புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10திருட்டுப் பயலே! - Page 2 Poll_m10திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10 
32 Posts - 56%
heezulia
திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10திருட்டுப் பயலே! - Page 2 Poll_m10திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10திருட்டுப் பயலே! - Page 2 Poll_m10திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10திருட்டுப் பயலே! - Page 2 Poll_m10திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10திருட்டுப் பயலே! - Page 2 Poll_m10திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10திருட்டுப் பயலே! - Page 2 Poll_m10திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10திருட்டுப் பயலே! - Page 2 Poll_m10திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10திருட்டுப் பயலே! - Page 2 Poll_m10திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10திருட்டுப் பயலே! - Page 2 Poll_m10திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10திருட்டுப் பயலே! - Page 2 Poll_m10திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10திருட்டுப் பயலே! - Page 2 Poll_m10திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10 
9 Posts - 1%
jairam
திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10திருட்டுப் பயலே! - Page 2 Poll_m10திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10திருட்டுப் பயலே! - Page 2 Poll_m10திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10திருட்டுப் பயலே! - Page 2 Poll_m10திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10திருட்டுப் பயலே! - Page 2 Poll_m10திருட்டுப் பயலே! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருட்டுப் பயலே!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 15, 2013 3:09 pm

First topic message reminder :

http://img.dinamalar.com/data/uploads/E_1365670234.jpeg

எருக்கூர் என்னும் ஊரில் நீலகண்டன் என்பவன் தன் மனைவியோடு வாழ்ந்து வந்தான். அந்த ஊரில் திருடர்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.

அவர்களிடம் விலை உயர்ந்த பொருட்களைப் பறி கொடுத்தவர்கள் அரசரிடம் அழுது புலம்பினர். அந்தத் திருடர்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு, நூறு பொற்காசுகள் பரிசு என்று அறிவித்தார் அரசர்.

காவல் இருந்த வீரர்கள் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தனர். அவர்களால் திருடர்களைப் பிடிக்க முடியவில்லை.

ஒருநாள் இரவு, நீலகண்டனும், அவர் மனைவியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். ஜன்னலைத் திறப்பது போன்ற ஓசை கேட்டு நீலகண்டனின் மனைவி விழித்துக் கொண்டாள்.

""எழுந்திருங்கள்! எழுந்திருங்கள்! நம் வீட்டிற்குள் திருடர்கள் வந்து விட்டனர். எழுந்திருங்கள்,'' என்று அவனை உலுக்கி எழுப்பினாள்.

எழுந்த அவன் பாதுகாப்பிற்காகத் தடியைத் தேடினான்.

அப்போது திருடன் ஒருவன் ஜன்னல் வழியாக உள்ளே வந்தான். அவன் கையில் பளபளவென்று கத்தி மின்னியது.

அவர்கள் இருவரையும் பார்த்த அவன், ""என்னை எதிர்க்க முயற்சி செய்யாதீர்கள். வீட்டில் உள்ள நகைகளையும், பணத்தையும் தந்து விடுங்கள். உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன். ஏதேனும் மீறி நடந்தால், இந்தக் கத்தியால் குத்திக் கொன்று விடுவேன்,'' என்று மிரட்டினான்.

துணிவை வரவழைத்துக் கொண்ட நீலகண்டன், ""நீ சொன்னது போலவே நடந்து கொள்கிறோம். நம் நகரத்தையே நடுங்க வைக்கும் திருடர் கூட்டத்தில் நீயும் ஒருவனா? ஏன் தனியாக வந்திருக்கிறாய்?'' என்று கேட்டான்.

""நான் அந்தத் திருடர் கூட்டத்தைச் சேர்ந்தவன் அல்ல... சில்லறைத் திருட்டுகள் செய்பவன். அதனால்தான் இப்படிப்பட்ட வீடாகப் பார்த்துத் திருடுகிறேன். வீண் பேச்சுப் பேச வேண்டாம். உடனே நகைளை எடுத்துத் தா,'' என்று மிரட்டினான் அவன்.

""கொண்டு வருகிறேன்,'' என்ற நீலகண்டன் அடுத்த அறைக்குள் சென்றான். நகைகளை எடுப்பதற்காக அலமாரியைத் திறந்தான்.

அப்போது அந்த வீட்டின் முன் பக்கக் கதவை யாரோ இடிப்பது போன்ற ஓசை கேட்டது.

இதைக் கேட்ட திருடன் அஞ்சி நடுங்கினான்.

""ஐயோ! அந்தத் திருடர்கள் கூட்டம்தான் வந்து விட்டது. அவர்கள் என்னைப் பார்த்தால் உயிருடன் விட மாட்டார்கள். என்ன செய்வேன்? இங்கே வந்து மாட்டிக் கொண்டேனே...'' என்று புலம்பினான்.

இதைக் கேட்ட நீலகண்டன் நல்ல வாய்ப்பு கிடைத்தது என்று மகிழ்ந்தான்.

அந்தத் திருடனைப் பார்த்து, ""திருடர்களிடம் இருந்து நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். அந்தக் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள். என்ன நடந்தாலும் வெளியே வராதே,'' என்றான்.

அதன்படியே அந்தத் திருடன் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டான். தன் மனைவியை அழைத்த நீலகண்டன், "அவள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்னான்.

அவளும் தலையை ஆட்டினாள்.

""நான் பின் பக்கத் கதவு வழியாக வெளியே செல்கிறேன். உதவிக்கு ஆட்களை அழைத்து வருகிறேன். அதுவரை நான் சொன்னது போலச் சமாளி. எதற்கும் அஞ்சாதே,'' என்ற அவன் அங்கிருந்து வேகமாகச் சென்றான்.

முன் பக்கத் கதவை உடைத்துக் கொண்டு ஐந்து திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் கையில் கத்தியும், ஈட்டியும் வைத்திருந்தனர். பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தனர்.

அங்கே பெண் ஒருத்தி மட்டும் நின்றிருப்பதைப் பார்த்துத் திகைப்பு அடைந்தனர்.

""என்ன? நீ மட்டும் தனியாக இருக்கிறாய். உன் கணவன் எங்கே?'' என்று அவர்களில் ஒருவன் கத்தினான்.

அவள் அருகே வந்த இன்னொருவன், ""உன் நகைகளை எல்லாம் தந்துவிடு. இல்லையேல் உன்னைக் கொன்று விடுவேன்,'' என்று மிரட்டினான்.

""என்னக் கொன்று விடாதீர்கள். என்னால் இப்போது நகைகளை உங்களிடம் தர முடியாது,'' என்று கெஞ்சினாள் அவள்.

""ஏன் தர முடியாது?'' என்று மிரட்டினான் மற்றொருவன்.

""நான் என்ன செய்வேன்? நகைகள் எல்லாம் அலமாரியில் வைத்துப் பூட்டப்பட்டு உள்ளன. சாவி என் கணவரிடம் உள்ளது,'' என்றாள்.

""உன் கணவனிடம் சாவி உள்ளதா? அவன் எங்கே இருக்கிறான்?'' என்று கத்தினான் முதலாம் திருடன்.

நடுங்கியபடியே அவள், ""உங்களைப் பார்த்து அஞ்சிய அவர் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டார்,'' என்றாள்.

அப்போதுதான் அவர்கள் கட்டிலுக்கு அடியில் ஒருவன் ஒளிந்து இருப்பதை பார்த்தனர்.

""ஏ கோழையே! நீயும் ஒரு ஆண்மகனா? மனைவியை எங்களிடம் சிக்க வைத்துவிட்டு, நீ ஒளிந்து கொண்டாயா? எழுந்து வெளியே வா,'' என்று கோபத்துடன் கத்தினான் அவர்களில் ஒருவன்.

ஐயோ! ஆபத்தில் சிக்கிக் கொண்டேனே என்று நடுங்கிய அந்தத் திருடன். வெளியே வரத் தயக்கம் காட்டினான்.

கோபத்துடன் கட்டிலைப் புரட்டிப் போட்ட அவர்கள் அவனைத் தூக்கினர்.

""நான் அவள் கணவன் அல்ல... உங்களைப் போன்ற திருடன் நான். அவள் பொய் சொல்கிறாள். என்னிடம் எந்தச் சாவியும் இல்லை. நான் சொல்வதை நம்புங்கள்,'' என்று கதறினான்.

""எங்களைப் பார்த்துவிட்டுக் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டாய். இவள் உன் மனைவி இல்லை என்கிறாய். திருடன் என்று சொல்லி எங்களை ஏமாற்றப் பார்க்கிறாய். இப்படிப்பட்ட கோழையை நாங்கள் இதுவரை பார்த்தது கிடையாது. இவனை உயிருடன் விடக் கூடாது,'' என்று கோபத்துடன் கத்திய அவர்கள். அவனை அடிக்கத் தொடங்கினர்.

அவர்களின் உதையைத் தாங்க முடியாத அவன், ""நான் சொல்வதை நம்புங்கள். நான் இவள் கணவன் அல்ல,'' என்று கதறி அழுதான்.

அவர்களோ அவனை அடிப்பதை நிறுத்தவில்லை.

விரைந்து செயல்பட்ட நீலகண்டன் அரண்மனை வீரர்களை அழைத்துக் கொண்டு அங்கு வந்தான்.

எல்லாத் திருடர்களும் சிக்கிக் கொண்டனர். வீரர்கள் அவர்களைக் கைது செய்தனர்.

"இப்படி எதிர்பாராமல் சிக்கிக் கொண்டோமே' என்று திருடர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நீலகண்டனும், அவர் மனைவியும் சேர்ந்து செய்த சூழ்ச்சி அவர்களுக்குப் புரிந்தது.

நீலகண்டனிடம் வீரர்களின் தலைவன், ""ஐயா! உங்களின் அறிவுக்கூர்மையால் தான் இவர்கள் எங்களிடம் சிக்கினர். எத்தனை நாட்களாக இவர்களைப் பிடிக்க முயற்சி செய்தோம் தெரியுமா? உங்களைப் எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை,'' என்றான்.

உதைபட்டு முனகிக் கொண்டே தரையில் கிடந்த முதலாம் திருடனை அவன் பார்த்தான்.

""ஏன் இவனை இவர்கள் இப்படி அடித்து இருக்கின்றனர்? இவனும் இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவனா? இவனையும் கைது செய்யட்டுமா?'' என்று கேட்டான்.

""இவன் சிறிய திருடன். இவனுக்குத் தகுந்த தண்டனை கிடைத்து விட்டது. இனி இவன் திருட மாட்டான். இவனை விட்டுவிடுங்கள்,'' என்றான் நீலகண்டன்.

அடுத்த நாள் அரசவைக்கு வந்த நீலகண்டனை அரசர் பாராட்டினார். சொன்னது போலவே நூறு பொற்காசுகளை அவனுக்குப் பரிசாகத் தந்தார்.

அவனும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டான்.

சிறுவர் மலர்



திருட்டுப் பயலே! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 15, 2013 3:47 pm

யினியவன் wrote:நம்மள எப்ப வெளில விடுவாங்களோ தெரியல???
நீங்க இன்டர்நெட் connection எல்லாம் வாங்கி உபயோகபடுத்துரத பார்த்தா இன்னும் ஒரு 20 வருடத்துக்கு வெளியே வரமாட்டீங்க போல ?! புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 15, 2013 3:48 pm

யினியவன் wrote:நம்மள எப்ப வெளில விடுவாங்களோ தெரியல???
நீங்கலாம் கிரேட் வால் ஆப் புழல் அண்ணாதே உங்களை எல்லாம் விட்டா அப்புறம் ஜெயிலே இருக்காதாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் திருட்டுப் பயலே! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 15, 2013 3:51 pm

ராஜா wrote:நீங்க இன்டர்நெட் connection எல்லாம் வாங்கி உபயோகபடுத்துரத பார்த்தா இன்னும் ஒரு 20 வருடத்துக்கு வெளியே வரமாட்டீங்க போல ?! புன்னகை
2g ராஜா உங்க தயவுல உள்ள போனேன் - உங்க தயவுல கனெக்ஷன் குடுத்தாங்க - இதெல்லாம் வெளில சொல்லக்கூடாதுன்னு நினைக்கிறேன் புன்னகை

உங்க பெருமைய தம்பட்டம் அடிக்கக் கூடாதுன்னு நீங்க வாங்கின சத்தியத்த மீறிட்டேன் - டேக் இட் ஈசி 2g ராஜா புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 15, 2013 3:52 pm

balakarthik wrote:
நீங்கலாம் கிரேட் வால் ஆப் புழல் அண்ணாதே உங்களை எல்லாம் விட்டா அப்புறம் ஜெயிலே இருக்காதாம்
பில்லர் ஆப் புழலா நானு?




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 15, 2013 3:59 pm

யினியவன் wrote:
balakarthik wrote:
நீங்கலாம் கிரேட் வால் ஆப் புழல் அண்ணாதே உங்களை எல்லாம் விட்டா அப்புறம் ஜெயிலே இருக்காதாம்
பில்லர் ஆப் புழலா நானு?

அதே அதே அதுவும் சாதா பில்லர் இல்லையாம் அசோக் பில்லராம்



ஈகரை தமிழ் களஞ்சியம் திருட்டுப் பயலே! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 15, 2013 4:02 pm

balakarthik wrote:அதே அதே அதுவும் சாதா பில்லர் இல்லையாம் அசோக் பில்லராம்
அசோகர் நட்ட மரத்த மருத்துவர் அய்யா காலி பண்ணிட்டாரு
அசோக் பில்லர மெட்ரோ ரயிலு காலி பண்ணிடாம இருக்கட்டும்




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 15, 2013 4:06 pm

யினியவன் wrote:
balakarthik wrote:அதே அதே அதுவும் சாதா பில்லர் இல்லையாம் அசோக் பில்லராம்
அசோகர் நட்ட மரத்த மருத்துவர் அய்யா காலி பண்ணிட்டாரு
அசோக் பில்லர மெட்ரோ ரயிலு காலி பண்ணிடாம இருக்கட்டும்

ஆமானே ஆமா ஏற்கனவே அங்கங்கே ஓட்டவடை கணக்கா ரொட்ட போலந்து வச்சிருக்காங்க சில இடத்துல ரொம்ப சுருக்கி வச்சுட்டாங்க ஜாபர்கான் பெட்டியிலேர்ந்து வடபழனி போறதுக்குள்ள நமக்கு அடுத்த பர்த்துடேவே வந்துடும்போலிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் திருட்டுப் பயலே! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 15, 2013 4:15 pm

balakarthik wrote:ஆமானே ஆமா ஏற்கனவே அங்கங்கே ஓட்டவடை கணக்கா ரொட்ட போலந்து வச்சிருக்காங்க சில இடத்துல ரொம்ப சுருக்கி வச்சுட்டாங்க ஜாபர்கான் பெட்டியிலேர்ந்து வடபழனி போறதுக்குள்ள நமக்கு அடுத்த பர்த்துடேவே வந்துடும்போலிருக்கு
பர்த்துடேன்னு நினைக்கறப்ப சந்தோஷம் - அதுவே சிலருக்கு எரிச்சலில் விபத்து ஏற்பட்டு டெத்டேயா கூட ஆயிடுது




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 15, 2013 4:27 pm

யினியவன் wrote:2g ராஜா உங்க தயவுல உள்ள போனேன் - உங்க தயவுல கனெக்ஷன் குடுத்தாங்க - இதெல்லாம் வெளில சொல்லக்கூடாதுன்னு நினைக்கிறேன் புன்னகை

உங்க பெருமைய தம்பட்டம் அடிக்கக் கூடாதுன்னு நீங்க வாங்கின சத்தியத்த மீறிட்டேன் - டேக் இட் ஈசி 2g ராஜா புன்னகை
இனி என்னத்த தனியா சொல்ல போறீங்க ?! , அதான் சொல்லமாட்டேன் சொல்லமாட்டேன்னு சொல்லிட்டு எல்லாத்தையும் சொல்லிட்டிங்களே சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 15, 2013 4:47 pm

ராஜா wrote:இனி என்னத்த தனியா சொல்ல போறீங்க ?! , அதான் சொல்லமாட்டேன் சொல்லமாட்டேன்னு சொல்லிட்டு எல்லாத்தையும் சொல்லிட்டிங்களே சிரி
அய்யய்யோ சொல்லிட்டனா?

சொல்லத்தான் நினைக்கிறேன்
வாயிருந்தும் வார்த்தை இன்றி தவிக்கிறேன்னு

கமல் பாய் மாதிரி நெனச்சேன்




Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக