புதிய பதிவுகள்
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 10:09

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 7:33

» காதல் பஞ்சம் !
by jairam Today at 0:54

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:28

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:09

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 20:26

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 20:22

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 20:14

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:45

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:32

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:14

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 19:06

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:50

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:55

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:38

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:23

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 16:58

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32

» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருட்டுப் பயலே! Poll_c10திருட்டுப் பயலே! Poll_m10திருட்டுப் பயலே! Poll_c10 
30 Posts - 54%
heezulia
திருட்டுப் பயலே! Poll_c10திருட்டுப் பயலே! Poll_m10திருட்டுப் பயலே! Poll_c10 
21 Posts - 38%
ஜாஹீதாபானு
திருட்டுப் பயலே! Poll_c10திருட்டுப் பயலே! Poll_m10திருட்டுப் பயலே! Poll_c10 
1 Post - 2%
jairam
திருட்டுப் பயலே! Poll_c10திருட்டுப் பயலே! Poll_m10திருட்டுப் பயலே! Poll_c10 
1 Post - 2%
சிவா
திருட்டுப் பயலே! Poll_c10திருட்டுப் பயலே! Poll_m10திருட்டுப் பயலே! Poll_c10 
1 Post - 2%
Manimegala
திருட்டுப் பயலே! Poll_c10திருட்டுப் பயலே! Poll_m10திருட்டுப் பயலே! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
திருட்டுப் பயலே! Poll_c10திருட்டுப் பயலே! Poll_m10திருட்டுப் பயலே! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருட்டுப் பயலே! Poll_c10திருட்டுப் பயலே! Poll_m10திருட்டுப் பயலே! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
திருட்டுப் பயலே! Poll_c10திருட்டுப் பயலே! Poll_m10திருட்டுப் பயலே! Poll_c10 
113 Posts - 37%
mohamed nizamudeen
திருட்டுப் பயலே! Poll_c10திருட்டுப் பயலே! Poll_m10திருட்டுப் பயலே! Poll_c10 
12 Posts - 4%
prajai
திருட்டுப் பயலே! Poll_c10திருட்டுப் பயலே! Poll_m10திருட்டுப் பயலே! Poll_c10 
10 Posts - 3%
Jenila
திருட்டுப் பயலே! Poll_c10திருட்டுப் பயலே! Poll_m10திருட்டுப் பயலே! Poll_c10 
4 Posts - 1%
Rutu
திருட்டுப் பயலே! Poll_c10திருட்டுப் பயலே! Poll_m10திருட்டுப் பயலே! Poll_c10 
3 Posts - 1%
jairam
திருட்டுப் பயலே! Poll_c10திருட்டுப் பயலே! Poll_m10திருட்டுப் பயலே! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
திருட்டுப் பயலே! Poll_c10திருட்டுப் பயலே! Poll_m10திருட்டுப் பயலே! Poll_c10 
3 Posts - 1%
Barushree
திருட்டுப் பயலே! Poll_c10திருட்டுப் பயலே! Poll_m10திருட்டுப் பயலே! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திருட்டுப் பயலே! Poll_c10திருட்டுப் பயலே! Poll_m10திருட்டுப் பயலே! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருட்டுப் பயலே!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 15 Apr 2013 - 16:39

http://img.dinamalar.com/data/uploads/E_1365670234.jpeg

எருக்கூர் என்னும் ஊரில் நீலகண்டன் என்பவன் தன் மனைவியோடு வாழ்ந்து வந்தான். அந்த ஊரில் திருடர்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.

அவர்களிடம் விலை உயர்ந்த பொருட்களைப் பறி கொடுத்தவர்கள் அரசரிடம் அழுது புலம்பினர். அந்தத் திருடர்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு, நூறு பொற்காசுகள் பரிசு என்று அறிவித்தார் அரசர்.

காவல் இருந்த வீரர்கள் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தனர். அவர்களால் திருடர்களைப் பிடிக்க முடியவில்லை.

ஒருநாள் இரவு, நீலகண்டனும், அவர் மனைவியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். ஜன்னலைத் திறப்பது போன்ற ஓசை கேட்டு நீலகண்டனின் மனைவி விழித்துக் கொண்டாள்.

""எழுந்திருங்கள்! எழுந்திருங்கள்! நம் வீட்டிற்குள் திருடர்கள் வந்து விட்டனர். எழுந்திருங்கள்,'' என்று அவனை உலுக்கி எழுப்பினாள்.

எழுந்த அவன் பாதுகாப்பிற்காகத் தடியைத் தேடினான்.

அப்போது திருடன் ஒருவன் ஜன்னல் வழியாக உள்ளே வந்தான். அவன் கையில் பளபளவென்று கத்தி மின்னியது.

அவர்கள் இருவரையும் பார்த்த அவன், ""என்னை எதிர்க்க முயற்சி செய்யாதீர்கள். வீட்டில் உள்ள நகைகளையும், பணத்தையும் தந்து விடுங்கள். உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன். ஏதேனும் மீறி நடந்தால், இந்தக் கத்தியால் குத்திக் கொன்று விடுவேன்,'' என்று மிரட்டினான்.

துணிவை வரவழைத்துக் கொண்ட நீலகண்டன், ""நீ சொன்னது போலவே நடந்து கொள்கிறோம். நம் நகரத்தையே நடுங்க வைக்கும் திருடர் கூட்டத்தில் நீயும் ஒருவனா? ஏன் தனியாக வந்திருக்கிறாய்?'' என்று கேட்டான்.

""நான் அந்தத் திருடர் கூட்டத்தைச் சேர்ந்தவன் அல்ல... சில்லறைத் திருட்டுகள் செய்பவன். அதனால்தான் இப்படிப்பட்ட வீடாகப் பார்த்துத் திருடுகிறேன். வீண் பேச்சுப் பேச வேண்டாம். உடனே நகைளை எடுத்துத் தா,'' என்று மிரட்டினான் அவன்.

""கொண்டு வருகிறேன்,'' என்ற நீலகண்டன் அடுத்த அறைக்குள் சென்றான். நகைகளை எடுப்பதற்காக அலமாரியைத் திறந்தான்.

அப்போது அந்த வீட்டின் முன் பக்கக் கதவை யாரோ இடிப்பது போன்ற ஓசை கேட்டது.

இதைக் கேட்ட திருடன் அஞ்சி நடுங்கினான்.

""ஐயோ! அந்தத் திருடர்கள் கூட்டம்தான் வந்து விட்டது. அவர்கள் என்னைப் பார்த்தால் உயிருடன் விட மாட்டார்கள். என்ன செய்வேன்? இங்கே வந்து மாட்டிக் கொண்டேனே...'' என்று புலம்பினான்.

இதைக் கேட்ட நீலகண்டன் நல்ல வாய்ப்பு கிடைத்தது என்று மகிழ்ந்தான்.

அந்தத் திருடனைப் பார்த்து, ""திருடர்களிடம் இருந்து நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். அந்தக் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள். என்ன நடந்தாலும் வெளியே வராதே,'' என்றான்.

அதன்படியே அந்தத் திருடன் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டான். தன் மனைவியை அழைத்த நீலகண்டன், "அவள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்னான்.

அவளும் தலையை ஆட்டினாள்.

""நான் பின் பக்கத் கதவு வழியாக வெளியே செல்கிறேன். உதவிக்கு ஆட்களை அழைத்து வருகிறேன். அதுவரை நான் சொன்னது போலச் சமாளி. எதற்கும் அஞ்சாதே,'' என்ற அவன் அங்கிருந்து வேகமாகச் சென்றான்.

முன் பக்கத் கதவை உடைத்துக் கொண்டு ஐந்து திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் கையில் கத்தியும், ஈட்டியும் வைத்திருந்தனர். பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தனர்.

அங்கே பெண் ஒருத்தி மட்டும் நின்றிருப்பதைப் பார்த்துத் திகைப்பு அடைந்தனர்.

""என்ன? நீ மட்டும் தனியாக இருக்கிறாய். உன் கணவன் எங்கே?'' என்று அவர்களில் ஒருவன் கத்தினான்.

அவள் அருகே வந்த இன்னொருவன், ""உன் நகைகளை எல்லாம் தந்துவிடு. இல்லையேல் உன்னைக் கொன்று விடுவேன்,'' என்று மிரட்டினான்.

""என்னக் கொன்று விடாதீர்கள். என்னால் இப்போது நகைகளை உங்களிடம் தர முடியாது,'' என்று கெஞ்சினாள் அவள்.

""ஏன் தர முடியாது?'' என்று மிரட்டினான் மற்றொருவன்.

""நான் என்ன செய்வேன்? நகைகள் எல்லாம் அலமாரியில் வைத்துப் பூட்டப்பட்டு உள்ளன. சாவி என் கணவரிடம் உள்ளது,'' என்றாள்.

""உன் கணவனிடம் சாவி உள்ளதா? அவன் எங்கே இருக்கிறான்?'' என்று கத்தினான் முதலாம் திருடன்.

நடுங்கியபடியே அவள், ""உங்களைப் பார்த்து அஞ்சிய அவர் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டார்,'' என்றாள்.

அப்போதுதான் அவர்கள் கட்டிலுக்கு அடியில் ஒருவன் ஒளிந்து இருப்பதை பார்த்தனர்.

""ஏ கோழையே! நீயும் ஒரு ஆண்மகனா? மனைவியை எங்களிடம் சிக்க வைத்துவிட்டு, நீ ஒளிந்து கொண்டாயா? எழுந்து வெளியே வா,'' என்று கோபத்துடன் கத்தினான் அவர்களில் ஒருவன்.

ஐயோ! ஆபத்தில் சிக்கிக் கொண்டேனே என்று நடுங்கிய அந்தத் திருடன். வெளியே வரத் தயக்கம் காட்டினான்.

கோபத்துடன் கட்டிலைப் புரட்டிப் போட்ட அவர்கள் அவனைத் தூக்கினர்.

""நான் அவள் கணவன் அல்ல... உங்களைப் போன்ற திருடன் நான். அவள் பொய் சொல்கிறாள். என்னிடம் எந்தச் சாவியும் இல்லை. நான் சொல்வதை நம்புங்கள்,'' என்று கதறினான்.

""எங்களைப் பார்த்துவிட்டுக் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டாய். இவள் உன் மனைவி இல்லை என்கிறாய். திருடன் என்று சொல்லி எங்களை ஏமாற்றப் பார்க்கிறாய். இப்படிப்பட்ட கோழையை நாங்கள் இதுவரை பார்த்தது கிடையாது. இவனை உயிருடன் விடக் கூடாது,'' என்று கோபத்துடன் கத்திய அவர்கள். அவனை அடிக்கத் தொடங்கினர்.

அவர்களின் உதையைத் தாங்க முடியாத அவன், ""நான் சொல்வதை நம்புங்கள். நான் இவள் கணவன் அல்ல,'' என்று கதறி அழுதான்.

அவர்களோ அவனை அடிப்பதை நிறுத்தவில்லை.

விரைந்து செயல்பட்ட நீலகண்டன் அரண்மனை வீரர்களை அழைத்துக் கொண்டு அங்கு வந்தான்.

எல்லாத் திருடர்களும் சிக்கிக் கொண்டனர். வீரர்கள் அவர்களைக் கைது செய்தனர்.

"இப்படி எதிர்பாராமல் சிக்கிக் கொண்டோமே' என்று திருடர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நீலகண்டனும், அவர் மனைவியும் சேர்ந்து செய்த சூழ்ச்சி அவர்களுக்குப் புரிந்தது.

நீலகண்டனிடம் வீரர்களின் தலைவன், ""ஐயா! உங்களின் அறிவுக்கூர்மையால் தான் இவர்கள் எங்களிடம் சிக்கினர். எத்தனை நாட்களாக இவர்களைப் பிடிக்க முயற்சி செய்தோம் தெரியுமா? உங்களைப் எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை,'' என்றான்.

உதைபட்டு முனகிக் கொண்டே தரையில் கிடந்த முதலாம் திருடனை அவன் பார்த்தான்.

""ஏன் இவனை இவர்கள் இப்படி அடித்து இருக்கின்றனர்? இவனும் இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவனா? இவனையும் கைது செய்யட்டுமா?'' என்று கேட்டான்.

""இவன் சிறிய திருடன். இவனுக்குத் தகுந்த தண்டனை கிடைத்து விட்டது. இனி இவன் திருட மாட்டான். இவனை விட்டுவிடுங்கள்,'' என்றான் நீலகண்டன்.

அடுத்த நாள் அரசவைக்கு வந்த நீலகண்டனை அரசர் பாராட்டினார். சொன்னது போலவே நூறு பொற்காசுகளை அவனுக்குப் பரிசாகத் தந்தார்.

அவனும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டான்.

சிறுவர் மலர்



திருட்டுப் பயலே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 15 Apr 2013 - 16:47

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் திருட்டுப் பயலே! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 15 Apr 2013 - 16:51

balakarthik wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஒருவேளை உங்களைத்தான் திட்டுகிறேனோ என சந்தேகித்துத்தானே இங்கு வந்து பார்த்தீர்கள்? சிரி



திருட்டுப் பயலே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 15 Apr 2013 - 16:53

அப்படி பச்சையாக சொல்லமுடியாது ஒரு யூகமாவேணுமுனா சொல்லலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் திருட்டுப் பயலே! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 15 Apr 2013 - 16:56

balakarthik wrote:அப்படி பச்சையாக சொல்லமுடியாது ஒரு யூகமாவேணுமுனா சொல்லலாம்

சிரிப்பு சிப்பு வருது



திருட்டுப் பயலே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 15 Apr 2013 - 17:10

balakarthik wrote:அப்படி பச்சையாக சொல்லமுடியாது ஒரு யூகமாவேணுமுனா சொல்லலாம்
இப்ப உடம்பு வலி எப்படி இருக்கு ??

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 15 Apr 2013 - 17:12

ராஜா wrote:
balakarthik wrote:அப்படி பச்சையாக சொல்லமுடியாது ஒரு யூகமாவேணுமுனா சொல்லலாம்
இப்ப உடம்பு வலி எப்படி இருக்கு ??
அடடே உங்களை வெளியே விட்டுட்டாங்களா



ஈகரை தமிழ் களஞ்சியம் திருட்டுப் பயலே! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 15 Apr 2013 - 17:14

balakarthik wrote:
ராஜா wrote:
balakarthik wrote:அப்படி பச்சையாக சொல்லமுடியாது ஒரு யூகமாவேணுமுனா சொல்லலாம்
இப்ப உடம்பு வலி எப்படி இருக்கு ??
அடடே உங்களை வெளியே விட்டுட்டாங்களா
சோறு போட்டு கட்டுபடியாகவில்லை என்று துரத்தி விட்டார்கள் சோகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 15 Apr 2013 - 17:16

என்னை ரெண்டு போடு போட்டு விட்டுட்டாங்க கூடவே மூஞ்சில நாலு கோடும் போட்டு விட்டுட்டாங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் திருட்டுப் பயலே! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 15 Apr 2013 - 17:16

நம்மள எப்ப வெளில விடுவாங்களோ தெரியல???




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக