புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10வெற்றிவேல்! வீரவேல்! Poll_m10வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10வெற்றிவேல்! வீரவேல்! Poll_m10வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10வெற்றிவேல்! வீரவேல்! Poll_m10வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10வெற்றிவேல்! வீரவேல்! Poll_m10வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10 
4 Posts - 3%
bala_t
வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10வெற்றிவேல்! வீரவேல்! Poll_m10வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10 
1 Post - 1%
prajai
வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10வெற்றிவேல்! வீரவேல்! Poll_m10வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10வெற்றிவேல்! வீரவேல்! Poll_m10வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10வெற்றிவேல்! வீரவேல்! Poll_m10வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10வெற்றிவேல்! வீரவேல்! Poll_m10வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10 
293 Posts - 42%
heezulia
வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10வெற்றிவேல்! வீரவேல்! Poll_m10வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10வெற்றிவேல்! வீரவேல்! Poll_m10வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10வெற்றிவேல்! வீரவேல்! Poll_m10வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10வெற்றிவேல்! வீரவேல்! Poll_m10வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10வெற்றிவேல்! வீரவேல்! Poll_m10வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10வெற்றிவேல்! வீரவேல்! Poll_m10வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10 
6 Posts - 1%
prajai
வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10வெற்றிவேல்! வீரவேல்! Poll_m10வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10 
5 Posts - 1%
manikavi
வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10வெற்றிவேல்! வீரவேல்! Poll_m10வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10வெற்றிவேல்! வீரவேல்! Poll_m10வெற்றிவேல்! வீரவேல்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிவேல்! வீரவேல்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 08, 2014 10:40 am

சக்தியிடம் வேல் வாங்கி, அசுர சம்ஹாரம் செய்தான் முருகப் பெருமான். அப்படி ‘வேல் வாங்கும் வைபவம்’ இன்றும் சிக்கலில் விசேஷமான விழா. அந்த வேலை வாங்கியதும், உற்சவமூர்த்தியான முருகனின் திருமேனியில் வியர்வை துளிர்க்கும் அதிசயத்தை, நாகப்பட்டினம் அருகிலுள்ள ‘சிக்கல்’ திருத்தலத்தில் தரிசிக்கலாம். இதை வட்டார வழக்கில், ‘சிக்கலில் வேல்வாங்கி செந்தூரில் சம்ஹாரம்’ என்று சொல்வார்கள்.
-
வெற்றிவேல்! வீரவேல்! L7Rt8UABTJaHPbzNsYgA+p4b
-
‘வேல்’ என்னும் சொல், ‘வெல்’ என்பதன் நீட்சியாகவே அமைந்திருக்கிறது; ‘வெற்றிதான் எப்போதும்’ என்பதை நுட்பமாக உணர்த்திக் கொண்டிருக்கிறது.


காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த பல கோயில்களில், வேலுக்கான கோயிலும் ஒன்று. அதை ‘வேற்கோட்டம்’ என்றே குறிப்பிடுகின்றன இலக்கியங்கள். இன்றும், இலங்கையின் புகழ்மிக்க கோயிலான நல்லூர் கந்தசாமி கோயிலின் மூலஸ்தானத்தை அலங்கரிப்பது வேல்தான். மதுரை பைக்காரா அருகே உள்ள ஆலயத்திலும் மூலவர் வேல்; காரைக்குடியை அடுத்த குன்றக்குடிக்கு அருகே மயிலாடும்பாறை என்னுமிடத்தில் சமீபத்தில் அமைந்துள்ள புதிய ஆலயத்திலும் மூலவராக ‘வேல்’ அமைந்திருக்கிறது.

இந்த வேலை ஏந்தியதால்தான், வேலன், வேலன், வேலாயுதன் என்றெல்லாம் பெயர்கொண்டான் முருகப்பெருமான். இந்த வேலின் சிறப்பைப் பற்றி ‘வேல்விருத்தம்’, ‘வேல் மாறல்’ என்றெல்லாம் அடியார்கள் பாடியிருக்கிறார்கள். ‘வழிக்குத் துணை வடிவேல்’ என்றே வழக்குமொழி.

ஐந்து வயதாகியும் பேசவில்லையே என்று வருந்தினார்கள் பெற்றவர்கள். குழந்தையைத் தூக்கி வந்து செந்திலாண்டவனின் சன்னிதியில் கிடத்தினார்கள். கண்ணீர் சிந்திக் கலங்கினார்கள். அவர்கள் மனமொன்றி, கண்மூடித் துதித்த நேரத்தில், செந்திலாண்டவன் குழந்தையைப் பார்த்தான். அதன் வாயைத் திறக்கச் சொன்னான். குழந்தையின் நாக்கில், தம்முடைய வேலால் ‘ஷடாக்ஷரத்தை’ எழுதினான். அதாவது, முருகனின் அருளைப் பெருவதற்கான ஆறெழுத்து.

ஆறுக்கும் முருகனுக்கும் நிரம்பத் தொடர்புண்டு. சிவபிரானின் ஆறு நெற்றிக் கண்களில் இருந்தும் ஆறு நெருப்புப் பொறிகள் வெளிப்பட்டன. அவற்றை ஓர் ஆறு (கங்கை) தாங்கிச் சென்று, சரவணப் பொய்கையில் சேர்த்தது. அந்தப் பொறிகள் ஆறும், ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக உருக்கொண்டனர். அவற்றை ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். இப்படி ஆறு என்பது முருகனுக்கே உரித்தானது. அவனுக்குரிய மந்திரத்தின் அட்சரங்கள் ஆறு. அவனுக்குரிய யந்திரம் அறுகோணம். தவிர, ‘ஆறு’ என்பதற்கு வழி என்றும் பொருள். தம் பக்தர்களுக்கு வழியாகவும், அந்த வழியில் அடையப்படும் பொருளாகவும் விளங்குபவனும் முருகன்தான்.

ஆறுக்குரியவன், தம் ஆறெழுத்து மந்திரத்தை குழந்தையின் நாவில் எழுதியதும், பேச்சு வராத குழந்தை ‘பூமேவு செங்கமலப் புத்தேளும்…’ என்று பாடத் தொடங்கியது. அந்தப் பாடலில், தனக்கு அருள்புரிந்த பெருமானை வர்ணிக்கிறது.

பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு
திருத்தோளும்
அச்சம் அகற்றும் அயில்வேலும் கச்சை
திருவரையும் சீரடியும் ஈராறு
அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் விரிகிரணம்
சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்…


கலிவெண்பா இப்படித்தான் பிறந்தது. குமரகுருபரர் என்று புகழ்பெற்ற மகானின் சரிதம் இது.

குமரகுருபரர் மட்டுமா? ஸ்ரீசங்கரர், கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரி நாதர், பாம்பன் குமரகுருதாச ஸ்வாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகள், திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள், வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள், தேவராய ஸ்வாமிகள், ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதர், பகழிக் கூத்தர், பொய்யாமொழிப் புலவர், வாரியார் ஸ்வாமிகள்… என்று முருகன் அடியார்களின் பட்டியல் மிக நீளமானது.
-
வெற்றிவேல்! வீரவேல்! LqA9wcsPQ22enJt9weuE+p4a
-

அடிப்புறம் அகன்றும், முகப்பு கூர்மையாகவும் அமைந்த வேலை, ஞானத்தின் குறியீடாகவும் சொல்வார்கள். அதை சீவக சிந்தாமணியில் திருத்தக்க தேவர் குறிப்பிடுகிறார். விஜயை என்ற பெண், அறிவு பெற்றாள்; தெளிவுற்றாள் என்று சொல்லும்போது, ‘வேல் பெற்று எழுந்தாள்’ என்கிறார்.

முருக பக்தரான அடியார்கள், வேலின் சிறப்பை எவ்வளவுதான் சிறப்பித்துப் பாடினாலும் வியப்பில்லை. ஆனால், சிலப்பதிகாரத்தில், இளங்கோவடிகள் விவரிக்கும்போது, அவருக்குள் இருந்த பேதமற்ற மனோபாவமும், எடுத்த கருத்தை குறைவின்றிச் சொல்லும் கவிஞனின் பெருமிதமும் வியப்பூட்டுகின்றன.

சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றம்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல் அன்றே
பார் இருளை பௌவத்தின் உள்புக்கு பண்டொருநாள்
சூர்மா தடிந்த சுடர் இலைய வெள்வேலே!

கவனித்துப் பார்த்தால், முருகனின் தலங்கள், அவதாரச் சிறப்பு, அதில் முதன்மை பெறும் ஆயுதமான வேல் அத் தனையும் இதில் இடம்பெறுகின்றன. திருச்செந்தூர், திருசெங்கோடு, திருவேரகம் ஆகிய தலங்களில் எழுந்தருளியுள்ள இறைவனான முருகனின் வேல், கடலுள் புகுந்தது; சூரனை வீழ்த்தியது; அது சுடர் விடுகின்ற இலை போன்று அகன்றும், கூரியதுமான, வெற்றிவேல்!

இளங்கோவடிகள் என்று தெரியாமல் படித்தால் இன்னொரு முருகபக்தர் என்று நினைக்கின்ற வடிவில் அமைந்துள்ளது அடிகளின் செய்யுள்.
-
சேயோன் மேய மைவரை உலகு’ என்று தொல்காப்பியம் குறிப்பிடுவதால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது முருக வழிபாடு. ‘செவ்வேள்’ என்றும் ‘செய்’ என்றும் முருகனைக் குறிப்பிடுகின்றன சங்க இலக்கியங்கள். திருப்பரங்குன்றத்தின் திருவிழாவை பரிபாடல் விளக்குகிறது. காலங்காலமாக, மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட வேலாயுதனைப் பற்றிச் சொல்லும்போது வாரியார் சுவாமிகள் சொன்னார்: “வேலை வேலை என்று ஏன் கதறுகிறீர்கள்? வேலை கொண்டவன் யார்? அவனிடம் கேளுங்கள். வேலை நிச்சயம் கிடைக்கும்.

‘வேலை வணங்குவதே வேலை’ என்று இருங்கள். வாழ்க்கை சிறக்கும்.”

-
அருமைதான்; வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?!
-
வித்யாரண்யன் - கல்கி தீபாவளி மலர்


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 08, 2014 1:20 pm

வெற்றிவேல்! வீரவேல்! 103459460

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Dec 08, 2014 2:25 pm

அருமை அருமை....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வெற்றிவேல்! வீரவேல்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக