புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10 
29 Posts - 34%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10 
3 Posts - 4%
Jenila
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10 
1 Post - 1%
M. Priya
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10 
1 Post - 1%
jairam
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10 
7 Posts - 5%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10 
6 Posts - 4%
Jenila
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10 
4 Posts - 3%
Rutu
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10 
2 Posts - 1%
manikavi
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 37 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 37 of 84 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 60 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 11, 2014 2:02 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (288)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தொல்காப்பியர் , ‘ஈ’ ஈற்றை முடித்துக்கொண்டு , ‘உ’ ஈற்றுச் சொற்களுக்குத் திரும்புகிறார் ! –

“ உகர விறுதி யகர வியற்றே”  (உயிர்மயங். 52)

‘உகர இறுதி’ – ‘உ’வை ஈறாகக் கொண்ட சொற்கள் ,

‘அகர இயற்றே’ – ‘அ’ஈற்றுச் சொல்போலப் புணரும் !

’அ’ஈற்றுச் சொல் எப்படிப் புணரும் ?

அல்வழியில் , ‘விள + குறிது = விளக்குறிது’ (உயிர்மயங். 1)  என்று பார்த்தோமே , மறந்துவிட்டீர்களா?

இதேபோலத்தான் , அல்வழிப் புணர்ச்சியில்,

1 .கடு + குறிது = கடு குறிது ×
   கடு + குறிது = கடுங் குறிது ×
   கடு + குறிது = கடுக் குறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
                          (கடுக் குறிது – பாம்பு குட்டையானது)

2 .கடு + சிறிது = கடு சிறிது ×
   கடு + சிறிது = கடுஞ் சிறிது ×
   கடு + சிறிது = கடுச் சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
                        (கடுச் சிறிது – பாம்பு சிறியது)

3 .கடு + தீது = கடு தீது ×
   கடு + தீது = கடுந் தீது ×
   கடு + தீது = கடுத் தீது √ (அல்வழிப் புணர்ச்சி)
                     (கடுத் தீது – பாம்பு தீயது)

4 .கடு + பெரிது = கடு பெரிது ×
   கடு + பெரிது = கடும் பெரிது ×
   கடு + பெரிது = கடுப் பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)
                      (கடுப் பெரிது – பாம்பு பெரியது)

‘கடு’ , கடுப்பைக் கிளப்புகிறதா?

அப்படியானால் , நமக்குப் பழக்கமான வடுமாங்காயைக் குறிக்கும் ‘வடு’ என்ற சொல்லை எடுத்து ஒரு கடி கடிப்போமே ?-

1 .வடு + குறிது = வடு குறிது ×
   வடு + குறிது = வடுங் குறிது ×
   வடு + குறிது = வடுக் குறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
                        (வடுக் குறிது – மாவடு குட்டையானது)

2 .வடு + சிறிது = வடு சிறிது ×
   வடு + சிறிது = வடுஞ் சிறிது ×
   வடு + சிறிது = வடுச் சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
                        (வடுச் சிறிது – மாவடு சிறியது)

3 .வடு + தீது = வடு தீது ×
   வடு + தீது = வடுந் தீது ×
   வடு + தீது = வடுத் தீது √ (அல்வழிப் புணர்ச்சி)
                       (வடுத் தீது – மாவடு தீயது)

4 .வடு + பெரிது = வடு பெரிது ×
   வடு + பெரிது = வடும் பெரிது ×
   வடு + பெரிது = வடுப் பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)
                       (வடுப் பெரிது – மாவடு பெரியது)

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 12, 2014 1:49 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (289)
                          -முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

 ‘உ’  என்பது தமிழில் ஒரு சுட்டு எழுத்து !

இந்தச் சுட்டு எழுத்தானது எப்படிப் புணரும் என்பதற்கு ஒரு நூற்பா! :-

“சுட்டின் முன்னரு மத்தொழிற் றாகும்” (உயிர்மயங். 53)

இங்கு வந்துள்ள ‘அத் தொழிற்றாகும்’ , எத் தொழிற்றாகும் ?

மேல் ஆய்வில் நாம் ‘கடுக் குறிது’ என்ற புணர்ச்சியைப் பார்த்தோமல்லவா? அத் தொழிற்றாகும் !

அஃதாவது –
       
               வல்லொற்றுச் சந்தியைப் பெறும் ! –

1 .உ + கொற்றன் = உகொற்றன் ×
  உ + கொற்றன் = உக் கொற்றன் √ (அல்வழிப் புணர்ச்சி)
                        (உக் கொற்றன் – நடுவிடத்துக் கொற்றன்)

2 .உ + சாத்தன் = உசாத்தன் ×
  உ + சாத்தன் = உச் சாத்தன் √ (அல்வழிப் புணர்ச்சி)
                        (உச் சாத்தன் – நடுவிடத்துச் சாத்தன்)

3 .உ + தேவன் = உதேவன் ×
  உ + தேவன் = உத் தேவன் √ (அல்வழிப் புணர்ச்சி)
                        (உத் தேவன் – நடுவிடத்துத் தேவன்)

4 .உ + பூதன் = உபூதன் ×
  உ + பூதன் = உப் பூதன் √ (அல்வழிப் புணர்ச்சி)
                        (உப் பூதன் – நடுவிடத்துப் பூதன்)

                          மேல் நான்கு எடுத்துக்காட்டுகளிலும் வருமொழிகள் வல்லெழுத்தை முதலாக உடையவை என்பதைக் கவனிக்க !

‘உ’ என்ற சுட்டெழுத்து , தொல்காப்பியர் காலத்தில் வழக்கில் இருந்தது !

வள்ளுவர் காலத்திலும் இருந்தது !

இப்போது மறைந்துவிட்டது !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 13, 2014 11:06 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (290)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

 ‘உ’ ஈற்றுச் சொல் தொடர்கிறது !

மேலே , ‘உ’ ஈற்றுச் சொல்லுடன் வல்லெழுத்தை முதலாக உடைய சொல் வந்து புணர்ந்ததைப் பார்த்தோமல்லவா?

இப்போது , மெல்லெழுத்து, இடையெழுத்து , உயிரெழுத்தை முதலாக உடைய
சொற்கள் வந்து புணர்வதற்கு விதி கூறுகிறார் தொல்காப்பியர் ! –

“ஏனவை வரினே மேனிலை யியல்பே” (உயிர்மயங். 54)

             ‘ஏனவை’ - மெல்லெழுத்து, இடையெழுத்து , உயிரெழுத்தை முதலாக உடைய
சொற்கள்,

‘வரினே’ – வந்து புணர்ந்தால் ,

‘மேல் நிலை’ – உயிர்மயங்கியல் நூற்பா 1இல் , ‘அ’ ஈற்றுச் சொல்லானது, தத்தம் இன எழுத்தைச் சந்தியாகப் பெறும் எனக் கூறியதுபோல இங்கும் இன எழுத்துச் சந்தி தோன்றும் ;

‘இயல்பே’ – இதுதான் புணர்ச்சி இயல்பு !  

1. உ + ஞாண் = உஞாண் ×
உ + ஞாண் = உஞ்ஞாண் √  (அல்வழிப் புணர்ச்சி)
(உஞ்ஞாண் – நடுவிடத்துக் கயிறு)

2. உ + நூல் = உநூல் ×
உ + நூல் = உந்நூல் √  (அல்வழிப் புணர்ச்சி)
(உந்நூல் – நடுவிடத்து நூல்)

3. உ + மணி = உமணி ×
உ + மணி = உம்மணி √  (அல்வழிப் புணர்ச்சி)
(உம்மணி – நடுவிடத்து மணி)

4. உ + யாழ் = உயாழ் ×
உ + யாழ் = உய்யாழ் ×
உ + யாழ் = உவ்யாழ் √  (அல்வழிப் புணர்ச்சி)
(உவ்யாழ் – நடுவிடத்து யாழ்)

5. உ + வட்டு = உவட்டு ×
உ + வட்டு = உவ்வட்டு √  (அல்வழிப் புணர்ச்சி)
(உவ்வட்டு – நடுவிடத்து வட்டு)

6. உ + அடை = உவடை ×
உ + அடை = உவ்வடை √  (அல்வழிப் புணர்ச்சி)
(உவ்வடை – நடுவிடத்து அடை; அடை - அடைகல்)

7. உ + ஆடை = உவாடை ×
உ + ஆடை = உவ்வாடை √  (அல்வழிப் புணர்ச்சி)
(உவ்வாடை – நடுவிடத்து ஆடை)

8. உ + ஔவியம் = உவௌவியம் ×
உ + ஔவியம் = உவ்வௌவியம் √  (அல்வழிப் புணர்ச்சி)
(உவ்வௌவியம் – நடுவிடத்துப் பலிப்பொருள் ; ஔவியம் – கடவுளுக்கு இடும் பலிப்பொருள்)

இவற்றின் பின்னே , இளம்பூரணர், “ஊவயினான எனவும் வரும்” என்றார் !

அஃதாவது , பாட்டில் , ‘உ’ , ‘ஊ’வாகத் திரிதல் உண்டு என்கிறார் இளம்பூரணர் !இங்கு , உயிர்மயங்கியல் நூற்பா 6ஐ ( ‘நீட வருதல் செய்யுளுள் உரித்தே’) இணைத்துக் கருதுக!

இதன்படி –

9 . உ + வயினான = உவயினான ×
     உ + வயினான = ஊவயினான √ (அல்வழிப் புணர்ச்சி)
(ஊவயினான – நடுவிடம் ; ஆன - அசைநிலை)

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Aug 14, 2014 9:26 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (291)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அது சிறிது
அதுச் சிறிது
- இவற்றில் எது சரி ?

தொல்காப்பியத்தைப் புரட்டுவோமே?

சுட்டெழுத்தின் முன்னே , வல்லெழுத்தை முதலாக உடைய சொல் வந்து புணர்ந்தால் ,
புணர்ச்சியில் ஒற்று மிகும் என்று முன்பு கண்டோம் ! ‘உ + கொற்றன் = உக்கொற்றன்’ எனவும் பார்த்தோம் !

இப்போது வினா - சுட்டெழுத்தை முதலாக உடைய சொல்லின் ஈற்றிலே ‘உ’ வந்தால் , எவ்வாறு புணர்ச்சி இருக்கும் ?

தொல்காப்பியர் கூறுகிறார் –

“சுட்டுமுத லிறுதி யியல்பா கும்மே” (உயிர்மயங். 55)

‘இயல்பாகும்மே’ – என்றால் இயல்பாகும்தான் !

இளம்பூரணர் எடுத்துக்காட்டுகளை விளக்கிக் கண்டால் இன்னும் தெளிவாகும் !-

1 . அது + குறிது = அதுக் குறிது ×
    அது + குறிது = அது குறிது √  (அல்வழிப் புணர்ச்சி)

2 . அது + சிறிது = அதுச் சிறிது ×
    அது + சிறிது = அது சிறிது √  (அல்வழிப் புணர்ச்சி)

3 . அது + தீது = அதுத் தீது ×
    அது + தீது = அது தீது √  (அல்வழிப் புணர்ச்சி)

4 . அது + பெரிது = அதுப் பெரிது ×
    அது + பெரிது = அது பெரிது √  (அல்வழிப் புணர்ச்சி)

5 . இது + குறிது = இதுக் குறிது ×
    இது + குறிது = இது குறிது √  (அல்வழிப் புணர்ச்சி)

6. இது + சிறிது = இதுச் சிறிது ×
    இது + சிறிது = இது சிறிது √  (அல்வழிப் புணர்ச்சி)

7 . இது + தீது = இதுத் தீது ×
    இது + தீது = இது தீது √  (அல்வழிப் புணர்ச்சி)

8 . இது + பெரிது = இதுப் பெரிது ×
    இது + பெரிது = இது பெரிது √  (அல்வழிப் புணர்ச்சி)

9 . உது + குறிது = உதுக் குறிது ×
    உது + குறிது = உது குறிது √  (அல்வழிப் புணர்ச்சி)

10 . உது + சிறிது = உதுச் சிறிது ×
     உது + சிறிது = உது சிறிது √  (அல்வழிப் புணர்ச்சி)

11 . உது + தீது = உதுத் தீது ×
     உது + தீது = உது தீது √  (அல்வழிப் புணர்ச்சி)

12 . உது + பெரிது = உதுப் பெரிது ×
      உது + பெரிது = உது பெரிது √  (அல்வழிப் புணர்ச்சி)

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 15, 2014 1:27 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (292)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘அதை’ , ‘இதை’ என்று பாட்டுகளில் வரும் சொற்களின் வரலாற்றை இப்போது தொல்காப்பியர் கூறபோகிறார், கேட்போமே ?

தொல்காப்பியம் ! –

“அன்றுவரு காலை யாவா குதலும்
 ஐவரு காலை மெய்வரைந்து கெடுதலும்
செய்யுண் மருங்கி னுரித்தென மொழிப  ”  (உயிர்மயங். 56 )

‘அன்றுவரு காலை’ – என்றதும் , என்றுவரு காலை ? எனக் கேட்காதீர்கள் !

‘அன்றுவரு காலை’ –  சுட்டெழுத்தை முதலாக உடைய சொல்லின் ஈற்று ‘உ’ முன்பாக, ‘அன்று’ எனும் சொல் வந்து புணருமோது,

‘ஆ ஆகுதலும்’  -  ‘உ’வானது , ‘ஆ’ என்ற எழுத்தாக ஆவதும்,

‘ஐ வருகாலை’ – ‘ஐ’ என்ற சாரியைச் சொல் வந்து புணரும்போது,

‘மெய் வரைந்து கெடுதலும்’ – ’உ’வானது , தான் ஏறியிருந்த மெய்யைத் தனியே விட்டுவிட்டுக் கெட்டுப்போவதும் ,

‘செய்யுள் மருங்கின் உரித்தென மொழிப  ’ – பாட்டுகளில் உண்டாகும் !

1 . அது + அன்று + அம்ம = அதன்றம்ம ×
    அது + அன்று + அம்ம = அதான்றம்ம ×
    அது + அன்று + அம்ம = அதாஅன்றம்ம √  (அல்வழிப் புணர்ச்சி)
                                  (அதாஅன்று - அதுவுமன்றி)

2 . இது + அன்று + அம்ம = இதன்றம்ம ×
    இது + அன்று + அம்ம = இதான்றம்ம ×
    இது + அன்று + அம்ம = இதாஅன்றம்ம √  (அல்வழிப் புணர்ச்சி)
                                                  (இதாஅன்று - இதுவுமன்றி)

3 . உது + அன்று + அம்ம = உதன்றம்ம ×
    உது + அன்று + அம்ம = உதான்றம்ம ×
    உது + அன்று + அம்ம = உதாஅன்றம்ம √  (அல்வழிப் புணர்ச்சி)
                                      (உதாஅன்று – உதுவுமன்றி; சுட்டிக் காட்டப்பட்ட அதுவும் அல்லாமல்)

அதாஅன்று , இதாஅன்று , உதாஅன்று – இவற்றில் வந்துள்ள ‘அ’ , அளபெடை அல்ல ! இந்த
‘அ’, ‘அன்று’ என்பதன் முதல் எழுத்து !

4 . அது + ஐ + மற்று + அம்ம = அதுவைமற் றம்ம ×
    அது + ஐ + மற்று + அம்ம = அதைமற் றம்ம √   (அல்வழிப் புணர்ச்சி)
                                        (அதைமற் றம்ம – அது ; மற்று , அம்ம – அசைநிலைகள் . )

5 . இது + ஐ + மற்று + அம்ம = இதுவைமற் றம்ம ×
    இது + ஐ + மற்று + அம்ம = இதைமற் றம்ம √   (அல்வழிப் புணர்ச்சி)
                               (இதைமற் றம்ம – இது )

6 . உது + ஐ + மற்று + அம்ம = உதுவைமற் றம்ம ×
    உது + ஐ + மற்று + அம்ம = உதைமற் றம்ம √   (அல்வழிப் புணர்ச்சி)
                          (உதைமற் றம்ம – உது )

 இங்கே வந்துள்ள ‘ஐ’ , வேற்றுமை உருபு அல்ல ! இது சாரியை !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 15, 2014 1:55 pm

என் தமிழை தூய தமிழாய் பார்க்கும் போதும், படிக்கும் போதும் ஏற்படும் பரவசத்திற்கு அளவுகோல் கிடையாது. மிக அருமையான பணியை செவ்வனே செய்து வருகிறீர்கள் அய்யா..

நன்றி., நன்றி. நன்றி.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 17, 2014 12:34 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (293)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உயிர்மயங்கியலில் , ‘உ’ஈற்றுச் சொற்களின் புணர்ச்சிகளைப் பார்த்துவருகிறோம் !

  முன்பு, ‘அது’ என்று ‘உ’வில் முடியும் சொல்லானது , அல்வழிப் புணர்ச்சியில், ஒற்று மிகாமல் புணரும் (அது + குறிது = அது குறிது) எனப் பார்த்தோம் !

நினைவிருக்கிறதா?

இப்போது , அதே வகையான சொல் – அஃதாவது , ‘உ’வில் முடியும் பெயர்ச் சொல் –
வல்லெழுத்தை முதலாக உடைய வருசொல்லுடன் புணரும்போது எப்படிப் புணரும் எனக் காட்டுகிறார் ! :-

“வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே” (உயிர்மயங். 57)  

1 .கடு + காய் = கடுங்காய் ×
   கடு + காய் = கடுக்காய் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(கடுக்காய் – கடு மரத்தின் காய்)

2 .கடு + செதிள் = கடுஞ்செதிள் ×
   கடு + செதிள் = கடுச்செதிள் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(கடுச்செதிள் – கடு மரத்தின் வெட்டுத்துண்டு)

3 .கடு + தோல் = கடுந்தோல் ×
   கடு + தோல் = கடுத்தோல் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(கடுத்தோல் – கடுமரத்தின் பட்டை )

4 .கடு + பூ = கடும்பூ ×
   கடு + பூ = கடுப்பூ √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(கடுப்பூ – கடு மரத்தின் பூ )

நச்சினார்க்கினியர் , வருமொழிகளாகப் பண்புப் பெயர்களையும் காட்டுகிறார் !:-

5 . கடு + கடுமை = கடுங் கடுமை ×
   கடு + கடுமை = கடுக் கடுமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(கடுக் கடுமை – கடு மரத்தின் கடிய தன்மை )

6 . கடு + சிறுமை = கடுஞ் சிறுமை ×
   கடு + சிறுமை = கடுச் சிறுமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(கடுச் சிறுமை – கடுமரத்தின் சிறுமைப் பண்பு )

7 . கடு + தீமை = கடுந் தீமை ×
   கடு + தீமை = கடுத் தீமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(கடுத் தீமை – கடு மரத்தின் தீய குணங்கள் )

8 . கடு + பெருமை = கடும் பெருமை ×
   கடு + பெருமை = கடுப் பெருமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(கடுப் பெருமை – கடு மரத்தின் பெருமைகள் )

உரையாசிரியர்கள் சொன்ன கடு என்ற மரத்தைக் கண்டு மகிழ்வோம் வருகிறீர்களா?
1.

[You must be registered and logged in to see this image.]
Courtesy - opendata.keystone-foundation.org
2.

[You must be registered and logged in to see this image.]
 
Coutesy - [You must be registered and logged in to see this link.]


3 .
[You must be registered and logged in to see this image.]

Courtesy - [You must be registered and logged in to see this link.]

4.
[You must be registered and logged in to see this image.]
Courtesy - [You must be registered and logged in to see this link.]

மேல் படங்கள் – கடுமரம் , கடுமரப் பூ, கடுமரக் காய், கடுக்காய் ஆகியன !

இதன் தாவரவியல் பெயர்- Terminalia chebula .



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 18, 2014 11:41 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (294)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

 பழந் தமிழகத்தில் எருவைக் (மாட்டுச் சாணத்தை) குழியில் கொட்டிவைப்பார்கள் ! அந்தக் குழியைச் சிலர் ‘எருவங் குழி’ என்றனர் ; சிலர் , ‘எருக் குழி’ என்றனர்; வேறு சிலர் , ‘எருங் குழி’என்றனர் !

- இவற்றில் எது சரி ?

இலக்கணம் என்ன சொல்கிறது ?

‘எருவங் குழி’ வடிவம் எவ்வாறு ஏற்படுகிறது என்று தனி ஒரு நூற்பாவே கூறியுள்ளார் தொல்காப்பியர் !
ஏனைய இரு வடிங்களையும் தம் உரையால் ‘அவையும் சரிதான்’ என்கிறார் இளம்பூரணர் !

நூற்பாவிலிருந்து  முறையாகத் தொடங்குவோமே ? :-

“எருவுஞ் செருவு மம்மொடு சிவணித்
திரிபிட  னுடைய தெரியுங் காலை
அம்மின் மகரஞ் செருவயிற் கெடுமே
தம்மொற்று மிகூஉம் வல்லெழுத் தியற்கை ” (உயிர்மயங். 58)

‘எருவும் செருவும் அம்மொடு சிவணி’ – ‘எரு’ என்ற சொல்லும் , ‘செரு’ என்ற சொல்லும் , ‘அம்’ சாரியையுடன் சேர்ந்து ,

‘திரிபிடன்  உடைய தெரியும் காலை’ – முன் நூற்பாவில் (உயிர்மயங்.57) வல்லெழுத்துச் சந்தி
(கடு + காய் = கடுக்காய்) பெறும் என்று கூறிய புணர்ச்சிக்கு மாறாக நடப்பதை ஆராயும்போது,

‘அம்மின் மகரம் செருவயின் கெடுமே’ – ‘அம்’சாரியையின் ‘ம்’ஆனது கெடும் ; ‘செரு’ என்பதன்
முன் வல்லெழுத்து வரும்போது , ‘ம்’கெட்ட அந்த இடத்திலே , அவ் வல்லொற்று சந்தியாகத் தோன்றும் !

இதற்கான நேர் எடுத்துக்காட்டுகளை  இளம்பூரணர் உரையால் அறியப்படும் புணர்ச்சிகளோடு சேர்த்து வருமாறு விளக்கலாம் ! :-

1 . எரு + குழி = எருவங் குழி √ (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58)
   எரு + குழி = எருக் குழி√ (சிறுபான்மை)(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58இளம். உரை)  
               
   எரு + குழி = எருங் குழி√ (சிறுபான்மை)( (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58இளம். உரை)
(எருவங் குழி – எருவைப் போட்டுவைக்கும் பள்ளம்)

2 . எரு + சேறு = எருவஞ் சேறு √ (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58)
    எரு + சேறு = எருச் சேறு√ (சிறுபான்மை)(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58இளம். உரை)                                                                                                                  
   எரு + சேறு = எருஞ் சேறு√ (சிறுபான்மை)( (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58இளம். உரை)
(எருவஞ் சேறு – எருவும் நீரும் கலந்த கலவை)


3 . எரு + தாது = எருவந் தாது √ (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58)
  எரு + தாது = எருத் தாது√  (சிறுபான்மை)(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங்.   58இளம். உரை)
   எரு + தாது = எருந் தாது√ (சிறுபான்மை)( (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58இளம். உரை)
(எருவந் தாது – எருவின் தூள்)

4 . எரு + பூழி = எருவம் பூழி √(அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58)
   எரு + பூழி = எருப் பூழி√  (சிறுபான்மை)(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58இளம். உரை)
   எரு + பூழி = எரும் பூழி√ (சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58இளம். உரை)
(எருவம் பூழி – எருவின் தூள்)

5 . எரு + கடுமை = எருவின் கடுமை √(இன்- சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58இளம். உரை)
(எருவின் கடுமை – எருவின் இறுகிய தன்மை)

6 . எரு + ஞாற்சி = எருவ ஞாற்சி √ (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58இளம். உரை)
(எருவ ஞாற்சி – எருவின் நாற்றம்)

1 முதல் 5 வரை , வல்லெழுத்தை முதலாக உடைய வருசொற்கள் இருப்பதையும், 6இல் மெல்லெழுத்தை முதலாக உடைய வருசொல் இருப்பதையும் கவனிக்க !

இப்போது ‘செரு’ –

7 . செரு + களம் = செருவங் களம் ×
      செரு + களம் = செருவக் களம் √(அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58)

8 .செரு + சேனை = செருவஞ் சேனை×
 செரு + சேனை = செருவச் சேனை√(அம் - சாரியை)( (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58 )

9 .செரு + தானை = செருவந் தானை×
  செரு + தானை = செருவத் தானை√ (அம் - சாரியை)( (வேற்றுமைப் புணர்ச்சி)    (உயிர்மயங். 58 )

10 .செரு + பறை = செருவம் பறை×
    செரு + பறை = செருவப் பறை√  (அம் - சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58 )
(செருவப் பறை – போர்க்களப் பறை)

11.  செரு + களம் = செருக் களம் √(சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58 இளம்.உரை)
(செருக் களம் - போர்க்களம்)

12 . செரு + கடுமை = செருவின் கடுமை (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
                                                     (உயிர்மயங். 58 இளம்.உரை)
(செருவின் கடுமை – போர்க்களத்தின் கடுமை)

13 . செரு + ஞாற்சி = செருவ ஞாற்சி √ (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58இளம். உரை)
(செருவ ஞாற்சி – போர்க்கள வித்தைகள் )

7 முதல் 12 வரை , வல்லெழுத்தை முதலாக உடைய வருசொற்கள் இருப்பதையும், 13இல் மெல்லெழுத்தை முதலாக உடைய வருசொல் இருப்பதையும் கவனிக்க !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 19, 2014 11:53 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (295)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

'உ' ஈற்றுச் சொல் தொடர்கிறது ! :-

“ழகர வுகர நீடிட  னுடைத்தே
 உகரம் வருத லாவயி னான”   (உயிர்மயங். 59)

‘ழகர உகரம்’ – ழு என்ற எழுத்து ,

 ‘நீடு இடன் உடைத்தே ’ – ‘ழூ’ என்ற நீட்டல் வடிவத்தை எடுக்கும் !

‘உகரம் வருதல் ஆவயின் ஆன’ – அவ்விடத்தே , ‘உ’ தோன்றும் !

1 . பழு + பல் = பழுப் பல் √ (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங்.57)
    பழு + பல் = பழூஉப் பல் √ (செய்யுளில் மட்டும்)(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங்.59)

(பழு - பேய் ; பழுப் பல் = பழூஉப் பல் = பேயின் பல் )

2 . எழு + கதவு = எழூஉக் கதவு √ (செய்யுளில் மட்டும்) (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங்.59)
(எழு – எழுச்சி ; முதனிலைத் தொழிற்பெயர்;எழூஉக் கதவு – எழுச்சியைத் தாங்கிய கதவு)

3 . குழு + தோற்றம் = குழூஉத் தோற்றம் ×
    குழு + தோற்றம் = குழுத் தோற்றம் √  (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங்.59 நச்சர் உரை)

4 . பழு + காய்= பழூஉக் காய் ×
    பழு + காய் = பழுக் காய் √  (அல்வழிப் புணர்ச்சி) (உயிர்மயங்.59 நச்சர் உரை)
(பழுக்காய் – பழுத்ததாகிய பாக்கு)

இறுதியாகப் , ‘பேய்’ நம்மைப் பிடிக்கும் முன் நாம் அதனைப் பிடிப்போம் !

‘பேய்’ என்பது ஆவி உலகத்தது அல்ல !

இயல்பு மாறி இருக்கும் நிலையைப் ‘பேய்’ என்று தமிழர்கள் குறித்தார்கள் !

‘பேய்ச் சுரைக்காய்’ என்றால் பேய் சாப்பிடும் சுரைக்காயா ?

அல்ல ! இயல்பான கறிச்சுரைக்காயினின்றும் மாறுபட்ட சுரைக்காய்தான் அது !

‘பேய்க் கரும்பு’ , ‘பேயன் பழம்’ என்றெல்லாம் வரக் காணலாம் !

ஆகவே ‘பேய்ப் பல்’ என்றால் ‘பெரிய பல்’ என்பது பொருள் !
யானையின் நகம் ஒரு பெரிய பல் போல இருந்ததாம் !  குறுந்தொகையில் (பாடல்180) இந்த அற்புதமான உவமை வந்துள்ளது !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 20, 2014 11:59 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (296)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நமது முன் ஆய்வில் , ‘உதி’ என்ற உதிய மரத்தைப் பார்த்தோம் , நினைவிருக்கிறதா?

அந்த ‘உதி’  மரத்தின் கிளையை ‘உதிங்கோடு’ என்று கூறவேண்டும் என்றார் தொல்காப்பியர் !

உயிர்மயங்கியல் நூற்பா 41இல் இதனைப் பார்த்தோம் !

இப்போது ‘ஒடு’ மரத்தின் கிளையையும் அவ்வாறே ‘ஒடுங்கோடு’ என்று கூறுக என்கிறார் அவர் !:-

“ஒடுமரக் கிளவி உதிமர வியற்றே”  (உயிர்மயங். 60)

1 .  ஒடு + கோடு = ஒடுக் கோடு ×
  ஒடு + கோடு = ஒடுங் கோடு √  (வேற்றுமைப் புணர்ச்சி)

2 .  ஒடு + செதிள் = ஒடுச் செதிள் ×
    ஒடு + செதிள் = ஒடுஞ் செதிள் √  (வேற்றுமைப் புணர்ச்சி)

3 .  ஒடு + தோல் = ஒடுத் தோல் ×
    ஒடு + தோல் = ஒடுந் தோல் √  (வேற்றுமைப் புணர்ச்சி)


4 .  ஒடு + பூ = ஒடுப் பூ ×
    ஒடு + பூ = ஒடும் பூ √  (வேற்றுமைப் புணர்ச்சி)

இங்கே நச்சர் ஓர் இலக்கண நுட்பம் உரைக்கிறார் !

நச்சர் கூற்றுப்படி , ஒடு மரக் காட்டை எப்படிக் கூறவேண்டுமாம்?-

5 . ஒடு + காடு = ஒடுக் காடு ×
   ஒடு + காடு = ஒடுவங் காடு √ (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

தொல்காப்பியர் கூறிய ஒடு எனும் மரத்தை இப்போது பார்வையிடலாமா? –


1 .

[You must be registered and logged in to see this image.]
Courtesy - commons.wikimedia.org

2 .

[You must be registered and logged in to see this image.]
Courtesy - commons.wikimedia.org

3 .  
[You must be registered and logged in to see this image.]
Courtesy - commons.wikimedia.org

4 .
[You must be registered and logged in to see this image.]
Courtesy - commons.wikimedia.org

- இவை ஒடு மரத்தின் தோற்றங்கள் !

ஒடு மரம், ‘நிலப்பாலை’ எனவும் அறியப்படும் !

இதன் தவரவியல் பெயர் - Cleistanthus collinus

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 37 of 84 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 60 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக