புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_c10இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_m10இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_c10இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_m10இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_c10 
1 Post - 20%
Manimegala
இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_c10இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_m10இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_c10இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_m10இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_c10இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_m10இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_c10இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_m10இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_c10 
11 Posts - 4%
prajai
இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_c10இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_m10இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_c10 
9 Posts - 4%
Jenila
இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_c10இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_m10இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_c10 
4 Posts - 2%
Rutu
இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_c10இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_m10இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_c10இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_m10இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_c10இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_m10இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_c10 
2 Posts - 1%
Barushree
இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_c10இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_m10இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_c10இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_m10இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயங்கும் கணக்கும் இயங்கா கணக்கும்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Mar 04, 2014 5:12 pm

வங்கி டெபாஸிட்தாரர்களின் விழிப்புணர்வு மேம்பாட்டு நிதியம் (Depositor Eduction and Awareness Fund) அமைக்கப்போவதாக இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு மேல் உரிமம் கோரப்படாத வங்கி டெபாஸிட்டுகளை ஒன்று திரட்டி இந்த நிதியம் அமைக்கப்பட்டு, அதன் நிர்வாகம் ரிசர்வ் வங்கியின் டெபுடி கவர்னர்களில் ஒருவர் தலைமை வகிக்கும் கமிட்டியிடம் ஒப்படைக்கப்படும். வங்கி டெபாஸிட்தாரர்கள் சார்ந்த நலத்திட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் இந்த நிதியத்திலிருந்து அவ்வப்போது நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்திய வங்கி நிர்வாக கட்டுப்பாடு விதிமுறை பிரிவு 26இன் படி Section 26 of Banking Regulation Act) ஒவ்வொரு வருட முடிவிலும், நிர்வகிக்கப்படும் வாடிக்கையாளர் கணக்குகளில், பத்து வருடங்களுக்கு மேல் உரிமை கோரப்படாத டெபாஸிட்டுகளின் விவரங்களைப் பற்றிய அறிக்கையை, இந்திய வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்கவேண்டும்.

வருடத்திற்கு வருடம் இம்மாதிரி கணக்குகளின் எண்ணிக்கையும், தொகையும் அதிகரித்து வருவதுதான் ரிசர்வ் வங்கியின் தற்போதைய அறிவிப்புக்கு முக்கிய காரணமாகும்.

சமீபத்திய புள்ளி விவரப்படி, இந்திய வங்கிகளில் உரிமம் கோரப்படாத டெபாஸிட் கணக்குகளின் எண்ணிக்கை 1.33 கோடி. அந்த கணக்குகளில் குவிந்திருக்கும் டெபாஸிட்டுகளின் மொத்த தொகை 3,652 கோடி ஆகும். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனங்கள் (714 கோடி ரூபாய்), கனரா வங்கி (525 கோடி ரூபாய்), ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி (101 கோடி ரூபாய்) ஆகிய வங்கிகள் இந்த விஷயத்தில் முன்னிலை வகிக்கின்றன.

டெபாஸிட்தாரர்களின் ஒப்புதல் இல்லாமலே அவற்றின் கால வரம்பை (ûT (Maturiy period) நீட்டிக்கும் பழக்கம் சில வங்கிகளியிடையே நிலவி வருகிறது. இதுபோன்ற டெபாஸிட்டுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், உரிமம் கோரப்படாத கணக்குகளின் எண்ணிக்கையும், அதன் கூட்டுத்தொகையும் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலோட்டமாக பார்க்கும்போது, இது ரிசர்வ் வங்கியின் ஒரு நிதி நிர்வாக மேம்பாடு போல தோன்றினாலும், நம்மில் பலருடைய உரிமம் கோரப்படாத வங்கி டெபாஸிட் பணமும் இந்த நிதியத்தில் சேர வாய்ப்புள்ளதால், இதுபற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

ஆர்.பி.ஐ.யின் நடப்பு விதிமுறைகளின்படி, ஒருவருடைய வங்கி கணக்கில் தொடர்ந்து இரு வருடங்கள் பணபரிமாற்றம் எதுவும் நடக்கவில்லையென்றால், அந்த கணக்கு டார்மன்ட் (Dormant Accounts) வகையை சார்ந்ததாக கருதப்படுகிறது. நடப்பு (Current), சேமிப்பு (Savings), காலவரை வைப்பு (Fixed), அயல் நாட்டில் வாழும் இந்தியர்களின் அந்நியச் செலாவணி (NRI Deposits) ஆகிய கணக்குகள் இந்த விதிமுறைக்குள் வரும்.

ஆனால், வங்கிகள் முன்ஜாக்கிரதையாக ஒரு வருடத்திற்கு மேல் இயக்கப்படாமல் இருக்கும் கணக்குகளை (Inoperative Accounts) இயங்கும் கணக்குகளிலிருந்து (Operative Accounts) தனியாக பிரித்தெடுத்து, அவற்றை அதிக கண்காணிப்புகளுக்கு உட்படுத்துகின்றன. கேட்பாரற்ற கணக்குகளில் எளிதாக மோசடிகள் நடக்கக்கூடும் என்பதுதான் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு காரணமாகும்.

கணக்கு வைத்திருப்பவர் அல்லது மற்றவர் மூலமாக ஒருவருடைய வங்கி கணக்கில், ஒரு வருடத்தில் ஒரு பண பரிமாற்றம் நடந்திருந்தாலும், அந்த கணக்கு இயங்கும் கணக்காகவே கருதப்படும். ஒருவருடைய காலவரை வைப்புத்தொகைக்கான வட்டித்தொகை, அவருடைய பெயரிலுள்ள நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்பட்டால், அந்த கணக்கில் வேறெந்த பண பரிமாற்றம் இல்லையென்றாலும், அது இயங்கும் கணக்காகவே கருதப்படும். ஆனால், சேமிப்பு கணக்கிற்கான வட்டி தொகை அந்த கணக்கில் ஆறுமாதத்திற்கு ஒரு முறை சேர்க்கப்படுவது பணபரிமாற்ற நடவடிக்கையாக கருதப்படமாட்டாது.

ஆனால், வேறெந்த பண பரிமாற்றமும் இல்லாமல், வங்கிகளின் கட்டணம் மட்டும் ஒரு கணக்கில் கழிக்கப்பட்டிருந்தால், அந்த கணக்கு, தனியாக பிரிக்கப்பட்டு, இயக்கப்படாத கணக்குகளில் சேர்க்கப்படும்.




இம்மாதிரி பிரிவினைக்குப் பிறகு, டெபாஸிட்தாரர்களுக்கு அதைப்பற்றி எழுத்து மூலம் அறிவிக்கவேண்டியது வங்கிகளின் பொறுப்பாகும். வங்கிகளிலிருந்து பெறப்படும் கடிதங்களுக்கு நாம் உடனடியாக பதில் அளிக்கவேண்டும். ஒரு வருடத்திற்கு மேல், கணக்கு இயக்கப்படாமல் இருப்பதற்கான காரணங்களை அந்த பதில் கடிதத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

வங்கி கிளையின் விலாச மாற்றம், கணக்கு வைத்திருப்பவரின் இருப்பிட மாற்றம், மறதி, வயோதிகம், இறப்பு போன்ற காரணங்கள் இதில் அடங்கும். ஊர் மாறியிருந்தால், அந்த விலாசத்தை தெரிவித்து, அருகிலுள்ள அதே வங்கியின் கிளைக்கு கணக்கை மாற்றித் தர விண்ணப்பிக்கலாம். அயல்நாடு சென்றிருப்பது போன்ற நியாயமான காரணங்களை அளித்தால், வங்கிகள் ஒரு வருட கால அவகாசத்தை இரு வருடங்களாக நீட்டிக்கும் வாய்ப்புள்ளது.

தகவல் பரிமாற்றம் இல்லையென்றால், இந்த காலகட்டத்தில் கணக்கில் பணம் இருந்தாலும் காசோலைகளை சில வங்கிகள் திருப்பி அனுப்பிவிடுகின்றன. இதனால், கணக்கு வைத்திருப்பவருக்கு அவமானமும் மன உளைச்சலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும், அவசர தேவைக்கு ஏ.டி.எம். மற்றும் இணையதளம் மூலமாகவும் பண பரிவத்தனை செய்ய முடியாது.

இயக்கப்படாத பிரிவில் சேர்க்கப்பட்ட சேமிப்பு கணக்குகளுக்கு உரிய வட்டித் தொகையை வங்கிகள் வழங்கவேண்டும் என்பது விதிமுறை. இந்த பிரிவு கணக்குகளுக்கு அதிக கண்காணிப்பு தேவைப்படுவதால் ஒவ்வொரு வங்கியும் நிர்வாக கட்டணங்களை வசூலிக்கின்றன.

இதைத் தவிர, நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தொகை கணக்கில் இல்லையென்றால் அதற்கான கட்டணமும் நிலுவை தொகையிலிருந்து கழிக்கப்பட்டுவிடும். எனவே, வங்கி கணக்குகளை இயக்காமல் நீண்ட காலம் விட்டுவிட்டால், அந்த கணக்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெரும்பகுதி வங்கி கட்டணமாக கரைந்து மறைந்துவிட வாய்ப்பிருக்கிறது.

ரிசர்வ் வங்கியின் விதிமுறையின்படி, உரிமை கோரப்படாத டெபாஸிட்தாரர்களின் பெயர் மற்றும் விலாசங்களை அவர்களுடைய இணையதளத்தில் வங்கிகள் வெளியிட்டு, அவற்றை அவ்வப்போது புதுப்பிக்கவேண்டும். வங்கி கணக்குகளை புதுப்பிக்கும் வழிமுறைகளையும் வங்கிகள் தெரிவிக்கவேண்டும்.

இயக்கப்படாமல் இருக்கும் கணக்குகளை புதுப்பிக்க, வாடிக்கையாளர்கள் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து, சமீபத்திய விலாசத்திற்கான சான்று மற்றும் புகைப்படத்தை (KYC documents) வங்கிக்கு அளிக்கவேண்டும்.

இந்த ஆவணங்கள் மூலமும் கையொப்பம் மூலமும் வாடிக்கையாளரை அடையாளம் கண்டு, கணக்கை வங்கி புதுப்பிக்கும். இயக்கப்படாத கணக்கை இயங்கும் கணக்காக மாற்றுவதற்கு, வங்கிகள் எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்பது விதிமுறையாகும்.

பணி புரியும் நிறுவனங்களை மாற்றும்போது, ஊழியர் இன்னொரு வங்கியில் கணக்கு துவங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அம்மாதிரி சமயங்களில், முந்தைய கணக்கு இயக்கப்படாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகமாகிறது. ஆகவே, பணிபுரியும் நிறுவனங்களை மாற்றும்போது, முந்தைய வங்கி கணக்கு தேவையில்லை என்றால் அதை முடித்து விடுவதுதான் நல்லது.

ஓய்வு ஊதியம் பெறும் முதியோர் இறந்த பிறகு, வாரிசுதாரர்கள் தேவையான ஆவணங்களை வங்கிக்கு சமர்ப்பித்து, அந்த கணக்கை மூடிவிட வேண்டும். இல்லையென்றால், நிர்வாக செலவுகளை செலுத்தும்படி, வங்கியிலிருந்து வசூல் நோட்டீஸ் வருவதற்கு வாய்ப்புள்ளது.

நம்முடைய அன்றாட பணபரிவர்த்தனைக்கு தேவையில்லாத வங்கி கணக்குகளை மூடிவிட்டால், நம்முடைய பணம் நம் கையைவிட்டு, ரிசர்வ் வங்கியின் உரிமை கோரப்படாத நிதியத்திற்கு மாறுவதற்கு வாய்ப்பில்லை. சில கணக்குகளை தொடர நேரிட்டால், வருடத்திற்கு ஒரு முறையாவது அக்கணக்குகளில் நூறு ரூபாயை செலுத்துவதற்கு மறக்கக்கூடாது.



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக