புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_m10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10 
306 Posts - 42%
heezulia
சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_m10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_m10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_m10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10 
27 Posts - 4%
sugumaran
சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_m10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_m10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_m10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10 
6 Posts - 1%
prajai
சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_m10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_m10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10 
4 Posts - 1%
manikavi
சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_m10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகாயத்துக்கு அடுத்த சவால்..


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 30, 2011 8:09 am

''கிரானைட் கொள்ளைக்கும் முடிவு வருமா?''




'லஞ்சம் தவிர்த்து... நெஞ்சை நிமிர்த்து...’ என்று உரக்கச்சொல்லி, மதுரை மக்களின் ஹீரோவாகிவிட்ட மதுரை கலெக்டர் சகாயத்துக்கு மேலூர் கிரானைட் கொள்ளையைக் கட்டுப் படுத்த அழைப்பு விடுத்து இருக்கிறார்கள் மக்கள்.

இன்றைய நிலவரப்படி மேலூர், கீழையூர், கீழவளவு, திருமோகூர் பகுதிகளில் சுமார் 56 கிரானைட் குவாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் அரசு குவாரிகளை விடவும் தனியார் பட்டா நிலத்தில் இயங்கும் குவாரிகளே அதிகம்! இந்த குவாரிகளால் வெளியூர்வாசிகள் சிலர் கோடீஸ்வரர்கள் ஆனார்கள் என்றால், உள்ளூர் மக்கள் தங்கள் வாழ்வா தாரத்தைத் தொலைத்து நிற்கிறார்கள்.

தனியார் பட்டா நிலங்களில் குவாரி நடத்துபவர்கள், அருகிலுள்ள புறம்போக்கு நிலங்களையும் வளைத்து, கோடிகளைச் சம்பாதிப்பது அதிகாரிகளுக்குத் தெரிந்தே நடக்கிறது. இதைக் கண்டும் காணாமல் இருப்பதற்காக இங்குள்ள கிரானைட் கம்பெனிகள் சில, அரசுத் துறையினருக்கு தனியாக மாத சம்பளமே வழங்குகிறார்களாம். இதனால், இந்தப் பகுதிகளில் வி.ஏ.ஓ. வேலைக்கு வருவதற்கே சில லட்சங்களைக் கப்பம் கட்டுகிறார்கள். அந்த அளவுக்குக் காஸ்ட்லியான ஏரியா. இந்த முறைகேடுகள் குறித்து அவ்வப்போது புகார்களும் போராட்டங்களும் வெடித்தாலும், அதிகாரிகள் அப்படியே அமுக்கிவிடுவார்கள்!

கனிமத்தைச் சுரண்டும் கும்பல், அருகிலுள்ள நீர் ஆதாரங்களையும் விளை நிலங்களையும் பாழ்படுத்துவதால் இந்தப் பகுதியில் விவசாயமும் படுத்து விட்டது. மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞரும் சமூக சேவகருமான ஸ்டாலின், ''மேலூர் ஏரியாவில் இருந்து மாதம் சுமார் 100 கோடிக்கும் மேலாக கிரானைட் கற்களை வெட்டியெடுத்து, ஏற்றுமதி செய்கிறார்கள். இதில் பாதிக்கும் மேல் முறைகேடாக வெட்டி எடுக்கப்படுபவை. தூத்துக்குடி துறைமுகம் செல்ல லாரிகளுக்கு வழங்கப்படும் நடைச் சீட்டு மூன்று நாட்களுக்கு செல்லுபடியாகும். இதை வைத்து மூன்று நாட் களில் நான்கு நடை லோடுகளை அனுப்பி விடுகிறார்கள். இதேபோல் சென்னைத் துறைமுகத்துக்கு எடுக்கப்படும் நடைச் சீட்டு ஏழு நாட்களுக்குச் செல்லுபடியாகும். இதை வைத்து நான்கு லோடுகளுக்குக் குறையாமல் கடத்தி விடுகிறார்கள். இதை அறிந்தும், அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.



நீர்ப்பிடிப்பு மற்றும் பாசனக் கால்வாய்களில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால்தான் குவாரிகள் இருக்க வேண்டும் என்று விதி இருக்கிறது. ஆனால், நாவினிக்கும்பட்டியில் இருந்து கீழையூர் வரை பெரியார் பாசன துணைக் கால்வாய்களை ஒட்டியே குவாரி கள் இருக்கின்றன. இந்த குவாரிகளில், விதிமுறை மீறி அதலபாதாளம் வரை தோண்டப்படுவதால் கால்வாய் தண்ணீர், குவாரிகளுக்குள் ஊற்றெடுத்து விரயமாகிறது. தெற்குத் தெரு ஏரியாவில் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான மூன்று பாசனக் கால்வாய்களை மூடிவிட்டுத்தான் கிரானைட் கம்பெனி அமைத்து உள்ளார்கள். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எவ்விதக் கழிவுகளையும் கொட்டக்கூடாது. ஆனால், இங்கே கண்மாய்களில் கிரானைட் கழிவுகளைக் கொட்ட, பொதுப்பணித் துறை அதிகாரிகளே அதிகாரபூர்வமாக அனுமதி கொடுக்கிறார்கள்.

15,000 டெபாசிட்டும் ஆண்டுக்கு 1,000 கட்டணமும் கட்டிவிட் டால் கழிவுகளை கண்மாய்க்குள் கொட்டிக் கொள்ளலாமாம். இப்படி ஆறு கண் மாய்களை அழித்துவிட்டார்கள். சில இடங்களில் குளங்களையே குவாரிகளாக்கி விட்டார்கள்.

இப்படி நீர் ஆதாரங்களை அழித்துவிட்ட தால், பாசனம் செய்ய முடியாமல் ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலம் தரிசாகி விட்டது. கிரானைட் முதலாளிகள் எதிர்பார்ப்பதும் இதைத்தான். பாசனம் படுத்துவிட்டால் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கிவிடலாம் என்பது அவர்களின் திட்டம். இதுவரை அப்படித்தான் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள்வளைக்கப்பட்டன. பள்ளிகள், குடியிருப்பு பகுதிகள், வழிபாட்டுத் தலங்களில் குவாரிகளுக்கு அனுமதி இல்லை. ஆனால், இங்கே அந்த உத்தரவும் காற்றில் பறக்கிறது...'' என்று ஆதங்கப்பட்டவர்,

''பாசனக் கால்வாய்களை மூடுவது குறித்து கடந்த ஜூன் மாதம் மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தேன்.'மூன்று மாதங்களுக்குள் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்!’ என்று மதுரை கலெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவு இட்டது. ஆனால், கலெக்டர் அதைக் கண்டு கொள்ளவில்லை. அவருக்கு நான் அனுப்பிய நீதிமன்ற அவமதிப்பு நோட் டீஸுக்கும் பதில் இல்லை. விரைவில் இது விஷயமாக நீதிமன்றத்தில் மனு போட இருக்கிறேன்.

அதற்கு முன்னதாக எங்களுக்குக் கிடைத்த இன்னொரு வாய்ப்பு, இப்போது இருக்கும் கலெக்டர் சகாயம்! நேர்மையான அதிகாரியான அவரது பார்வை, கிரானைட் குவாரிகள் பக்கம் திரும்பினால் நல்லது; மேலூர் பகுதி மக்கள் அவருக்குக் கோயில் கட்டிக் கும்பிடுவார்கள். இது சம்பந்தமாக ஊர்மக்களைத் திரட்டி அவரை சந்திக்க இருக்கிறேன்...'' என்றார்.

''இந்த விஷயத்தில் நீங்கள் நடவடிக்கை எடுக்க முடியுமா?'' என்று கலெக்டர் சகாயத்திடம் கேட்டோம். ''ஏன் முடியாது? அத்துமீறும் குவாரிகளால் இந்தப் பகுதியின் ஜீவாதாரப் பிரச்னையான விவசாயம் பாதிக்கப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இந்த விஷயத்தில் அவசரப்படாமல் நிதானமாகச் செயல்பட்டு, முறைகேடுகளை ஒழிக்க நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். ஆனால், அதற்கு கொஞ்சம் அவகாசம் தேவை!'' என்றார்.

கிரானைட் சுரண்டலைத் தடுக்க சகாயம் தொடர்ந்து மதுரையில் நீடிக்க வேண்டும். அது மட்டுமல்ல... ரவுடியிஸம், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட விஷயங்களை மனதில் வைத்து, 'மதுரையை மீட்பேன்’ என்று பிரசாரத்தின்போது ஜெயலலிதா சபதமிட்டார். அதனை சகாயத்தை வைத்து சாதிக்க வேண்டும் என்கிறார்கள் மக்கள்.

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி



01-ஜூன் -2011
ஜி.விகடன்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon May 30, 2011 8:11 am

சகாயம் சாதிப்பார் என்று தான் நினைக்கிறேன் . ALL THE BEST சூப்பருங்க



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 30, 2011 8:15 am

கே. பாலா wrote:சகாயம் சாதிப்பார் என்று தான் நினைக்கிறேன் . ALL THE BEST சூப்பருங்க

எனக்கும் அப்படி தான் தோணுது நண்பா சியர்ஸ்

சகாயம் சருக்கு வாழ்த்துக்கள் நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 30, 2011 9:00 am

சாதனை மன்னன் சகாயம் வாழ்க.

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 30, 2011 10:46 am

மகா பிரபு wrote:சாதனை மன்னன் சகாயம் வாழ்க.
சகாயத்துக்கு அடுத்த சவால்.. 359383 சகாயத்துக்கு அடுத்த சவால்.. 359383 சகாயத்துக்கு அடுத்த சவால்.. 359383



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சகாயத்துக்கு அடுத்த சவால்.. Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக