புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரிபாடல் பாடல்  Poll_c10பரிபாடல் பாடல்  Poll_m10பரிபாடல் பாடல்  Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
பரிபாடல் பாடல்  Poll_c10பரிபாடல் பாடல்  Poll_m10பரிபாடல் பாடல்  Poll_c10 
31 Posts - 44%
jairam
பரிபாடல் பாடல்  Poll_c10பரிபாடல் பாடல்  Poll_m10பரிபாடல் பாடல்  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பரிபாடல் பாடல்  Poll_c10பரிபாடல் பாடல்  Poll_m10பரிபாடல் பாடல்  Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
பரிபாடல் பாடல்  Poll_c10பரிபாடல் பாடல்  Poll_m10பரிபாடல் பாடல்  Poll_c10 
1 Post - 1%
சிவா
பரிபாடல் பாடல்  Poll_c10பரிபாடல் பாடல்  Poll_m10பரிபாடல் பாடல்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
பரிபாடல் பாடல்  Poll_c10பரிபாடல் பாடல்  Poll_m10பரிபாடல் பாடல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரிபாடல் பாடல்  Poll_c10பரிபாடல் பாடல்  Poll_m10பரிபாடல் பாடல்  Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
பரிபாடல் பாடல்  Poll_c10பரிபாடல் பாடல்  Poll_m10பரிபாடல் பாடல்  Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
பரிபாடல் பாடல்  Poll_c10பரிபாடல் பாடல்  Poll_m10பரிபாடல் பாடல்  Poll_c10 
13 Posts - 4%
prajai
பரிபாடல் பாடல்  Poll_c10பரிபாடல் பாடல்  Poll_m10பரிபாடல் பாடல்  Poll_c10 
9 Posts - 3%
jairam
பரிபாடல் பாடல்  Poll_c10பரிபாடல் பாடல்  Poll_m10பரிபாடல் பாடல்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
பரிபாடல் பாடல்  Poll_c10பரிபாடல் பாடல்  Poll_m10பரிபாடல் பாடல்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
பரிபாடல் பாடல்  Poll_c10பரிபாடல் பாடல்  Poll_m10பரிபாடல் பாடல்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பரிபாடல் பாடல்  Poll_c10பரிபாடல் பாடல்  Poll_m10பரிபாடல் பாடல்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பரிபாடல் பாடல்  Poll_c10பரிபாடல் பாடல்  Poll_m10பரிபாடல் பாடல்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பரிபாடல் பாடல்  Poll_c10பரிபாடல் பாடல்  Poll_m10பரிபாடல் பாடல்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிபாடல் பாடல்


   
   
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Sun Nov 20, 2011 7:26 am

பரிபாடல் பாடல் -1


இது கடவுள் வாழ்த்து.


எழுதிய புலவர்
பெயர் தெரியவில்லை.













திருமால்


[You must be registered and logged in to see this link.]ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை
தீ உமிழ் திறலொடு
முடிமிசை அணவர
,
மாயுடை மலர்
மார்பின்
, மை இல் வால் வளை மேனிச்
சேய் உயர் பணைமிசை
எழில் வேழம் ஏந்திய
,
வாய் வாங்கும் வளை
நாஞ்சில்
, ஒரு குழை ஒருவனை; 5


(இது தரவு )


எரிமலர் சினைஇய கண்ணை; பூவை
விரிமலர் புரையும்
மேனியை
; மேனித்
திரு ஞெமிர்ந்து
அமர்ந்த மார்பினை
; மார்பில்
தெரிமணி பிறங்கும்
பூணினை
; மால் வரை
எரி திரிந்தன்ன
பொன் புனை உடுக்கையை-
10

சேவல் அம்
கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்

ஏவல் உழந்தமை
கூறும்
,
நா வல் அந்தணர்
அரு மறைப் பொருளே.



( இது கொச்சகம் )


அமர் வென்ற கணை

இணைபிரி அணி துணி
பணி எரி புரை

விடர் இடு சுடர்
படர் பொலம் புனை வினைமலர்
15

நெரி திரடெரி புரை
தன மிகு தன முரண் மிகு

கடறரு மணியடும் முத்து
யாத்த நேரணி

நெறி செறி வெறி
உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்

தார் அணி துணி மணி
வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்

எரி வயிர நுதி எறி
படை எருத்து மலை இவர் நவையினிற்
20



றுணி படல் இன மணி
வெயில் உறழ் எழில் நக்கு

இமை இருள் அகல
முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர்

மலர் இலகின வளர் பரிதியின்
ஒளி மணி மார்பு அணி

மணம் மிக நாறு
உருவின விரை வளி மிகு கடு விசை

உடுவுறு தலை நிரை
இதழ் அணி வயிறிரிய அமரரைப்
25



போரெழுந்து உடன்று
இரைத்து உரைஇய தானவர்

சிரம் உமிழ் புனல்
பொழிபு இழிந்து உரம்

உதிர்பு அதிர்பு
அலம் தொடா அமர் வென்ற கணை.



(இவை நான்கும் அராகம்)


சொல்லில் அடங்காப் பெரும் புகழ்


பொருவேம்என்றவர் மதம் தபக் கடந்து,
செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்! 30

இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்!
தெருள நின் வரவு அறிதல்
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே:


(இது ஆசிரியம்)



அன்ன மரபின் அனையோய்! நின்னை
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது? 35


(இது பேரெண்)




அருமை நற்கு அறியினும், ஆர்வம் நின்வயின்
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை
மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லி அம்
திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும்.


(இது ஆசிரியம்)




விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் 40

அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;
அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; 45




ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், வனும், நாற்றமும், நீ;
வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், 50




நிலனும், நீடிய இமயமும், நீ.



(
இவை ஆறும் பேரெண்)



அதனால்,



(
இது தனிச் சொல் )



இன்னோர் அனையை; இனையையால்என,
அன்னோர் யாம் இவண் காணாமையின்,
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 55



மன்னுயிர் முதல்வனை ஆதலின்,
நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!


(இது சுரிதகம்)



நின் ஒக்கும் புகழ் நிழலவை;
பொன் ஒக்கும் உடையவை;
புள்ளின் கொடியவை; புரி வளையினவை; 60




எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;
மண்ணுறு மணி பாய் உருவினவை;
எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை,


( இவை சிற்றெண்னும்
பேரெண்னும்
இடைஎண்ணும்)



ஆங்கு,


( இது தனிச் சொல் )



காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என,
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்-
வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே; 68


(இது சுரிதகம்)











*******************************
















Meaning
















எவ்வுயிருக்கும் அச்சத்தைத்
தரக்கூடிய இயல்பை
உடைய , சினத்
தீயை உமிழுகின்ற
படம் விரிந்த
ஆயிரம் தலைகளை
உடைய ஆதிசேஷன்
உன் தலை
மீது நிழலாக
இருக்கிறான் .
திருமகள் வீற்றிருக்கும்
மலர் மார்பினை
உடையவன் நீ.








குற்றமில்லா வெண்மையான
சங்கினைப் போன்ற
நிறத்தையும், மிக
உயர்ந்த மூங்கில்
கம்பின் உச்சியில்
கட்டப்பட்ட யானைக்
கொடியினை உடையவனும், கூர்மையாகவும் , வளைந்தும்
இருக்கும் கலப்பையினை
உடையவனும், ஒற்றைக்
குழையை அணிநதவனுமாகிய
பலதேவனாகவும் நீ
விளங்குகின்றாய்.


கருடச் சேவல் கொடியைக்
கொண்டவனே! தாமரை போன்ற அழகிய
கண்களை உடையவன் நீ .








[You must be registered and logged in to see this link.]காயாம் பூவினது
நிறத்தை உடையது உன்
மேனி.
அத்திரு மேனியின் கண், திருமகள் விரும்பி உறையும் மார்பிடத்தே நினக்கே உரியது என்று தெரியும் வண்ணம் கௌஸ்துப மாலையை உடையவன் நீ.








கரிய மலையைச்
சூழ்ந்து தீப்பிழம்பு சுற்றினாற்போல, பொன்னிற ஆடையை உடுத்தி
உளாய்.








நாவன்மை உடைய
அந்தணர் உணர்தற்குரிய அரு
மறைப் பொருளே !
நினது அருளாலே உனது
வலப்பக்கம் நிலை நிறுத்தப்பட்ட உயிர்கள்
, உன்னுடைய அருள் தழுவுதலாலே நின்னை வழிபடும் தன்மையை அவர்கள் எவ்வாறு கூற
வல்லவர்கள்
ஆவார்கள்? –(ஆக மாட்டார்கள்).


தம் அறியாமையினாலே
உன்னோடு போர்
செய்வோம் என்று
வந்த அவுணர்களுடைய
வலிமை கெடும்
வண்ணம், போரின்
கண் வென்ற
குற்றமற்ற தலைமை
உடைய அண்ணலே !














காமன், சாமன்
என்னும் இருவருடைய
தந்தையே !








விளங்குகின்ற ஆபரணங்களை
அணிந்தவனே !








உன் வரவினை, (அவதாரத்தை அல்லது
வரலாற்றை ) விளக்கமாக
அறிந்து கொள்ளுதல்
என்பது, மயக்கம்
தீர்ந்த தேர்ச்சி
பெற்ற முனிவருக்கும்
அரிதானது!
அப்படிப்பட்ட இயல்பினை
உடையவனே !











முனிவர்களுக்கே அப்படி
என்றால், நீ
எப்படிபட்டவன் என்று
உரைப்பது எங்களுக்கு
மட்டும் எப்படி
எளிதாகும் ?


அழகிய தாமரை
மலரின் கண் வீற்றிருக்கும்
திருமகளை மார்பினிலே தாங்கியுள்ளவனே! அறிவதற்கு இயலாதது
உன் வரலாறு என்று
நாங்கள் நன்றாக அறிந்திருந்தாலும் , உன் மேல்
எங்களுக்குள்ள ஆர்வமும் அன்பும்
பெருமையுடையது என்பதால், நாங்கள்
கூறுவதை சிறுமை உடையது
என்று நீ கருதி
எங்களை வெறுத்து விடாமல்
அருள வேண்டும்.


















வெற்றி மிகுந்த
பெரும் புகழினை உடைய அந்தணர்களாலே காக்கப்படும் அறமும்
, நின் அன்பர்களுக்கு நீ அருள்கின்ற திருவருளும் நீயே;


நன்னெறியில்
செல்லும் திறனில்லாதவரை
, அந்நெறியில் செல்லுமாறு திருத்தும் தீதறு சிறப்புடை மறமும்
நீயே
; அவ்வாறு திருத்துவதால், உனக்குப் பகையாக இருப்பவரை வருத்தும் துன்பமும் நீயே;












[You must be registered and logged in to see this link.]அழகும், எழுச்சியும் உடைய
வானத்தின் கண் அணிபெற விளங்கும் ஒளிதரும் நிலவும் நீ
;









சுடுகின்ற சுடரை
உடைய சூரியனும் நீயே.










ஐந்து தலைகளைத்
தனக்குத் தோற்றுவித்துக் கொண்ட கொல்லும் தொழிலை உடையவனும்
, கடத்தற்கரிய திறமையையும், வலிமையையும் உடைய ஒப்பற்ற சிவ பெருமானும் நீயே;









அவனால்
செய்யப்படுகின்ற மடங்கலாகிய ஒடுக்கும் தொழிலும் நீயே
;









நன்மை தருகின்ற, குற்றமற்ற மெய் உணர்வினை அளிக்கின்ற வேதமும் நீ;









பூவின் மேல் இருக்கும்
பிரம்மனும் நீ
;









அவன் செய்யும்
நாறுதல் என்னும் தோற்றம் என்னும் படைப்புத் தொழிலும் நீயே
;












வானின் கண் உயரும்
மேகமும் நீ
;


மாகம் என்னும்
வானமும் நீ
;


இந்தப் பூமியும்
நீ
;


நீண்டு
நெடிதுயர்ந்த இமயமும் நீயே.
















நீ இவரைப்
போன்றவன்
, இவருக்கு இணையானவன் என்று உவமை காட்ட யாருமே இங்கு
காணப்படாமையால்
, பொன்னின் அழகினைக் கொண்ட சக்கரப் படையினை எல்லா உலகையும்
ஆள்வதற்கு அடையாளமாக நின் வலப் பக்கத்தே ஏந்தி
, நிலை பெற்ற உயிர்களுக்குத் தலைவனுமாக நீ இருப்பதால், உனக்கு ஒப்புமை நீயேதான்!


உன் புகழ்தான்
உனக்கு ஒப்புமையானது
.















புள் என்னும்
கருடப்பறவையைக் கொடியில் உடையவன் நீ.

முறுக்கிய சங்கினை உடையவன் நீ.
இகழ்வாராகிய பகைவரை வென்று, கொன்று என்று தக்கவாறு செயல் புரியும் மாறுபாட்டினை உடைய
சக்கரப்படையை உடையவன் நீ.

கழுவப்பட்ட நீல மணி பரப்பும் நிறத்தை
உடைய திருமேனியை உடையவன் நீ.

அளவற்ற புகழ் உடையவன் நீ.
அழகிய மார்பினை உடையவன் நீ.















என இவ்வாறு கூறி, நாங்கள் விரும்பும் அல்லது எங்களை விரும்பும் சுற்றத்தாரோடு
ஒன்று கூடி
, உன் திருவடியில் இணைந்து, என்றும் இந்தத் திருவடி விளங்குவதாக, பொலிக இவ்வடி என்று இன்பமுறும் நெஞ்சத்தோடு கூறுகிறோம்.





வாய்மொழிப்
புலவனே!






வாய்மொழியாகச்
சொல்லப்படும் வேதத்தை அருளிச் செய்த புலவனே!



உன் திருவடி நிழலைத் தொழுகிறோம் . [You must be registered and logged in to see this link.]


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Nov 20, 2011 8:04 am

பயனுள்ள பதிவு.
திவ்விய பிரபந்தம் போல் பெருமாளின் பெருமைகளை பேசும் நூல் பரிபாடல். மக்களிடையே பிரபலம் ஆகாத நூல். அறியச்செய்தமைக்கு நன்றி [You must be registered and logged in to see this image.]



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக