புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Search found 1 match for ஸ்மார்த்தர்கள்
- Fri Feb 03, 2023 9:20 pm
- Search in: இந்து
- Topic: தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
- Replies: 48
- Views: 1370
“சங்கர சம்பிரதாயம்”
ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர்களை அநுஸரிக்கிற அத்வைதிகளுக்கு “#ஸ்மார்த்தர்கள்” என்ற பெயரே இருக்கிறது. இப்போது ஸ்மார்த்தர்களாக இருக்கப்பட்ட இளைஞர்களிலேயே பலபேருக்கு இந்த [ஸ்மார்த்தர் என்ற] பெயர் தெரியவில்லை! தங்களை “ஐயர்” என்றே சொல்லிக் கொள்கிறார்கள்.
வைஷ்ணவர்கள், விசிஷ்டாத்வைதிகள் என்றால் ஐயங்கார். த்வைதிகள் ராவ்ஜிகளாக இருக்கிறார்கள், அதாவது பேருக்குப் பின்னால் ‘ராவ்’ போட்டுக் கொள்கிறார்கள். அல்லது ‘ஆச்சார்’ போட்டுக் கொள்கிறார்கள். இவர்கள் ஸ்ரீ மத்வாசாரியாரைப் பின்பற்றுவதால் ‘மாத்வர்’ என்கிறோம். இவர்களும் விஷ்ணு பக்திகாரர்கள்தான். ஆனால் வைஷ்ணவர்கள் என்றால் ஸ்ரீ ராமாநுஜாசாரியாரின் மதத்தை சேர்ந்தவர்கள் என்றே நினைக்கிறோம். மத்வர்கள் ‘ஆச்சார்’ போட்டுக் கொள்வதுபோல், ஸ்ரீ வைஷ்ணவர்களும் ‘ஆசாரியார்’ என்று போட்டுக் கொள்கிறார்கள். ‘ராஜகோபால ஐயங்கார்’ ‘ராஜகோபாலாசாரியார்’ இப்படி இரண்டு தினுசாகவும் போட்டுக் கொள்கிறார்கள். மத்வர் என்று ஸ்ரீ மத்வாசாரியார் பெயரை வைத்தே அந்த மதஸ்தவரை சொல்வது போல், ஸ்ரீ சங்கரர், ஸ்ரீ ராமானுஜர் இவர்களின் சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களை அந்தந்த ஆசார்யார் பெயரால் குறிப்பிடக் காணோம். ‘சங்கராத்வைதின்’ என்று ஏதாவது இங்கிலீஷ் ஃபிலாஸஃபி புஸ்தகத்தில் வேண்டுமானால் இருக்கும்; லெக்சரில் இந்த வார்த்தை அடிபடலாம். நடைமுறையில் இல்லை. த்வைதிகள் ராவ், விசிஷ்டாத்வைதிகள் ஐயங்கார், அத்வைதிகள் ஐயர் என்று இப்போது வைத்துக்கொண்டிருக்கிறோம்.
பொதுவாக ஸ்மார்த்தர்கள்தான் #சாஸ்திரி, சர்மா என்றெல்லாமும் போட்டுக் கொள்கிறார்கள். #தீக்ஷிதர்கள் என்று போட்டுக் கொள்பவர்களும் நம் பக்கத்தில் பெரும்பாலும் ஸ்மார்த்தர்களில் சிலர் மட்டும்தான். யாகம் பண்ணினவருக்கும், அவர் குடும்பத்துக்கும் ஏற்பட்டது இந்த ‘தீக்ஷிதர்’ பட்டம். (சிதம்பரத்து தீக்ஷிதர்கள் ஸமாசாரம் வேறு.) பொதுவில் அத்வைதிகள் ஐயர் ஜாதி என்றே இப்போது தங்களை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பேருக்குப் பின்னாடிப் போட்டுக் கொள்கிற ஜாதியைக் கொண்டு இப்படிச் சொல்லிக்கொள்கிறோம். இந்தத் தலைமுறைக்காரர்கள் ஜாதிப் பெயர் போட்டுக் கொள்வதில்லை. அது நிஷித்தமாகிவிட்டது! போன தலைமுறையிலும் ராவ்ஜிகளின் அளவுக்கு மற்றவர்கள் போட்டுக்கொள்ளவில்லை. ஆனால் தாத்தா காலத்துக்குப் போனால் நாம் எல்லோரும் ஒரு ஐயருக்கோ, ஐயங்காருக்கோ, ராவ்ஜிக்கோ பேரன் என்று ஆகும். ‘ஆச்சார்’ போட்டுக் கொண்டவர்களும், ‘நாங்கள் ஆச்சார் ஜாதி’ என்று சொல்லவில்லை. ராவ் அல்லது மாத்வர் என்றுதான் சொல்லிக் கொள்வார்கள். அப்படியே, ‘ஆசாரியார்’ என்று போட்டுக் கொள்ளும் வைஷ்ணவர்களும் தங்களை ஆசாரியார் ஜாதி என்று சொல்லிக் கொள்வதில்லை. ஐயங்கார் என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள். ஸ்மார்த்தர்கள் ஐயர் என்கிறோம். சர்மா ஜாதி, சாஸ்திரி ஜாதி என்று சொல்லிக் கொள்வதில்லை.
சங்கர பகவத்பாதாளை அநுஸரிக்கிறவர்கள் தங்களுக்குப் பெயர் ஸ்மார்த்தர் என்பதையே தெரிந்து கொள்ளாத மாதிரி, இன்னொரு முக்கியமான விஷயமும் தெரிந்து கொள்ளாமலே இருக்கிறார்கள். தங்களுக்கென்று ஆசாரியாள் இதுதான் தெய்வம் என்று எந்த ஒரு தெய்வத்தையும் வைக்காமல், எல்லா தெய்வங்களையும் ஸமமாகப் பார்க்கச் சொன்னார் என்பது அத்வைதிகளில் பலபேருக்கே தெரியவில்லை. தங்களுடைய உபாஸனா மூர்த்தியாகப் பரமசிவனைத்தான் ஆசார்யாள் வைத்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு தங்களை சைவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இப்படி நினைப்பதற்கு ஒரு காரணம் தோன்றுகிறது
த்வைதி, விசிஷ்டாத்வைதி இரண்டு பேருமே விஷ்ணுவை உபாஸிக்கிறார்கள். இதனால்தான் அத்வைதியாக இருக்கப்பட்ட இந்தக் காலத்து ஸ்மார்த்தர்கள், தாங்கள் அந்த இரண்டு பேருக்கும் மாறுபட்டவர்களாதலால், தங்களை சைவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஆனால் இது தப்பு.
ஐயர், ஐயங்கார், ராவ் என்பன ஸம்ஸ்கிருதப் பெயர்களாக இல்லை. எனவே ஸம்ஸ்கிருத்தில் தன் ஜாதியைச் சொல்கிறபோது ஐயங்கார் தன்னை வைஷ்ணவர் என்று சொல்கிறார். ராவ்ஜி மாத்வர் என்று சொல்கிறார். அப்படி அவர்கள் சொல்வதில் தப்பு இல்லை. ஆனால் அத்வைதியான இந்த ஐயர் ஜாதிக்காரன் மட்டும் தப்பாகத் தன்னை சைவன் என்று சொல்லிக் கொள்கிறான். மற்றவர்களுக்கும் இப்படியேதான் தப்பபிப்பிராயம் இருக்கிறது.
என்னைக்கூட ரொம்பப் பேர் சைவ ஆசாரியர் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பானிலிருந்து ஒரு ப்ரொஃபஸர் [Hajime Nakumura] என்பவர் என்னிடம் வந்திருந்தார். அவர், “ஆசார்யாளுடைய ஸூத்ர பாஷ்யம், கீதா பாஷ்யமெல்லாம் படித்திருக்கிறேன். அதிலெல்லாம் அத்வைதம்தான் சொல்லியிருக்கிறதே தவிர சிவனைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. ஆனால் நீ ஏன் சைவமாக இருக்கிறாய்?” என்று என்னைக் கேட்டார். ‘என்னை எதனால் சைவன் என்கிறாய்?’ என்று நான் அவரைத் திருப்பிக் கேட்டேன். அதற்கு அவர், “நீ விபூதிதானே இட்டுக் கொள்கிறாய்? சிவ பூஜை (சந்திர மெளளீச்வர பூஜை) தானே பண்ணுகிறாய்? எல்லா சங்கராசாரியார்களுமே இப்படித்தானே சைவமாக இருக்கிறீர்கள்? அத்வைதத்தில் சிவன், விஷ்ணு என்ற பேதமே ஆசாரியாள் சொல்லாதபோது நீயும், இன்னும் மற்ற சங்கர மடத்துக்காரர்களும் ஏன் சிவச் சின்னங்களைப் போட்டுக்கொண்டு சிவபூஜை பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அவருக்கு நான் பதில் சொன்னேன்.
சில சரித்திர பூர்வமான உண்மைகளுக்குப் போனால்தான் இதற்குப் பதில் கிடைக்கும்.
ஆசார்யாள் அவதாரம் பண்ணுவதற்கு முந்தி தேசத்தில் என்ன மதம் அல்லது மதங்கள் இருந்தன? வைதிக மதமான ஸநாதன தர்மமும், எழுபத்திரண்டு துர்மதங்களும் இருந்தன என்று “சங்கர விஜய” புஸ்தகங்களிலிருந்து தெரிகிறது. ஆனால் வைதிக மதத்துக்கு மாறானவற்றில் முக்கியமானதாக பெளத்தம்தான் இருந்தது. பொது மக்களிலும் சரி, பெரும்பாலோர் ஸநாதன வைதிக தர்மத்திலோ, இல்லாவிட்டால் பெளத்தத்தைச் சேர்ந்தவர்களாகவோதான் இருந்தார்கள். மற்ற மதங்களுக்கு ஏதோ அங்கங்கே ஒரு கூட்டத்தில் (group-ல் ) மட்டும் following (பின்பற்றுதல்) இருந்தது. அந்தச் சின்னக் கூட்டத்துக்காரர்கள், அந்தச் சில்லறை மதங்களை ரொம்பவும் தீவிரமாகப் பின்பற்றினாலும் கூட (இப்போது கூட இப்படிப் பல “இஸம்’கள் ‘ஸ்கூல்’களுக்கு ஆள்பலம் கொஞ்சமாக இருந்தாலும், அவர்கள் ரொம்பவும் தீவிரமாக அந்தந்தக் கொள்கையைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோமல்லவா?) பொதுவில் வைதிக மதம், பெளத்த மதம் என்று இரண்டாகவே பெரிய அளவில் பிரித்து விடும்படியாக இருந்தது.
இந்த ஸநாதன தர்ம வைதிக மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு “ஸ்மார்த்தர்கள்” என்றே பேர். ஸ்மார்த்தர்கள் என்றால் ஸ்மிருதியைப் பின்பற்றுகிறவர்கள் என்று அர்த்தம் ஸ்மிருதி என்றால் தர்ம சாஸ்திரங்கள். வேதத்தில் அங்கங்கே பரவலாகச் சொன்ன தர்மங்களை ஒரே இடத்தில் ஒன்று சேர்த்து, இன்னும் அதில் வெளிப்படையாகச் சொல்லாத விஷயங்களையும் அதற்கு அநுஸரணையாகவே சேர்த்து, நன்றாக வகை தொகை பண்ணி, பாகுபடுத்தி, சமூகத்தில் இன்னின்னார் இப்படியிப்படி நடக்கவேண்டும் என்று – ஒரு ஜீவனானது மாதாவின் கர்ப்பத்தில் வைக்கப்படுவதிலிருந்து, அது பிறந்து, வளர்ந்து, வித்யாப்யாஸம் பண்ணி, விவாஹம் செய்து கொண்டு, புத்திரோத்பத்தி பண்ணி, கடைசியில் மரணமடைந்து தஹனம் ஆகிறவரைக்கும் என்னென்ன செய்யவேண்டும் என்று – ‘ரூல்’ களைப் போட்டுக் கொடுப்பது தர்ம சாஸ்திரம்தான். அவையே ஸ்மிருதிகள். அவற்றை பின்பற்றுபவர்களே ஸ்மார்த்தர்கள். இப்போது “ஹிந்து” என்ற பெயரில் சொல்லப்படுகிற வேத மதஸ்தர்களுக்கு ஆதியில் இதுதான் பெயர்.
தர்ம சாஸ்திரங்களில் விஷ்ணுவைத்தான் உபாஸிக்கவேண்டும் என்றோ, சிவனைத்தான் உபாஸிக்க வேண்டும் என்றோ சொல்லவில்லை. வேதப் பிரதிபாத்யமான [வேதத்தில் சொல்லப்பட்ட] எல்லா தெய்வங்களும் இங்கே சமம்தான். எதை உபாஸித்தாலும் தப்பில்லை. எல்லாவற்றையும் ஒன்றே என்று புரிந்துகொண்டு உபாஸிப்பது விசேஷம். ‘ஆதித்யம்-அம்பிகாம்-விஷ்ணும்-கணநாதம்-மஹேச்வரம்’ என்பதாக ஸூரியன், அம்பாள், மஹாவிஷ்ணு, பிள்ளையார், பரமேச்வரன் ஆகிய ஐந்து மூர்த்திகளையும் ஸ்மார்த்தர்கள் பூஜை பண்ணுவார்கள். ஐந்து மூர்த்திகளை வழிபடுவதால் இதற்குப் ‘பஞ்சாயதன பூஜை’ என்று பேர். இஷ்ட தெய்வம் என்று ஒன்றிடம் அதிகப் பிரீதி வைக்கலாம். ஒரே வீட்டிலேயே அண்ணனுக்கு பரமசிவன் இஷ்ட தெய்வமாயிருக்கும். தம்பிக்கு மஹாவிஷ்ணு இஷ்ட தெய்வமாயிருக்கும். இதற்காக சைவர் – வைஷ்ணவர் என்று இரண்டு மதமாக பிரிந்து போகமாட்டார்கள். சிவ உபாஸனைக்காரர்களும், விஷ்ணு உபாஸனைக்காரர்களும் தனிஜாதியாக இல்லாமல், பரஸ்பரம் விவாஹ ஸம்பந்தமும் வைத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் எல்லோருக்கும் பொது, வேதம். அதில் சொல்லியிருக்கப்பட்ட கர்மாநுஷ்டானங்கள் எல்லோருக்கும் பொது.
வேதத்தில் எல்லாரும் யக்ஞ கர்மாநுஷ்டானம் பண்ணி ஹோம பஸ்மாவை இட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. தர்ம சாஸ்திரங்களிலும் இப்படிச் சொல்லியிருக்கிறது. அதனால் ஆதியில் எல்லா ஸ்மார்த்தர்களும் பஸ்மதாரணம் [விபூதி இட்டுக் கொள்ளுதல்] தான் செய்து கொண்டார்கள் — விஷ்ணுவை இஷ்ட தெய்வமாக உபாஸிக்கிறவர்களும் கூடத்தான். இப்போதும், வைஷ்ணவர்களும், மாத்வர்களும் யாகம் செய்கிறபோது, ஹோம பஸ்மா இட்டுக் கொள்ளத்தான் வேண்டும்.
நாமம் போடுவது, அதில் பாதம் வைத்துப் போடுவது, பாதம் இல்லாமல் போடுவது இதெல்லாம் பிற்பாடு வந்த வைஷ்ணவ ஆசாரியர்கள் பண்ணின ஏற்பாடுதான் என்று வைஷ்ணவர்கள் சொல்கிற குரு பரம்பரைக் கதைகளிலிருந்தே தெரிய வருகிறது. பிற்பாடு விஷ்ணுவை மட்டும் முழுமுதல் தெய்வமாக வைத்து, அந்த அடிப்படையின் மேல் தனி மதம், தனி ஜாதி என்றே பிரித்தபோது, அதில் சேர்ந்தவர்களுக்கு புது அடையாளம் தரும்படி ஆகிவிட்டது. இதே போல் மத்வாசாரியாரின் மதஸ்தர்களுக்கும் கோபிசந்தனம், சாந்து என்று புதிதாக அந்த ஸம்பிரதாயம் தனி ஸமூகமாக உருவானபோது ஏற்பட்டது. இந்த ஸம்பிரதாயங்களில் பிரிந்து போகாமல் பகவத்பாதர்களை அநுஸரித்து ஆதியான வைதிக வழியிலேயே நின்றுவிட்டவர்களுக்கு வைஷ்ணவர், மாத்வர் என்பது போன்ற பெயர்கள் ஏற்படவில்லை. ஸ்மார்த்தர் என்ற பழைய பெயரே நீடித்தது. அதே போல, ஆதியிலிருந்து, வேதத்திலேயே சொல்லப்பட்டு, வழி வழியாக வந்த பஸ்மதாரணம் ஸ்மார்த்தர்களிடம் நிலைத்து நின்றுவிட்டது. விபூதியை குழைத்துப் போட்டுக்கொள்வதற்குதான் வேதத்திலேயே மந்திரம் சொல்லியிருக்கிறது.
அதாவது, ஸ்மார்த்தர்கள் விபூதி இட்டுக் கொள்வதால், அவர்களெல்லோரும் சைவர்கள் என்று தற்காலத்தில் தப்பபிப்பிராயம் ஏற்பட்டிருந்தாலும், வாஸ்தவத்தில் ஸ்மார்த்தர்களின் விபூதி தாரணம் சிவ சம்பந்தம் உடையதல்ல; வேத சம்பந்தம் உடையது என்றே சொல்ல வேண்டும்.
ஸ்ரீ ராமாநுஜர் விசிஷ்டாத்வைதத்தைத் தனி சம்பிரதாயமாக ஆக்கியதற்கு முந்தி பரம பக்தியோடு விஷ்ணுவையே இஷ்ட தெய்வமாக ஆராதித்த வைதிகர்களும், ஸ்மார்த்தர்களாக இருந்து பஸ்மதாரணம்தான் பண்ணீயிருப்பார்கள். ஸந்நியாஸிக்கு யக்ஞம் பண்ணும் அதிகாரம் இல்லை. அதனால் அவன் ஹோமம் பண்ணி பஸ்மா தரிப்பதற்கில்லை. ஆயினும் விபூதியே இட்டுக் கொள்வான்.
இப்போதும் வைஷ்ணவர்களின் பாஞ்சராத்ர தீக்ஷையில் அவர்கள் ஹோம பஸ்மத்தை இட்டுக் கொண்டாக வேண்டும்.
புத்தர் வேத மதத்தை ஆட்சேபித்தார். யக்ஞாதி கர்மாநுஷ்டானங்கள் கூடாது என்றார். புத்தர் ஈச்வரனைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அதனால் பெளத்ததில் வைதிக கர்மமும் இல்லை. பக்தியும் இல்லை. அவர் காலத்தில் ஸ்மார்த்தர்கள் ஏராளமாக கர்மாநுஷ்டானம் செய்தார்கள். புத்தர் ஈச்வரனைச் சொல்லவில்லை என்றால், இந்த கர்ம மார்க்கக்காரர்களும், “ஈச்வரன் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? நமக்கு வேதம் சொன்ன கர்மா இருக்கிறது. அதைச் செய்துவந்தாலே சிரேயஸ்” என்று நினைத்தவர்களாக இருந்தார்கள். இவர்களைப் பூர்வ மீமாம்ஸகர் என்பார்கள். இவர்களுக்குக் கர்மா மட்டும் தான் உண்டு. பக்தியும் கிடையாது, ஞானமும் கிடையாது. பரம ஸத்தியத்தை நினைத்து நினைத்து தியானம் பண்ணுவது, ஆத்ம விசாரம் பண்ணுவது, சகல கர்மாக்களையும் விட்டு விட்டு ஸந்நியாஸியாகி எப்போதும் பரமாத்ம சிந்தனையிலேயே இருப்பது – என்கின்ற அத்வைத ஞான மார்க்கம் இவர்களுக்குப் பிடிக்காது. இந்த பூர்வ மீமாம்ஸகர்களில் குமாரில பட்டர் என்பவர் மஹா பெரியவராக வந்து பெளத்ததைத் தீவிரமாகக் கண்டித்து, வேத கர்மாக்களை நிலைநாட்டினார். பெளத்தம் கர்மாவைச் சொல்லாததற்காக அதை இவர் கண்டித்தார். இதே மாதிரி, பெளத்தம் ஈச்வரனை, பக்தியைச் சொல்லாததற்காக அதை இன்னொரு பெரியவர் கண்டனம் செய்தார். அவர் பெயர் உதயனாசாரியர் என்பது. நியாய சாஸ்திரம் எனப்படும் தர்க்க சாஸ்திரத்தில் அவர் வல்லவர். லோக விவகாரங்களுக்குக் காரணமாக ஈச்வரன் என்று ஒன்று இருந்தேயாக வேண்டும் என்பதை இவர் யுக்தி மூலமாக வாதம் பண்ணி நிலைநாட்டி ஏராளமாக எழுதினார்.
இப்போது பள்ளிக்கூடப் புஸ்தகங்களிலிருந்து ஆரம்பித்து, எங்கேயும் புத்தரைப் பற்றித்தான் சொல்லியிருக்கிறதே தவிர குமாரில பட்டர், உதயனாசாரியார் முதலானவர்களின் பேர்கூட ஒருத்தருக்கும் தெரியாதபடி செய்திருக்கிறது! வெள்ளைக்காரர்களின் ஆட்சியின் போது இப்படி வேண்டுமென்றே செய்து விட்டார்கள். அவர்களுக்கு வைதிக மதத்தை எப்படியாவது மட்டம் தட்டி, எல்லாரையும் கிறிஸ்துவ மதத்துக்கு இழுத்து விடவேண்டும் என்பது ஆசை. ‘கிறிஸ்துவ மதத்துக்கு இழுக்க முடியாவிட்டால் கூடப் பரவாயில்லை. வைதிகத்தை எப்படியாவது மட்டம் தட்டிவிட வேண்டும். நம்மால் ஆளப்படுகிற இந்த ஹிந்துக்களுக்குத் தங்கள் மதத்தையும், கலாசாரத்தையும் பற்றிப் பெருமிதம் இல்லாமல் பண்ணிவிடவேண்டும்’ என்று அவர்களுக்கு எண்ணம். தங்களுக்கு நாகரிகமே தெரியாத ஆதிகாலத்தில் இப்போது தங்களால் ஆளப்படும் ஹிந்துக்கள் மஹோன்னதமான நாகரிகம் படைத்தவர்களாக இருந்தது அவர்களை ரொம்பவும் உறுத்திக் கொண்டிருந்தது. அதனால் இப்படி நினைத்தார்கள். வைதிக மதத்தின் பெருமைகள், அதில் வந்த பெரியவர்கள் ஆகியனபற்றி ஹிந்துக்களுக்கு ஒன்றுமே தெரியாமல் செய்யும் விதத்தில், எலிமென்டரி ஸ்கூல் பாட கட்டத்திலிருந்து ஆரம்பித்து விட்டார்கள்! அதனால்தான் வேத விருத்தமாக [வேதத்துக்கு முரணாக] புத்தர் மதம் ஸ்தாபனம் செய்ததை மட்டும் குழந்தைகள் படிக்கிற காலத்திலேயே அவர்கள் தெரிந்து கொள்ளும்படியாகப் பெரிசாகப் பிரபலப்படுத்தினார்கள். வேதமதத்தில் வந்த மஹான்களைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டு விட்டார்கள். குமாரில பட்டர் வேதப் பிராமாண்யத்தை [வேதமே பிரமாண நூல் என்பதை]யும், வேத கர்மாக்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி, இந்த இனங்களில் மாறுபட்ட பெளத்தத்தைக் கண்டித்தார். உதயனர் பெளத்தர்களின் நிரீச்வரவாதத்தைக் கண்டித்து ஈச்வரன் உண்டு என்பதை நிலை நாட்டினார். கர்மம்-பக்தி-ஞானம் என்ற மூன்றில் இப்படிக் கர்மத்தையும் பக்தியையும் பற்றிய பெளத்தக் கொள்கையை இருவர் நிராகரணம் பண்ணின பிறகே, ஞானமார்க்கத்தை வேத வழிப்படிப் புதுப்பித்துக் கொடுத்த நம் பகவத்பாதாள் அவதாரம் பண்ணினார்.
|
|