புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களுக்கான சிறப்பு உணவு... பூப்பெய்தல் முதல் மெனோபாஸ் வரை !
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெண்களுக்கான 30 வகை சிறப்பு உணவு... பூப்பெய்தல் முதல் மெனோபாஸ் வரை !
எள்ளுருண்டை
தேவை: கறுப்பு எள் - 100 கிராம், துருவிய வெல்லம் - 100 கிராம், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
முதலில் வெறும் கடாயில் கறுப்பு எள்ளை வெடிக்கும் வரை நன்கு வறுத்து ஆறவிடவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு சுற்று சுற்றி கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன் துருவிய வெல்லம் சேர்த்து மேலும் இரண்டு சுற்று சுற்றி, பின்னர் நல்லெண்ணெய்விட்டு நன்கு கலந்து சிறிய சிறிய உருண்டைகளாகப் பிடித்துவைக்கவும். இதை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, 20 நாள்கள் வரை கெடாமல் வைத்துப் பயன்படுத்தலாம். விருப்பப்பட்டால் ஒரு கைப்பிடி வறுத்த வேர்க்கடலையும் சேர்க்கலாம்.
சிறப்பு: கறுப்பு எள் பெண்களுக்கு நன்மை அளிக்கும். இது கருப்பைக்கு மிகவும் நல்லது. இதில் அதிக அளவு உள்ள கால்சியம் சத்து எலும்புகளை வலுப்படுத்தும். பற்களை உறுதிப்படுத்தும். மாதவிடாய் நேரத்தில் வரும் இடுப்பு வலியையும் சரிசெய்யும். இதில் இருக்கும் மெக்னீசியம் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். இரும்புச்சத்து ரத்த விருத்திக்கு உதவும்; ஒழுங்கற்ற மாதவிடாய்ப் பிரச்னையையும் சரிசெய்யும்.
எள்ளுருண்டை
தேவை: கறுப்பு எள் - 100 கிராம், துருவிய வெல்லம் - 100 கிராம், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
முதலில் வெறும் கடாயில் கறுப்பு எள்ளை வெடிக்கும் வரை நன்கு வறுத்து ஆறவிடவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு சுற்று சுற்றி கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன் துருவிய வெல்லம் சேர்த்து மேலும் இரண்டு சுற்று சுற்றி, பின்னர் நல்லெண்ணெய்விட்டு நன்கு கலந்து சிறிய சிறிய உருண்டைகளாகப் பிடித்துவைக்கவும். இதை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, 20 நாள்கள் வரை கெடாமல் வைத்துப் பயன்படுத்தலாம். விருப்பப்பட்டால் ஒரு கைப்பிடி வறுத்த வேர்க்கடலையும் சேர்க்கலாம்.
சிறப்பு: கறுப்பு எள் பெண்களுக்கு நன்மை அளிக்கும். இது கருப்பைக்கு மிகவும் நல்லது. இதில் அதிக அளவு உள்ள கால்சியம் சத்து எலும்புகளை வலுப்படுத்தும். பற்களை உறுதிப்படுத்தும். மாதவிடாய் நேரத்தில் வரும் இடுப்பு வலியையும் சரிசெய்யும். இதில் இருக்கும் மெக்னீசியம் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். இரும்புச்சத்து ரத்த விருத்திக்கு உதவும்; ஒழுங்கற்ற மாதவிடாய்ப் பிரச்னையையும் சரிசெய்யும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கவுனி அரிசி இடியாப்பம் !
தேவை: பதப்படுத்திய கவுனி அரிசி மாவு - ஒரு கப், தேங்காய் எண்ணெய் - கால் டீஸ்பூன், துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.
செய்முறை: முதலில் நீரை நன்கு கொதிக்கவிடவும். பிறகு அதில் உப்பு மற்றும் எண்ணெய்விட்டு வெந்நீரைச் சிறிது சிறிதாக மாவில் விட்டு நன்கு பிசையவும். இடியாப்ப நாழியில் மாவை வைத்துப் பிழிந்து ஆவியில் 6 – 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். அதன் மீது தேங்காய்த் துருவல் தூவிப் பரிமாறவும். இதைத் தேங்காய்ப்பால் அல்லது கடலை குருமாவுடன் ருசிக்கலாம்.
சிறப்பு: இது நார்மல் டெலிவரிக்கு உதவி செய்யும். இதில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. எனவே, எடையைக் குறைக்க உறுதுணை புரியும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க உதவும். பூப்படையும் பருவ நிலையில் உள்ள பெண்கள் இந்த அரிசியை வாரத்தில் இரண்டு முறையாவது எடுத்துக் கொள்ளலாம். இதை ஒரு பூப்பெய்தல் உணவு என்றும் கூறலாம். மனச்சோர்வையும் உடல் சோர்வையும் போக்கும்.
தேவை: பதப்படுத்திய கவுனி அரிசி மாவு - ஒரு கப், தேங்காய் எண்ணெய் - கால் டீஸ்பூன், துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.
செய்முறை: முதலில் நீரை நன்கு கொதிக்கவிடவும். பிறகு அதில் உப்பு மற்றும் எண்ணெய்விட்டு வெந்நீரைச் சிறிது சிறிதாக மாவில் விட்டு நன்கு பிசையவும். இடியாப்ப நாழியில் மாவை வைத்துப் பிழிந்து ஆவியில் 6 – 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். அதன் மீது தேங்காய்த் துருவல் தூவிப் பரிமாறவும். இதைத் தேங்காய்ப்பால் அல்லது கடலை குருமாவுடன் ருசிக்கலாம்.
சிறப்பு: இது நார்மல் டெலிவரிக்கு உதவி செய்யும். இதில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. எனவே, எடையைக் குறைக்க உறுதுணை புரியும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க உதவும். பூப்படையும் பருவ நிலையில் உள்ள பெண்கள் இந்த அரிசியை வாரத்தில் இரண்டு முறையாவது எடுத்துக் கொள்ளலாம். இதை ஒரு பூப்பெய்தல் உணவு என்றும் கூறலாம். மனச்சோர்வையும் உடல் சோர்வையும் போக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அக்கி ரொட்டி!
தேவை: பதப்படுத்திய மாப்பிள்ளை சம்பா அரிசி மாவு (அ) பதப்படுத்திய சாதாரண பச்சரிசி மாவு - ஒரு கப், இஞ்சி (துருவியது) - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, பெரிய வெங்காயம் - ஒன்று, நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, தண்ணீர் - தேவையான அளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், வாழையிலை - சிறியது.
தாளிக்க: கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்.
செய்முறை: முதலில் கடாயில் எண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிதம் செய்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இதை மாவில் போட்டு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு தளர பிசையவும். சிறிய வாழையிலையில் அடை வடிவில் ரொட்டிகளாகத் தட்டி, சூடான தவாவில் போட்டு எடுத்தால் ருசியான அக்கி ரொட்டி தயார்.
சிறப்பு: இது உடல் பலத்தைக் கூட்டும். ரத்தக் கொதிப்பு மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். இந்த அரிசி ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்புண்ணை சரிசெய்யும். நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்.
தேவை: பதப்படுத்திய மாப்பிள்ளை சம்பா அரிசி மாவு (அ) பதப்படுத்திய சாதாரண பச்சரிசி மாவு - ஒரு கப், இஞ்சி (துருவியது) - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, பெரிய வெங்காயம் - ஒன்று, நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, தண்ணீர் - தேவையான அளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், வாழையிலை - சிறியது.
தாளிக்க: கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்.
செய்முறை: முதலில் கடாயில் எண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிதம் செய்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இதை மாவில் போட்டு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு தளர பிசையவும். சிறிய வாழையிலையில் அடை வடிவில் ரொட்டிகளாகத் தட்டி, சூடான தவாவில் போட்டு எடுத்தால் ருசியான அக்கி ரொட்டி தயார்.
சிறப்பு: இது உடல் பலத்தைக் கூட்டும். ரத்தக் கொதிப்பு மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். இந்த அரிசி ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்புண்ணை சரிசெய்யும். நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெந்தயக்களி!
தேவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், வெந்தயம் - கால் கப், உளுந்து - ஒரு கைப்பிடி அளவு, கரைத்து வடிகட்டிய வெல்லம் (அ) கருப்பட்டிச்சாறு - 2 கப், நெய் (அ) எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசி, வெந்தயம், உளுந்தை மூன்று மணி நேரம் ஊறவைத்து அரைத்தெடுக்கவும். அரைத்த மாவை தண்ணீர்விட்டுச் சற்று நீர்க்கக் கரைத்து வைத்துக்கொள்ளவும். பிறகு அடிகனமான பாத்திரத்தில் அரைத்த மாவைச் சேர்த்து கட்டியில்லாமல் முக்கால் பதம் வெந்து சுருண்டு வரும் வரை நன்கு கலக்கவும். சிறிதளவு நல்லெண்ணெய் (அ) நெய் விட்டுக் கொள்ளலாம். பிறகு கரைத்து வடிகட்டிய வெல்லம் (அ) கருப்பட்டிச்சாறுவிட்டு நன்கு கலந்து அல்வா போல சுருள வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து, இறுதியில் நல்லெண்ணெய் (அ) நெய்விட்டு இறக்கி சூடாகச் சாப்பிடவும்.
சிறப்பு: இதில் நார்ச்சத்து அதிகம். உடல் சூட்டைத் தணித்து அடிவயிற்றைக் குளிர்ச்சியடையச் செய்யும். மலச்சிக்கலைப் போக்கும். புரதம், நீர்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல சத்துகளை உள்ளடக்கியது.
தேவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், வெந்தயம் - கால் கப், உளுந்து - ஒரு கைப்பிடி அளவு, கரைத்து வடிகட்டிய வெல்லம் (அ) கருப்பட்டிச்சாறு - 2 கப், நெய் (அ) எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசி, வெந்தயம், உளுந்தை மூன்று மணி நேரம் ஊறவைத்து அரைத்தெடுக்கவும். அரைத்த மாவை தண்ணீர்விட்டுச் சற்று நீர்க்கக் கரைத்து வைத்துக்கொள்ளவும். பிறகு அடிகனமான பாத்திரத்தில் அரைத்த மாவைச் சேர்த்து கட்டியில்லாமல் முக்கால் பதம் வெந்து சுருண்டு வரும் வரை நன்கு கலக்கவும். சிறிதளவு நல்லெண்ணெய் (அ) நெய் விட்டுக் கொள்ளலாம். பிறகு கரைத்து வடிகட்டிய வெல்லம் (அ) கருப்பட்டிச்சாறுவிட்டு நன்கு கலந்து அல்வா போல சுருள வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து, இறுதியில் நல்லெண்ணெய் (அ) நெய்விட்டு இறக்கி சூடாகச் சாப்பிடவும்.
சிறப்பு: இதில் நார்ச்சத்து அதிகம். உடல் சூட்டைத் தணித்து அடிவயிற்றைக் குளிர்ச்சியடையச் செய்யும். மலச்சிக்கலைப் போக்கும். புரதம், நீர்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல சத்துகளை உள்ளடக்கியது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கேழ்வரகு உருண்டை!
தேவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், வெல்லம் (துருவியது) - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - மிக சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை: முதலில் கேழ்வரகு மாவில் தேவையான அளவு தண்ணீர் கலந்து அதனுடன் சிட்டிகை உப்பு சேர்த்து சிறிய அடைகளாகச் சூடான கல்லில் தட்டி, மிகவும் சிறிதளவு எண்ணெய்விட்டு, வேகவைத்து எடுத்து ஆறவிடவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் அடைகளை உடைத்துப் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதனுடன் துருவிய வெல்லம் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இரண்டு சுற்று சுற்றி எடுத்து ஒரு பவுலில் சேர்த்து உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.
குறிப்பு: முதலில் இளகினாற்போல் இருக்கும். பிறகு ஆறியவுடன் இறுகிவிடும். விருப்பப்பட்டால் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ளலாம்.
சிறப்பு: இதில் கால்சியம் சத்து மிக அதிகம். ரத்தச் சோகையைச் சரிசெய்யும். எலும்புகளை வலுப்படுத்தும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும். `ஓவர் பிளீடிங்’கைக் கட்டுப்படுத்தும். கர்ப்பிணிகளுக்கு மிகவும் உகந்தது.
தேவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், வெல்லம் (துருவியது) - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - மிக சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை: முதலில் கேழ்வரகு மாவில் தேவையான அளவு தண்ணீர் கலந்து அதனுடன் சிட்டிகை உப்பு சேர்த்து சிறிய அடைகளாகச் சூடான கல்லில் தட்டி, மிகவும் சிறிதளவு எண்ணெய்விட்டு, வேகவைத்து எடுத்து ஆறவிடவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் அடைகளை உடைத்துப் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதனுடன் துருவிய வெல்லம் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இரண்டு சுற்று சுற்றி எடுத்து ஒரு பவுலில் சேர்த்து உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.
குறிப்பு: முதலில் இளகினாற்போல் இருக்கும். பிறகு ஆறியவுடன் இறுகிவிடும். விருப்பப்பட்டால் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ளலாம்.
சிறப்பு: இதில் கால்சியம் சத்து மிக அதிகம். ரத்தச் சோகையைச் சரிசெய்யும். எலும்புகளை வலுப்படுத்தும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும். `ஓவர் பிளீடிங்’கைக் கட்டுப்படுத்தும். கர்ப்பிணிகளுக்கு மிகவும் உகந்தது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவப்பரிசி காரப் பணியாரம் !
தேவை: சிவப்பரிசி - ஒரு கப், இட்லி அரிசி - ஒரு கப், கறுப்பு உளுந்து - அரை கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, இஞ்சி (துருவியது) - ஒரு டீஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்.
செய்முறை: முதலில் சிவப்பரிசி, இட்லி அரிசி, வெந்தயம், உளுந்தை எட்டு மணி நேரம் ஊறவைத்து அரைத்து, உப்பு கலந்து ஐந்து மணி நேரம் புளிக்கவிட்டு எடுத்து வைக்கவும். பிறகு கடாயில் நல்லெண்ணெய்விட்டு தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளிதம் செய்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் சேர்த்து நன்கு வதக்கி மாவில் கலக்கவும். குழிப்பணியாரச் சட்டியில் எண்ணெய் விட்டு, மாவை ஊற்றி எடுத்தால், கமகம ருசியான சிவப்பரிசி காரப் பணியாரம் ரெடி.
சிறப்பு: சிவப்பரிசி பாலிஷ் செய்யப்படாத அரிசி ஆகும். இதில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. செலினீயம், துத்தநாகம் போன்ற கனிமச்சத்துகள் அதிகம். வைட்டமின் சி சத்தும் அதிகம். ஆன்டி கேன்சர் ஏஜென்ட்ஸ் நிறைய உள்ளன.
தேவை: சிவப்பரிசி - ஒரு கப், இட்லி அரிசி - ஒரு கப், கறுப்பு உளுந்து - அரை கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, இஞ்சி (துருவியது) - ஒரு டீஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்.
செய்முறை: முதலில் சிவப்பரிசி, இட்லி அரிசி, வெந்தயம், உளுந்தை எட்டு மணி நேரம் ஊறவைத்து அரைத்து, உப்பு கலந்து ஐந்து மணி நேரம் புளிக்கவிட்டு எடுத்து வைக்கவும். பிறகு கடாயில் நல்லெண்ணெய்விட்டு தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளிதம் செய்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் சேர்த்து நன்கு வதக்கி மாவில் கலக்கவும். குழிப்பணியாரச் சட்டியில் எண்ணெய் விட்டு, மாவை ஊற்றி எடுத்தால், கமகம ருசியான சிவப்பரிசி காரப் பணியாரம் ரெடி.
சிறப்பு: சிவப்பரிசி பாலிஷ் செய்யப்படாத அரிசி ஆகும். இதில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. செலினீயம், துத்தநாகம் போன்ற கனிமச்சத்துகள் அதிகம். வைட்டமின் சி சத்தும் அதிகம். ஆன்டி கேன்சர் ஏஜென்ட்ஸ் நிறைய உள்ளன.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாழைப்பூ வடை
தேவை: சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய வாழைப்பூ, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு, பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்), பூண்டு - 8 பல், பச்சை மிளகாய் (அ) சிவப்பு மிளகாய் - 5, சோம்பு - ஒரு டீஸ்பூன், நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை (சேர்த்து) - ஒரு கைப்பிடி அளவு, பெரிய வெங்காயம் - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.
செய்முறை: முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சரிசியை ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் சோம்பு, இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து இரண்டு சுற்று சுற்றி, பிறகு ஊறிய பொருள்களையும் சேர்த்து கொரகொரப்பாகக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம் மற்றும் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து பிசையவும். மாவை வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
சிறப்பு: பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் நல்லது. கணையம் வலுப்பெறும். மாதவிடாய் நேரத்தில் வரும் அதீத உதிரப்போக்கைக் கட்டுப்படுத்தும். வெள்ளைப் படுதலைச் சரிசெய்யும். கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.
தேவை: சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய வாழைப்பூ, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு, பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்), பூண்டு - 8 பல், பச்சை மிளகாய் (அ) சிவப்பு மிளகாய் - 5, சோம்பு - ஒரு டீஸ்பூன், நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை (சேர்த்து) - ஒரு கைப்பிடி அளவு, பெரிய வெங்காயம் - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.
செய்முறை: முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சரிசியை ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் சோம்பு, இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து இரண்டு சுற்று சுற்றி, பிறகு ஊறிய பொருள்களையும் சேர்த்து கொரகொரப்பாகக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம் மற்றும் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து பிசையவும். மாவை வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
சிறப்பு: பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் நல்லது. கணையம் வலுப்பெறும். மாதவிடாய் நேரத்தில் வரும் அதீத உதிரப்போக்கைக் கட்டுப்படுத்தும். வெள்ளைப் படுதலைச் சரிசெய்யும். கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எள்ளுத் துவையல்
தேவை: கறுப்பு எள் - 100 கிராம், உளுத்தம்பருப்பு - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 6, புளி - நெல்லிக்காய் அளவு, தேங்காய் (துருவியது) - ஒரு கைப்பிடி அளவு, உப்பு -! தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: முதலில் வெறும் கடாயில் எள்ளை வெடிக்கும் வரை நன்கு வறுத்தெடுக்கவும். பிறகு ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் மற்றும் புளி சேர்த்து வதக்கவும். ஆறிய பிறகு எள்ளுடன் சேர்த்து, உப்பு கலந்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்தெடுக்கவும். தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைக் கொண்டு தாளிதம் செய்து சேர்த்தால், வீடே மணக்கும் அருமையான, சத்தான எள்ளு துவையல் ரெடி. இது உளுந்தங்கஞ்சி, தேங்காய்க்கஞ்சி, வெந்தயக்கஞ்சி ஆகியவற்றுக்குப் பிரமாதமாக இருக்கும்.
சிறப்பு: இதில் ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட், கரையும் நார்ச்சத்து, புரதம், மெக்னீசியம் போன்றவை அதிகளவில் உள்ளன. இது ஒழுங்கான மாதவிடாய் சுழற்சிக்குப் பெரிதும் உதவுகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது.
தேவை: கறுப்பு எள் - 100 கிராம், உளுத்தம்பருப்பு - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 6, புளி - நெல்லிக்காய் அளவு, தேங்காய் (துருவியது) - ஒரு கைப்பிடி அளவு, உப்பு -! தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: முதலில் வெறும் கடாயில் எள்ளை வெடிக்கும் வரை நன்கு வறுத்தெடுக்கவும். பிறகு ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் மற்றும் புளி சேர்த்து வதக்கவும். ஆறிய பிறகு எள்ளுடன் சேர்த்து, உப்பு கலந்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்தெடுக்கவும். தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைக் கொண்டு தாளிதம் செய்து சேர்த்தால், வீடே மணக்கும் அருமையான, சத்தான எள்ளு துவையல் ரெடி. இது உளுந்தங்கஞ்சி, தேங்காய்க்கஞ்சி, வெந்தயக்கஞ்சி ஆகியவற்றுக்குப் பிரமாதமாக இருக்கும்.
சிறப்பு: இதில் ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட், கரையும் நார்ச்சத்து, புரதம், மெக்னீசியம் போன்றவை அதிகளவில் உள்ளன. இது ஒழுங்கான மாதவிடாய் சுழற்சிக்குப் பெரிதும் உதவுகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேங்காய்க் கஞ்சி
தேவை: வரகரிசி, குதிரைவாலி அரிசி அல்லது பச்சரிசி - ஒரு கப், தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு, பூண்டு - 10 பல், சீரகம் - அரை டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், தேங்காய்ப்பால் - 200 மில்லி, தண்ணீர் - 4 கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முதலில் ஒரு குக்கரில் கழுவி சுத்தம் செய்த அரிசியுடன் தேங்காய்த் துருவல், பூண்டு, சீரகம், வெந்தயம், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஐந்து விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் கடைந்து, அதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து சூடாகப் பருகவும். இதற்கு எள்ளுத் துவையல் அருமையாக இருக்கும். இதைக் காலை நேர சிற்றுண்டியாக அனைவரும் உண்ணலாம்.
சிறப்பு: இது உடல்சூட்டைத் தணிக்கும். கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். `ஓவர் ப்ளீடிங்’கைக் கட்டுப்படுத்தும். வறட்டு இருமலையும் கட்டுப்படுத்தும். தலைமுடியையும் சருமத்தையும் மினுமினுப்பாக்கும். இந்த உணவை மாதவிடாய் நேரங்களில் எடுக்கும்போது வயிற்றுவலியைச் சரிசெய்து சோர்வைப் போக்குகிறது. இதில் வெந்தயம், பூண்டு சேருவதால் இது ஒரு சிறந்த ஊட்டச்சத்து கஞ்சியாக இருக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கும் சிறந்தது.
தேவை: வரகரிசி, குதிரைவாலி அரிசி அல்லது பச்சரிசி - ஒரு கப், தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு, பூண்டு - 10 பல், சீரகம் - அரை டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், தேங்காய்ப்பால் - 200 மில்லி, தண்ணீர் - 4 கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முதலில் ஒரு குக்கரில் கழுவி சுத்தம் செய்த அரிசியுடன் தேங்காய்த் துருவல், பூண்டு, சீரகம், வெந்தயம், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஐந்து விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் கடைந்து, அதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து சூடாகப் பருகவும். இதற்கு எள்ளுத் துவையல் அருமையாக இருக்கும். இதைக் காலை நேர சிற்றுண்டியாக அனைவரும் உண்ணலாம்.
சிறப்பு: இது உடல்சூட்டைத் தணிக்கும். கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். `ஓவர் ப்ளீடிங்’கைக் கட்டுப்படுத்தும். வறட்டு இருமலையும் கட்டுப்படுத்தும். தலைமுடியையும் சருமத்தையும் மினுமினுப்பாக்கும். இந்த உணவை மாதவிடாய் நேரங்களில் எடுக்கும்போது வயிற்றுவலியைச் சரிசெய்து சோர்வைப் போக்குகிறது. இதில் வெந்தயம், பூண்டு சேருவதால் இது ஒரு சிறந்த ஊட்டச்சத்து கஞ்சியாக இருக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கும் சிறந்தது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கருப்பட்டி கவுனி அரிசி பணியாரம்
தேவை: கவுனி அரிசி - 200 கிராம், கறுப்பு உளுந்து - 50 கிராம், கருப்பட்டி - 150 - 200 கிராம், தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு, நெய்யில் வறுத்த முந்திரி - 10, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை: முதலில் அரிசி மற்றும் உளுந்தைச் சேர்த்து ஆறு மணி நேரம் ஊறவிட்டு நன்கு அரைத்து முதல் நாள் இரவே எடுத்து வைக்கவும். பிறகு அதில் சிட்டிகை உப்பு மற்றும் ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல், முந்திரி ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து வைக்கவும். கருப்பட்டியைச் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து கொதிக்கவிட்டு வடிகட்டி மாவில் சேர்த்து, பணியார மாவு பதத்துக்குக் கலந்து வைக்கவும். பிறகு குழிப்பணியாரச் சட்டியில் நல்லெண்ணெய் அல்லது நெய்விட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மாவை ஊற்றி நன்கு வெந்ததும் எடுக்கவும்.
சிறப்பு: இது ரத்தத்தைச் சுத்திகரிக்கும். இடுப்பு எலும்பை உறுதிபெறச் செய்யும். பாலூட்டும் தாய்மார்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் சிறந்தது.
தேவை: கவுனி அரிசி - 200 கிராம், கறுப்பு உளுந்து - 50 கிராம், கருப்பட்டி - 150 - 200 கிராம், தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு, நெய்யில் வறுத்த முந்திரி - 10, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை: முதலில் அரிசி மற்றும் உளுந்தைச் சேர்த்து ஆறு மணி நேரம் ஊறவிட்டு நன்கு அரைத்து முதல் நாள் இரவே எடுத்து வைக்கவும். பிறகு அதில் சிட்டிகை உப்பு மற்றும் ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல், முந்திரி ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து வைக்கவும். கருப்பட்டியைச் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து கொதிக்கவிட்டு வடிகட்டி மாவில் சேர்த்து, பணியார மாவு பதத்துக்குக் கலந்து வைக்கவும். பிறகு குழிப்பணியாரச் சட்டியில் நல்லெண்ணெய் அல்லது நெய்விட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மாவை ஊற்றி நன்கு வெந்ததும் எடுக்கவும்.
சிறப்பு: இது ரத்தத்தைச் சுத்திகரிக்கும். இடுப்பு எலும்பை உறுதிபெறச் செய்யும். பாலூட்டும் தாய்மார்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் சிறந்தது.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|