புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10 
68 Posts - 53%
heezulia
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10 
15 Posts - 3%
prajai
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கதைகள்: பயணம்: நாவல்


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Feb 08, 2013 6:09 am

First topic message reminder :

பயணம்
நாவல்
ரமணி

முகவுரை

து ஒரு ரொமான்டிக் நாவல். அதாவது, காதலிக்க முற்பட்ட ஒரு சங்கோசப்படும் (timid), அகமுக (introvert) இளைஞனின் கதையைப் படர்க்கையில் (third person) சொல்லும் சுயசரிதம். கதையின் காலம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபது--எழுபதுகளில். களம் தமிழகத்தின் கிராம நகர வாழ்க்கை. கதை மாந்தர்கள் சுற்றமும் நட்பும் சூழ்ந்த ஒரு பிராம்மணக் குடும்பத்தின் சம்ப்ரதாய, சற்றே முற்போக்கான உறுப்பினர்கள், உறவினர்கள்.

ஆங்கிலத்தில் stream of consciousness என்று ஒரு நாவல் உத்தியுண்டு. இந்த உத்தியில் ஆசிரியரின் குறுக்கீடு இல்லாமல் பாத்திரங்களின் மனவோட்டத்தின் மூலமே கதை சொல்லப்படும். James Joyce, Virginia Wolf போன்ற நாவலாசிரியர்கள் இந்த உத்தியைப் பயன்படுத்தி இலக்கிய அந்தஸ்தும் புகழும் பெற்றனர். இந்த நாவலில் இந்த உத்தி கொஞ்சம் நீர்த்த வகையில் பயன்படுத்தப் பட்டுள்ளது.

தடாலடி திருப்பங்களும் நிகழ்வுகளும் கதையோட்டத்துக்கு முக்கியம் இல்லை எனும்போது, கதையின் வளர்ச்சியில் கதைமாந்தர்களுடைய குணநலன்களின் வளர்ச்சி (அல்லது வீழ்ச்சி), அவர்களின் ஊடாட்டம், உள்வினைகள் போன்ற கூறுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. வாழ்க்கை என்பதே இவ்வகைக் கூறுகள் அடங்கியதுதானே?

கதையின் ஒவ்வொரு வரியையும் ஊன்றிக் கவனித்து, கணித்து, ஒவ்வொரு சொல்லையும் மனதில் வாங்கி, சொற்களில் பயிலும் கவிதையை அனுபவித்து, வருணனைகளை ரசித்துப் பின் எல்லாவற்றையும் மனதில் அசைபோட்டுக் கதாசிரியர் எழுதியதுபோலவே வாசகரும் படித்தால் கதையின் முழுத் தாக்கம் கிடைக்கும்.

பயணம் என்ற தலைப்புடன் கூடிய இந்த நாவலில், ஒரு சங்கோசப்படும் அகமுக இளைஞனின் இல்லறம் நோக்கிய வாழ்க்கைப் பயணம் ஒரு ரயில் பயணத்துடன் தொடங்குகிறது. ரயிலில் பயணிக்கும்போதே அவன் மனம் அவனது கடந்த கால வாழ்க்கை நிகழ்ச்சிகளில் பின்னோக்கிப் பயணம் செய்கிறது...[/color]

கனவுகளில் முன்னோக்கியும் நினைவுகளில் பின்னோக்கியும் காலத்தில் எப்போதும் பயணம் செய்யும் மனம், யதார்த்தத்தை எதிர்கொள்ளும் போது முதலில் தடுமாறிப் பின் வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டு, கிடைத்ததை உத்தமமாக்க முயலும்போது வாழ்க்கை சிறக்கும் என்பதை உணர்ந்துகொள்கிறது.

முப்பது வருடங்களுக்கு முன்னரே நான் இந்த நாவலின் பெரும் பகுதியை எழுதியிருந்தபோதிலும், மனதுக்கு சமாதானம் தரும் சரியான முடிவு கிடைக்காமல் நாவலின் இறுதி வடிவத்தை ஒத்திப்போட்டு வந்தேன். ஒரு வழியாக அந்த சரியான முடிவு மனதில் உதித்து நான் தொண்ணூறாம் ஆண்டுத் தொடக்கத்தில் நாவலை என் மனதுக்குப் பிடித்த வகையில் முடிவு செய்தேன். என்னைப் பொறுத்தவரையில் என் இலக்கிய முயற்சிகளின் சிகரமாக நான் இப்படைப்பைக் கருதுகிறேன். அதே சமயம் வாசகர்களின் நேர்மையான பின்னூட்டங்களையும் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

தினத்தந்தி செய்தித்தாளில் வந்த (வரும்?) சிந்துபாத் தொடரின் அளவைவிடக் கொஞ்சம் கூடுதலான, சிறிய தவணை முறைகளில் கதையை இங்குப் பதிய எண்ணியுள்ளேன். ஒரு கவிதையைப் படிப்பதுபோல் மனம் விட்டு, மனம் இட்டு வாசகர்கள் படிக்கவேண்டும் என்று விழைகிறேன். உங்கள் பின்னூட்டங்களை இந்த நூலிலேயே பதிவு செய்யலாம்.

இந்த நாவல் இதுவரை எந்தப் பத்திரிகையிலும் வெளிவரவில்லை. இதைப் பகிர்ந்துகொள்ளும் வாசகர்கள், தனியே படியெடுக்காமல் இந்த ’லிங்க்’ கொடுத்துப் பகிர்ந்துகொள்ளக் கோருகிறேன், கொஞ்சம் கொஞ்சமாக நான் இந்த நாவலை என் வலைதளத்தில் பதிவு செய்வதால்.

ரமணி
01/09/2012

*** *** ***



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Feb 26, 2013 6:55 am

பயணம்: நாவல்
ரமணி

10

அன்பெனும் பெருவெள்ளம் இழுக்குமேல்
அதனை யாவர் பிழைத்திட வல்லரே?
---மஹாகவி பாரதியார், சுயசரிதை 6


னுவைப் பற்றி எழுதியிருந்த கடைசி வரிகளில் கண்கள் ஓடியபோது எழுந்த ஆழ்ந்த பெருமூச்சு திடீரென்று வெளியே ஏற்பட்ட ஆரவாரத்தில் அடங்கிப் போயிற்று.

தலையைத் திருப்பி வெளியே பார்த்தவன் கண்களில் பளிச்சிட்டு மறைந்தது திண்டிவனம் ரயில்நிலையம்.

அவனது சிந்தனைகளைக் கலைத்துக்கொண்டு அடுத்த ’கம்பார்ட்மென்ட்’இலிருந்து அந்தக் குரல் மீண்டும் ஒலித்தது.

"எப்போ டாடி திருச்சி வரும்?"

"இன்னும் விழுப்புரமே தாண்டலையே கண்ணா. சாயங்காலம் ஏழு, ஏழறைக்கெல்லாம் நாம்ப திருச்சில இருக்கலாம்."

"இப்ப போச்சே அது என்ன ஸ்டேஷன்?"

"அது திண்டிவனம். அடுத்தது விழுப்புரம். அப்புறம், திருச்சி!"

மறுபடியும் அந்தத் திரைப்படம் Close Encounters of the Third Kind நினைவைப் பற்றிக்கொண்டது.

அடையாளம் கூறமுடியாத விண்வெளி வஸ்துக்கள் ஒரு நாள் இரவில் திடீரென்று விஜயம் செய்ய, அவற்றின் மின்காந்த ஈர்ப்பின் பாதிப்பில் அந்த வீட்டில் பாட்டரியில் இயங்கும் விளயாட்டுப் பொம்மைகள் தானே இயங்கத் தொடங்க, டி.வி. தானே ’ஆன்’ ஆகி ஒளிர்ந்திட, சமயலறையில் ’காஸ் ஸ்டவ்’ தானே எரிந்துகொண்டு முட்டைகள் தாமே பொரிந்துகொள்ள, இந்த நிகழ்ச்சிகளினால் பெரிதும் கவரப்பட்டுக் குதூகலிக்கும் அந்த சிறுவன் வீட்டைவிட்டு வெளியில் வந்து சிரித்தபடியே தோட்டத்தில் அங்கும் இங்கும் ஓடிட, விழித்துக்கொண்ட அவன் தாயின் குரல் இனம் புரியாத பயமும் நடுக்கமும் கவலையும் கொண்டு, பையனைக் காணாது எதிரொலிக்க...

சின்ன வயது முதல் அவனுக்குப் பிடித்தமான ’சப்ஜெக்ட்’களில் ஒன்று ’அஸ்ட்ரானமி’. அதன் ஆரம்ப பாடங்களை அவன் தன் அப்பாவிடமிருந்துதான் தெரிந்துகொண்டான். ஒருநாள் இரவு அப்பாவுடன் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை வெறித்துக்கொண்டிருந்தபோது கேட்ட பாடம் இன்னமும் நினைவில் நின்றது.

"எவ்ளோ தூரம்ப்பா நாம்ப இந்த வானத்தில மேலே போக முடியும்? ஒரு நிலையில மோதிக்க மாட்டோம்?"

"நீ நினக்கறாப்பல இந்த வானம் ஒரு பெரிய ’பெட்ஷீட்’ மாதிரி பூமியை மூடிக்கொண்டு இருக்கலைடா ராஜா. வானங்கறது ஒரு அகண்ட பெருவெளி. வெறும் வெட்டவெளி. அதுக்கு திசைகள் கிடையாது. அந்தப் பெருவெளியில் தொங்கிண்டிருக்கற லட்சோப லட்சம் கோளங்கள்ல பூமியும் ஒண்ணு. பூமி தவிர, செவ்வாய், புதன், சுக்கிரன், வியாழன், சனின்னு பல கிரகங்கள் சூரியனைச் சுத்தி வரது. இந்த அமைப்புக்குப் பெயர் சூரியக் குடும்பம். இதுபோல பல குடும்பங்கள் வான வெளியில இருக்கு. ஒவ்வொண்ணுக்கும் இடையில பலகோடி மைல்கள் தூரமிருக்கு. அதோ தெரியறதே சந்திரன், அது இங்கிருந்து ரெண்டரை லட்சம் மைல் தூரத்தில இருக்கு. அது பக்கத்துல அம்மாவோட முந்தானையைப் பிடிச்சுண்டு அலையற குழந்தை மாதிரி அலையறது பாரு, ஒரு நட்சத்திரம், அது உண்மையில பலகோடி மைல் தள்ளி இருக்கு. இதெல்லாம் தெரிஞ்சுக்கணும்னா நாளைக்கு நான் உனக்கு ஒரு புத்தகம் தரேன். உக்காந்து படிச்சுப்பார்."

அப்பாவின் புத்தகம் அவனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. அதில் பார்த்த ராக்கெட் வகைகளும், சூரியக்குடும்ப கிரகங்களின் அழகிய, பெரிய புகைப் படங்களும் விவரங்களும் அவன் ஆவலைத் தூண்ட, விண்வெளி விஞ்ஞானம் பற்றி தமிழில் வந்திருந்த புத்தகங்களை அந்த கிராமத்தில் சின்ன நூலகத்தில் தேடிப்பிடித்து படிக்கத் தொடங்கினான்.

’பறக்கும் பாச்சா’, ’ஆர்வி’யின் ’காலக் கப்பல்’ போன்ற கதைகளில் ஆரம்பித்த ஆர்வம், கல்லூரி நாட்களில் ஒவ்வொரு மாலையும் நூலகத்தில் அமர்ந்து ஜாய்ஸின் ’தி எக்ஸ்பான்டிங் யுனிவர்ஸ்’, எச்.ஜி.வெல்ஸ் நாவல்கள் ’டைம் மெஷின்’, ’வார் ஆஃப் த வர்ல்ட்ஸ்’ போன்ற புத்தகங்களில் வளர்ந்து, அமெரிக்காவின் வெற்றிகரமான நிலாப் பயண முயற்சிகளில் மனம் மகிழ்ந்து---MAN WALKS ON THE MOON என்று எவ்வளவு பெரிய எழுத்துகளில் அந்த செய்தியை ’இந்தியன் எக்ஸ்ப்ரஸ்’ வெளியிட்டது!---தானும் தும்பா ISRO-வில் சேர்ந்து விண்வெளி விஞ்ஞானியாக வேண்டும் என்று கனவு காண வைத்துக் கடைசியில் இலக்கிய ஈடுபாடுகளின் பலத்த போட்டியில் இப்போது ’சயன்ஸ் ஃபிக்*ஷன்’இல் வந்துநின்றது.

காற்றில் படபடத்த அப்பாவின் கடிதமும், டைரியின் தாள்களும் அவன் நினைவுகளை ஒருமைப்படுத்த, விட்ட இடத்திலிருந்து மறுபடியும் படிக்கத் தொடங்கினான்.


கொஞ்சம்கூட எதிர்பார்த்திராத விதத்தில் அவன் ஜெயந்தியை சந்தித்த நிகழ்ச்சியைக் கண்கள் படிக்க மனம் விரித்தது.

"ராஜா, ஒரு சின்ன காரியம் பண்ணேன்."

"என்னப்பா?"

"அந்தக் கோடியாத்துல புதுசாக் குடிவந்திருக்காரே ஒரு கணக்கு வாத்தியார், தெரியுமா?"

"தெரியாதுப்பா."

"பரவாயில்லை. நீ என்ன பண்றே, இந்த ’நோட்புக்’கை எடுத்துண்டு போய், கோடி வீட்டு வாத்தியார்---அதாண்டா பிள்ளையார் கோவிலுக்கு இடது பக்கம் ரெண்டாவது வீடு--கிருஷ்ணமூர்த்திட்ட கொடுத்திடு. அவர் ரெண்டு மூணு கணக்குகளைப் போட்டுத் தரச் சொன்னார். எல்லாத்தையும் இந்த நோட்டுல விவரமாக் குறிச்சிருக்கேன்னு சொல்லு அவர்ட்ட, என்ன?"

"சரிப்பா."

"சாப்டயோன்னோ?"

"ஆச்சுப்பா."

"சரி, பாத்துப் போய்ட்டு வா. லைட்கூட இல்லை. தெருவுல நாயெல்லாம் இருக்கும்."

"அவாத்துல ஒண்ணும் இருக்காதே?"

வாசல் அழிக்கதவைத் தட்டியதும் திண்ணை விளக்கைப் போட்டுக்கொண்டு ஓர் அழகான பெண் வந்து உள் மரக்கதவைத் திறந்தாள். பின் திண்ணையை அன்ன நடையில் கடந்துவந்து வாசல் அழிக்கதவின் பூட்டைத் திறந்தாள். பன்னிரண்டு வயசிருக்கும். வசந்தியைப் போலவே நல்ல நிறம். வட்ட முகம். அகன்ற கருவிழிகள். புறாவின் அலகுபோல் சிறிய, கொஞ்சம் கூர்மையான மூக்கின் வலதுபுறம் எடுப்பான சிவப்புக்கல் மூக்குத்தி. குட்டையான இரட்டைப் பின்னல்களில் ஒன்று முன்புறம் சரிய அதைப் பின்னால் தள்ளிவிட்டுக்கொண்டே அவனைப் பார்த்து விழித்தாள்.

அவனுக்கும் சில விநாடிகள் பேச வரவில்லை! கடைசியில் "அப்பா இல்லை?" என்றான்.

அனு மாதிரி அழகா, நிறமா இல்லாட்டாலும் இவளும் தன்வழியில் அழகுதான். என்ன ’ப்ரைட் ஐஸ்’!

மெல்லத் தலையசைத்து, "அப்பா, உங்களைப் பார்க்க யாரோ வந்துர்க்கா!" என்று கூவிக்கொண்டே உள்ளே சென்றாள்.

"யாரூ?" என்று வினவிக்கொண்டு வந்தவருக்கு நாற்பத்தைந்து வயதிருக்கும். கொஞ்சம் பருத்த குட்டையான சரீரம். பனியனில் வழிந்த கைகளில் விபூதிப் பட்டைகள் அழிந்து காணப்பட்டன. கருகரு என்று வளர்ந்திருந்த முடிகளை இறுக்கிப் பிடித்தாற்போல் ஒரு கையில் ’ஸ்ட்ராப் வாட்ச்’. மற்றொன்றில் காசிக் கயிறு.

"மகாதேவய்யர் ஸன்னா? உள்ளே வாப்பா. எப்படிப் படிக்கறே?"

"நன்னாப் படிக்கறேன், சார்."

அவர் பின்னால் வாசல் கதவு நிலையைப் பிடித்துக்கொண்டு அவள் நின்றிருந்தாள்.

"பரீட்சைலாம் நன்னா எழுதியிருக்கயா?"

அந்தக் கண்கள்!

"ஓ எஸ்! நன்னா எழுதியிருக்கேன்."

கலகலப்பான தோற்றம். அதே சமயம் அமைதியும் அடக்கமும் இழைகின்றன!

"உட்கார்ந்துக்கோ. என்ன விஷயம் சொல்லு."

அவள் அவனையே பார்த்துக்கொண்டிருக்க, இவன் வசதியாகத் திண்ணையில் உட்கார்ந்து அவருடன் பேசிக்கொண்டே அவர் அறியாமல் கண்களை அவரைத் தாண்டி ஓடவிட்டான்.

"அப்பா அனுப்ச்சா. நீங்க கேட்டிருந்த கணக்கெல்லாம் இந்த நோட்டுல விவரமா போட்டுக்காராம். கொடுத்திடச் சொன்னா."

"அப்படியா? ரொம்ப ’தாங்க்ஸ்’னு சொல்லு. இந்தா, இந்தப் புஸ்தகத்தை அவரண்ட கொடுத்துவிடு."

புத்தகத்தை எடுக்க அவர் உள்ளே சென்றதும் மெல்லச் சிரிக்க முயன்று தோற்றான்.

நல்ல வேளை, என்னைவிட உயரம் கம்மி! வயசு நிச்சயம் மூணு வருஷமாவது சின்னவளாய் இருப்பாள்னு நினைக்கிறேன். டெய்லி இந்தப் பக்கமாப் போறேன், ஒரு தடவைகூட இவளைப் பார்க்கலயே?

வார்த்தைகள் எழும்பாமல் ’ஒம் பேரென்ன?’ என்று ஓரிரு முறை வாயசைத்த போது அவர் வந்துவிட்டார். ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. அல்லது காட்டிக்கொள்ளவில்லை. நல்லவர்!

"இந்த ரெண்டு புஸ்தகமும் அப்பாட்ட குடுத்திடு. ரொம்பத் ’தாங்க்ஸ்’னு சொல்லு."

"போய்ட்றேன் சார்!"

போய்ட்றேன் பெண்ணே, இல்ல கண்ணே!

(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Feb 27, 2013 6:34 am

னு ’கான்வென்ட்’ படிப்புக்காக மதுரை போய்விட்டதைத் தொடர்ந்து மூன்று வருடங்களை வெறுமையாகவும், அசுவாரஸ்யத்துடனும் ஓட்டியவன் வாழ்க்கையில் இந்தப் புதியவள் குறுக்கிட, மீண்டும் வசந்தம் துளிர்த்தது.

"Summer is coming, summer is coming,
I know it, I know it, I know it.
Light again, leaf again, life again, love again,"
Yes, my wild little poet.
---Alfred Tennyson

வசந்தம் வருகிறது வசந்தம் வருகிறது!
தெரியும், தெரியும், தெரியும்.
மீண்டும் உயிர்கள், மீண்டும் துளிர்கள்,
மீண்டும் குயில்கள், மீண்டும் காதல்!
ஆம்*என் பொல்லாத சின்னக் கவிஞனே!


என்றது டயரி.

கொஞ்ச நாளிலேயே அவள் பெயர் ஜெயந்தி என்று தெரிந்துகொண்டான். சாமர்த்தியமாகக் கேட்டபோது வசந்தி சொன்னாள். பெயரைச் சொன்னாலும் அவள் படிக்கும் வகுப்பைச் சொல்லவில்லை.

ஒருநாள் எதிர்பாராமல் கனவுகண்டு ஜெயந்தியுடன் பேசி அவள் எட்டாம் வகுப்பில் படிப்பதை அறிந்துகொண்டான்!

நேரில் பேசத்தான் முடியவில்லை. அல்லது துணியவுல்லை. அவள் தன் எதிர்வீட்டுப் பையனுடன் சமயத்தில் ஓரிரு வார்த்தைகள் பேசக்கண்டு பொறாமைப்பட்டும் வார்த்தைகள் வெளிவரவில்லை. என்ன பேசுவது என்று புரியவில்லை.

அவள்தான் எவ்வளவு ’ஸோஷல்’ஆக இருக்கிறாள்!

தினமும் தவறாமல் பிள்ளையார் கோவிலுக்குப் போகும்போது ஒருநாள் கொஞ்சம் சீக்கிரமாகவே வந்துவிட்டவன் அவள் தன் வீட்டு வாசலில் நிற்பதைப் பார்த்து என்ன செய்வதென்று தெரியாமல் கோவிலின் வலது திண்ணையில் பெரிய வாசல் கதவின் பின் மறைவாக உட்கார்ந்துகொண்டு அவளைக் கவனிக்கத் தொடங்கினான்.

அந்த இடம் ஒரு ’வான்டேஜ் பாயின்ட்’ஆக அமைந்து, தினமும் தீபாராதனைக்குச் சற்று முன்னரே வந்து அமர்ந்து அவளைக் கவனிப்பது அவனுக்கு வழக்கமாகியது.

அடிக்கடி முன்புறம் சரியும் தன் இரட்டைப் பின்னல்களைத் தலையை வெட்டியவண்ணம் நளினமாக அவள் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பாண்டி விளையாடுவதையும், ரிங் டென்னிஸ் விளையாடுவதையும், அல்லது வெறுமனே உட்கார்ந்திருப்பதையும், தன் அம்மாவுடன் பேசிக்கொண்டிருப்பதையும் (அம்மா ஏன் இந்த மாமியுடன் பழகவில்லை என்று நினைத்தது உண்டு) அவனது கண்கள் அளவெடுத்துக் கொண்டிருக்க, ஆறு மணி யானதும் கோவில் மணி கணீரென்று ஒலிக்க, அவள் கையில் நெய்க்கிண்ணத்துடன் கோவிலை நோக்கி வரும்போது அவன் அப்போதுதான் வந்தவன் போல் உள்ளே நுழைந்து, அவள் பின்னால் வர, வெளிப் பிரகாரத்தை வலம்வரத் தொடங்குவான்.

பின்னர் தீபாராதனை ஆரம்பிக்கும்போது அவள் பெண்கள் வரிசையில் நின்று வழிபட இவன் எதிர் வரிசையில் நின்று அவளுக்கும் சேர்த்து வணங்கிக்கொண்டு, கற்பூரம் காட்டும்போது அவள் விரல்களை விறைப்பாக வைத்துக்கொண்டு தன் உள்ளங்கைகளால் கன்னத்தில் போட்டுக்கொள்வதைப் பார்த்து மனதுக்குள் சிரித்தபடியே தானும் அதுமாதிரி செய்வான்.

கோவில் மணிகள் ஓய்ந்ததும் அவள் வந்த சுவடு தெரியாமல் திரும்பிவிட இவன் கொஞ்ச நேரம் உட்கார்ந்துவிட்டுத் திரும்பும்போது அவள் அம்மாவின் குரல் கேட்கும்.

"வாசு, ஜெயா என்ன பண்றா, படிக்கறாளா பாரு?"

ஜெயந்தியுடன் பேசவேண்டும் என்கிற ஆவல் எதிர்பாராமல் ஒருநாள் உள்ளூர் நூலகத்தில் நிறைவேறியது.

அவன் அந்தச் சின்ன நூலகத்துக்கு ’ரெகுலர் விசிட்டர்’. மற்ற பையன்கள் கதைப் புத்தகங்களை நாடும்போது இவன் கதைகள் தவிர, என்.கோமதியின் தமிழ்நாடு அரசு விருது பெற்ற ’அணுவும் நாமும்’, கலைக்கதிர் பத்திரிகை வெளியீட்ட ’நாமும் விஞ்ஞானிகளாவோம்’ போன்ற புத்தகங்களையும் விரும்பிப் படிப்பது வழக்கம்.

அன்று அவன் அபிமான கதாசிரியர் தமிழ்வாணனின் ’துப்பாக்கி முனை’யைப் பிடித்துக் கொண்டிருந்தபோது அவள் உள்ளே நுழைந்தாள்.

கொஞ்ச நேரம் ’ஷெல்ஃப்’இல் தேடிவிட்டு நூலகரிடம் "தமிழ்வாணன் புக் ஏதாவது இருக்கா?" என்றாள்.

இவன் மனதுக்குள் சிரித்துக்கொண்டான். இவனும் நண்பர்களும் விரும்பிப் படிக்கும் தமிழ்வாணன் நாவல்களை மற்றவர் கண்ணில் படக்கூடாதென மற்ற ’சப்ஜக்ட்’ புத்தகங்களிடையே ஒளித்து வைப்பது வழக்கம்!

"ஷெல்ஃப்ல பாரும்மா."

"ஷெல்ஃப்ல இல்லையே!"

"பின்ன வெளில போயிருக்கும்."

இவன் எழுந்து அவளுக்குக்காகத் தேடுவதுபோல் தேடி அவள் போய்விடப் போகிறாளே என்ற கவலையில் கொஞ்ச நேரம் மலைத்து, கிடைத்த ஒன்றிரண்டு புத்தகங்களை எடுத்து வந்து நூலகரில் வலப்புறம் குடைந்து கொண்டிருந்தவளிடம் நீட்டியபடி மெல்லிய குரலில் (அது நூலகம் என்பதால் ’விஸ்பரில்’ பேசினானா அல்லது உண்மையில் குரல் எழுமபில்லையா தெரியவில்லை),

"ஜெயந்தி, தமிழ்வாணன் புக்ஸ்."

பார்த்தாள். ’கடலில் தெரிந்த கை’, ’ஆந்தை விழிகள்’.

"இதெல்லாம் நான் படிச்சாச்சு."

"அப்ப இந்த ’நீலப் பெட்டி’ படி. நல்லா இருக்கும்."

"வேண்டாம்."

"உனக்குப் படிக்கிறதுன்னா இனிமே தமிழ்வாணன் புதுசா எழுதினாத்தான் உண்டு போலிருக்கு."

சிரித்துக்கொண்டாள். சுற்றிலும் பார்த்தவள் கண்கள் ஒரு பையன் கையில் இருந்த புத்தகத்தில் நிலைக்க, நூலகரிடம் அதைக் கேட்டாள். ’சி.ஐ.டி. 009’!

அவள் கேட்டதும் அந்தப் பையன் மறுக்கத் தோன்றாமல் உடனே புத்தகத்தைக் கொடுத்துவிட்டான். பொறாமையாக இருந்தது. அவனாக இருந்திருந்தால் புத்தகம் படிக்க அவளையும் துணைக்கு அழைத்திருப்பான்.

நூலகத்தில் உண்டான அறிமுகத்தில் திருப்தி அடையாமல், அல்லது அதை வளர்த்துக்கொள்ள நினைத்து, பல நாட்கள் கோவிலில் முயன்றும் அவளைத் தனியே சந்திக்க வாய்ப்பு அமையவில்லை. ஒன்று வெளிப்பிரகாரம் கூட்டமாக இருக்கும் அல்லது அன்றைக்குப் பார்த்து அவள் வரமாட்டாள். அல்லது வந்து இவனைக் கடந்து வேகமாகச் சென்றுவிடுவாள். ஒருநாள் இவன் நவக்கிரகங்களைச் சுற்றும்போது அவள் கோயில் திண்ணையில் அமர்ந்ததைப் பார்த்துக் கையசைத்து காத்திருக்குமாறு ஜாடை காட்டியும் பலனில்லாது போயிற்று.

*** *** ***
(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Feb 28, 2013 6:57 am

பயணம்: நாவல்
ரமணி

11

என்கண்ணை மறந்துனிரு கண்களையே
என்னகத்தில் இசைத்துக்கொண்டு
நின்கண்ணால் புவியெல்லாம் நீயெனவே
நான்கண்டு நிறைவுகொண்டு
---மஹாகவி பாரதியார்


ற்றொரு நாள் தீபாராதனையின்போது அவளை நேர் எதிரில் தரிசிக்க முடிந்தது.

தாழ்ந்து தரைநோக்கும் கரிய விழிகளும்
கோவில் விளக்கில் மின்னும் மூக்குத்தியும்
ஓசையின்றி முணுமுணுக்கும் இதழ்களும்
எப்போதும் முன்னால் வந்துவிழும்
அந்தப் பொல்லாத பின்னலும்
விரல்களைப் பின்னிக்கொண்டு அவள்தான்
தழைந்து நின்ற தோற்றமும்
அந்தச்சில நிமிடங்களில்
அவன்மனதில் படம்பிடிக்கப் பட்டு
இப்போது நினைத்தாலும் கண்முன் தோன்றும்.


கற்பூர ஆராதனை முடிந்ததும் அர்ச்சகர் கற்பூரத் தட்டை வரிசையாக எல்லோருக்கும் நீட்ட அந்தக் கற்பூர ஜோதியைக் கண்ணில் ஒற்றிக்கொண்ட பின் அவர் தரும் விபூதி-குங்குமப் பிரசாதம் பெற்றுக்கொள்ள அவள் தன் கையை நீட்டியபோது அந்த அண்மையில் அவளது நீண்ட, அழகிய பொன்னிற விரல்களைப் பார்த்துப் பூரித்தான்.

ருநாள் அவளைத் தனியே வெளிப் பிரகாரத்தில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

வழக்கம்போல் ஆறுமணியளவில் அவன் திண்ணையில் அமர்ந்து பார்த்திருக்க, அவள் கையில் நெய்க்கிண்ணத்துடன் ஒரு தெய்வலோகப் பெண்போல் நடந்து வந்தபோது---

She walked in beauty என்று டயரி பைரனின் கவிதையை எதிரொலித்தது.

இந்தத் தடவை எப்படியும் பேசிவிடவேண்டும் என்று நினைத்து இவன் கொஞ்சம் முன்னால் நடந்து பிரகாரத்தில் நுழைந்து, முதல்வரும் மூலவருமான விநாயகப் பெருமான் முன்நின்று வழிபடத் தொடங்க, அவள் கொஞ்சம் தயங்கிப் பின்னால் நின்றாள்.

மனம் பிரார்த்தனையில் ஒன்றவில்லை. பேசுவதற்கு இந்த இடம் சரியில்லை. யாராவது பார்த்து வத்திவைத்துவிடக் கூடும். என்ன பேசுவது?

விநாயகரை மும்முறை வலம்வந்து வலப்புறம் திரும்ப, தக்ஷிணாமூர்த்தி.

’குருப்ரம்மா, குருவிஷ்ணு, குருதேவ மஹேஸ்வர...’ என்று மனம் ’ரெடிமேட்’ வார்த்தைகளை முணுமுணுக்க, கண்கள் அவள் விநாயகரை வழிபடுவதைப் பார்த்திருக்க...

ம்ஹூம். இப்போதும் முடியாது. ஒருவேளை வேண்டுமென்றே தாமதிக்கிறாளோ?

அடுத்தது, கொஞ்சம் நடக்கவேண்டும். நடந்து வலப்புறம் திரும்பப் பெரிய முருகன் சந்நிதி. சந்நிதியின் சின்ன வாசல் வழியே வந்தால் தனியாக அமர்ந்திருக்கும் சண்டிகேஸ்வரரைப் பார்க்கலாம்.

என்ன பேசுவது?

பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவள் அவனை சற்று விரைவாகக் கடந்து முருகன் சந்நிதியை நோக்கி நடக்க, இவன் முதலில் முருகன் அடுத்து சண்டிகேஸ்வரர் என்ற தன் வழக்கத்தை விட்டு முதலில் சண்டிகேஸ்வரரை அவசரம் அவசரமாகக் கும்பிட்டுக் கைவிரல் சொடுக்கி நூலிழை போட்டுவிட்டு அந்தச் சின்ன வாசல் வழியே முருகன் சந்நிதிக்குள் அப்பிரதட்சிணமாக நுழந்தபோது அசரீரியாக அவள் குரல் கேட்டது.

என்ன பேசுவது?

என்ன ஸ்லோகங்கள் முணுமுணுத்தாள் என்பது காதில் விழவில்லை. ஆனால் அவள் குரலில் கொஞ்சம் கட்டை சுருதி ஒலித்ததாகத் தோன்றியது.

அனு மாதிரி ’மெல்லிஃப்ளூவஸ்’ குரல் இல்லைதான். இருந்தாலும் இந்தக் குரலும் இனிமையாகவே ஒலிக்கிறது.

சந்நிதியில் முருகக் கடவுள் மூன்றுவித தோற்றங்களில் எழுந்தருளி யிருந்தார். சந்நிதியின் வலது பக்கம் பாலமுருகன், நடுவில் கல்யாண முருகன், இடது பக்கம் தண்டாயுதபாணி.

இவன் பாலமுருகனிடம் நின்றிருந்தபோது அவள் தண்டாயுதபாணியிடம் வேண்டிக்கொண்டு நின்றாள். அடுத்து எப்படியும் இருவரும் கல்யாண முருகனிடம் வந்தாக வேண்டும்.

அந்தக் கணமும் வந்தது. இருவரும் எதிரும் புதிருமாக நின்றிருக்க, இவன் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, அவள் கண்கள் முருகனை நோக்கியிருக்க, இதழ்கள் தாழ்ந்த குரலில் முணுமுணுக்க---

என்ன பேசுவது?
உன்பெயர் ஜெயந்திதானே?
சே! அதான் அன்னைக்கு லைப்ரரில பேர் சொல்லித்தானே கூப்பிட்டேன்?

எய்த் ஸ்டான்டர்ட்தானே படிக்கறே?
நோ. இட்’ஸ் வெரி ஸிம்பிள்.

உனக்கு வசந்தியைத் தெரியுமில்ல?
இதென்ன கேள்வி? இருவரும் ஒரே ஸ்கூல். வசந்தி இவளுக்கு சீனியர். இருவரையும் அடிக்கடி சேர்ந்து பார்த்திருக்கிறான். வீட்டுக்குக்கூட ஜெயந்தி ஒன்றிரண்டு முறை வந்திருக்கிறாள்.

ஜெயந்தி, உங்கப்பா எந்த ஸ்கூல்ல வேலை பார்க்கிறார்?
அவள் அப்பாவைப்பத்தி என்ன இப்ப?

ஜெயந்தி, உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா? அன்னைக்கு முதமுதல்ல உங்காத்துக்கு வந்திருந்தப்ப கண்கொட்டாம பார்த்துண்டிருந்தயே?
திஸ் வில் பி ஷியர் இன்ஸலன்ஸ்.

வேற என்னதான் கேக்கறது? யெஸ், தட்’ஸ் இட்!
"ஜெயந்தி, இந்த முருகன் சிலைகள்லாம் ரொம்ப அழகா இருக்கில்ல? உனக்குப் பிடிச்ச முருகன் எது சொல்லேன்? மொத்தத்தில் இந்தக் கோவிலே அழகா இருக்கு இல்ல?"

கொஞ்ச நேரம் காத்திருந்தும் பதில் வரவில்லை. கேட்டது காதில் விழவில்லையோ?
அப்புறம்தான் தெரிந்தது அவன் ஒன்றுமே கேட்கவில்லை என்று!

"ஜெயந்தி, இந்த முருகன்---"

திடீரென்று ஒலித்த கோவில் மணியின் ஓங்காரத்தில் அவன் வார்த்தைகள் அமிழ்ந்து கலந்துவிட, அவள் அவசரம் அவசரமாக நெய்க்கிண்ணத்தை எடுத்துக்கொண்டு மீதியிருந்த தெய்வங்களையும் அறக்கப்பறக்க வலம் வந்துவிட்டு ஓட்டமும் நடையுமாக கோவிலுக்குள் சென்றுவிட்டாள்.

(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Mar 01, 2013 7:01 am

ற்றொரு நாள் காலை ஆறுமணிக்கு ஜெயந்தியின் குரல் அவன் வீட்டு வாசலில் ஒலிக்கத் தூக்கம் கலைந்து எழுந்தவனுக்குத் தன் கண்களையும் காதுகளையும் நம்ப முடியவில்லை.

"வசந்திக்கா!...வசந்திக்கா!"

அவன் புன்னகைக்க முயன்று கதவைத் திறந்தபோது ’ஆஃபீஸ் ரூம்’இலிருந்து அப்பாவின் குரல் வந்தது.

"இந்தாம்மா, ஏன் காலங்கார்த்தால கத்தற? வசந்தி மாடில இருக்கா, போய்ப்பார்."

அப்பாவுக்குக் கொஞ்சம்கூட இங்கிதம் தெரியாது. ரெண்டு தடவை கூப்பிட்டா கத்தறதா ஆயிடுமா?

’சாரி ஜெயந்தி. அப்பாவோட சுபாவம் அப்படி. அவரைத் தப்பா நெனைச்சுக்காதே’ என்று மனதுக்குள்தான் கூற முடிந்தது.

"ஜெயந்தியா? வா. நான்தான் பெரியப்பா அவளை வரச் சொல்லியிருந்தேன்."

அடுத்த சில நாட்கள் இந்த நிகழ்ச்சியை அவன் மனம் சிலவித சாத்தியங்களில் ’ஃபான்டஸி’களாக்கிப் பார்க்க, ஒருமுறை அவன் மாடியில் தூங்கிக்கொண்டிருந்தபோது அவளும் வசந்தியும் பேசிக்கொண்டிருக்க, குரல் கேட்டு அவன் விழித்துக்கொண்டும் தூங்குவதுபோல் பாவனை செய்தபடி அவள் அழகை ரசித்தான்.

மற்றொரு முறை அவள் மாடியில் வசந்திக்காகக் காத்திருக்க, அவன் கையில் ’தினமணி’யுடன் தற்செயலாக உள்ளே நுழைந்து மலைத்து அவளைக் கன்னம் சிவக்கச் செய்தான்.

வேறொரு முறை சிறிது நேரம் மாடியில் அவளுடன் தனியே விடப்பட்டபோது அவன் தன் புத்தக அலமாரியிலிருந்து தமிழ்வாணனின் புதிய நாவல் ஒன்றை எடுத்துவந்து அவளிடம் கொடுத்து முகம் மலரச் செய்து அந்தச் சாக்கில் அவளுடன் ஓரிரு வார்த்தைகள் பேசத் தலைப்பட, படியில் அப்பாவின் காலடிகள் கேட்டன.

வனும் ஜெயந்தியும் பொது இடங்களில் ஒருவரை ஒருவர் குறுக்கிட நேர்ந்த நிகழ்ச்சிகளை ஒன்றுவிடாமல் வாஞ்சையுடன் நினைத்துப் பார்த்தபோது...

ஒருநாள் மாலை பெண்கள் உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் அவன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடப் போனபோது அப்போதுதான் ’கேம்ஸ்’ முடிந்து ’ஸ்போர்ட்ஸ்’ உடையில் வெண்ணிற ’ஸாக்ஸ்’களை மீறிக்கொண்டு பொன்னிறக் கால்கள் தெரிய அவள் வரிசையில் சென்றதும்

மற்றொரு நாள் பள்ளி முடிந்து வெள்ளை ’மினி ஸ்கர்ட் யூனிஃபார்ம்’இல் அவள் தேவதை போல் தெருவில் நடந்துவந்த அழகும்

இரண்டொரு தடவை அவளைக் கடைகளில் பார்த்து ’நாம்மாத்துல எந்தப் பொண்ணு கடைக்குப் போவா? எல்லா வெளி வேலையும் பசங்கதான் செய்யணும்’ என்று வியந்ததும்

ஞாயிற்றுக் கிழமைகளில் அவள் தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து ’டிராயிங், நிட்டிங், பேப்பர் கட்டிங், எம்ப்ராய்டரி’ போன்ற கலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவதும்---இதுபோன்ற கலைகளில் அவன் வசந்தியின் திறமையை அடிக்கடி வியந்ததுண்டு---

அப்போதெல்லாம் இவன் அவ்வழிச் செல்லும்போது அவள் கண்கள் ஓரிரு முறை இவன் மீது விழும். எப்போதும் சிரித்துக்கொண்டு இருப்பதைப்போல என்ன கண்கள்! இவள் ஒருமுறை கூட அழுதிருக்க மாட்டாள் என்று தோன்றியது.

தீபாவளி சமயத்தில் அவள் தவறாமல் கோலாட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வலம்வரும் காட்சிகளும்

மார்கழி மாதக் குளிரில் அதிகாலையில் அவனும் அப்பாவும் கோவிலுக்குப் போகும்போது அவள் அன்றலர்ந்த மலராகக் குளித்துவிட்டுத் தலையில் காசித் துண்டு மலர்ந்திருக்க, குனிந்து பெரிய பெரிய கோலங்கள் போடும் பாங்கும்

கோலம் போடுவதில் வசந்தி ஒரு நிபுணி. முன்பெல்லாம் அவளுக்கும் அனுவுக்கும் பலத்த போட்டி, மார்கழிக் கோலங்கள் போடுவதில். இருவரும் சளைக்காமல் நடுக்கும் குளிரில் எழுந்து அதிகாலையிலேயே குளித்துவிட்டுத் தத்தம் தெரு வாசல்களில் மலையளவு கோலங்கள் போடும்போது, அவை கலையழகுடன், ஆறாம் வகுப்புப் பெண்கள் போட்ட கோலங்களா என்று மலைக்க வைக்கும்.

சில நாட்கள் அவள் அப்பாவும் கோவிலுக்கு தீபாராதனையின் போது வந்துவிட, அவன் அவள் கவனத்தைக் கவருவதற்காக அவர் அருகில் போய் நின்றுகொண்டு பேச்சுக் கொடுத்து அவள் அவனைக் கவனிப்பதில் அடைந்த திருப்தியும்

அவன் பள்ளிப் படிப்பை முடித்து ’எஸ்.எஸ்.எல்.ஸி.’ தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றுத் தேறியதும் அந்த மகிழ்ச்சியைப் பங்குகொள்ள நினைத்து அவளைக் கோவில் பிரகாரத்தில் மடக்கி சாக்லேட் கொடுத்ததும், அதை வாங்கிக்கொண்டு ’தாங்க்ஸ்’ என்று ஒற்றைச் சொல்லில் அவள் ஓடி மறைந்ததும், அவர்கள் வீட்டில் ஏதேனும் நினைத்துக்கொள்ளப் போகிறார்கள் என்ற பயம் தலைதூக்க அவள் தம்பி வாசுவைத் தேடிப் பிடித்து அவனுக்கும் சாக்லேட் வழங்கியதும்

ஊரில் வேறொரு கோவில் சமாராதனை விருந்தில் அவளும் அவள் அம்மாவும் அமர்ந்திருந்த வரிசையில் வெற்று மார்பில் சுற்றிக் கட்டிய மேல்துண்டுடன் அவன் அடிக்கடி அலைந்து பனை விசிறியால் வீசியும், தீர்த்தம் வழங்கியும், பாயசம் பரிமறியும் கவனித்துக் கொண்டபோது, அவள் அம்மா அவனைப் பார்த்து (அர்த்தத்துடன்?!) புன்னகை செய்ததும்

மனதில் துல்லியமாக ஒலி-ஒளி-வண்ணங்களில் தோன்றி மறைந்தன.

*** *** ***
(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Mar 02, 2013 6:54 am

பயணம்: நாவல்
ரமணி

12

பெண்மைக் குணமுடையான்;--சில நேரத்தில்
பித்தர் குணமுடையான்;--மிகத்
தண்மைக் குணமுடையான்; சில நேரம்
தழலின் குணமுடையான்.
---மஹாகவி பாரதியார், கண்ணன் என் தோழன் 8


மாலை வேளைகளில் காலாற நடப்பதைப் போன்ற இனிமையான அனுபவம் இல்லை என்று சொல்லிவிடலாம். கல்லூரி நாட்களில் ஸ்திரப்பட்ட இந்த வழக்கம் இன்றும் அவனை விடவில்லை.

நடப்பது என்றாள் மற்ற இளைஞர்களைப் போல் கூட்ட முடிச்சுகளாக ஆரவாரத்துடன் பேசிக்கொண்டும் அங்க சேஷ்டைகள் செய்துகொன்டும் சிரித்துக்கொண்டும் ’கண்ணோக்கி’க்கொண்டும் கமென்ட் அடித்துக்கொண்டும் கடைத் தெருக்களையும் தெப்பக்குளத்தின் நான்கு சுவரொட்டிய வீதிகளையும் மட்டுமே சுற்றிச் சுற்றி வருவது அவனுக்குப் பிடிக்காது.

"ஒனெக்கெல்லாம் எங்க ஃபார்முலா தெரியப் போறது? படிச்சாத் தானே? அப்பா கத்தைகத்தையா அனுப்பற பணம் பாக்கெட்ல. கேக்கவா வேணும்? டைட்-பேண்ட் போட்டுண்டு கிர்கிர்னு ஊர் சுத்தறாது; ’கண்கண்ட தெய்வம்’ சினிமா பாக்கறது! நீயெல்லாம் ஏய்யா படிக்க வறே? ஃபார்முலா தெரியலேன்னா கோர்ஸை விட்டுடு. பொட்டிக்கடை வெச்சுண்டு உக்காந்துக்கோ."

கணித விரிவுரையாளரின் காரசாரமான் பேச்சும் அதைச் சட்டை செய்யாது எருமை மாடாக எதிரில் நிற்கும் மாணவனும் நினைவில் வந்து போயினர்.

கல்லூரி விட்டதும் ஹாஸ்டலுக்கு விரைந்துவந்து ’மெஸ்’ஸில் போட்ட டிஃபனை சாப்பிட்டுவிட்டு ’டேபிள் டென்னிஸ்’ விளையாட்டில் இடம்பிடித்து ஒரு ’பெஸ்ட் ஆஃப் ஃப்வைஸ்’ ஆடிவிட்டு அஞ்சரை மணிக்குக் கிளம்பிவிடுவான்.

நண்பர்களிடமிருந்து மெல்ல நழுவித் தனியே நடந்து ஒலி மலிந்த சாலைகளையும் தெருக்களையும் கடந்து திருச்சி நகரின் கடற்கரையான காவேரிப் பாலத்தை அடையவும் சூரியன் அஸ்தமிக்கத் தொடங்கவும் சரியாக இருக்கும்.

காவேரிப் பாலத்தில் நின்றுகொண்டு சூரியன் மறைவதைப் பார்ப்பது---சூரியன் உதிப்பதைத்தான் பார்க்க முடிவது இல்லை---ஓர் இனிய அனுபவம்.

தினமும் பார்க்கும் காட்சிதானே என்று அலுப்புத் தட்டாமல் எத்தனை விதத் தோற்றங்கள்! இன்று இப்படித்தான் இருக்கும் என்று கணிக்க முடியாது. கணித்தால் ஒன்று ஏமாற்றம்தான் மிஞ்சும். அல்லது கண்களையே நம்பமுடியாது.

கண்களை இதமாக வருடிக் கொடுத்துக்
கண்களில் வழிந்து ஒளிக்கற்றை பிரதிபலிக்க

நீலக் கடல்வானில் நித்திலப் பாறைகள்போல்
மிதக்கும் முகில்மகளிர் பொன்முலாம் பூசிக்கொண்டு
உடலெலாம் கதிர்பட்டுக் கதிரொளியில் குளித்திருக்க

உடல்நிறம் மாறியும் உவகை அடையாமல்
விட்டில் பூச்சிகளாக மேகங்கள் சேர்ந்து
கதிரவனை நோக்கிப் படையெடுக்க

தொல்லை தாங்காத தினகரன் காவிரியில் மறைந்து
எட்டுத் திக்கிலும் மன்மத பாணங்களை எறிய

நாணிச் சிவந்த மேக மங்கையர்
காவிரி அலைகளில் கண்ணாடி பார்க்கும்
அழகை வருணிக்கப் போதுமோ வார்த்தைகள்?


இதே காட்சி மறுநாள் பார்த்தால் ஒரே போர்க்களமாகி நிறங்களும் ஊளையிடும் காற்றின் ஒலிகளும் கலிங்கத்துப் பரணியை நினைவூட்டும்.

சில நாட்களில் கரைகளின் ஓரத்தில் நூலாடும் காவிரியின் பாதரச நீரோட்டத்தில் உடைந்த சில்லுகளின் பிரதிபலிப்பில் ஒரு ’மிஸ்டரி’ இருக்கும்.

வேறு சில நாட்களில் கதிரவன் தொடுவானில் இறங்கும் முன்னரே மேகங்கள் பின் மறைய சுவாரஸ்யமே போய்விடும்.

இப்படிக் காவிரிப் பாலத்தில் மெய்ம்மறந்து இருந்தபோதுதான் ஒருநாள் பாஸ்கரைச் சந்தித்தான்.

பாஸ்கர்!

சிலரைப் பார்த்த உடனேயே நண்பர்களாக்கிக் கொள்ள ஏக்கம் பிறக்கும். இப்படித்தான் அவன் கல்லூரியில் நுழைந்தவுடன் பாஸ்கரின் தோற்றத்தாலும் அறிவாலும் கவரப்பட்டு அவனுடன் பழகவேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்க, தகுந்த சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்க, கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல் ஒருநாள் பாஸ்கரே இவனுடன் வலியவந்து பேசி, அறிமுகம் செய்துகொண்டு, விரைவிலேயே அவர்கள் நெருங்கிய நண்பர்களாகி, அந்த நட்பு அவன் வீடுவரை பரவி, பொதுவாக அவன் நண்பர்களைப் பற்றி அதிகம் அக்கறை காட்டாத அவன் அப்பாகூடத் தன் கடிதங்களில் பாஸ்கரைப் பற்றி விசாரிக்கும் அளவு வளர்ந்துவிட்டது.

பாஸ்கரை இப்போது நினைக்கும்போது அந்த ’பாஸ்கர்’ என்ற உருவத்துக்குள் அடங்கியிருக்கும் எந்த பாஸ்கரை நினைப்பது என்று இனிமையான குழப்பம்.

எத்தனை பாஸ்கர்கள்!

அவன் தோற்றமே ஒரு கவர்ச்சிதான். ’ஸ்மார்ட் அன்ட் ஸ்போர்டிவ்’. துருதுரு என்று அலையும் கண்கள். அகன்ற நெற்றி. எப்போதும் ’பளிச்’, அப்போதுதான் குளித்துவிட்டு வந்த மாதிரி. கேசம் கலையாமல், உடை சுருங்காமல், கைகளில் ’இங்க்’ கறை தவறிக்கூடப் படியாமல், செருப்பில்கூடப் புழுதியின் சுவடு தெரியாமல் எப்படி அவனால் இருக்க முடிகிறது? போதாக் குறைக்கு மார்வாரிச் சிவப்பு வேறு.

அந்தச் சரளமான, இனிமையான பேச்சு எப்படிப்பட்ட ’மில்டன்’ஐயும் அல்லது அப்பாவையும் கவர்ந்துவிடும்.

கொஞ்சம்கூட நிதானிக்காமல் எப்படி அவனால் எல்லோருடனும் கலகலவென்று பேசி, சிரித்துப் பழகமுடிகிறது? அவனுக்கு நிறைய ’கேர்ல் ஃப்ரண்ட்ஸ்’ இருக்கவேண்டும், சொல்ல மாட்டேங்கறான் பயல்! பட்டுக் கத்தரித்தாற்போல் என்ன பேச்சு அது! எதிரில் இருப்பவரை அப்படியே ஆட்கொண்டு, மெல்ல வருடிக்கொடுத்து, உற்சாகப்படுத்தி, விரல்பிடித்து வழிகாட்டி, கொஞ்சமும் விமரிசனம் செய்யாமல், கோள் சொல்லாமல், முதுகுப்பக்கம் பேசாமல், டேல் கார்னகியின் How to Win Friends and Influence People புத்தகத்தை ஏதோ இவன்தான் எழுதியது மாதிரி...

கலகலவென்று பேசினாலும் அவன் பேச்சு காலியாக இருக்காது. யாப்பிலக்கணத்தில் இருந்து சமீபத்திய ’ஃபிலிம் ஃபெஸ்டிவல்’ வரை எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவான். சமய சந்தர்ப்பத்துக்குத் தகுந்த மாதிரி நளினமாகத் தலைப்புகளை மாற்றி, ஜேன் ஆஸ்டின் நாவல்களில் வருவதுபோல் பேசுவதே ஒரு கலையாகக் கடைப்பிடிப்பவன். அவன் எதைப்பற்றிப் பேசினாலும் அதில் ஒரு தெளிவான சிந்தனையும், ஆழமும், மாத்யூ ஆர்னால்ட் கூறும் அந்த high seriousness-உம் இருக்கும்.

பாஸ்கர் ஒரு நல்ல கிரிக்கெட் ஆட்டக்காரன். நம்பத் தகுந்த பேட்ஸ்மன். ஆனாலும் இன்னும் ’க்ளப் லெவல்’இலேயே இருப்பவன். ஏன் அதற்குமேல் முயலவில்லை என்றால், "நான் இந்த விளையாட்டை நேசிக்கிறேன். ஆனால் என்னால் இதைத் திருமணம் செய்துகொள்ள முடியாது" என்பான்.

பாஸ்கர் கலைகளை ரசிப்பவன். இசை, ஓவியம், புகைப்படம் போன்ற கலைகளில் அவனுக்கு அதீத ஈடுபாடு உண்டு. டானா சம்மர்ஸ் முதல் மதுரை மணி வரை ரசித்துக் கேட்பான். ஹிந்தித் திரை இசையில் லதாவும் தலத் மெஹ்மூத்தும் அவனுக்குப் பிடித்த பாடகர்கள். அதுபோல ஓவியம் என்றால் ரெம்ப்ராண்ட், டாவின்ஸி, ரவிவர்மா முதல் தலைகால் புரியாத ’மாடர்ன் ஆர்ட்’ வரை ரசிப்பது மட்டுமின்றி அதன் நுணுக்கங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பான். சமயத்தில் அவனே தூரிகை கொண்டு ஓவியம் வரைவான். இது தவிர நன்றாகப் புகைப்படங்கள் எடுப்பான்.

பாஸ்கர் ஒரு பேராசைகொண்ட புத்தகப் புழுவும் கூட. ’பி.ஏ.’ இலக்கியம் படித்ததால் இலக்கிய ஈடுபாடு உண்டு. இப்போது வங்கியில் வேலை பார்த்தாலும் அதைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவன். கையில் கிடைத்த பத்திரிகை அனைத்தும் மேய்வான். சென்னையில் உள்ள பெரிய நூலகங்கள் அனைத்திலும் அவன் உறுப்பினர்.

இவ்வளவு ஈடுபாடுகளை வைத்துக்கொண்டு ஏன் ஓர் ஊர் அறிந்த கலைஞனாக/பாடகனாக/கவிஞனாக/எழுத்தாளனாக வர முயற்சி செய்யக்கூடாது என்று கேட்டால் ’பளிச்’ என்று பதில் வரும்.

"My aim in life is to know something of everything. That's all. வாழ்க்கைல எல்லா விஷயங்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சுண்டு அதை நாலுபேரோட பேசிப் பகிர்ந்துண்டு, அதன் மூலமா நம்ம தோழமை வட்டத்தை வளர்த்துண்டு போறதுல இருக்கற இன்பமும் திருப்தியும் வேற எதிலையும் இருக்கும்னு நான் நினைக்கல. I want friends, not fans."

(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Mar 03, 2013 6:58 am

ப்புறம் அவன் கையெழுத்து. கொஞ்சம் வலப்புறம் சாய்ந்து, முத்துமுத்தாக இன்னைக்கெல்லாம் பார்த்துக்கொன்டே இருக்கலாம். கல்லூரித் தேர்தல்கள், ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு ’பானர்’கள் எழுதுவது அவனுக்குப் பிடித்தமான வேலை. அவனது கையெழுத்துக்காகவே பலர் அவன் வங்கியில் ’ஃபிக்ஸ்ட் டெபாசிட்ஸ்’ கணக்குகள் துவக்குவதுண்டு. இதனால் அவனுக்குப் ’ப்ரொமோஷன்’ கிடைக்கும்வரை அவனை ’டெபாசிட் செக்ஷன்’இல் வைத்திருந்தார் அவன் மானேஜர். இப்போது ’ப்ரமோஷன்’இல் சென்னைக்கு மாற்றலாகி வந்தபிறகும் ’டெபாசிட் செக்ஷன்-இன்-சார்ஜ்’தான்.

இதெல்லாம்விட பாஸ்கர் ஒரு ’ஹைலி ரொமான்டிக் ஃபெல்லோ’. அவன் பஸ் நிறுத்தத்தில் நிற்கும்போது மாணவிகள் சிலர் அவனையே பார்ப்பதுண்டு. ஓரிருவர் கொஞ்சம் தைரியம் பெற்று, "எக்ஸ்க்யூஸ் மி...வாட்’ஸ் த டைம் லைக்?" என்று கேட்க, அவன், "இட்’ஸ் குட் டைம்!" என்று விளையாட்டாகக் கூறிவிட்டுத் தன் மணிக்கடிகாரத்தை அவர்களிடம் காட்டுவான். கடவுள் படங்களில் தலைக்குப் பின்னால் உள்ள ஒளிவட்டங்கள் போல அவனைச் சுற்றி ஒரு ’ஆரா ஆஃப் ரொமான்ஸ்’ இருக்கிறது போலும்.

அவனுடன் நெருங்கிப் பழகுபவர்களுக்கு அவனுடைய ’ரேன்ஜ் ஆஃப் மூட்ஸ்’ வியப்பளிக்கும். உணர்ச்சிகளின் நவரசங்களிலும் சஞ்சரிக்க வல்லவன் அவன். ஆனால் மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டான்.

பாஸ்கர் அவன் டைரியில் நிறைய இடம் பெற்றிருந்தான். அவர்கள் இருவரும் சேர்ந்து பார்த்த திரைப்படங்கள், ரசித்த இயற்கைக் காட்சிகள், சுற்றுலா சென்ற இடங்கள், விவாதித்த புத்தகங்கள், வாழ்க்கை பற்றித் தத்தம் கண்ணோட்டங்களைப் பரிமாறிக்கொண்ட நிகழ்ச்சிகள் போன்ற எல்லா விவரங்களையும் ஒன்றுவிடாமல் குறித்திருந்தான்.

பாஸ்கரின் நினைவில் கண்கள் தாழ்ந்து அவனுடைய ’ஜர்னல்ஸ்’ பக்கங்களில் நிலைத்தபோது அவன் மாலதியை சந்திக்க, வரிகளைக் கலைத்துக்கொண்டு அவள் விஸ்வரூபம் எடுத்து அவன் நினைவுகளை ஆக்கிரமித்துக்கொண்டாள்.

ஒருநாள் மாலை. அவனும் பாஸ்கரும் கல்லூரி விட்டதும் வழக்கம்போல் காவேரிப் பாலத்தில் காற்று வாங்கச் சென்றபோது சிந்தாமணித் திடல் அண்ணா சிலை ’ரவுண்டாணா’ பக்கத்திலுள்ள பஸ் நிறுத்தத்தில் அவள் தனியாகக் நின்றிருந்தாள்.

பார்த்த உடனேயே கண்கள் நிலைத்து மனசுக்குப் பிடித்துப்போய் விடக்கூடிய குழந்தை முகம். விழிகளில் ’சங்கராபரணம்’ மஞ்சு பார்கவி. (இந்த ஒப்புமையைப் பின்னால் சேர்த்துக்கொண்டான், அவள் கண்களை வருணிக்க வேறு வழியில்லை என்று.) அவள் தலையில் சூடியிருந்த அந்த ஒற்றை ரோஜா வாடியிருந்தாலும் இதழ்களில் புன்னகை விரிந்திருந்தது. புத்தகங்கள்-’டிஃபன் பாக்ஸ்’ சுமையைக் கைகள் நெஞ்சுடன் அணைத்திருக்க, கால் விரல்கள் தார் ரோடில் அருவமான கோலங்கள் போட, ரோஸ் சாரியில் அவள் பளிச்சென்று இருந்தாள். அவளைக் கடந்து சென்றபோது அவனால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

"ப்யூட்டிஃபுல் இல்ல, பாஸ்கர்?"

"வொன்டர்ஃபுல்."

"யார் தெரியலையே?"

"தெரியாது? மாலதி. தினமும் நான் வரும் பஸ்ல திருவானைக்காவல் ஸ்டாப்ல ஏறுவா."

"பேர் எப்படித் தெரியும்?"

"ஒருநாள் பஸ்லேர்ந்து அவளுக்குப் பின் இறங்கினபோது அவள் நோட்புக்ல பார்த்தேன். ஹௌ டு யு லைக் த நேம்?"

"அடக்கமான பெயர், அவள் போலவே. தினமும் இப்படித்தான் ஒரே ஒரு ரோஜா தலையில் வெச்சிண்டு வருவாளா? பார்க்க அழஹா இருக்கில்ல?"

"தட்’ஸ் ரைட். சமயத்தில கனகாம்பரமும் டிசம்பர் பூவும்கூட கத்தைகத்தையா அலங்கரிக்கும்."

"வித்தியாசமா இருக்கா பாரு. அங்கே பார் அரட்டைக் கச்சேரி. சத்தம் ட்ராஃபிக்கை மீறி இங்கே கேக்கறது! இவள் அவர்களோட சேராமல் தனியா, அமெரிக்கையா எதையோ யோசிச்சிண்டு...இன்டலக்சுவல் டைப் போல."

"லைக்லி. அந்த கும்பல்ல ஒவ்வொருத்திக்கும் ஒரு பெயர். ஓரத்தில நிக்கறது கிளியோபாட்ரா. பக்கத்துல ’பணமா பாசமா’ சரோஜாதேவி. அடுத்தது டேம் அகதா க்றிஸ்டி. பக்கத்தில பட்டு மாமி. எல்லாம் ஶ்ரீரங்கம். என்னோட முன்பின் அறிமுகம் இல்லாத பஸ்-மேட்ஸ்."

"எப்படித் தெரியும் இந்த நிக் நேம்ஸ்?"

"எல்லாம் நான் வெச்சதுதானே!"

"யு ஆர் நாட்டி. ஆனால் பொருத்தம்தான்."

"இவளுக்கு அந்தமாதிரி பெயர் வைக்க முடியலை. வேணும்னா உயரத்துக்காக எம்மா ஓடௌஸ்னு வைக்கலாம். ஆனால் இவள் அவ்வளவு தூரம் துருதுருப்பா இல்லை. மே பி ஷி ஹாஸ் தட் ரிஸோர்ஸ்ஃபுல்னஸ்."

"ரோஸ் சாரி என்ன பொருத்தம் கவனிச்சயா?"

"அவளே ஒரு ரோஸ் தானே? A rose is a rose is a rose is a rose.*"

*For this famous quote check:
http://linksredirect.com/?pub_id=2492CL574&url=http%3A//en.wikipedia.org/wiki/Rose_is_a_rose_is_a_rose_is_a_rose

*** *** ***
(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Mar 04, 2013 6:43 am

பயணம்: நாவல்
ரமணி

13

கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காதல் இன்பத்தைக் காத்திது வோமடா.
---மஹாகவி பாரதியார், பெண்மை 4


முதல் கவனிப்பைத் தொடர்ந்து நாலைந்து மாதங்கள் அவளைப் பல நாட்கள் பார்த்த நிகழ்ச்சிகள் டயரியில் இடம்பெற்றிருந்தன.

*************************
செப்.10, புதன்
*************************
ஏறத்தாழ நான்கு வாரங்கள் கழித்து இன்று அந்த ரோஜாவைத் தற்செயலாக பஸ் ஸ்டாப்பில் பார்த்தேன். இன்றும் ரோஸ் சாரி. ரோஜா.

*************************
அக்.3, வெள்ளி
*************************
இன்று தற்செயலாகப் பார்த்தபோது அவள் குரல் கேட்க முடிந்தது. குரல் இனிமையாகவே உள்ளது. அனுவுக்கும் ஜெயந்திக்கும் இடைப்பட்ட த்வனி. கண்டக்டரிடம் பேசினாள். அருகில் இருந்த தோழியிடம் கொஞ்சம். மற்றபடி ஷ்...!

*************************
அக்.13, திங்கள்
*************************
இன்று பாஸ்கர் உடவரப் பார்த்தேன். அதே இடம். இன்று பசுமையாக இருந்தாள். அதே அமைதி. கண்கள் எங்கள் மேல் விழுந்தபோது கொஞ்சமும் சலமில்லை.

Not a ray of recognition.

பாஸ்கரோ, நானோ அவள் கவனத்தை ஈர்க்க எந்த முயற்சியும் செய்யவில்லை. இயல்பாகக் கடந்தோம்.

*************************
அக்.14, செவ்வாய்
*************************
இரண்டாம் நாள். பாஸ்கர் சொன்னது சரிதான். கனகாம்பரம்.

*************************
அக்.17, வெள்ளி
*************************
தொடர்ந்து ஐந்து நாட்கள் பார்க்கும் வாய்ப்பு. இன்று கொஞ்சம் வாடியிருந்தாள். கடுமையான ’பிராக்டிகல்’ போலும். அல்லது...

இனி தினமும் பார்ப்பேன் என்று தோன்றுகிறது.

*************************
அக்.30, வியாழன்
*************************
இன்று என்னுடன் இரண்டாம் நம்பரில் வந்தாள். என்ன ’மெயின்’ தெரியவில்லை. zoo-வாக இருக்குமோ?

What a silent creature!

*************************
டிச.16, செய்யாய்
*************************
ஆறு வாரங்கள் கழித்து இன்று பார்க்க முடிந்தது, டி.வி.எஸ். பஸ் நம்பர் நாலில் கோவிலுக்குப் போகும்போது.

இன்று நான் அதிர்ஷ்டக்காரன். பாஸ்கர் கேட்டால் பொறாமைப் படுவான். பஸ்ஸில் எதிரெதிரே அமர்ந்து இருந்தோம். டி.வி.எஸ். வாழ்க! வசீகர முகம். வளமான உடல். கொஞ்சம் மாநிறம்தான். கையில் எத்தனை புத்தகங்கள்! எல்லாம் அழகாக அட்டை போடப்பட்டு... என்ன சப்ஜெக்ட் என்று தெரிந்துகொள்ள முடியவில்லை.

ரோஸ் அவளுக்குப் பிடித்த நிறம் என்பது உறுதியாகத் தோன்றுகிறது. இது குறைந்தது அவளது நாலாவது ரோஸ் சாரி என்று நினைக்கிறேன். ஒவ்வொன்றும் ஒரு டிசைன்.

கண்டக்டரிடம் சில்லறையைக் கொடுத்து ’திருவானைக்காவல்’ என்றபோது கோவில் அர்ச்சகர் கைமணியின் மென்மையான ’கலீர்’ கேட்டது. டிக்கெட்டைத் தவறவிட்டாள்.

எடுக்கக் குனிந்தபோது தலையில் இருந்து நீளக் கருநாகம் புரண்டது. ரோஸ் ரிப்பன்.

என் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால்---பாஸ்கராக இருந்தால் கூட---அவளுக்கு உதவக் குனிந்து கொஞ்சம் ஸ்பரிசித்திருக்கலாம். எனக்கு அவ்வாறு செய்ய மனமில்லை. தேவையில்லாத அனுகூலங்கள் எடுத்துக்கொளவது அநாகரிகம்.

ஆனால் அவள் என்னை ஸ்பரிசிக்க நேரிட்டது விந்தை! நாலுகால் மண்டபம் அருகில் பஸ் திரும்பியபோது அவள் எழுந்துகொள்ள, டிரைவரின் திடீர் ப்ரேக்கில் தடுமாறி ஜன்னல் கம்பிகளைப் பிடிக்க முயன்று என் விரல்களைப் பிடித்துக்கொண்டாள். ’ட்ஃபன் பாக்ஸ்’ கீழே விழ, என்னுள் கவிதை வரிகள் தலைகாட்டின.

என் விரல்கள்
நட்சத்திரங்களை வருடினாலும்
விழிகள் என்னவோ
ஜன்னல் கம்பிகளளோடுதான்.
[மு.மேத்தாவின் கவிதையைக் கொஞ்சம் மாற்றி எழுதியது]


அந்தக் கணத்தில் அவள் முகம் பார்க்க முடியவில்லை, முனையவில்லை.

"ஐ’ம் சாரி", என்றாள் மெல்லிய முறுவலுடன். இப்போது அவள் முகம் நோக்கினேன்.

"இட்’ஸ் ஆல் ரைட்."

’ட்ஃபன் பாக்ஸ்’ஐ எடுத்துக் கொடுத்தபோது "தாங்க் யு" என்றாள். "I'm sorry for the inconvenience!"

அவள் அண்மையில் பேசக்கேட்ட நீளமான சொற்றொடார்!

It's a pleasure என்று சொல்ல நினைத்து, "It's okay. I didn't mind." என்றேன்.

கொஞ்சம் காத்திருந்து அவள் இறங்க, பின்னள் இறந்கினேன். அந்தத் தவிர்க்கமுடியாத பின்தொடரலில் கொஞ்சம் பேசியிருக்கலாம். தவறாக எடுத்துக்கொள்வாளோ என்று தோன்றியது. அவள் என்மேல் வைத்திருக்கும் மதிப்பு குறைந்து விடும்படி நான் எந்த செயலும் செய்துவிடக் கூடாது.

கோவில் வாசல் வந்ததும் அவள் வலப்புறம் திரும்பி சந்நிதித் தெருப்பக்கம் சென்றுவிட நான் நேரே கோவிலுக்குள் சென்றுவிட்டேன்.

திரும்பி வரும்போது காவிரிக் கரையில் வீசிய தென்றலின் இதமான வருடலில் நடந்தவற்றை ஒருமுறை யோசித்துப் பார்த்தேன். நான் செய்தது சரியென்றே தோன்றியது.

றுநாள் பாஸ்கரிடம் சொன்னபோது எதிர்பார்த்தபடியே, "ராஜா, நீ ஒரு நல்ல வாய்ப்பை நழுவ விட்டுட்டே" என்றான்.

"எனக்கு அப்படித் தோன்றவில்லை பாஸ்கர். ஓகே, நீயாயிருந்தால் என்ன செய்திருப்பாய்?" என்றேன், அவன் மனத்திலுள்ள வக்கிரங்களின் வருகைக்குக் காத்திருந்து.

ஏதாவது ஏடாகூடமாகப் பிதற்றப் போகிறானே என்று பயந்தபோது அவன் சொன்ன பதிலில் அசந்து போனேன்.

"லிஸன். நம்ம ரெண்டு பேரும் முதன்முதல அவளைப் பார்த்தபோது என்ன நினைச்சோம்? அவளுடைய அழகிலயும் அடக்கத்திலயம் மனசப் பறிகொடுக்கலை? பெண்கள்னாலே வளவளன்னு பேச்சைத் தவிர ஒண்ணும் உருப்படியாத் தெரியாதுன்னு இதுவரை நாம நினைச்சது தப்புன்னு அடிச்சுச் சொல்றமாதிரி எவ்ளோ அமைதியா, அடக்கமா, வித்தியாசமா இருந்தாள் அவள், இல்லையா? நீகூட ’இன்டலக்சுவல் டைப் போல’ன்னு சொன்ன, ஞாபகம் இருக்கா?

அதுக்கப்பறம் எத்தனை தடவை நாம அவளைப் பார்த்திருக்கோம். நீயே தனியா நிறைய தடவை பார்த்திருப்பே இல்லையா? நான் அனேகமா தினமும் காலையில் அவளை பஸ்ல பார்க்கறதுண்டு. பெரும்பாலும் மெயின் ரோடுல போகும் ஶ்ரீரங்கம் பஸ்லதான் ஏறுவா. நான் எப்போதும் டிரைவருக்கு எதிர்த்த ஸீட்லதான் உக்காருவேன். அவளுமே முன்னாலதான் உக்காருவா. ஸோ, நல்ல சான்ஸ், அவளை வாட்ச் பண்ண. அவள் பாட்டுக்குத் தான் உண்டு தன் புத்தகம் உண்டுன்னு இருப்பா. இல்லை, ஏதாவது பத்திரிகை படிச்சிண்டு இருப்பா. அநாவசியமா ஒரு வார்த்தை பேசமாட்டா. அதுக்காக முசுடுன்னு சொல்ல முடியாது. தற்பெருமையா இருக்குமோன்னு கூட நினைச்சேன். ஒருநாள் என்னாச்சு தெரியுமா?" படபடவென்று பொரிந்துதள்ளிவிட்டு மூச்சுவிட நிறுத்தினான்.

"ப்ரொஸீட்" என்றேன்.

"எங்க ஶ்ரீரங்கத்துப் பட்டாளத்துக்கிட்ட மாட்டிக்கிட்டா. ஒரு நிமிஷம் சும்மா இருக்கவிடலையே அவளை? மாலதி என்ன படிக்கறே? மாலதி ஏன் என்னவோ போல் இருக்கே? மால் ஏன் பேசவே மாட்டேங்கறேன்னு பிடுங்கி எடுத்துட்டாங்க. எனக்கு ஒரே வேடிக்கையா இருந்தது. இவளால பதில் சொல்லி மாளலை. திடீர்னு அந்தக் கிளியோபாட்ரா சத்தம் போட்டு சொல்றா, ’ஏ மால், நீ இப்படி யாரோடையும் சரியாப் பழகாம, தனியா ஒதுங்கி இருந்தா, அதுக்கு ரெண்டு அர்த்தம் உண்டு. ஒண்ணு நீ ஒரு ego-centric introvert. அல்லது You are in love. Come on, who's that guy?’ சுத்தி ஒரே சிரிப்பு."

"இன்ட்ரஸ்டிங்" என்றேன்.

"நானா இருந்தா கடுப்பாயிருப்பேன். அவள் அமைதியா, அழகா, ரத்னச் சுருக்கமா ’நோஸ்கட்’ குடுத்தா. ’ஹேமா, டோன்ட் பி ஸில்லி. அதோட, ஏன் பொய் சொல்றே? நான் காலேஜ்ல எல்லோரோடையும் கலகலப்பாப் பழகலை? அதுக்காக பஸ்ல வரும்போதுகூட டமாரம் வண்டி மாதிரி ஓசைப்படுத்திண்டே வரச் சொல்றியா? ஒரு பொது இடத்துல கொஞ்சம் நாசூக்கா, அமைதியா இருந்தா என்ன தப்பு? எனக்கு பஸ்ல படிக்கப் பிடிக்கும், படிக்கறேன். அல்லது பேசாம உக்காந்திருக்கேன். அதைப்போய் ego-centric-னு லேபிள் பண்ணா I just don't care. தவிர, இந்த ஸ்டேஜ்ல லவ் அதுஇதுன்னு கவனத்தை சிதறவிடற அளவுக்கு நான் முட்டாள் இல்லை.’ அவ்ளதான், எல்லார் வாயும் தெப்பக்குளம் போஸ்ட் ஆஃபீஸ் பசையால ஒட்டின மாதிரி கப்சிப்!"

"என்னோட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லலை."

"எதுக்கு இந்த நிகழ்ச்சியை விலாவரியா சொல்றேன்னா, இவ்வளவு தூரம் அடக்கமா, நாகரீகமா, ப்ராக்டிகலா இருக்கிற ஒரு பெண்ணை விரும்பும்போது, அதுவும் அவளோட பழகச் சான்ஸ் கிடைக்கும்போது, அவளைப் பத்தி மேலும் தெரிஞ்சுக்க முயற்சி செய்யறது என்ன தப்பு? என்னைவிட நீ கொஞ்சம் reserved type. More like her. In fact, I would say you have a better chance."

"அதுக்காக அவள் sorry for the inconvenience-னு சொன்னபோது, Not at all. It's a pleasure to help a girl in distress-னு வழியச் சொல்றயா? அல்லது டிக்கெட் மீட்டுத் தர்ற சாக்கில அவள்மேல் பட்டிருக்கலாம்னு சொல்றயா, What's your idea?", என்றேன் அவன் வாயைக் கிளறுவதற்காக.

You are thoroughly mistaken, ராஜா. எதிர்பாராத சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திண்டு ஒரு பெண்ணைத் தொடறது, அப்புறம் அதுக்கு நியாயம் கற்பிக்க முயற்சி செய்யறது இதெல்லாம் அநாகரிகம், சிறுபிள்ளைத்தனம், அறியாமை அல்லது sheer hypocrisy. உன்னோட ஒருத்தி கைகுலுக்க ரெடியா இருந்தா கைகுலுக்கறது நாகரிகம். அதுக்காக உன்னைக் கும்பிடறவள் கிட்டபோய்க் கையை நீட்டறது காட்டுமிராண்டித்தனம். இந்தக் காலத்தில பாம்பே, மெட்ராஸ்ல டிஸ்கோத்தேல்லாம் வந்திருச்சுன்னு கேள்விப்படறேன். ஆண்களும் பெண்களும்---முக்கியமா கல்லூரி மாணவ மாணவிகள்---கைகோத்துகிட்டு தோளோடு தோள் உரசி மேற்கத்திய இசையின் பிண்ணணியில டான்ஸ் ஆடறாங்க. இதெல்லம் ஒரு ஸோஷல் ஆக்டிவிடி, அவ்வளவுதான். சைகலாஜிகலா பார்த்த இந்தத் தொடுதல் உரசுதல்லாம் அடலசன்ட் உணர்வுகளோட வெளியீடுகள். But if you seriously love a woman, இதெல்லாம் தேவை இல்லாத அவசரங்கள். Loving is primarily respecting. நம்ம கிராமத்தில சொல்றாப்பல கெணத்து நீரை வெள்ளமா கொண்டுபோய்டும்?"

"நான் என்னதான் செஞ்சிருக்கணும்னு சொல்றே?" என்றேன் குழப்பத்துடன்.

"ஏன், பஸ்லேர்ந்து இறங்கி அவளைத் தொடர்ந்து போனபோது அவளோட பேசியிருக்கலாம். அவள் முகவரியை விசாரித்திருக்கலாம். அவளை அடிக்கடி பாக்கறது பத்தியும், எப்படி அவள் அவளோட தோழிகளிடம் இருந்து வித்தியாசமா இருக்கா, எவ்வளவு அடக்கமா, அழகா இருக்கான்னு காம்ப்ளிமென்ட் பண்ணியிருக்கலாம், நாசூக்கா. Tell me honestly, don't you like her, or better still, love her?"

என் நினைவில் அப்பாவும், கூடவே அம்மாவும், வசந்தியும், அந்தப் பூஜை அறையும் ஸ்வாமி படங்களும் தோன்ற, "நாட் யெட்" என்றேன். "நீ நினைக்கிற மாதிரி அல்லது உனக்கு முடியற மாதிரி எனக்கு இது அவ்வளவு சுலபம் இல்லை பாஸ்கர். என்னால அவ்வளவு ஈஸியா கமிட் பண்ணிக்க முடியாது."

"But I lover her, come what may", என்றான் ஒரு தீவிரத்துடன். "With all my heart and soul. அவள் இனிஷியல் என்ன தெரியுமா? என். என் மாலதி."

"புரியறது பாஸ்கர்."

(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Mar 05, 2013 7:35 am

யோசித்துக்கொண்டே டைரியின் பக்கங்களைப் புரட்டியபோது கலைடாஸ்கோப்பில் கோலம் மாறி மாலதிக்கு பதில் கோவி. மணிசேகரன் தோற்னினார்.

*************************
ஜன.10, சனி
*************************
கோவி. மணிசேகரனின் ஒரு சிறுகதையில் ஒரு குறிப்பிட்ட வருணனை என்னைக் கவர்ந்தது. துல்யமான, யதார்த்தமான, உயர்ந்த கற்பனையுடன் கூடிய வருணனை!

"முத்துக்களிலே நிலவொளி கடுகெனச் சிறைப் பட்டிருந்தது; முத்துக்கள் வெடித்தன; முழுநிலவோ சிரித்தது."
---’அதுவும் அங்கேயே முடியுமானால்’

walter de la mare-இன் கனவுக் கவிதைகள் நினைவுக்கு வருகின்றன.

அந்த வார்த்தைகளின் தாக்கமும் அதனை அவன் வியந்ததும் இப்பொதும் பிடிபட, பக்கங்களை விரலிட்டபோது மீண்டும் அவள் தோன்றினாள்.

*************************
ஜன.16, வெள்ளி
*************************
சரியாக ஒரு மாதம் கழித்து அவளைப் பார்த்தேன். கோவிலுக்கு வந்திருந்தாள். மறுபடியும் ஒரு கோவில் சந்திப்பு அமைந்தால் நன்றாக இருக்கும்.

இப்போது ஸேக்*ஷ்பியர் வந்தார்.

*************************
ஜன.23, வெள்ளி
*************************
உயிர் ஒலிகள் மற்றும் இதர சந்தங்களைக் கையாள்வதில் ஸேக்*ஷ்பியருக்கு இணையில்லை என்ற கூற்றை நான் இதுவரை நம்பியதில்லை. அவரது கதாபாத்திரங்களின் விஸ்வரூபத்தில் அவர் கவிதைத்திறன் மறந்துபோய்விடுவது இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் இன்று Antony and Cleopatra நாடகப் படைப்பில்

Which to the tune of flutes kept stroke and made
The water which they beat to follow faster


[http://linksredirect.com/?pub_id=2492CL574&url=http%3A//penelope.uchicago.edu/%7Egrout/encyclopaedia_romana/miscellanea/cleopatra/alma-tadema.html%5D]


என்ற வரிகளைக் குரலுடன் படித்தபோது அந்த kept stroke வார்த்தைகளில் துடுப்பொலி கேட்கத் திடுக்கிட்டுப் போனேன். அடுத்த வரியில் தண்ணீர் என்னமாய்த் துடுப்புடன் இழைகிறது!

நீரின் ஒலிகளையோ, துடுப்பின் ஒலியையோ நேரடி வார்த்தைகளால்---like 'the clicking oars' or 'ripples of water'--குறிக்காமல், எளிய, இடத்துக்குப் பொருத்தமான வார்த்தைகளில் சந்தங்கள் சுட்டும் ஸேக்*ஷ்பியர் உணர்வுகளை மீட்டவல கவிஞரும் கூட.

*************************
மார்ச் 13, வெள்ளி
*************************
இன்று அவள் பஸ் ஸ்டாப்பில் என்னைக் கடந்து போனபோது நான் தயக்கத்துடன் மெல்லப் புன்னகைத்தும் பதிலில்லை. இந்த நேரம் பார்த்து பாஸ்கர் பக்கத்தில் இல்லை.

*************************
மார்ச் 15, ஞாயிறு
*************************
நானும் பாஸ்கரும் கோவிலின் திறந்த வெளியில் காலாற நடந்தபடியே படிக்கச் சென்றபோது அவள் கையில் ஒரு கனமான புத்தகத்துடன் எங்களைக் கடந்துசென்றாள். இன்று கொஞ்சம் கலகலப்பான தோற்றம். எங்களைப் பார்த்தபோது அவள் மனதில் தோன்றிய புன்னகையின் கீற்று அவள் கண்களில் எட்டிப்பார்த்ததாகத் தோன்றியது. பாஸ்கரின் அந்த ’ரொமான்டிக் ஆரா’ காரணமோ? நான் இருந்தபடியாலோ என்னவோ அவன் அவளுடன் பேச முயலவில்லை. Love is after all a very private thing.

எனக்கும் பாஸ்கருக்கும் ஒரு சின்ன வாக்குவாதம். அவள் இலக்கியம் இரண்டாம் வருடம் என்பது என் கட்சி. இல்லை கடைசி வருடம் என்பது அவன் கட்சி. பந்தயம் அஜந்தாவில் டின்னர்.

அவள் இலக்கியம், அதுவும் எங்களைப் போலவே இரண்டாம் வருடம் என்று மனதுக்குள் பல்லி கூறுகிறது. பார்ப்போம்.

*** *** ***
(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Mar 06, 2013 6:52 am

பயணம்: நாவல்
ரமணி

14

வேண்டு தந்தை விதிப்பினுக் கஞ்சியான்
வீதி யாட்டங்ஙளேதுங் கூடிலேன்,
தூண்டு நூற்கணத் தோடு தனியனாய்த்
தோழ மைபிறி தின்றி வருந்தினேன்.
---மஹாகவி பாரதியார், சுயசரிதை 4


*************************
மார்ச்20, வெள்ளி
*************************
கோவிலில் இன்று ஏகக் கூட்டம். அகிலாண்டேஸ்வரியின் முன் நின்று நானும் பாஸ்கரும் மனதார வேண்டிக்கொண்டோம். வேண்டுதல் முடிந்கதும் கண்கள் அலைந்தன. தேடின. நிலைத்தன.

அழகே உருவாக அவள் நின்றிருந்தாள், மழைவிட்டதும் பளிச்சென்று தோன்றும் வானவில்லாக. பக்கத்தில் மங்கிய உபரி வானவில். அம்மா போலும். பாஸ்கர் என்னை விலாவில் இடித்தான்.

கூட்டத்தில் தனியாகத் தெரிந்தாள். கண்கள் அம்மனை நோக்கியிருந்தன. கற்பூர ஆராதனையின் போது கம்பிகளில் சாய்ந்து ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு கன்னத்தில் போட்டுக்கொண்டாள்.

ஆராதனை முடிந்ததும் நெற்றியில் வியர்வை பொடிக்க அர்ச்சகர் இருவர் வெளிவந்து கற்பூரமும் குங்குமமும் கொடுத்தபோது நளினமாக ஒற்றிக்கொண்டு வாங்கி நெற்றியில் அழக்குக்கு அழகு சேர்த்துக்கொன்டாள். பாஸ்கர் கைகளை சுட்டுக்கொண்டான்!

"என்ன சார்! எங்க பார்த்துண்டிருக்கேள்? குங்குமம் வாய்ங்க்கோங்கோ."

வாங்கி நெற்றியில் தீற்றிக்கொண்டான். நான் அவளைக் காப்பியடிக்க முயன்று நெற்றியில் எங்கேயோ ஓரத்தில் குங்குமம் இட்டுக்கொண்டது பாஸ்கர் பின்னர் என்னைப் பார்த்துச் சிரித்தபோதுதான் தெரிந்தது.

அர்ச்சகர் கொடுத்த பிரசாதத் தட்டைப் பெற்றுக்கொண்டு அம்மாவுடன் (அல்லது அக்காவோ?) உட்பிரகாரத்தை மூன்று முறை வலம்வந்து, அகஸ்தியர் தீர்த்தத்தில் எட்டிப்பார்த்து "எவ்ளோ தெளிவா இருக்கில்லே!" என்று வியந்தவண்ணம் வெளியில் வந்து, நாங்கள் பிடிவாத நாய்க்குட்டிகளாகப் பின்தொடர, அம்மன் சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ள விநாயகர் சிலையைச் சுற்றிக்கொண்டு வெளிக்கதவு அருகில் இருந்த மகிஷாசுரமர்தினி சுவரோயியத்தை வணங்கிவிட்டுப் பழைய சந்நிதிப்பக்கம் திரும்பிச் சென்றுவிட்டாள்.

நானும் பாஸ்கரும் கோவிலைவிட்டு வெளியில் வரும்வரை பேசவில்ல.

றுநாள் அவன் கண்களையும் காதுகளையும் நம்பமுடியாதபடி அந்த நிகழ்ச்சி நடந்தது.

அன்று அவன்மட்டும் தனியாகக் கோவிலுக்குப் போனான். ஆறு மணிக்கெல்லாம் இருட்டத் தொடங்கிவிட்டது. ஆறரை மணியளவில் அன்னை அகிலாண்டேஸ்வரிக்கு தீபாராதனை.

அன்னையின் சந்நிதிக்குள் நுழைவதற்கு முன் பழைய சந்நிதிப்பக்கம் சென்று அந்த இரும்பு வாயிற்கதவு வரை போய்த் தெருப்பக்கம் பார்த்தல் என்ன என்று தோன்றியது. கூடவே, நடுவில் அவள் எதிர்ப்பட்டால் செயற்கையாக இருக்கும் என்று தோன்றிட அந்த யோசனையைப் புறக்கணித்தான்.

அன்னையின் கோவிலுக்குள் நுழையும்போது அவள் நினைவு வந்து மனம் அந்த மகிழ்ச்சியான தருணத்தை எதிர்பார்த்தது. அவளைக் காணவில்லை. மௌனமாக மகிஷாசுரமர்தினியின் காலடியில் எரியும் கற்பூரங்களைத் திரும்பிப் பார்த்தவாறே நடந்தான். ஒருவேளை சந்நிதிக்குள் இருக்கிறாளோ?

கால்களின் அவசரத்தில் விநாயகருக்கு எதிர்ப்புறம் இடம்திரும்பிய போதுதான் கவனித்தான். கோவிலில் கூட்டமே இல்லை. உள் பிரகாரத்தை நோக்கிச் சென்றபோது வழியில் இரண்டு அர்ச்சகர்கள் உட்கார்ந்துகொண்டு இருளைப் பொருட்படுத்தாது சாவகாசமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

பிரகாரத்தில் நுழைந்ததுமே கண்கள் தாமாக சந்நிதியை நோக்கின. அவள் இல்லை. உண்மையில் அவனைத் தவிர ஒருவரும் இல்லை. பிரகாரம் காலியாக இருந்தது!

இன்று சனிக்கிழமை யாதலால் ஒருவேளை வரமாட்டாளோ?

நேற்றைய நிகழ்ச்சியின் பின்னணியில் இன்றைய வெறுமையின் சாயல் விளத்த குழப்பத்தில் ஏமாற்றம்தான் மிஞ்சியது.

இருட்டில் பறக்கும் வௌவால்களாக அலையும் கண்களில் இப்போதும் ஏதோ ஒரு நம்பிக்கை.

சிமென்ட் பால் பளபளக்கும் கற்சுவரைப் பிடித்துக்கொண்டு சிந்தனையுடன் படியேறி சந்நிதிக்குள் நுழைந்தபோது நெடிய உருவமாக அன்னை அகிலாண்டேஸ்வரி நின்றிருந்தாள். உத்திரத்திலிருந்து தொங்கும் விளக்குச் சுடரின் மேல்நோக்கிய படபடப்பில் அவள் அணிந்திருந்த நகைகள் மினுமினுக்க, அந்த ஒளிச் சிதறலும் சுடரின் இருள்கலந்த தீட்சணியமும் தோற்றுவித்த பக்தியுணர்விலும் நம்பிக்கையிலும் மனத்தின் ஏமாற்றங்கள் மறைந்துபோக, இப்போதும் மனம் அவளை நினத்திருக்க, ஒரு கணம் தலையைச் சிலிர்த்துக்கொண்டு கண்மூடிப் பிரார்த்தித்தான்.

கண்களைத் திறந்தபோது அவனால் எதையும் நம்பமுடியவில்லை. கர்பக்கிருஹத்தில் அர்ச்சகரின் மந்திரக் கூவல்கள் இசைவடிவில் ஒலிக்க, அவர் எப்படித் திடீரென்டு தோன்றினார் என்று மனம் வியக்க, தலையைத் திருப்பியபோது நேர் எதிரில் அவள் பூனைபோல் வந்து நின்றிருந்தாள். பக்கத்தில் ஒரு சின்னப் பையன்.

அவர்களைத் தவிர சந்நிதியில் வேறு யாருமே இல்லை. இந்த நல்ல சந்தர்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவளுடன் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்ற ஆவலில் எண்ணங்கள் வார்த்தைகளாக ஸ்படிகித்து மோதினாலும் நாக்கின் முடிச்சு அவிழ மறுத்தது.

கண்கள் மட்டும் எந்தத் தளைக்கும் கட்டுப்படாமல் அவளையும் அன்னையையும் மாறிமாறிப் பார்த்தன.

வழக்கபடி புடவை அணியாமல் இன்று பாவாடை தாவணியில் கொஞ்சம் குட்டையாகத் தெரிந்தாள்.

வழக்கமான் மௌனத்தின் சுமை நீங்கி கொஞ்சம் ’ரிலாக்ஸ்ட்’ஆகக் காணப்பட்டாள். கைகள் பையனின் கழுத்தில் அரவணைத்திருக்க, கண்கள் அன்னையை நோக்கியிருக்க, இதழ்கள் முணுமுணுக்க நின்ற இந்த ’ஹோம்லி’ மாலதியின் எளிய, இனிய, இளைப்பாறிய தோற்றத்தில் அன்பும் பண்பும் அக்கறையும் போட்டிபோட்டுக்கொண்டு மிளிர்ந்தன.

ஆராதனை முடிந்து குருக்கள் கற்பூரம் கொணர்ந்தபோது பவ்யமாகத் தானும் கண்களில் ஒற்றிக்கொண்டு பையனுக்கும் ஒற்றிவிட்டாள். குங்குமம் வந்ததும் வாங்கி வழக்கம்போல் அழகாக நெற்றியில் உறுதிப்படுத்திக்கொண்டு பையனுக்கும் இட்டுவிட்டு மீதமிருந்ததை அவன் தளிர்க் கையில் ஒப்படைத்தாள்.

அவள் செய்கைகளைக் கவனித்தவாறே அவன் தானும் குங்குமம் இட்டுக்கொண்டு, காணிக்கை போட்டுவிட்டு அவளுடன் பேசத் துணைக்கு அன்னையையும் அழைத்தான்.

என்ன பேசுவது?
வழக்கம்போல் தலைக்கு மேலே பெரிய கேள்விக்குறி தொங்க, இதற்கிடையில் ஆராதனை முடிந்து அவள் நகர ஆரம்பிக்கத் தானும் மௌனமாகத் தொடர்ந்தான்.

வெளியில் வந்து அவள் நமஸ்கரித்தபோது பையன் கம்பத்தில் ஏறி மணிகளை வருடினான். எங்கிருந்தோ திடீரென மற்றொரு சின்னப்பையன் தோன்றி, "மாலதீ!" என்று கூப்பிட்டுக்கொண்டே பிரகாரத்தில் ஓடியபோது அவள் பெயர் உறுதியாயிற்று.

ஒரு புன்னகையுடன் படியிறங்கி வந்தவளை முன்னால் விட்டு அவன் இன்னமும் மௌனமாகப் பின்தொடர்ந்தான்.

எத்தனை சந்தர்ப்பங்கள்!
என்ன பேசுவது?

ட்பிரகாரத்தை வலம்வரும் போது விநாயகரை வழிபட்டாள். அடுத்து சுப்ரமணியர். அப்புறம் ஆறுமுகன், ரேணுகா. எல்லோருக்கும் வணக்கம் தெரிவித்த பின் சரஸ்வதியை நமஸ்கரித்தாள். சூரியனை நெருங்கும்போது அவன் ஒருவழியாகத் தீர்மானித்து வாய்திறக்க முற்பட்டபோது குரல் கரகரப்பாக, கொஞ்சம் செயற்கையாக வந்ததது.

"ஹலோ மிஸ். மாலதி! ஸ்டடி ஹாலிடேஸ் ஆரம்பிச்சாச்சா?"

மெல்லத் தலையாட்டினாள் உடன்பாடாக.

"செகண்ட் இயர் தானே?"

"ஆமாம்."

"என்ன மேஜர்?"

நளினமாகத் திரும்பி "லிட்ரேச்சர்", என்றாள். "இங்லிஷ் லிட்ரேச்சர்."

விநாடிகள் மௌனமாக நழுவ, அவள் சூரியனை நமஸ்கரித்தாள். பின்னர் மெல்லிய குரலில் கேட்டாள்: "நீங்க யாருன்னு தெரியலையே?"

அந்தக் கேள்வியை எதிர்பார்த்து அவன் தயாராக இருந்தபோதிலும் அதை அவள் தயக்கத்துடன் மெதுவாகக் கேட்டபோது அந்த நாசூக்கில் அவள் சந்தேகத்தின் நியாயம் உறைக்கத் திணறிப்போனான்.

கொஞ்சம் தயங்கி, கொஞ்சம் யோசித்து, கொஞ்சம் புன்னகைத்து, அவளுக்கு நேர் எதிரில் போய் நின்றுகொண்டு, சின்னப் பையனைக் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டு, "வசந்தினு ஒரு பொண்ணு உங்ககூடப் படிச்சிருக்கலாம். அவள் எங்க சித்தி பொண்ணு. நீங்க பி.யு.ஸி அதே காலேஜ்லதானே படிச்சிங்க?"

"இங்கதான் படிச்சேன். அவங்க எந்த செக்*ஷன்?"

"பி.யு.ஸி. ஃபர்ஸ்ட் க்ரூப்லதான் படிச்சா. இப்பகூட அவளும் லிட்ரேச்சர் ஸெகன்ட் இயர்தான்."

"எந்த செக்*ஷன்?"

"தெரியவில்லை."

அப்படியா என்பதுபோல் தலையாட்டியபடியே போய்விட்டாள்!

பாஸ்கரின் ஆலோசனையைக் காற்றில் பறக்கவிட்டு
அரிய வாய்ப்பொன்று விரல்களின் இடுக்குகளில்
பிரசாதத் தீர்த்தமாக நழுவி சிந்திவிட

நாவில் பட்ட ஓரிரு துளிகளின்
அதீத இனிமையில் மெய்மறந்த வனாக
கண்களில் ஒற்றிக்கொண்டு தலையில் தெளித்துக்கொண்ட
துளிகளில் உச்சி குளிர்ந்தவனாய் நிற்க

மனமோ கடந்த நிகழ்ச்சிகளை
மீண்டும் ஒத்திகை பார்க்க
(நாடகத்துக்குப் பின் ஒத்திகை!)

தொடர்ந்து அப்பாவின் சலனமற்ற முகமும்
தீட்சண்யமான பார்வையும் நினைவில்வரக்
கடைசியில் குழப்பம்தான் மிஞ்சியது.


பாஸ்கர் யு கேரி ஆன்!

(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Mar 07, 2013 6:38 am

பாஸ்கரிடம் மறுநாள் சொன்னபோது எதிர்பார்த்தபடியே கோபித்துக்கொண்டான்.

"What nonsense I say! இப்படியா ஒரு பொண்ணோட பேசறது? எதோ பேட்டிக்கு வந்த பத்திரிகை நிருபர் மாதிரி! நீங்க யாருன்னு தெரியலையேன்னு அவ கேட்டாளாம் இவன் வாயை மூடிண்டு கம்முனு வந்துட்டானாம். எந்தப் பொண்ணுய்யா உன்னை எனக்குத் தெரியும், நாலஞ்சுதரம் காவேரிப் பாலத்துகிட்ட பார்த்திருக்கேன்னு சொல்லுவா? தெரிஞ்சாதான் அவளே வந்து பேச மாட்டாளா? உங்களைத் தெரியலைன்னா உங்களைப் பத்தித் தெரிஞ்சுக்க விரும்பறேன்னு அர்த்தம். இதுகூடப் புரிஞ்சுக்க முடியலை, நீயெல்லாம் ஒரு லிட்ரேச்சர் ஸ்டூடன்ட். (பெருமூச்சுடன் தலையில் அடித்துக்கொண்டு) ஹூம், போயி, பிரபாத் தியேட்டர்ல சினிமா பாரு, ’காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!’னு பாடிண்டு ஜெயலலிதா வருவா!"

"பாஸ்கர் உனக்கு எங்க குடும்பப் பின்னணி பத்தித் தெரியாது."

அவன் ஆதங்கம் புரிய மெல்லக் கூறியபோது சீறினான்.

"என்னய்யா பெரிய குடும்பப் பின்னணி? நீ என்ன காதலுக்காக குடும்ப சாம்ராஜ்யத்தைத் துறந்துட்டு ஓடப் போறியா, இல்லை பின்னால படைகள் துரத்த பிருத்விராஜ் மாதிரி ராணி சம்யுக்தாவைக் கடத்திண்டு போகப் போறியா? உனக்கு வரப்போறவளை நீ தேர்ந்தெடுக்கணுமா உங்க அப்பாம்மா தேர்ந்தெடுப்பாளா சொல்லு? அப்படியென்ன நீ எவளோ ஒருத்தியைக் கூட்டிண்டு குடும்பத்துக்குத் தலைமுழுகிடவா போறே? அந்த மாதிரி செய்யறவன் ஒரு கோழை, மடையன். அப்படிச் செய்யறது அநாகரிகம். நாமெல்லாம் படிச்சவங்க. குடும்பத்தில நம்ம கடமை, கமிட்மென்ட் பத்தித் தெரிஞ்சவங்க. நம்முடைய ’எய்ம்’ என்ன, நமக்கும் நம்ம குடும்பத்துக்கும் பொருத்தமானவளா ஒருத்தியைத் தேர்ந்தெடுக்கணும். நமக்கும் உகந்த வாழ்க்கைத் துணையா இருக்கணும், அதே நேரத்தில குடும்பத்தையும் அனுசரிச்சிண்டு போகணும். இதைக் கடைசி நேரத்தில கால்ல கஞ்சியைக் கொட்டிண்டு உங்கப்பா செய்யறதுக்குப் பதிலா இப்பருந்தே திட்டமிட்டு நீ செய்யப்போறே, அவ்வளவுதானே?"

"பாஸ்கர் கொஞ்சம் மெதுவா. இது பொது இடம். ரொம்பநாள் கழிச்சு இன்னைக்குத்தான் சூரியன் கடைசிவரைக்கும் நதியில் மூழ்கறது பாத்தியா? இப்ப இங்கேர்ந்து வெள்ளைவேளேர்னு ஒரு பூமராங் எறிஞ்சேன்னு வெச்சுக்க, அது சூரியனைத் தொட்டுட்டு என் கைக்குத் திரும்ப வரும்போது செக்கச்செவேர்னு ஆயிடும் இல்ல?"

"ஸில்லி. அப்புறம் உன்னால அதைக் கையில் பிடிக்கமுடியாது."

"ஸில்லி இல்லை. பொயடிக் லைசன்ஸ். ரைட். இன்னைக்கு எங்க அவளைக் காணலை?"

"அதான் லீவு விட்டாச்சே. வீட்ல உக்கார்ந்து படிச்சிண்டிருப்பா. அல்லது கோவிலுக்கு வந்திருப்பா, உன்னைத் தேடிண்டு அவள் அப்பாவோட!"

"வரட்டுமே, எனக்கென்ன கொறைச்சல்? போய்ப் பார்க்கலாம் வரையா?"

"கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்", என்றான் காட்டமாக. உடனே சாந்தமடைந்து, "வேண்டாம். We may be disappointed." என்றான்.

"எப்ப எனக்கு அஜந்தால டின்னர்?"

"குடுத்திட்டாப் போறது. நானும் ஒரு தடவை வெரிஃபை பண்ணிக்கறேன். நீ வேணா பாரு, உன்னைவிட நான் இந்த விஷயத்தில ப்ராக்டிகலா, பெட்டரா, நேச்சரலா ட்ரை பண்ணி அவளை வழிக்குக் கொண்டுவரேன். என்ன பெட்?" என்றான் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு.

"உன்னாம் முடியும் பாஸ்கர்."

*** *** ***
(தொடரும்)


Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக