புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
69 Posts - 58%
heezulia
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
111 Posts - 59%
heezulia
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 10:40 pm

திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத் திருத்தலம் 108 வைணவ திவ்ய ஷேத்திரங்களில் ஒன்றாகும். ஸ்ரீ தேசிகரால் தோத்திரம் செய்யப்பட்டது இந்தத் தலம்.

சென்னையிலிருந்து ஆற்காடு, ஆரணி, வேலூர், சித்தூர், குடியாத்தம், கிருஷ்ணகிரி செல்லும் பேருந்துகள் யாவும் பாலுச்செட்டி சத்திரம் என்னும் ஊரில் நிற்கும். அங்கு இறங்கி ஐந்து நிமிட நேரம் நடந்தால் இத் திருத்தலத்தை அடையலாம்.

ஸ்ரீ இராமானுஜரின் முதல் குருவான யாதவப் பிரகாசர் வாழ்ந்த இடம் இது. எம் பாரும் இங்குதான் யாதவரிடம் வேதாந்தம் பயின்றார்.

பதின்மூன்றாம் நூற்றாண்டில் சுந்தரபாண்டியனால் இதன் முன் மண்டபம் கட்டப்பட்டது என்பதை இங்குள்ள கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன.

ஜடாயு போரிட்ட திருத்தலம்

ஜடாயு - ராவணன் இடையே நிகழ்ந்த போரில், இறக்கைகள் வெட்டப்பட்டு உயிரைக் கையில் பிடித்தபடி ராமனுக்காகக் காத்திருந்தார் ஜடாயு. ராமச்சந்திரமூர்த்தி அவ்விடம் வந்தபோது ஜடாயு அவரிடம் விவரமெல்லாம் தெரிவித்தார். பின் அவர் ஆண்டவனின் திருவடி சேர்ந்தார். தன் தந்தையையே ஜடாயுவின் உருவில் கண்ட ராமபிரான் அவருக்கு அந்திமக்கிரியைகளைச் செய்தார். வேறு தூய்மையான இடம் கிடைக்காததால் தனது வலது தொடை மீதே அவருக்கு இறுதிக்கடன் செய்தார். தன் வில்லின் நுனியில் பூமியைக் கீறி- அதில் பாய்ந்து வந்த நீரில் நீராடி ஜடாயுவுக்கு நீர்க்கடன் செய்தார்.

ராமபிரான் ஜடாயுவின் பிரார்த்தனைக்கேற்ப ஸ்ரீ விஜயராகவப் பெருமாளாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் திருத்தலம்தான் திருப்புட்குழி.

இடம் மாறிய ஸ்ரீதேவி - பூதேவி

மூலவர் வீற்றிருந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். ஜடாயுவை வலது தொடை மீது தகனம் செய்ய வைத்துக் கொண்ட நிலை. பொதுவாகப் பெருமாளுக்கு திருமகள் எனப்படும் ஸ்ரீதேவி வலதுபுறமும், நிலமகள் எனப்படும் பூதேவி இடப்புறமும் எழுந்தருளியிருப்பர். ஆனால் இந்தத் தலத்தில் தீயின் வெப்பம் தாளாத நிலையில் இவர்கள் இடம் மாறி திருமகள் இடதுபுறமும், நிலமகள் வலதுபுறமும் மாறி எழுந்தருளியுள்ளனர். இங்கு எழுந்தருளியிருக்கும் தாயாரின் திருநாமம் மரகதவல்லி.



வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 10:41 pm

ஜடாயு புஷ்கரணி

இங்குள்ள திருக்குளத்தில் தினமும் நீராடி ஒரு ஞாயிறு முதல் அடுத்த ஞாயிறு வரை பிரார்த்தனை செய்தால் அவர்கள் நன் மக்களைப் பெறுவார்கள். இந்தக் குளக்கரையில் தானம் செய்தால் திருவருளால் ஆயிரம் மடங்கு பலன் பெறுவர். இத் திருக்குளத்தின் கிழக்குக் கரையில் பெரிய உடையாருக்குத் தனி சந்நிதி உள்ளது.

மக்கட்பேறு வேண்டி ஜடாயு புஷ்கரணியில் அமாவாசையன்று காலை நீராடிவிட்டு மரகதவல்லித் தாயார் சன்னதியில் வறுத்த பயிரை மடியில் கட்டிக் கொண்டு, அன்று முழுவதும் விரதமிருந்து மறுநாள் காலை அந்தப் பயிரை அப்படியே தாயார் சன்னதியில் சேர்க்க வேண்டும். மகப்பேறு என்னும் பாக்கியத்தை அன்னை அருளும் அந்த நாளில் விடியற்காலையில் அந்த வறுத்த பயிர் முளைக்கும் என்பது பலரது நம்பிக்கை.

கோயிலுக்கு வெகு அருகில் ஜடாயு புஷ்கரணியும் இதற்குக் கீழ்த் திசையில் ஜடாயு சன்னதியும் உள்ளது. நேராக சன்னதித் தெருவும், கடைசியில் கோயிலைப் பார்த்தவாறு மேற்கு நோக்கி சிறிய திருவடி கோயிலும் அமைந்துள்ளன. உற்சவக் காலங்களில் பெருமாள் கோயிலை விட்டுப் புறப்பட்டு ஜடாயுவுக்கு மரியாதைகள் செய்துவிட்டு வாகன மண்டபம் எழுந்தருளுவார்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் புஷ்கரணியில் கை கால்களைச் சுத்தம் செய்து கொண்டு தலையில் சிறிது நீர் தெளித்துக் கொண்டு எதிரில் உள்ள ஜடாயுவை வணங்கிவிட்டுக் கோபுர வாசலைத் தாண்டியவுடன், வடக்கு நோக்கிக் கீழே வீழ்ந்து வணங்கிய பின்பு பிரதட்சிணமாக வர வேண்டும்.

ராமானுஜருக்கே முதல் மரியாதை

இங்கு அமைந்துள்ள ஆண்டாள் சன்னதியில் ஒவ்வொரு மாதமும் பூர நட்சத்திர நாளில் சிறப்புப் பூஜைகள் உண்டு. பெருமாள் புறப்பாட்டின்போது ஒவ்வொரு முறையும் திரும்புகாலில் ஆண்டாளுக்கு சேவை சாதித்து அருளுகிறார். இந்த சன்னதியை ஒட்டினாற்போல உள்ளதுதான் ராமானுஜர் சிஷ்ய 'பாவத்துடன்' யாதவப் பிரகாசரின் முன்னாலிருப்பது போன்ற கல்வெட்டு.

இங்கு வலம் வர ஏற்றபடி ராமானுஜரின் சன்னதி தனிக் கோயிலாகவே அமைந்துள்ளது. இவர் சன்னதியை ஒரு முறை வலம் வந்தாலே பூவுலகம் முழுமையும் ஒரு முறை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது. இவரது திருநட்சத்திரம் சித்திரை மாதம் திருவாதிரையில் சாற்று முறையாகப் பத்து நாள்கள் உற்சவம் உண்டு. திருப்புட்குழியில் குருகுலவாசம் செய்தவர் ஸ்ரீராமானுஜர். புறப்பாடுகளில் முதல் மரியாதை ராமானுஜருக்கும், இரண்டாம் மரியாதை ஜடாயுவுக்கும் தரப்படுகிறது.

நிலமகளின் அவதாரமான கோதைப் பிராட்டி பெருமாளுக்கு வலப்புறமாக அமைந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஸ்ரீ வேதாந்த தேசிகர் பெருமாளை நோக்கி சேவித்தவண்ணம் காட்சி தருகிறார்.

அமாவாசைப் பெருமாள் !

மரகதவல்லித் தாயாரின் சன்னதி பெருமாள் சன்னதிக்கு இடதுபுறம் அமைந்துள்ளது. தாயார் கிழக்கு நோக்கியபடி பத்மாசனத்தில் அமர்ந்து சேவை சாதிக்கிறார். பெருமாளுக்கு இடதுபுறம் தாயார் சன்னதி என்பது இன்னொரு சிறப்பம்சம். நவராத்திரி பத்து நாள்களும் தாயார் சன்னதியில் பெருமாள் சேர்த்தியில் சேவை சாதிக்கிறாள்.

தாயார் சன்னதியிலிருந்து பெருமாள் சன்னதிக்குத் தென்புறமுள்ள படிக்கட்டுக்களின் மூலமே வர வேண்டும். உற்சவ நேரம் இங்கு படி ஏற்ற சேவை உண்டு. பெருமாளுக்கு எதிரில் பெரிய திருவடி சன்னதி உண்டு. பெருமாள் ஆஜானுபாகுவாய்- சங்கு சக்கர தாரியாய் இடம் மாறிய ஸ்ரீதேவி - பூதேவிகளுடன் வீற்றிருந்த கோலத்தில் காட்சி தருகிறார். அமாவாசை அன்று பக்தர்கள் திரண்டு வந்து சேவிப்பதால் இவர் அமாவாசைப் பெருமாள் என்றும் பேர் பெற்றவர்.



வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக