புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
19 Posts - 49%
heezulia
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
1 Post - 3%
Guna.D
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
1 Post - 3%
Shivanya
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
10 Posts - 2%
prajai
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 11, 2013 8:07 pm

First topic message reminder :

தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 G9qAKHQVTeil9lsXIXr7+bharathi1

சுப்பையா என்று இளம் வயதில் அழைக்கப்பட்ட தமிழ் கவிதையுலகின் சூரியன் பாரதியின் பிறந்தநாள் டிசம்பர் பதினொன்று. இளம் வயதில் அம்மாவின் பாசம் என்னவென்று தெரியாமல் அப்பாவின் வளர்ப்பில் வளர்ந்த அவருக்கு அப்பொழுது கணக்கு என்றால் பிணக்கு. இது வெகு காலத்துக்கு கல்விமுறையின் மீது வெறுப்பாகவே மாறியது. ஒரு சிறுவன் இளமையில் கல் என்று ஓயாமல் மனனம் செய்து சொல்லிக்கொண்டு இருந்த பொழுது ‘முதுமையில் மண்’ என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார் இவர்.

அற்புதமான கவிதையாற்றல் பாரதி எனும் கலைவாணியை குறிக்கும் பட்டத்தை தந்தது. பாரதி சின்னப்பயல் என்று கவிதை பாட சொல்ல பார் அதி சின்னப்பயல் என எள்ளல் குறையாமல் பாடியது பாரதி தான்

தமிழ் எழுத்துலகில் கார்ட்டூன் என்பதை அறிமுகப்படுத்தியது பாரதியாரே. அதை முழுதாக சித்திர பாரதி என்கிற நூலில் பார்க்கலாம். இளம் வயதில் பாரதிக்கு ஒரு காதல் இருந்தது. அந்த பெண்ணை சாகுந்தலை என்று அடையாளமிட்டு குறிக்கிறார். தன் மகளுக்கு அதே பெயரை வைத்தார் அவர்.

மதுரை தமிழ் சங்கம் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது அவரின் கவிதை. அந்தக்கவிதை தான் ,’செந்தமிழ் நாடெனும் போதினிலே’. பண்டிதர்கள் கடத்திக்கொண்டு போன பைந்தமிழ் குழந்தையை கண்டுபிடித்துக்கொடுத்த காவல் நிலையமான பாரதியின் எளிய நடை அக்காலத்தில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதை பண்டிதர்கள் எதிர்த்தார்கள். பாரதி ,”கவியரசன் தமிழுக்கு இல்லை என்ற வசை என்னால் கழிந்தது !” என்று மட்டும் சொன்னார்

எக்கச்சக்க வறுமையிலும் குருவிக்கு தானியங்களை கொடுத்துவிட்டு சிரித்த நேசிப்பாளன். வாட்டிய பசியிலும் ,”எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா !” என்று பாடிய பெருங்கவிஞன் அவன். எல்லா உயிரிலும் இறைவன் இருக்கிறான் என்று நம்பிய அவர் புதுச்சேரியில் புயலில் பறவைகள் இறந்த பொழுது கனிவோடு அவற்றை அடக்கம் செய்தார்.

நாட்டை தட்டி எழுப்ப கவிதை எழுதிய அந்த சிந்துக்கு தந்தை எப்பொழுதும் தாலாட்டு மட்டும் பாடியதே இல்லை. நாடு உறங்க இது தருணமன்று என்கிற எண்ணமே காரணம். பாரதியும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் அடுப்பு பற்ற வைத்தார்கள். அடுப்பு பற்றவே இல்லையாம். சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு துன்புறுகிறார்கள் என்பதை உணர்ந்து `பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்று தான் எழுதினார் பாரதி. கழுதை குட்டியை தூக்கி போட்டுகொண்டு மனைவியோடு கம்பீரமாக நடந்த பாரதியை ,”பைத்தியங்கள் உலவப்போகின்றன !” என்று ஊரார் சொன்ன பொழுது எழுப்பியது தான் ‘நிமிர்ந்த நன்னடை’ பாடல்

. ‘என் மகள் காசிக்கு ஓடிப்போய் தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒருவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன் !” என்று கடிதம் எழுதவேண்டும். அதைக்கேட்டு நான் பூரிக்க வேண்டும் ‘ என்று பாரதி எழுதினார்.

‘கடமை அறியோம் தொழில் அறியோம் !” என்று பறவையின் மனப்பான்மையிலும்,’தீக்குள் விரலை வைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா’ என்றும் பாரதியால் தான் பாட முடியும்

வறுமையில் வாடிப்போன அவர் “பராசக்தி! இந்த உலகின் ஆன்மா நீ. உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக் கூடாதா?

கடன்காரன் தொல்லை தாங்க முடியவில்லையே. குழந்தைக்கு ஜுரம் வந்தது… வைத்தியனுக்குக் கொடுக்கப் பணம் இல்லை. குழப்பம், குழப்பம்; தீராத குழப்பம்! எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்! தாயே! என்னைக் கடன்காரர் ஓயாமல் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தால், நான் அரிசிக்கும் உப்புக்கும் யோசனை செய்து கொண்டிருந்தால், உன்னை எப்படிப் பாடுவேன்?” என்று புலம்பினார்.

பாரதி காந்திக்கு கடிதம் வரைகிற பொழுது அவர் சென்னையில் ஆங்கிலத்தில் பேசியதை விடுத்து ஏதேனும் இந்திய மொழியில் பேசி இருக்கலாமே என்று கேட்ட பொழுது அவர் அவ்வாறே செய்கிறேன் என்றார். ஆனால்,கடிதத்தை ஏன் ஆங்கிலத்தில் எழுதினீர்கள் என்று கேட்ட பொழுது ,’பிறரை புண்படுத்தும் பொழுது அன்னை மொழியை பயன்படுத்தி பழக்கமில்லை.’ என்று தெறித்து வந்தது பதில்.

சென்னை கிருஷ்ணாம்பேட்டையில் பாரதி உறங்கிக்கொண்டு இருக்கிறான். அவனின் கீதங்கள் அக்கினி குஞ்சுகளை ஈந்துக்கொண்டே இருக்கின்றன. வேடிக்கை மனிதரைப்போல வீழாத அந்த என்றும் இளைஞன் இறக்கிற பொழுதும் வெள்ளையனை தலை முடியில் கூட அண்ட விடமால் நல்லதொரு வீணையாக நாட்டை மீட்டி மறைந்தான். அவனின் இறுதி அஞ்சலிக்கு வந்தது இருபதுக்கும் குறைவானோர்.

பூ.கொ. சரவணன் @ விகடன்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 11, 2013 8:14 pm

மக்கள் மன்றத்தின் வரவேற்பு

பாரதி மறைவதற்குச் சில மாதங்கள் முன்பு கடலூர், திருவண்ணாமலை ஆகிய ஊர்களில் கூட்டங்களில் பங்கேற்கிறார். இந்தக் கூட்ட நிகழ்ச்சிகள் தொடர்பான பதிவுகள் சுதேசமித்திரனில் (25 மார்ச்,1921) வெளிவந்திருந்தன.

கடலூருக்கு வந்திறங்கிய பாரதியை வரவேற்கப் பெருங்கூட்டம் கூடியிருந்தது என்பதையும், ரயில் நிலையத்தில் கடலூரின் இந்து, முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுதிரண்டு வரவேற்றனர் என்பதையும், ரயில் நிலையத்திலிருந்து அவர் மேளதாளங்களோடும் கொடிகளோடும் முழக்கங்களோடும் அழைத்துச் செல்லப்பட்டார் என்பதையும் சுதேசமித்திரன் தெரிவிக்கிறது. அன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் 5,000 மக்கள் கூடியிருந்தனர் எனவும், அவர்கள் பாரதியைக் கண்டதும் சந்தோஷக் கடலில் மூழ்கினர் எனவும் சுதேசமித்திரன் தெரிவிக்கிறது. மக்கள் மன்றங்களிலும் பாரதி கொண்டாடப்பட்டிருக்கிறார்; ஓரளவு அறியப்பட்டிருக்கிறார் என்பதை இந்தச் செய்தி உணர்த்துகிறது. 1919-ல் எட்டயபுர மன்னனிடம் சீட்டுக்கவி எழுதி, சால்வை, ஜதி, பல்லக்கு முதலியவற்றோடு வரவேற்க வேண்டி, அவை யாவும் கிடைக்காமல் போன பாரதிக்கு மக்கள் மன்றத்தில் அப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்திருக்கிறது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 11, 2013 8:32 pm

இறுதி ஊர்வலம்

வாழ்ந்தபோது பாரதியைச் சமூகம் ஓரளவு அங்கீகரித்ததெல்லாம் சரி, இறந்தபோது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை பாரதியை அங்கீகரிக்காததன் அடையாளம் அல்லவா எனப் பல முனைகளிலிருந்தும் வினாக்கள் எழக்கூடும். இதற்கு விடை அளிப்பதுபோல பாரதியின் மகள் சகுந்தலா பாரதி அந்தச் சூழலை விளக்கியிருக்கிறார். பாரதியின் மூத்த மகளும் மருமகனும், பாரதியின் தம்பியும் பாரதி இறந்து ஓரிருநாள் கழித்தே வந்துசேர்கிறார்கள். சென்னையிலேயே இருந்த பாரதியின் புதுவைச் சீடர் ரா. கனகலிங்கம் மறுநாள் பத்திரிகையின் வாயிலாகத்தான் மறைவை அறிந்து துடித்துப்போகிறார். இன்று இருப்பதுபோல உடலைப் பாதுகாக்கும் வசதிகளோ, செய்தியைப் பரவலாகத் தெரிவிக்கும் ஊடக வசதிகளோ அன்றில்லை. மேலும், பிராமண சமூக வழக்கம், ஒண்டுக்குடித்தனச் சூழல் முதலியனவெல்லாம் பலர் வரும் முன்னே உடலை எரியூட்டச் செய்துவிட்டன என்பதே உண்மை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 11, 2013 8:34 pm

இறப்புக்குப் பின்னால்…

பாரதியின் மறைவுக்குப் பின் மாதந்தோறும் அவர் குடும்பத்துக்கு அவருடைய நண்பர் துரைசாமி ஐயர் ரூ. 25 வழங்கி உதவினார். தந்தை பெரியார், ராஜாஜி, திரு.வி.க. போன்றோரை உள்ளடக்கிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, பாரதியின் குடும்பத்துக்கு 1,000 ரூபாய் வழங்கியது. கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியார் பாரதி நூல்களின் உரிமையைப் பெற்றுக் கொண்டு ரூ. 10,000 வழங்க முன்வந்தார் (பின்னர் இது தடைபட்டது). இவற்றோடு, செல்லம்மாள் பாரதி மேற்கொண்ட பாரதி நூல் வெளியீட்டு முயற்சிகளுக்காகத் தமிழகத்திலிருந்தும் பர்மா முதலிய பகுதிகளிலிருந்தும் வந்து சேர்ந்த பண உதவிகள் என்றெல்லாம் பாரதிக் கான அங்கீகாரமும் ஆதரவும் பாரதி குடும்பத் துக்குத் தொடர்ந்தன. பாரதி வாழ்ந்த காலத்திலும், அவரது மறைவுக்குப் பின்னும் தமிழகம் பாரதியையும், பாரதி குடும்பத்தையும் குறிப்பிடத் தக்க நிலையில் அங்கீகரித்துவந்தது என்பதே உண்மை வரலாறாகும்.

- ய. மணிகண்டன், உதவிப் பேராசிரியர், தமிழ் இலக்கியத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 12, 2013 8:06 am

தமிழகமே பெருமை படக்கூடிய அசாதாரணமான மனிதர். தமிழகத்தில் பிறந்ததால் அதிகம் அறியப்படாதவர். வட நாட்டில் பிறந்து இருந்தால் ஆஹா ஓஹோ என மிக பெ....ரி....ய மனிதராக சித்தரிக்கப்பட்டு இருப்பார்.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக