புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10 
4 Posts - 3%
bala_t
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10 
1 Post - 1%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10 
293 Posts - 42%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10 
6 Posts - 1%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10 
5 Posts - 1%
manikavi
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 57 of 84 Previous  1 ... 30 ... 56, 57, 58 ... 70 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 29, 2015 11:04 am

தங்களின் உழைப்பு இந்த படைப்பில் தெரிகிறது,நன்றி ஐயா.
Dr.S.Soundarapandian wrote:தொடத் தொடத் தொல்காப்பியம் (400)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘ற்’ முதல் ‘றௌ’ வரையான  வல் ஒலிகளைப் பொறுத்தவரை அவற்றை உச்சரித்து வெளிவிடுவதற்கான காற்று நெஞ்சில் நின்றாடும் காற்று என்பது தொல்காப்பியர் கருத்து (பிறப் . 1)!
‘ன்’ முதல் ‘னௌ’ வரையான மெல் ஒலிகளைப் பொறுத்தவரை அவற்றை உச்சரித்து வெளிவிடுவதற்கான காற்று மூக்கில்  நின்றாடும் காற்று என்பது தொல்காப்பியர் கருத்து (பிறப் . 1)!
[You must be registered and logged in to see this link.]

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Nov 29, 2015 3:03 pm

அருமையான பதிவு. நன்கு ஆழ்ந்து படிக்க புரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக தங்கள் பதிவு அமைந்து உள்ளது. நன்றி ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Dec 11, 2015 7:01 pm

நன்றி சசி அவர்களே !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Dec 11, 2015 7:04 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (401)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பிறப்பியலில் , இப்போது தொல்காப்பியர் , ‘ர்’ , ‘ழ்’ஆகிய எழுத்தொலிகள் பிறக்கும் வகையைச் சொல்லுகிறார் !:-
“நுனிநா  வணரி  யண்ணம் வருட
ரகார ழகார மாயிரண்டும் பிறக்கும்” (பிறப் . 13)

‘நுனி நா அணரி’ – நுனி நாக்கானது மேல் நோக்கிச் சென்று ,
‘அண்ணம் வருட’ – அண்ணத்தை வருடிக் கொடுக்க,
‘ரகாரம் ழகாரம்’ – ‘ர்’ , ‘ழ்’,
‘ஆ  இரண்டும் பிறக்கும்’ – என்ற அந்த இரு எழுத்துகளும் பிறக்கும் !

நாக்கானது அண்ணத்தை வருடும்போது பிறக்கும் ஒலியை , மொழியியலில் , வருடொலி (Flap) என்பர் !

தொல்காப்பியர் இங்கே குறிக்கும் அண்ணத்தை மொழியியலில் , அண்ணம் (Palate ) என்றே சுட்டுகின்றனர் என்பது கவனிக்கத் தக்கது !

தொல்காப்பியர் கூறுவதுபோலவே இன்றைய மொழியியலாரும் , ‘ர்’ , ‘ழ்’ ஆகியவற்றை வருடொலி (Flap) என்றுதான் எழுதுகின்றனர் !

இந்த இரு எழுத்துகளையும் உச்சரித்துப் பார்த்தால் ‘வருடொலி’  என்ன என்பது உங்களுக்குப் புரியும் ; வேறொன்றுமில்லை !

‘ர்’ரின் பிறப்பைக் குறில் (Short) என்பர் !
‘ர்ர்’ரின் பிறப்பை நெடில் (Long) என்பர்!
 ‘கார்’ என்ற சொல்லில் ‘ர்’வருவதைக் காண்க!
‘சுர்ரென்று’ – என்பதில் ‘ர்ர்’ வருவதைக் காண்க!
‘ர்’ பிறக்கும்போது , குரல் நாண் அதிர்வதைக் கவனியுங்கள் !

இதனால் , ‘ர்’ரின் ஒலியை ,  ‘அண்ணஅதிர்வுடை க் குறில் வருடொலி’ (Palatal voiced flap short) எனலாம் !

இதைப் போலவே , ‘ழ்’ பிறக்கும்போதும் குரல் நாண் அதிர்கிறது (Vibrates)!
‘ழ்’ழை உச்சரிக்க வேண்டுமானால் , நாக்கை மேற்புறமாக மடிக்கவேண்டும் !இவ்வாறு மடிப்பதைத்தான் ’நாமடி’ (Retroflex ) என்கின்றனர் !

‘ழ்’ழைக் குறில் எனவும் , ‘ழ்ழ்’ழை நெடில் எனவும் கூறுவர் !
‘வாழ்க்கை’ – இங்கு ‘ழ்’ வருவதைக் காண்க !

எனவே , ‘ழ்’ழை , ’அண்ண அதிர்வுடை நாமடிக் குறில் வருடொலி ‘ (Palatal voiced retroflex  flap short) எனலாம் !
 ‘ழ்ழ்’ழை , ’அண்ண அதிர்வுடை நாமடி நெடில் வருடொலி ‘ (Palatal voiced retroflex  flap long) எனலாம் !

ர் , ர , ரா , ரி , ரீ , ரு , ரூ , ரெ , ரே , ரை , ரொ , ரோ , ரௌ  - ஆகிய 13  ரகர எழுத்துகளுமே ,  

‘அண்ணஅதிர்வுடை  வருடொலி’ (Palatal voiced flap ) யாகப் பிறக்கின்றன எனலாம் !

ழ் , ழ , ழா , ழி , ழீ , ழு , ழூ , ழெ , ழே , ழை , ழொ , ழோ , ழௌ - ஆகிய 13  ழகர எழுத்துகளுமே ,  ‘அண்ணஅதிர்வுடை  நாமடி  வருடொலி’ (Palatal  retroflex voiced flap ) யாகப் பிறக்கின்றன எனலாம் !

13  ரகரங்களுக்கும் உரிய காற்றானது மிடற்றில் (கண்டத்தில்) (Pharynx)நின்றாடும் காற்று என்பது தொல்காப்பியர் கருத்தாகும் (பிறப் . 1) !

இதைப்போன்றே 13 ழகரங்களுக்கு உரிய காற்றானது அதே மிடற்றில் நின்றாடும் காற்றே என்பதும் அவர்  கருத்தாகும் (பிறப் . 1) !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 13, 2015 6:27 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (402)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது , ‘ல்’ , ‘ள்’ ஆகியவற்றின் பிறப்பு !-

“நாவிளிம்பு வீங்கி யண்பன் முதலுற
ஆவயி  னண்ண மொற்றவும் வருடவும்
லகார  ளகார மாயிரண்டும் பிறக்கும்” (பிறப் . 14)

 ‘நாவிளிம்பு வீங்கி அண்பல்  முதல்உற’ -  நுனி நாக்கின் இரு பக்கங்களும் உப்பி , கீழ் நுனி அண்ணத்தைச் சேர்ந்து ,  
‘ஆவயின்   அண்ணம் ஒற்றவும் வருடவும்’ – தொடவும் , வருடிக் கொடுக்கவும்,
‘லகாரம்   ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும்’ – ‘ல்’ , ‘ள்’ஆகியன பிறக்கும் !

தொல்காப்பியர் ‘அண்பல்’ என்றதை, நாம் ‘Alveo palatal’ என்கிறோம்  !

தொல்காப்பியர் ‘ஒற்றவும்’ என்பதை, நாம் ‘Lateral continuant’ என்கிறோம் !

‘ல்’லை உச்சரிக்கும்போது , தொண்டையில் உள்ள குரல் நாண்(Vocal cord) அதிர்கிறது ! எனவே , ‘ல்’லை ‘அதிர்வுடை ஒலி’ (Voiced) என்கிறோம் !

‘ல்’ லைக் குறில் என்றும் , ‘ல்ல்’லை நெடில் என்றும் கூறுவர் !

வலை – இதில் உள்ளது குறில் ‘ல்’ !

பல்லி – இதில் உள்ளது நெடில் ‘ல்ல்’ !

இவற்றைத் தொகுத்து , ‘ல்’லின் பிறப்பை ,   அண்பல் அதிர்வுடைக் குறில் தொடர் மருங்கொலி (Alveo palatal voiced short lateral continuant) எனலாம் !

‘ல்ல்’லின் பிறப்பை -    அண்பல் அதிர்வுடைக் நெடில் தொடர் மருங்கொலி (Alveo palatal voiced long lateral continuant) எனலாம் !

ல் , ல , லா ,லி ,லீ , லு , லூ , லெ , லே , லை , லொ , லோ , லௌ – ஆகிய 13 எழுத்துகளுமே அண்பல் அதிர்வுடைக்  தொடர் மருங்கொலியாகவே (Alveo palatal voiced  lateral continuant) பிறக்கின்றன எனலாம் !

தொல்காப்பியர் ‘வருடவும்’ என்பதை, நாம் ‘Flap’ என்கிறோம் !

‘ள்’ளை உச்சரிக்கும்போது , தொண்டையில் உள்ள குரல் நாண்(Vocal cord) அதிர்கிறது ! எனவே , ‘ள்’ளை ‘அதிர்வுடை ஒலி’ (Voiced) என்கிறோம் !

‘ள்’ளை உச்சரிக்கும்போது , நாவானது மேல் நோக்கி மடிகிறது !

எனவே , ‘ள்’ளை ‘நாமடி ஒலி’ (Retroflex sound) என்பர் !

‘ள்’ளைக் குறில் என்றும் , ‘ள்ளை’ளை நெடில் என்றும் கூறுவர் !

வளை – இதில் உள்ளது குறில் ‘ள்’ !

பள்ளி – இதில் உள்ளது நெடில் ‘ள்ள்’ !

இவற்றைத் தொகுத்து , ‘ள்’ளின் பிறப்பை ,   அண்பல் அதிர்வுடை நாமடிக் குறில் வருடொலி (Alveo palatal  retroflex voiced short flap) எனலாம் !

‘ள்ள்’ளின் பிறப்பை -    அண்பல் அதிர்வுடை நாமடி  நெடில்  வருடொலி (Alveo palatal retroflex voiced long flap) எனலாம் !

ள் , ள , ளா ,ளி ,ளீ , ளு ,ளூ , ளெ , ளே , ளை , ளொ , ளோ , ளௌ – ஆகிய 13 எழுத்துகளுமே அண்பல் அதிர்வுடை  வருடொலியாகவே (Alveo palatal retroflex  voiced  flap) பிறக்கின்றன எனலாம் !
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 7:26 pm

Dr.S.Soundarapandian wrote:தொடத் தொடத் தொல்காப்பியம் (402)
ல் , ல , லா ,லி ,லீ , லு , லூ , லெ , லே , லை , லொ , லோ , லௌ – ஆகிய 13 எழுத்துகளுமே அண்பல் அதிர்வுடைக்  தொடர் மருங்கொலியாகவே (Alveo palatal voiced  lateral continuant) பிறக்கின்றன எனலாம் !

ள் , ள , ளா ,ளி ,ளீ , ளு ,ளூ , ளெ , ளே , ளை , ளொ , ளோ , ளௌ – ஆகிய 13 எழுத்துகளுமே அண்பல் அதிர்வுடை  வருடொலியாகவே (Alveo palatal retroflex  voiced  flap) பிறக்கின்றன எனலாம் !
***
[You must be registered and logged in to see this link.]
அருமையான விளக்கம் ,நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 7:35 pm

Dr.S.Soundarapandian wrote:தொடத் தொடத் தொல்காப்பியம் (401)
இதனால் , ‘ர்’ரின் ஒலியை ,  ‘அண்ணஅதிர்வுடை க் குறில் வருடொலி’ (Palatal voiced flap short) எனலாம் !

இதைப் போலவே , ‘ழ்’ பிறக்கும்போதும் குரல் நாண் அதிர்கிறது (Vibrates)!
‘ழ்’ழை உச்சரிக்க வேண்டுமானால் , நாக்கை மேற்புறமாக மடிக்கவேண்டும் !இவ்வாறு மடிப்பதைத்தான் ’நாமடி’ (Retroflex ) என்கின்றனர் !
[You must be registered and logged in to see this link.]
தொல்காப்பியத்தில் ஒவ்வொரு எழுத்துக்கும் கொடுத்த விளக்கம் அற்புதம்
பிரமிப்பு ,நன்றி ஐயா.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Dec 17, 2015 6:30 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (403)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பிறப்பியலில் இப்போது ‘ப்’ , ‘ம்’ ஆகிய ஒலிகள் பிறப்பதைக் கூறுகிறார் தொல்காப்பியர் ! :-
“இதழியைந்து பிறக்கும் பகார மகாரம்” (பிறப். 15)

‘இதழ் இயைந்து’ – கீழ் உதடும் மேல் உதடும் சேர்ந்து ,
‘பிறக்கும் பகாரம் மகாரம்’ -  ‘ப்’ , ‘ம்’ ஆகியன பிறக்கும் !
‘ப்’ ஆனது இரு உதடுகள் சேரப் பிறக்கிறது என்று தொல்காப்பியர் சொல்லியதைத்தான் ‘Bilabial’ என்கிறார்கள்!

‘ப்’பை ஒலிக்கும்போது , குரல் நாண் அதிர்வதில்லை ! எனவே ‘ப்’பை ஒலிப்பிலாதது (Voiceless) என்கின்றனர் !

‘ப்’பை ஒலிக்கும்போது ‘இப்’ என்று  ஒரு நிறுத்தம் ஏற்படுவதைக் கவனியுங்கள் !
இதனால்தான் , ‘ப்’பை நிறுத்தொலி (Stop) என்கின்றனர் !

‘ப்’பைக் குறில் (Short)என்றும் , ‘ப்ப்’பை நெடில் (Long) என்றும் கூறுவர் !

  படம் – இதில் உள்ளது குறில் ‘ப்’.
கப்பம் – இதில் உள்ளது நெடில் ‘ப்’.

இவற்றைத் தொகுத்து , ‘ப்’பின் பிறப்பை ,  ஈரிதழ் ஒலிப்பிலா குறில் நிறுத்தொலி(Bilabial voiceless short stop) எனலாம் !

‘ப்ப்’பின் பிறப்பை ,  ஈரிதழ் ஒலிப்பிலா நெடில் நிறுத்தொலி(Bilabial voiceless long stop) எனலாம் !

‘ப்’பை உச்சரித்து அதிலிருந்து  ‘ப’வுக்குப் போகும்போது , நிறுத்த ஒலி விடுபடுகிறது ! இந்த விடுபடும் ஒலிதான் ‘வெடிப்பொலி’ (Plosive) எனப்படுகிறது !

ப , பா , பி , பீ ,பு , பூ, பெ , பே , பை , பொ , போ , பௌ – இப் பன்னிரு எழுத்தொலிகளுமே, ஈரிதழ் ஒலிப்பிலா வெடிப்பொலிகள்(Bilabial voiceless plosives)எனப்படும் !

இப்போது ‘ம்’மைக் காண்போம் !

‘ம்’ ஆனது  ‘ப்’பைப் போன்றே ஈரிதழ் (Bilabial )  ஒலி ஆகும்!

‘ம்’மை ஒலிக்கும்போது , குரல் நாண் அதிர்கிறது ! எனவே ‘ம்’மை ஒலிப்புடை  (Voiced)  ஒலி என்கின்றனர் !

‘ம்’மை ஒலிக்கும்போது  அவ்வோசை மூக்கு வழியாகப் போகிறது !

இதனால்தான் , ‘ம்’மை மூக்கொலி (Nasal) என்கின்றனர் !

‘ம்’மைக் குறில் (Short)என்றும் , ‘ம்ம்’மை நெடில் (Long) என்றும் கூறுவர் !

  மடல் – இதில் உள்ளது குறில் ‘ம்’.
கம்மல் – இதில் உள்ளது நெடில் ‘ம்ம்’.

இவற்றைத் தொகுத்து , ‘ம்’பின் பிறப்பை ,  ஈரிதழ் ஒலிப்புடைக் குறில் மூக்கொலி(Bilabial voiced  short nasal) எனலாம் !

‘ம்ம்’மின் பிறப்பை ,  ஈரிதழ் ஒலிப்புடை நெடில் மூக்கொலி(Bilabial voiced long nasal) எனலாம் !

‘ம்’மை உச்சரித்து அதிலிருந்து  ‘ம’வுக்குப் போகும்போதும் , மூக்கு ஒலிதான்(Nasal) ஏற்படுகிறது ! வெடிப்பொலி ஏற்படுவதில்லை !

ம் , ம , மா ,மி , மீ , மு , மூ , மெ , மே , மை , மொ , மோ , மௌ - இப் பதின்மூன்று எழுத்தொலிகளுமே, ஈரிதழ் ஒலிப்புடை  மூக்கொலிகள்(Bilabial voiced nasals)எனப்படும் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 19, 2015 11:23 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (404)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பிறப்பியலில் தொல்காப்பியர் இப்போது ‘வ்’ வின்  பிறப்பை ஓதுகிறார் ! –
“பல்லித  ழியைய வகாரம் பிறக்கும்” (பிறப். 16)

‘பல் இதழ் இயைய’ – பல்லும் இதழும் சேர ,
‘வகாரம் பிறக்கும்’   - ‘வ்’  பிறக்கும் !

பல்லும் இதழும் சேர்ந்து பிறக்கும் ஒலியை , மொழியியலில்  ‘பல்லிதழ் ஒலி’(Labio dental sound) என்பர் !

‘வ்’வை உச்சரித்துப் பார்த்தால் , மேற்பல் வரிசையோடு கீழ் உதடு , சிறிது உள் மடிப்புடன் , அழுந்துவதைப் பார்க்கலாம் !

‘வ்’வை ஒலிக்கும்போது , குரல் நாண் அதிர்கிறது!

எனவே , ‘வ்’வை ஒலிப்புடை ஒலி (Voiced) என்பர் !

 ‘வ்’வை ஒலிக்கும்போது , சிறிது நேரம் உதடும் பல்லும் தொட்டுக்கொண்டபடி நிற்கிறது
!

எனவே , ‘வ்’வைத் தொடரொலி (Continuant)என்பர் !

‘வ்’வைக் குறில் (Short) என்றும் , ‘வ்வ்’வை நெடில் (Long) எனவும் கூறுப.

இவற்றைத் தொகுத்து , ‘வ்’வின் பிறப்பை ,  ‘பல்லிதழ் ஒலிப்புடைக்  குறில் தொடரொலி’ (Labio dental voiced short continuant) எனலாம் !

‘வ்வ்’வின் பிறப்பை ,  ‘பல்லிதழ் ஒலிப்புடை நெடில் தொடரொலி’ (Labio dental voiced long continuant) எனலாம் !

வ் , வ , வா , வி , வீ , வு , வூ , வெ ,வே ,  வை , வொ , வோ , வௌ – ஆகிய 13 எழுத்துகளும் ,  ‘பல்லிதழ் ஒலிப்புடைத்  தொடரொலி’ (Labio dental voiced  continuant) ஆகும் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 9:19 pm

Dr.S.Soundarapandian wrote:
பிறப்பியலில் தொல்காப்பியர் இப்போது ‘வ்’ வின்  பிறப்பை ஓதுகிறார் ! –
“பல்லித  ழியைய வகாரம் பிறக்கும்” (பிறப். 16)
பல் இதழ் இயைய’ – பல்லும் இதழும் சேர ,
‘வகாரம் பிறக்கும்’   - ‘வ்’  பிறக்கும் !
***
[You must be registered and logged in to see this link.]
வகாரம் பற்றிய அரிய தகவலுக்கு நன்றி ஐயா.

Sponsored content

PostSponsored content



Page 57 of 84 Previous  1 ... 30 ... 56, 57, 58 ... 70 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக