புதிய பதிவுகள்
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
by ayyasamy ram Today at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 61 of 84 •
Page 61 of 84 • 1 ... 32 ... 60, 61, 62 ... 72 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (413)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பேடி வந்தாள்
பேடி வந்தான்
- எது சரி?
இதற்குத் தொல்காப்பியத்தில் உள்ள விடை !-
“பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்
தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென அறியும் அந்தந்தமக் கிலவே
உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும்” (கிளவி.4)
‘பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்,
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்’- ஆண்மையானது மாறுபட்டுப் பெண் தன்மையைச் சுட்டும் உயர்திணைப் பெயர்ச்சொல்லும்,
‘தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்’ – தெய்வத்தைக் குறிக்கும் பெயர்ச் சொல்லும்,
‘இவ் என அறியும் அந்தந்தமக்கு இலவே’ – இந்த ஈறுதான் என்று பால் ஈறு கொள்ளமாட்டா!
‘உயர்திணை மருங்கில் பால்பிரிந்து இசைக்கும்’- உயர்திணைக்கான பால் ஈறுகளை தொடரின் வினை ஈறு பெறும் !
சேனாவரையரின் எடுத்துக்காட்டு –
1 . பேடி வந்தாள்
2 . பேடியர் வந்தார்
3. தேவன் வந்தான்
4 . தேவி வந்தாள்
5. தேவர் வந்தார்
அஃதாவது , ‘குருடி’ என்ற சொல்லைப் படித்த மாத்திரத்தில் , இது பெண்பால் பெயர்ச்சொல் என்று கூறிவிடுகிறோம் !
எதனால் ?
‘இ’ என்ற பெண்பால் ஈற்றினால் !
‘வேடன்’ என்று படித்த மாத்திரத்தில் , இது ஆண்பால் பெயர்ச்சொல் என்று கூறிவிடுகிறோம் !
எதனால்?
‘ன்’ என்ற ஆண்பால் ஈர்றினால் !
இந்த முறையில் ‘பேடி’ , ‘தேவன்’ போன்ற சொற்களைக் கூறிவிடமுடியாது ! அவற்றை அடுத்த வினைச்சொல்லின் ஈற்றைக் கொண்டுதான் அறிய வேண்டும் ! இதுதான் தொல்காப்பியர் கூறவந்தது !
இன்னும் விளக்கலாமா?
‘பேடி’ என்ற சொல்லின் ஈறாகிய இகர ஈறு பெண்பால் ஈறு அல்ல !
‘பேடி வந்தாள்’ என்ற தொடரின் ஈற்று வினையில் உள்ள ‘ள்’என்பதே , பேடி என்ற உயர்திணைச்சொல் பெண்பாலைக் குறிக்கிறது என்பதை நமக்கு அறிவிக்கிறது !
இதைப்போலவே , ‘தேவன்’ என்ற சொல்லின் ‘ன்’ஈறு ஆண்பால் ஈறு அல்ல! ‘தேவன் வந்தான்’ என்ற தொடரில் உள்ள வினையாகிய ‘வந்தான்’என்பதன் ஈறாகிய ‘ன்’என்பதே ஆண்பால் என்பதை நமக்கு அறிவிக்கிறது !
நச்சினார்க்கினியர் உரைப்படி –
‘அலி வந்தான்’ என்று எழுதவேண்டும் !
‘அலி’ என்ற சொல்லின் இகர ஈறு பெண்பால் ஈறு அல்ல! பெண்பால் ஈறாக இருந்தால் ‘அலி வந்தாள்’ என்றல்லவா இருக்கவேண்டும் ?
நச்சர் , ‘மகண்மா வந்தாள்’ என்று எழுதவேண்டும் என்கிறார் !
மகண்மா – அலி (Hermaphrodite)
‘அலி’ – ஒருவரைக் குறித்தாலும் , இரு வகைகளில் வினை ஈறு பெறுகின்றன !
தற்காலத்தில் திருநங்கை , அரவாணி ,அலி என்ற சொற்கள் ,ஒரே பாலினத்தவரைக் குறிக்கின்றன; இவர்கள் பிறப்பால் ஆணாகப் பிறந்து , குணத்தால் பெண்தன்மை பெற்றுப் பென்ணாகவே வாழ்பவர்கள்.இவர்களை Transwomen என்பர்.
பிறப்பால் பெண்ணாகப் பிறந்து ஆண்தன்மையை மிகுதியாகக் கொண்டு ஆண்களாக வாழ்பவர்களைத் திருநம்பிகள் (Transmen) என்பர்.
இருவரையுமே மூன்றாம் பாலினத்தவர் (Third gender) என்பர்.
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பேடி வந்தாள்
பேடி வந்தான்
- எது சரி?
இதற்குத் தொல்காப்பியத்தில் உள்ள விடை !-
“பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்
தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென அறியும் அந்தந்தமக் கிலவே
உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும்” (கிளவி.4)
‘பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்,
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்’- ஆண்மையானது மாறுபட்டுப் பெண் தன்மையைச் சுட்டும் உயர்திணைப் பெயர்ச்சொல்லும்,
‘தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்’ – தெய்வத்தைக் குறிக்கும் பெயர்ச் சொல்லும்,
‘இவ் என அறியும் அந்தந்தமக்கு இலவே’ – இந்த ஈறுதான் என்று பால் ஈறு கொள்ளமாட்டா!
‘உயர்திணை மருங்கில் பால்பிரிந்து இசைக்கும்’- உயர்திணைக்கான பால் ஈறுகளை தொடரின் வினை ஈறு பெறும் !
சேனாவரையரின் எடுத்துக்காட்டு –
1 . பேடி வந்தாள்
2 . பேடியர் வந்தார்
3. தேவன் வந்தான்
4 . தேவி வந்தாள்
5. தேவர் வந்தார்
அஃதாவது , ‘குருடி’ என்ற சொல்லைப் படித்த மாத்திரத்தில் , இது பெண்பால் பெயர்ச்சொல் என்று கூறிவிடுகிறோம் !
எதனால் ?
‘இ’ என்ற பெண்பால் ஈற்றினால் !
‘வேடன்’ என்று படித்த மாத்திரத்தில் , இது ஆண்பால் பெயர்ச்சொல் என்று கூறிவிடுகிறோம் !
எதனால்?
‘ன்’ என்ற ஆண்பால் ஈர்றினால் !
இந்த முறையில் ‘பேடி’ , ‘தேவன்’ போன்ற சொற்களைக் கூறிவிடமுடியாது ! அவற்றை அடுத்த வினைச்சொல்லின் ஈற்றைக் கொண்டுதான் அறிய வேண்டும் ! இதுதான் தொல்காப்பியர் கூறவந்தது !
இன்னும் விளக்கலாமா?
‘பேடி’ என்ற சொல்லின் ஈறாகிய இகர ஈறு பெண்பால் ஈறு அல்ல !
‘பேடி வந்தாள்’ என்ற தொடரின் ஈற்று வினையில் உள்ள ‘ள்’என்பதே , பேடி என்ற உயர்திணைச்சொல் பெண்பாலைக் குறிக்கிறது என்பதை நமக்கு அறிவிக்கிறது !
இதைப்போலவே , ‘தேவன்’ என்ற சொல்லின் ‘ன்’ஈறு ஆண்பால் ஈறு அல்ல! ‘தேவன் வந்தான்’ என்ற தொடரில் உள்ள வினையாகிய ‘வந்தான்’என்பதன் ஈறாகிய ‘ன்’என்பதே ஆண்பால் என்பதை நமக்கு அறிவிக்கிறது !
நச்சினார்க்கினியர் உரைப்படி –
‘அலி வந்தான்’ என்று எழுதவேண்டும் !
‘அலி’ என்ற சொல்லின் இகர ஈறு பெண்பால் ஈறு அல்ல! பெண்பால் ஈறாக இருந்தால் ‘அலி வந்தாள்’ என்றல்லவா இருக்கவேண்டும் ?
நச்சர் , ‘மகண்மா வந்தாள்’ என்று எழுதவேண்டும் என்கிறார் !
மகண்மா – அலி (Hermaphrodite)
‘அலி’ – ஒருவரைக் குறித்தாலும் , இரு வகைகளில் வினை ஈறு பெறுகின்றன !
தற்காலத்தில் திருநங்கை , அரவாணி ,அலி என்ற சொற்கள் ,ஒரே பாலினத்தவரைக் குறிக்கின்றன; இவர்கள் பிறப்பால் ஆணாகப் பிறந்து , குணத்தால் பெண்தன்மை பெற்றுப் பென்ணாகவே வாழ்பவர்கள்.இவர்களை Transwomen என்பர்.
பிறப்பால் பெண்ணாகப் பிறந்து ஆண்தன்மையை மிகுதியாகக் கொண்டு ஆண்களாக வாழ்பவர்களைத் திருநம்பிகள் (Transmen) என்பர்.
இருவரையுமே மூன்றாம் பாலினத்தவர் (Third gender) என்பர்.
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (414)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நமது அடுத்த நூஊற்பா !-
“னஃகா னொற்றே ஆடூஉ அறிசொல்” (கிளவி. 5)
‘னஃகான் ஒற்றே’ – ‘ன்’ எனும் ஒற்றெழுத்தே ,
‘ஆடூஉ அறிசொல்’ – ஆண்பாலைக் குறிக்கும் ஈறாக வந்து , சொல்லை ஆண்பாற் சொல் எனத் தெரிவிப்பது ஆகும் !
சேனாவரையரின் எடுத்துக்காட்டுகள் !-
1. உண்டனன்
2. உண்டான்
3. உண்ணாநின்றனன்
4. உண்ணாநின்றான்
5. உண்பன்
6. உண்பான்
7. கரியன்
8. கரியான்
இவற்றில் 1 முதல் 6 வரையான சொற்கள் – தெரிநிலை வினை முற்றுகள் (Finite verbs).
7,8 இரண்டும் – குறிப்பு வினையாலணையும் பெயர்கள் (Appellative conjucated nouns).
தெய்வச் சிலையார் மேலும் இரு எடுத்துக்காட்டுகளைத் தருகிறார் !-
1.பாண்டியன்
2.மாயவன்
இந்த எடுத்துக்கட்டுகளைத் தந்த தெய்வச் சிலையார் – “இவை பெயர்” என்கிறார்.
அஃதாவது , ‘ன்’ ஈற்றில் முடியும் ‘பாண்டியன்’ , ‘மாயவன்’ ஆகிய இரு சொற்களும் ஆண்பாற் சொற்கள் ஆம்!
ஆண்பாலை அடையாளம் காண ‘ன்’ பயன் பட்டதுபோலப் பெண்பாலை அடையாளம் காண ‘ள்’ பயன்படும் என்கிறது அடுத்த சூத்திரம் !-
“ளஃகா னொற்றே மகடூஉ வறிசொல்” (கிளவி.6)
‘ளஃகான் ஒற்றே’ – ‘ள்’ எனும் ஒற்றெழுத்தே ,
‘மகடூஉ அறிசொல்’ – பெண்பாற் சொல்லை அறிவிக்கும் ஈறாகும் !
சேனாவரையரின் எடுத்துக்காட்டுகள் !-
1.உண்டனள்
2.உண்டாள்
3.உண்ணநின்றனள்
4.உண்ணாநின்றாள்
5.உண்பள்
6. உண்பாள்
7.கரியள்
8.கரியாள்
இவற்றிலும் 1 முதல் 6 வரையான சொற்கள் – தெரிநிலை வினை முற்றுகள் ; 7,8 இரண்டும் – குறிப்பு வினையாலணையும் பெயர்கள்.
தெய்வச் சிலையார் தரும் வேறு இரு காட்டுகள் –
1. அவள்
2. திருவினாள்
அவள் – சுட்டுப் பெயர்
திருவினாள் – குறிப்பு வினையாலணையும் பெயர்.
(திருவினாள்- செல்வம் கொண்டவள்)
தோழி – இதிலுள்ள ஈறு ‘இ’ ; இந்த ஈறுதான் இங்கே பெண்பாலைக் குறிக்கிறது.
ஆனால் தொல்காப்பியர் ஏன்இதனைப் பெண்பால் ஈறு என்று சொல்லவில்லை ?
ஏனெனில் , இதே ‘இ’ ஈறு , ‘நாற்காலி’ என்ற சொல்லிலும் வருகிறதே?
எனவே , ‘இ’ ஈறு பெண்பால் ஈறு என்று ஒரு சட்டமாகக் கூறமுடியாது !
இந்தக் காரணத்தால்தான் இகரத்தைப் பெண்பால் ஈறாகத் தொல்கப்பியர் கூறவில்லை !
இப்போது, தொல்காப்பிய நூற்பாக்களில் எப்படிப்பட்ட அடிப்படையான , சட்டமாகக் கொள்ளத்தக்க விதிகளே வருகின்றன என்பது விளங்குகிறதல்லவா?
இதுவே தொல்காப்பிய இரகசியம் (Secret of Tholkappiyam)!
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நமது அடுத்த நூஊற்பா !-
“னஃகா னொற்றே ஆடூஉ அறிசொல்” (கிளவி. 5)
‘னஃகான் ஒற்றே’ – ‘ன்’ எனும் ஒற்றெழுத்தே ,
‘ஆடூஉ அறிசொல்’ – ஆண்பாலைக் குறிக்கும் ஈறாக வந்து , சொல்லை ஆண்பாற் சொல் எனத் தெரிவிப்பது ஆகும் !
சேனாவரையரின் எடுத்துக்காட்டுகள் !-
1. உண்டனன்
2. உண்டான்
3. உண்ணாநின்றனன்
4. உண்ணாநின்றான்
5. உண்பன்
6. உண்பான்
7. கரியன்
8. கரியான்
இவற்றில் 1 முதல் 6 வரையான சொற்கள் – தெரிநிலை வினை முற்றுகள் (Finite verbs).
7,8 இரண்டும் – குறிப்பு வினையாலணையும் பெயர்கள் (Appellative conjucated nouns).
தெய்வச் சிலையார் மேலும் இரு எடுத்துக்காட்டுகளைத் தருகிறார் !-
1.பாண்டியன்
2.மாயவன்
இந்த எடுத்துக்கட்டுகளைத் தந்த தெய்வச் சிலையார் – “இவை பெயர்” என்கிறார்.
அஃதாவது , ‘ன்’ ஈற்றில் முடியும் ‘பாண்டியன்’ , ‘மாயவன்’ ஆகிய இரு சொற்களும் ஆண்பாற் சொற்கள் ஆம்!
ஆண்பாலை அடையாளம் காண ‘ன்’ பயன் பட்டதுபோலப் பெண்பாலை அடையாளம் காண ‘ள்’ பயன்படும் என்கிறது அடுத்த சூத்திரம் !-
“ளஃகா னொற்றே மகடூஉ வறிசொல்” (கிளவி.6)
‘ளஃகான் ஒற்றே’ – ‘ள்’ எனும் ஒற்றெழுத்தே ,
‘மகடூஉ அறிசொல்’ – பெண்பாற் சொல்லை அறிவிக்கும் ஈறாகும் !
சேனாவரையரின் எடுத்துக்காட்டுகள் !-
1.உண்டனள்
2.உண்டாள்
3.உண்ணநின்றனள்
4.உண்ணாநின்றாள்
5.உண்பள்
6. உண்பாள்
7.கரியள்
8.கரியாள்
இவற்றிலும் 1 முதல் 6 வரையான சொற்கள் – தெரிநிலை வினை முற்றுகள் ; 7,8 இரண்டும் – குறிப்பு வினையாலணையும் பெயர்கள்.
தெய்வச் சிலையார் தரும் வேறு இரு காட்டுகள் –
1. அவள்
2. திருவினாள்
அவள் – சுட்டுப் பெயர்
திருவினாள் – குறிப்பு வினையாலணையும் பெயர்.
(திருவினாள்- செல்வம் கொண்டவள்)
தோழி – இதிலுள்ள ஈறு ‘இ’ ; இந்த ஈறுதான் இங்கே பெண்பாலைக் குறிக்கிறது.
ஆனால் தொல்காப்பியர் ஏன்இதனைப் பெண்பால் ஈறு என்று சொல்லவில்லை ?
ஏனெனில் , இதே ‘இ’ ஈறு , ‘நாற்காலி’ என்ற சொல்லிலும் வருகிறதே?
எனவே , ‘இ’ ஈறு பெண்பால் ஈறு என்று ஒரு சட்டமாகக் கூறமுடியாது !
இந்தக் காரணத்தால்தான் இகரத்தைப் பெண்பால் ஈறாகத் தொல்கப்பியர் கூறவில்லை !
இப்போது, தொல்காப்பிய நூற்பாக்களில் எப்படிப்பட்ட அடிப்படையான , சட்டமாகக் கொள்ளத்தக்க விதிகளே வருகின்றன என்பது விளங்குகிறதல்லவா?
இதுவே தொல்காப்பிய இரகசியம் (Secret of Tholkappiyam)!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
‘இ’ ஈறு பெண்பால் ஈறு என்று ஒரு சட்டமாகக் கூறமுடியாது ! அதேபோல
"ள் " ஈறையும் பெண்பால் ஈறு என்று சட்டமாகக் கொள்ளமுடியாது என்றே கருதுகிறேன்; ஏனென்றால்
கள், எள் , முள் ஆகிய சொற்களிலும் " ள் " ஈறு வருகிறதே !
"ள் " ஈறையும் பெண்பால் ஈறு என்று சட்டமாகக் கொள்ளமுடியாது என்றே கருதுகிறேன்; ஏனென்றால்
கள், எள் , முள் ஆகிய சொற்களிலும் " ள் " ஈறு வருகிறதே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அருமையான பதிவு ஐயா.நல்ல விளக்கங்கள் புரிந்து கொண்டேன் ஐயா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
நன்றி சசி அவர்களே !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (415)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது ‘பலர்பால்’ !
பலர்பாலைக் குறிக்கும் ஈறுகள் யாவை ?
தொல்காப்பியம் –
“ரஃகா னொற்றும் பகர விறுதியும்
மாரைக் கிளவி உளப்பட மூன்றும்
நேரத் தோன்றும் பலரறி சொல்லே” (கிளவி.7)
‘ரஃகான் ஒற்றும்’ - ‘ர்’ எனும் மெய்யும்,
‘பகர இறுதியும்’ - ‘ப’ எனும் ஈற்றெழுத்தும்,
‘மாரைக் கிளவி’ - ‘மார்’ எனும் சொல்,
‘உளப்பட மூன்றும்’ – உட்பட இந்த மூன்றும்,
‘நேரத் தோன்றும் பலரறி சொல்லே’ – பலர்பாற் சொல்லை அடையாளம் காட்டும் !
சேனாவரையர் தந்த காட்டுகள் –
1. உண்டனர்
2. உண்டார்
3. உண்ணாநின்றனர்
4. உண்ணாநின்றார்
5. உண்பர்
6. உண்பார்
7. கரியர்
8. கரியார்
9. கூறுப
10. வருப
11. கொண்மார்
12. சென்மார்
இவற்றில் , உண்டனர், உண்டார், உண்ணாநின்றனர்,உண்ணாநின்றார், உண்பர்,உண்பார் - தெரிநிலை வினை முற்றுகள்.
கரியர்,கரியார் – குறிப்பு வினையாலணையும் பெயர்கள்.
கூறுப,வருப – தெரிநிலை வினைமுற்றுகள்.
கூறுப = கூறுவார்கள் (எதிர்காலம்) ; தெரிநிலை வினை முற்று.
வருப = வருவார்கள்(எதிர்காலம்) ; தெரிநிலை வினை முற்று.
கொண்மார் = கொள்வார்கள்(எதிர்காலம்) ; தெரிநிலை வினை முற்று.
சென்மார் = செல்வார்கள் (எதிர்காலம்) ; தெரிநிலை வினை முற்று.
மேலே ‘ர்’ , ‘ப’ , ‘மார்’ ஆகியன பலர்பாலைக் குறித்ததைப் பார்த்தோம் !
இந்த இடத்தில் சேனாவரையர் ஒரு நுணுக்க இலக்கணத்தை நுவல்கிறார் !
அஃதாவது , ‘கும்’ , ‘டும்’ , ’தும்’ , ‘றும்’ ஆகிய ஈறுகளும் பலர்பால் ஈறுகள்தாமே? இவற்றை ஏன் தொல்காப்பியர் சேர்க்கவில்லை?
இப்படி வினா எழுப்பிவிட்டு அதற்கு விடையையும் அவரே கூறுகிறார் !
அதன்படி –
‘கும்’ முதலான இந்த நான்கு ஈறுகள் உயர்திணையோடு இணைந்துவரும் அஃறிணைக்கும் வருவதால் இவற்றைத் தொல்காப்பியர் சேர்க்கவில்லை ; தொல்காப்பியர் உயர்திணை ஈறுகளை மட்டும்தான் கூறினார் !
உயர்திணையோடு சேர்ந்துவரும் அஃறிணை என்றால்?
‘நானும் மாடும் உண்கும்’ – இதில் ‘நான்’ , உயர்திணை; ‘மாடு’ அஃறிணை; ஒரே தொடரில் இரு திணைகளும் வரும்போது ‘கும்’ ஈறு வந்துள்ளதைக் காண்க !
உண்கும் = உண்போம்.
சேனாவரையர் இன்னொரு அரிய கருத்தையும் எழுதுகிறார்!
‘மார்’ என்ற பலர்பால் ஈற்றை , ‘ஆர்’ ஈறாகக் கருதினால் என்ன?
இதற்கு விடையைச் சேனாவரையரே கூறுகிறார் –
‘மார்’ எனும் சொல்லிலுள்ள ‘ம்’தான் எதிர்காலத்தைக் காட்டுகிறது !எனவே ‘ம்’மை எடுத்துவிட்டால் இந்தக் காலக் குறிப்பு நமக்குச் சொல்லில் கிடைக்காது !
உரையாசிரியர்கள் எப்படி எழுத்து எழுத்தாகத் தமிழை ஆய்ந்துள்ளார்கள் பாருங்கள் !
ஆனால் இந்தப் படிப்பைத் தமிழர்கள் அறவே கைவிட்டுவிட்டார்கள் !
பிறகு ஆங்கிலேயர்கள் எழுதிய மொழியியல் துணுக்குகளைப் பிடித்துக்கொண்டு , பழந்தமிழைக் கேலிசெய்யத் துணிந்துவிட்டார்கள் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது ‘பலர்பால்’ !
பலர்பாலைக் குறிக்கும் ஈறுகள் யாவை ?
தொல்காப்பியம் –
“ரஃகா னொற்றும் பகர விறுதியும்
மாரைக் கிளவி உளப்பட மூன்றும்
நேரத் தோன்றும் பலரறி சொல்லே” (கிளவி.7)
‘ரஃகான் ஒற்றும்’ - ‘ர்’ எனும் மெய்யும்,
‘பகர இறுதியும்’ - ‘ப’ எனும் ஈற்றெழுத்தும்,
‘மாரைக் கிளவி’ - ‘மார்’ எனும் சொல்,
‘உளப்பட மூன்றும்’ – உட்பட இந்த மூன்றும்,
‘நேரத் தோன்றும் பலரறி சொல்லே’ – பலர்பாற் சொல்லை அடையாளம் காட்டும் !
சேனாவரையர் தந்த காட்டுகள் –
1. உண்டனர்
2. உண்டார்
3. உண்ணாநின்றனர்
4. உண்ணாநின்றார்
5. உண்பர்
6. உண்பார்
7. கரியர்
8. கரியார்
9. கூறுப
10. வருப
11. கொண்மார்
12. சென்மார்
இவற்றில் , உண்டனர், உண்டார், உண்ணாநின்றனர்,உண்ணாநின்றார், உண்பர்,உண்பார் - தெரிநிலை வினை முற்றுகள்.
கரியர்,கரியார் – குறிப்பு வினையாலணையும் பெயர்கள்.
கூறுப,வருப – தெரிநிலை வினைமுற்றுகள்.
கூறுப = கூறுவார்கள் (எதிர்காலம்) ; தெரிநிலை வினை முற்று.
வருப = வருவார்கள்(எதிர்காலம்) ; தெரிநிலை வினை முற்று.
கொண்மார் = கொள்வார்கள்(எதிர்காலம்) ; தெரிநிலை வினை முற்று.
சென்மார் = செல்வார்கள் (எதிர்காலம்) ; தெரிநிலை வினை முற்று.
மேலே ‘ர்’ , ‘ப’ , ‘மார்’ ஆகியன பலர்பாலைக் குறித்ததைப் பார்த்தோம் !
இந்த இடத்தில் சேனாவரையர் ஒரு நுணுக்க இலக்கணத்தை நுவல்கிறார் !
அஃதாவது , ‘கும்’ , ‘டும்’ , ’தும்’ , ‘றும்’ ஆகிய ஈறுகளும் பலர்பால் ஈறுகள்தாமே? இவற்றை ஏன் தொல்காப்பியர் சேர்க்கவில்லை?
இப்படி வினா எழுப்பிவிட்டு அதற்கு விடையையும் அவரே கூறுகிறார் !
அதன்படி –
‘கும்’ முதலான இந்த நான்கு ஈறுகள் உயர்திணையோடு இணைந்துவரும் அஃறிணைக்கும் வருவதால் இவற்றைத் தொல்காப்பியர் சேர்க்கவில்லை ; தொல்காப்பியர் உயர்திணை ஈறுகளை மட்டும்தான் கூறினார் !
உயர்திணையோடு சேர்ந்துவரும் அஃறிணை என்றால்?
‘நானும் மாடும் உண்கும்’ – இதில் ‘நான்’ , உயர்திணை; ‘மாடு’ அஃறிணை; ஒரே தொடரில் இரு திணைகளும் வரும்போது ‘கும்’ ஈறு வந்துள்ளதைக் காண்க !
உண்கும் = உண்போம்.
சேனாவரையர் இன்னொரு அரிய கருத்தையும் எழுதுகிறார்!
‘மார்’ என்ற பலர்பால் ஈற்றை , ‘ஆர்’ ஈறாகக் கருதினால் என்ன?
இதற்கு விடையைச் சேனாவரையரே கூறுகிறார் –
‘மார்’ எனும் சொல்லிலுள்ள ‘ம்’தான் எதிர்காலத்தைக் காட்டுகிறது !எனவே ‘ம்’மை எடுத்துவிட்டால் இந்தக் காலக் குறிப்பு நமக்குச் சொல்லில் கிடைக்காது !
உரையாசிரியர்கள் எப்படி எழுத்து எழுத்தாகத் தமிழை ஆய்ந்துள்ளார்கள் பாருங்கள் !
ஆனால் இந்தப் படிப்பைத் தமிழர்கள் அறவே கைவிட்டுவிட்டார்கள் !
பிறகு ஆங்கிலேயர்கள் எழுதிய மொழியியல் துணுக்குகளைப் பிடித்துக்கொண்டு , பழந்தமிழைக் கேலிசெய்யத் துணிந்துவிட்டார்கள் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
ஐயா படிப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளது ஐயா. தமிழ் இலக்கியம் படிக்காமல் விட்டு விட்டேன் என்று வருந்தினேன். உங்களது,ஜெகதீசன் ஐயா கருத்துக்களை படிக்கும் போது அந்த குறை நீங்கி விட்டதாக கருதுகிறேன் ஐயா. நன்றி
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
நன்றி சசி அவர்களே !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (416)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கிளவியாக்கத்தில் நாம் ‘ஆண்பால் ஈறு’ , ‘பெண்பால் ஈறு’ , ‘பலர்பால் ஈறு’ ஆகிய ஈறுகளைப் பார்த்தோம் !
இப்போது – ஒன்றன்பால் ஈறு !-
“ஒன்றறி கிளவி தறட வூர்ந்த
குன்றிய லுகரத் திறுதியாகும்” (கிளவி. 8)
‘ஒன்று அறி கிளவி’ – ஒன்றன் பாலை அறியும் சொல்லானது,
‘தறட ஊர்ந்த’ – த் , ற் , ட் ஆகிய மூன்று மெய்களின் மேல் ஏறிவந்த,
‘குன்றிய லுகரத்து இறுதியாகும்’ - குற்றியலுகரத்தை இறுதியிலே கொண்டதாகும் !
சேனாவரையரின் எடுத்துக்காட்டுகள்-
1.வந்தது
2.வாராநின்றது
3.வருவது
4. கரிது
5.கூயிற்று
6.தாயிற்று
7.கோடின்று
8.குளம்பின்று
9.குண்டுகட்டு
10.கொடுந்தாட்டு
11.குறுந்தாட்டு
இவற்றில் –
1.வந்தது – இறந்தகால ஒன்றன்பால் தெரிநிலை வினை முற்று , உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தில் முடிந்தது.
2.வாராநின்றது – நிகழ்கால ஒன்றன்பால் தெரிநிலை வினை முற்று , உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தில் முடிந்தது.
3.வருவது – எதிர்கால ஒன்றன்பால் தெரிநிலை வினை முற்று , உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தில் முடிந்தது.
4. கரிது – குறிப்பு வினை முற்று , உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தில் முடிந்தது.
5.கூயிற்று – இறந்தகால ஒன்றன்பால் தெரிநிலை வினை முற்று , வன்றொடர்க் குற்றியலுகரத்தில் முடிந்தது.
6.தாயிற்று– இறந்தகால ஒன்றன்பால் தெரிநிலை வினை முற்று , வன்றொடர்க் குற்றியலுகரத்தில் முடிந்தது.
7.கோடின்று – குறிப்பு வினைமுற்று
8.குளம்பின்று– குறிப்பு வினைமுற்று
9.குண்டுகட்டு– குறிப்பு வினைமுற்று
10.கொடுந்தாட்டு– குறிப்பு வினைமுற்று
கூயிற்று = கூவியது
தாயிற்று = தாவியது
கோடின்று = கோடு +இன்று = கொம்பு உடையது அன்று
குளம்பின்றி = குளம்பு + இன்று = குளம்புகளை உடையது அன்று
குண்டு கட்டு = குழிவான கண்களை உடையது (கட்டு – இதன் பகுதி, கண்; கண்+து = கட்டு)
குறுந்தாட்டு = குட்டையான கால்களை உடையது (தாட்டு – இதன் பகுதி, தாள்; தாள் + து = தாட்டு)
அது குண்டுகட்டு – இத் தொடரில் வரும் ‘குண்டுகட்டு’, குறிப்பு வினை முற்று!
குண்டுகட்டு வந்தது – இத் தொடரில் வரும் ‘குண்டுகட்டு’, குறிப்பு வினையாலணையும் பெயர் !
இதைப்போன்றே ,
அது குறுந்தாட்டு – இத் தொடரில் வரும் ‘குறுந்தாட்டு’, குறிப்பு வினை முற்று!
குறுந்தாட்டு வந்தது – இத் தொடரில் வரும் ‘குறுந்தாட்டு’, குறிப்பு வினையாலணையும் பெயர் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கிளவியாக்கத்தில் நாம் ‘ஆண்பால் ஈறு’ , ‘பெண்பால் ஈறு’ , ‘பலர்பால் ஈறு’ ஆகிய ஈறுகளைப் பார்த்தோம் !
இப்போது – ஒன்றன்பால் ஈறு !-
“ஒன்றறி கிளவி தறட வூர்ந்த
குன்றிய லுகரத் திறுதியாகும்” (கிளவி. 8)
‘ஒன்று அறி கிளவி’ – ஒன்றன் பாலை அறியும் சொல்லானது,
‘தறட ஊர்ந்த’ – த் , ற் , ட் ஆகிய மூன்று மெய்களின் மேல் ஏறிவந்த,
‘குன்றிய லுகரத்து இறுதியாகும்’ - குற்றியலுகரத்தை இறுதியிலே கொண்டதாகும் !
சேனாவரையரின் எடுத்துக்காட்டுகள்-
1.வந்தது
2.வாராநின்றது
3.வருவது
4. கரிது
5.கூயிற்று
6.தாயிற்று
7.கோடின்று
8.குளம்பின்று
9.குண்டுகட்டு
10.கொடுந்தாட்டு
11.குறுந்தாட்டு
இவற்றில் –
1.வந்தது – இறந்தகால ஒன்றன்பால் தெரிநிலை வினை முற்று , உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தில் முடிந்தது.
2.வாராநின்றது – நிகழ்கால ஒன்றன்பால் தெரிநிலை வினை முற்று , உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தில் முடிந்தது.
3.வருவது – எதிர்கால ஒன்றன்பால் தெரிநிலை வினை முற்று , உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தில் முடிந்தது.
4. கரிது – குறிப்பு வினை முற்று , உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தில் முடிந்தது.
5.கூயிற்று – இறந்தகால ஒன்றன்பால் தெரிநிலை வினை முற்று , வன்றொடர்க் குற்றியலுகரத்தில் முடிந்தது.
6.தாயிற்று– இறந்தகால ஒன்றன்பால் தெரிநிலை வினை முற்று , வன்றொடர்க் குற்றியலுகரத்தில் முடிந்தது.
7.கோடின்று – குறிப்பு வினைமுற்று
8.குளம்பின்று– குறிப்பு வினைமுற்று
9.குண்டுகட்டு– குறிப்பு வினைமுற்று
10.கொடுந்தாட்டு– குறிப்பு வினைமுற்று
கூயிற்று = கூவியது
தாயிற்று = தாவியது
கோடின்று = கோடு +இன்று = கொம்பு உடையது அன்று
குளம்பின்றி = குளம்பு + இன்று = குளம்புகளை உடையது அன்று
குண்டு கட்டு = குழிவான கண்களை உடையது (கட்டு – இதன் பகுதி, கண்; கண்+து = கட்டு)
குறுந்தாட்டு = குட்டையான கால்களை உடையது (தாட்டு – இதன் பகுதி, தாள்; தாள் + து = தாட்டு)
அது குண்டுகட்டு – இத் தொடரில் வரும் ‘குண்டுகட்டு’, குறிப்பு வினை முற்று!
குண்டுகட்டு வந்தது – இத் தொடரில் வரும் ‘குண்டுகட்டு’, குறிப்பு வினையாலணையும் பெயர் !
இதைப்போன்றே ,
அது குறுந்தாட்டு – இத் தொடரில் வரும் ‘குறுந்தாட்டு’, குறிப்பு வினை முற்று!
குறுந்தாட்டு வந்தது – இத் தொடரில் வரும் ‘குறுந்தாட்டு’, குறிப்பு வினையாலணையும் பெயர் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (417)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது –
பலவின்பால் ஈறு ! –
“அஆ வஎன வரூஉம் இறுதி
அப்பான் மூன்றே பலவறி சொல்லே” (கிளவி. 9)
‘அஆ வஎன வரூஉம் இறுதி’ - அ , ஆ , வ என்ற எழுத்துகளை ஈற்றிலே பெற்ற,
‘அப்பால் மூன்றே பலவறி சொல்லே’- அந்த மூன்று சொற்களே பலவின்பாலைக் குறிப்பதாம் !
சேனாவரையரின் எடுத்துக்காட்டுகள் :-
1.உண்டன
2.உண்ணாநின்றன
3.உண்பன
4.கரியன
5.உண்ணா
6.தின்னா
7.உண்குவ
8.தின்குவ
இவற்றில்,
1.உண்டன – இறந்தகாலம் ;பலவின்பால் ஈறு ‘அ’
2.உண்ணாநின்றன - நிகழ்காலம் ;பலவின்பால் ஈறு ‘அ’
3.உண்பன - எதிர்காலம் ;பலவின்பால் ஈறு ‘அ’
4.கரியன- குறிப்பு வினைமுற்று ;பலவின்பால் ஈறு ‘அ’
5.உண்ணா – பொது எதிர்மறைச் சொல்; பலவின்பால் ஈறு ‘ஆ’; ‘ பிறந்தவுடன் பாம்புக் குட்டிகள் தவளையை உண்ணா’ எனும்போது பொது எதிர்மறை வருவதைக் காண்க!
6.தின்னா - பொது எதிர்மறைச் சொல்; பலவின்பால் ஈறு ‘ஆ’; ‘ பிறந்தவுடன் கன்றுகள் கரும்பு தின்னா’ எனும்போது, பொது எதிர்மறை வருவதைக் காண்க!
7.உண்குவ – எதிர்காலம் ; பலவின்பால் ஈறு ‘வ’
8.தின்குவ - எதிர்காலம் ; பலவின்பால் ஈறு ‘வ’
இங்கே , சேனாவரையர் தரும் ஓர் இலக்கண நுட்பத்தை நான் கூறவேண்டும் !
சேனாவரையர் ஆய்வின்படி –
வருவ = வரும் (எதிர்காலம்)
வருவ= வரு + வ் + அ √ (வ்- எதிர்கால இடைநிலை) (அ – பலவின்பால் ஈறு)
வருவ= வரு + வ + √ (வ – எதிர்காலம் காட்டும் ஈறு; இதுவே பலவின்பால் ஈறுமாகும்)
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது –
பலவின்பால் ஈறு ! –
“அஆ வஎன வரூஉம் இறுதி
அப்பான் மூன்றே பலவறி சொல்லே” (கிளவி. 9)
‘அஆ வஎன வரூஉம் இறுதி’ - அ , ஆ , வ என்ற எழுத்துகளை ஈற்றிலே பெற்ற,
‘அப்பால் மூன்றே பலவறி சொல்லே’- அந்த மூன்று சொற்களே பலவின்பாலைக் குறிப்பதாம் !
சேனாவரையரின் எடுத்துக்காட்டுகள் :-
1.உண்டன
2.உண்ணாநின்றன
3.உண்பன
4.கரியன
5.உண்ணா
6.தின்னா
7.உண்குவ
8.தின்குவ
இவற்றில்,
1.உண்டன – இறந்தகாலம் ;பலவின்பால் ஈறு ‘அ’
2.உண்ணாநின்றன - நிகழ்காலம் ;பலவின்பால் ஈறு ‘அ’
3.உண்பன - எதிர்காலம் ;பலவின்பால் ஈறு ‘அ’
4.கரியன- குறிப்பு வினைமுற்று ;பலவின்பால் ஈறு ‘அ’
5.உண்ணா – பொது எதிர்மறைச் சொல்; பலவின்பால் ஈறு ‘ஆ’; ‘ பிறந்தவுடன் பாம்புக் குட்டிகள் தவளையை உண்ணா’ எனும்போது பொது எதிர்மறை வருவதைக் காண்க!
6.தின்னா - பொது எதிர்மறைச் சொல்; பலவின்பால் ஈறு ‘ஆ’; ‘ பிறந்தவுடன் கன்றுகள் கரும்பு தின்னா’ எனும்போது, பொது எதிர்மறை வருவதைக் காண்க!
7.உண்குவ – எதிர்காலம் ; பலவின்பால் ஈறு ‘வ’
8.தின்குவ - எதிர்காலம் ; பலவின்பால் ஈறு ‘வ’
இங்கே , சேனாவரையர் தரும் ஓர் இலக்கண நுட்பத்தை நான் கூறவேண்டும் !
சேனாவரையர் ஆய்வின்படி –
வருவ = வரும் (எதிர்காலம்)
வருவ= வரு + வ் + அ √ (வ்- எதிர்கால இடைநிலை) (அ – பலவின்பால் ஈறு)
வருவ= வரு + வ + √ (வ – எதிர்காலம் காட்டும் ஈறு; இதுவே பலவின்பால் ஈறுமாகும்)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 61 of 84 • 1 ... 32 ... 60, 61, 62 ... 72 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 61 of 84
|
|