புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_m10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10 
54 Posts - 49%
heezulia
சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_m10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_m10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_m10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_m10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_m10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10 
1 Post - 1%
Shivanya
சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_m10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_m10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_m10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_m10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_m10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10 
12 Posts - 2%
prajai
சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_m10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_m10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10 
9 Posts - 2%
Guna.D
சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_m10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_m10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10 
4 Posts - 1%
jairam
சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_m10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_m10சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 08, 2014 10:09 am


சிவகங்கை : சிவகங்கையில், நாளுக்கு நாள் மழை அதிகளவில் பெய்து வருவதால், கண்மாய்களுக்கு மழை நீர் சேகரமாகி வருகிறது. விவசாயிகளும் கோடை உழவுகளை தைரியமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அக்னி நட்சத்திரம் துவங்கும் நாள் வரை, மழையின்றி சிவகங்கை மாவட்டமே, வறட்சியில் சிக்கி தவித்தன. இந்நிலையில், அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என, மக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால், வருணபகவான் மக்கள் மீது கருணை மழை பொழிந்தார். இதையடுத்து, கடந்த 4ம் தேதியில் இருந்தே, தொடர்ந்து 4 நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில், பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், வெயிலின் உஷ்ணம் தணிந்து, அவ்வப்போது "சாரல் மழை'யுடன் பலத்த மழையும் பெய்துகின்றன.

இதனால், பொதுமக்கள் குளிர்ச்சியை உணர துவங்கிவிட்டனர். மாவட்டத்தில், அனைத்து தாலுகாக்களிலும் நல்ல மழை பெய்து வருவதால், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு வரத்து கால்வாய்கள் மூலம், மழை நீர் சேகரமாகி வருகிறது. மேலும், கோடை உழவு பணியை துவக்க ஏதுவாக மழை பெய்துள்ளதால், விவசாயிகள் ஆர்வத்துடன் உழவு பணிகளை துவக்கி வருகின்றனர். முக்கியமாக மாவட்டத்தில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்த நிலையில், நல்ல மழை பெய்துள்ளதால், படிப்படியாக நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். நேற்றைய மழை: நேற்று, மாவட்டத்தில் அதிகபட்சமாக திருப்புத்தூரில், 47.2 மி.மீ., மழை பதிவானது. காரைக்குடி -27, மானாமதுரை - 24, சிவகங்கை - 35, திருப்புவனம் - 40.8, இளையான்குடி - 19.6, தேவகோட்டை 44.2 மி.மீ., வரை மழை பெய்துள்ளது. இந்த மழை விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில், மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 4ம் தேதி முதல் நேற்று வரை ஒட்டு மொத்தமாக, காரைக்குடி -92.2 மி.மீ., மானாமதுரை - 115, சிவகங்கை - 96மி.மீ., திருப்புவனம் -53.2மி.மீ., திருப்புத்தூர் -70.14மி.மீ., இளையான்குடி - 35.8மி.மீ., தேவகோட்டை - 63.8 மி.மீ., வரை பதிவாகியுள்ளது.



சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 08, 2014 10:12 am

சேலம் மாவட்டத்தில் 242 மி.மீ., மழை கொட்டி தீர்த்தது : சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

சேலம்: கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், வெயிலின் தாக்கம் குறைந்து, மழையின் வேகம் அதிகரிக்க துவங்கி உள்ளது. நேற்று முன்தினம், இடை விடாது பெய்த மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சேலம் மாவட்டம் முழுவதும், 242.7 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.

கடந்த, மார்ச், 20ம் தேதி துவங்கிய கோடை வெயில், ஏப்.,30ம் தேதி வரை அதிகப்படியாவே காணப்பட்டது. லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேட்பாளர்கள், வெயிலை பொருட்படுத்தாமல், வீதிகளில் அலைந்து ஓட்டு சேகரித்தனர். நாளுக்கு நாள் வெயிலின் அளவு அதிகரித்துக் கொண்டே சென்றதால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.. வேலூர், திருச்சி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில், 40 டிகிரி செல்ஷியசை தாண்டி வெயில் கொளுத்தியது. அனல் காற்று வீசியதால், வீட்டை விட்டு வெளியில் செல்வதற்கே தயங்கினர். இதனிடையே, மே, 4ம் தேதி துவங்கிய, அக்னி நட்சத்திரத்தை கண்டு மிரட்சியடைந்தனர்.ஆனால், இயற்கைக்கு மாற்றாக, வெயிலின் வேகம் குறைந்து, மழையின் தாக்கம் அதிகமானது.

வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம் முழுவதும், இரு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. விடிய, விடிய மழை பெய்தபடியே இருந்தது. வெயிலில் காய்ந்த மக்களுக்கு, மழை பொழிவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டத்தில், ஆத்தூர், வாழப்பாடி, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், இடைப்பாடி, ஏற்காடு, மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து கொண்டே இருந்தது. காலையில் விட்டு விட்டு பெய்தபோதும், இரவு நேரத்தில் விடாமல் பெய்து கொண்டே இருந்தது. ஏற்காட்டில் குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவியது.

சேலம் மாநகரப் பகுதியில், கிச்சிப்பாளையம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, மணியனூர், ஐந்து ரோடு, அரிசிபாளையம், குகை உள்ளிட்ட பகுதிகளில், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில், மழை நீர் குட்டை போல் தேங்கி கிடந்தது. பெரும்பாலான மண் சாலைகள், சகதி காடாக மாறியிருந்தது. மழையால், சாலைகள் குண்டும், குழியுமாக மாறியிருந்தன. சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால், கழிவுகள் தெருக்களில் தேங்கியபடி கிடந்தன. தண்ணீர் செல்ல வழியில்லாததால், சாலைகளில் தேங்கியிருந்த நீரில் வாகனங்கள் மிதந்தபடி சென்றன. குடிநீர் பிரச்னையால் தவித்த மக்களுக்கு, தற்போது பெய்து வரும் மழை நிம்மதியை கொடுத்துள்ளது. சேலம் மாவட்டத்தில்,நேற்று காலை 8 மணியுடன் முடிந்த, 24 மணி நேரத்தில் பதிவான மழைப் பொழிவு விபரம்(மி.மீ.,): சேலம் - 34.4, ஏற்காடு - 30.2, வாழப்பாடி - 20.11, ஆத்தூர் - 21.4, தம்மம்பட்டி - 37.2, சங்ககிரி - 24.2, இடைப்பாடி - 29, ஓமலூர் - 17, மேட்டூர் - 29.2, மொத்தம் 242.7. சராசரி மழையளவு - 26.97.



சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 08, 2014 10:14 am

திருச்சியில் கொட்டித்தீர்த்த மழையால் சாலையில் பெருக்கெடுத்த சாக்கடை

திருச்சி: தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடுமையான வெயில் அடித்தது. திருச்சியில், 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் உச் சத்துக்கு சென்றது. சராசரியாக, 104 டிகிரி வெயில் இருந்தது. இதனால், இந்த ஆண்டு அக்னி வெயில் கடுமையாக இருக்கும் என மக்கள் அஞ்சினர்.

மக்கள் அச்சத்தை போக்கும் வகையில், அக்னி வெயில் துவங்கியதிலிருந்து தமிழகம் முழுவதும் சீதோஷன நிலையில் மாற்றம் காணப்பட்டது. ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்தது. திருச்சியிலும் மழை பெய்தது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலையால் தமிழகத்தில் அதிகமான இடங்களில் நேற்று முன்தினம் இரவிலிருந்து மழை பெய்தது. திருச்சியில் நேற்று முன்தினம் இரவிலிருந்து கனமழை பெய்தது. சுற்றுவட்டாரப்பகுதியிலும் மழை பெய்தது. திருச்சி மாநகர மக்கள் வெயிலிலிருந்து தப்பித்தோம் என நிம்மதி பெருமூச்சுவிட்டனர். ஆனால், ஒரு நாள் பெய்த இந்த மழையால் பல பகுதியில் மழைநீர் தேங்கியது.

மாநகராட்சி நிர்வாகம் சாக்கடை அடைப்புகளை முறையாக எடு க்காததாலும், முறையற்ற வடிகால் வசதியாலும், மழைநீர் செல்ல வழியின்றி சாக்கடைகள் நிரம்பி, சாக்கடை நீர் சாலையில் பெருக்கெடுத்தன. இதனா ல், சாலையில் சாக்கடை நீருட ன் தேங்கிய மழைநீரை கடந்து செல்ல முடியாமல், மக்கள் அருவெறுப்பு அடைந்தனர். உறையூர், தென்னூர், பீமநகர் பகுதிகளில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் உள்ளே புகுந்தது. இதனால், மக்கள் கடும் அவதியடைந்தனர். மழைநீர் தேங்க மாநகராட்சி நிர்வாகமே காரணம் என மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.



சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 08, 2014 10:15 am

சகதிகாடான தற்காலிக பஸ் ஸ்டாண்ட் : புதுகையில் பயணிகள் கடும் அவதி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை தற்காலிக பஸ் ஸ்டாண்டில் மழைநீர் தேங்கி சகதிகாடாக மாறியுள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். பராமரிப்பு பணிகள் முடிவடைந்தும் தேர்தல் நடத்தை விதிகளை மேற்கோள் காட்டி புதிய பஸ் ஸ்டாண்டை திறக்க மாவட்ட நிர்வாகம் மறுத்துவருகிறது.

புதுக்கோட்டை நகராட்சி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதிய பஸ் ஸ்டாண்ட் சீரமைப்பு பணிகளை நகராட்சி நிர்வாகம் துவக்கியது. இதற்காக அரசு மகளிர் கல்லூரி எதிர்புறம் உள்ள காலிமனையில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு கடந்த, 5 மாதங்களாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

கிரஷர் தூள் மற்றும் வேஷ்ட் மண்ணைக் கொண்டு சமப்படுத்தப்பட்டுள்ள தற்காலிக பஸ் ஸ்டாண்ட் வெயில் அடித்தால் புழுதி காடாகவும், மழை பெய்தால் சகதி காடாகவும் மாறிவருகிறது.

புதுக்கோட்டையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கோடை மழையினால் தற்காலிக பஸ் ஸ்டாண்டுக்குள் சாக்கடை கலந்த மழை தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதன்மீது பஸ்கள் ஏறி, இறங்குவதால் மழை தண்ணீர் மண்ணுடன் கலந்து சகதிகாடாக மாறியுள்ளது. சகதியில் இறங்கி பஸ் ஏறுவதில் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.புதிய பஸ் ஸ்டாண்ட் சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்து ஒருமாதம் ஆகியும் தேர்தல் நடத்தை விதிகளை மேற்கோள் காட்டி பஸ் ஸ்டாண்டை திறக்க மாவட்ட நிர்வாகம் மறுத்துவருகிறது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு அரசு நிர்வாக பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்தியும், சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்டை திறக்க மாவட்ட நிர்வாகம் மறுப்பது பயணிகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நூற்றாண்டு விழாவுக்காக முதல்வர் ஜெயலலிதா வழங்கிய சிறப்பு நிதியிலிருந்து ஒரு கோடியே, 50 லட்சம் ரூபாய் வரை செலவிட்டு நுழைவு வாயில் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் புதிய பஸ் ஸ்டாண்ட் சீரமைக்கப்பட்டதால், அமைச்சர்களை வைத்து பிரம்மாண்டமாக விழா நடத்தி பஸ் ஸ்டாண்டை திறப்பதென ஆளுங்கட்சி தரப்பு முடிவுசெய்துள்ளது. மே 28ம் தேதி வரை நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் இதையே மேற்கோள் காட்டி பஸ் ஸ்டாண்டை திறக்க மாவட்ட நிர்வாகம் மறுத்துவருவதாக பயணிகள் மட்டுமின்றி கம்யூனிஸ்ட் கட்சியினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். வரும் 10ம் தேதிக்குள் பஸ் ஸ்டாண்டை திறந்து பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவராவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் சின்னத்துரை கூறியதாவது: புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து ஒரு மாதம் ஆகியும், தேர்தல் நடத்தை விதிகளை மேற்கோள் காட்டி பஸ் ஸ்டாண்டை திறக்க மாவட்ட நிர்வாகம் மறுத்துவருவது வேடிக்கையாகவும், வினோதமாகவும் உள்ளது. "தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் அரசு நிர்வாக நடவடிக்கைகள் தொடரலாம்' என, தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்தியுள்ளது. இருந்தும் பயணிகள் நலனை கவனத்தில் கொள்ளாமல் பஸ் ஸ்டாண்டை திறக்க மாவட்ட நிர்வாகம் காலதாமதம் செய்துவருகிறது. வரும் 10ம் தேதிக்குள் பஸ் ஸ்டாண்டை திறக்காவிட்டால் பயணிகளை ஒன்றுதிரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவுசெய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.



சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 08, 2014 10:17 am

மதுரை ! தேங்கும் மழைநீரால் குடிநீரில் கழிவுகள்; மழை பாதிப்பை பார்வையிடாத அதிகாரிகள்

மதுரை : மதுரை மாநகராட்சியின் வார்டுகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் குடிநீர் வினியோகத்தில் கழிவுநீர் கலந்து வருகிறது. மூன்று நாட்களாக மழை பெய்யும் நிலையில், வார்டுகளின் நிலை குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு மனம் வரவில்லை.

மதுரையில் மழை வந்தாலும் பிரச்னை, வராவிட்டாலும் பிரச்னை. அரைகுறையாய் நிற்கும் 'எதற்கும் உதவாத' மழைநீர் வடிகால் திட்டத்தால் மழைநீர் வீணாகி கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு கேபிள் பதிப்பதற்கு தோண்டப்பட்ட குழிகளும் சரிசெய்யப்படாததால் அத்தனை பள்ளங்களிலும் நீர் தேங்கி நிற்கிறது. பெத்தானியாபுரம் உட்பட சில இடங்களில் வீடுகளுக்குள்ளேயே சாக்கடை கலந்த மழைநீர் புகுந்து பாடாய்படுத்துகிறது. மாநகராட்சி எல்லையில் உள்ள வார்டுகளிலும் இதே நிலை தான். சரிசெய்ய வேண்டிய அந்தந்த வார்டு உதவிப்பொறியாளர்கள், எங்கே இருக்கிறார்கள் எனத்தெரியவில்லை. மூன்று நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் வார்டுகளின் நிலை என்ன? மக்களின் கதி என்ன? என்பதை ஆய்வு செய்ய மாநகராட்சி கமிஷனரோ, உதவி கமிஷனர்களோ, நகர் பொறியாளரோ இதுவரை வரவில்லை. கவுன்சிலர்களோ, 'தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால் நாங்கள் வரமுடியாது' என்ற ஒரே பதிலைக் கூறி தப்பிக்கொள்கின்றனர்.

கழிவுநீருடன் கலந்து குடிநீர் இணைப்புகளில் புகுந்த மழைநீர், வினியோகத்தை நாறடித்து வருகிறது. நான்கு நாட்களுக்கு ஒரு முறை வரும் குடிநீரை வைத்து சமாளிப்பதே பெரியபாடு. அதிலும், கழிவுநீர் கலந்து வந்தால் மக்கள் எப்படி தான் சமாளிக்க முடியும்?தேர்தலுக்காக அமைக்கப்பட்ட ரோடுகள் ஆங்காங்கே நொறுங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த 'தரமான' ரோடுகளுக்கு அனுமதி அளித்தவர்கள், பரிந்துரைத்தவர்கள், ஒப்புதல் அளித்தவர்கள், ஒப்பந்தம் பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கும் அதிகாரிகள் முன்வரவில்லை.தேர்தல் பணிகளால் தான் மாநகராட்சியின் செயல்பாடுகள் முடங்கியிருப்பதாக அனைவரும் நினைத்திருந்தனர். ஓட்டுப்பதிவு முடிந்து அதிகாரிகள் பணிக்கு திரும்பிய பிறகும் மாநகராட்சியின் செயல்பாட்டில் முடக்கம் தொடர்கிறது.



சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 08, 2014 10:19 am

ராமநாதபுரம் ! வாரச்சந்தையில் மழை நீருடன், கழிவு நீர் தேக்கம்; வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வாரச்சந்தையில் மழைநீருடன், கழிவுநீர் தேங்கி நின்றதால் பொருட்கள் வாங்க வந்த மக்கள் துர்நாற்றத்தால் அவதியடைந்தனர். வியாபாரம் பாதித்ததால் வியாபாரிகள் நஷ்டம் அடைந்தனர்.

ராமநாதபுரத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழையால் பாரதிநகர், ஓம்சக்தி நகர், சந்தைக்கடை, நீலகண்டி, கேணிக்கரை, மாரியம்மன்கோயில், அரண்மனை பகுதி, கறிக்கடை சந்து, காய்கறி மார்க்கெட், வாரச் சந்தை உள்பட 25க்கும் மேற்பட்ட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. புதன் கிழமைதோறும் கூடும் வாரச்சந்தையில் தேங்கிய தண்ணீர் வெளியேற்றப்படாமல் சேறும், சகதியுமாக உள்ளது. கற்கள் நிறைந்து கரடு, முரடான இடங்களில் கடை விரிக்க இயலாமல் வெளியூர் வியாபாரிகள் சிரமம் அடைந்தனர். காலியாக இருந்த இடங்களில் கடை விரிக்கச் சென்றவர்களிடம் அடுத்தடுத்த கடைகாரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சந்தைக் கடை உள்புறத்தில் வழக்கமாக கடை விரிப்போர், நுழைவு பகுதி துவங்கி உழவர்சந்தை ரோடு கடைகள் அமைத்தனர். சில வியாபாரிகள் வாரச்சந்தை நடைபாதையில் கடைகள் அமைத்ததால் பொருட்கள் வாங்க வந்த மக்கள் அவதியடைந்தனர். அரசு பஸ்கள், இதர வாகனங்கள் வந்து செல்வதில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.

பரமக்குடியை சேர்ந்த வியாபாரி, முருகலட்சுமி: இங்கு அடிப்படை வசதிகள் இல்லை. துர்நாற்ற தண்ணீர் சூழ்ந்த இடத்தில் வியாபாரம் செய்தேன். காய்கறிகளை வாங்குவதற்கு மக்கள் முகம் சுழித்தனர். சேதமடைந்த கடைகளை புதுப்பித்து கொடுத்தால் மழை, வெயிலுக்கு பிரச்னையின்றி வியாபாரம் செய்வோம்' என்றார்.

பரமக்குடி, மளிகை வியாபாரி, செல்வசேகரி: அனைத்து வாரச்சந்தைகளிலும் வியாபாரம் செய்கிறேன். நேற்று இங்கு வியாபாரத்திற்கு வந்தேன். வழக்கமாக நான் கடை விரிக்கும் இடத்தில் மழைநீர் தேங்கி இருந்தது. வேறிடத்தில் கடை அமைக்கச் சென்ற என்னை பக்கத்து கடைக்காரர்கள் தடுத்தனர். ஒரு கடைக்கு ரூ.100 குத்தகை வசூலிக்கின்றனர். எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. சந்தையில் வியாபாரம் செய்ய வந்த காலத்தில் இருந்து இதே நிலை தான் உள்ளது. குண்டும்,குழியுமாக உள்ள இடத்தை சமப்படுத்த வேண்டும்' என்றார். புது பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகளுக்காக வாரச்சந்தை செப்பனிடப்படாமல் உள்ளது. கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. வாரச்சந்தையில் போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 08, 2014 4:17 pm

இங்கேயும் 3 நாளாக நல்ல மழைபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Fri May 09, 2014 10:56 am

மழை வந்தாலும் அவதி என்ற செய்திதான், மழை இல்லை என்றாலும் அவதி என்ற செய்திதான்.  சோகம் 



கிருஷ்ணா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக