புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Kavithas
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10 
1 Post - 1%
bala_t
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10 
1 Post - 1%
prajai
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10 
284 Posts - 42%
heezulia
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10 
6 Posts - 1%
prajai
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10 
4 Posts - 1%
manikavi
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Mar 26, 2013 11:09 am

First topic message reminder :

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே

இந்த திரியின் மூலம் உங்களோடு சத்தியங்களை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நமது நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த ஆய்வை மேற்கொள்கிறேன்.

தேவன் தமது சித்தத்தை பரிசுத்த வேதாகமத்தில் வெளிப்படுத்தியிருக்கின்றார். அதனை ஒவ்வொருவரும் அறிந்து, அதன்படி நடந்து, நாம் தேவனுக்குப் பிரியமாக வாழ வேண்டும் என்பது தேவனுடைய விருப்பம்.

தேவன் பரிசுத்த வேதாகமத்தில் வைத்துள்ள சத்தியங்களை அவர் நமக்கு தந்தபடியே உணரவும், அறியவும், கடைபிடிக்கவும் வேண்டும்.

வேத வசனங்களை தவறாக புரிந்து கொள்ளப்படுவதும், தவறாக வியாக்கியானம் பண்ணுவதும் நம்மை தவறான வழிபாட்டிற்கு கொண்டுபோய் விட்டுவிடக் கூடிய பேராபத்து உள்ளது.

மெய்யான சத்தியத்தை அறியாவிடின்... தேவ நோக்கமும் தேவனுடைய மீட்பின் திட்டமும் நம்மில் நிறைவேறாமற் போகக் கூடும்.

இந்தத்திரியில் எழுதப்படும் சத்தியங்களை கவனமாக வாசிப்பது மட்டுமல்ல... அதை பரிசுத்த வேத வார்த்தைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து சரியான சத்தியத்தை கண்டறியுங்கள். கிறஸ்தவர்களாகிய அனைத்துப் பிரிவினருக்கும் அடிப்படை தெளிவுபெற - பரிசுத்த வேதாகமம் மட்டுமே சரியான, முடிவான பதில் தர முடியும் என்பதனை நாமனைவரும் அறிவோம்.

எனவே, நீடிய பொறுமையோடும், சாந்தத்துடனும் இதை வாசித்து பயனடைய அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சந்தேகங்கள், கேள்விகள் இருக்குமானால் கட்டுரை முடிவில் கேளுங்கள். பதில் தருகிறேன். இடையிடையே கேட்கும்போது... கட்டுரையின் நோக்கம், கருத்துக்கள் திசை மாறிவிட வாய்ப்புள்ளது.

நம் உறவுகள் தொடர்ந்து நல்லாதரவு வழங்கும்படி அன்புடன் கேட்கிறேன்.

எப்படியாகிலும் மெய்யான சத்தியத்தை அறிந்து, தேவனுக்குப் பிரியமான பிள்ளைகளாக வாழ்ந்து, தேவன் வைத்திருக்கும் சகல ஆசீர்வாதங்களையும், நித்திய மீட்பையும் சுதந்தரித்து கிறிஸ்தவர்கள் அனைவரும் அதை ஆண்டனுபவிக்க வேண்டும் என்ற வாஞ்சையோடு இப்பகுதியை தொடருகிறேன்... ... ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்







கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Mar 28, 2013 12:48 pm

இப்பவும் ஒன்னும் புரியலே

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 28, 2013 1:08 pm

ராஜு சரவணன் wrote:இப்பவும் ஒன்னும் புரியலே
அவர் கிருஸ்துவர்களுக்கு எப்படி அவர்களின் கடவுள் வழிபாடு இருக்க வேண்டுமென சொல்லிக்கொண்டு உள்ளார். நீங்க எதுக்கு வீணா மண்டைய உடைசுக்குறிங்க. சிரி

அப்படி , உங்களுக்கு மற்ற மதங்களின் சிறப்புகள் வழிபாட்டு முறைகள் தெரிந்துகொள்வதில் ஆர்வமெனில் கட்டுரையை தொடர்ந்து படித்து உங்கள் சந்தேகங்களை கேளுங்கள். புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Mar 28, 2013 1:33 pm

அதை பற்றி தெரிந்து கொள்ளதான் கேட்டேன். மீண்டும் ஒரு தடவை நீங்கள் கேட்டதால் விளக்கம் அளியுங்கள் என்று கேட்டுகொள்கிறேன்.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Mar 28, 2013 1:45 pm

ராஜு சரவணன் wrote:அதை பற்றி தெரிந்து கொள்ளதான் கேட்டேன். மீண்டும் ஒரு தடவை நீங்கள் கேட்டதால் விளக்கம் அளியுங்கள் என்று கேட்டுகொள்கிறேன்.

http://www.eegarai.net/t85121-page-4 - இந்த லிங்கில் சென்று பொறுமையோடு கருத்தாய் வாசித்தறியுங்கள் நண்பரே.

தங்கள் வருகைக்கும் ஆர்வத்திற்கும் நன்றி நன்றி அன்பு மலர்



கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Mar 28, 2013 5:57 pm

உண்மையான ஞானஸ்நானம் / திருமுழுக்கு

கத்தோலிக்க சபை குழந்தைகளுக்கு அவர்கள் மேல் தண்ணீர் தெளித்து திருமுழுக்கு கொடுக்கின்றது. மேலும், குழந்தைகள் ஞானஸ்நானத்தில் புதிதாய் பிறக்க வேண்டியது அவசியம் என்றும், இது பாரம்பரியம் என்றும் கூறுகிறது. (Catechism of the Catholic Church Page No: 244, 1250, 246, 1252).

சரித்திரம் கூறுவது என்ன?:

குழந்தை ஞானஸ்நானம் என்பது 2 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே ஏற்பட்டது என்று சபைச் சரித்திரம் கூறுகிறது. அக்காலத்தில் வாழ்ந்ததான தெர்த்துல்லியன் (Tertullian) என்கிற இறையியல் வல்லுனர் கிறிஸ்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் பழக்கத்தை எதிர்த்தார். குழந்தை ஞானஸ்நானம் தவறு என்று சுட்டிக்காட்டினார்.

திருவிவிலியம் கூறுவது என்ன?:

திருமுழுக்கு (Baptism) என்ற வார்த்தை Baptizo - என்ற கிரேக்கப் பதத்தில் இருந்து வந்தது. Baptizo என்றால் (to dip or to immerse) 'மூழ்குதல்' என்று பொருள்படும். திருமுழுக்கு என்பது 'தண்ணீர் தெளிப்பு' என்ற அர்த்தம் அல்ல. மாறாக, தண்ணீரில் மூழ்குதலே.

அ) யார் ஞானஸ்நானம் எடுக்க தகுதி பெற்றவர்கள்? :

1. பாவத்திலிருந்து மனம் மாறினவர்களே ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று பேதுரு சொன்னார். (திருத்தூதர் பணிகள்: 2:38).

2. இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு திருமுழுக்கு பெற வேண்டும் என்று இயேசு சொன்னார். (மாற்கு: 16:16)

3. பாவங்களை தேவனிடத்தில் அறிக்கையிட்டு திருமுழுக்கு பெற வேண்டும். (மாற்கு: 1:5, திருத்தூதர் பணிகள்: 2:37,38)

4. இயேசு கிறிஸ்துவின் சீடராகி திருமுழுக்கு பெறவேண்டும். (மத்தேயு: 28:19)

மேற் சொன்ன நான்கையும்... அதாவது, 1. மனந்திரும்புதல் 2. இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளுதல் 3. பாவங்களை அறிக்கை செய்தல் 4. இயேசுவின் சீடராகுதல் ஆகியவை சிறு குழந்தைகள் செய்ய முடியாதவைகள். ஆகவே, குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுக்க முடியாது.

பாவத்திலிருந்து மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களுக்கே திருமுழுக்கு கொடுக்க வேண்டும்.

ஆ) எப்படி திருமுழுக்கு கொடுக்க வேண்டும்?:


1. தண்ணீர் நிறைய இருக்கும் இடத்தில் (யோவான்: 3:23)

2. தண்ணீருக்குள் இறங்கிப் பெற வேண்டும் (திருத்தூதர் பணிகள்: 8:38, 29, மத்தேயு: 3:16)

மேற்கண்ட திருவார்த்தைகளின் மூலம் பரிசுத்த வேதாகமத்தில் ஆதித் திருச்சபை விசுவாசிகள் தண்ணீரில் இறங்கி, முழுகி திருமுழுக்கு பெற்றார்கள் என்பதை நாம் திட்டமாக அறியலாம்.

இ) ஏன் திருமுழுக்கு எடுக்க வேண்டும்?:

1. இயேசுவே மாதிரியாக இருக்கின்றார். இயேசு திருமுழுக்கு பெற்றார். திருமுழுக்கு பெறச் சொன்னார். (மத்தேயு: 3:13-16, லூக்கா: 3:21-23).

2. கிறிஸ்து இயேசுவின் கட்டளை (மத்தேயு: 28:18-20)

3. கடவுள் தந்திருக்கும் திட்டம் (லூக்கா: 7:29,30)

4. கடவுளுக்கு நாம் தரும் வாக்குறுதி (1பேதுரு: 3:2)

ஈ) எப்பொழுது எடுக்க வேண்டும்?:

இரட்சிக்கப்பட்டவுடன் (மனந்திரும்பி, பாவ மன்னிப்பை கிறிஸ்து இயேசுவிடம் பெற்ற அனுபவம்) தாமதம் செய்யாமல் திருமுழுக்கு பெற வேண்டும். (திருத்தூதர் பணிகள்: 22:16)

உ) எந்த நாமத்தில் எடுக்க வேண்டும்?:

திருமுழுக்கு கொடுக்க கட்டளையிட்ட இயேசு கிறிஸ்துவின் வார்த்தையின்படி, தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் (மத்தேயு: 28:19).

ஊ) திருமுழுக்கு எடுக்கா விட்டால் என்ன நடக்கும்?:

தண்டனை தீர்ப்புப் பெறுவர் - (மாற்கு: 16:16)

எ) திருமுழுக்கு பெற்ற பின் என்ன செய்ய வேண்டும்?:

பரிசுத்த திருச்சபையில் இறை வேண்டலிலும் (ஜெபம்), நட்புறவிலும் (ஐக்கியம்), அப்பம் பிடுவதிலும் (பரிசுத்தப் பந்தி), திருத்தூதுவர் போதனையிலும் (வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் போதனைகளிலும்) நிலைத்திருக்க வேண்டும். (திருத்தூதர் பணிகள்: 2:41-42).

சிந்தனைக்குரிய கேள்விகள்:

1. இயேசு கிறிஸ்து குழந்தையாய் இருந்தபோது திருமுழுக்கு பெற்றாரா?

பதில்: லூக்கா: 3:21,23 "மக்களெல்லாரும் திருமுழுக்கு பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது. தூயஆவி புறா வடிவில் தோன்றி அவர் மீது இறங்கியது. அப்பொழுது, 'என் அன்பார்ந்த மகன் நீயே. உன் பொருட்டு நான் புரிப்படைகிறேன்' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது."


2. யோர்தான் நதியில் இயேசு கிறிஸ்து தண்ணீரில் மூழ்கி திருமுழுக்கு பெற்றாரா?

பதில்: மத்தேயு: 3:16 "இயேசு திருமுழுக்கு பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார்"

3. பிலிப்பு அமைச்சருக்குத் திருமுழுக்கு கொடுக்கும்போது இருவரும் தண்ணீருக்குள் இறங்கினார்களா?

பதில்: திருத்தூதர் பணிகள்: 8:38,39 "உடனே அமைச்சர் தேரை நிறுத்தக் கூறினார். பிலிப்பு அமைச்சர், ஆகிய இருவரும் தண்ணீருக்குள் இறங்கினர். பிலிப்பு அவருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார். அவர்கள் தண்ணீரில் இருந்து வெளியேறியவுடனேயே ஆண்டவரின் ஆவியானவர் பிலிப்புவை எடுத்துச் சென்று விட்டார். அமைச்சர் அதன் பின் அவரைக் காணவில்லை. அவர் மகிழ்ச்சியோடு தன் வழியே சென்றார்."

4. சிறு குழந்தைகள் முதலாவது திருமுழுக்கைப் பற்றி அறியாமலும் இயேசு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை கொள்ளாமலும், மனந்திரும்பாமலும் இருக்கும்போது அவர்கள் திருமுழுக்கு பெற முடியுமா?

பதில்: மாற்கு: 16:16, திருத்தூதர் பணிகள்: 8:36,37, 2:37,38.

"நம்பிக்கைக் கொண்டு திருமுழுக்கு பெறுவோர் மீட்பு பெறுவர். நம்பிக்கையற்றோரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்" (மாற்கு: 16:16)

"அவர்கள் போய்க் கொண்டிருந்தபோது வழியில் தண்ணீர் இருந்த ஓர் இடத்துக்கு வந்தார்கள். அப்பொழுது அவர் இதோ, தண்ணீர் உள்ளதே, நான் திருமுழுக்கு பெற ஏதாவது தடை உண்டா? என்று கேட்டார். அதற்குப் பிலிப்பு நீர் முழு உள்ளத்தோடு நம்பினால் தடையில்லை என்றார்." (திருத்தூதர் பணிகள்: 8:36,37)

"அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய் பேதுருவையும் மற்றத் திருத்தூதர்களையும் பார்த்து, சகோதரரே நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார்கள். அதற்கு பேதுரு, அவர்களிடம், நீங்கள் மனம் மாறுங்கள், உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள்" (திருத்தூதர் பணிகள்: 2:37,38)

தொடரும்...



கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Mar 28, 2013 9:37 pm

@ .சார்லஸ் mc ..இயேசுவின் திருமுழுக்கு பற்றி கூறினீர்கள் ...இயேசுவின் விருத்த சேதனத்தை பற்றி தங்களின் கருத்து



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Mar 29, 2013 1:22 am

SajeevJino wrote:@ .சார்லஸ் mc ..இயேசுவின் திருமுழுக்கு பற்றி கூறினீர்கள் ...இயேசுவின் விருத்த சேதனத்தை பற்றி தங்களின் கருத்து

நல்ல கேள்விதான். ஆனால், அதற்கான திரி இதுவல்ல. இதைக் குறித்து கர்த்தருக்குச் சித்தமானால், வாய்ப்பும் சமயமும் கிடைத்தால் அதற்கு விளக்கமளிக்கிறேன். (எதையும் வேதவசனங் கொண்டு ஆராயாமல் மேலோட்டமாக கருத்து சொல்ல விரும்புவதில்லை நான்). இப்பொழுதே வேலைப் பளு அதிகம். மிகுந்த சிரமத்திற்கிடையில்தான் பதிவுகளை பதிய முடிகிறது. முதலில் இப்பகுதியை சீக்கிரம் முடிக்கப் பார்க்கிறேன். நன்றி அன்பு மலர்



கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Mar 29, 2013 2:10 am

உத்தரிக்கும் ஸ்தலம்
(Purgatory)

ஆத்துமாவானது மரணத்திற்குப் பின் பரலோக சந்தோஷத்துக்குள் நுழையும்படியான பரிசுத்தம் அடையும்படியாக, கடைசி நேர சுத்திகரிப்புக்காக ஆத்துமாவானது காத்திருக்கும் இடத்தை ரோம கத்தோலிக்க சபை 'உத்தரிக்கும் ஸ்தலம்' (Purgatory) என்று அழைக்கின்றது. இந்த உபதேசமானது கவுன்சில்ஸ் ஆப் லாரன்ஸ் அண்ட் டிரஸ்டிவ் சபையினால் உருவாக்கப்பட்டதாகும். (catechism of the Catholic Church Page No: 190, 954, 204, 1030, 1031).

திருச்சபை சரித்திரம் கூறுவது என்ன?

போப் சிக்ஸ்டஸ் (Pope Sixtus IV) 1476 ஆம் ஆண்டு இயற்றிய சட்டமானது "தாங்கள் பாவத்தில் மரித்த உறவினர்களுக்காக குறிப்பிட்ட பணத்தொகையை போப்பின் அதிகாரத்திலுள்ள நபரிடம் செலுத்தினால், பாவத்தின் தண்டணையிலிருந்து அவர்கள் நீங்கி பரலோகத்திற்குள் பிரவேசிப்பார்கள்" என்பதே.

16 ஆம் நூற்றாண்டில் மார்டின் லுத்தர் "இந்த உத்தரிக்கும் ஸ்தலம் அதின் பாவ நிவாரண தொகை" என்பது மிக தவறான உபதேசம் என்றும்; மனிதன், "இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தினால்தான் பாவ மன்னிப்பை பெறுவான்" என்றும், தன்னுடைய எதிர்ப்பை தெரிவிக்கும்போது கூறினார்.

திருவிவிலியம் கூறும் உண்மை என்ன?


உத்தரிக்கும் ஸ்தலம் என்ற ஒரு இடம் இருப்பதாக வேதத்தில் சொல்லப்படவில்லை. மாறாக, பரிசுத்த வேதாகமத்தில் "மனிதர் ஒரேமுறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர், இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கெனவுள்ள நியதி" என்று எபிரேயர்: 9:27 ல் எழுதப்பட்டிருக்கிறது.

இவ்வுண்மையின் படி மனிதர்களின் மரணத்திற்கு பிறகு தேவனின் நியாயத் தீர்ப்பே இருக்கின்றது. மனிதனின் மரணத்திற்கும் நியாயத் தீர்ப்பிற்கும் இடையில் மனிதன் தன் பாவத்திற்கான தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளவோ வேறு ஒரு வழியும் இடமும் இல்லை என தெளிவாகின்றது.

மேலும், திருவெளிப்பாடு: 20:12 ல் "இறந்தோருள் சிறியோர், பெரியோர் ஆகிய அனைவரும் அந்த அரியணை முன் நிற்கக் கண்டேன். அப்பொழுது நூல்கள் திறந்து வைக்கப்பட்டன. வேறொரு நூலும் திறந்து வைக்கப்பட்டது. அது வாழ்வின் நூல். 'இறந்தோரின் செயல்கள் அந்நூல்களில் எழுதப்பட்டிருந்தன. அவற்றுக்கு ஏற்ப அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது.'"

இவ்வசனத்தின் படி, மனிதன் தன் வாழ்நாட்களில் தான் செய்கின்ற நன்மை அல்லது தீமைக்குத்தக்கதாகவே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் நியாயத் தீர்ப்பு அடைவான் என்று அறிகிறோம்.

மனிதர்கள் இந்த புமியில் உயிரோடிருக்கும் நாட்களில், இயெசு கிறிஸ்து என் பாவங்களுக்காகவும் சிலுவையில் மரித்து உயிரோடெழுந்தார் என்று விசுவாசித்து, அனுதினமும் வேதம் வாசித்து, அதின்படி நடக்கும்போது மட்டுமே மனிதர்களுக்கு பாவ மன்னிப்பும், பரிசுத்தமாக்கப்படுதலும் தேவ ஈவாக உண்டாகும். எபேசியர்: 2:8 ல் "நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள்".

மேலும், ஒரு மனிதன் இப்புமியில் தான் வாழும் நாட்களில் இயேசு கிறிஸ்துவினிடத்தில் பாவமன்னிப்பைப் பெறாமல் மரித்துப் போவானேயானால் அவன் மீட்பு பெறாமல் இரண்டாம் மரணமாகிய நரகத்தில் தள்ளப்படுவான். உரோமையர்: 6:23 - ல் "பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு; மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு."

மரித்தவுடன் பாவிகள் பாதாளத்தில் வதைக்கப்படுவதையும், பரிசுத்தவான்கள் பரலோகத்திலும் உடனடியாக செல்லுகின்றனர் என்பதை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இலாசரு, செல்வர் பற்றி உவமையாக சொல்லுவதையும் நாம் காண்கிறோம். (லூக்கா: 16:19-31).

ஆகவே, இல்லாத ஒரு இடமாகிய உத்தரிக்கை ஸ்தலத்தை நம்பி ஏமாந்து போகாமல், நம்மை மீட்க வந்த இயேசுவின் மேல் நம்பிக்கையுள்ளவர்களாக புமியில் வாழ்கின்ற நாட்களிலே உலக இன்பங்களுக்காக வாழாமல், பாவ மன்னிப்பைப் பெற்று தண்ணீர் முழுக்கினால் சுத்திகரிக்கப்படடு பரிசுத்தமாக கிறிஸ்துவுக்காக வாழ்ந்து நித்திய வாழ்வை பெற்றுக் கொள்வோமாக!

சிந்தனைக்குரிய கேள்வி:

மனிதர்கள் தங்கள் மரணத்திற்குப் பிறகு பாவ மன்னிப்பும், பரிசுத்தமும் அடைய முடியுமா?

பதில்: எபிரேயர்: 9:27 ""மனிதர் ஒரேமுறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர், இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கெனவுள்ள நியதி"


தொடரும்...




கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Mar 29, 2013 5:48 am

பாவ சங்கீர்த்தனம் செய்தல்
(Confession))
எல்லாப் பாவங்களும் ஒரு பாதிரியாரிடத்தில் அறிக்கை செய்ய வேண்டும் என்று ரோம கத்தோலிக்க உபதேசம் கூறுகிறது.

"தேவனோடும் சபையோடும் சமாதானமாயிருக்க விரும்புகிற எவரும், தன்னுடைய மனசாட்சியைக் கவனமாய் ஆராய்ந்து ஞாபகத்திற்கு வருகிற அறிக்கை செய்யப்படாத மறைவான எல்லாப் பாவங்களையும் ஒரு பாதிரியாரிடத்தில் அறிக்கை செய்ய வேண்டும்". (catechism of the Catholic Church Page No:287, 1493, 280, 1456, 274, 1495).

மேலும், கத்தோலிக்க சாமியார் பாவங்களை மன்னிக்கிற வல்லமையுள்ளவர் என்று இந்த உபதேசத்தின் இரண்டாவது பகுதி சொல்லுகிறது: "சபையின் அதிகாரத்திடமிருந்து மன்னிக்கும் திறனை பெற்றிருக்கிற ஒரு குருவானவரே கிறிஸ்துவின் நாமத்தில் பாவங்களை மன்னிக் முடியும்". (catechism of the Catholic Church Page No: 286, 1495).

சபை சரித்திரம் கூறுவது என்ன?

புறஜாதிகளின் பழக்கமான மனிதர்களின் பாவங்களைக் கேட்டு மன்னித்து அவர்களுக்காக பிரார்த்தனை பண்ணுவது 5 ஆம் நூற்றாண்டில் போப் லியோ - (கி.பி.440-461) வினால் சபைக்குள் வந்தது. 16 ஆம் நூற்றாண்டில் போப் லியோ X - வினால் ரோமில் செயிண்ட் பீட்டர்ஸ் கத்தீட்ரல் கட்டுவதற்காக பணம் சேகரிப்பதற்காக இந்த 'பாவ அறிக்கை சீட்டு' என்கிற பணம் கொடுப்பதின் மூலமாக 'பாவமன்னிப்பு' பெறலாம் என்கிற பழக்கமும் சபைக்குள் வந்தது.

'பாவ சங்கீர்த்தனம்' குறித்து திருவிவிவலியம் கூறும் உண்மை என்ன?

1. பாவங்களை அறிக்கை செய்தலைக் குறித்ததான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் போதனை:

லூக்கா: 18:9-14 ல் - வாசிக்கும்போது, வரிதண்டுபவர் இறைவனிடம் வேண்டிக் கொள்வதற்கு ஆலயத்திற்கு வந்து தன் பாவங்களை ஒரு பாதிரியாரிடத்தில் வேண்டிக் கொள்ளவில்லை. மாறாக, தேவனிடத்தில் நேரடியாகவே பாவ அறிக்கை செய்து வேண்டிக் கொள்கிறான்.

லூக்கா: 15:11-32 வரையிலுள்ள வசனங்களை நாம் வாசிக்கும்போது மனந்திரும்பின இளைய மகன் நேரடியாகவே தன் தந்தையிடம் 'அப்பா கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்' என்று முதலாவது தேவனிடமு; இரண்டாவதாக சம்பந்தப்பட்ட நபரிடமும் பாவ அறிக்கை செய்வதை வேதம் தெளிவுபடுத்துகின்றது.

மேலும், உனக்கும் உன் சகோதரனுக்கும் விரோதம் உண்டானால் பாதிரியாரிடத்தில் சென்று அறிக்கை பண்ணுவதால் பாவ மன்னிப்பு பெற முடியாது. மாறாக, உன் சகோதரனிடத்திற்கு சென்று ஒப்புரவாக வேண்டும் என்று வேதம் போதிக்கின்றது.

மத்தேயு: 5:23-25 - "ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர், சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப்போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.

மத்தேயு: 18:15 - "உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராக பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக் காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்."

2. பாவமன்னிப்பு பெற்ற பேதுருவும், பாவமன்னிப்பு பெற்றுக் கொள்ளாமல் மரித்துப்போன யுதாஸ் ஸ்காரியோத்தும்:

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளில் இரண்டு சீடர்கள் தங்களுடைய பாவத்தினால் பெரிய குற்ற மனசாட்சியுடையவர்களாக இருந்தார்கள். பேதுரு இயேசு கிறிஸ்துவை மறுதலித்தார். யுதாஸ் ஸ்காரியோத்து கிறிஸ்துவை காட்டிக் கொடுத்தான். பேதுரு மனங்கசந்து அழுதார். இயேசு கிறிஸ்து அவருக்கு மன்னித்து மறுபடியுமாக ஐக்கியத்தில் நிலைநிறுத்தப்பட்டார்.

ஆனால், யுதாஸ் ஸ்காரியோத்து, பிரதான ஆசாரியரிடத்தில் போய் "பழி பாவமில்லாதவரைக் காட்டிக் கொடுத்து பாவம் செய்தேன்" (மத்தேயு: 27:4) என்றான். ஆனால், ஆசாரியர்கள் சொன்னார்கள்: "அதைப் பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள் என்றார்கள்" (மத்தேயு: 27:4). யுதாஸ் இதைக் கேட்டு நான்றுகொண்டு செத்தப்போனான். (மத்தேயு: 27:6).

பேதுரு, தேவனிடத்தில் மனங்கசந்து அழுது தன் பாவங்களுக்காக வேண்டிக் கொண்டபடியினால் மீட்கப்பட்டு மற்ற சீடர்களோடும் கிறிஸ்துவோடும் தன் உறவை நிலைநிறுத்திக் கொண்டார். ஆனால், யுதாஸ்காரியோத்து, தன் பாவத்தை ஆசாரியனிடத்தில் அறிக்கை செய்தவன் பாவ மன்னிப்பை பெற முடியாமல் நித்திய அக்கினியில் தள்ளப்பட்டான். (திருத்தூதர் பணிகள்: 1:18).


தொடரும்...




கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Mar 29, 2013 6:07 am

3. அப்போஸ்தலர்கள் பாவஅறிக்கை செய்வதைப் பற்றிக் கூறியதான உபதேசம்:

அப்போஸ்தலனாகிய யோவான் கூறும்போது, "ஆனால், பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வோம். உண்மையும் நம்மிடம் இராது. மாறாக, நம் பாவங்களை நாம் ஒப்புக் கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில், அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர்.(1யோவான்:1:8,9).

இங்கே யோவான் தன்னை மற்ற சாதாரண விசுவாசியைப் போலவே நாம் பாவங்களை மறுக்காமல் கர்த்தரிடத்தில் நாம் நம் பாவங்களை அறிக்கை செய்யும்போது கிறிஸ்து நம் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பார் என்று கூறுகிறார்.

மேலும், பேதுரு கூறும்போது, 'அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவ மன்னிப்புப் பெறுவர் என்று இறைவாக்கினர் அனைவரும் அவரைக் குறித்துச் சான்று பகர்கின்றனர்". (திருத்தூதர் பணிகள்: 10:43; 2:38).

மாய வித்தைக்காரனான சீமோன் திருத்தூதுவர்களிடம் இருந்த வல்லமையையும்? அதிகாரத்தையும் தானும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அதற்காக பணத்தைக் கொடுக்க முன் வந்தான். "அப்போது பேதுரு அவனிடம், கடவுளது கொடையைப் பணம் கொடுத்து வாங்க எண்ணியதால் நீயும் உன் பணத்தோடு நாசமாய்ப் போ" (திருத்தூதர் பணிகள்: 8:20) என்றார்.

பேதுரு இந்த காரியத்தில்மாய வித்தைக்காரனோடு ஒத்துப் போகவில்லை. மேலும், "இப்போது மனம்மாறி ஆண்டவரிடம் மன்றாடு, ஒருவேளை உன் உள்ளத்தில் எழுந்த இந்த எண்ணம் மன்னிக்கப்படலாம்" என்று கூறுகிறார். (திருத்தூதர் பணிகள்:8:22).

பேதுரு ஒரு பாவியின் பாவங்களைக் கேட்டு மன்னிக்கும் அதிகாரம் இருந்திருந்தால் ஏன் அவருடைய அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை? உண்மை என்னவென்றால், அப்படிப்பட்ட அதிகாரத்தை தேவன் எந்த அப்போஸ்தலருக்கும் (சீடர்களுக்கும்) கொடுக்கவில்லை. தேவன் ஒருவரே பாவங்களை மன்னிக்கிற அதிகாரம் உடையவராக இருக்கின்றார்.

ஆகவே, எந்த ஒரு ஆசாரியரக்கோ, பாதிரியாருக்கோ பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை தேவன் கொடுக்கவில்லை. அவர்களும் தேவனிடத்திலிருந்த மற்றவர்களின் பாவங்களைக் கேட்டு மன்னிக்கும் அதிகாரத்தைப் பெறவில்லை என்று வேதமும், கிறிஸ்துவும் மற்ற அப்போஸ்தலர்களும் கூறுவதை நாம் தெளிவாக காண்கிறோம்.


தொடரும்...




கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக