புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
4 Posts - 3%
Kavithas
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
1 Post - 1%
bala_t
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
1 Post - 1%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
293 Posts - 42%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
6 Posts - 1%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
4 Posts - 1%
manikavi
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 36 of 84 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 60 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 03, 2014 9:40 am

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 3838410834 தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 3838410834 
-
[You must be registered and logged in to see this image.]

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 04, 2014 9:35 am

                         தொடத் தொடத் தொல்காப்பியம் (282)
                                -முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
 
                                 ‘இ’ஈற்று நாள் பெயரின் புணர்ச்சிகளைக் காட்டிய தொல்காப்பியர் , அதே ‘இ’ ஈற்றுத் திங்கள் பெயர் எப்படிப் புணரும் என அடுத்துக்காட்டுகிறார் ! :-
 
         “திங்கள் முன்வரி  னிக்கே சாரியை” (உயிர்மயங். 46)
 
 ‘திங்கள் முன்வரின்’ -  ‘இ’ஈற்று மாதப் பெயர் நிலைமொழியாக வந்தால் ,
 
‘இக்கே சாரியை’ – வேற்றுமைப் புணர்ச்சியில் ‘இக்கு’ சாரியை ஆக வரும் !

 இந் நூற்பாவில் , வருசொல் பெயரா ? வினையா?

 விடைக்கு முன் நூற்பாவைப் பார்க்கவேண்டும் !

முன் நூற்பாவில், ‘தொழில் நிலைக் கிளவிக்கு ஆன் இடை வருதல் ஐயம் இன்று’ (உயிர்மயங்.45) என்று சொன்னதை நாம் நினைவில் கொள்ளவேண்டும் !
 
எனவே அதனை அடுத்து வந்த நூற்பாவில்  கூறப்படும் வருமொழியும் வினைசொல்லாகாவே இருத்தல் வேண்டும் !

இதுதான் தொல்காப்பிய உரைமரபு என்பது !
 
 எடுத்துகாட்டுகளை வருமாறு விளக்கித் தரலாம் ! :-
 
  1.ஆடி + கொண்டான் = ஆடியாற் கொண்டான் ×
     ஆடி + கொண்டான் = ஆடிக்குக் கொண்டான் √  (இக்கு - சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
                                                                                             
            (ஆடிக்குக் கொண்டான் – ஆடிமாதத்தில் பெற்றான்)
 
 
  2.ஆடி + சென்றான் = ஆடியாற் சென்றான் ×
     ஆடி + சென்றான் = ஆடிக்குச் சென்றான் √  (இக்கு - சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
                                                (ஆடிக்குச் சென்றான் – ஆடிமாதத்தில் சென்றான்) 
 
 
  3.ஆடி + தந்தான் = ஆடியாற் றந்தான் ×
     ஆடி + தந்தான் = ஆடிக்குத் தந்தான் √  (இக்கு - சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
                                                                                            
                                                (ஆடிக்குத் தந்தான் – ஆடிமாதத்தில் தந்தான்)
 
 
  4.ஆடி + போயினான் = ஆடியாற் போயினான் ×
     ஆடி + போயினான் = ஆடிக்குப் போயினான் √  (இக்கு - சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
            (ஆடிக்குப் போயினான் – ஆடிமாதத்தில் போனான்)
 
            மேலை எடுத்துக்காட்டுகளில், வருமொழிகள் யாவும் வினைகளாகவே இருப்பதைக் காண்க!


                 அதுமட்டுமல்ல ! அவை எல்லாம் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட  சொற்களாகவும் இருப்பதைக் கவனிக்க !
 


                                                                   ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 05, 2014 9:33 am

                                                    தொடத் தொடத் தொல்காப்பியம் (283)


                         -முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
 
        உயிர் மயங்கியலில் ‘இ’ ஈற்றுச் சொற்களை முடித்துக்கொண்டு , ‘ஈ’ஈற்றுச் சொற்களுக்குச் செல்கிறார் தொல்காப்பியர் ! :-
 
        “ ஈகார விறுதி யாகார வியற்றே”  (உயிர்மயங். 47)
 
        ‘ஈகார இறுதி’ -  ‘ஈ’ ஈற்றுச் சொற்களின் ஈறுகள்,
         ‘ஆகார இயற்றே’ -  ‘ஆ’ஈற்றுச் சொற்களின் இறுதிகளைப்போலப் புணரும் !
 
         ‘ஆ’ ஈற்றுச் சொற்கள்  எப்படிப் புணர்ந்தன ?
        
        ‘தாரா + கடிது = தாராக் கடிது’ (உயிர்மயங். 19), என்று பார்த்தோமே ? மறந்துவிட்டீர்களா?
 
        இதே முறையில் –


       1.தீ + கடிது = தீ கடிது ×
          தீ + கடிது = தீக் கடிது √  (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
 
       2.தீ + சிறிது = தீ சிறிது ×
          தீ + சிறிது = தீச் சிறிது √  (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
 
       3. தீ + தீது = தீ தீது ×
           தீ + தீது = தீத் தீது √  (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
 
      4.தீ + பெரிது = தீ பெரிது ×
          தீ + பெரிது = தீப் பெரிது √  (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
 
         ‘ஈ’ ஈற்றுச் சொல்லாக இளம்பூரணர் ‘தீ’ யைக் கையில் எடுக்க , நச்சினார்க்கினியர் , ‘ஈ’யைச் சுட்டுகிறார் ! :-
 
    5.   ஈ + கடிது = ஈ கடிது ×
           ஈ + கடிது = ஈக் கடிது √  (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
 
    6.   ஈ + சிறிது = ஈ சிறிது ×
          ஈ + சிறிது = ஈச் சிறிது √  (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
 
    7.  ஈ + தீது = ஈ தீது ×
          ஈ + தீது = ஈத் தீது √         (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
 
    8.  ஈ + பெரிது = ஈ பெரிது ×
          ஈ + பெரிது = ஈப் பெரிது √  (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
 
             மேலை இருவர் எடுத்துக்காட்டுகளிலுமே வல்லெழுத்தை முதலாக உடைய சொற்கள்தாம் வருசொற்கள் என்பதைக்              கவனிக்க !
 
              மேலும் , ‘தீ’யில் , ஈறு (த் + ஈ)மட்டுமே ‘ஈ’ ! ஆனால் ஓரெழுத்து ஒருமொழியான ‘ஈ’யில் சொல்லும் அதுவே , ஈறும் அதுவே என்பதையும் கவனிக்க !
 


                ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 06, 2014 9:06 am

                                               தொடத் தொடத் தொல்காப்பியம் (284)


                                   -முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
 
             நீ குட்டையானவன்
             நீக் குட்டையானவன்     
-           
              - இவற்றில் எது சரியானது ?
 
 இதற்குத் தொல்காப்பிய விதி யாது ?
 
இதுதான் தொல்காப்பிய விதி ! :-
 
 “நீயென் பெயரு மிடக்கர்ப் பெயரும்
  மீயென மரீஇய  விடம்வரை கிளவியும்
 ஆவயின் வல்லெழுத்  தியற்கை யாகும்”  (உயிர்மயங். 48)
 
 ‘நீ என் பெயரும்’ -  ‘நீ’ என்ற ‘ஈ’ ஈற்றுப் பெயரும் ,


‘இடக்கர்ப் பெயரும்’ -   இடக்கர் அடக்கலாக வரும் ‘பீ’ எனும் ‘ஈ’ஈற்றுச் சொல்லும் ,


‘மீ  என மரீஇய இடம் வரை கிளவியும்’ -  மரூஉச் சொல்லாய் நின்று, இடத்தை
                                                                உணர்த்தும்  ‘மீ’ என்ற ‘ஈ’ ஈற்றுச் சொல்லும்,


 ‘ஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும் ’- புணர்ச்சியில் , வல்லெழுத்துச் சந்தி    
                                                                    பெறாது , இயற்கையாக முடியும் !
 
           இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் !:-
 
           1. நீ + குறியை = நீக் குறியை ×
              நீ + குறியை = நீ குறியை √  (அல்வழிப் புணர்ச்சி)
                                (நீ குறியை – நீ குட்டையானவன்)
 
          
              நீ + சிறியை = நீச் சிறியை ×
              நீ + சிறியை = நீ சிறியை √  (அல்வழிப் புணர்ச்சி)
                                (நீ சிறியை – நீ சிறியவன்)
 
 
              நீ + தீயை = நீத் தீயை ×
              நீ + தீயை = நீ தீயை √  (அல்வழிப் புணர்ச்சி)
                                (நீ தீயை – நீ தீயவன்)
 
           நீ + பெரியை = நீப் பெரியை ×
           நீ + பெரியை = நீ பெரியை √  (அல்வழிப் புணர்ச்சி)
                                (நீ பெரியை – நீ பெரியவன்)
 
       
 2 .  பீ + குறிது = பீக் குறிது ×
       பீ + குறிது = பீ குறிது √   (அல்வழிப் புணர்ச்சி)
 
     பீ + சிறிது = பீச் சிறிது ×
     பீ + சிறிது = பீ சிறிது √   (அல்வழிப் புணர்ச்சி)
 
     பீ + தீது = பீத் தீது ×
     பீ + தீது = பீ தீது √   (அல்வழிப் புணர்ச்சி)
 
      பீ + பெரிது = பீப் பெரிது ×
      பீ + பெரிது = பீ பெரிது √   (அல்வழிப் புணர்ச்சி)
 
 
3 . மீ + கண் = மீக் கண் ×
    மீ + கண் = மீ கண் √  (வேற்றுமைப் புணர்ச்சி )
 
    மீ + செவி = மீச் செவி ×
    மீ + செவி = மீ செவி √  (வேற்றுமைப் புணர்ச்சி )
 
     மீ + தலை = மீத் தலை ×
     மீ + தலை = மீ தலை √  (வேற்றுமைப் புணர்ச்சி )
 
     மீ + புறம் = மீப் புறம் ×
     மீ + புறம் = மீ புறம் √  (வேற்றுமைப் புணர்ச்சி )
 
 
      நூற்பாவில் , ‘மீ என மரீஇய’ – என்று வந்ததல்லவா?
 
    எந்தச் சொல் ‘மீ’ என்று மருவியதாம் ?
      
      நச்சர் விடை கூறியுள்ளார் !
 
   குற்றியலுகரப் புணரியல் நூற்பா 27இல் விடை கூறியுள்ளார் !
 
   நச்சரின் கருத்துப்படி –
 
 ‘மேற்கு’ என்ற சொல்லே ‘மீ’ என மருவி வந்தது !
 


                         ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Aug 07, 2014 11:31 am

                                         தொடத் தொடத் தொல்காப்பியம் (285)
                                -முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
 
                                சற்றுமுன் ‘மீ + கண் = மீகண்’ என்ற விதியைத் தொல்காப்பியர் கூறக் கேட்டோம் !
 
உடனே அதே கையோடு இதற்கு விதிவிலக்காச் சில சொற்களும் உள என்று இன்னொரு நூற்பாவைத் தருகிறார் தொல்காப்பியர் ! :-
 
 “இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூஉம்
  உடனிலை மொழியு முளவென மொழிப”  (உயிர்மயங். 49)
 
 ‘இடம்வரை கிளவிமுன்’ – இட்த்தைக் குறிக்கும் சொல்லான ‘மீ’ என்பதன் முன் ,
 
‘வல்லெழுத்து மிகூஉம்’ – சந்தியாக வல்லெழுத்து வரக்கூடிய ,
  ‘ உடனிலை மொழியும்  உளவென மொழிப’ – இசந்து நிற்றலை உடைய சொற்களும் உள்ளன !
 
1 .  மீ + கோள் = மீகோள் ×
      மீ + கோள் = மீக்கோள்√  (வேற்றுமைப் புணர்ச்சி)
                                (மீக்கோள் – உடலின் மீது கொள்ளப்படுவது)
 
2 .  மீ + பல் = மீபல் ×
      மீ + பல் = மீப் பல்√  (வேற்றுமைப் புணர்ச்சி)
                                (மீப்பல் –பல்லின் மேற்பகுதி )
 
 
3 .  மீ + பாய் = மீபாய் ×
     மீ + பாய் = மீப் பாய்√  (வேற்றுமைப் புணர்ச்சி)
                                (மீப்பாய் – பாயின் மேற்பகுதி )
 
  ‘மீக்கோள் ’ என்பது ஆசாரக்கோவையிலும் (பாடல் 31) , ‘மீப்பாய்’ என்பது புநானூற்றிலும் (பாடல் 30) வந்துள்ளதாக எழுதியுள்ளனர் .
 
 உரையின் இறுதியில் இளம்பூரணர் ஏதோ சொல்ல வருகிறார் கேட்போமே ! –
 
 “ உடனிலை என்றதனான் , ‘மீங்குழி’ , ‘மீந்தோல்’ என மெல்லெழுத்துப் பெற்று முடிவனவும் கொள்க !”
 
 அஃதாவது-
 
4 . மீ + குழி = மீக் குழி ×
     மீ + குழி = மீங் குழி √ (வேற்றுமைப் புணர்ச்சி)
                                (மீங் குழி – குழியின் மேற்பகுதி )
 
5 . மீ + தோல் = மீத் தோல் ×
     மீ + தோல் = மீந் தோல் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
                                (மீந் தோல் – தோலின் மேற்பகுதி )
 
  ‘மீக் குழி’ , ‘மீத் தோல்’ என்றெல்லாம் ஏன் வரவில்லை ?
 
 ‘மீக் குழி’ எனில் , ‘சிறு குழி’ , ‘பெருங்குழி’ என்பதுபோலக் குழியின் அளவைக் குறித்துவிடும் ! எனவேதான்,  இப் பொருள் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகத்தான் ,  ‘மீங் குழி’ என வருகிறது ! அப்போதுதான் , ‘குழியின் மேற்பகுதி’ என்ற பொருள் தெளிவாக நிற்கும் !
 
 இதைப்போலவே ‘மீத்தோல்’ எனில் ‘ஆட்டுத்தோல்’ , ‘மாட்டுத்தோல்’ என்பதுபோல் ஏதோ ஒரு விலங்கின் தோல் என்ற பொருள் வந்துவிடும் ! இதைத் தவிர்ப்பதற்கே , ‘மீந்தோல்’ எனப் புணர்ச்சி ஏற்படுகிறது ! அப்போதுதான் , ‘தோலின் மேற்பகுதி’ என்ற தெளிவான பொருள் நமக்குக் கிட்டும் !
 
  தமிழ்ப் புணர்ச்சியில் , பொருள் மதிப்பே (Semantic value ) இன்றியமையாதது !
 மரபிலக்கணமும் , மொழியியலும் (Linguistics) மோதிக்கொள்ளும் இடம் இதுவே !
  
“இடத்திற்கேற்றவாறு ஒவ்வொன்றைச் சொல்லுகிறீர்களே ! இதுவும் இதுவும் சேர்ந்தால் இப்படித்தான் வரும் என்று ஏதாவது ஒன்றை மட்டும் சொல்லுங்கள் ! ” – என்று மொழியியலார் கேட்கின்றனர் !
   
  மொழியியலார் கேட்பதுபோல நடக்காது என்பது நம் மேலை ஆய்விலேயே தெளிவாகிவிட்டது !


                                ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Thu Aug 07, 2014 12:18 pm

சௌந்தராஜன் சார் .. எனக்கி உங்க தொல்காப்பியம் மண்டையில் ஏறமாட்டாங்கிது... நிறைய கவனம் சொலுத்தினால் ஏறும் ன்னு நினைக்கிறேன்.. வேறு ஏதாவது இலகு வழியிருந்தால் அறியத்தாருங்கள்...

 தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 1571444738 

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 08, 2014 9:29 am

ஜெசிபர் ! உங்கள் அக்கறை பாராட்டத்தக்கது !

தொடக்கத்திலிருந்து எனது தொல்காப்பியத் தொடரைப் படித்தால் எளிதாக விளங்கும் ! நானே பச்சைக் குழந்தைக்குக் கூறுவதுபோலத்தான்  கூறிவருகிறேன் ! 
ஆகவே வேறு இலகு வழி இல்லை !

நன்றி !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 08, 2014 9:33 am

 
                                            தொடத் தொடத் தொல்காப்பியம் (286)
                                      -முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
 
   உயிர்மயங்கியலில் ‘ஈ’ ஈற்றுச் சொற்களைப் பார்த்துவருகிறோம் !
 
 இப்போது , தெளிவான வேற்றுமைச் சொற்களைக் கூறப் புகுகிறார் தொல்காப்பியர் ! –
 
 “வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே” (உயிர்மயங். 50)
 
 ‘வேற்றுமைக் கண்ணும்’ – வேற்றுமைப் பொருள் புணர்ச்சிக்கண்ணும் ,
 
‘அதனோர் அற்றே’ – ஆகார ஈற்றுப் புணர்ச்சிக்கு முன்பு கூறியது போலச் சந்தி பெறும் !


 ஆகார ஈற்றுப் புணர்ச்சிக்கு முன்பு என்ன கூறினார் ?
 
 உயிர்மயங்கியல் நூற்பா 23இல் ,  ‘தாரா + கால் = தாராக் கால் ’ என வல்லெழுத்துச் சந்தி வந்த விதியைப் பார்த்தோமல்லவா? அதைத்தான் இங்கே குறிப்பிடுகிறார் !
 
ஆக –


1 . ஈ + கால் = ஈகால் ×
     ஈ + கால் = ஈங்கால் ×
     ஈ + கால் = ஈக்கால் √  (வேற்றுமைப் புணர்ச்சி)
               (ஈக்கால் – ஈயின் கால்)
 
2 . ஈ + சிறகு = ஈசிறகு ×
     ஈ + சிறகு = ஈங்சிறகு ×
     ஈ + கால் = ஈச்சிறகு √  (வேற்றுமைப் புணர்ச்சி)
               (ஈச்சிறகு – ஈயின் இறக்கை)
 
3 . ஈ + தலை = ஈதலை ×
     ஈ + தலை = ஈந்தலை ×
     ஈ + தலை = ஈத்தலை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
               (ஈத்தலை – ஈயின் தலை)
 
4 . ஈ + புறம் = ஈபுறம் ×
     ஈ + புறம் = ஈம்புறம் ×
     ஈ + புறம் = ஈப்புறம் √  (வேற்றுமைப் புணர்ச்சி)
               (ஈப்புறம் – ஈயின் முதுகுப் பகுதி)
 
 வழக்கம் போல் நச்சினார்க்கினியர்,  ‘ஈ’ ஈற்றுச் சொல் ஒன்றைக் கூடுதலாகக் காட்டுகிறார் !-
 
 5 . தீ + கடுமை = தீகடுமை ×
     தீ + கடுமை = தீங்கடுமை ×
      தீ + கடுமை = தீக்கடுமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
               (தீக்கடுமை – தீயின் கடுமை)
 
6 . தீ + சிறுமை = தீசிறுமை ×
     தீ + சிறுமை = தீஞ்சிறுமை ×
      தீ + சிறுமை = தீச்சிறுமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
               (தீச்சிறுமை – தீயின் சிறுமை)
 
7 . தீ + தீமை = தீதீமை ×
     தீ + தீமை = தீந்தீமை ×
      தீ + தீமை = தீத்தீமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
               (தீத்தீமை – தீயின் தீமை)
 
8 . தீ + பெருமை = தீபெருமை ×
     தீ + பெருமை = தீம்பெருமை ×
      தீ + பெருமை = தீப்பெருமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
                (தீப்பெருமை – தீயின் பெருமை)
 

                                                            ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Fri Aug 08, 2014 8:27 pm

நன்றி ஐயா...........அப்படியே செய்கிறேன்....

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 09, 2014 1:12 pm

                                                      தொடத் தொடத் தொல்காப்பியம் (287)
                                      -முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
 
             ‘ஈ’ ஈற்றுச் சொல் தொடர்கிறது !
            
              இப்போது – ‘நீ’  !
 
              ‘உனது கை’ என்ற பொருளில் கூறவேண்டுமானால் ,
 
             நீ + கை = நின கை     
             நீ + கை = நிற் கை     
             நீ + கை = நினக் கை  
             நீ + கை = நின் கை
                                                            
                  - இவற்றில் எது சரி ?
 
            தொல்காப்பிய விதியைப் பார்ப்போமே ! –
         
               “நீயெ னொருபெய ருருபிய  னிலையும்
               ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும் !”  (உயிர்மயங். 51)
 
             ‘நீ என் ஒரு பெயர்’ -  ‘நீ’ எனும் பெயர்ச்சொல் ,
             
            ‘உருபியல் நிலையும்’ -  உருபு புணரியல் நூற்பா 7இல், ‘நீ’ என்பது , ‘நின்’ ஆனது போல ஆகும்;
           
           ‘ஆவயின் வல்லெழுத்து இயற்கை யாகும்’ – அங்கு வருமொழியின் வல்லெழுத்தானது , சந்தி பெறாமல் , இயற்கையகப் புணரும் !


          1.   நீ + கை = நின கை ×        
                நீ + கை = நிற் கை ×
                நீ + கை = நினக் கை ×      
               நீ + கை = நின் கை   (வேற்றுமைப் புணர்ச்சி)
 
            2 .நீ + செவி = நின செவி ×   
                நீ + செவி = நிற் செவி ×    
                நீ + செவி = நினச் செவி × 
                நீ + செவி = நின் செவி   (வேற்றுமைப் புணர்ச்சி)
 
            3 .நீ + தலை = நின தலை ×   
                நீ + தலை = நிற் றலை ×    
                நீ + தலை = நினத் தலை × 
                நீ + தலை = நின் தலை   (வேற்றுமைப் புணர்ச்சி)
 
            4 .நீ + புறம் = நின புறம் ×     
                நீ + புறம் = நிற் புறம் ×      (ஆனால் பாடலில் இவ்வடிவம் கொள்ளப்பட்டுள்ளது; ‘நிற்புறம் காப்ப’)
                நீ + புறம் = நினப் புறம் ×  
                நீ + புறம் = நின் புறம்   (வேற்றுமைப் புணர்ச்சி)


                                                ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 36 of 84 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 60 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக