புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
26 Posts - 38%
prajai
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
3 Posts - 4%
Jenila
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
1 Post - 1%
M. Priya
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
7 Posts - 6%
prajai
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
5 Posts - 4%
Jenila
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
4 Posts - 3%
Rutu
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
2 Posts - 2%
manikavi
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 12, 2017 5:41 pm


இத்தாலிய மாலுமியான கிறிஸ்டோபர் கொலம்பஸ்,
ஸ்பெயின் நாட்டு அரசின் உதவியினைப் பெற்று,
புதிய கடல் மார்க்கங்கள் கண்டுபிடிக்கும் பணியில்
ஈடுபட்டார்.

தனது நீண்ட நெடிய கடல் பயணத்தில் கொலம்பஸ்
கி.பி. 1492ஆம் ஆண்டில் வட
அமெரிக்காவின் அருகில் மேற்கிந்திய தீவுகள் என்று
பின்னாட்களில் அறிவிக்கப்பட்ட திவுகளில் ஒன்றாகிய
ஹைட்டி என்ற தீவில் கரையேறினார்.
அந்தத் தீவிற்கு இஸ்பேனியோலா என்று பெயர் சூட்டினார்.

கொலம்பஸ் தன்னோடு கொண்டுவந்த வெடிமருந்துகளையும்
துப்பாக்கிகளையும் பயன்படுத்தி, அங்கிருந்த பூர்விகக்
குடியினரை அச்சுறுத்தி அடிமைப்படுத்தி அவர்களைக்
கொண்டு பல வேலைகளைச் செய்து கொண்டார்.

இஸ்பேனியோலா தீவில் ஒரு சிறிய குடியிருப்பினை
உருவாக்கி, தன்னோடு வந்திருந்த ஸ்பெயின் நாட்டு
மாலுமிகளில் சுமார் நூறு நபர்களை குடியமர்த்திவிட்டு,
இவர் ஸ்பெயின்நாட்டிற்கு திரும்பினார்.

இரண்டு ஆண்டுகளுக்கப் பின்னர் 1495ம் ஆண்டில்
கொலம்பஸ் மீண்டும் இஸ்பேனியோலாவிற்கு ஒரு
கப்பலில் இன்னும் சில மாலுமிகளுடன் வந்து சேர்ந்தார்.

இங்கே இவர் அமைத்துக் கொடுத்திருந்த குடியிருப்புகள்
முற்றிலுமாக சிதைக்கப்பட்டிருந்தன. குடியமர்த்தப்பட்ட
ஸ்பெயின் நாட்டினர் எவரும் தென்படவில்லை.

அந்தத் தீவில் சுற்றித் திரிந்து ஒரு சில ஸ்பெயின் நாட்டு
மாலுமிகளைக் கண்டார்.

அவர்கள் பூர்விகக் குடியினருக்குப் பயந்து காடுகளில்
ஒளிந்து வாழ்வதாகவும் அதற்கான காரணத்தையும்
கூறினார்கள்.

கொலம்பஸ் அவரகளை விட்டுச் சென்றதிலிருந்து ஓராண்டு
காலத்திற்குக் கைவசமிருந்த வெடிமருந்து, துப்பாக்கி
ஆகியவற்றைக் கொண்டு பூர்வீகக் குடியினரை அச்சுறுத்தி
அடிமைப்படுத்திக் கொடுமைகள் செய்து வந்துள்ளனர்.

இவர்களிடமிருந்த வெடிமருந்துகள் தீர்ந்து போனதைப்
பூர்விகக் குடியினர் தெரிந்து கொண்டு விட்டனர். எனவே
அவர்கள் ஸ்பெயின் நாட்டினரது கட்டுப்பாட்டிலிருந்து
விடுபட்ட தோடல்லாமல் சண்டையிட்டு ஸ்பெயின் நாட்டின்
பலரை கொன்றனர். குடியிருப்புகளை அழித்துவிட்டனர்.

தப்பிப் பிழைத்த சில ஸ்பெயின் நாட்டு மாலுமிகள் காட்டில்
ஒளிந்து வாழ்வதாகவும் கொலம்பஸிடம் சொன்னார்கள்.

கொலம்பஸ் தன் கைவசமிருந்த வெடிமருந்து, துப்பாக்கிகளை
கையாண்டு, மீண்டும் பூர்வீகக் குடியினரைத் தனது
கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். இம்முறை அவர்களைத்
தந்திரமாகக் கையாளத் திட்டமிட்டார்.

கொலம்பஸ் சிறந்த கடலோடி மட்டுமல்ல; ஒரு தேர்ந்த
வானியல் நிபுணருமாவார். அன்றைய மறுநாள் முழு
சூரிய கிரகணம் நிகழவிருப்பதைத் துல்லியமாக
அறிந்திருந்தார்.
-
-------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 12, 2017 5:41 pm


கொலம்பஸ் பூர்வீகக் குடியினரிடம், நாங்கள் கடவுளின்
தூதுவர்கள், எங்களை நீங்கள் எதிர்த்துப் பகைத்து
கொண்டால் கடவுளிடம் பிரார்த்தனை செய்து, உங்களுக்குப்
பல கெடுதல்களும் தீங்குகளும் ஏற்படுமாறு செய்து
விடுவோம். நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.

நாளை முதல் சூரியனின் ஒளி உங்களுக்குக் கிடைக்காமல்
மறைக்கப் போகிறேன் என்றார்.

மறுநாள் காலைப்பொழுதில் சூரியன் உதயமான சிறிது
நேரத்தில் சூரிய கிரகணம் ஆரம்பமானது. சூரியன் சிறிது
சிறிதாக மறைந்து முழுமையான இருள் ஏற்பட்டது.

பூர்வீகக் குடியினர் அஞ்சிநடுநடுங்கி, கொலம்பஸின்
கால்களில்விழுந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று
கதறினார்கள்.

நான் உங்களுக்காகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்து
இப்போது ஏற்பட்டிருக்கின்ற இருளை நீக்கி, ஒளியினை
மீண்டும் கொண்டு வருகிறேன் என்று கூறிய கொலம்பஸ்
மண்டியிட்டு, பிரார்த்தனை செய்வது போல் பாவித்து
மறைவிடத்திலிருந்து மணற்கடிகையில் நேரத்தைக்
கணக்கிட்டுக் கொண்டிருந்தார்.

சூரிய கிரகணம் விடுகின்ற நேரம் வந்தது.

கடவுள் எனது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு விட்டார்.
இன்னும் சிறிதுநேரத்தில் மெல்ல மெல்ல இருள் அகன்று
ஒளி கிடைக்கும் என்றார்.

சூரிய கிரகணம் விலக ஆரம்பித்தது. கொஞ்சம்,
கொஞ்சமாக சூரிய ஒளி தெரிய ஆரம்பித்தது. பூர்வீகக்
குடியினருக்கு கொலம்பஸ் தெய்வமாகவே ஆகிவிட்டார்.
அவரிடம் அடிபணிந்து தங்களை அவருடைய
அடிமையாக்கிக் கொண்டார்கள்.

இவ்வாறு கொலம்பஸ் மேற்கிந்தியத் தீவின் பூர்வீகக்
குடியினரை அடிமைப் படுத்தி, அவர்களைச் சுரண்டியதுடன்
அங்கிருந்த ஏராளமான செல்வங்களை ஸ்பெயின்
நாட்டிற்கு கொண்டு வந்து குவித்தார் என்பது வரலாற்று
உண்மையாகும்.

மேற்கிந்தியர்களின் நாடோடிப் பாடல்களில் இன்றளவும்
கொலம்பஸ் ஒரு ஏமாற்றுக்காரர் என்றே வசை
பாடப்படுகிறது.
-
-----------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 12, 2017 5:42 pm



-
இதேபோன்ற சூரிய கிரகணத் தொடர்பாக ஏற்பட்ட
மற்றுமொரு வரலாற்றை நிகழ்வைப் பார்ப்போம்.

அரேபியா நாட்டில் தோன்றிய தீர்க்கதரிசி முகம்மது
நபியர்கள் இறைவன் ஒருவன்தான் என்று இஸ்லாமிய
கொள்கையினை அங்கே போதித்து வந்தார்கள்.

அரேபியாவில் அப்போது வசித்து வந்த பூர்வ குடிமக்கள்
அவரதுபோதனைகளை ஏற்க மறுத்ததோடல்லாமல்,
அவரை இழித்துரைத்தும் ஏளனப்படுத்தியும்
பலவிதமான இடையூறுகளைச் செய்தார்கள்.

அவ்வாறான காலகட்டத்தில் கி.பி. 632ஆம் ஆண்டு ஜனவரி
மாதம் 27ம் தேதியன்று நபிகளின் மகன் இபுறாஹிம் என்ற
இரண்டு வயது பாலகன் இறந்து விட்டார்.

அன்றைய தினம் தற்செயலாக பூரண சூரிய கிரகணம்
ஏற்பட்டு, மதீனா நகரமே இருளில் மூழ்கியது.

இதனைக் கண்ணுற்ற பூரவ குடிமக்கள் முகம்மது நபி
உண்மையிலேயே இறைதூதராக தீர்க்கதரிசியாக இருப்பார்
போலும், அதனால்தான் அவரது மகனின் இறப்பிற்கு
சூரியனே இருள் சூழ்ந்து துக்கம் அனுஷ்டிக்கிறது என்று
பேசினார்கள், நம்பினார்கள்.

முகம்மது அவரகளே நீங்கள் உமையானவர்தான்.
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். உங்களது
மகனின் இறப்பிற்கு சூரியனே துக்கம் அனுஷ்டிக்கிறது
அதனால்தான் நாங்கள் நம்புகிறோம் என்றார்கள்.

அவர்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு,
நபியவர்கள், சூரியன் எனது மகனின் இழப்பிற்காகத்தான்
துக்கம் காக்கிறது என்று சொல்லியிருப்பாரேயாயின்,
அரபு மக்கள் அத்துணை பேர்களும் ஒரே பொழுதில்
இவரத கொள்கையினை அட்டியின்றி ஏற்றிருப்பார்கள்.

அன்றே மதீனா நகரத்து மக்கள் அனைவரும் அவரது
கட்டளைக்க கட்டுப்பட்டவர்களாகி இருப்பார்கள்.

ஆனால் முகம்மது நபியவர்கள் சூரியனும் சந்திரனும்,
பூமியும் அதனதன் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.
இந்த சூரிய கிரகணம் என்பது ஒரு குறிப்பிட்ட கால
அளவில் ஏற்படக்கூடிய நிகழ்வு.

எனது மகனின் இறப்பிற்கு இதற்கும் எந்தவிதமான
தொடர்பும் கிடையாது என்று தெளிவுபட உரைத்தார்கள்.

இதனைக் கேட்டதும், அந்த பூர்வீகக் குடியினர் நபிகர்
மீது கொண்ட திடீர் நம்பிக்கையைக் கைவிட்டு,
அவரைவிட்டு விலகிச் சென்றார்கள்.

மீ்pடும், பழையபடி எதிர்ப்பையும் ஏளனத்தையும்
தொடர்ந்தார்கள். பிற்றைய நாளில் நபிகளாரின்
போதனை ஏற்கப்பட்டு அவர்களால் பின்பற்றப்பட்டது
என்பது அவர்கள் உண்மையானவர் என்பதால் ஏற்பட்ட
மாற்றமாகும்.

சத்யமேவ ஜெயதே!
-
-----------------------------------------

- கவிஞர் மு. தாஜுதீன்
நன்றி - மஞ்சரி
தினமலர்
 





Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக