புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 
31 Posts - 55%
heezulia
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 
17 Posts - 3%
prajai
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
jairam
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Jenila
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம்


   
   

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:11 pm

First topic message reminder :

பதிப்புரை

என்னுரை

முன்னுரை (மாலன்)

முன்னீடு

வம்ச விருத்தி

1. துரி

2. ஒரு சாதம்

3. கிரகணம்

4. விழுக்காடு

5. பீஃனிக்ஸ் பறவை

6. முழு விலக்கு

7. முடிச்சு

8. ஞானம்

9. சிலம்பு செல்லப்பா

10. வம்ச விருத்தி

11. பருத்திப் பூ



 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:31 pm


இத்துடன் பல பெண்களை அவர் நேர்முகத் தேர்வுக்கு அழைத்து பரீட்சித்துப் பார்த்து விட்டார். ஒருவராவது அதில் தேறவில்லை. சியரா லியோனில் இப்படியான வேலைகளுக்கு மிகவும் தேர்ச்சி வாய்ந்த பெண்கள் பலர் அலைந்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர் விரும்பிய குணாதிசயங்கள் கொண்ட பெண் மட்டும் அவருக்கு எனோ லேசில் கிடைக்கவில்லை.

அப்பொழுதுதான் அவருடைய அலுவலக செயலதிகாரி அமீனாத்துவை அவருக்கு அறிமுகப்படுத்தினார். அவள் தேர்வுக்கு வந்தபோது ஊழியர்கள் எல்லோருடைய கண்களும் அவளோடு போய்விட்டன. 'சலீர், சலீர்' என்று அவளுடைய பாதங்கள் கேட்காத ஒரு தாளத்துக்கு நடந்துவருவதுபோல இருந்தது. அவள் உடுத்தியிருந்தது சாதாரணமான ஏழை ஆபிரிக்கர்கள் அணியும் 'லப்பா' உடைதான். தலைமுடியை சிறுசிறு பின்னல்களாக பின்னி வளையம் வைத்துக் கட்டியிருந்தாள். முதுகை நேராக நிறுத்தி, கால்களை எட்டி வைத்து அவள் நடந்தது கறுப்பு தேவதை ஒன்று வழி தவறி வந்து விட்டது போல இருந்தது.

ஆபிரிக்கப் பெண்களின் அழகைப் பற்றி ஒன்று சொல்லவேண்டும். 'மெல்ல நட, மெல்ல நட, மேனி என்னவாகும்?' என்ற கவிதைகளுக்கெல்லாம் அங்கே வேலையில்லை. நிலத்திலே 'தாம், தாம்' என்று சத்தம் அதிரத்தான் நடப்பார்கள். சாமத்தியச்சடங்கு நேரத்தில், பூப்பெய்திய பெதும்பைக்கு சேலையுடுத்தி, சோடித்து, நகை நட்டெல்லாம் போட்டு அலங்காரம் செய்து, தலைநிறையப் பூ வைத்து 'குனியடி' என்று தாய்மார் தலையிலே குட்டி மணவறைக்கு அனுப்பி வைக்கும் கற்பின் கருவூலங்களை ஆபிரிக்காவில் காண முடியாது. தேர் வடம் போல 'உருண்டு திரண்டு' வஜ்ரமாகத்தான் அவர்களுக்கு கைகளும் கால்களும் இருக்கும். முதுகு நிமிர்ந்து, கண்கள் நேராக நோக்கும். பச்சரிசியை குத்தி வறுத்தெடுத்தது போல பொதுநிறத்துக்கும் மேலான ஒரு கறுப்பு. பார்க்கப் பார்க்க தூண்டும் அழகு. அப்படித்தான் இருந்தாள் அமீனாத்து.

ஆனால் அப்பேர்ப்பட்ட 'ஏரோபிக்ஸ்' அழகு கூட லோடாவிடம் விலை போகவில்லை. பாவம், போதிய முன் அநுபவம் இல்லையென்று அவளுக்கும் அந்த வேலையை லோடா கொடுக்க மறுத்துவிட்டார். சியரா லியோனின் ஜனத்தொகையில் வறுமைக் கோட்டின் கீழ் இருக்கும் எண்பது வீதத்தில் அமீனாத்துவின் குடும்பமும் அடங்கும். பதினொரு பேர் கொண்ட அவளுடைய குடும்பம் அவள் ஒருத்தியின் உழைப்பையே நம்பியிருந்தது. இரண்டு மாதகாலமாக அவள் இந்த வேலைக்காக அலைந்து கொண்டிருந்தாள். இந்த வேலையும் கிடைக்காவிட்டால் அவள் குடும்பம் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான்.

பிறந்தநாளிலிருந்து இன்றுவரை அவள் கண்டது கஷ்டம்தான். ஒரு மங்கிய விடிவெள்ளியை இன்னமும் தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தாள். செக்பீமா என்னும் குக்கிராமத்தில்தான் அவள் பிறந்து வளர்ந்தாள். பரம ஏழையாகப் பிறந்தாலும் அவள் வனப்பில் கோடீசுவரியாக இருந்தாள். அவள் பதின்மூன்று வயதிலேயே பணமுடித்ததற்கான காரணம் அவளுடைய மயக்கும் அழகுதான்.

அறுவடை முடிந்த கையோடு அந்த வருடம் பருவமான பெண் பிள்ளைகளை காட்டில் கொண்டு போய் வைத்து தனிக் குடிசை போட்டு சில ரகஸ்ய சடங்குக செய்வது ஆபிரிக்காவில் வழக்கம். அந்த வருட சடங்குப் பெண்களில் அமீனாத்துவும் ஒருத்தி. சடங்கு முடிந்ததும் ஊர் வழமைப்படி இடுப்பில் மட்டும் லேஞ்சியளவு ஒரு துணியைக் கட்டிக் கொண்டு உடம்பு முழுக்க கசாவா மாவைப் பூசி நிர்வாணமாக ஊரைச் சுற்றியபடி இந்தப் பெண்கள் வரவேண்டும். ஊருக்கு மூத்த பெண்கள் ஆடிக்கொண்டும், அவர்கள் பிரலாபத்தை உரத்து பாடிக் கொண்டும் முன்னே செல்ல ஆண்கள் எல்லாம் ஓடி பெண்ணை யாராவது ஆண்பிள்ளை பார்த்து விட்டால் உடனேயே அந்தப் பெண்ணை அவன் மணம் முடிக்கவேண்டும் என்பது சம்பிரதாயம்.

அவள் ஊர்வலம் வந்த அடுத்த நாளே ம்பாயோ என்பவள் நாலு ஆடுகளை சீதனமாகக் கொடுத்து அவளை மணமுடிக்க வந்து விட்டான். அமீனாத்துவின் தகப்பனார் நாலு ஆடுகளை ஒருமிக்க சேர்த்து அவர் ஆயுசிலேயே பார்த்ததில்லை. அவருடைய மகிழ்ச்சிக்கு கேட்க வேண்டுமா? அப்படித்தான் அவளுடைய இல்வாழ்க்கை திடீரென்று ஆரம்பித்து ஒரு பிள்ளையும் பிறந்தது. ஆனால், யெங்கிமா ஆற்றை கடந்து வேலை தேடிப்போன அவளுடைய புருஷன் மீண்டும் திரும்பி வரவேயில்லை. அமீனாத்துபிள்ளையையும் எடுத்துக்கொண்டு மறுபடியும் பெற்றோருடன் வந்து சேர்ந்து கொண்டாள்.

அதற்கு பிறகுதான் ஒரு மதுக்கடையில் நடனமாதுவாக அவள் சேர்ந்தாள். மது குடிக்க வரும் ஆடவர்களுடன் நடனமாடுவதுதான் அவள் வேலை. நடனம் அவளுடைய ரத்தத்தில் ஊறியிருந்தது கிடைக்கும் 'சம்பாவனை' அவள் குடும்பத்தை பராமரிக்க போதுமானதாக இருந்தது. அப்பொழுதுதான் அவளுக்கு இரண்டாவது பிள்ளை பிறந்தது. ('இது எப்படி?' என்று சமத்காரமான கேள்விகள் எல்லாம் கேட்கக் கூடாது. 'கற்பு' பற்றி திருக்குறளையும், சிலப்பதிகாரத்தையும் மேற்கோள் காட்டி வியாக்கியானங்கள் செய்பவர்கள் இல்லாத ஆபிரிக்காவில் அப்படித்தான். இப்படியும் நடக்கும்.)




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:32 pm


டொங்கா வைரச் சுரங்கத்தில் வேலை செய்ய நூற்றுக் கணக்கான பேர் அவளுடைய கிராமத்தை விட்டு அள்ளுப்பட்டு போனபோது மதுக்கடை வருமானம் விழுந்தது. அமீனாத்து என்ன செய்வாள்? வறுமையின் கொடுமை தாளாமல் தனது குடும்பத்துடன் தலைநகரமான 'ப்ரீ ரௌனுக்கு வந்து சேர்ந்தாள். அப்போது அவளுக்கு வயது பத்தொன்பது தான். ஆனால் இங்கே பார்த்தால் இன்னும் மோசம். சிறு பெண்களெல்லாம் நடன மாதுக்களாக போட்டி போட்டுக்கொண்டு ஆடினர். இவளால் அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஒரு நேரச் சாப்பாட்டிற்குக்கூட வழியில்லை என்று வந்துவிட்டது. இந்த நேரத்தில் அவள் ஆத்தாமல்போய் கீழிறங்கி வந்து சங்கைகெட்ட 'ஹவுஸ் மெய்ட்' வேலைக்கு மனுப்போட்டாள். இப்படியான ஒரு வேலையில் சேர்ந்தாலாவது அவளுடைய தரித்திரம் நிரந்தரமாக தன்னைவிட்டு ஓடிவிடக் கூடும் என்ற அளவில் அப்படிச் செய்து விட்டாள். பசியைத் தீர்ப்பதற்காக இந்த அவமானத்தைக்கூட அவள் தாங்குவதற்கு சித்தமாக இருந்தாள்.

காலையில் காரில் அலுவலகத்துக்கு போகும் போதும், மாலையில் திரும்பும்போதும் அந்தப் பெண் அவர் வீட்டு வாசலிலே பழியாய் கிடப்பதை லோடா அவதானித்தார். கடந்த நாலு நாட்களாக இது நடந்து வந்தது. கடைசியில் ஒருநாள் கார் சாரதியிடம் சொல்லி காரை நிறுத்தி அவளிடம் 'என்ன வேண்டும்?' என்று கேட்டார். அதற்கு அவள் "மாஸ்டர், எங்கள் நாட்டு வறுமையைத் தீர்ப்பதற்காக வந்த கடவுள் நீங்கள் என்று பேப்பர்கள் எழுதுகின்றன. நானோ ஒரு முறி 'கசாவாவுக்கும்' ஒரு கரண்டி 'பாம்' எண்ணெய்க்கும்கூட வழியில்லாத பரம ஏழை. என்னை நம்பி பத்துபேர் பட்டினியுடன் காத்திருக்கிறார்கள். எனக்கு வேலை கிடைத்தால் பதினொரு பேருடைய வறுமை தீரும். மாஸ்டர், எனக்கு இந்த வேலையை ஒருவாரத்திற்கு சம்பளமின்றி தந்து பாருங்கள். அதற்குப்பிறகு உங்கள் முடிவு" என்றாள்.

லோடாவுக்கு அவளுடைய நேர்மை பிடித்துக் கொண்டது. ஏழையென்றாலும் அவள் குழையாமல் நிமிர்ந்து நின்று கண்களைப் பார்த்து பேசியது பிடித்துக் கொண்டது. மிகவும் சொற்பமான ஆங்கில வார்த்தைகளை உபயோகித்து, சிக்கனமாகத்தான் சொல்ல வேண்டிய கருத்துக்களை நிதானமாக நிறுத்தி நிறுத்தி சொன்னது பிடித்துக் கொண்டது. எல்லாவற்றிற்கும் மேலாக அவளுடைய அறிவான கண்களும், ஆர்வமும் துணிச்சலும் அவருக்குமெத்தப் பிடித்துக் கொண்டது.

இப்படித்தான் அமீனாத்து அங்கே வேலைக்கு சேர்ந்தாள். ஒரு வார காலத்தில் வீட்டையே மாற்றி அமைத்து விட்டாள். வீடு எப்பவும் பளிச்சென்று இருந்தது. லோடாவுடைய பழக்க வழக்கங்களை அவதானித்து அதற்கேற்ற மாதிரி அவருடைய உடைகளைப் பேணி அந்தந்த நேரத்துக்கு அணிவதற்கு தகுந்தவற்றை தேர்ந்தெடுத்து வைத்தாள். ஒருமுறை ஒன்றை சொன்னால் ஆணியடித்ததுபோல அவளுடைய மூளையில் அது பதிந்துவிடும். லோடாவுக்கு தான் செய்த முடிவு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது. அமீனாத்தும் அவளுடைய நல்லெண்ணத்தை கவர்வதில் முழுமூச்சுடன் செயல்பட்டாள்.

மனைவி இல்லாவிட்டாலும் லோடாவின் வீட்டு நிர்வாகம் இப்படி சீராகப் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக அலுவலகத்து வேலையில் ஒழுங்கீனங்கள் மலிந்து கிடந்தன. ஒரு அடி ஏறினால் ஒன்பதடி வழுக்கியது. எச்.டி.ஐயை எப்படியும் உயர்த்தி விடவேண்டும் அவர் ஆசையில் மண் விழுந்துவிடும்போல இருந்தது. அவருடைய அபிவிருத்தித் திட்டங்களில் முதன்மையானவை பெண்கள் நலன்பேணும் திட்டங்களும், வறுமை ஒழிப்பு திட்டங்களும்தான். இவையெல்லாம் அரசாங்க ஒத்துழைப்புடன் நடக்க வேண்டியவை. ஆனால் அதிகாரிகளுக்கு இவற்றினால் ஒருவித லாபமும் இல்லையென்றபடியால் கிளித்தட்டு விளையாட்டு போல கோப்புகளை இங்குமங்கும் மாற்றி மாற்றி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் ஒரு பயனும் காணவில்லை.

அதிகாரிகளுடன் ஒயாது சண்டை போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தால் அங்கே நுளம்புகளுடன் இவருடைய போராட்டம் தொடரும். வீட்டைச் சுற்றி மருந்துகள் அடித்தும், நுளம்பு வலைக்குள் படுத்தும் கூட ஒன்றிரண்டு நுளம்புகள் அவரைப் பிரியமுடன் தேடி வந்துவிடும். சியரா லியோன் நுளம்புகள் மலேரியா மருந்துகளுக்கு பயப்படாதவை. மலேரியா மருந்தை மிகக் கிரமமாக சாப்பிட்டும் அவருக்கு ஒரு நாள் மலேரியா வந்துவிட்டது. இந்தக் காய்ச்சல் முந்திப்பிந்தி லோடாவுக்கு வந்ததில்லை. அங்கே அது எல்லாருக்கும் அடிக்கடி தடிமன் காய்ச்சல்போல வந்து வந்து போகும். இவரைப் போட்டு இது கண்ணும் கருத்துமாகப் பார்த்தாள். மலேரியா மருந்தை நேரம் தவறாமல் கொடுத்தாள். குவினைன் மரப்பட்டைகளையும், தோஃறா' இலையையும் போட்டு அவித்த குடிநீரை காலையும் மாலையும் அவருக்கு வலுக்கட்டாயமாகப் புகட்டினாள். அவளுடைய கரிசனம் லோடாவின் மனதை நெகிழவைத்தது.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:32 pm


உண்மையான ஊழியத்துக்கு எப்பவும் பயன் உண்டு அல்லவா? லோடா அவளுடைய சம்பளத்தை உயர்த்தினார்; சலுகைகளை அதிகரித்தார். அமீனாத்து உச்சி குளிர்ந்து போனாள். அவளுக்கு தன் எஜமானரிடம் உண்மையான பக்தியும் அசைக்க முடியாத விசுவாசமும் ஏற்பட்டுவிட்டது. 'லிம்பா' இனத்துப் பெண்களைப்போல் அவள் இனிமேல் லோடாவுக்காக தன் உயிரையும் கொடுப்பதற்கு தயங்க மாட்டாள்.

லிம்பா இனத்தவர்கள் பொதுவாக அழகுக்கும், விசுவாசத்திற்கும் பேர் போனவர்கள். அதிலும் பெண்கள் முற்றிலும் பழுக்காத நாவல் பழம் போன்ற நிறமும், செதுக்கிய சிலை போன்ற அழகும் கொண்டிருப்பார்கள். முந்திய ஜனாதிபதி பதவியேற்ற சமயம் லிம்பா இனத்தவர் எல்லாம் ஒன்று சேர்ந்து அவருக்கு ஒரு பதினாறு வயது நிரம்பாத யௌவன அழகியை பரிசாக அளித்தார்களாம். லோடாவும் இந்த லிம்பா அழகியின் உண்மையான சேவையில் மகிழ்ந்து போனார்.

நுளம்பைத் தொடர்ந்து இப்பொழுது ஒரு இலையான் அவர் வாழ்க்கையில் குறுக்கிவிட்டது. சியரா லியோனில் அம்பாரமாகக் காணப்படும் இதற்கு பேர் 'தும்பு' இலையான். பார்த்தால் மாட்டு இலையான் போன்று பெரிதாகத் தோன்றும். அது ஈரமாயிருக்கும் துணிமணியில் வந்து நைசாக முட்டை இட்டுவிட்டு போய்விடும். அந்தத் துணியை யாராவது அணிந்தால் அந்த முட்டை சருமத்துக்குள் போய் அங்கேயே பொரித்துவிடும். ஐந்தாறு நாட்களில் ஒரு கொப்புளம் தோன்றி உபாதை கொடுக்கத் தொடங்கும். கொப்புளம் சுண்டைக்காய் அளவு மருமன் ஆனதும் வலியோ தாங்க முடியாமல் போகும். சியரா லியோனுக்கு புதிதாக வருபவர்கள் இந்த தும்பு இலையானிடம் தப்பி போனது கிடையாது.

ஆனால் ஆபிரிக்கர்களுக்கு இது சர்வ சாதாரணம். அவர்கள் ஆயுள் பரியந்தமும் இந்த இலையானுடனேயே குடித்தனம் செய்து பழக்கப்பட்டவர்கள். லோடாவுக்கு இந்த தும்பு இலையான் பற்றிய சரித்திரம் ஒன்றும் தெரியாது. அது ஒருநாள் அவர் நடுமுதுகிலே குடிவந்து பெரிய கொப்புளமாகி நமைச்சல் கொடுக்கத் தொடங்கியது. இவர் ஒருநாள் கண்ணாடியை தன் பின்புறம் வைத்து முதுகைப் பார்ப்பதைக் கண்ட அமீனாத்து திடுக்கிட்டுவிட்டாள். உடனேயே இவருடைய உத்தவைக்கூட எதிர்பாராமல் வாஸ்லைன் கொண்டுவந்து மெதுவாக தடவிவிட்டாள். சிறிது நேரத்தில் நாவல்பழம் போல பழுத்த கொப்புளத்தில் புழு நெளிவது அவள் கண்களுக்கு தெரிந்தது. இரண்டு பெருவிரல்களையும் சேர்த்து நடுமுதுகில் வைத்து அமுக்கியவுடன் குண்டு மணியளவு கொழுத்த புழு ஒன்று வெளியே வந்து விழுந்தது. அவளுக்கு இது சர்வ சாதாரணம். இது போல் ஆயிரம் தடவை இதற்கு முன்பு அவள் இதைச் செய்திருக்கிறாள். லோடாதான் பாவம், கொஞ்ச நேரம் 'லொடலொடவென்று' ஆடிப் போய்விட்டார். தாங்க முடியாத முதுகு நோவு கனநேரத்தில் மறைந்துவிட்டது.

அவள் முரட்டுத்தனமாக முதுகிலே அமுக்கிய ஸ்பரிசம் இவர் நெஞ்சிலே போய் இனித்தது. இப்போதெல்லாம் லோடாவுடைய சிந்தனையை அடிக்கடி அமீனாத்து வந்து நிறைக்கத் தொடங்கினாள். ஒரு பதினேழு வயதுப் பெடியனைப்போல அவளுடைய இதயம் அல்லாடியது. இது என்னவென்று அவருக்கு வியப்பாக இருந்தது. ஒருநாள் சனிக்கிழமை பகல் நேரம். அன்று ஹமட்டான் காற்று பலமாக வீசியது. ஆகாயம் முழுவதையும் தூசிப்படலம் மறைத்துவிட்டது. பத்தடி தள்ளி நிற்பவரைக்கூட பார்க்க முடியாதபடி வானம் இருண்டுபோய் கிடந்தது. அவர் வழக்கம்போல கோல்ப் விளையாடப் போகவில்லை. மேற்கத்திய இசையை ஒலிநாடாவில் ஓடவிட்டு சுகமாக ரசித்தபடி ஏதோ எழுத்து வேலையில் ஈடுபட்டிருந்தார்.

அமீனாத்து தன் நீளமான கால்களை எட்டி வைத்துவிட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள். இக்கிரிப் பத்தைபோல் அடர்த்தியாய் வளர்ந்திருந்த சுருள்முடியை இரும்பினால் செய்த சிக்குவாங்கியால் ஒட்ட இழுத்து சிறுசிறு பின்னல்களாகப் பின்னி மடித்து லப்பாத் துணியினால் இறுக்கி கட்டியிருந்தாள் அவள்; தென்னம்பாளை வெடித்தது போன்ற அவள் பற்களுக்கு 'மாட்ச்சாக' கறுப்பு கழுத்திலே ஒரு வெண்சங்கு மாலை தொங்கியது. தன்னை மறந்து இசைக்கேற்ப மாலை தொங்கியது. தன்னை மறந்து இசைக்கேற்ப தன் உடலை அசைத்தபடி இயங்கிக் கொண்டிருந்தாள். நடனமாது அல்லவா? நடனம் தானாகவே அவளிடம் ஓடி வந்தது.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:32 pm


லோடா அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார். புதுக்கப் புதுக்க அவளைப் பார்ப்பது போலிருந்தது அவருக்கு. ஆபிரிக்க அழகையெல்லாம் மொத்தமாக குத்தகை எடுத்ததுபோல அவள் காணப்பாட்டாள். சிறு பிள்ளைபோல அவள் தன்னைமறந்து ஆடையை ஆரவாரமின்றி அசைத்தாடுவது அழகாக இருந்தது. இவர் அவளுடைய கண்களையே பார்த்தார். அவள் துணுக்குறவும் இல்லை; கீழே பார்க்கவும் இல்லை. திருப்பி இவர் கண்களை நிதானமாகப் பார்த்தாள். நல்லூர் சப்பரம் போல மெள்ள மெள்ள நகர்ந்து இவர் இருக்கைக்கு கிட்ட வந்தாள்; சாவதானமாக இவருடைய மேசையை மறுபடியும் சுத்தம் செய்யத் தொடங்கினாள். அப்பொழுது லோடா எட்டி அவளுடைய கையைப் பிடித்தார். அவள் அப்படியே அவர்மேல் சரிந்தாள்.

அவர்களுடைய திருமணம் ஆடம்பரமின்றி ஒரு கிராமத்து சர்ச்சில் நடைபெற்றது. வெகு நெருங்கிய சினேகிதர்களும், உறவுக்காரர்களும் மட்டுமே வந்திருந்தனர். அமீனாத்துவின் விருப்பத்திற்கிணங்க லோடா கொழுத்த மாடொன்றை அடித்து ஒரு பெரிய விருந்து கொடுத்தார். 'ஜொலஃப் ரைஸ”ம்', புகைபோட்ட 'பொங்கா' மீனும், 'பாம்' எண்ணெய்க் குழம்பும் அந்த ஊர் முழுக்க மணத்தது. அந்த விருந்தைப் பற்றியே அவர்கள் ஒரு வார காலமாக கதைத்தார்கள். அவளுக்கு அடித்த யோகத்தை நம்ப முடியாதவர்களாக அந்த எளிய கிராமத்து மக்கள் பிரமித்துப் போய் நின்றார்கள். பரம ஏழையான அமீனாத்து தான் ஊதியத்துக்கு வேலை செய்த அதே வீட்டில் இல்லத்தரசியாக பதவியேற்றாள்.

லோடா தன் அந்தஸ்துக்கு ஏற்ப வாழ்வதற்கு அவளை வெகு சீக்கிரமே பழக்கி வைத்தார். அமீனாத்து காரோட்ட பழகிக்கொண்டாள்; இங்கிலாந்திலிருந்து விதவிதமான மேல்நாட்டு உடைகள் தருவித்து அணிந்துகொண்டாள். அவள் அவற்றைப் போட்டபோது கடைந்தெடுத்த கறுப்பு 'மாடல்' போல இருந்தாள். சீக்கிரத்திலேயே மீன்குஞ்சு நீத்தப் பழகுவதுபோல வெகு இயற்கையாக அவருடைய சமூக அந்தஸ்துக்கு ஏற்ப அவள் தன்னை உயர்த்திக்கொண்டாள். ஆனாலும் அவள் தனது இல்லத்து வேலைகளை தானே தொடர்ந்து செய்தாள்; ஒரு வேலைக்காரியை வைப்பதற்கு மட்டு ம தீர்ககமாக மறுத்துவிட்டாள்.

லோடாவினுடைய வாழ்க்கையானது இப்படியாக திடீரென்று கந்தர்வலோக வாழ்க்கையாக மாறிவிட்டது. தன் வாழ்நாளிலேயே இவ்வளவு சந்தோஷமாக இருந்தது அவருக்கு ஞாபகமில்லை. கிஷ்கிந்தையிலே சுக்கிரீவன் மாரிகாலம் முடிந்தபின்பும் ராமகாரியத்தை முற்றிலும் மறந்து அந்தப்புர போகத்தில் மூழ்கிக் கிடந்ததுபோல லோடாவும் தன் அலுவலக காரியங்களை அறவே மறந்தார். அவளோ வாலிபத்தின் உச்சியில் இருந்தாள்; இவருடைய 'பாட்டரியோ' கடைசி மூச்சில் இருந்தது. அவளுடைன் சுகித்திருப்பதே மோட்சம் என்ற நிலையில் 'விடுதல் அறியா விருப்பனன் ஆகி' அவள் காலடியில் உலகத்தை தரிசித்தவர் அலுவலகத்தை தரிசிக்கத் தவறிவிட்டார்.

சியரா லியோனின் எச்.டி.ஐயை அணுவளவேனம் உயர்த்தி விடவேண்டும் என்ற அவருடைய ஆரம்ப காரத்து ஆர்வமெல்லாம் போன இடம் தெரியவில்லை. இவரின் கீழ் வேலை பார்த்த அதிகாரிகள் எல்லாம் சங்கீத சீஸனில் முன்வரிசையில் உட்கார்ந்து சிரக்கம்பம் செய்யும் மகா ரஸ’கர்கள்போல இவர் சொன்னதற்கெல்லாம் தலையை 'ஆட்டு' 'ஆட்டு' என்று ஆட்டினார்களே ஒழிய காரியத்தில் தொழில்கள் மூலம் கிராமத்துப் பெண்களின் வருவாயை அதிகரிக்கும் அவருடைய சிலாக்கியமான திட்டம் படுதோல்வி அடைந்தது. மூலதனமாக அவர்கள் கொடுத்த உபகரணங்களும், பொருட்களும் கூட திருட்டுப் போயின. குதிரையை தண்­ர் காட்ட இழுத்துப் போகலாம்; குடிக்கப் பண்ண முடியுமா? இப்படியாக லோடா தன் மனதை தானே தேற்றிக் கொண்டார்.

அவருடைய பதவிக்காலம் முடிந்து வேறு நாட்டுக்கு மாற்றல் வந்தபோது லோடா திடுக்கிட்டு விழித்துக் கொண்டார். தான் சாதித்தது அவருக்கு பெருமை தருவதாக இல்லை. ஆனாலும், அலுவலகத்தில் செய்ய முடியாததை தன் சொந்த வாழ்க்கையில் சாதித்தது அவருக்கு கொஞ்சம் சமாதானமாக இருந்தது. சமுதாயத்தின் அடிமட்டத்தில் தரித்திரத்தில் உத்தரித்த ஒரு பெண்ணுக்கு அவர் வாழ்வு கொடுத்திருந்தார் அல்லவா? அவள் இன்று செல்வத்தில் திளைப்பது மட்டுமில்லாமல் அவருடைய இல்லத்துக்கும் அரசியாகிவிட்டாள். அவருக்கு புன்சிரிப்பு வந்தது. இப்படியான ஓர் அழகி அவர் வீட்டுக்கும், அவருடைய இதயத்துக்கும் ராணியானது அவருடைய அதிர்ஷ்டம்தான். இந்த ஒரு விஷயத்திலாவது சியரா லியோனின் எச்.டி.ஐ சிறிது உயர்ந்திருக்குமல்லவா?

புள்ளி விபரங்களை கரதலப் பாடமாக உய்த்திருந்த லோடா இங்கேதான் ஒரு மிகப்பெரிய தவறு செய்தார். அந்த வருடம் வெளியான எச்.டி.ஐ விபரங்களை சிறிது அவதானித்து நோக்குவாராயின் அவருக்கு தான் செய்த தவறு புரிந்திருக்கும். அவர் அமீனாத்தவை மணம் புரிந்ததினால் உள்ளபடியாக எச்.டி.ஐ. அணுப்பிரமாணமான அளவில் விழுந்துதான் போனது; கூடவில்லை.

காதல் கண்ணை மறைக்கும் என்று சொல்வார்கள் லோடா விஷயத்தில் அது அவர் மூளையையும் மறைத்து விட்டது.

பின்குறிப்பு :- உலகத்து நாடுகளில் தராதரத்தை கணிப்பதற்கு எச்.டி.ஐ முறையை ஐ.நா. கடைபிடிக்கிறது. ஒரு பெண் ஊதியத்துக்கு வேலை செய்யும் போது அவளுடைய ஊழியம் எச்.டி.ஐ கணக்கிலே சேர்க்கப்படுகிறது. அதே பெண் தனக்கு சம்பளம் கொடுக்கும் எஜமானரை மணம் முடித்து அந்த வேலையை சம்பளமின்றி செய்ய நேர்கையில் அவளுடைய உழைப்பு கணக்கில் சேர்த்துக்கொள்ளப் படுவதில்லை. இதனால் எச்.டி.ஐ விழுக்காடு அடைகிறது. பெண்களுடைய ஊதியமில்லாத உழைப்பை கணக்கிலே சேர்க்காததால் ஏற்படும் முரண்பாட்டை இந்தக் கதை சுட்டிக்காட்டுகிறது என்று சிலம் சொல்லலாம். அதை நம்புவதும் நம்பாததும் உங்கள் பொறுப்பு.

* * *





 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:33 pm

5. பீஃனிக்ஸ் பறவை

   நான் திருகோணமலை சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளிக்கிட்டு அர்லாண்டா விமான நிலையத்தில் வந்திறங்கினேன். இதற்குமுன் நான் வெளிநாட்டுக்கு பிரயாணம் செய்தவளல்ல. விமானக் கூடத்தில் இருந்த ஜனத்திரளில் என் மகனுடைய முகத்தைத் தேடியபோது எனக்கு பயம் பிடித்துக்கொண்டது.

   ஸ்டோக்ஹோமில் நான் வந்திறங்கிய வருடம் 2018. என் மகன் என்னை விட்டு பிரிந்து ஸ்வீடனுக்கு படிக்கப்போன வரும் 1998. அப்ப அவனுகு வயது 15. என்னால் நம்பவே முடியவில்லை. இருபது வருடங்கள் என் ஒரே மகனைப் பிரிந்து வாழ்ந்திருக்கிறேன். இப்போது அவனுக்கு வயது 35; மணமாகி ஆறு வயதில் ஒரு மகனும் உண்டு.

   நான் கண்களை நாலா பக்கமும் சுழட்டி தேடியபடியே வந்தேன் காணவில்லை. என்னைப் பிரியும் போது அவன் குழந்தைதான்; மீசை கூட அரும்பவில்லை. விடும்போது ஏர்போர்ட்டில் என்னைக் கட்டிப்பிடித்து கசக்கி அழுஅழுவென்று அழுதான். என் மனம் என்ன பாடுபட்டது! அப்போது அவர் இருந்தார். இப்ப அவரும் போய்விட்டார். நானும் வேலையிலிருந்து ஓய்வெடுத்து விட்டேன். என் மகன் எத்தனைதரம் டெலிபோனில் கதைத்தான்; எவ்வளவு கடிதங்கள். "அம்மா! நீங்கள் அங்கையிலிருந்து என்ன செய்யப் போறியாள்; இஞ்ச எங்களோடை வந்திடுங்கோ; உங்களுக்கு ஒரு குறையும் வராமல் பார்ப்போம்" என்று கெஞ்சியபடியே இருந்தான். எனக்கும் வேறு யார் இருக்கிறார்கள்? பிறந்த மண்ணைவிட்டு ஒரேயடியாக புறப்பட்டு விட்டேன்.

   ஓர் இளம் கணவனும் மனைவியும் என்னை உற்றுப் பார்த்தபடியே கடந்து போனார்கள். என் மகனுடைய கண்கள் எப்படி இருக்கும்? குழந்தையாக இருந்தபோது மடியிலே கிடத்தி மணிக்கணக்காக அவன் கண்களையே பார்த்தபடி இருப்பேன். மகாபாரதத்தில் வரு ம அர்ஜுன் என்ற பேரையே அவனுக்கு வைத்திருந்தேன். என் மகன் என்னிடம் "உள்ள குப்பையெல்லாம் கொண்டு வர வேண்டாம். தேவையானதை மாத்திரம் கொண்டு வாங்கோ; இஞ்ச வைக்கவும் இடமில்லை" என்று பத்துத் தடவையாவது சொல்லியிருந்தான். அதனாலே வாழ்நாள் முழுக்க சேகரித்ததெல்லாவற்றையும் மனமின்றி துறந்துவிட்டு இரண்டேரெண்டு சூட்கேசுடன் வந்திறங்கினேன். என்னுடைய துணிமணிகள், புத்தகங்கள், இவர் ஞாபகமாக சில பொருள்கள், அவ்வளவுதான்.

   தள்ளு வண்டியைத் தள்ளுவது கூட கஷ்டமாக எனக்குப் பட்டது. ஒரு சூட்கேஸ் நழுவி கீழே விழுந்தபடி இருந்தது. எங்கே போனான் இவன்? எனக்கு பதட்டமாக வந்தது. ஐந்து வருடமாக இவனும் பாவம்; என்ன கஷ்டப்பட்டு விட்டான்? ஸ்வீடன் நாடு மற்ற நாடுகள் போல அல்ல. ஜனத்தொகை விஷயத்தில் சரியான கண்டிப்பு. அவர்கள் ஜனத்தொகை 110 லட்சம். அந்தத் தொகை இந்தத்தானத்தை தாண்டாமல் வெகு கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள். பெரும் போராட்டத்திற்கு பிறகுதான் எனக்கு நிரந்தர குடியுரிமை கொடுத்தார்களாம்!

   'அம்மா' என்ற குரல் கேட்டது. தமிழ்க் குரல்தான். தேனாக அது என் காதில் வந்து விழுந்தது. என் மகன்தான் ஓடோடி வந்து கொண்டிருந்தான். என்ன கண்கள்! ஆறடிக்கும் மேலே உயரமாக வளர்ந்து விட்டான். புதர்போல கட்டுக்கடங்காமல் இருக்கும் தலைமயிரை அடக்கி வாரி அழகாக விட்டிருந்தான். ஒரு டீ சேர்ட்டும் ஜ“ன்ஜும் அணிந்திருந்தான். அவனுக்கு குளிரே இல்லை. என்னைத் தொட்டுத் தொட்டு பார்த்துவிட்டு அப்படியே ஆகாயத்தில் தூக்கிவிட்டான். மெத்தென்று வெல்வெட் போல இருந்த அவனுடைய தேகம் இப்ப வஜ்ரமாக இருந்தது. பின்னாலேயே அவள் நின்றாள். பெயர் ஸ்வென்கா. முதன்முறையாக பார்க்கிறேன். இவனைப் போல அவளும் உயரம்தான். இயற்கையான சிரிப்பு அவளுக்கு இருந்தது. பொன் நிறத்தில் தலைமயிர். அசப்பில் பார்த்தால் சினிமாவில் நடிக்கக் கூடிய அழகோடு தென்பட்டாள். நான் அதிசயப்பட்டது அவளுடைய இடையைப் பார்த்துத்தான். ஒரு கைப்பிடிக்குள் அடங்கும். நீண்ட வழுவழுவென்ற கைகள் என்றாலும் உருண்டு திரண்டு வலுவாக இருந்தன.

   'மொர்மோ, மொர்மோ' என்று என் பேரன் கையை இழுத்தான். அவனை ஆசையுடன் தூக்கி முகர்ந்தேன். முகத்தைச் சுழித்தான். 'ஹோர்கன்' என்று பேர் வைத்திருந்தார்கள்; வாயில் வராத பேர்.

   நாங்கள் கதைத்துக்கொண்டு நிற்கும்போதே என்மருமகள் சிட்டுப்போல ஓடிப்போய் காரை எடுத்து வந்தாள். குதித்து இறங்கி கிலோ சூட்கேசுகளை பூவைத் தூக்குவதுபோல பட்பட்டென்று ஒன்றைக் கையால் தூக்கி காரிலே வைத்தாள்.

   ஸ்வென்காதான் ஓட்டினாள். அர்ஜுன் ஒரு பக்கத்தில் இருந்து என் கைகளைப் பிடித்தபடி வந்தான். மற்றப் பக்கத்தில் என் பேரன். என் கண்களில் நீர் பனித்தது. முடிந்துபோன இருபது வருடங்கள் இனி திரும்பவும் வரப் போவதில்லை.



 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:33 pm


கார் சின்னதாக அடக்கமாக இருந்தது. முற்றிலும் சூரிய சக்தியிலேயே இயங்கிய அது 'குங்ஸ்காடன்' பிரதான ரோட்டிலே போய்க் கொண்டிருந்தது. ஒலி நாடாவில் உலகப் புகழ்பெற்ற 'இங்வார் கார்ல்ஸன்' பாடிய 'ஸ்வாலா, ஸ்வாலா' என்னும் பாடல் பைரவி ராகத்தின் சாயலில் ஒலித்துக் கொண்டிருந்தது. பெட்ரோல், டீசல் வாகனங்கள் போய் இப்ப எவ்வளவோ காலம். சாலையின் இரு மருங்கிலும் அடர்த்தியான மரங்கள். பாதையெல்லாம் வழித்துத் துடைத்ததுபோல நல்ல துப்புரவாக இருந்தது.

நான் வியந்த இன்னொரு காட்சி வழியிலே விளம்பர போர்டுகள் ஒன்றும் இல்லாததுதான். அர்ஜுனிடம் அது பற்றி விசாரித்தேன். அரசாங்கம் விளம்பரங்களையெல்லாம் பத்து வருடங்களாக ஒழித்து விட்டதாக அவன் சொன்னான். அதனால் பொருள்கள் மக்களுக்கு இருபது வீதம் மலிவாகவே கிடைக்கிறதாம். வர்த்தகத் துறை தொடர்ந்து மஞ்சள் பக்கங்கள் மூலம் விளம்பரங்களை இலவசமாக செய்வதற்கு அரசு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறதாம். 'இந்தப் புத்தி ஏன் மனுசனுக்கு முன்பே தோன்றவில்லை' என்று நான் நினைத்துக் கொண்டேன்.

வீடு வந்து சேர்ந்தோம். வீடும் மரச்கோலைகளினூடே ஆடம்பரமின்றி அடக்கமாக இருந்தது. என் மகன் தன் இடுப்பிலிருந்த 'ஐ.டீ. பெல்ட்டிலிருந்து' ஒரு மெல்லிய நீளமான பிளாஸ்டிக் குச்சியை இழுத்தான். கதவிடுக்கில் அதை உரசி கதவைத் திறந்து கொண்டான்.

நான் வந்து சேர்ந்த உடனேயே அர்ஜுன் செய்த முதல் காரியம் என் சார்பாக ஒரு ஐ.டீ.பெல்ட்டுக்கு விண்ணப்பம் செய்ததுதான். இதுதான் இங்கே எனக்கு அதிசயத்திலும் அதிசயம். இது பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன்; படித்துமிருக்கிறேன். ஆனால் நேரில் பார்த்தபோதுதான் அதன் உண்மையான தாக்கம் புரிந்தது. கர்ணனின் கவசகுண்டலம் போல இந்த ஐ.டீ. பெல்ட்டை எல்லோரும் கட்டியபடியே திரிவார்கள், படுக்கும் நேரம் தவிர. ஐந்து வயதுக் குழந்தையிலிருந்து அறுபது வயதுக் கிழவர் வரை இதைக் கட்டாமல் ஒருவரும் வெளிக்கிடுவதில்லை.

இங்கே காசு, கிரெடிட் கார்ட் எல்லாம் முற்றாக ஒழிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. காசையோ, கிரெடிட் கார்டையோ கண்டால் அதை ஆவலுடன் வாங்கித் தொட்டு தொட்டு பார்க்கிறார்கள். 'எங்கள் நாட்டில் எதற்கும் நாங்கள் கிரெடிட் கார்ட்தான் பாலிக்கிறோம்' என்று சொன்னால் நம்ப மறுக்கிறார்கள். ஒரு மனித உயிர் பிறந்தவுடனேயே அதன் டீ.என்.ஏயையும், கைரேகையையும் ராட்சஸ கம்ப்யூட்டர்களில் பதிந்து ஒரு ஐ.டீ.நம்பர் கொடுத்துவிடுவார்கள். அதன்பிறகு அந்த மனிதன் இறக்கும்வரை அவனைப் பற்றிய சகல விபரங்களும் அந்த நம்பரில் பதிவாகி விடும்.

என்னுடைய அடையாள அட்டை வந்தபோதுதான் நான் அதன் மகாத்மியத்தை உணர்ந்தேன். எங்கே போனாலும் என் அடையாளத்தை நிரூபிக்க இதைக் கொடுத்தால் போதும். அவர்கள் அதை கம்ப்யூட்டர் முனையில் சொருகினால் என்னுடைய சாதகம் பூராவும் தெரிந்துவிடும். வீட்டுக் கதவு, அலுவலகக் கதவு, கார்க் கதவு இப்படி எந்தக் கதவு திறப்பதற்கும் இதை ப்ரோகிராம் பண்ணி வைத்துக் கொள்ளலாம். ஒருவர் கார்டை இன்னொருவர் பாவிக்க முடியாது; கைரேகை காட்டி கொடுத்துவிடும். ஆனால் இதனுடைய முக்கியமான தாக்கம் என்னவென்றால் இது வந்தபிறகு அநேகமான வங்கிகளை இழுத்து மூட வேண்டி வந்ததுதான்.

பாதைக் கடையிலே ஒரு 'புல்புல்' ஐஸ் கிரீம் வாங்கினாலும் சரி, இரண்டு மாடிக் கட்டிடம் வாங்கினாலும் சரி உங்கள் அட்டையை கம்ப்யூட்டர் முனையில் சொருக வேண்டியதுதான். உங்கள் கணக்கிலிருந்து அவர்கள் கணக்குக்கு பணம் மாறிவிடும். வங்கிகள் அனேகமாக வெளிநாட்டினருக்கும், வணிகத்துக்கும் மட்டுமே பயன்பட்டன. தவணைமுறையில் பணம் கட்டுவதற்குக்கூட ஒருமுறை ஆணை கொடுத்து விட்டால் போதும் மாதாமாதம் பணம் மாறியபடியே இருக்கும்.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:34 pm


இதைவிட இன்னும் இரண்டு விசேஷங்கள் இந்த அடையாள பெல்ட்டில் இருந்தன. எந்தக் காடு, மலை, மேட்டிலிருந்தும் டெலிபோன் பண்ணவும், கிடைக்கவும் வசதி இருக்கிறது. ஒரு முனையில் முணு முணுத்தாலே போதும். மறுபக்கத்தில் துல்லியமாகக் கேட்டுவிடும். உலகின் எந்த மூலை முடுக்கிலிருந்தும் தொடர்பு கொள்ளலாம். அடுத்த விசேஷம், இந்தக் கார்டை வைத்து ஒருவர் தன் இருப்பிடத்தை கனகச்சிதமாக சட்டிலைட் மூலம் கணித்துவிடலாம். ஒரு ஐந்து வயதுக் குழந்தையை ஸ்வீடனில் கண்காணாத ஒரு பகுதியில் கொண்டு போய் விட்டாலும் அது இந்தக் கார்டை வைத்து வீடு தேடி வந்துவிடம். இங்கேயெல்லாம் தொலைந்து போவது என்பது மிகவும் கஷ்டமான காரியம். ட்யூசன் வைத்தால்கூட முடியாது.

இப்பொழுது எங்களுடையதும் முன்னேறிய நாடுதான். ஆனால் இவர்களைப் பார்த்தால் நாங்கள் இன்னும் இருபது வருடம் பின்தங்கிவிட்டது போலத்தான் எனக்குப் பட்டது. கண்ணால் பார்ப்பதெல்லாமே புதினமாக இருந்தது. சடுதியாக இந்தச் சூழ்நிலையை என்னால் சரிக்கட்ட முடியவில்லை. என் மகன் என்னுடைய வசதியில் மிகுந்த அக்கறையோடுதான் இருந்தான். இருந்தாலும் சின்னச் சின்ன விஷயங்கள்கூட என்னைத் தடுமாற வைத்தன.

இவர்களுடைய ஆதாரசக்தி சூரியன்தான். ஒரு வீட்டிலே பிடிக்கும் சூரியசக்தி அந்த வீட்டிற்கு போதுமானதாக இருக்கிறது. தண்­ர் போதியது இருந்தாலும் சுழல் பாவிப்பு முறைதான்; மீதமான நீர் தோட்டத்துக்கு போய்விடும். சொட்டு நீர்முறையில் புல்லும், பூச்செடிகளும், மரங்களும் செழிப்பாக இருக்கின்றன. இருந்தாலும் எனக்கு ஒரே தண்ணியை திருப்பித் திருப்பி குடிக்கிறோம் என்று தெரிந்ததும் முதலில் கொஞ்சம் அருவருப்பாகத்தான் இருந்தது.

என்னை உண்மையில் திடுக்கிட வைத்த விஷயம் குளிக்கும் முறைதான். 'கதிற்றோன்' கதிர் அலைகளில் குளிப்பது எனக்கு சங்கடமாக இருந்தது. என்ன இருந்தாலும் நிறையத் தண்­ரில் சோசோவென்று குளிர்ந்து, நனைந்து, சோப் போட்டு குளிப்பதுபோல வருமா? இது குளித்ததுபோலவே இருக்காது. என் பேரன் சொல்கிறான் கதிரியக்கத்தில் குளிப்பது எங்களுக்கு மிகவும் நல்லதாம்; பக்டீரியாக் கிருமிகள் உடனுக்குடன் செத்துவிடுகின்றன; சருமம் புது ஊட்டச் சக்தி பெறுகிறது; தண்­ரும் மிச்சப்படுகிறதாம். ஆனால் குளித்தது போலவே இல்லையே?

மற்றது, சாப்பாட்டு முறைகள். சமையல் அடுப்பென்பதே கிடையாதே. எல்லாம் கதிரியக்கத்தில் சமைத்ததுதான். அதுவும் கம்ப்யூட்டரில் முதலிலேயே ப்ரோகிராம் பண்ணியபடி. சாப்பாடு சப்பென்றிருக்கிறது. ஆனால் எல்லாம் அளவுடன் செய்த சத்துள்ள உணவாம். ஆசைக்கு ஒரு கோப்பி கூடப் போட வழியில்லை. அதுவும் கம்ப்யூட்டர் போட்டதுதான். ஒருமுறை, நல்ல பாலும் சீனியும் போட்டு இஞ்சி கலந்த கடுங்கோப்பியொன்று குடிக்க ஆசையாக இருந்தது. கம்ப்யூட்டரை திருப்பித் திருப்பி நாலைந்து தடவை ப்ரோகிராம் பண்ணிப் பார்த்தேன்; சரிவரவில்லை. அலுத்துப் போய் அப்படியே விட்டுவிட்டேன்.

இது எல்லாத்துக்கும் ஈடுகட்டுவதுபோல என் பேரன் இருந்தான். அவன் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஆசை தீராது, சின்ன வயதில் என் மகன் இருந்ததுபோல அச்சாக இருப்பான். வந்த நாளில் இருந்தே என்னோடு ஒட்டிவிட்டான். எப்பவும் அவனுக்கு ஏதாவது கதை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

"மொர்மோ, மொர்மோ! சொல்லு மொர்மோ" என்றான் ஒருநாள் என் பேரன். "ஹோர்கன்" என்ற அவன் பேரை நான் எவ்வளவு முயற்சி செய்து சரியாக உச்சரித்தாலும் சிரித்துவிடுவான். ஆனபடியால் இனிமேல் நான் அவனை 'சொக்கன்' என்றே கூப்பிடுவதாக ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டோம். அவனும் சம்மதித்தான். இவன் எனக்கு சொக்குப் பொடி போட்டுவிட்டதால் சொக்கன் பொருத்தமாகத்தான் இருந்தது.

அவனுடைய கண்களும் என் மகனுடையது போலவே அகன்று இருக்கும். தலைமயிர் தாயினுடையதைப்போல் தங்க நிறம். அவனுடைய சருமம் கடைந்தெடுத்த வெண்ணெய் என்பார்களே அப்படி இருக்கும். பார்க்கும்போதெல்லாம் வாரிக் கொஞ்ச வேண்டும்போல ஆசை தூண்டும். ஆனால் இடம் கொடுக்க மாட்டான். லஞ்சம் கொடுத்தால்தான் உண்டு.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:34 pm


இங்கே பள்ளிகள் வாரத்திற்க ஒரு முறைதான். மற்ற நேரங்களில் கம்ப்யூட்டர் மூலமாக பாடங்களை படித்து விடுவார்கள். கம்ப்யூட்டர் மூலமாகவே ஆசிரியரும் தொடர்பு கொண்டு வீட்டுப் பாடங்களை கொடுப்பார். லெமிங் என்ற மிருகம் பற்றி ஒரு ப்ரொஜெக்ட் எழுதவேணும் என்றான் சொக்கன். என்னிடம் அதுபற்றி சொல்லும்படி தொந்தரவு செய்து கொண்டேயிருந்தான். "நீ கம்ப்யூட்டரைப் பார், பிறகு புத்தகத்தை படி. அதற்குப் பிறகு நான் சொல்லித் தருகிறேன்" என்றேன். "இல்லை, மெர்மோ! நீ சொல். கதைபோல சொல்; நான் பிறகு எழுதுகிறேன். ப்ளீஸ்" என்றான், கண்களை அகல மருட்டி, இதற்கு மறுப்பு சொல்ல என் இதயம் இடம் கொடுக்குமா?

"லெமிங் ஒரு அப்பாவிப் பிராணி. ஸ்வீடன் நோர்வே போன்ற நாடுகளில் மிகுந்து காணப்படும். ஐந்து அங்குல நீளம்தான் இருக்கும். கட்டைக்கால், உருண்டையான தலை, சாம்பல் நிறம், இப்படியாக பார்ப்பதற்கு 'ஐயோ' என்று இருக்கும். புல், பூண்டு, தாவரம் எல்லாம் சாப்பிடும். எவ்வளவு குட்டிகள் போடும், தெரியுமோ? ஒரு வருடத்திற்கு பத்து குட்டிகள் வரை ஈனும்.

"ஆனால், பாவம் அவைக்கு பெரிய சோதனை. மூன்று நாலுவருடங்களில் அவைகளுடைய பெருக்கம் நாடு தாங்காது. சாப்பாடு போதாமல் போய்விடும். அப்ப அவையெல்லாம் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்துபோய் அப்படியே கடலில் மூஷ்கிச் செத்துப்போகும்."

"ஐயோ, பாவம்! மொர்மோ, எல்லாம் செத்துப் போகுமா?" என்றான் ஹோர்கன். அவன் கண்கள் இப்ப கொஞ்சம் கலங்கி விட்டன.

"கடலுக்குப் போன எல்லாம் செத்துப் போகும். மிஞ்சியிருக்கிறவை மறுபடியும் பெருக ஆரம்பிக்கும். நாலு வருடங்களில் பழையபடி நாடு தாங்காது. அப்படியே அவையும் போய் கடலில் விழுந்து விடும். இப்படியே இது தொடரும்."

சொக்கன் கொஞ்சநேரம் யோசித்தபடியே இருந்தான். நான் கதையை மாற்ற எண்ணி சொன்னேன். "எங்கள் ஊரில் பெரும் புலவர் ஒருத்தர் இருந்தார். அவருக்கு லெமிங் என்றால் உயிர். அவர் அதைப் பற்றி பாடி இருக்கிறார். நீ அதை எழுதினால் ப்ரொஜெக்டில் உனக்குத்தான் அதிக மதிப்பெண் கிடைக்கும்" என்றேன்.

ஆர்வத்தோடு "சீக்கிரம் சொல், மொர்மோ" என்றான்.

சீ ஓ, என் லெமிங்குகளே, ஆயிரக் கணக்கில் கூட்டம் சேர்த்து
குதித்துக் குதித்து எங்கே செல்கிறீர்கள்?
வைத்த சாமானை எடுக்க போவதுபோல் வழிமேல் குறிவைத்து
ஓடுகிறீர்களே, ஏன்?
போகும் வழியில் உள்ள புல், பூண்டு தாவரம் எல்லாம்
வதம் செய்து விரைகிறீர்களே என்ன அவசரம்?
அரைநொடியும் ஆறாமல் வயல்வெளி தாண்டி
ஆற்றையும், குளத்தையும் நீந்திக் கடந்து
ஓடிக் கொண்டிருக்கிறீர்களே கொஞ்சம்
உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளக் கூடாதா?
கடலை நீங்கள் அடைந்ததும் கால்கள் துவள
நீந்தி நீந்தி மாய்ந்துகொள்ளப் போகிறீர்களே!
வரும் சந்ததிகளுக்கு வழிவிடும் தியாகிகளே!
சற்று நில்லுங்கள் உங்கள் முகங்களை நான்
இன்னொரு முறை பார்த்துக் கொள்கிறேன், நினைவில் வைக்க.

சொக்கன் யோசித்தபடியே இருந்தான். அவனுடைய சிறிய வதனம் வாடிவிட்டது.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:34 pm


"மொர்மோ, ஏன் இந்த லெமிங்குகள் இப்படி சாக வேணும்?"

"இவை அபூர்வமான பிராணிகள். தங்கள் சந்ததிகளுக்கு வழிவிட தங்களையே அழித்துக் கொள்ளுகின்றன. எவ்வளவு தியாக மனப்பான்மை?"

"மொர்மோ, வேறு மிருகங்கள் அல்லது பறவைகள் இப்படி இருக்கா?

"எனக்கு தெரிந்த மட்டில் மிருகம் கிடையாது. ஆனால் கிரேக்க புராணங்களில் ஒரு கற்பனைப் பறவை உண்டு; பெயர் பீஃனிக்ஸ். அரேபியாவின் பாலைவனங்களில் இது காணப்படும். ஒரே ஒரு பறவைதான்; இதற்கு துணையும் இல்லை; முட்டையும் இல்லை. ஐந்நூறு வருடங்கள் வரை ஜ“விக்கும். அதற்குப் பிறகு தானே சுள்ளிகள் பொறுக்கி அடுக்கி சூரிய வெப்பத்தில் பற்ற வைத்து அந்த சிதையில் விழுந்து தன்னை மாய்த்து சாம்பலாகிவிடும். அதற்கு பிறகு அந்த சாம்பலில் இருந்து இன்னொரு பீஃனிக்ஸ் பறவை தோன்றி இன்னொரு ஐந்நூறு வருடங்கள் வாழுமாம்."

"என்ன மொர்மோ, எல்லாம் இப்படி செத்துப் போகிற கதை சொல்கிறாய்!" என்று அலுத்துக் கொண்டான்.

"என் குட்டிப் பேரனே, பிறக்கும் உயிர்கள் எல்லாம் ஒரு நாளைக்கு இறக்கத்தானே வேண்டும். அதுவும் இந்த உயிர்கள் எவ்வளவு உயர்ந்தவை. இவை தங்கள் சந்ததி வளர்வதற்காக தங்களையே மாய்த்துக் கொள்கின்றன. பழசு போனால்தான் புதியது வரும்."

என் பேரன் கொஞ்ச நேரம் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டிருந்தான். பிறகு "ஹால் காவ்ரன்! நீ பழசு, போ" என்று சொல்லி என் கன்னத்தில் தன் சின்னக் கையால் இடித்துவிட்டு ஓடிப் போனான்.

நான் சொன்ன கதையின் உண்மையை சோதிக்கும் படியான ஒரு திடுக்கிடும் சம்பவம் சீக்கிரத்திலேயே நடந்தது. உலகிலேயே மிகவும் முன்னேறிய நாடு ஸ்வீடன். அமெரிக்காவும், ஜப்பானும்கூட சில விஷயங்களில் பத்து வருடங்கள் பின் தங்கி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு கருணை மரணம் (Euthansia) ஒரு உதாரணம். ஆற்றொணாக் கொடுநோயினால் துன்புறுபவர்களும், தீராதவியாதி வந்தவர்களும், கருணை மரணத்துக்கு விண்ணப்பிக்க ஸ்வீடனில் சலுகை உண்டு. அது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் உலகத்திலே எங்கும் காணாத ஒரு ஆச்சரியமான வழக்கம் கடந்த சில வருடங்களாக அரசாங்கத்தின் முழு ஆதரவோடும் இங்கே நடந்து கொண்டிருந்தது.

எனக்கு இந்த நாடு பிடித்துவிட்டது. என்ன மாதிரி சுற்றுச்சூழலை பேணிகிறார்கள்? எப்படி துரிதமாக விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை தங்கள் மேம்பாட்டுக்கு பயன்படுத்துகிறார்கள்? ஆனாலும், சில விஷயங்களை என்னால் ஜ“ரணிக்க முடியவில்லையே! பக்கத்து வீட்டிலே ஒரு பிறந்த தின கொண்டாட்டம் நடந்தது. முதன்முறையாக எனக்கும் சேர்த்து ஒரு அழைப்பு வந்திருந்தது. அது என்ன மாதிரி கொண்டடாட்டமென்று யாராவது முன்பே எனக்கு எச்சரிக்கைசெய்திருக்கலாம். அப்படியானால் நான் போவதைத் தவிர்த்து இருப்பேன்.

ஹென்னிங்ஸன் அவருடைய பெயர். எழுபது வயதுக் கிழவர். அவருக்குத்தான் பிறந்த தினம். இருபதுபேர் மட்டில் வந்திருந்தார்கள். பெரிய கேக்கில் ஏழு மெழுகுவர்த்திகள் கொழுத்தி வைக்கப்பட்டிருந்தன. எல்லோரும் பாட்டுப் பாடி, வழக்கம்போல கேக் வெட்டி சாப்பிட்டு, அதற்குப் பிறகு அதிவிசேஷமான சாம்பெய்ன் மது அருந்தி வெண்ணெய் கட்டியும் சாப்பிட்டோம். பிற்பாடு ஹென்னிங்ஸன் ஒரு சிற்றுரை ஆற்றினார். அதில் தான் எழுபது ஆண்டுப்பிராயம் அடைந்து விட்டதாகவும், பூரண ஆரோக்கியத்துடன் நிறைந்த வாழ்வு வாழ்ந்ததாகவும், இனிமேல் கருணை மரணத்தை தழுவ முடிவு செய்ததாகவும் சொன்னார். எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். ஒருவர் கண்களிலும் நீரில்லை. அவருடைய சொந்தப்பிள்ளைகள்கூடகவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எனக்கு அந்தக் காட்சி மனசைப் பிழிந்தது.

வழக்கமாக வந்த விருந்தினர்தான் பரிசுகள் தருவது வழக்கம் இங்கே பிரியாவிடை முகமாக கிழவர்தான் பரிசுகள் கொடுத்தார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பரிசளித்தார். முன்பின் தெரியாத எனக்குக்கூட மூன்றாம் குஸ்ராவ் மன்னர் காலத்திய நாணம் ஒன்றை தந்தார். குஸ்ராவ் மன்னர் பில்லாத நாயணம் அது என்று பின்னால் தெரிந்து கொண்டேன். விருந்தின் முடிவில் இரண்டு டாக்டர் தயாராக இருந்த ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்றார்கள்.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:35 pm


அன்றிரவு எனக்கு தூக்கம் வரவில்லை. முழு ஆரோக்கியத்துடனும், புத்தி சுவாதீனத்துடனும் உள்ள ஒருவர் இப்படிப்பட்ட முடிவு எடுப்பது சரிதானா? அரசு கூட இதை ஆதரிக்கிறதே! அரசாங்கத்தின் வாதமோ ஆணித்தரமாக இருந்தது. ஸ்வீடனில் இப்போது சராசரி வயது ஐம்பதுக்கு மேல் போய்விட்டது. இளைஞர் சமுதாயம் வெகுவாக குறைந்துவிட்டது. ஆனபடியால் அரசு எழுபது வயதிற்க மேற்பட்டவர்கள் இப்படி விண்ணப்பம் செய்வதை வரவேற்கிறது. ஒருவர் இறந்தவுடன் அவருடைய எண் கம்புயூட்டரிலிருந்து நீக்கப்படுகிறது. உடனே அந்த இடத்தை ஒரு புதிதாகப் பிறக்கும் குழந்தை நிரப்பிவிடுகிறது. ஹென்னிங்ஸன் ஒரு விஞ்ஞானி. அவர் கண்டுபிடித்த சித்தாந்தங்கள் இன்றும் பாடப்புத்தகங்களில் இருக்கிறதாம். அவர் சாகவேண்டி அப்படி என்ன அவசியம்? எனக்கு இது மிகவும் அநியாயமாகபட்டது. எங்கள் இதிகாசங்களில் பிராயோபவேசம் என்று சொல்லியிருக்கிறது. பாரதப்போர் முடிவில் வில்லுக்கு அதிபதியான விதுரன் என்ன செய்தார்? காட்டிலேபோய் தர்ப்பைமீது படுத்து பிராயோபவேசம் செய்துகொண்டார். ஏன், சந்திர வம்சத்து மன்னர் யயாதி செய்தது என்ன? எவ்வளவு சுகம் அனுபவித்தாலும் யயாதிக்கு போதவில்லை. கெஞ்சிக்கூத்தாடி மகனிடம் இளமையை கடன் வாங்கிக் கொண்டார். இன்னொரு மூச்சு அனுபவிக்க வேண்டும் என்று ஆசை. பிறகு ஒரு ஆயிரம் வருடங்கள் அனுபவித்தார். அப்படியும் போதவில்லையாம். கடைசியிலே எல்லாவற்றையும் துறந்து காட்டிற்கு போய் உயிரைவிட்டார்.

இரவு இரண்டு மணி. வெளியே பார்த்தேன். சூரியனுடைய கதிர்கள் கீழ்வானத்தில் பரவிக் கிடந்தன. அப்படியே உறங்கி விட்டேன். இந்த சம்பவம் பெரிய தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தி விட்டது. ஆனால் மகனோ, என் மருமகள் ஸ்வென்காவோ இதை பெரிதுபடுத்தவில்லை. என் மருமகள் போல ஒரு பெண் இந்த உலகத்தில் கிடைப்பது அபூர்வம். எப்பவும் அவளுக்கு சிரித்தபடியிருக்கும் கண்கள். ஆனால் சில சில்லறை விஷயங்கள்தான் எனக்குப் பிடிபடுவதில்லை. சொக்கன் பதியென்று ஓடிவந்து சாப்பாடு கேட்பான். ஸ்வென்கா கம்புயூட்டர் நம்பரை மட்டுமே சொல்லுவாள். பாவம், அவனே செய்து சாப்பிட வேண்டுமாம். தங்கள் வேலைகளை தாங்களே செய்யவேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தாள்.

மூன்று நாள் சென்று ஹென்னிங்ஸனுடைய சாம்பலை ஒரு மரப்பேழையில் வைத்து கொண்டு வந்து பக்கத்து வீட்டில் கொடுத்தார்கள். அதை தோட்டத்திலே ஒரு நல்ல இடமாகப் பார்த்து அவர்கள் புதைத்து அதன் மேல் ஒரு 'பேர்ச்' செடியையும் நட்டார்கள். வில்லியம் கிறிஸ்ரர் ஹென்னிங்ஸன் என்ற விஞ்ஞானி தானாகவே 'பேர்ச்' செடிக்கு உரமாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

எங்களுடைய வீட்டைப்பற்றி நான் ஒன்றுமே சொல்லவில்லை. ஸ்வீடனில் தொண்ணூறு வீதம் வீடுகள் எங்கள் வீட்டைப்போலவே இருக்கின்றன. நடுவீட்டில் வரவேற்பறையும், சமையல், சாப்பாட்டு அறைகளும், ஜிம் (தேகப்பியாசம்) அறையும் இருக்கும். மேலே படுக்கை, குளியல் அறைகள். எல்லோருக்கும் கம்புயூட்டர் மூலமாகவே நடைபெறும்.

ஸ்வென்கா முகம் சுழித்தோ, மனம்வருந்தி அழுதோ நான் கண்டது கிடையாது. முன்பே கூறியபடி அவளுக்கு எப்பவும் மலர்ந்த முகம்தான். தற்செயலாக அவள் ஒருமுறை அழுததை நான் பார்க்க நேரிட்டது. எனக்கு அடிவயிற்றை என்னவோ செய்தது.

ஒருநாள் வழக்கம் போல மூன்றுபேரும் கீழேயுள்ள ஜிம்மில் எரோபிக்ஸ் ஒரு மணித்தியாலம்வரை செய்துவிட்டு வந்தார்கள். மரக்காலணிகளுடன் அவர்கள் நடந்து வந்தபோது. 'டக், டக்' என்று வடிவாகத்தான் இருந்தது. என் மகனைப் பார்த்தேன். என்ன அழகாக இருக்கிறான். அந்தக் கண்களுடைய ஒளி என்ன சுபாவமாக வீசுகிறது. ஸ்வென்கா 'லியோரார்ட்' உடுப்பில் உயராமாக தோன்றினாள். என் கண்ணே பட்டுவிடும் போல இருந்தது. சிறுதுளி வியர்வை பிரகாசிக்க அப்ஸரஸ் போலத்தான் வந்தாள். அவளுக்கு ஆறுவயதுப் பையன் இருப்பதாகச் சொன்னால் யாராவது நம்புவார்களா? கனநீர் பற்றி ஆராய்ச்சி செய்கிறாளே என்று எண்ணுவேன்.

இவளுடைய இடை என்ன இப்படி இருக்கிறது. பதினேழு வயசுப் பெண்போல? ஒரு நாள் நான் கேட்டுவிட்டேன். அவள் சிரித்துவிட்டு சொன்னதைக் கேட்ட நான்தான் அதிர்ச்சியடைந்தேன். அர்ஜுன்கூட எனக்கு இதுவரை இதைப்பற்றி சொல்லவில்லையே!

என் மகனுக்கு 29 வயது நடக்கும்போது இவர்கள் மணம்செய்து கொண்டார்கள். முதலில் என்னமாதிரி குழந்தைவேணும் என்று தீர்மானித்துக் கொண்டார்களாம். இவள் தங்கநிறத் தலைமயில் வேண்டும் என்றாள்; அர்ஜுனோ பெரிய நீலக்கண்கள் கொண்ட ஒரு ஆண்மகவு என்றானாம். கருவங்கியிலே போய் தங்கள் கருக்களைக் கொடுத்தார்கள். அவர்கள் லபோரட்டரியில் கருக்களை இணைத்து கம்புயூட்டர் மூலம் கணித்து சிசு எதிர்காலத்தில் எப்படி பரிமளிக்கும் என்று கூறிவிடுவார்கள். இவர்கள் போய் சிசுக்களைக் காட்டினார்களாம். நோய், நொடி இல்லாத ஆரோக்கியமான நிலையில் தங்கத்தலைமயிரும், நீலக்கண்களும் கொண்ட ஒரு ஆண்சிசுவை இவர்கள் தெரிவு செய்தார்களாம்.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக