புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_c10விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_m10விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_c10விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_m10விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_c10விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_m10விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_c10 
3 Posts - 5%
prajai
விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_c10விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_m10விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_c10விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_m10விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_c10விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_m10விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Rutu
விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_c10விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_m10விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_c10 
1 Post - 2%
சிவா
விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_c10விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_m10விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_c10 
1 Post - 2%
viyasan
விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_c10விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_m10விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_c10விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_m10விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_c10விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_m10விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_c10விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_m10விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_c10 
2 Posts - 13%
Rutu
விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_c10விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_m10விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014)


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 11, 2013 12:10 am

First topic message reminder :

நந்தன வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான விஜய வருடம் பிறக்கிறது. 13.4.2013 சனிக் கிழமை நள்ளிரவு மணி 1.24க்கு சுக்ல பட்சத்து சதுர்த்தி திதி, கார்த்திகை நட்சத்திரம் நான்காம் பாதம், ரிஷப ராசி மகர லக்னம் 4-ம் பாதத்தில், நவாம்சத்தில் மேஷ லக்னம் மீன ராசியில், ஆயுஷ்மான் நாம யோகத்தில் வனிசை நாம கரணத்தில், அமிர்தயோகம், நேத்திரமற்ற, ஜீவனம் நிறைந்த நன்னாளில் பஞ்சபட்சியில் வல்லூறு இரவு நான்காம் சாமத்தில் துயில் கொள்ளும் நேரத்தில் சூரிய தசையில், செவ்வாய் புக்தியில், சனி அந்தரத்தில், புதன் ஓரையில் விஜய வருடம் சிறப்பாக பிறக்கிறது.

இ‌ந்த ‌விஜய வருட ‌பிற‌ப்‌பி‌ன் இரா‌சி பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. ‌வி‌த்யாதர‌ன் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.


‌விஜய வருட த‌மி‌ழ்ப் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன்: மேஷம்

சுயமரியாதையையும், சுதந்திரத்தையும் விட்டுக் கொடுக்காத நீங்கள், மொழிப் பற்று, இனப் பற்று அதிகமுள்ளவர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதியின் சாரத்திலே இந்தாண்டு பிறப்பதால் உங்கள் அந்தஸ்து ஒருபடி உயரும். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னைகள் தீரும். இந்த விஜய வருடம் உங்களுக்கு 2-வது இராசியில் பிறப்பதால் பக்குவமாகப் பேசி பல விஷயங்களையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் ஓரளவு கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள்.

27.5.2013 வரை உங்களின் பிரபல யோகாதிபதியான குருபகவான் 2-வது வீட்டிலேயே தொடர்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். பழைய கடனில் ஒரு பகுதியை தந்து முடிப்பீர்கள். ஆனால் 28.5.2013 முதல் வருடம் முடியும் வரை 3-ம் வீட்டிற்கு குரு செல்வதால் அதுமுதல் காரியத் தடைகள் அதிகரிக்கும். முதல் முயற்சியிலேயே எந்த ஒரு வேலையையும் முடிக்க முடியாமல் இரண்டாவது அல்லது மூன்றாவது முயற்சியில் போராடி முடிக்க வேண்டி வரும். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். பழைய நண்பர்களில் ஒரு சிலர் விலகுவார்கள். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். தவிர்க்க முடியாத செலவினங்களும் வந்துப் போகும். என்றாலும் தந்தைவழியில் உதவிகள் உண்டு. தந்தைவழி சொத்துகள் வந்து சேரும்.

வருடம் பிறக்கும் போது சுக்ரனும், செவ்வாயும் வலுவடைந்திருப்பதால் வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக இருக்கும். இந்தாண்டிலே உங்கள் கனவு இல்லம் அமையும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். சகோதரிக்கு திருமணம் கூடி வரும். உல்லாசப் பயணங்கள் சென்று வருவீர்கள். உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியன் 18.10.2013 முதல் 16.11.2013 வரை பலவீனமடைவதால் இக்காலக்கட்டத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் ஆரோக்யம் பாதிக்கும். அவர்களின் பழக்க, வழக்கங்களை கண்காணியுங்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையில் அதிகம் மூக்கை நுழைக்க வேண்டாம்.

இந்தாண்டு முழுக்க கேது பகவான் உங்கள் ராசிக்குள்ளேயே நீடிப்பதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். யோகா, தியானப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. முன்கோபத்தை குறையுங்கள். மின்சாரம், நெருப்பு இவற்றை கவனமாக கையாளுங்கள். அடிக்கடி தலைச்சுற்றல் வரும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். அவ்வப்போது வெளிக் காற்று வாங்குவது நல்லது. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். காலாவதியான மாத்திரைகளை தவிர்ப்பது நல்லது. ஆன்மிக விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும்.

இந்தாண்டு முழுக்க சனியும், ராகுவும் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிலேயே தொடர்வதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். சந்தேகத்தால் இருவரும் பிரிய வேண்டி வரும். திடீர் நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். வெளி நபர்களை விட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். மனைவிக்கு மாதவிடாய் கோளாறு, தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும். இருவரும் ஈகோ பிரச்னையை தவிர்ப்பது நல்லது.

ஆனி மாதத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலருக்கு புது வேலை அமையும். 12.8.2013 முதல் 7.9.2013 வரை சுக்ரன் மறைவதால் அக்காலக்கட்டத்தில் சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். ஆபரணங்கள், முக்கிய ஆவணங்கள் களவு போகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. 19.8.2013 முதல் 10.10.2013 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் நீசமாகி சனியின் பார்வையை பெறுவதால் இக்காலக்கட்டத்தில் உடல் நிலை பாதிக்கும்.

சகோதரங்களுடன் கருத்து மோதல் வரும். பண விஷயத்தில் ஏமாற்றங்கள் ஏற்படும். வி.ஐ.பிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். 30.11.2013 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் இக்காலக்கட்டத்தில் வீடு, மனை வாங்குவது, விற்பதில் கவனமாக செயல்பட வேண்டும். சொத்து வாங்குவதற்கு முன்பாக தாய்பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வைத்துவிட்டு உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். படித்த துறையில் வேலை கிடைக்காவிட்டாலும் கிடைக்கும் வேலையில் சேருவது நல்லது. அயல்நாடு செல்வீர்கள்.

மாணவ-மாணவிகளே! மறதி, தூக்கம் அதிகரிக்கும். அலட்சியம் கூடும். கடினமாக உழைக்காவிட்டால் தோல்விகளை சந்திக்க நேரிடும். எனவே தொடக்கத்திலிருந்தே படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வகுப்பறையில் அரட்டை பேச்சை தவிர்த்துவிடுங்கள்.

வியாபாரிகளே! போட்டிகள் கடுமையாக காணப்படும். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். சந்தை நிலவரத்தை அறிந்து புது முதலீடு செய்யுங்கள். அதிக வட்டிக்கு பணம் வாங்கி வியாபாரத்தை விரிவுப்படுத்த வேண்டாம். புதிய துறைகளிலும் ஈடுபட வேண்டாம். பங்குதாரர்களால் அவ்வப்போது பிரச்னைகள் வெடிக்கும். சிலர் தங்களது பங்கை கேட்டு தொந்தரவு தர வாய்ப்பிருக்கிறது. கெமிக்கல், பெட்ரோ-கெமிக்கல், உரம் மற்றும் மருந்து வகைகளால் ஆதாயமடைவீர்கள். ஆனி, ஆவணி மாதங்களில் புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். தை, மாசி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அனுபவமுள்ள நல்ல வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். சஃப்வேர் துறையில் புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம்.

உத்‌தியோகஸ்தர்களே! வேலைச்சுமை அதிகரிக்கும். விரும்பத்தகாத இடமாற்றமும் வரக்கூடும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். தை மாதத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். கண்டகச் சனி தொடர்வதால் உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்த்தாலும் நிர்வாகத்திடமிருந்து பாராட்டோ, அங்கீகாரமோ கிடைக்கவில்லையேயென ஆதங்கப்படுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். என்றாலும் கடின உழைப்பாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பாலும் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். அரசு ஊழியர்களுக்கு ஆதாயம் உண்டு. கம்பியூட்டர் உள்ளிட்ட தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு மனஉளைச்சல் அதிகரிக்கும்.

கலைத்துறையினரே! சுக்ரன் சாதகமாக இருப்பதால் யதார்த்தமான படைப்புகளால் புகழடைவீர்கள். மூத்த கலைஞர்களை விட அறிமுக கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும்.

இந்த விஜய ஆண்டு எதிர்நீச்சல் போட வைப்பதாகவும், பணத்தின் அருமையை அறிய வைப்பதாகவும், நண்பர்கள், உறவினர்களின் உண்மைத் தன்மையை அளக்க உதவுவதாகவும் றுதியில் விடாமுயற்சியால் ஓரளவு சாதிக்க வைக்கும்.

பரிகாரம்:

ஆஞ்சநேயரை ஏகாதசி திதி நாளில் சென்று வணங்குங்கள். சாலையோரம் மற்றும் கழிவு நீர் பகுதிகளில் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவுங்கள். தடைகள் நீங்கி எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.



விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 11, 2013 12:23 am

விஜய வருட த‌மி‌ழ் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன்: தனுசு

நல்லதோ, அல்லதோ முடிவெடுத்து விட்டால் முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முடித்துக் காட்டுவதில் வல்வர்களான நீங்கள், தராதரம் அறிந்து பழகுவீர்கள். உங்கள் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் 5-ல் ஆட்சிப் பெற்றிருக்கும் நேரத்தில் இந்த விஜய வருடம் பிறப்பதால் உங்களை தலைநிமிர வைக்கும். செயலில் வேகம் கூடும். கொஞ்சம் வளைந்துக் கொடுத்தால் வானம் போல் நிமிரலாம் என்பதை உணர்வீர்கள். வருமானம் உயரும். பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள்.

தொலை நோக்குச் சிந்தனை அதிகரிக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். அழகு, இளமைக் கூடும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை முடித்து புது வீட்டில் குடிப்புகுவீர்கள். அனுபவ பூர்வமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள்-. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். கடன் பிரச்சனைகள் ஓயும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ஹிந்தி, கன்னடம் பேசுபவர்கள் உதவுவார்கள்.

சுய தொழில் தொடங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் வளரும். சொந்த-பந்தங்கள் மெச்சும்படி நடந்து கொள்வீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலைக் கிடைக்கும். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். உங்களை அவமானப் படுத்தியவரெல்லாம் வலிய வந்து மன்னிப்பு கேட்பார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் சூரியன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்துப் போகும். படிப்பின் பொருட்டு அவர்களை கசக்கிப் பிழிய வேண்டாம். விட்டுப் பிடிப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னையை அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உடன்பிறந்தவர்களால் வீண் செலவும், மனக்கசப்பும் வந்துப் போகும். அவ்வப்போது தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

உங்கள் ராசிநாதனான குருபகவான் 27.5.2013 வரை 6-ம் வீட்டிலேயே மறைந்திருப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். மனைவியை தவறாகப் புரிந்துக் கொள்ளாதீர்கள். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மனம் விட்டு பேசி தீர்க்கப்பாருங்கள். யாரையும் யாரிடத்திலும் பரிந்துரை செய்ய வேண்டாம். வெளியூருக்குச் செல்லும் போது வீட்டை சரியாக பூட்டிச் செல்லவும். சமையல் வாயு கசியக் கூடும். கவனம் தேவை. தங்க நகைகளை இரவல் தர வேண்டாம், இரவல் வாங்கவும் வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட்டு பணம் வாங்கித் தர வேண்டாம். உங்கள் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்துவார்கள். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம்.

28.5.2013 முதல் வருடம் முடியும் வரை உங்களின் ராசிநாதனும், சுகாதிபதியுமான குருபகவான் 7-ம் வீட்டில் நுழைவதால் போட்டி, பொறாமைகள் நீங்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். குடும்பத்தில் இனி மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கணவன்-மனைவிக்குள் காரண காரியம் இல்லாமல் சண்டையிட்டுக் கொண்டீர்களே! இனி அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். சதா சர்வ காலமும் மருந்து மாத்திரை என்றிருந்த உங்கள் மனைவியின் ஆரோக்‌கியம் இனி சீராகும். நோய்கள் குணமடையும். குழந்தை பாக்‌கியம் கிடைக்கும்.

அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக் கட்டும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியில் ஒரு கிரவ்ண்டு வீட்டு மனையாவது வாங்குவீர்கள். பெரிய நோய் இருப்பதை போன்ற பிரம்மையெல்லாம் விலகும். தாயாரின் உடல் நலம் சீராகும். அவருடன் இருந்த மோதல்களும் விலகும். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.



விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 11, 2013 12:23 am

பழைய உறவினர், நண்பர்கள் தங்கள் தவறை உணர்ந்து வலிய வந்து உறவாடுவார்கள். 19.8.2013 முதல் 10.10.2013 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் பலவீனமடைவதால் இக்காலக்கட்டத்தில் பிள்ளைகளால் அலைச்சலும், பண விஷயத்தில் ஏமாற்றங்களும் வந்து நீங்கும். சகோதரங்களுடன் மனத்தாங்கல் வரும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. என்றாலும் 30.11.2013 முதல் வருடம் முடியும் வரை செவ்வாய் 10-ம் வீட்டிலேயே நிற்பதால் பூமி, மனையால் லாபம் உண்டு.

இந்தாண்டு முழுக்க கேது உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டிலேயே நீடிப்பதால் சில நேரங்களில் மன இறுக்கம் வந்து நீங்கும். கனவுத் தொல்லையும் அதிகரிக்கும். உறவினர்களில் ஒருசிலர் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். அன்புத் தொல்லையும் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் முக்கியமான குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை. மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்வி, உத்யோகத்திற்காக சிலரின் சிபாரிசை நாடுவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் அதிக எடையுள்ள சுமைகளை தூக்க வேண்டாம். படிகளில் ஏறும் போது கவனம் தேவை. வதந்திகளை நம்பி உறவுகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். பூர்வீக சொத்துப் பாகப் பிரிவினையில் மனக்கசப்புகள் வந்து நீங்கும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். ஆரோக்யம் சீராகும். தள்ளிப் போன கல்யாணம் நல்ல விதத்தில் முடியும். அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும். சிலருக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும்.

மாணவ-மாணவிகளே! உங்களுடைய பொது அறிவுத் திறன் வளரும். அரசுத் தேர்வில் மதிப்பெண் கூடும்-. கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வியை தொடருவீர்கள். வகுப்பறையில் ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள்.

வியாபாரிகளே! சந்தை நிலவரத்தை அறிந்துக் கொள்வீர்கள். சில நுணுக்கங்களையும் தெரிந்துக் கொள்வீர்கள். வியாபாரம் தழைக்கும். வைகாசி, ஆனி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில்யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். விசுவாசமாக நடந்து கொள்வார்கள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். பங்குதாரரால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வீர்கள். ஹார்ட்வேர், ஹோட்டல், ஸ்பெக்குலேஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபமடைவீர்கள். வணிகர் சங்கத்தில் புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

உத்யோகஸ்தர்களே!
சோர்வு, களைப்பு நீங்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். வேலையில் ஆர்வம் பிறக்கும். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். அலுவலகத்தை நவீனமயமாக்குவீர்கள். உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.

கலைத்துறையினரே! வருமானம் உயர வழி பிறக்கும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். அரசாங்கத்தால் சில சலுகைகள் கிடைக்கும்.

இந்தப் புத்தாண்டு ஏமாற்றம், எதிர்மறை எண்ணங்களிலிருந்து உங்களை விடுவிப்பதுடன் நீண்ட கால கனவுகளை நனவாக்கி அடுத்தடுத்து சாதிக்கத் தூண்டுவதாக அமையும்.

பரிகாரம்:

சூரியனார் கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீசூரிய பகவானை ஏதேனும் ஒரு அமாவாசை திதி அல்லது ஞாயிற்று கிழமையன்று நெய் விளக்கேற்றி வணங்குங்கள். நோயுற்றிருக்கும் ஏதேனும் ஒரு நோயுளிக்கு மருந்து மாத்திரை வாங்கிக் கொடுங்கள்.



விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 11, 2013 12:24 am

விஜய வருட த‌மி‌ழ் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன்: மகரம்

பூவைப்போல் புன் சிரிப்பும் மெல்லிய மனசும் கொண்ட நீங்கள் சில நேரங்களில் புயலாக சீறிப்பாய்ந்து புரட்சி செய்வீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் சுகஸ்தானத்தில் வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்த விஜய ஆண்டு பிறப்பதால் வருமானம் உயரும். வசதிக் கூடும். புதிய சிந்தனைகள் உதயமாகும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமான பேச்சாலும், சமயோஜித புத்தியாலும் பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள்.

குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். கடன் பிரச்னையில் ஒரு பகுதி தீரும். வீட்டிற்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யுமளவிற்கு பணவரவு உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிந்து இனி செயல்படத் தொடங்குவீர்கள். கட்டிட வேலைகளை தொடங்குவீர்கள். வங்கி கடன் உதவி கிடைக்கும். சிலர் பழைய வீட்டை இடித்து கட்டுவீர்கள்.

27.5.2013 வரை உங்களின் சேவகாதிபதியும்-விரையாதிபதியுமான குருபகவான் 5-ம் வீட்டில் நிற்பதால் செல்லும் இடமெல்லாம் செல்வாக்குக் கூடும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள். மகனின் அலட்சியப் போக்கு மாறும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். தூரத்து சொந்த-பந்தங்கள் தேடி வந்துப் பேசுவார்கள். குலதெய்வக் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். வாகன வசதிப் பெருகும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள்.

ஆனால் 28.5.2013 முதல் வருடம் முடியும் வரை குரு 6-ம் வீட்டில் மறைவதால் அதுமுதல் வரவுக்கு மிஞ்சிய செலவுகளும், அலைச்சலும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும். மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் அதிகரிக்கும். சில காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். குடும்பத்தில் சாதாரண பிரச்னையெல்லாம் சண்டையில் போய் முடிய வாய்ப்பிருக்கிறது. கணவன்-மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் உங்களை தவறான பாதைக்கு தூண்டுவார்கள்.

மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்களின் தனித்தன்மையை இழந்துவிட வேண்டாம். பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் தகுந்த ஆதாரமில்லாமல் யாருக்கும் பணம் தரவேண்டாம். பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும் தவிர்க்கப்பாருங்கள். எதிர்பாராத திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தாமதமின்றி செலுத்தப்பாருங்கள். சிலர் உங்கள் மீது வழக்கு தொடுப்பார்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள், பணத்தை கவனக் குறைவால் இழக்க நேரிடும். வி.ஐ.பிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

உங்கள் ராசிநாதன் சனிபகவான் இந்த விஜய வருடம் முழுக்க 10-ம் வீட்டிலேயே உச்சம் பெற்று தொடர்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடல் ஆரோக்யம் சீராகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். உங்களை புகழ்வதைப் போல் இகழ்ந்தவர்களை எல்லாம் ஓரங்கட்டுவீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். என்றாலும் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றம் வந்துப் போகும். மேலதிகாரி உங்கள் திறமையை குறைத்து மதிப்பிடுவார். மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். மற்றவர்களின் வற்புறுத்தலுக்காக சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்பட வேண்டாம்.

இந்தாண்டு முழுக்க ராகுபகவான் 10-ம் வீட்டிலும், கேது ராசிக்கு 5-ம் வீட்டிலும் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம், முடிவுகளெடுப்பதில் தடுமாற்றம் வந்துச் செல்லும். எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களின் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். பூர்வீக சொத்தைப் பெறுவதில் பிரச்சனைகள் வந்து நீங்கும்



விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 11, 2013 12:25 am

உறவினர்களில் சிலர் உங்களை காரியம் ஆகும் வரை பயன்படுத்திக் கொண்டு விலகுகிறார்கள் என்று ஆதங்கப்படுவீர்கள். சில நாட்கள் தூக்கமில்லாமல் போகும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திடாதீர்கள். முன்பின் தெரியாதவர்கள் யாரேனும் உங்களுக்கு உதவுவதாக முன்வந்தால் உடனே நம்பி ஏமாற வேண்டாம். நயமாக பேசுகிறார்கள் என்று குடும்ப அந்தரங்க விஷயங்கள், சொந்த விஷயங்களையெல்லாம் பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். ஆனால் புகழ்பெற்ற புண்ணிய‌த் தலங்கள் சென்று வருவீர்கள். வழிபாடுகளில் ஆர்வம் பிறக்கும்.

செவ்வாய் பகவான் 30.11.2013 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 9-ம் வீட்டிலேயே தொடர்வதால் இக்காலக்கட்டத்தில் பணப்பற்றாக்குறை ஏற்படும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வரக்கூடும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். அவருடன் கருத்து மோதல்களும் வந்துச் செல்லும். உடன்பிறந்தவர்கள் அவ்வப்போது கோபப்பட்டாலும் பாசம் குறையாது. பிதுர்வழி சொத்தைப் போராடி பெறுவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தை காப்பாற்ற வேண்டி வரும்.

கன்னிப் பெண்களே! பெற்றோரின் சம்மதத்துடன் காதலித்தவரையே மணம் முடிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வேற்றுமதத்ததை சேர்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள்.

மாணவ-மாணவிகளே! வகுப்பறையில் வீண் அரட்டை அடிக்காமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் போராடி சேர்வீர்கள். சிலர் நன்கொடை கொடுத்து சேரும் சூழ்நிலை வரும். சிலர் வெளியூர் அல்லது வெளி மாநிலத்தில் தங்கி படிக்க வேண்டி வரும்.

வியாபாரிகளே! லாபம் குறைவாக வருவதற்கான காரணத்தை கண்டறிவீர்கள். நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். சித்திரை மற்றும் வைகாசி மாதத்தின் முற்பகுதி வரை பற்று வரவு உயரும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைக்கு வரும். வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். ஆனி மாதத்தில் சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வராது என்றிருந்த பாக்கித் தொகை வந்து சேரும். புது வேலையாட்கள் அமைவார்கள். புது முதலீடுகள் செய்வது குறித்து நம்பிக்கைக்குரியவர்களை கலந்தாலோசிப்பீர்கள். ஏற்றமதி-இறக்குமதி, மருந்து, பிளாஸ்டிக், ஊதுபத்தி, உணவு, லாட்ஜிங் வகைகளால் ஆதாயம் பெருகும். பங்குதாரர்கள் தொந்தரவு கொடுத்தாலும் நிதானத்தை தவறவிடாதீர்கள்.

உத்யோகஸ்தர்களே! நீங்கள் பொறுப்பாக நடந்து கொண்டாலும், மேலதிகாரி குறை கூறத்தான் செய்வார். கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்க்க வேண்டி வரும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன் படித்துப் பாருங்கள். ஆனி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் புது வேலை வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். உங்களை ஓரங்கட்ட நினைத்த உயரதிகாரியின் தந்திரத்தை முறியடிப்பீர்கள். இழந்தை சலுகைகளை போராடி பெறுவீர்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்தும் வாய்ப்புகள் வரும்.

கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். ஆனால் வீண் வதந்திகளுக்கு பஞ்சமிருக்காது. அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.

இந்த விஜய வருடம் அவ்வப்போது உங்களை அலைக்கழித்தாலும், ஓரளவு வசதியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:

ஸ்ரீரங்கம் ரங்க நாதப் பெருமாளை ஏதேனும் ஒரு புதன் கிழமை அல்லது சனிக்கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். ஏழைக் கன்னிப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.



விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 11, 2013 12:28 am

விஜய வருட த‌மி‌ழ் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன்: கும்பம்

நியாயமாக தனக்கு கிடைக்க வேண்டியதைக் கூட சில நேரங்களில் விட்டுக் கொடுக்கும் நீங்கள் மற்றவர்களின் மீது அதிக பாசம் வைப்பீர்கள். செவ்வாய் 3-ம் வீட்டில் வலுவாக ஆட்சிப் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் புதிய முயற்சிகள் யாவும் பலிதமாகும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். இரத்த சொந்தங்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.

உங்களின் சப்தாமதிபதி சூரியன் வலுவாக 3-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் போது இந்த விஜய வருடம் பிறப்பதால் கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதைக் கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். வேலைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலைக் கிடைக்கும். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.

27.5.2013 வரை உங்களின் தன-லாபாதிபதியான குருபகவான் ராசிக்கு 4-ம் வீட்டில் தொடர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். தாயாருக்கு மூட்டுவலி, இரத்த அழுத்தம் வந்துப் போகும். தாய்வழி உறவினர்கள் விஷயத்தில் அத்துமீறி நுழைய வேண்டாம். தாய்வழி சொத்துப் பிரச்னையில் கோர்டு, கேஸ் என்று போகாமல் சுமூகமாக பேசி தீர்க்கப்பாருங்கள். இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள்.

28.5.2013 முதல் வருடம் முடியும் வரை 5-ம் வீட்டிற்கு குரு செல்வதால் அதுமுதல் எதிர்பார்ப்புகள் யாவும் தடையின்றி முடியும். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். திருமணம், சீமந்தம், காது குத்து, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்.

மகளுக்கு தள்ளிப் போய் கொண்டிருந்த திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்யோகம் எதிர்பார்த்த நிறுவனத்தில் அமையும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். சொந்தம் பந்தங்கள் மதிப்பார்கள். எப்போதும் மருந்து மாத்திரை என்றிருந்த தாய் குணமடைவார்.

உங்கள் ராசிநாதன் சனிபகவான் இந்தாண்டு முழுக்க உச்சம் பெற்று 9-ம் வீட்டிலேயே இருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக் கடன் பெற்று பைசல் செய்வீர்கள். வேற்றுமதத்தவர்கள், மொழியினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். ஆனால் இந்தாண்டு முழுக்க ராகுவும் 9-ம் வீட்டிலேயே நீடிப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கடந்த கால இழப்புகளை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள்.

நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். தந்தையாருக்கு நெஞ்சு வலி, சர்க்கரை நோய், கை, கால் வலி வந்துப் போகும். அவருடன் மனத்தாங்கல் வரும். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பாருங்கள். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழந்து விடாதீர்கள். குற்ற மற்றவர்கள் யாரும் இல்லை யாராக இருந்தாலும் ஒவ்வொருவரிடமும் சிறுசிறு குற்றம், குறைகள் இருக்கத்தான் செய்யும். குற்றம் பார்கின், சுற்றம் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து செயல்படுவது நல்லது.



விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 11, 2013 12:29 am

இந்தாண்டு முழுக்க கேது பகவான் 3-ம் வீட்டிலேயே தொடர்வதால் மனோ பலம் அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். வீண் விவாதங்கள், சண்டையிலிருந்து ஒதுங்குவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கைமாற்றகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சித்தர்கள், ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக் கொண்டு உங்களிடம் கருத்து மோதல்களுடன் இருந்து வந்த பழைய நண்பர் இப்போது வலிய வந்துப் பேசுவார். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள்.

செவ்வாய் 30.11.2013 முதல் வருடம் முடியும் வரை 8-ம் வீட்டிலேயே தொடர்வதால் இக்காலக்கட்டத்தில் நெருப்பு, மின்சார சாதனங்களை கவனமாக கையாளுங்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். சொத்து வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். உடன்பிறந்தவர்களுடன் பிணக்குகள் வரும். உத்யோகத்தில் விரும்பத்தகாத இடமாற்றம் உண்டு. வேலைச்சுமை அதிகரிக்கும். யாருக்கும் உறுதிமொழி தந்து விட்டு பிறகு அதை நிறைவேற்ற போராட வேண்டாம்.

கன்னிப் பெண்களே! சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். நல்ல வரன் அமையும். விடுபட்ட பாடத்தை எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். வேலைக் கிடைக்கும். மாதவிடாய்க் கோளாறு, வயிற்று வலி, தூக்கமின்மை நீங்கும். பெற்றோரின் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள்.

மாணவ-மாணவிகளே! நினைவாற்றல் பெருகும். போட்டி, பொறாமைகளுடன் பழகிய சக மாணவர்கள் திருந்துவார்கள். உங்களுடைய தனித்திறமைகளை அதிகரித்துக் கொள்வீர்கள். விளையாட்டு, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பரிசு, பாராட்டு கிடைக்கும்.

வியாபாரிகளே! தொழிலில் ஆர்வம் பிறக்கும். புது முதலீடுகள் செய்து போட்டியாளர்களை திக்குமுக்காட வைப்பீர்கள். வேலையாட்களை மாற்றுவீர்கள். சித்திரை, வைகாசி, ஆடி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூடுதல் லாபம் கிடைக்கும். அனுபவமிக்க பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். ஆவணி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் புதிய பங்குதாரர்கள் அமைவார்கள். பழைய சரக்குகளை அசல் விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். வாகன உதிரிபாகங்கள், ஷேர், ஸ்பெக்குலேஷன் வகைகளால் ஆதாயமுண்டு.

உத்யோகஸ்தர்களே! வழக்கில் வெற்றி பெற்று பெரிய பதவியில் அமர்வீர்கள். சந்தித்த அவமானங்கள் நீங்கும். உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சவாலான காரியங்களையும் சாராணமாக செய்து முடிப்பீர்கள். சித்திரை, வைகாசி, ஆடி மாதங்களில் சில சிறப்பு பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். கார்த்திகை, மார்கழி மாதங்களில் சம்பளம் உயரும். புது பொறுப்புகளும், சலுகைகளும் கிடைக்கும். உங்கள் அலுவலகம் நவீனமாகும்.

கலைத்துறையினரே! உங்களின் படைப்பிற்கு மதிப்பு, மரியாதைக் கூடும். மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

தொட்ட காரியங்கள் துலங்குவதுடன், சாதித்துக் காட்டும் வருடமாக இந்த விஜய வருடம் உங்களுக்கு அமையும்.

பரிகாரம்:

தஞ்சையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு பிரகதீஸ்வரரையும், நந்திதேவரையும் மாத சிவராத்திரி நாளில் அல்லது பிரதோஷ நாளில் சென்று வில்வ தளத்தால் அர்ச்சித்து வணங்குங்கள். ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவுங்கள்.



விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 11, 2013 12:30 am

விஜய வருட த‌மி‌ழ் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன்: மீனம்

மென்மையும், விட்டுக் கொடுக்கும் மனமும், எல்லோருக்கும் உதவும் குணமும் கொண்ட நீங்கள், மற்றவர்களை அனுசரித்துப் போகக்கூடியவர்கள். உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் சுக்ரன் அமர்ந்திருக்கும் போது இந்த விஜய வருடம் பிறப்பதால் இடைவிடாது போராடி வெற்றி பெறுவீர்கள். சாதுர்யமாகவும், சமயோஜிதமாக யோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். விஐ.பிகள் உதவுவார்கள்.

டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், செல் போன் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். புது வாகனம் அமையும். தள்ளிப் போன திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். வீடு கட்ட சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவலாகி வரும். சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நடக்கும். பிள்ளைகள் நம்பிக்கைத் தருவார்கள். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும்.

உங்களின் சுக-சப்தமாதிபதியான புதன் உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். பூர்வீக சொத்தில் மராமத்து வேலைகள் செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்மாமன், அத்தை வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

உங்கள் ராசிநாதன் குருபகவான் 27.5.2013 வரை 3-ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு சிலரை கடிந்துக் கொள்வீர்கள். தோலில் நமைச்சல், நரம்புச் சுளுக்கு, யூரினரி இன்பெக்ஷன் வந்துச் செல்லும். 28.5.2013 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டும் பணி தாமதமாகும்.

தாயாரிடம் கோபப்படாதீர்கள். அவருக்கு இரத்த அழுத்தம், செரிமானக் கோளாறு, கை, கால் வலி வந்துப் போகும். பழைய பிரச்னைகள், சிக்கல்கள் மீண்டும் வந்துவிடுமோ என்றெல்லாம் பயப்படுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். தாய்வழி சொத்தை போராடி பெற வேண்டி வரும். மற்றவர்கள் சில ஆலோசனைகள் வழங்கினாலும் அதை அப்படியே ஏற்காமல் யோசித்து சில விஷயங்களில் ஈடுபடுவது நல்லது. சொத்து வாங்கும் போது பத்திரத்தில் ஏதேனும் வில்லங்கம் உள்ளதா என்று பலமுறை விசாரித்து வாங்குவது நல்லது. நேரம் தவறி சாப்பிடுவதை தவிர்க்கப் பாருங்கள். அசிடிட்டி, வாயுக் கோளாறு வந்துப் போகும்.

இந்தாண்டு முழுக்க கேது உங்கள் ராசிக்கு 2-ல் தொடர்வதாலும், 8-ல் ராகு நீடிப்பதாலும் அடுத்தவர்களின் அந்தரங்க விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிலும் நாட்டமின்மை, பிடிப்பற்ற போக்கு வந்துச் செல்லும். சில நேரங்களில் கறாராகப் பேசி சிலரின் மனதை புண்படுத்துவீர்கள். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பல் மற்றும் காது வலி வந்துப் போகும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும்.

குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. வாகனத்திற்கான லைசன்ஸ், இன்சூரன்சை குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்க தவறாதீர்கள். அபராதம் கட்ட வேண்டி வரும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். மற்றவர்களால் நாம் ஒதுக்கப்படுகிறோமோ, நாம் மதிக்கப்படவில்லையோ என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே கேள்விக் கேட்டு குழம்புவீர்கள். பழைய கசப்பான சம்பவங்கள் அவ்வப்போது நினைவுக்கு வரும்.

இந்தாண்டு முழுக்க சனியும் 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச்சனியாக தொடர்வதால் ஒருவித படபடப்பு, தூக்கமின்மை, மறைமுக எதிர்ப்புகள் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வழக்கில் எதிர்தரப்பால் வாய்தா வாங்கி தீர்ப்பு தள்ளிப் போகும். மனைவிவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். நெடுநாட்களாக நீங்கள் நம்பிக் கொண்டிருந்தவர்களெல்லாம் உங்களுக்கு துரோகம் செய்ய வாய்ப்பிருக்கிறது. சில உண்மைகளை சில இடங்களில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது.



விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 11, 2013 12:31 am

திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உங்களைப் பற்றி தவறாக எப்போதோ எங்கேயோ யாரோ சொன்னதெல்லாம் இப்போது நினைவிற்கு வந்து புலம்புவீர்கள். சாப்பாட்டில் உப்பை குறையுங்கள். இரத்த அழுத்தம் அதிகமாகும். வெளி உணவுகள், லாகிரி வஸ்துகளை தவிர்ப்பது நல்லது. இயற்கை உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். பணம், நகை களவு போக வாய்ப்பிருக்கிறது. எனவே குடும்பத்துடன் வெளியூர் செல்ல நேரிட்டால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விட்டு செல்வது நல்லது. கூடாப்பழக்க முள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள்.

கன்னிப்பெண்களே! காதலை தள்ளி வையுங்கள். சிலரின் ஆசை வார்த்தை நம்பி ஏமாற வேண்டாம். பெற்றோரின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தாதீர்கள். தடைபட்ட கல்வியை போராடி முடிப்பீர்கள். திருமணம் கொஞ்சம் தாமதமாகி முடியும்.

மாணவ-மாணவிகளே!
படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. டி.வி. பார்த்துக் கொண்டே படிப்பது, பாட்டு கேட்டுக் கொண்டே எழுதுவது, படுத்துக் கொண்டே படிப்பதெல்லாம் இனி வேண்டாம். பொறுப்பாக படியுங்கள். உங்களின் திறமையை வெளிக்கொண்டுவர முயற்சி செய்யுங்கள். பள்ளி மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

வியாபாரிகளே! இடைத்தரகர்களை நம்பி ஏமாறாதீர்கள். ஏற்ற-இறக்கங்கள் இருக்கும். போட்டிகளை முறியடிக்க கடினமாக உழைக்க வேண்டி வரும். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் லாபம் கூடும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். சில சமயங்களில் கோபப்படுத்துவார்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். பங்குதாரர்களுடன் சச்சரவு வரக்கூடும். சிலர் தன் பங்கை கேட்டு வழக்குத் தொடுப்பார்கள். திடீரென்று அறிமுகமாகுபவர்களையெல்லாம் தொழிலில் பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டாம். புது ஏஜென்சியை யோசித்து எடுங்கள். அவ்வப்போது சந்தை நிலவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள். கடன் வாங்கி கடையை நவீனமாக்குவீர்கள். ஆவணி, மார்கழி, தை மாதங்களில் புது ஒப்பந்தம் வரும். பற்று வரவு உயரும்.

உத்யோகஸ்தர்களே! ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். அலுவலக ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மேலதிகாரி தவறான வழிகளை கையாண்டாலும், நீங்கள் நேர்பாதையில் செல்வது நல்லது. சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இழந்த உரிமையைப் பெறுவீர்கள். வைகாசி, ஆவணி, மார்கழி, தை மாதங்களில் சம்பளம் கூடும். புது பொறுப்புகள் வரும். புது வேலையும் அமையும்.

தைரியத்தாலும், விருப்பு, வெறுப்பற்ற நடுநிலை முடிவுகளாலும் தர்மசங்கடமான நிலைகளை சமாளித்து முன்னேறும் வருடமிது.

பரிகாரம்:

திருச்சி மலைக்கோட்டையில் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீஉச்சிப் பிள்ளையாரையும், ஸ்ரீதாயுமானவர் சுவாமிகளையும் சதுர்த்தி திதி அன்று சென்று வணங்குங்கள். முடிந்தால் இரத்த தானம் செய்யுங்கள்.

நன்றி: வெப்துனியா.காம்



விஜய வருட புத்தாண்டு பலன்கள் (14.4.2013 முதல் 13.4.2014) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 11, 2013 11:27 am

பகிர்வுக்கு நன்றி தல சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 16, 2013 8:25 pm

நன்றி சிவா புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக