றுமைப் புணர்ச்சி)
உள்ள + தலை = உள்ளத் தலை ×
உள்ள + தலை = உள்ள + வற்று + தலை (வற்று – சாரியை சேர்கிறது) = உள்ளவற்றுத் தலை √(வேற்றுமைப் புணர்ச்சி)
உள்ள + புறம் = உள்ளப் புறம் ×
உள்ள + புறம் = உள்ள + வற்று + புறம் (வற்று – சாரியை சேர்கிறது) = உள்ளவற்றுப் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி)
3 . இல்ல + கோடு = இல்லக் கோடு ×
இல்ல + கோடு = இல்ல + வற்று + கோடு (வற்று – சாரியை சேர்கிறது) = இல்லவற்றுக் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி)
இல்ல + செவி = இல்லச் செவி ×
இல்ல + செவி = இல்ல + வற்று + செவி (வற்று – சாரியை சேர்கிறது) = இல்லவற்றுச் செவி √(வேற்றுமைப் புணர்ச்சி)
இல்ல + தலை = இல்லத் தலை ×
இல்ல + தலை = இல்ல + வற்று + தலை (வற்று – சாரியை சேர்கிறது) = இல்லவற்றுத் தலை √(வேற்றுமைப் புணர்ச்சி)
இல்ல + புறம் = இல்லப் புறம் ×
இல்ல + புறம் = இல்ல + வற்று + புறம் (வற்று – சாரியை சேர்கிறது) =இல்லவற்றுப் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி)
.
4. சில + கோடு = சிலக் கோடு ×
சில + கோடு = சில + வற்று + கோடு (வற்று – சாரியை சேர்கிறது) =சிலவற்றுக் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி)
சில + செவி = சிலச் செவி ×
சில + செவி = சில + வற்று + செவி (வற்று – சாரியை சேர்கிறது) = சிலவற்றுச் செவி √(வேற்றுமைப் புணர்ச்சி)
சில + தலை = சிலத் தலை ×
சில + தலை = சில + வற்று + தலை (வற்று – சாரியை சேர்கிறது) = சிலவற்றுத் தலை √(வேற்றுமைப் புணர்ச்சி)
சில + புறம் = சிலப் புறம் ×
சில + புறம் = சில + வற்று + புறம் (வற்று – சாரியை சேர்கிறது) = சிலவற்றுப் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி)
‘பல’ , ‘சில’ ‘உள்ள’ – ஆகிய மூன்றும் வழக்கில் வருவன!
‘பல்ல’ , ‘சில்ல’ – ஆகிய இரண்டும் செய்யுளில் வருவன!
இதிலிருந்து உரையாசிரியர்கள் பாடற் சொற்களை மட்டுமின்றி வழக்குச் சொற்களையும் கருத்தில்கொண்டே உரை எழுதியுள்ளனர் என்பது புலனாகிறதல்லவா?
இதுவே தொல்காப்பிய உரைக்கோட்பாடு (Commentary Theory of Tholkappiyam)!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (257)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘பல’ எனும் அகர ஈற்றுப் பெயர்சொற்களின் புணர்ச்சி விதிகளைப் பார்த்தோம் !
ஒருவழியாக அகர ஈற்றுப் பெயர்களை முடித்த தொல்காப்பியர் , ஆகார ஈற்றுப் பெயர்களைக் கையில் எடுக்கிறார் ! :-
“ஆகார விறுதி யகர வியற்றே ” (உயிர்மயங் . 19)
‘ஆகார இறுதி’ - ‘ஆ’வை ஈற்றிலே கொண்ட பெயர்ச் சொற்கள் , வல்லெழுத்துச் சொற்களுடன் புணரும்போது ,
‘ அகர இயற்றே’ – ‘அ’வை ஈற்றிலே கொண்ட பெயர்ச் சொற்கள் புணர்ந்ததுபோலப் புணரும் !
‘அ’வை ஈற்றிலே கொண்ட பெயர்ச் சொற்கள் புணரும் இலக்கணத்தைத் தொல்காப்பியர் உயிர்மயங்கியல் நூற்பா 1இல் விளக்கியதை நாம் விரிவாகப் பார்த்துள்ளோம் (விள + குறிது = விளக் குறிது)!
ஆகார ஈற்றுச் சொற்களின் புணச்சிகளை இளம்பூரணர் எடுத்துக்காட்டுகளின் அடிப்படையில் காண்போம் !-
1. ஆரா + கடிது = ஆரா கடிது ×
ஆரா + கடிது = ஆராக் கடிது √ (க்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
புணர்ச்சி)
ஆரா + சிறிது = ஆரா சிறிது ×
ஆரா + சிறிது = ஆராச் சிறிது √ (ச்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
புணர்ச்சி)
ஆரா + தீது = ஆரா தீது ×
ஆரா + தீது = ஆராத் தீது √ (த்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
புணர்ச்சி)
ஆரா + பெரிது = ஆரா பெரிது ×
ஆரா + பெரிது = ஆராப் பெரிது √ (ப்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
புணர்ச்சி)
(ஆரா – பாம்பு)
2 . தாரா + கடிது = தாரா கடிது ×
தாரா + கடிது = தாராக் கடிது √ (க்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
புணர்ச்சி)
தாரா + சிறிது = தாரா சிறிது ×
தாரா + சிறிது = தாராச் சிறிது √ (ச்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
புணர்ச்சி)
தாரா + தீது = தாரா தீது ×
தாரா + தீது = தாராத் தீது √ (த்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
புணர்ச்சி)
தாரா + பெரிது = தாரா பெரிது ×
தாரா + பெரிது = தாராப் பெரிது √ (ப்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
புணர்ச்சி)
(தாரா – குள்ள வாத்து)
இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளை மட்டும் இளம்பூரணர் கூற , நச்சினார்க்கினியர் ‘மூங்கா’என்ற இன்னொரு ஆகார ஈற்றுப் பெயரை அறிமுகப்படுத்துகிறார் !-
மூங்கா + கடிது = மூங்கா கடிது ×
மூங்கா + கடிது = மூங்காக் கடிது √ (க்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
புணர்ச்சி)
மூங்கா + சிறிது = மூங்கா சிறிது ×
மூங்கா + சிறிது = மூங்காச் சிறிது √ (ச்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
புணர்ச்சி)
மூங்கா + தீது = மூங்கா தீது ×
மூங்கா + தீது = மூங்காத் தீது √ (த்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
புணர்ச்சி)
மூங்கா + பெரிது = மூங்கா பெரிது ×
மூங்கா + பெரிது = மூங்காப் பெரிது √ (ப்- வல்லெழுத்துப் பெற்றது)
(அல்வழிப் புணர்ச்சி)
(மூங்கா – கீரி)
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘பல’ எனும் அகர ஈற்றுப் பெயர்சொற்களின் புணர்ச்சி விதிகளைப் பார்த்தோம் !
ஒருவழியாக அகர ஈற்றுப் பெயர்களை முடித்த தொல்காப்பியர் , ஆகார ஈற்றுப் பெயர்களைக் கையில் எடுக்கிறார் ! :-
“ஆகார விறுதி யகர வியற்றே ” (உயிர்மயங் . 19)
‘ஆகார இறுதி’ - ‘ஆ’வை ஈற்றிலே கொண்ட பெயர்ச் சொற்கள் , வல்லெழுத்துச் சொற்களுடன் புணரும்போது ,
‘ அகர இயற்றே’ – ‘அ’வை ஈற்றிலே கொண்ட பெயர்ச் சொற்கள் புணர்ந்ததுபோலப் புணரும் !
‘அ’வை ஈற்றிலே கொண்ட பெயர்ச் சொற்கள் புணரும் இலக்கணத்தைத் தொல்காப்பியர் உயிர்மயங்கியல் நூற்பா 1இல் விளக்கியதை நாம் விரிவாகப் பார்த்துள்ளோம் (விள + குறிது = விளக் குறிது)!
ஆகார ஈற்றுச் சொற்களின் புணச்சிகளை இளம்பூரணர் எடுத்துக்காட்டுகளின் அடிப்படையில் காண்போம் !-
1. ஆரா + கடிது = ஆரா கடிது ×
ஆரா + கடிது = ஆராக் கடிது √ (க்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
புணர்ச்சி)
ஆரா + சிறிது = ஆரா சிறிது ×
ஆரா + சிறிது = ஆராச் சிறிது √ (ச்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
புணர்ச்சி)
ஆரா + தீது = ஆரா தீது ×
ஆரா + தீது = ஆராத் தீது √ (த்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
புணர்ச்சி)
ஆரா + பெரிது = ஆரா பெரிது ×
ஆரா + பெரிது = ஆராப் பெரிது √ (ப்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
புணர்ச்சி)
(ஆரா – பாம்பு)
2 . தாரா + கடிது = தாரா கடிது ×
தாரா + கடிது = தாராக் கடிது √ (க்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
புணர்ச்சி)
தாரா + சிறிது = தாரா சிறிது ×
தாரா + சிறிது = தாராச் சிறிது √ (ச்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
புணர்ச்சி)
தாரா + தீது = தாரா தீது ×
தாரா + தீது = தாராத் தீது √ (த்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
புணர்ச்சி)
தாரா + பெரிது = தாரா பெரிது ×
தாரா + பெரிது = தாராப் பெரிது √ (ப்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
புணர்ச்சி)
(தாரா – குள்ள வாத்து)
இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளை மட்டும் இளம்பூரணர் கூற , நச்சினார்க்கினியர் ‘மூங்கா’என்ற இன்னொரு ஆகார ஈற்றுப் பெயரை அறிமுகப்படுத்துகிறார் !-
மூங்கா + கடிது = மூங்கா கடிது ×
மூங்கா + கடிது = மூங்காக் கடிது √ (க்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
புணர்ச்சி)
மூங்கா + சிறிது = மூங்கா சிறிது ×
மூங்கா + சிறிது = மூங்காச் சிறிது √ (ச்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
புணர்ச்சி)
மூங்கா + தீது = மூங்கா தீது ×
மூங்கா + தீது = மூங்காத் தீது √ (த்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
புணர்ச்சி)
மூங்கா + பெரிது = மூங்கா பெரிது ×
மூங்கா + பெரிது = மூங்காப் பெரிது √ (ப்- வல்லெழுத்துப் பெற்றது)
(அல்வழிப் புணர்ச்சி)
(மூங்கா – கீரி)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (258)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அகர ஈற்றுப் பெயர்ச்சொற்கள், ஆகார ஈற்றுப் பெயர்ச்சொற்கள் , வல்லெழுத்துகளை முதலாகக் கொண்ட வருமொழிகளோ
டு எப்படிப் புணரும் எனக் காட்டினார் தொல்காப்பியர் !
இப்போது , வினையெச்சச் சொற்களைக் கையில் எடுக்கிறார் !
‘உண்ணாது சென்றான்’ என்ற பொருளில் வரும்,
‘உண்ணாச் சென்றான்’ – இது சரியா?
‘உண்ணா சென்றான்’ – இது சரியா?
- தொல்காப்பிய விதி யாது?
விதி –
“செய்யா வென்னும் வினையெஞ்சு கிளவியும்
அவ்வியல் திரியா தென்மனார் புலவர்” (உயிர்மயங் . 20)
‘செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும் ’ – ‘செய்யா’ எனும் வாய்பாட்டில் வரக்கூடிய வினையெச்சச் சொல்லும் ,
‘அவ்வியல் திரியாது என்மனார் புலவர்’ – முன் நூற்பாவில் (உயிர்மயங். 19) கூறியபடி , வல்லெழுத்துச் சந்தி பெறுவதில் மாறாது என்று புலவர்கள் கூறுவார்கள்!
உண்ணா + கொண்டான் = உண்ணா கொண்டான் ×
உண்ணா + கொண்டான் = உண்ணாக் கொண்டான் √ (க்- வல்லெழுத்துச்
சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)
உண்ணா + சென்றான் = உண்ணா சென்றான் ×
உண்ணா + சென்றான் = உண்ணாச் சென்றான் √ (ச்- வல்லெழுத்துச்
சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)
உண்ணா + தந்தான் = உண்ணா தந்தான் ×
உண்ணா + தந்தான் = உண்ணாத் தந்தான் √ (த்- வல்லெழுத்துச்
சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)
உண்ணா + போயினான் = உண்ணா போயினான் ×
உண்ணா + போயினான் = உண்ணாப் போயினான் √ (ப்- வல்லெழுத்துச்
சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)
இங்கே , இளம்பூரணர் ஓர் உரை நுட்பம் கூறுகிறார் !-
“ செய்யா என்னும் பெயரெச்சமும் அவ்வாறு முடியுமெனக் கொள்க !”
‘சாப்பிடாத கொற்றன்’ என்ற பொருளில் வருவது – ‘உண்ணாக் கொற்றன்’ .
இங்கே ‘உண்ணா’ எனும் சொல், ‘செய்யா’ எனும் வாய்பாட்டில் உள்ளது ;அவ்வளவுதன் !
உண்ணா + கொற்றன் = உண்ணா கொற்றன் ×
உண்ணா + கொற்றன் = உண்ணாக் கொற்றன் √(க்- வல்லெழுத்துச்
சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)
உண்ணா + சாத்தன் = உண்ணா சாத்தன் ×
உண்ணா + சாத்தன் = உண்ணாச் சாத்தன் √(ச்- வல்லெழுத்துச்
சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)
உண்ணா + தேவன் = உண்ணா தேவன் ×
உண்ணா + தேவன் = உண்ணாத் தேவன் √(த்- வல்லெழுத்துச்
சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)
உண்ணா + பூதன் = உண்ணா பூதன் ×
உண்ணா + பூதன் = உண்ணாப் பூதன் √(ப்- வல்லெழுத்துச்
சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)
பார்த்தீர்களா?
தொல்காப்பியர் , வினையெச்சத்தை வைத்து விதி எழுதினால் , உரையாசிரியர்கள் ஒரு படி மேலேபோய் , அந்த விதி பெயரெச்சத்திற்கும் பொருந்துமா எனச் சிந்தித்துள்ளார்களே ?
இதுதான் உரைக்கோட்பாடு (Theory of Commentary) என்பது !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அகர ஈற்றுப் பெயர்ச்சொற்கள், ஆகார ஈற்றுப் பெயர்ச்சொற்கள் , வல்லெழுத்துகளை முதலாகக் கொண்ட வருமொழிகளோ
டு எப்படிப் புணரும் எனக் காட்டினார் தொல்காப்பியர் !
இப்போது , வினையெச்சச் சொற்களைக் கையில் எடுக்கிறார் !
‘உண்ணாது சென்றான்’ என்ற பொருளில் வரும்,
‘உண்ணாச் சென்றான்’ – இது சரியா?
‘உண்ணா சென்றான்’ – இது சரியா?
- தொல்காப்பிய விதி யாது?
விதி –
“செய்யா வென்னும் வினையெஞ்சு கிளவியும்
அவ்வியல் திரியா தென்மனார் புலவர்” (உயிர்மயங் . 20)
‘செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும் ’ – ‘செய்யா’ எனும் வாய்பாட்டில் வரக்கூடிய வினையெச்சச் சொல்லும் ,
‘அவ்வியல் திரியாது என்மனார் புலவர்’ – முன் நூற்பாவில் (உயிர்மயங். 19) கூறியபடி , வல்லெழுத்துச் சந்தி பெறுவதில் மாறாது என்று புலவர்கள் கூறுவார்கள்!
உண்ணா + கொண்டான் = உண்ணா கொண்டான் ×
உண்ணா + கொண்டான் = உண்ணாக் கொண்டான் √ (க்- வல்லெழுத்துச்
சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)
உண்ணா + சென்றான் = உண்ணா சென்றான் ×
உண்ணா + சென்றான் = உண்ணாச் சென்றான் √ (ச்- வல்லெழுத்துச்
சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)
உண்ணா + தந்தான் = உண்ணா தந்தான் ×
உண்ணா + தந்தான் = உண்ணாத் தந்தான் √ (த்- வல்லெழுத்துச்
சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)
உண்ணா + போயினான் = உண்ணா போயினான் ×
உண்ணா + போயினான் = உண்ணாப் போயினான் √ (ப்- வல்லெழுத்துச்
சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)
இங்கே , இளம்பூரணர் ஓர் உரை நுட்பம் கூறுகிறார் !-
“ செய்யா என்னும் பெயரெச்சமும் அவ்வாறு முடியுமெனக் கொள்க !”
‘சாப்பிடாத கொற்றன்’ என்ற பொருளில் வருவது – ‘உண்ணாக் கொற்றன்’ .
இங்கே ‘உண்ணா’ எனும் சொல், ‘செய்யா’ எனும் வாய்பாட்டில் உள்ளது ;அவ்வளவுதன் !
உண்ணா + கொற்றன் = உண்ணா கொற்றன் ×
உண்ணா + கொற்றன் = உண்ணாக் கொற்றன் √(க்- வல்லெழுத்துச்
சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)
உண்ணா + சாத்தன் = உண்ணா சாத்தன் ×
உண்ணா + சாத்தன் = உண்ணாச் சாத்தன் √(ச்- வல்லெழுத்துச்
சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)
உண்ணா + தேவன் = உண்ணா தேவன் ×
உண்ணா + தேவன் = உண்ணாத் தேவன் √(த்- வல்லெழுத்துச்
சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)
உண்ணா + பூதன் = உண்ணா பூதன் ×
உண்ணா + பூதன் = உண்ணாப் பூதன் √(ப்- வல்லெழுத்துச்
சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)
பார்த்தீர்களா?
தொல்காப்பியர் , வினையெச்சத்தை வைத்து விதி எழுதினால் , உரையாசிரியர்கள் ஒரு படி மேலேபோய் , அந்த விதி பெயரெச்சத்திற்கும் பொருந்துமா எனச் சிந்தித்துள்ளார்களே ?
இதுதான் உரைக்கோட்பாடு (Theory of Commentary) என்பது !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (259)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘இரவும் பகலும்’ என்ற பொருளைத் தெரிவிக்க,
‘இரா பகல்’ – இது சரியா?
‘இராஅப் பகல்’ – இது சரியா?
- தொல்காப்பிய விதி யாது ?
இதோ விதி ! :-
“உம்மை எஞ்சிய விருபெயர்த் தொகைமொழி
மெய்ம்மை யாக வகர மிகுமே ” (உயிர்மயங். 21)
‘உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகை மொழி’ – ‘உம்’
என்ற சொல் இல்லாது , ஆகர ஈற்று நிலைமொழிச் சொல்லோடு, இன்னொரு பெயர்ச் சொல் சேர்ந்து ஒரு தொகைச் சொல்லாக நிற்கும்போது,
‘மெய்ம்மையாக அகரம் மிகுமே’ – உண்மையில் சந்தியாக ‘அ’ தோன்றும் !
உவா + பதினான்கு = உவாப் பதினான்கு ×
உவா + பதினான்கு = உவா +அ + பதினான்கு (அ- தோன்றியது) =
உவாஅப் பதினான்கு √(ப்- சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
[உவா – பௌர்ணிமை (Full moon) யையும் , அமாவாசை(New moon)யையும் குறிக்கும் பொதுச் சொல் ]
இரா + பகல் = இராப் பகல் ×
இரா + பகல் = இரா +அ + பகல் (அ- தோன்றியது) =
இராஅப் பகல் √(ப்- சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
இங்கே இளம்பூரணர் , “இம் முடிபு இருபெயரொட்டுப் பண்புத் தொகைக்கும் கொள்க .” என்கிறார் !
என்ன பொருள்?
அரா + குட்டி = அராக் குட்டி ×
அரா + குட்டி = அராஅக் குட்டி √ (அ - தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)
‘அராஅக் குட்டி’ = குட்டியாகிய பாம்பு ; இருபெயரொட்டுப் பண்புத் தொகை. ‘ஆகிய’ என்ற பண்பு உருபு மறைந்து வந்ததைக் கவனிக்க !
அடுத்து , இளம்பூரணர் , “எழுவாய் முடிபிற்கும் அகரப் பேறு கொள்க” என்கிறார் !
என்ன பொருள்?
உவா + கொடிது = உவாக் கொடிது ×
உவா + கொடிது = உவாஅக் கொடிது √(அ - தோன்றியது) (அல்வழிப்
புணர்ச்சி)
‘உவாஅக் கொடிது’ என்பதில் , ‘உவா’ – எழுவாய் ; ‘உவாஅக் கொடிது’ – எழுவாய்த் தொடர் .
அடுத்து , இளம்பூரணர் , “பெயரெச்சத்திற்கும் அகரப் பேறு கொள்க” என்கிறார் !
என்ன பொருள்?
உவா + காக்கை = உவாக் காக்கை ×
உவா + காக்கை = உவாஅக் காக்கை √(அ - தோன்றியது) (அல்வழிப்
புணர்ச்சி)
உவாஅக் காக்கை – உவா நாளில் வரும் காக்கை ; எனவே,
‘உவாஅக் காக்கை ’ என்பதில் , ‘உவா’ , பெயரெச்சம் !
‘உவாஅக் காக்கை ’ – பெயரெச்சத் தொடர் .
மேலை எடுத்துக்காட்டுகளில் , வருமொழிகள் யாவையும் வல்லெழுத்தை முதலாக உடையன என்பதைக் கவனியுங்கள் !
எனவேதான் இளம்பூரணர் , “இயல்புக் கணத்துக் கண்ணும் அகரப் பேறு கொள்க” என்றார் !
என்ன பொருள்?
இறா + வழுதுணங்காய் = இறா வழுதுணங்காய் ×
இறா + வழுதுணங்காய் = இறாஅ வழுதுணங்காய் √(அ - தோன்றியது)
(அல்வழிப் புணர்ச்சி)
இங்கே , ‘வழுதுணங்காய்’ என்ற வருமொழி முதல் எழுத்து, இடையின எழுத்து என்பதைக் கவனியுங்கள் !
(இறாஅ வழுதுணங்காய் – இறா மீனும் கத்தரிக்காயும்)
‘இராஅப் பகல்’ என்ற தொல்காப்பிய விதியைப் பார்த்தோம் ! ஆனால் , இன்று இப்புணர்ச்சி இல்லை ! ‘இராப் பகலாக உழைக்கிறாள்’ என்றுதானே இன்று எழுதுகிறோம் ?
‘இராப் பகல்’ என்றால், ‘இல்லாத பகல்’ என்றொரு பொருளும் ஏற்படுமல்லவா? இதைத் தவிர்க்கவே, தொல்காப்பியர் நாளில், ‘அ’ சேர்த்து எழுதும் முறை தோன்றியது ! ஆனால் எழுதும்போது ‘அ’வைஎழுதிவிடலாமே தவிர சொல்லும்போது தனியாக நிறுத்தி ‘அ’வை மட்டும் உச்சரிக்கமுடியாது ! இதனால்தான் ‘அ’ சேர்வது வழக்கொழிந்தது !
எனவே ,
இரா பகல் ×
இராஅப் பகல் √
இராப் பகல் √
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘இரவும் பகலும்’ என்ற பொருளைத் தெரிவிக்க,
‘இரா பகல்’ – இது சரியா?
‘இராஅப் பகல்’ – இது சரியா?
- தொல்காப்பிய விதி யாது ?
இதோ விதி ! :-
“உம்மை எஞ்சிய விருபெயர்த் தொகைமொழி
மெய்ம்மை யாக வகர மிகுமே ” (உயிர்மயங். 21)
‘உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகை மொழி’ – ‘உம்’
என்ற சொல் இல்லாது , ஆகர ஈற்று நிலைமொழிச் சொல்லோடு, இன்னொரு பெயர்ச் சொல் சேர்ந்து ஒரு தொகைச் சொல்லாக நிற்கும்போது,
‘மெய்ம்மையாக அகரம் மிகுமே’ – உண்மையில் சந்தியாக ‘அ’ தோன்றும் !
உவா + பதினான்கு = உவாப் பதினான்கு ×
உவா + பதினான்கு = உவா +அ + பதினான்கு (அ- தோன்றியது) =
உவாஅப் பதினான்கு √(ப்- சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
[உவா – பௌர்ணிமை (Full moon) யையும் , அமாவாசை(New moon)யையும் குறிக்கும் பொதுச் சொல் ]
இரா + பகல் = இராப் பகல் ×
இரா + பகல் = இரா +அ + பகல் (அ- தோன்றியது) =
இராஅப் பகல் √(ப்- சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
இங்கே இளம்பூரணர் , “இம் முடிபு இருபெயரொட்டுப் பண்புத் தொகைக்கும் கொள்க .” என்கிறார் !
என்ன பொருள்?
அரா + குட்டி = அராக் குட்டி ×
அரா + குட்டி = அராஅக் குட்டி √ (அ - தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)
‘அராஅக் குட்டி’ = குட்டியாகிய பாம்பு ; இருபெயரொட்டுப் பண்புத் தொகை. ‘ஆகிய’ என்ற பண்பு உருபு மறைந்து வந்ததைக் கவனிக்க !
அடுத்து , இளம்பூரணர் , “எழுவாய் முடிபிற்கும் அகரப் பேறு கொள்க” என்கிறார் !
என்ன பொருள்?
உவா + கொடிது = உவாக் கொடிது ×
உவா + கொடிது = உவாஅக் கொடிது √(அ - தோன்றியது) (அல்வழிப்
புணர்ச்சி)
‘உவாஅக் கொடிது’ என்பதில் , ‘உவா’ – எழுவாய் ; ‘உவாஅக் கொடிது’ – எழுவாய்த் தொடர் .
அடுத்து , இளம்பூரணர் , “பெயரெச்சத்திற்கும் அகரப் பேறு கொள்க” என்கிறார் !
என்ன பொருள்?
உவா + காக்கை = உவாக் காக்கை ×
உவா + காக்கை = உவாஅக் காக்கை √(அ - தோன்றியது) (அல்வழிப்
புணர்ச்சி)
உவாஅக் காக்கை – உவா நாளில் வரும் காக்கை ; எனவே,
‘உவாஅக் காக்கை ’ என்பதில் , ‘உவா’ , பெயரெச்சம் !
‘உவாஅக் காக்கை ’ – பெயரெச்சத் தொடர் .
மேலை எடுத்துக்காட்டுகளில் , வருமொழிகள் யாவையும் வல்லெழுத்தை முதலாக உடையன என்பதைக் கவனியுங்கள் !
எனவேதான் இளம்பூரணர் , “இயல்புக் கணத்துக் கண்ணும் அகரப் பேறு கொள்க” என்றார் !
என்ன பொருள்?
இறா + வழுதுணங்காய் = இறா வழுதுணங்காய் ×
இறா + வழுதுணங்காய் = இறாஅ வழுதுணங்காய் √(அ - தோன்றியது)
(அல்வழிப் புணர்ச்சி)
இங்கே , ‘வழுதுணங்காய்’ என்ற வருமொழி முதல் எழுத்து, இடையின எழுத்து என்பதைக் கவனியுங்கள் !
(இறாஅ வழுதுணங்காய் – இறா மீனும் கத்தரிக்காயும்)
‘இராஅப் பகல்’ என்ற தொல்காப்பிய விதியைப் பார்த்தோம் ! ஆனால் , இன்று இப்புணர்ச்சி இல்லை ! ‘இராப் பகலாக உழைக்கிறாள்’ என்றுதானே இன்று எழுதுகிறோம் ?
‘இராப் பகல்’ என்றால், ‘இல்லாத பகல்’ என்றொரு பொருளும் ஏற்படுமல்லவா? இதைத் தவிர்க்கவே, தொல்காப்பியர் நாளில், ‘அ’ சேர்த்து எழுதும் முறை தோன்றியது ! ஆனால் எழுதும்போது ‘அ’வைஎழுதிவிடலாமே தவிர சொல்லும்போது தனியாக நிறுத்தி ‘அ’வை மட்டும் உச்சரிக்கமுடியாது ! இதனால்தான் ‘அ’ சேர்வது வழக்கொழிந்தது !
எனவே ,
இரா பகல் ×
இராஅப் பகல் √
இராப் பகல் √
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (260)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உயிர் மயங்கியலில் , உயிர் எழுத்துகளை ஈற்றிலே கொண்ட சொற்கள் பிறசொற்களோடு எப்படிப் புணரும் என்று பார்த்துவருகிறோம் !
சந்தி பெற்றுப் புணரும் சில சொற்களை முன் ஆய்வில் பார்த்தோம் !
இப்போது தொல்காப்பியர் சந்தி எதுவும் பெறாது , இயல்பாகப் புணரும் சொற்களைப் பட்டியல் இடுகிறார் ! :-
1 . பசுவைக் குறிக்கும் ‘ஆ’ என்ற சொல் –
ஆ + குறிது = ஆக் குறிது ×
ஆ + குறிது = ஆ குறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
ஆ + சிறிது = ஆச் சிறிது ×
ஆ + சிறிது = ஆ சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
ஆ + தீது = ஆத் தீது ×
ஆ + தீது = ஆ தீது √ (அல்வழிப் புணர்ச்சி)
ஆ + பெரிது = ஆப் பெரிது ×
ஆ + பெரிது = ஆ பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)
இங்கே தொல்காப்பியர் கூறியுள்ளது ‘ஆ’வை ஈற்றிலே கொண்ட சொல்லுக்கான புணர்ச்சி பற்றியது அல்ல ! ‘ஆ’ என்ற தனிச் சொல்லின் புணர்ச்சி பற்றியதாகும் ! இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது !
’ஆ’வை ஈற்றிலே கொண்ட சொல்லானால், சந்தி வரும் ! தாரா + குறிது = தாராக் குறிது(அல்வழிப் புணர்ச்சி) !
2 . விலங்கைக் குறிக்கும் ‘மா’ எனும் சொல் !:-
மா + குறிது = மாக் குறிது ×
மா + குறிது = மா குறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
மா + சிறிது = மாச் சிறிது ×
மா + சிறிது = மா சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
மா + தீது = மாத் தீது ×
மா + தீது = மா தீது √ (அல்வழிப் புணர்ச்சி)
மா + பெரிது = மாப் பெரிது ×
மா + பெரிது = மா பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)
3. விளித்தலை உடைய பெயர்ச்சொல்லாகிய உயர்திணைச் சொல் !:-
ஊரா + கொள் = ஊராக் கொள் ×
ஊரா + கொள் = ஊரா கொள் √(அல்வழிப் புணர்ச்சி)
ஊரா + செல்= ஊராச் செல் ×
ஊரா + செல் = ஊரா செல் √(அல்வழிப் புணர்ச்சி)
ஊரா + தா = ஊராத் தா ×
ஊரா + தா = ஊரா தா √(அல்வழிப் புணர்ச்சி)
ஊரா + போ = ஊராப் போ ×
ஊரா + போ = ஊரா போ √ (அல்வழிப் புணர்ச்சி)
(ஊரா – ஊரனே; ஊரன் – பெயர்ச் சொல்)
4 . வினாப் பொருளில் வரும் ‘யா’ என்ற பெயர்ச் சொல் !:-
யா + குறிய = யாக் குறிய ×
யா + குறிய = யா குறிய √(அல்வழிப் புணர்ச்சி)
யா + சிறிய = யாச் சிறிய ×
யா + சிறிய = யா சிறிய √(அல்வழிப் புணர்ச்சி)
யா + தீய = யாத் தீய ×
யா + தீய = யா தீய √(அல்வழிப் புணர்ச்சி)
யா + பெரிய = யாப் பெரிய ×
யா + பெரிய = யா பெரிய √ (அல்வழிப் புணர்ச்சி)
(யா – யாவை ; யா குறிய – எவை குட்டையானவை ?)
5 . ‘ஆ’வை ஈற்றிலே கொண்ட , பன்மையை உணர்த்தும், வினை முற்று !:-
உண்ணா + குதிரை = உண்ணாக் குதிரை ×
உண்ணா + குதிரை = உண்ணா குதிரை √ (அல்வழிப் புணர்ச்சி)
உண்ணா + செந்நாய் = உண்ணாச் செந்நாய் ×
உண்ணா + செந்நாய் = உண்ணா செந்நாய் √ (அல்வழிப் புணர்ச்சி)
உண்ணா + தகர் = உண்ணாத் தகர் ×
உண்ணா + தகர் = உண்ணா தகர் √ (அல்வழிப் புணர்ச்சி)
உண்ணா + பன்றி = உண்ணாப் பன்றி ×
உண்ணா + பன்றி = உண்ணா பன்றி √ (அல்வழிப் புணர்ச்சி)
(உண்ணா – உண்ண மாட்டா; உண்ணா - ‘ஆ’வை ஈற்றிலே கொண்ட , பன்மையை உணர்த்தும், வினை முற்று)
6 . ‘மியா’ என்ற, முன்னிலை வினைச் சொல்லைக் குறித்துவரும் , ஏவல் ,
உரையசைச் சொல் !:-
கேண்மியா + கொற்றா = கேண்மியாக் கொற்றா ×
கேண்மியா + கொற்றா = கேண்மியா கொற்றா √(அல்வழிப் புணர்ச்சி)
கேண்மியா + சாத்தா = கேண்மியாச் சாத்தா ×
கேண்மியா + சாத்தா = கேண்மியா சாத்தா √ (அல்வழிப் புணர்ச்சி)
கேண்மியா + தேவா = கேண்மியாத் தேவா ×
கேண்மியா + தேவா = கேண்மியா தேவா √ (அல்வழிப் புணர்ச்சி)
கேண்மியா + பூதா = கேண்மியாப் பூதா ×
கேண்மியா + பூதா = கேண்மியா பூதா √ ( அல்வழிப் புணர்ச்சி)
(கேண்மியா – ‘கேள்’ என்ற வினைச் சொல்லோடு , ‘மியா’ என்ற அசைச் சொல் ஈறாக வந்துள்ளதைக் கவனிக்க ; ‘மியா’ என்பது தனிச் சொல்லாக இது வராது ! )
7 . ‘ஆ’வை ஈற்றிலே கொண்ட , தனது தொழிலைச் சொல்லும், வினா !:-
உண்கா + கொற்றா = உண்காக் கொற்றா ×
உண்கா + கொற்றா = உண்கா கொற்றா √ ( அல்வழிப் புணர்ச்சி)
உண்கா + சாத்தா = உண்காச் சாத்தா ×
உண்கா + சாத்தா = உண்கா சாத்தா √ ( அல்வழிப் புணர்ச்சி)
உண்கா + தேவா = உண்காத் தேவா ×
உண்கா + தேவா = உண்கா தேவா √ ( அல்வழிப் புணர்ச்சி)
உண்கா + பூதா = உண்காப் பூதா ×
உண்கா + பூதா = உண்கா பூதா √ ( அல்வழிப் புணர்ச்சி)
(உண்கா – உண்பேனோ ? ‘உண்பேனோ’ என்பது தன் வினையைக் குறிக்கும் என்பதைக் கவனிக்க !)
மேலே 7 சொற்களும் இயல்பாகப் புணர்ந்ததைப் பார்த்தோமல்லவா?
இதைக் கூறும் தொல்காப்பிய நூற்பா ! -
“ஆவு மாவும் விளிப்பெயர்க் கிளவியும்
யாவென் வினாவும் பலவற் றிறுதியும்
ஏவல் குறித்த வுரையசை மியாவும்
தன்றொழி லுரைக்கும் வினாவின் கிளவியோ
டன்றி யனைத்து மியல்பென மொழிப” (உயிர்மயங் . 22)
பெயர்ச்சொல், வினைச்சொல்லோடு நிற்காது அசைச்சொல்லையும் கணக்கில் கொண்டு தொல்காப்பியர் விதி கூறியுள்ளது – வியப்பு ! வியப்பு !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உயிர் மயங்கியலில் , உயிர் எழுத்துகளை ஈற்றிலே கொண்ட சொற்கள் பிறசொற்களோடு எப்படிப் புணரும் என்று பார்த்துவருகிறோம் !
சந்தி பெற்றுப் புணரும் சில சொற்களை முன் ஆய்வில் பார்த்தோம் !
இப்போது தொல்காப்பியர் சந்தி எதுவும் பெறாது , இயல்பாகப் புணரும் சொற்களைப் பட்டியல் இடுகிறார் ! :-
1 . பசுவைக் குறிக்கும் ‘ஆ’ என்ற சொல் –
ஆ + குறிது = ஆக் குறிது ×
ஆ + குறிது = ஆ குறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
ஆ + சிறிது = ஆச் சிறிது ×
ஆ + சிறிது = ஆ சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
ஆ + தீது = ஆத் தீது ×
ஆ + தீது = ஆ தீது √ (அல்வழிப் புணர்ச்சி)
ஆ + பெரிது = ஆப் பெரிது ×
ஆ + பெரிது = ஆ பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)
இங்கே தொல்காப்பியர் கூறியுள்ளது ‘ஆ’வை ஈற்றிலே கொண்ட சொல்லுக்கான புணர்ச்சி பற்றியது அல்ல ! ‘ஆ’ என்ற தனிச் சொல்லின் புணர்ச்சி பற்றியதாகும் ! இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது !
’ஆ’வை ஈற்றிலே கொண்ட சொல்லானால், சந்தி வரும் ! தாரா + குறிது = தாராக் குறிது(அல்வழிப் புணர்ச்சி) !
2 . விலங்கைக் குறிக்கும் ‘மா’ எனும் சொல் !:-
மா + குறிது = மாக் குறிது ×
மா + குறிது = மா குறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
மா + சிறிது = மாச் சிறிது ×
மா + சிறிது = மா சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
மா + தீது = மாத் தீது ×
மா + தீது = மா தீது √ (அல்வழிப் புணர்ச்சி)
மா + பெரிது = மாப் பெரிது ×
மா + பெரிது = மா பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)
3. விளித்தலை உடைய பெயர்ச்சொல்லாகிய உயர்திணைச் சொல் !:-
ஊரா + கொள் = ஊராக் கொள் ×
ஊரா + கொள் = ஊரா கொள் √(அல்வழிப் புணர்ச்சி)
ஊரா + செல்= ஊராச் செல் ×
ஊரா + செல் = ஊரா செல் √(அல்வழிப் புணர்ச்சி)
ஊரா + தா = ஊராத் தா ×
ஊரா + தா = ஊரா தா √(அல்வழிப் புணர்ச்சி)
ஊரா + போ = ஊராப் போ ×
ஊரா + போ = ஊரா போ √ (அல்வழிப் புணர்ச்சி)
(ஊரா – ஊரனே; ஊரன் – பெயர்ச் சொல்)
4 . வினாப் பொருளில் வரும் ‘யா’ என்ற பெயர்ச் சொல் !:-
யா + குறிய = யாக் குறிய ×
யா + குறிய = யா குறிய √(அல்வழிப் புணர்ச்சி)
யா + சிறிய = யாச் சிறிய ×
யா + சிறிய = யா சிறிய √(அல்வழிப் புணர்ச்சி)
யா + தீய = யாத் தீய ×
யா + தீய = யா தீய √(அல்வழிப் புணர்ச்சி)
யா + பெரிய = யாப் பெரிய ×
யா + பெரிய = யா பெரிய √ (அல்வழிப் புணர்ச்சி)
(யா – யாவை ; யா குறிய – எவை குட்டையானவை ?)
5 . ‘ஆ’வை ஈற்றிலே கொண்ட , பன்மையை உணர்த்தும், வினை முற்று !:-
உண்ணா + குதிரை = உண்ணாக் குதிரை ×
உண்ணா + குதிரை = உண்ணா குதிரை √ (அல்வழிப் புணர்ச்சி)
உண்ணா + செந்நாய் = உண்ணாச் செந்நாய் ×
உண்ணா + செந்நாய் = உண்ணா செந்நாய் √ (அல்வழிப் புணர்ச்சி)
உண்ணா + தகர் = உண்ணாத் தகர் ×
உண்ணா + தகர் = உண்ணா தகர் √ (அல்வழிப் புணர்ச்சி)
உண்ணா + பன்றி = உண்ணாப் பன்றி ×
உண்ணா + பன்றி = உண்ணா பன்றி √ (அல்வழிப் புணர்ச்சி)
(உண்ணா – உண்ண மாட்டா; உண்ணா - ‘ஆ’வை ஈற்றிலே கொண்ட , பன்மையை உணர்த்தும், வினை முற்று)
6 . ‘மியா’ என்ற, முன்னிலை வினைச் சொல்லைக் குறித்துவரும் , ஏவல் ,
உரையசைச் சொல் !:-
கேண்மியா + கொற்றா = கேண்மியாக் கொற்றா ×
கேண்மியா + கொற்றா = கேண்மியா கொற்றா √(அல்வழிப் புணர்ச்சி)
கேண்மியா + சாத்தா = கேண்மியாச் சாத்தா ×
கேண்மியா + சாத்தா = கேண்மியா சாத்தா √ (அல்வழிப் புணர்ச்சி)
கேண்மியா + தேவா = கேண்மியாத் தேவா ×
கேண்மியா + தேவா = கேண்மியா தேவா √ (அல்வழிப் புணர்ச்சி)
கேண்மியா + பூதா = கேண்மியாப் பூதா ×
கேண்மியா + பூதா = கேண்மியா பூதா √ ( அல்வழிப் புணர்ச்சி)
(கேண்மியா – ‘கேள்’ என்ற வினைச் சொல்லோடு , ‘மியா’ என்ற அசைச் சொல் ஈறாக வந்துள்ளதைக் கவனிக்க ; ‘மியா’ என்பது தனிச் சொல்லாக இது வராது ! )
7 . ‘ஆ’வை ஈற்றிலே கொண்ட , தனது தொழிலைச் சொல்லும், வினா !:-
உண்கா + கொற்றா = உண்காக் கொற்றா ×
உண்கா + கொற்றா = உண்கா கொற்றா √ ( அல்வழிப் புணர்ச்சி)
உண்கா + சாத்தா = உண்காச் சாத்தா ×
உண்கா + சாத்தா = உண்கா சாத்தா √ ( அல்வழிப் புணர்ச்சி)
உண்கா + தேவா = உண்காத் தேவா ×
உண்கா + தேவா = உண்கா தேவா √ ( அல்வழிப் புணர்ச்சி)
உண்கா + பூதா = உண்காப் பூதா ×
உண்கா + பூதா = உண்கா பூதா √ ( அல்வழிப் புணர்ச்சி)
(உண்கா – உண்பேனோ ? ‘உண்பேனோ’ என்பது தன் வினையைக் குறிக்கும் என்பதைக் கவனிக்க !)
மேலே 7 சொற்களும் இயல்பாகப் புணர்ந்ததைப் பார்த்தோமல்லவா?
இதைக் கூறும் தொல்காப்பிய நூற்பா ! -
“ஆவு மாவும் விளிப்பெயர்க் கிளவியும்
யாவென் வினாவும் பலவற் றிறுதியும்
ஏவல் குறித்த வுரையசை மியாவும்
தன்றொழி லுரைக்கும் வினாவின் கிளவியோ
டன்றி யனைத்து மியல்பென மொழிப” (உயிர்மயங் . 22)
பெயர்ச்சொல், வினைச்சொல்லோடு நிற்காது அசைச்சொல்லையும் கணக்கில் கொண்டு தொல்காப்பியர் விதி கூறியுள்ளது – வியப்பு ! வியப்பு !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (261)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தாரா + குறிது = தாராக் குறிது
- இப் புணர்ச்சியை முன்பே இதே இயலில் பார்த்தோம்! நினைவிருக்கிறதா?
இப் புணர்ச்சி அல்வழிப் புணர்ச்சி !
இதே ‘ஆ’ ஈற்றுத் ‘தாரா’ , வேற்றுமைப் புணர்ச்சியில் எப்படிப் புணரும் ?
இதற்கு விடைகூறுவதுதான் நமது அடுத்த நூற்பா !:-
“வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே” (உயிர்மயங். 23)
‘வேற்றுமைக் கண்ணும்’ – வேற்றுமைப் புணர்ச்சியிலும்,
‘அதனோர் அற்றே’ – முன்னே உருபியல் நூற்பா 19இல் கூறியபடியே வல்லெழுத்துச் சந்தி பெறும் !
1. தாரா + கால் = தாரா கால் ×
தாரா + கால் = தாராக் கால் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
தாரா + சிறகு = தாரா சிறகு ×
தாரா + சிறகு = தாராச் சிறகு √ (வேற்றுமைப் புணர்ச்சி)
தாரா + தலை = தாரா தலை ×
தாரா + தலை = தாராத் தலை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
தாரா + புறம் = தாரா புறம் ×
தாரா + புறம் = தாராப் புறம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(தாரா – குள்ள வாத்து ; இது முன்பும் கூறப்பட்டது)
2. மூங்கா + கால் = மூங்கா கால் ×
மூங்கா + கால் = மூங்காக் கால் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
மூங்கா + சிறகு = மூங்கா சிறகு ×
மூங்கா + சிறகு = மூங்காச் சிறகு √ (வேற்றுமைப் புணர்ச்சி)
மூங்கா + தலை = மூங்கா தலை ×
மூங்கா + தலை = மூங்காத் தலை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
மூங்கா + புறம் = மூங்கா புறம் ×
மூங்கா + புறம் = மூங்காப் புறம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(மூங்கா – கீரி ; இது முன்பும் கூறப்பட்டது)
3. வங்கா + கால் = வங்கா கால் ×
வங்கா + கால் = வங்காக் கால் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
வங்கா + சிறகு = வங்கா சிறகு ×
வங்கா + சிறகு = வங்காச் சிறகு √ (வேற்றுமைப் புணர்ச்சி)
வங்கா + தலை = வங்கா தலை ×
வங்கா + தலை = வங்காத் தலை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
வங்கா + புறம் = வங்கா புறம் ×
வங்கா + புறம் = வங்காப் புறம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(வங்கா – கொக்கு வகை )
‘ஆ’ ஈற்றுச் சொல் என்றால் விலங்குகள் , பறவைகள் மட்டும்தான் எனக் கொள்ளற்க !
பலா + சுவை = பலாச் சுவை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
பலா + சக்கை = பலாச் சக்கை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
- எனவும் புணரும் !
மேல் ‘வங்கா’ , நச்சினார்க்கினியர் உரையில் உள்ளதாகும் !
நச்சினார்க்கினியர் குறித்த வங்காவைப் பார்க்க ஆசையா?
[You must be registered and logged in to see this image.]
Courtesy – carolinabirds.org
இதுதான் வங்கா!
இது ‘வக்கா’ எனவும் அறியப்படும் !
இதன் விலங்கியல் பெயர் – Ardea nivea
இதன் வடமொழிப் பெயர் – தாபஸ்
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தாரா + குறிது = தாராக் குறிது
- இப் புணர்ச்சியை முன்பே இதே இயலில் பார்த்தோம்! நினைவிருக்கிறதா?
இப் புணர்ச்சி அல்வழிப் புணர்ச்சி !
இதே ‘ஆ’ ஈற்றுத் ‘தாரா’ , வேற்றுமைப் புணர்ச்சியில் எப்படிப் புணரும் ?
இதற்கு விடைகூறுவதுதான் நமது அடுத்த நூற்பா !:-
“வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே” (உயிர்மயங். 23)
‘வேற்றுமைக் கண்ணும்’ – வேற்றுமைப் புணர்ச்சியிலும்,
‘அதனோர் அற்றே’ – முன்னே உருபியல் நூற்பா 19இல் கூறியபடியே வல்லெழுத்துச் சந்தி பெறும் !
1. தாரா + கால் = தாரா கால் ×
தாரா + கால் = தாராக் கால் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
தாரா + சிறகு = தாரா சிறகு ×
தாரா + சிறகு = தாராச் சிறகு √ (வேற்றுமைப் புணர்ச்சி)
தாரா + தலை = தாரா தலை ×
தாரா + தலை = தாராத் தலை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
தாரா + புறம் = தாரா புறம் ×
தாரா + புறம் = தாராப் புறம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(தாரா – குள்ள வாத்து ; இது முன்பும் கூறப்பட்டது)
2. மூங்கா + கால் = மூங்கா கால் ×
மூங்கா + கால் = மூங்காக் கால் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
மூங்கா + சிறகு = மூங்கா சிறகு ×
மூங்கா + சிறகு = மூங்காச் சிறகு √ (வேற்றுமைப் புணர்ச்சி)
மூங்கா + தலை = மூங்கா தலை ×
மூங்கா + தலை = மூங்காத் தலை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
மூங்கா + புறம் = மூங்கா புறம் ×
மூங்கா + புறம் = மூங்காப் புறம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(மூங்கா – கீரி ; இது முன்பும் கூறப்பட்டது)
3. வங்கா + கால் = வங்கா கால் ×
வங்கா + கால் = வங்காக் கால் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
வங்கா + சிறகு = வங்கா சிறகு ×
வங்கா + சிறகு = வங்காச் சிறகு √ (வேற்றுமைப் புணர்ச்சி)
வங்கா + தலை = வங்கா தலை ×
வங்கா + தலை = வங்காத் தலை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
வங்கா + புறம் = வங்கா புறம் ×
வங்கா + புறம் = வங்காப் புறம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(வங்கா – கொக்கு வகை )
‘ஆ’ ஈற்றுச் சொல் என்றால் விலங்குகள் , பறவைகள் மட்டும்தான் எனக் கொள்ளற்க !
பலா + சுவை = பலாச் சுவை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
பலா + சக்கை = பலாச் சக்கை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
- எனவும் புணரும் !
மேல் ‘வங்கா’ , நச்சினார்க்கினியர் உரையில் உள்ளதாகும் !
நச்சினார்க்கினியர் குறித்த வங்காவைப் பார்க்க ஆசையா?
[You must be registered and logged in to see this image.]
Courtesy – carolinabirds.org
இதுதான் வங்கா!
இது ‘வக்கா’ எனவும் அறியப்படும் !
இதன் விலங்கியல் பெயர் – Ardea nivea
இதன் வடமொழிப் பெயர் – தாபஸ்
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 32 of 84 • 1 ... 17 ... 31, 32, 33 ... 58 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 32 of 84
|
|