புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under chatgpt on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under chatgpt on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under chatgpt on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
10 Posts - 53%
heezulia
Topics tagged under chatgpt on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under chatgpt on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under chatgpt on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
9 Posts - 47%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under chatgpt on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under chatgpt on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under chatgpt on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
52 Posts - 60%
heezulia
Topics tagged under chatgpt on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under chatgpt on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under chatgpt on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
30 Posts - 35%
T.N.Balasubramanian
Topics tagged under chatgpt on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under chatgpt on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under chatgpt on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
Topics tagged under chatgpt on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under chatgpt on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under chatgpt on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 2 matches for chatGPT

Topics tagged under chatgpt on ஈகரை தமிழ் களஞ்சியம் Artifi10

கூகுள் போன்ற பெரு நிறுவனங்கள் அனைத்தும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித்தான் பல வேலைகளைச் செய்து வருகின்றன.


அசுர வளர்ச்சி கண்டு வரும் கணினித் தொழில்நுட்பத்தில் `ஆர்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ்' (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பங்கு இப்போது பெரும் பாய்ச்சலாகி இருக்கிறது. கணினித் தொழில்நுட்பத்தின் கொடையான இந்தச் செயற்கை நுண்ணறிவு, அடுத்தடுத்த பரிணாமங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி காலத்தின் தேவை என்றாலும் கணினித் தொழில்நுட்பத்தின் உதவிகொண்டு மனிதர்கள் செய்யும் வேலையை இந்தச் செயற்கை நுண்ணறிவே செய்து விடும் நிலை ஏற்பட்டு பலரது வேலை பறிபோய் விடும் என்கிற அச்சமும் நிலவுகிறது. செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன, மனித ஆற்றலை அதனால் ஈடுசெய்ய இயலுமா, அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள் என்னென்ன...


செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?


“ஒரு ரோபோ இப்படித்தான் செயல்படும் என்று வரையறுக்கப் பட்டதை (programming) தாண்டி சுயமாக சிந்தித்தால் எப்படி யிருக்கும் என்கிற கற்பனைதான் `எந்திரன்’ திரைப்படம். ஓரளவில் இந்தச் செயற்கை நுண்ணறிவை `எந்திரன்’ படத்தின் சிட்டி ரோபோவோடு ஒப்பிடலாம். நமது தகவல்களை அடிப்படை யாக வைத்து நமக்கு எதுவெல்லாம் தேவைப்படும் என் பதை யூகித்து வழங்குவதுதான் செயற்கை நுண்ணறிவு செய்கிற வேலை.

கூகுள் போன்ற பெரு நிறுவனங்கள் அனைத்தும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித்தான் பல வேலைகளைச் செய்து வருகின்றன. எப்படி ஒரு குழந்தை பிறந்து வளர்கையில் நாம் ஒவ்வொன்றையும் பயிற்றுவிக்கிறோமோ, அதேபோல் கணிப் பொறித் தொழில் நுட்பத்திலும் உள்ளீடு (feed) செய்யப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தச் செயற்கை நுண்ணறிவு வேலை செய்கிறது. `கோடிங்' (Coding) வழியாக இதற்கு பயிற்றுவித்திருப்பார்கள்.

நீங்கள் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங்கில் வாட்ச் ஒன்று வாங்கலாம் எனத் தேடுகிறீர்கள். அதன் பிறகு ஃபேஸ்புக்குக்குச் சென்றால் வேறொரு ஷாப்பிங் வெப்சைட்டின் வாட்ச் விளம்பரம் உங்களுக்குக் காண்பிக்கப்படும். அதுவும் நீங்கள் எந்த விலையில் தேடினீர்களோ அதற்கு நிகரான விலையில் காட்டும். இதுதான் செயற்கை நுண்ணறிவின் வேலை.

நம் தேவைகள், விருப்பங்கள் பற்றி செயற்கை நுண்ணறிவுக்கு எப்படி தெரியும்?


மெயில் ஐடிகள், சமூக வலைதளங்கள், மொபைல் சேவைகள் என நம்மிடமிருந்து செயற்கை நுண்ணறிவுக்குக் கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில், நம் தேவை என்ன, நமக்கு எதன் மேல் நாட்டம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு அதற்குத் தொடர்புடையவற்றை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும்.

உதாரணமாக, கூகுள், ஃபேஸ் புக் ஆகியவற்றில் கணக்கு ஆரம் பிக்க நமது வயது, பாலினம் உள்ளிட்ட அடிப்படையான தகவல்களைக் கொடுத்திருப் போம். அந்தத் தகவலை அடிப் படையாகக் கொண்டு எந்தெந்த வயதினருக்கு எந்தெந்தப் பொருள்களின் மீது நாட்டம் இருக்கும் என்கிற யூகத்தில் அதற்கான விளம்பரங்களைக் காட்டும். ஃபேஸ்புக்கில் ‘உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடியவர்கள்’ என சிலரது கணக்குகளை முகநூல் பரிந்துரைக்கும். எப்படி? நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள் என்றால் அதே அலுவலகத்தில் வேலை செய்யும் இன்னொரு நபரை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இருவரும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருந்திருக்கிறோம் என்பதை `ஜிபிஎஸ்' (GPS - Global Positioning System) மூலமாகக் கணக்கில்கொண்டு இந்தப் பரிந்துரையை முன்வைக்கும்.

செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் வேலையைப் பறிக்குமா?


ஐடி துறையை எடுத்துக்கொண்டால் கோடிங் மற்றும் அக்கவுன்ட்ஸ் ஆகியவைதான் மிக முக்கியமான பணிகள். டேலி, மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் போன்ற மென் பொருள்கள் அக்கவுன்ட்ஸை எளிமையாகச் செய்து முடிக்கும்படியாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. இப்போது செயற்கை நுண்ணறிவின் மூலம் அக்கவுன்ட்ஸை கணிப்பொறியே தன்னிச்சையாக மேற்கொள்ள முடியும். நாம் மேற்பார்வை மட்டும் பார்த்து அப்ரூவ் செய்தாலே போதுமானது. இதனால் மனித உழைப்பு பெரிய அளவுக்குத் தேவையில்லாமல் போகும். அதேபோல, ஒரு அப்ளிகேஷனைத் தயார் செய்ய வேண்டும் என்றால், இத்தனை ஆண்டுகளில் எழுதப்பட்ட கோடிங்கை அடிப்படையாக வைத்து செயற்கை நுண்ணறிவே கோடிங்கை எழுதி விடும். மனிதர்கள் அதனை மேற்பார்வை பார்த்தால் மட்டுமே போதுமானது. ஐடி துறை போல, இப்படி வங்கி முதல் மீடியா வரை ஒவ்வொரு துறையிலும் AI-யால் மனிதன் செய்த பணிகளைச் செய்ய முடியும். அதனால்தான், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி நிறைய பேருடைய வேலையை காலி செய்யும் என்கிற அச்சுறுத்தலாக மாறி நிற்கிறது.

பெருநிறுவனங்கள் பலவும் இந்தச் செயற்கை நுண்ணறிவை 2010ம் ஆண்டுக்கு முன்பிருந்தே பயன்படுத்தத் தொடங்கி விட்டன. பெரு நிறுவனங் களிடம் மட்டுமே இருந்த இந்த செயற்கை நுண்ணறிவு வசதி இன்றைக்கு `Open AI' செயலி மூலம் பொதுமக்களுக்குப் புழக்கத்துக்கு வந்திருக்கிறது.

`சாட்ஜிபிடி' (chatGPT) என்று சொல்லப்படுகிற, செயற்கை நுண்ணறிவுக்கான தளத்தில் சென்று அதனுடன் `சேட்' செய்யலாம். நாம் என்ன கேட்கிறோமோ அந்தத் தகவல்களை துல்லியமாக அது வழங்கும். ஹிமாச்சலில் சுற்றிப்பார்க்க என்னென்ன இடங்கள் இருக் கின்றன என்று கேட்டால் வரிசையாகப் பட்டியலிடும். ஓர் இடத்தைப் பற்றியோ, உணவைப் பற்றியோ ஒரு கட்டுரை கேட்டால் அசத்தலாகத் தரும். இப்படியாக இன்றைக்கு சிறு நிறுவனங்கள் கூட செயற்கை நுண்ண றிவைப் பயன்படுத்துகிற சூழலை `chatGPT' உருவாக்கியிருக்கிறது.

ஆகவேதான் இத்தனை காலமாக இல்லாமல் சமீபமாக செயற்கை நுண்ணறிவு வேலையைப் பறித்துவிடும் என்கிற குரல்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன.

மனிதனை வெல்ல முடியுமா?


காலத்துக்கு ஏற்றாற்போல் நவீனத் தொழில் நுட்பம் வருவது இயல்புதான். அதேபோல் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகிக்கொண்டுதான் இருக்கும் என்பதால் அச்சப்படத் தேவையில்லை. மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பத்தால், மனித மூளையின் அளவுக்குச் செயலாற்ற முடியாது. செயற்கை நுண்ணறிவு என்பது இருக்கிற தகவல்களை அடிப்படையாக வைத்து நிகழ்த்தும் யூகமே தவிர, சுய சிந்தனை கிடையாது. அது தன்னிச்சையாக இயங்குகிறது என்றாலும் மனிதர்களின் மேற்பார்வையில்தான் இயக்கப்படுகிறது.

வேறு என்ன ஆபத்து?


`டீப்ஃபேக்ஸ்' (Deep Fakes) தொழில்நுட்பம்... அச்சுறுத்தும் இதன் பாதகம். இதன் மூலம் பொய்ச் செய்திகளை உருவாக்கி, மக்கள் குழுக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி, கலவரங்களை ஏற்படுத்த முடியும். நாடுகள், அரசியல் கட்சிகள், சாதிச் சங்கங்கள் என அந்தப் பிரதிநிதிகளின் பொய்யான வீடியோ, ஆடியோக்களை உருவாக்கி, மக்களைத் தூண்டி, போராட்டங்களை எரிய வைக்க முடியும். செயற்கை நுண்ணறிவைக் கொண்டு, நமக்குத் தெரிந்தவர்போல குரலை மாற்றி (voice morphing) பேசி, பணம் பறிக்க முடியும். இவ்வாறாக, சாமான்ய மக்களுக்கு உண்மை, பொய்யைப் பிரித்தறியும் சாத்தியத்தைச் செயற்கை நுண்ணறிவு வெகு தொலைவில் வைக்கும்.

தீர்வு என்ன?


செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தும் சட்ட வரையறைகள், நிறுவனங்களுக்கான பொதுவான, பகிரப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகள், உண்மை, பொய்யைப் பிரித்தறிய வைக்கும் முத்திரைகள் உள்ளிட்டவற்றை உருவாக்குவது காலத்தின் கட்டாயம். அதனால் தான், அதுவரை செயற்கை நுண்ணறிவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் ஆய்வுகளை நிறுத்திவைக்கக் கோரி உலகம் முழுவதிலும் இருந்து குரல்கள் எழுகின்றன.

நாம் என்ன செய்ய வேண்டும்?


மருத்துவத்துறை முதல் கலைத்துறை வரை செயற்கை நுண்ணறிவின் சாதகங்களால் பயன்பெறப் போகிறோம். கூடவே, இனி எந்தச் செய்தியிலும் பொய்க்கான சாத்தியம் வலுக்கிறது என்ற விழிப்புணர்வையும் நாம் பெற வேண்டும்.’’

குறிச்சொற்கள் #AI_தொழில்நுட்பம் #செயற்கை_நுண்ணறிவு #chatGPT #Artificial_intelligence


விகடன்

தகவல் தொழில்நுட்ப உலகையே சலசலக்க வைத்திருக்கும் ஒரு புதிய பூதம் சாட் ஜிபிடி. இது ஓா் இயங்குதளம். பழைய திரைப்படத்தில் ’ஜீபூம்பா’ என்று சொன்னவுடன் ‘சொல்லுங்க பிரபு, நான் உங்களது அடிமை’ என்று சொல்லி ஒரு பூதம் வந்து நிற்குமே. அந்த மாயம்!
அப்படி வந்து நிற்பதோடு இல்லாமல் நாம் தட்டு நிறைய லட்டு கேட்டாலும் கொடுக்கும். பெட்டி நிறைய பணம் கேட்டாலும் கொடுக்கும். அப்படி நமக்கே நமக்கான சேவகம்! ஆனால், இந்த சாட் ஜிபிடி என்பது மந்திர தந்திரம் இல்லை. அனைத்தும் உண்மை.

தகவல் தொழில்நுட்பத்தில் மிகப் பெரிய புயலை உருவாக்கி இருக்கிறது சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனம். இணையவாசிகளிடையே மிகப்பெரிய விவாதத்தை திரி கொளுத்திப் போட்டிருக்கும் இந்த சாட் ஜிபிடி வருங்காலத்தில் எப்படியெல்லாம் உதவியாக இருக்கும் என்பதை நினைத்துப் பாா்த்தால் மலைப்பாக இருக்கிறது.

அந்த காலத்தில் மன்னா்களுக்கு வழிகாட்ட மதியூக மந்திரிகள் இருப்பாா்கள். அதுபோல ஒவ்வொருவருக்கும் ஒரு சாட் ஜிபிடி-யே மதியூக மந்திரியாக இருந்தால் நாமெல்லாம் மன்னா்கள்தான்!

பணி ரீதியாக நமக்குத் தேவையான உதவியைச் செய்ய ஒரு பணியாளரை வைத்துக் கொள்வது இயல்பு. இதற்கு மாற்றாக நம்மைப் போன்றே ஒருவரை அல்லது நம்மைவிட ஓா் அறிவாளியை துணைக்கு வைத்துக் கொண்டால் எப்படி இருக்கும்? அது சாட் ஜிபிடி. நாம் எப்படி சிந்திப்போமோ அதுபோலவே செயல்பட்டு நமக்கே நமக்காக, நமக்கேற்றபடி கொடுப்பது இதன் அசகாய தன்மை. கதைகள், கணிதத் தீா்வுகள் முதல் கோட்பாட்டுகள், கட்டுரைகள் வரை அனைத்துக்கும் சில விநாடிகளில் பதிலளித்து விடுகிறது.

கடந்த டிசம்பா் 1-ஆம் தேதி முதல் இது பொதுவெளியில் கிடைத்து வருகிறது. பயன்பாட்டுக்கு வந்த ஒரே வாரத்தில் பல லட்சம் பயனா்களை இது கடந்துள்ளதாக தகவல். அடுத்துவரும் காலங்களில் இது கூகுளுக்கு மாற்றான ஒரு தளமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இது ஒரு முன்மாதிரி உரையாடல் அடிப்படையிலான ஏஐ - சாட் பாட் ஆகும். நாம் இது நாள் வரை பழக்கப்பட்டுப்போன கூகுளுக்கும் இதற்கும் அப்படி என்ன வித்தியாசம்?

கூகுள் தேடுபொறியைத் திறந்து நாம் எதையாவது தேடினால் நம் தேடலுக்கேற்ப அது நமக்கு நான்கு விதமான பதிவுகளைத் தோ்ந்தெடுத்து திரையில் கொடுக்கும். சரி, இதற்குப் பிறகு அந்த நான்கு விதமான பதிவுகளிலிருந்து நாம் நமக்கேற்ற பதிலை உருவாக்க வேண்டும். இதுதான் இதுவரையான நடைமுறையாக உள்ளது.

இதற்கிடையே அது காட்டும் விளம்பரங்களையும் நாம் கட்டாயமாகப் பாா்த்து கடந்தாக வேண்டும். ஆனால், இந்த புது வரவில் இப்போதைக்கு விளம்பரங்கள் இல்லை. ஆனாலும் இது புரட்சி செய்கிறது. எப்படி? இந்தியாவின் பிரதம மந்திரி யாா் என்று கேட்டால், உடனே அது நமக்கு தேவையான பதிலான நம் பாரதப் பிரதமா் நரேந்திர மோடியின் பெயரை திரையில் காட்டுகிறது. இதையே கூகுளில் தேடினால் எது திரையில் தெரியும் என்று யோசியுங்கள். நம் தேடலுக்கு இணையான நாலைந்து இணையதளங்களை முதலில் நம் கண்முன் நிறுத்தும். அதில் ஒவ்வொன்றிலும் உள்நுழைந்து படித்துப் பாா்த்து நாமாக நமக்குத் தேவையான பதிலை தோ்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

இது தேடுதலில் ஒரு புரட்சி. 100% உண்மையான பதிலுக்கு நெருக்கமானதாகவே இது இருக்கிறது என இதுவரை பாா்த்த பல லட்சம் பயனா்கள் தெரிவிக்கிறாா்கள். நம் கணினிக்குள் ஒரு ரோபோ உட்காா்ந்து கொண்டு நமக்குத் தேவையானவற்றை சரியாக எடுத்து திரைக்குள் செலுத்தினால் எப்படி இருக்கும்? அந்த நவீன தொழில்நுட்பம்.

சரி, அடுத்ததற்கு வருவோம். இந்த இயங்குதளத்தில் எதையும் தேடாமல் கேட்காமல் ’நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்று ஆங்கிலத்தில் செலுத்திப் பாா்த்தேன். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கேட்க சிறப்பாக இருக்கிறது. இதற்கு ஏதாவது முக்கிய காரணம் உள்ளதா, நான் ஏதேனும் தங்களுக்கு உதவ முடியுமா என திரையில் வாக்கியங்கள் பளிச்சிடுகின்றன. நம்மை புரிந்தவா்கள், நம் அன்புக்குரியவா்கள் நம்முடன் உரையாடுவதுபோல் இருந்தது. அதுதான் சுவாரசியம்.

‘உனக்கு விடுகதை தெரியுமா?’ எனப் பதிவிட்டால் எனக்குத் தெரியும் என்று சொல்லி உதாரணத்துக்கு ஒரு விடுகதையையும் நம்மிடம் சொல்லி அதற்குப் பதிலையும் சொல்கிறது. மேலும், நான் விடுகதை கேட்டால் பதில் அளிக்க விருப்பமா என நம் அனுமதியை கேட்டுப் பெற்று விடுகதையை நம்மிடம் விடுத்து ஆழம் பாா்க்கிறது.

இப்படிச் சிறிய வேலைகள் மட்டுமின்றி கடினமான பணிகளையும் சுலபத்தில் நமக்கு முடித்துத் தருவது இதன் தனிச் சிறப்பு. தகவல் தொழில்நுட்ப வல்லுநா்கள் உருவாக்கும் குறியீடுகளைக்கூட உடனே தருவது பெரும் வியப்பு. ஓா் ஊரைப் பற்றிய ஒரு விளக்கக் காட்சி தேவைப்பட்டாலும் புகைப்படங்களுடன் பத்து பக்க திட்டத்தை நமக்குத் தருகிறது. எந்தத் தலைப்பிலாவது நான்கு பக்க கட்டுரை வேண்டுமா? கிடைக்கிறது. சிக்கலான கணித சமன்பாட்டை தீா்க்க முடியுமா? முடித்துத் தருகிறது. ஓா் அழகான கவிதை வேண்டுமா? எழுதித் தருகிறது.

கற்பனை வளம், அறிவுத்திறன் மிக்கவா்கள் பல மணி நேரம் உழைத்து செய்யக்கூடிய செயல்களை சில மணித் துளிகளில் செய்து முடித்துவிடுவதை பாா்க்கும் போது வியப்பில் நாம் உறைந்து போகிறோம். வருங்காலத்தில் பல்வேறு மொழிகளில் இதைப் பயன்படுத்தும்போது இதன் பயன்பாடு மிகும். மொழிபெயா்ப்பு புது அவதாரம் எடுக்கும்.

இந்த தளத்தில் கேள்வி கேட்டு பதிலை வாங்க அத்தனை சுவாரசியமாக, புதுமையாக இருப்பதால், வரவேற்பு அதிகமாகி காண்போரை எல்லாம் தன்னுள் ஈா்க்கிறது. இது இப்போதைக்கு பரிசோதனை வளையத்தில் இருப்பதால் மக்கள் தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை, பின்னூட்டங்களை, வளா்ச்சிக்கான ஆலோசனைகளையும் வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளனா்.

அது மட்டுமல்லாமல், 2021-ஆம் ஆண்டுக்கு முன் உள்ள தரவுகளைக் கொண்டே இது முன்னெடுக்கப்பட்டுள்ளதால் புதிய செய்திகளை உடனே பெறுவதில் சிக்கல் உள்ளது. அதனால் 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருவா் இறந்துவிட்டிருந்தால் அவரைப் பற்றி நாம் விசாரிக்கும் போது, அவா் உயிரோடு இருக்கிறாா் என்பதாகவே நமக்கு தகவல் சொல்லும்.

அதே நேரத்தில், ’ஒரு துப்பாக்கியை எப்படி உருவாக்குவது?’, ’போதைப்பொருள் எங்கே கிடைக்கும்?’ போன்ற சட்டவிரோதமான கேள்விகளுக்கு பதில் அளிக்காத வகையில் இதை செதுக்கியுள்ளனா். அது மட்டுமா, இன்னும் இருக்கிறது மலைப்பு!

இதே நிறுவனத்தின் மற்றொரு புது வரவான டால் - ஈ என்ற ஒரு செயலியில் நாம் என்ன மாதிரியான ஓவியம் அல்லது புகைப்படம் வேண்டும் என்று கேட்கிறோமோ உடனே சில மணித்துளிகளில் நமக்கு அதே போலான புகைப்படத்தை வெவ்வேறு புகைப்படங்களில் இருந்து பிரித்து எடுத்து நாம் கேட்கும் அதே அா்த்தத்தில் கொடுக்கிறது. ஒரு ரோபோ உணவகம் ஒன்றில் இட்லி சாப்பிடுகிறது என பதிகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள், அதாவது இப்படி ஒரு நிகழ்வு இதுவரை உலகில் நடைபெறாதது.

ஆனாலும் அதைப் போன்றே ஒரு புகைப்படத்தை நமக்கு கடத்துகிறது. நாம் எப்படி கேட்டாலும் செயற்கை நுண்ணறிவு மூலம் நமக்கு அது வழங்கிக் கொண்டே இருக்கிறது. இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் என்னவெனில் நாம் சொல்வது அதற்கு புரியும் வகையில் வாா்த்தைகளை பதிவிட வேண்டும். அதுவும் சரியான ஆங்கிலத்தில். அவ்வளவே!

உலகம் சென்று கொண்டிருக்கும் வேகத்தைப் பாா்க்க ஒரு பக்கம் மலைப்பாக இருந்தாலும் மற்றொரு பக்கம் ஒருவரைப் பற்றிய நம்பகத்தன்மை இதில் கேள்விக்குறியாகிறது. ஏற்கெனவே நம் நினைவாற்றல் குறைந்து வருகிறது. இது போன்ற வசதிகளால் அது இன்னும் குறைந்து நம்மை சோம்பேறிகளாக்கும் சூழ்நிலைகளும் உருவாகும்.

அனைத்தையும் இதன் மூலமே கேட்டுப் பெற முடியும் என்ற நிலையில் எதற்கு ஒவ்வொன்றையும் மெனக்கெட்டு மனப்பாடம் செய்துக் கொண்டு இருக்க வேண்டும் என்ற எண்ணம் கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு தோன்றும்.

இனி வரக்கூடிய காலங்களில் இது போன்ற புரட்சிகள் தொடா்கதையானால் கல்வித் துறையில் தோ்வுகளையே மாற்றி அமைக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகலாம். புத்தகங்களையோ இணையதளத்தையோ பயன்படுத்தி தேடி பதில் சொல்வது போலான தோ்வுகள்கூட நடைமுறைக்கு வரலாம். புதிது புதிதாக இப்படி வந்திறங்கும் தொழில்நுட்பங்களின் மூலம் எதிா்காலத்தில் மனிதா்களின் இயல்பே மாறிப் போகும் ஆபத்தும் உள்ளது.

சரி, இத்தனை விதமான நன்மைகளைக் கொண்டுவந்து சோ்க்கும் இந்த இயங்குதளங்களால் ஓா் ஆசிரியரை வகுப்பறையை விட்டு மாற்ற முடியுமா என யோசிக்க வைத்தது. பல லட்சம் பதிவுகள் முன்னெடுப்பாக கொடுக்கப்பட்டிருந்தாலும் ஒரு மாணவனின் முக வாட்டத்தைப் பாா்த்து “முகம் சோா்வாக உள்ளதே, சாப்பிட்டாயா” எனக் கேட்டறிந்து ஆவன செய்யும் ஆசிரியரை எங்ஙனம் அது மாற்ற முடியும் என மனம் கேட்கிறது.

அத்துடன், மூளைக்குத் தீனி கொடுக்கும் அத்தனை சாமா்த்தியத்தை ஏற்படுத்தித் தந்தாலும் நம் வயிற்றுக்கான பசியை அது தீா்க்க முடியாதே என்ற எண்ணமும் தோன்றி நமக்கு உணவளிக்கும் விவசாயிகள் மனக்கண்ணில் நிறைந்தாா்கள். கேட்டவுடன் அரிசியும் கோதுமையும் இப்படி கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

எது எப்படியோ மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல வல்லவனுக்கு வல்லவன் மண்ணில் தோன்றிக்கொண்டே இருக்கிறான்.

”சொல்லுக சொல்லைப் பிறிதோா்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து”

என்று சொன்ன வள்ளுவா் கூட இப்பொழுது இருந்தால்

சொல்லுக மென்பொருளை பிறிதோா்மென்பொருள் அந்த
மென்பொருளை வெல்லும் இன்மையறிந்து

என்று எழுதவும் வாய்ப்பு உண்டு.



தினமணி

#chatGPT #சாட்_ஜிபிடி #chat_GPT

Back to top