புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
34 Posts - 52%
heezulia
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
17 Posts - 2%
prajai
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
9 Posts - 1%
jairam
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
4 Posts - 1%
Jenila
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 06, 2013 5:31 pm

நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் DuCbdq56TleS8988PkDh+p78

தென்கயிலாயம் எனப்படும் பொதிகை மலையில், சிவபூஜையில் ஈடுபட்டிருந்தார் அகத்திய மாமுனி. இது சிவ கட்டளை. 'தெற்கில் இருந்துகொண்டு, சில காலம் தவத்தில் ஈடுபடு!’ என்பது சிவனாரின் உத்தரவு. அனுதினமும் சிவபூஜையில் திளைத்திருந்த அகத்தியருக்கு, ஒருநாள் அப்படியரு ஆசை எப்படித்தான் வந்ததோ..?!

'என் சிவனே... அடுத்த யுகம் குறித்தும், அந்த யுகத்தில் வாழும் கோடிக்கணக்கான ஜீவராசிகளின் நிலை குறித்தும் அறிய விரும்புகிறேன். தாங்கள் உபதேசம் செய்து அருளுங்கள்’ என வேண்டினார் அகத்தியர். 'அவ்வளவுதானே... உன் சீடன் திருவூல முனிவர் அமர்ந்து தவம் செய்யும் தலத்துக்கு வா! அங்கே உபதேசம் நிகழும்’ என அருளினார் சிவனார்.

அதன்படி, திருவூல முனிவர் அமர்ந்து தவம் செய்யும் திருஉளம்பற்றி எனும் ஊருக்கு வந்தார் அகத்தியர். குருநாதரைக் கண்டதும் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார் திருவூல முனிவர். அதன் பின்பு, ஓங்கார சொரூபினியாக, சிவ உபதேசத்துக்காக வந்தருளினாள் உமையவள். அவளைக் கண்டதும், இருவரும் விழுந்து நமஸ்கரித்தார்கள்.

''உங்களுடன் எனக்கும் இங்கே உபதேசம் கிடைக்கப் போகிறது. அப்படி உபதேசம் மட்டும் கிடைத்துவிட்டால், இதோ... இங்கே இருந்தபடி அனைவருக்கும் கல்வியையும் ஞானத்தையும் வழங்கச் சித்தமாக உள்ளேன்'' என்று அருளினாள் தேவி.

அவளின் எண்ணப்படியே, சிவபெருமான் குருவாக இருந்து மனைவி உமையவளுக்கும், அகத்திய மாமுனிவருக்கும், திருவூல முனிவருக்கும், பின்னர் இன்னும் பல முனிவர் பெருமக்களுக் கும் உபதேசம் செய்து அருளியதோடு, அனைவருக்கும் ரிஷபாரூடராகக் காட்சி தந்து அருள்பாலித்தார். இத்தனை மகத்துவமான சம்பவங்கள் நிறைந்த திருஉளம்பற்றி கிராமம், திருநெல்வேலிக்கு அருகில் இருக்கிறது. அந்த ஊர் தென் திருவாரூர் என்றும், இடைகால் என்றும் அழைக்கப்படுகிறது.

தமிழகத்தில், பஞ்ச குரு திருத்தலங்கள் எனப் போற்றப் படுபவை, மதுரைக்கு அருகில் உள்ள தென் திருப்புவனம், திருப்புடைமருதூர், அத்தாளநல்லூர், அரிகேசவநல்லூர் மற்றும் தென் திருவாரூர் எனப்படும் இடைகால் ஆகியவை. குருவாக இருந்து உபதேசம் செய்ததால், பஞ்ச குரு தலங்களில் ஒன்று எனப் போற்றப்படும் இடைகால் சிவாலயத்துக்கு வந்து எவர் வேண்டினாலும், அவர்கள் ஞானமும் யோகமும் அமையப் பெறுவார்கள் என்பது ஐதீகம்!

திருநெல்வேலி அம்பாசமுத்திரத்துக்கு அருகில் உள்ளது இடைகால் இங்கே அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் சிவனார். இவரின் திருநாமம்- ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி. அம்பாளின் திருநாமம்- ஸ்ரீசிவகாமி அம்பாள்.

சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் நேர்த்தியுடன் அமைக்கப்பட்ட ஆலயம் இது. நெல்லைச் சீமை என்பது பாண்டிய நாட்டுக்குள் இருக்கிற பகுதிதான் என்றாலும், இந்தப் பகுதியை ஆட்சி செய்த சோழ மன்னர்கள் திருப்பணிகள் மேற்கொண்ட சிவாலயம் இது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 06, 2013 5:32 pm

நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் 53R7JvkARTejEsfRDruM+p78a

ராஜராஜ சோழன், தில்லையம்பதியில் இருந்து திருமுறைப் பாடல்களின் ஓலைச்சுவடிகளை உலகுக்கு அளித்தான்; அதேபோல், அவனுடைய மைந்தன் ராஜேந்திர சோழனும் இங்கே, இந்தத் தியாகராஜ ஸ்வாமி கோயிலில் வேத விற்பன்னர்களை வரவழைத்து, சிறப்பு பூஜைகள் செய்து, தென்பாண்டி தேசத்தில் திருமுறைகளைப் பரப்பினான் என்கிறது கோயிலின் ஸ்தல வரலாறு.

இத்தனைப் பெருமைகள் கொண்ட ஆலயம், இன்றைக்கு வழிபாடுகளும் பூஜைகளும் இல்லாமல், சர்வ அலங்காரங்களும் வீதியுலாக்களும் இல்லாமல் வெறிச்சோடி இருக்கிறது என்பதுதான் வேதனை. ஐப்பசி அன்னாபிஷேகமும், திருக்கார்த்திகை தீபமும், ஆனிப் பெருந்திருவிழாவும், மார்கழித் திருவாதிரையும் கோலாகலமாக நடைபெற்ற ஆலயத்தில், இன்றைக்கு ஒருகால பூஜை நடப்பதற்குக்கூட வழியோ வசதியோ இல்லை என்பதுதான் கொடுமை.

''தென் திருவாரூர்னு போற்றப்படுகிற இடைகால் ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி கோயில், ஒருகாலத்தில் பிரசித்தி பெற்ற கோயிலா இருந்திருக்கு. இங்கே நடைபெறும் விழாக்கள்ல கலந்துக்கறதுக்காக திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, முக்கூடல், கடையம், தென்காசின்னு பல ஊர்களிலேருந்தும் மக்கள் வண்டி கட்டிக்கொண்டு வந்திருக்காங்க. ஸ்வாமியையும் அம்பாளையும் தரிசனம் பண்ணிட்டு, சந்தோஷமாப் போயிருக்காங்க. அன்னாபி ஷேகத்தின்போது, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் நடக்குமாம். அதேபோல, திருக்கார்த்திகை தீபத் திருவிழா அன்னிக்கிக் கோயிலும் ஊருமாச் சேர்ந்து ஒளி வெள்ளத்துல மிதக்குமாம்.

ஆனா, கொஞ்சநாள் முன்பு வரைக்கும் ஸ்வாமிக்கு விளக்கேத்தக்கூட எண்ணெய் இல்லாத நிலை இருந்துச்சு. ஒருகால பூஜைகூட செய்யமுடியாம இருந்துது. அன்பர்களின் உதவியோடு, இப்ப ஒரு கால பூஜை நடக்குது; விளக்கேத்தவும் ஓரளவு எண்ணெய் கிடைக்குது. ஆனால், கோயில் திருப்பணிகள் முடிஞ்சு, சீக்கிரமே கும்பாபிஷேகம் நடந்து, கோயில் பழைய கலகலப்புக்குத் திரும்பணும்கறதுதான், இடைகால் மக்களோட நெடுங்காலத்துக் கனவு, ஆசை எல்லாமே!'' என்கிறார் கோயில் திருப்பணியில் ஈடுபட்டு வரும் ரவிச்சந்திரன்.

நெல்லைச் சீமையில் உள்ள தென் திருவாரூர் எனப்படும் கோயிலில், பழையபடி வீதிகளில் தேரோட வேண்டாமா? ஸ்ரீதியாகராஜ ஸ்வாமியும் ஸ்ரீசிவகாமி அம்பாளும் சர்வ அலங்காரத்துடன் இடைகால் கிராமத்தை வலம் வரவேண்டாமா? முக்கியமாக, கோயிலானது சீரமைக்கப்பட்டுப் பழைய பொலிவுக்கு வந்தால்தானே, அந்தக் காலம் போல இன்றைக்கும் பக்தர்கள் எங்கிருந்தெல்லாமோ வந்து தரிசித்துச் செல்வார்கள்?

ஸ்ரீஅகத்தியருக்கு அருளிய தலத்தை அழகுபடுத்துவது நம் கடமை அல்லவா? திருமுறைகளை தென்பாண்டி நாட்டில் பரப்புவதற்கு அடித்தளமிட்ட ஆலயத்தில், வேத கோஷங்கள் மீண்டும் முழங்குவதற்கு நம்மால் முடிந்த உதவிகளை, திருப்பணிக்குச் செய்ய வேண்டாமா?

ஸ்ரீசிவகாமி அம்பாளுக்கு ஆனியில் எப்போதும்போல் விமரிசையாக விழா நடக்கவும், புதுப்புது வஸ்திரங்களும் நைவேத்தியங்களுமாக சந்நிதியே களை கட்டவும் வேண்டுமல்லவா? அதற்கு ஒவ்வொரு சிவனடியாரும் தன்னால் இயன்றதைச் செய்தால்தானே சிவனார் குடிகொண்டிருக்கும் கோயில் பொலிவு பெறும்; கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெறும்?!

இடைகால் ஈசனுக்கு, அவன் குடிகொண்டிருக்கும் கோயிலுக்கு நம்மால் முடிந்ததைச் செய்து, திருப்பணியில் பங்கேற்போம். ஒரு குறைவும் இல்லாமல், அவன் அருளால் அவன் தாள் பணிந்து, நிம்மதியும் நிறைவுமாக வாழ்வோம்.

எங்கே இருக்கிறது?

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலுக்கு அருகில் உள்ளது இடைகால். திருநெல்வேலியில் இருந்து முக்கூடல் வழியாகச் செல்லும் பேருந்தில் பயணித்தால், சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ளது இடைகால் விலக்கு பேருந்து நிறுத்தம். திருநெல்வேலியில் இருந்து கடையம் வழியே பாபநாசம் செல்லும் பேருந்துகள், இடைகால் ஊருக்குள்ளேயே செல்லும்.

விகடன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Nov 06, 2013 9:09 pm

விகடனுக்கும் சிவா அவர்களுக்கும் நன்றி ! மூட நம்பிக்கையையும் தமிழர் வரலாற்றையும் பிரித்தறியவேண்டும் என்று எனது பல புராண ஆய்வுகளில் வெளிப்படுத்தியுள்ளேன் ! அவ்வகையில் தியாகராஜரின் இந்தத் தலம் குறிப்பிடத்தக்கது !
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 06, 2013 11:20 pm

நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் 103459460 

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Nov 07, 2013 3:11 pm

பகிர்வுக்கு நன்றி.. அருமையான தகவல்கள்...



அன்புடன் அமிர்தா

நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Aநெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Mநெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Iநெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Rநெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Tநெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Hநெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக